Jump to content

ஒவ்வொரு இந்தியனுக்கும் கடன் எவ்வளவு. ஒர் அதிர்ச்சி தகவல்


easyjobs

Recommended Posts

இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ^50,600 கோடி கடன் வழங்கலாமா என்பது குறித்து உலக வங்கி ஆலோசித்து வருவதாக இந்திய வங்கிகளுக்கான தலைவர் ராபெர்ட்டோ ஜாகா தெரிவித்தார். டெல்லியில் முதலீடு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட வங்கிகளுக்கான இந்திய தலைவர் ஜாகா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கி 69,000 கோடி முதல் ^92,000 கோடி வரை கடன் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கியிடம் இந்திய அரசு ^50,600 கோடி கேட்டு இருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. இதே அளவிலான கடன் தொகையை மின்சார வசதி மேம்பாட்டிற்கு உலக வங்கியிடம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2012&2017ம் ஆண்டிற்கான ஐந்தாண்டு திட்டத்தில் உள்கட்டமைப்பிற்கு ^45 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. உள்கட்டமைப்பு பணியை துரிதப்படுத்த மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கையை முன் எப்போதும் பார்த்தது இல்லை. இது ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களில் மட்டும் கண்டறியப்படாத முதலீட்டு வளமாக ^2,76,000 கோடி உள்ளது. உலக வங்கி கடன் வழங்குவதில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. இவ்வாறு ராபெர்ட்டோ கூறினார்.

இந்தியாவின் கடன்:34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடி

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பொது கடன் ரூ.34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 115 கோடியே 40 லட்சம் ஆகும். இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதவாக்கில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் சராசரி கடன் ரூ.30 ஆயிரம் ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல் நிறுவன கணக்குப்படி, ஒரு இந்தியனின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38 ஆயிரம் மட்டுமே. எனவே, ஒவ்வொரு இந்தியனுக்கும் அவனது 10 மாத சம்பளத்தொகை, கடனாக உள்ளது.

டெல்லி: உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் நாம் இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 900 கோடி டாலர் (அதாவது ரூ. 41,500 கோடி) ஆகும். இத்தொகை கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

உலக வங்கி கடந்த ஆண்டு 220 கோடி டாலர் கடனுதவி அளித்தது.

2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான்.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது.

உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவீதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவீதமாகும்.

ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர். வருகிற நிதியாண்டில் மேலும் 0.04 பில்லியன் டாலர் கடனை இந்தியாவுக்குத் தரவுள்ளது உலக வங்கி

உலக வங்கி, மற்றும் சில படங்களைப் பார்க்க ......... http://www.thedipaar.com/news/news.php?id=19054

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் படத்தில் விஜய் குடுப்பது போல ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து சரி செய்யலாம் தோழர் .... :o

Link to comment
Share on other sites

தமிழன் படத்தில் விஜய் குடுப்பது போல ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து சரி செய்யலாம் தோழர் .... :D

தமிழன் படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஜி.வி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். தெரியுமா நண்பரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஜி.வி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். தெரியுமா நண்பரே?

அவர் ஜெயலலிதா தொல்லையாலதான் தற்கொலை செய்து கொண்டார். தெரியுமா நண்பரே? :D

Link to comment
Share on other sites

அவர் ஜெயலலிதா தொல்லையாலதான் தற்கொலை செய்து கொண்டார். தெரியுமா நண்பரே? :D

நிச்சயமாக இல்லை. சொக்கத்தங்கம் படத்திற்காக மதுரையில் உள்ள ஒரு முக்கிய அரசியல் புள்ளியிடம் வாங்கிய கடனுக்கு கொடுத்த செக், பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆகிவிட்டது. அதனால்தான் ஏற்பட்டதுதான் ஜி.வி. தற்கொலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை. சொக்கத்தங்கம் படத்திற்காக மதுரையில் உள்ள ஒரு முக்கிய அரசியல் புள்ளியிடம் வாங்கிய கடனுக்கு கொடுத்த செக், பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆகிவிட்டது. அதனால்தான் ஏற்பட்டதுதான் ஜி.வி. தற்கொலை.

இல்லை இல்லை மெரினா பீச்சுக்கு அருகில் உள்ள அவரது கிரவுண்டை அடிமாட்டு விலைக்கு ஜெயலலிதா& சசிகலா கம்பெனி... மிரட்டி வாங்கினார்கள் ... அப்போது நோய்வாய்பட்டு படுத்தவர்தான்... மேலே செல்ல நேரிட்டது ...... பாலு ஜுவல்லரிசிஸ்.....நடிகை மீனாவின் கரு வ(வி)ழி யில் இவர்கள் விட்டது பாதி எனினும்... மொத்தத்தில் குளோசானதும்.... ஊத்தி மூடப்பட்டதற்கும் இந்த கம்பெனியே காரணம்... மற்றபடி நான் ஜே அல்லது கருநா எவருடைய ஆதரவாளனும் கிடையாது.... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.