Jump to content

அம்மம்மா


Recommended Posts

அம்மம்மா

அம்மா என்று அறிமுகம் ஆனவரே

அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே

அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற

புதிய மொழியை சொல்ல வைத்தவரே

ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே

ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு

அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள்

நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள்

ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள

ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது

ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள்

ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும்

எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல்

உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம்

காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர்

நீர் கண் மூடும் போது நாம் இல்லையே அருகில் :lol:

வற்றியது கண்ணீர் மட்டுமல்ல எம் இதய நீரும் தான்

எங்கள் கனவுகளிலே வருகின்றீர்கள்

எழுந்து அனைக்கும் முன் மறைகிறீர்கள்

வாருங்கள் மீண்டும் இவ்வுலகில்

வந்து எமக்கு ஆறுதல் தாருங்கள்

தலைவி இல்லாத வீட்டில்

தலையணை நனைக்கின்றது ஒவ்வொரு இரவும்

நடக்கின்றோம் நீர் சொல்லித்தந்த பாதைகளில்

நடக்கின்றீர் நீரும் நிழலாய் எம்முடன் என்று :lol:

(கீதாவின் பாட்டி கவிதை வாசித்த பின் எனக்குள் எழுந்த உணர்வு தான் இக்கவிதை. இப்போது தான் நேசரி..... பிழையை சுட்டிக்காட்டுங்கள் :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் ரமா. எழுத ஏழுத இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள். அம்மம்மா உங்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றார் போல இருக்கின்றது. சிலசமயங்களில் அம்மா கூட நாம் செய்யும் சிறு தவறுகள் நமது சொந்த நலனுக்காக கண்டிப்பார். ஆனால் அம்மம்மாவோ பேர குழந்தை மீதுள்ள பாச மிகுதியில் அந்த கண்டிப்பை கூட தாங்கி கொள்ள மாட்டார்.

சக கள உறுப்பினர்களின் கவிதைகள் மற்றவர்களை கவிதை எழுத தூண்டுவதை அறிய மகிழ்ச்சியாக இருக்கின்றது. தொடர்ந்து கவிதைகளை எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

நன்றி சுட்டிகேர்ள் மற்றும் மதன். ஆமா எழுத எழுத வார்த்தைகளில் மெறுகேறும் என்பதை இங்கு பலரின் கவிதைகளில் கண்டிருக்கின்றேன். அதுதான் சின்ன முயற்சி. தொடர்ந்து எழுதுகின்றேன் . உங்கள் ஆதரவுக்கு நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா ரமா உங்கள் அம்மம்மாவைப் பற்றி எழுதிய கவி நல்லாயிருக்கு நன்றி ரமா தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே

ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு

கன்னிக் கவிதை அருமையாக இருக்கின்றது. சித்திரமும் கைப்பழக்கம் போல்... எழுத எழுத கவிவரிகள் மேலும் மெருகு பெறும்.

மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ரம்ஸ்...கவிதை நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க......... :lol::lol:

Link to comment
Share on other sites

நன்றி கீதா சண்முகி அக்கா அத்துடன் சுண்டல் உங்கள் கருத்துகளுக்கு

Link to comment
Share on other sites

அம்மம்மாவை ஞாபக படுத்திய ரமாம்மாவுக்கு நன்றிகள் நல்லாயிருக்கு தொடருங்கள்

Link to comment
Share on other sites

ரமாவுக்கு வாழ்த்துக்கள் ம் சிறு வயது ஞாபகம் வருகிறது

நான் என் அம்மம்மாவை நான் 2ம் வகுப்பு படிக்கும் போது இழந்து விட்டேன்...

பேரன் பேத்திகள் மீது அம்மம்மாக்கள் காட்டும் அன்பு அளப்பரியது என் மனைவியின் அம்மம்மாவும் சிறிது காலம் (6 மாதம் இங்கு வந்தார் ) மனதை விட்டு நீங்காத அன்பை காட்டிவிட்டு சென்றார்

என் மனைவியும் அவரது சகோதரங்களும் இன்றும் என்றும் சொல்வார்கள் தமது அம்மம்மா இல்லை என்றால்..... :lol:

தங்களது தாயைக்கூட அவர்கள் இவ்வளவு கவனித்ததாக தெரியவில்லை எனக்கு ஏன்டீயப்பா என்று கேட்டா என் மனைவி சொல்வது செய்நன்றி என்று.......

எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு உள்ளம் .......ஒரு 75 வயது இருக்கும்..

சரி ரமாவுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்

உறவுகள் சம்மந்தமான கவிதைகளை என் இனிய கள உறவுகளிடம் இருந்து எதிர்பாக்கிறம்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஓகே இப்ப சின்னா :P :P :P :wink: :wink: :wink:

பிகு: ஓய் ரமா கவிதை எல்லாம் அந்த மாதிரி எழுதிறீர் வாழ்த்துக்கள் ஓய்

Link to comment
Share on other sites

உங்கள் இளமைக்கால கதை நன்றாக இருக்கின்றது சின்னப்பு.

மேலும் தொடருங்கள்...

Link to comment
Share on other sites

ஆகா..ரமாக்கா..கவி அருமை..அழகான வரிகள்....

எனக்கும் அம்மம்மா..அப்பம்மா பிடிக்கும்..ஆனால்..அடிக்கடி பேன் பார்க்க சொல்லி கரைச்சல் படுத்தாவிட்டால் தான் :? :?

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சாத்திரி சின்னப்பு அருவி அத்துடன் ப்ரியசகி...

Link to comment
Share on other sites

ஆமாம் சின்னப்பு எனக்கும் எனது அம்மாவை விட அம்மம்மா என்றால் உயிர். எனக்கு அம்மம்மா இல்லையே என்று சிறுவயதில் அழுதாக சொல்வார்கள். என்னென்றால் அம்மம்மாவை தான் எனது அம்மாவாக நினைத்திருந்தேன்.

ப்ரியசகி.. தாயகத்தில் உள்ளவர்களுக்கு சின்னப்பிள்ளைகளைக் கொண்டு பேன் பார்ப்பது என்றால் அலாதி ப்ரியம். சிலரைக் கண்டு ஒடி ஒளிந்தது இப்பவும் ஞாபகம் இருக்கு.

Link to comment
Share on other sites

ரமா உங்களின் கவிதை மூலம் இறந்த எமது அம்மம்மாவின் நினைவுகளைக் கொண்டு வந்தீங்க நன்றி........ அது சரி அம்மம்மா அன்பு காட்டுவதுபோல் அப்பம்மா அன்பு காட்டுவது குறைவுதானே ஏன் அப்பிடி????????? (எனக்கு மட்டுமா அல்லது பொதுவாகவேயா??)

Link to comment
Share on other sites

ரமா உங்களின் கவிதை மூலம் இறந்த எமது அம்மம்மாவின் நினைவுகளைக் கொண்டு வந்தீங்க நன்றி........ அது சரி அம்மம்மா அன்பு காட்டுவதுபோல் அப்பம்மா அன்பு காட்டுவது குறைவுதானே ஏன் அப்பிடி????????? (எனக்கு மட்டுமா அல்லது பொதுவாகவேயா??)

அங்கிள் அப்படி சொல்ல இயாலாது.. நாங்கள் அம்மம்மாவின் வீட்டுக்கு அருகில் இருந்தபடியால் அவர்களுடன் கூடுதலான பாசம்.. அப்பம்மாவிலும் பாசம் தான்.. ஆனாலும் அம்மம்மாவின் அளவிற்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா உங்களின் கவிதை மூலம் இறந்த எமது அம்மம்மாவின் நினைவுகளைக் கொண்டு வந்தீங்க நன்றி........ அது சரி அம்மம்மா அன்பு காட்டுவதுபோல் அப்பம்மா அன்பு காட்டுவது குறைவுதானே ஏன் அப்பிடி????????? (எனக்கு மட்டுமா அல்லது பொதுவாகவேயா??)

முகம்ஸ் இது தான் உண்மை.. அப்பம்மா தன்ர மகளின்ர பிள்ளையில தான் நிறைய அன்பாய் இருப்பாங்க.. நமது அனுபவமும் இது தான். :wink: :P

Link to comment
Share on other sites

காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர்

நீர் கண் மூடும் போது நாம் இல்லையே அருகில்

வற்றியது கண்ணீர் மட்டுமல்ல எம் இதய நீரும் தான்

எங்கள் கனவுகளிலே வருகின்றீர்கள்

எழுந்து அனைக்கும் முன் மறைகிறீர்கள்

அம்மம்மாவை நினைத்து வடித்த கவி அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள் ரமா அக்கா ...வரிகளும் சூப்பர் தொடர்ந்து எழூதுங்க ........ :P

Link to comment
Share on other sites

நன்றி அனிதா உங்களின் கருத்துகளுக்கு... தொடர்ந்து எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

றமா உங்கள் அம்மமா கவித சொல்லவே வேண்டாம் நால்லா இருக்குது. வாழ்த்துக்கள் தொடருங்க. என்ன நான் பிறந்த போது எனது அம்மம்மா இறந்துவிட்டாராம். உங்கள் கவிதையினூடே எனக்கும் ஒரு அம்மாம்மா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என எண்ணுகின்றேன்.

அழகிய உணர்வுகளை தூண்டிய உங்கள் கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றமா..... உங்கள் உனர்வுகளை தூண்டிய கவிதைகளுக்கு நன்றிகள் ரமா.. வாழ்த்துக்கள்... உங்கள் முயற்சிகள் தொடரட்டும் ரமா...

உங்கள் கவிதை என்னை சிறுவயதுக்கு அழைத்து சென்றது போன்ற ஒரு உணர்வு.... மேலும் உணர்வு பூர்வமான கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இருவழி அத்துடன் விஷ்ணு உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ரமா :P

இன்று தான் உங்கள் கவிதையை வாசித்தேன்

மிகவும் நன்றாக உள்ளது

தொடர்ந்து எழுதுங்கள் உங்களுக்கு

எனது பாராட்டுக்கள் :lol:

Link to comment
Share on other sites

நன்றி சபி உங்கள் கருத்துக்கும் பாரட்டுக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.