Jump to content

ரோக்கியோவை கழுவிச்சென்ற பெரும் சுனாமி இன்று அதிகாலை அனர்த்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மனித நேயம் பேசும் பலரது முகத்திரையை இந்த சுனாமி காட்டி கொடுத்திருக்கு,

பட்ட கடனை திருப்பி அடைப்பதும் ஒரு மனிதாபிமான நடவடிக்கை தானே.

என்னைப்பொறுத்தவரை

மகிந்தவின் ஒரு முக்கிய நண்பன் இனி சில காலத்துக்கு எவரையும் துன்புறுத்தமாட்டான்

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

இங்கு மனித நேயம் பேசும் பலரது முகத்திரையை இந்த சுனாமி காட்டி கொடுத்திருக்கு,

வலித்தவன் திட்டுவான்.

வலிக்காதவன் தத்துவம் பேசுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயரும் என அஞ்சப்படுகிறது

13 மார்ச் 2011

ஜப்பானில் வெள்ளியன்று ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பயங்கரமாக பாதிக்கப்பட்ட மியாகி நகரில் பலி எண்ணிக்கை 10,000 ஆக உயரும் என அஞ்சுவதாக ஜப்பான் காவல்துறை தெரிவித்துள்ளது.

மியாகியில் இதுவரை சாவு எண்ணிக்கை 379 மட்டுமே என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மியாகி காவல்துறையின் இந்த அறிவிப்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பேரிடர் நிவாரண அதிகாரிகள் முன்னிலையில் மியாகி காவதுறை உயரதிகாரி சுகாவரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை லட்சக்கணக்கான மக்கள் 2 நாட்களாக உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

மீட்புப் பணிகளில் ஜப்பான் இராணுவத்தினர் சுமார் 100,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு மின்சாரத் தொழிற்சாலையின் 2 அணு உலைகள் சுனாமியால் சேதமடைந்துள்ளன. இதனால் நாடுமுழுவதும் அணுக்கதிர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதலில் நிலநடுக்கம் குறித்து கவலை அடைந்தோம். தற்போது அணுக்கதிர் குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளோம். அணு உலைகளுக்கு அருகில் வசிப்பதால் இங்கு வந்து பரிசோதனை செய்தோம்.

பரிசோதனையில் உடலுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் அடுத்து என்ன நடக்கும் என தெரியாது என கோரியாமாவில் அவசரகால நிலையத்தின் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் பெரும்பகுதி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு எவுரும் செல்ல முடியவில்லை. எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

380,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு அவசரகால வசிப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவாகி நகரில் உணவு மற்றும் எரிபொருள் இல்லாததால் குடியிருப்புவாசிகள் வெளியேறி வருகின்றனர். அந்த நகரில் மின்சாரம் இல்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

ஜப்பான் முழுவதும் கடந்த 2 நாட்களாக 14 லட்சம் பேர் குடிநீர் இல்லாமலும், 25 லட்சம் பேர் மின்சார வசதி இல்லாமலும் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

gtn

Link to comment
Share on other sites

  • முதலில் என 8.9 ரிக்டர் அளவில் சொல்லப்பட்ட இந்த அதிர்ச்சி இப்பொழுது 9.0 என உயர்த்தப்பட்டுள்ளது
  • இதுவரை 293 பின் அதிர்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையானவை 6.0 க்கும் மேலானவை.
  • வீதிகளை விட உலங்குவானூர்த்திகளே மக்களுக்கு உதவ அதிகளவில் பாவிக்கப்படுகின்றது
  • 2.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் இல்லை. தொடர்ந்தும் சுழற்சிமுறையில் மின்சாரம் தடைப்படும்.
  • மக்கள் உணவுப்பொருட்களை சேமித்தவண்ணம் உள்ளனர்.
  • போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. மசகு எண்ணெயும் தட்டுப்பாடாக உள்ளது.

Link to comment
Share on other sites

முன்னர் எவ்வாறு இருந்தது பின்னர் எவ்வாறு உள்ளது படங்களை இங்கு பார்வையிடலாம். படங்களில் mouseஇனால் நகர்த்துவதன் மூலம் தெளிவாகப் பார்வையிடலாம்.

http://www.vg.no/nyheter/utenriks/jordskjelv-i-japan/bilder.php

http://www.aftenposten.no/spesial/article4059392.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓவர் பீலீங்கு ஒடம்புக்கு.. சூடு.. ஏதோ கிரிக்கெட்டு மேட்ச் பார்ப்பது ஏதோ ஒரு நாட்டில் எங்கிட்டோ நிகழுது என நினைத்து கொண்டு போய்விடுதல்.. வேண்டும்..இங்கிட்டு ஈழத்தில் சுனாமி வந்த போதும் நிவாரண உதவி திட்டத்தில் சம பங்காளிகளாக சேர்க்காதவர்தவர்கள்தான் சப்பான் நாட்டினர்.. ஏதோ ஒப்புக்கு அனுதாபம்/ஆதரவு பிலிம் காட்டிவிட்டு அடுத்த கட்டம் நோக்கி நகருதல் வேண்டும்.

டிஸ்கி:

இன்னுமோர் முள்ளிவாய்க்கால் சோகம் மற்றும் சுனாமி போல இயற்கை சோகம் வந்தாலும் இந்த கனிஸ்கர் கோஸ்டிவாடும் அசோகர் கோஸ்டிவாடும் இணைந்தே இருப்பார்கள்.. சுருக்கமாக சொன்னால் ஒட்டுறதுதான் ஒட்டும் ... அதாகபட்டது இனந்தான் இனத்தை சேரும் ..

scan0007.jpg

5 பைசாவுக்கு புண்ணியபாடாத ரிலேசன்ட் சிப்பு தேவையில்லை..ரைட்டு..

டிஸ்கி டிஸ்கி:

இதை எப்படி பாவிக்க வேணுமென்றால் .. கருநாகம் போல உணவு பொருளை கொஞ்சம் சேகரித்து போட்டு ..அசையாம ....ராஜபக்சே தடுத்து போட்டார் என அடித்து விடவேணும்..அவன் உண்மையா தடுத்தா இன்னும் ரொம்ப வசதி... அவன் அனும்திச்சி அப்படியே உதவி செய்து போட்டாலும் உடனே யப்பான் மக்கள் மனமாறி ஈழம் ஈழம் .. அப்படியே தேர்தலில் பிரதிபலிக்கபோவதில்லை.. அவனெல்லாம் அமெரிக்க கோஸ்டிக்கு தாளம் போடுபவன்..இன்னும் இரண்டே மாதத்தில் (அமெரிக்க)ஊரை அடித்து உலையில் போட்ட காசை கொண்டு உதவி செய்து பழையபடி மாற்றிவிடுவான்..சுருக்கமாக சொன்னால் ஈழ தோழர்கள் கண்ணாடி போல இருக்கணும்.. எது எதிரில் இருக்கிறதோ அதைத்தான் கண்ணாடி காட்டும்.. அதை போலத்தான் கடந்தகாலத்தின் வரலாறினை மனதில் வைத்து எதிர்காலத்தினை கணக்கிடவேண்டும்.. ஈழ தோழர்கள் என்றுமே வறுமையில் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளை போக்கஸ் செய்யவேணும். வல்லான் வகுத்ததே வாய்க்கால் மற்றும் பாடை காசிலும் லாபம் தேடும் உலகில் இப்படித்தான் இருக்கணும்.. இன்னும் மனிதாபிமானம் பேசி வீணா போய்ட கூடாது...^_^

Link to comment
Share on other sites

தாயகத்தில் ஆழிப்பேரலை தாக்கிய காலத்தில் பல நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளுக்கு பணம் சேர்த்தனர். பல தமிழரல்லாத மக்களும் மனமுவந்து உதவினர். எமது மக்களும் அவர்களுக்கு நன்றி கூறினார்கள்.

ஆனால் சேர்த்த உதவிகளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச மக்களின் தேவைக்கு அவர்கள் அனுப்ப முற்பட்டபோது மேற்குலக நாடுகளின் உளவுத்துறையினர் பல உளரீதியான தாக்குதல்களை பயமுறுத்தல்களை தொண்டர்கள் மீது மேற்கொண்டனர். இதனால் மனிதாபிமான உதவிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. அங்கே அரசியலிடம் மனிதாபிமானம் தோற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிட்டு எவனும் தமிழர் வாழ்வில் இனி இஞ்சி மரபா வியாபரம் நடத்த கூடாது...வாழ்வியலில் அளவீடு ஒரே முறையில்தான் இருக்கவேண்டும் .. அங்க ஒன்னும் தங்கத்தில் தொங்கவில்லை .. இங்கிட்டு ஒன்னும் தகரத்தில் தொங்கவில்லை..அப்படி இஞ்சி மரபா வியாபரம் நடத்துபவனுக்கு புதிய வியாபரத்தினை கற்று கொடுக்கணும்..

டிஸ்கி:

ஊரில் ஒரு பழமொழி உண்டு. விவசாயி வீட்டு குப்பைய கிண்டினால் மாட்டு சாணாமத்தான் இருக்கும் . அமட்டன் (முடிதிருத்துபவர் ) வீட்டு குப்பை கிண்டினால் மசிருதாத்தான் இருக்கும் . பழைய குப்பைகளை கிண்டி ..... இனியும் வெத்தலை வள்ளி கிழங்கு பயிர் செய்யாமல்...

வேலை இல்லாதவன் பொண்டான்டி தலையை செரத்த கதையாக இல்லாமல் ..அனைவரும் தங்களது பிள்ளைகளை பிஸ்ஸி(bsc) இயற்பியலில் செர்க்குக அதுதான் ஈழத்தின் முதல் படி .... வெற்றிபடி..... ...கோ அன்ட் புரசீட் .. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ. எங்களுக்கு யப்பான் செய்த துரோகத்துக்குத்தான் இந்த அழிவு என்பதை யாராவது தயவு செய்து அந்த மக்களுக்கு தெரியப்படுத்திவிடுங்கள்.அப்பதான் எங்களுக்கும் நிம்மதி.அவர்களுக்கும் சுரனை வரும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மனித நேயம் பேசும் பலரது முகத்திரையை இந்த சுனாமி காட்டி கொடுத்திருக்கு,

58லையிருந்து ஒவ்வொண்டாய் எண்ணிப்பாரும்?

அப்ப தெரியும் ஈழத்தமிழனிலை சர்வதேசம் எவ்வளவு மனிதாபிமானம் வைச்சிருந்ததெண்டு?

ஒருசில ஆக்களுக்கு மற்றவன் கு - -யை கழுவுறதும் மனிதாபிமானம் தான்.

எல்லா இடத்திலையும் பரிவு,பட்சமாக என்னாலும் எழுத முடியும்.

கதைக்க வந்திட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது ஜப்பான்! எப்போது இந்தியா?

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011 16:23

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலையும் ஜப்பானிய மக்களுக்குப் பெரும் அவலத்தைக் கொடுத்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்கொண்ட மிகப் பெரும் நெருக்கடி இது என ஜப்பானியப் பிரதமர் நஓற்றா கான் தெரிவித்ததிலிருந்து அழிவுகளின் அவலத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.

ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகுத்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நிலைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது இந்தியா? என்ற எதிர்பார்ப்பும் ஈழத் தமிழர்களுக்கு இருக்கவே செய்யும்.

சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பவாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.

சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.

sankamam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

indian_map.gif

இன்னிக்கு செத்தால் நாளைக்கு இங்கு பால்.. இதையெல்லாம் இங்கு உணராவதவர்கள் இல்லை..மும்பை தாக்குதலின் மூன்றாவது நாளில் எழுந்த மகாராஸ்டிரியர்கள் என்கிறார்கள் கூர்ந்து கவனித்த்தால் ...சத்தியமாய் அது தேச்பக்தி கிடையாது.. எவன் செத்தால் எனக்கென்ன எனும் போக்கே இங்கிட்டு மேலோங்கி காணபடுது.. அது சாதாரணம் கிரவுடை குறை சொல்ல முடியாது.. இயற்கையும் அவனவன் மூலமாக குண்டு வைக்குது .. புயல் எழுப்புது.. ஆனா எவனும் தன்னின்ட வேலைய நிறுத்தற மாதிரி தெரியல் ஓவர் கிரவுடு எப்பா சாமி இயற்கை எதாவது வழி செய்யணும் தமிழ்நாட்டு மாக்களை தவிர்த்து.. இவர்களை பிரியாணி வாங்கி குடுத்து சரிபண்ணிடலாம் .. ஆனா மற்ற மாநிலங்களில் மிடியாடு ரைட்டு... :(

Link to comment
Share on other sites

இதை எப்படி செய்யலாம்?

இப்போது ஜப்பான்! எப்போது இந்தியா?

சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.

sankamam.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.