Jump to content

'மங்கள விளக்கு ஏற்றல்' பற்றிய ஓர் பார்வை


Recommended Posts

'மங்கள விளக்கு ஏற்றல்' பற்றிய ஓர் பார்வை

தமிழர்களாகிய நாம் எந்த ஓர் நல்ல காரியம் செய்ய தொடங்கும் போதும் மங்கள விளக்கு ஏற்றியே ஆரம்பிப்பது வழக்கம். அதன் பொருள் என்ன? ஏன் இப்படி செய்கின்றோம்?

முதலில் விளக்கு என்றால் என்ன?

விளக்கு என்பது: ஒன்றை தெளிவுபடுத்துதல், புரிய வைத்தல், தெரியாத ஒன்றை தெரியவைத்தல், ஒளிவீசுதல் ஆகும்.

விளக்குகளில் பல வகை உண்டு. அவற்றில் சில:

- ஒற்றைக் கால் விளக்கு: ஓர் பெண் தன் இரு கரங்களிலும் விளக்கை ஏற்றி ஓர் காலை பின்னோக்கி நீட்டி மறு காலை முன் நோக்கி மடித்து இரு கரங்களிலும் உள்ள விளக்கை முன் நோக்கி நீட்டினால் எப்படி இருக்குமோ அந்த உருவில் அமைந்ததே ஒற்றைக் கால் விளக்கு.

- தூண்டாமணி விளக்கு: இதை மணி போன்று ஒர் கயிற்றிலோ, கம்பியிலோ அல்லது சங்கிலியினாலோ கட்டி தொங்க விடுவார்கள். இதில் விளக்கு கீழ்பக்கத்தில் இருக்கும். முட்டி போன்ற ஒன்று மேல் பகுதியில் இருக்கும். அந்த முட்டியில் தான் கட்டி தொங்க விடுவார்கள். அந்த முட்டியின் உள்ளே எண்ணையை விட்டு அதன் வாய்ப்பகுதியில் விளக்கை பொருத்தி தலை கீழாக தொங்கவிடுவார்கள். விளக்கு சிறியதாக இருக்கும் அந்த விளக்கில் உள்ள எண்ணைய் குறைய குறைய முட்டியில் இருந்து தானாக எண்ணைய் விளக்கின் உள்ளே இறங்கும். விளக்கு நிரம்பியதும் முட்டியில் இருந்து இறங்கும் எண்ணைய் நின்றுவிடும். இந்த நிகழ்வினால் ஏற்றிய விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். நாம் எண்ணைய் விடவோ திரியை தூண்டவோ தேவை இல்லை. மணி போன்று தூண்டாமல் எரிவதினால் தூண்டாமணி விளக்கு என்பர்.

- நிலைவிளக்கு: இவை கூடுதலாக கோவில்களில் தான் உள்ளன. இவை கதவின் நிலையை சுற்றி சின்ன சின்ன விளக்குகளாக இருக்கும். இதை நிலைவிளக்கு என்பர்.

- குத்து விளக்கு: இவை நிலைக்குத்தாக இருக்கும். கீழ்பக்கம் பாதம் நடுவில் நீண்ட தண்டு மேல்பக்கம் விளக்கு. செங்குத்தாக நிற்பதால் இதை குத்து விளக்கு என்பார்கள்.

இதை ஏன் ஓர் நல்ல காரியம் செய்யும் போதும் செய்கின்றோம்?

நாம் மங்கள தீபம் ஏற்றும் போது ஐந்துமுகம் கொண்ட குத்துவிளக்கில் தான் ஏற்றுவது வழக்கம். இதன் பொருள். நாம் இந்த பூமியில் பஞ்சபூதங்களின் துணைகொண்டே வாழ்கிறோம். இவற்றில் ஒன்றேனும் இல்லை என்றால் நம்மால் இங்கு வாழமுடியாது. ஏன் இப்புவியில் எந்த உயிரினமும் வாழமுடியாது. ஆகையால் நாம் செய்யும் எந்த காரியத்துக்கும் பஞ்சபூதங்களின் உதவி தேவை. ஆகையினால் இந்த பஞ்சபூதங்களையும் எங்கள் முன் நிறுத்தி சாட்சியாக, உதவியாக கொண்டே நாம் நல்ல காரியங்களை செய்ய வேண்டும். ஆகையினால் அவர்கட்கு முதல் மரியாதை செலுத்தும் நோக்கில் ஐந்து தீபம் ஏற்றுகின்றோம்.

தீபம் ஏற்ற நமக்கு தேவையானவை:

திரி, எண்ணைய், விளக்கு, தீபம்.

- விளக்கு என்றால்: ஒன்றை நமக்கு தெளிவு படுத்துதல்.

- திரி என்றால்: அலைச்சல், உடலை வருதுதல்.

- எண்ணைய் என்றால்: எள் + நெய்

- தீபம் என்றால்: ஒளி தெளிவு

தீபம் ஏற்றுவதன் பொருள்:

- திரி: நாம் அலைந்து திரிந்து பெற்ற அனுபவங்களில்

- எள்ளு: எள் அளவும் சிறிய விடையத்தை கூட விடாமல்

- நெய்தல்: அவற்றுடன் பின்னி பிணைய வேண்டும்

- விளக்கு: அப்படி பின்னி பிணையப்பட்ட அநுபவத்தை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ளவேண்டும்.

- தீபம்: அப்படி நாம் உணர்ந்து விளங்கி கொண்டதை தெளிவு படுத்த வேண்டும். அந்த தெளிவில் இருந்து நல்லவற்றை உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும். மற்றவர்களும் பயன் பெறும் வண்ணம் தீயவற்றை நமக்குள்ளே வெளிப்படா வண்ணம் சிறைப்படுத்த வேண்டும். தீபத்தின் அடிப்பகுதி கருகி இருக்கும். மேல் பகுதி சுற்றி உள்ள இருளை நீக்கி ஒளி வீசும் அதே போன்று நாங்கள் பெற்ற அனுபவங்களில் தீய வற்றை வெளிப்படா வண்ணம் சிறைப்படுத்தியும் நல்லவற்றை மற்றவர்கள் பயன்பெறும் வண்ணம் வெளிபடுத்துதலே மங்களவிளக்கு ஆகும்.

மங்களவிளக்கு என்று ஏன் பெயர் வந்தது?

மங்களம் என்றால் ஐம்புலன்களையும் ஆனந்தப்பட வைக்கும், தெய்வீகத்தன்மை பொருந்தியதாக இருக்கும் இடம் மங்கள கரமாக இருக்கும். அதனால் மங்களவிளக்கு என பெயர் வந்தது.

மங்களவிளக்கு ஏற்றும் இடத்தில்

1) கண்களுக்கு குளிர்ச்சியாக அலங்கரிக்கப் பட்டு இருக்கும்.

2) காதுக்கும், மனதுக்கும் இனிமையான நாதமும் இருக்கும்

3) நாசிக்கு (மூக்கு) குளிர்சியான நறுமணமும் (ஊதுபத்தி) இருக்கும்.

4) வாய்க்கு இனிமையான இனிப்பு (கற்கண்டு) இருக்கும்.

5) மெய் (உடம்பு)க்கு குளிர்ச்சியாக வாழைமரம் மாவிலை தோரணம் வீசும் காற்றை குளிர்மையானதாக்கும்.

இவையாவும் மங்களவிளக்குயேற்றலுக்கு உகந்தவையே.

மங்கள விழக்கு ஏற்றுவதற்க்கு ஏன் தீபம் மட்டும்தான் தேவையா மின்குமிளோ அல்லது வேறுஏதாவது பயன்படுத்தலாமே.

மின்குமிளோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் நாம் வைக்கும் திசையை நோக்கியே இருக்கும் தீபம் மட்டுமே எந்தத்திசையை நோக்கி வைத்தாலும் மேல் நோக்கியவாறு ஒளிவீசும் நாம் செய்யும் காரியம் தெளிவுடன் உயர்நிலை அடைய வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.

. சுப மங்களம்

அன்புடன்,நா.சிவாஸ்

http://panipulam.net/?p=10813

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை வெளிநாட்டிலை எல்லாம் மங்களவிளக்கு ,குத்துவிளக்கு எல்லாம் கமராக்காரனுக்குத்தான் தெரியும்.

ஏன்???????

கமராக்காரன் ஓகே சொல்லேக்கை தானே இப்ப தாலிகட்டே நடக்குது.

ஐயர் இல்லாட்டிலும் பிரச்சனையில்லை.கமராக்காரன் இல்லாட்டி?????????????????ஒண்டுமேமே.....நடக்காது

தகவலுக்கு நன்றி akootha

Link to comment
Share on other sites

அருமையான தகவல். இணைப்பிற்கு நன்றி அகூதா

இஞ்சை வெளிநாட்டிலை எல்லாம் மங்களவிளக்கு ,குத்துவிளக்கு எல்லாம் கமராக்காரனுக்குத்தான் தெரியும்.

ஏன்???????

கமராக்காரன் ஓகே சொல்லேக்கை தானே இப்ப தாலிகட்டே நடக்குது.

ஐயர் இல்லாட்டிலும் பிரச்சனையில்லை.கமராக்காரன் இல்லாட்டி?????????????????ஒண்டுமேமே.....நடக்காது

தகவலுக்கு நன்றி akootha

முதலிரவுமா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பகிர்வுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்க்கு நன்றி.இப்ப உள்ள சனம் ஏன் என்னத்துக்கு என்று தெரியாமல் கன விசயங்கள் செய்யுதுக்ள் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.