Jump to content

இப்படியே மடியப் போகின்றோமா??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான், இதனால் தான் நான் கனக்க எழுத விரும்புவதில்லை.

நீங்கள் சொன்ன மாதிரி நம் வாரிசுகள் இருக்க வாய்ப்பிருக்கின்றது.

அப்படி அவர்கள் இருக்கும் போது தமிழர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள்.

அப்போது அவர்களுக்கு வேறு பெயர் வைத்து விடுவார்கள் நம் சிங்களவர்.

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சோழர்கள் தோற்றுப் போய், தங்களுடைய காலம் வரும் வரை பொறுமையாகத் தங்கள் பலத்தினை தலைமுறை தலைமுறையாக 100 ஆண்டுகள் வரை பேணி வந்ததாகவும், அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தபோது வெடித்த பலமே இராஜஇராஜ சோழனாக மாறியது என்று எங்கோ படித்த ஞாபகம். வரலாறு என்பது மாறத் தான் போகின்றது. மகிந்த குடும்பம் எத்தனை காலத்திற்கு இப்பதவியில் இருக்கப் போகின்றது... ஆனால் தமிழன் தமிழனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கல்லவா?

வாத்தியார்,

இன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழன் என்ற வகையில் தான் சிந்திக்க வேண்டும் என்றில்லை. தமிழகத்தமிழன் முதற்கொண்டு பணரீதியாக எல்லோரும் வளர வேண்டும். பணம் தான் எம் வளர்ச்சி.

இன்றைக்கு வெளிநாடுகளில் பொருளாராதரீதியாகச் சீனர்கள் 3ம் நிலைச் சந்தையைக் கைப்பற்றிய நிலை போலத் தமிழ்மக்களும் சந்தைகளைப் பிடிக்க நாங்கள் துணை புரிய வேண்டும்.

இதற்கு ஒன்றுபட்ட சக்தி அவசியம்.

போராட்ட சூழ்நிலை என்பது எனி வரும் காலங்களில் எம் பொருளாதர நிலையை வைத்துத் தான் அமைய வேண்டும். 100 வருடங்களுக்கு முன்பு கனடாவில் சீனர்கள் குடியேற மிகப்பெரும் பணத்தைச் செலுத்த வேண்டி இருந்தது. அவர்களின் வருகை விரும்பப்படவில்லை. ஆனால் இன்றைய பொருளாதரா நிலையில் ஐந்தி ஒரு பங்குக்கு மேலதிகமான நிலையில் சீனர்களின் பங்களிப்பு இருக்கின்றது. அவர்களைக் கனடா அரசும் வாய் முழுதும் பல் தெரிய வரவேற்கின்றது. இன்றைக்கு நம்மபர்கள் கப்பல் வருகின்றபோது ஏன் வெறுக்கின்றார்கள் என்றால், எம்மிடம் பெரிய பொருளாதர வலையமைப்பு இல்லை. பெரிய சந்தையுமில்லை.

பொருனாதாரமில்லத எம்மை எவருமே மதிக்கமாட்டார்கள்.

1வது தமிழருக்குள் முதலில் வரவணிகர் சங்கம் தேவை. சங்கத்தின் செயற்பாட்டின் ஊடாக எம் வளர்ச்சி பற்றியும், ஒற்றுமையாகவும் சிந்திப்பது பற்றி யோசிக்க வேண்டும். உடனே ஏதாவது நடந்த சம்பவம் என்று புறணிக் கதையை யாராவது தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

இத் தலைப்பை நிறுத்தி விட்டு, புறணிக் கதை கதைப்பதை நிறுத்துவது எப்படி என்று விவாதிக்கலாம் போல இருக்கின்றது.

யூதர்களைத் தவிர எல்லோருமே அவர்களுடைய சொந்த நிலத்திலிருந்து கொண்டே அன்னியர்களுக்கு எதிராகப் போரிட்டார்கள். . அப்போது அவர்களுடைய வலு மிகவும் அதிகமாக இருக்கும். நாம் தான் புலம் பெயர்ந்து விட்டோமே!.

நாம் இங்கு பணம் சேர்ப்பதற்குள் களத்திலே சிங்களவன் மாதகல் வரை குடியேறி விடுவான்.

அப்போது உலக மயம் எப்படி இருக்கின்றதோ?

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

மூண்டு லட்சத்துக்கு மேலை பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு எகத்தாளம் இடுகிறான் சிங்களவன்... அந்த மக்களை வாழ வைக்க வேண்டும் எண்டால் உங்கட பணங்களை கொண்டு வந்து கொட்டுங்கள் நாங்கள் அதிலை ஒரு பங்கை எடுத்து அவர்களுக்கு வசதி செய்கிறோம் என்கிறது சிங்களம்.... அவன் கேட்ப்பது நியாயம் தான் எண்று அதுக்கு தாளம் போடுகிறார்கள் எங்கட மக்களில் சிலர்... அதுக்கு ஆதரவு குடுக்கிறார்கள் பலர்... மக்களின் அவல நிலையை சர்வதேச மயப்படுத்த எதுவும் செய்ய விடாமல் தடுக்கும் பலர்... இணக்க அரசியலுக்கு அவசியம் எண்டு அரசியல் பேசும் ஆக்கள் எண்டு எத்தினை குழறுபடிகள்...

இப்படியான ஒரு கேவலம் கெட்ட இனம் அழிந்து போனால் என்ன இருந்தால் என்ன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் லொஜிக் கதைச்சு பயன் இல்லை. வாழ்வியல் உதாரணங்கள் இல்லாமல் கற்பனையில் கோட்டை கட்டி ஒன்றும் செய்ய முடியாது. நாளைக்கு வணிகர் சங்கம் தொடங்குவீங்கள். அங்கும் அடிப்படையில் தலைவராக, செயலாளராக பொறுப்புக்களில் எந்த ஊர்க்காரன், சாதிக்காரன், சமயத்தவன் உள்ளார்கள் என்பதில் சிக்கல் வரும். மொழி தவிர.. எங்களை தனித்துவமாக அடையாளப்படுத்தக்கூடிய இதரவிசயங்களை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம். ஆயிரம் பேர் சந்தியில் கூடி நின்று எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று ஆராய்வதைவிட எங்கள் எங்கள் வீடுகளுக்குள் தற்போது என்ன நடைபெற்றுக்கொண்டு உள்ளது என்று சிந்தித்து பார்ப்பது நல்லது.

ஊரில் ஒரு வணிகர் சங்கமும் இருந்ததில்லையோ.அப்போது எல்லாம் என்ன குடும்பச் சங்கமாகவோ இருந்தது. உங்களின் தனிப்பட்டவாழ்க்கையில் நீங்கள் கண்ட சவால்களையும் முன்னேற்றத்தையும் பற்றி எழுதிய போது அதைத் கண்டு நிறைவு கிடைத்தது. ஆனால் ஊரைப் பற்றிக் கதைத்தால் ஏன் எப்போதுமே குதர்க்கமாகக் கதைத்துப் பழகுகின்றீர்கள் கரும்பு. நீங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை தவிர்ந்த எந்த சம்பவங்களில் புலத்தில் சாதி அடிப்படையில் தீர்மானம் இயற்றப்பட்டிருக்கின்றது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்றால் எல்லாவற்றையும் (+) ஆக எடுக்கத் தெரிந்த உங்களுக்கு எம் சமூகம் பற்றி மட்டும் வந்தவுடன் (-) ஆக எல்லாத்தையும் சிந்திக்கும் குணம் ஏன்? நாங்கள் ஊரைப் பற்றிச் சிந்திக்கின்றோம். நீங்கள் வீட்டைப் பற்றிச் சிந்திப்பவர் என்றால், அப்படியே இருந்து விட்டுப் போங்களேன். யார் யார் ஊரைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களோ அவர்கள் பேசட்டுமே.

Link to comment
Share on other sites

நீங்கள்தான் "இப்படியே மடியப்போகின்றோமா?" என்று திரி ஆரம்பித்தீர்கள். இதுபற்றிய எனது பார்வையை கூறும்போது நாங்கள் ஊர்விசயத்தை பார்க்கின்றோம், நீங்கள் வீட்டு விசயத்தை பாருங்கள் என்று கூறுகின்றீர்கள். சரி.. முதலில ( + ) என்று எங்கள் சமூகத்தை பற்றி விளங்கி வைத்து இருக்கும் விடயங்களை நீங்கள் பட்டியல் இடுங்கள் பார்க்கலாம். வணிகர் சங்கம் ஆரம்பிப்பது பற்றி கருத்தாடல் செய்வதே உங்கள் நோக்கம் என்றால்.. பின்பு ஏன் இப்படியே மடியப்போகின்றோமா என்று திரி ஆரம்பித்தீர்கள்? புரியவில்லை. தெருவில் வந்து கொடி பிடித்துத்தான் சமூக விடயங்களில் ஈடுபடவேண்டும் என்கின்ற தேவை எனக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் மடிந்த போது இனி இப்படி ஒரு வீரத் தமிழன் வருவானா?வரவே மாட்டான் என்று தான் அப்போது எண்ணியிருப்பார்கள்.

ஆனால் எத்தனையோ வருடத்திற்கு பிற்பாடு தேசிய தலைவர் பிரபாகரன் வந்தார்.

இனியும் அப்படி ஒரு தமிழன் வருவான்.

நிச்சயம் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பில் குதர்க்கமாகக் கருத்துக்களைப் பகிர்ந்து நீங்கள். அடுத்த தலைமுறையும் தமிழனாக வாழ வேண்டும் என்பதற்கு என்ன செய்யலாம் என்ற அடிப்படையில் தான் தலைப்பைத் தொடங்கினேன். அந்த அடிப்படையில் ஒரு அங்கமாகத் தான் வணிகர் சங்கத்தையும் சொன்னேன். வணிகர் சங்கங்கள் பலப்படுத்துவதன் ஊடாகத் தமிழர்களின் தயாரிப்புக்களைச் சந்தைப்படுத்த உதவலாம் என்பதே அடிப்படை. அது பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தேன். நுனிப்புல் மேய்ந்தமாதிரி படித்து விட்டு கருத்தெழுதும் போக்கினை எனிவரும் காலங்களிலாவது....

ஆமாம். தனிப்பட்ட விதத்தில் கொடி பிடிக்காமல் உங்கள் சமூக சேவை பற்றி நிறையவே அறிந்திருக்கின்றேன். நன்றி :-)

Link to comment
Share on other sites

நீங்கள் ஆரம்பித்த திரியில் வந்து கருத்து பகிர்ந்தது எனது தவறுதான். மன்னித்துக்கொள்ளவும். எதிர்காலத்தில் நான் உங்கள் தோட்டத்தினுள் இறங்கி புல்லு மேயாமல் பார்த்துக்கொள்கின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

விலாசம் காட்டுவம் என்று ஜெயம் ரவியின் படத்துடன் இறங்கிவிட்டீர்கள் போல

இப்படியே ஒரு அஞ்சுசதத்திற்கும் வேலை செய்யாமல் அளந்து கொண்டிப்பதுதான் பலரின் வேலை.செய்யதவன் சொல்லிக் காட்டத்தான் செய்வான்.இதுவரை நீர் என்னத்தை புடுங்கினீர் என ஒருக்கா சொல்லும் பார்ப்போம்.

சொல்லக் கூடாது பரம ரகசியம் நான் தான் ஆர்ம் டீலே செய்தனான் என்று சொல்லப் போறீரோ?

உங்களுக்கெல்லாம் தமிழனின் உரிமையை பற்றி கதைக்க என்ன வக்கு இருக்கின்றது.உங்களைவிட கருணாவும்,டக்கிளசும்,பிள்ளயானும் மேல்.அதை இப்போ அங்கிருக்கும் மக்களும் ஒப்பு கொள்கின்றார்கள்.

படமோட்டியே காலத்தை கழிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலாசம் காட்டுவம் என்று ஜெயம் ரவியின் படத்துடன் இறங்கிவிட்டீர்கள் போல

இப்படியே ஒரு அஞ்சுசதத்திற்கும் வேலை செய்யாமல் அளந்து கொண்டிப்பதுதான் பலரின் வேலை.செய்யதவன் சொல்லிக் காட்டத்தான் செய்வான்.இதுவரை நீர் என்னத்தை புடுங்கினீர் என ஒருக்கா சொல்லும் பார்ப்போம்.

சொல்லக் கூடாது பரம ரகசியம் நான் தான் ஆர்ம் டீலே செய்தனான் என்று சொல்லப் போறீரோ?

உங்களுக்கெல்லாம் தமிழனின் உரிமையை பற்றி கதைக்க என்ன வக்கு இருக்கின்றது.உங்களைவிட கருணாவும்,டக்கிளசும்,பிள்ளயானும் மேல்.அதை இப்போ அங்கிருக்கும் மக்களும் ஒப்பு கொள்கின்றார்கள்.

படமோட்டியே காலத்தை கழிக்காதீர்கள்.

அண்ணாச்சி, சொல்லுறன் என்டு கோவிக்க வேணாம். நீங்கள் டெல்லியில இருந்து புல்லுப் புடுங்கினதை எங்கயும் எழுதலாம்-அதால ஆபத்து "இப்ப" இல்லை. பதிலாக, உங்கட வெளிப்படுத்தல்களுக்கு கொஞ்சம் சதையுள்ள எலும்புத் துண்டு மேலதிகமாகக் கிடைக்கக் கூடும். ஆனா தூயவனோ நாங்களோ என்ன புடுங்கினம் எண்டு அடையாளத்தோட சொன்னா எங்களுக்கும் ஆபத்து, ஊரில இருக்கிற எங்கட ஆட்களுக்கும் ஆபத்து. அது சரி, நீங்கள் இங்க வந்து கூவி விக்கிற மாதிரி தூயவனும் வீதி விலாசம் நாள் திகதி எல்லாம் கொடுத்து வித்தால் நீங்கள் டக்கெண்டு நம்பிக் கொண்டு மன்னிப்புக் கேப்பீங்களோ? ஏனெண்டா உங்கட கடந்த கால சாகசங்களை ஒருத்தரும் இங்க நம்பிற மாதிரித் தெரியேல்ல, அதான் கேட்டனான். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் மடிந்த போது இனி இப்படி ஒரு வீரத் தமிழன் வருவானா?வரவே மாட்டான் என்று தான் அப்போது எண்ணியிருப்பார்கள்.

ஆனால் எத்தனையோ வருடத்திற்கு பிற்பாடு தேசிய தலைவர் பிரபாகரன் வந்தார்.

இனியும் அப்படி ஒரு தமிழன் வருவான்.

நிச்சயம் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும்.

பண்டார வன்னியன் காலத்தில் இருந்து பிரபாகரன் காலம் வரை அடிமையா கிடந்தது போல.. இன்னும் கிடக்கனும் என்றா விரும்புறீங்க. ஏன் நீங்களோ.. நாங்களோ எங்களுக்குள் அந்தப் பிரபாகரனை அல்லது அவனை விஞ்சிய தமிழனை காண விளைகிறமில்ல...????????????????????!

இது பிரபாகரனின் காலத்தை விஞ்சியது. விரைவாக மாறனும்.. இல்ல காலம் உங்களை மாத்திடும்..! :wub:

நீங்கள் ஆரம்பித்த திரியில் வந்து கருத்து பகிர்ந்தது எனது தவறுதான். மன்னித்துக்கொள்ளவும். எதிர்காலத்தில் நான் உங்கள் தோட்டத்தினுள் இறங்கி புல்லு மேயாமல் பார்த்துக்கொள்கின்றேன். நன்றி.

கூல் சகோதரா. அவனே எழுதி இருக்கானில்ல.. தனக்கு இப்ப எல்லாம் கோபம் எரிச்சல் படக்கென்று வருதென்னு. அப்படி இருக்க இது நியாயமா. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில், மலேசியாவில் 4வது தலைமுறையினருக்குத் தமிழ் தெரிந்திருக்கிறது. தமிழை நன்றாகப் படிக்கிறார்கள். இவர்கள் இந்தியா வம்சாவளித் தமிழர்கள். ஈழத்தில் பிறந்தவர்களின் 2வது தலைமுறையினர் இங்கு தமிழ் படிப்பது மிகவும் குறைவு.

சிங்கப்பூரில் பாடசாலைகளில் ஒரு பாடம் (சீனா, மலாய், தமிழ் ) படிக்க முடியும். எனக்குத் தெரிந்த ஈழத்தமிழர் தனது பிள்ளைக்கு தமிழைப் படிப்பிக்காமல் சீனா மொழியைப் படிப்பிக்கிறார்.

புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்களின் 2,3 சந்ததிக்குப் பிறகு தமிழ் தெரியாமல் போகப் போகிறது. தெரிந்தோ தெரியாமலோ அடுத்த தலைமுறையினரை மற்றய நாட்டவர்கள் இந்தியர்கள் என்றே அழைக்கப் போகிறார்கள்.

கிறிஸ்தவத்தமிழர்கள் ஆங்கிலப் பெயரைச் சூட்டி அடையாளம் இழந்துவரும் வேளையில் சைவ(இந்து) சமயத்தைப்பின்பற்றுவோர் எண் சோதிட மாயையினால் தமிழ் அல்லாத சிங்கள, வட மொழிப் பெயர்களைச் சூடாப் போகிறார்கள்.

வேறு நாட்டவர்களுடன் கலப்புத்திருமணம் நடைபெறப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் தமிழிழம் கிடைத்து சிங்கப்பூர்,ஜப்பான் போன்று குறுகிய காலத்தில் தன்னிறைவு அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாக்குவோம் என்டால் அதன் பிறகு எங்கட சனம் இது எங்கட நாடு இப்படி அபிவிருத்தி அடைந்த நாடாக மாறி இருக்குது என சொல்லிப் அங்கே போய் குடி இருப்பார்கள்...அதற்கு முதலில் நாம் சண்டை போடாமல் ஒற்றுமையாய் ஈழம் கிடைக்க எம்மாலான முயற்சி செய்ய வேண்டும்....அதுக்கு முதல் யாழில் எல்லோரும் ஒருவரை ஒருவர் எதிரியாய் பாவிப்பதை நிறுத்துங்கள்...கருத்துகளத்தில் எங்களுக்குள் ஒற்றுமை இல்லா விட்டால் பிறகு எப்படி?

Link to comment
Share on other sites

எமது இனத்தின் அடையாளம் எமது மொழியே. எமது மொழியை எமது அடுத்த சந்ததி பயன்படுத்துவதை பொறுத்துத்தான் எமது இனத்தின் எதிர்காலத்தினை நாங்கள் நோக்க முடியும். எனவே எமது சந்ததிகளை தமிழ்மொழியை பயன்படுத்தச் செய்யும் வழிமுறைகளை நாங்களே ஏற்படுத்த வேண்டும். தமிழை பயன்படுத்துங்கள் தமிழில் கதையுங்கள் என்று கோரிக்கை விடுவதிலும் பார்க்க அதனை கவர்ச்சிகரமாக அவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணமாக தாயகத்தில் தமிழ்த்தின போட்டிகள் பாடசாலை மட்டத்தில் நடாத்துவது போன்று ஒவ்வொரு நாடுகளிலும் நடாத்துவது பயன்மிக்கது. இதனை அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படுத்தல் நன்று. இதனை நாடு கடந்த அரசு ஒழுங்கு படுத்தலாம். குறித்த நாடுகளில் வெற்றி பெற்றவர்கள் சர்வதேச ரீதியான போட்டிகளில் பங்குபற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். இது பெரியளவில் பெற்றோர்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உண்டு. புகழ் விரும்பிகளான புலம்பெயர் தமிழர்கள் தமது பிள்ளைகளின் பெருமைகளை தம்பட்டம் அடிப்பதற்காக தமது பிள்ளைகளை தயார்படுத்துவர் . இதனால் தமிழ் மொழி பயன்பாடு கூடும். எமது தமிழீழ வரலாற்றினையே போட்டிகளின் கருப்பொருளாக வைப்பது சிறந்தது.

மேலும் தமிழில் பெயர் வைப்பதனை ஊக்கப்படுத்துவதற்காக பரிசுத்திட்டம் ஒன்றினை செயற்படுத்தலும் நன்று. அதற்கு முன்னோடியாக தமிழில் பெயர் அமையாதவர்கள் தமது பெயரினை தமிழில் மாற்றுதல் மேலும் சிறப்பு.

Link to comment
Share on other sites

எங்களுக்கு நாடு கிடைக்காவிடிலும் பரவாயில்லை,..........தமிழர்களே முடிந்தால் சிங்களவனுக்கு சிறிலன்கா என்ற நாடு சொந்தம் இல்லை என்ற நிலையை உருவாக்குவதில் முயற்சி செய்யுங்கோ இந்தியாகாரனுக்கும் சீனாக்காரனுக்கும் சின்களவன் தனது இறையான்மையை தரை வார்க்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆரம்பித்த திரியில் வந்து கருத்து பகிர்ந்தது எனது தவறுதான். மன்னித்துக்கொள்ளவும். எதிர்காலத்தில் நான் உங்கள் தோட்டத்தினுள் இறங்கி புல்லு மேயாமல் பார்த்துக்கொள்கின்றேன். நன்றி.

எந்தத் தலைப்பிலும் குதர்க்கமாகக் கதைத்தால் அது குதர்க்கமாகத் தானே இருக்கப் போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலாசம் காட்டுவம் என்று ஜெயம் ரவியின் படத்துடன் இறங்கிவிட்டீர்கள் போல

இப்படியே ஒரு அஞ்சுசதத்திற்கும் வேலை செய்யாமல் அளந்து கொண்டிப்பதுதான் பலரின் வேலை.செய்யதவன் சொல்லிக் காட்டத்தான் செய்வான்.இதுவரை நீர் என்னத்தை புடுங்கினீர் என ஒருக்கா சொல்லும் பார்ப்போம்.

சொல்லக் கூடாது பரம ரகசியம் நான் தான் ஆர்ம் டீலே செய்தனான் என்று சொல்லப் போறீரோ?

உங்களுக்கெல்லாம் தமிழனின் உரிமையை பற்றி கதைக்க என்ன வக்கு இருக்கின்றது.உங்களைவிட கருணாவும்,டக்கிளசும்,பிள்ளயானும் மேல்.அதை இப்போ அங்கிருக்கும் மக்களும் ஒப்பு கொள்கின்றார்கள்.

படமோட்டியே காலத்தை கழிக்காதீர்கள்.

உங்களை விட எமக்கு உரிமையைப் பற்றிக் கதைக்க வக்கு இருக்கின்றது. வெறுமனே சோத்துப் பெட்டலமும், எலும்பும் தான் தமிழனின் தன்னிறைவு என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உங்களைப் போன்றவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும். பரவாயில்லையே... ஆயுதப் பேரல் ஆவது தாங்கள் செய்யவில்லை என்று அதையாவது விட்டு வைத்ததுக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள். நாங்கள் ஒன்றும் புழுகவில்லை. ஏனென்றால் ஒன்றும் புடுங்கவில்லை. ஆனால் தான் புழுகித் தள்ளுகின்றீர். ஆனால் என்ன.....

Link to comment
Share on other sites

வணக்கம்

இங்கே சில உறவுகள் எம்மினத்தை இழிவுபடுத்தி எழுதியிருக்கிறார்கள் எப்படி முடிகிறது உறவுகளே உங்களால் எம்மினத்தை இழிவுபடுத்துவதற்கு அது உங்கள் பெற்றோரை இழிவுபடுத்துவது போன்றதல்லவா நான் இதை படிக்கும்போது என்னை நீங்கள் இழிவுபடுத்துவது போன்று உணர்கிறேன்

சிலவேளைகளில் நீங்கள் வசிக்கும் நாடுகளில் குடியுரிமை பெற்றிருப்பதால் இப்படி உங்களால் முடிகிறதா சற்று சிந்தித்து பாருங்கள் இழிவாக நீங்கள் எழுதியுள்ள வரிகளை ஈழத்தில் இருக்கும் உங்கள் பெற்றோரோ அல்லது சகோதரர்களோ வாசித்தால் அவர்கள்மனம் கவலை கொள்ளாதா? இங்கே நாம் அனைவரும் எமது முகத்தை மறைத்து புனைபெயருடன் தான் கருத்தெழுதுகிறோம். ஆனால் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தியே செய்கிறோம். உறவுகளே நாம் ஒன்று சேர்வோம் நல்லவற்றை விவாதிப்போம் கருத்துவேறுபாடுகளைக் களைந்து கொள்வோம். நம்மை நாம் நேசிப்போம் நண்பர்களாய்ச் சேர்ந்திருப்போம்.

உங்கள் மனங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனங்களைப் புண்படுத்துவதல்ல எனது நோக்கம் எம்மினம் ஒன்சேரவேண்டுமென்பதே !

தவறிருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்திக் கொள்கிறேன்.

தொடருவோம்!

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்

நண்பர் செந்தமிழாளன் கூறியது போன்று எமது தமிழீழ வரலாற்றினை கருப்பொருளாகவைத்து தமிழ்த்தின போட்டிகளை சர்வதேசமட்டத்தில் நடத்துவது எமது மொழியையும் தழிழீழ வரலாற்றினையும் இலகுவாக அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லமுடியும். அதேபோன்று எமது இனவிருத்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணங்களை நடத்துவதற்கு முடிந்த உதவிகளைச்செய்யலாம் குழந்தைகளை ஒன்று இரண்டுடன் நிறுத்திக்கொள்ளாமல் கூடுதலாக பெற்றெடுக்கவேண்டும். அதற்கான ஊக்கிவிப்புக்களையும் முன்னெடுக்க வேண்டும். பல பிள்ளைகள் உள்ள பெற்றோரை இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்கலாம். கோவில்களில், சிறப்புநிகழ்ச்சிகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். பொருளாதார ரீதியில் எம்மவரை மேம்படுத்த வேலைகளை தேடிக்கொடுக்கலாம் நம்மவரின் கடைகளிலேயே பொருட்களை வாங்கலாம் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் நம்மினத்தை மேம்படுத்த முடியும். தமிழை நேசித்து தமிழராய் வாழ்வோம்.

தவறிருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.

தொடருவோம்

நன்றி

Link to comment
Share on other sites

அடடா அருமையான திரி ஆரம்பமே அசத்தலாயிருக்கு.. நாம் இப்படியே மடியாமல் எமது இனத்தையையும் மொழியையும் காப்பாற்றி விட்டு வித்தியாசமாய் மடியலாம்.அதற்கான சில வழிமுறைகள்..

1) யாழ்களத்தில் இனம் மொழி மற்றும் கலாச்சாரத்தை காப்பாற்றுவது எப்படி என்று ஒரு திரியை திறந்து விவாதித்தல்.

2)எமது தமிழ் ஊடகங்னளில் இணையங்களில் போராட்டம் தோற்றதற்கு காரணம்..இந்தியா சீனா அமெரிக்கா எனவே அவற்றை நாம் அழிப்போம் என சபதமிடுவது.(சும்மாதான்) எங்காவது எழுதுவது.. இலங்கையரசின் போர் குற்றங்களை வெளி நாட்டு ஊடகங்களே வெளியிட்டு அதற்கான விசாரணைகளை நடத்தும்படி கோரும்பொழுது எமது ஊடகங்கள் மட்டும் எம்மவர் யாரையாவது துரோகியாக்கிக் கொண்டிருப்பது

3)நாம் இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள் என கவிதைகள் அல்லது கதைகள் கட்டுரைகள் எழுதலாம்.

4)கே.பியா?? நெடியவனா?? கருணாவா?? இதில் யார் முதலாமிடம் பெறும் துரோகி என ஆராச்சி செய்யலாம்.

5)தனது குடும்பத்தையும் இழந்து காயமடைந்து பல வருடங்கள் போராடி சிறையில் வாடும் ஒரு போரளிக்கு ஒரு சதமேனும் உதவாமல் மாவீரரரான போராளிக்கு அஞ்சலி செலுத்துதல் அல்லது அதற்கு நிதி சேகரித்தல்.

6)தயகத்தில் பெயர்பெற்ற பிராந்திய கிராமிய குழுவாத சண்டைகளை புலம் பெயர்நத நாடுகளிலும் கடைப்பிடித்தல். அதாவது 1) பிரந்தியம் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் வன்னி 2)அடுத்ததாக கிராமியம். பாசையூர் கரையூர் . நெல்லிடி.கரவெட்டி.. நெல்லியடி வல்வெட்டித்துறை. பத்தைமேனி வளலாய். புன்னாலைக்கட்டுவன் குப்பிளான்... ஏழாலை குப்பிளான். ஆரியகுளம் மணியந்தோட்டம். 3)அதற்கடுத்தது சாதிய சண்டைகள்..சாதிகளை நான் எழுதத் தேவையில்லை..அது அனைவரிற்கும் தெரிந்தது..இப்படி இங்கும் தொடரலாம்.

7)என்னுடைய ஆலோசனையை கேட்காததால்தான் ஆயுதப் போராட்டம் அழிந்தது எனவே என்னுடைய ஆலோசனையையும் அரசியலையும் யாராவது கேழுங்கள்.என்று ஒரு கூட்டமும் நாங்கள் கேட்டபணத்தினை தராததால் தான் ஆயுதப் போராட்டம் அழிந்தது எனவே இனிமேலாவது நாங்கள் கேட்கும் பணத்தை தாருங்கள் என புலம் பெயர் தேசத்தில் இயங்கும் ஏதாவது ஒரு குழுவிற்கு ஆதரவளித்தல்.

இவற்றில் ஏதாவது ஒன்றினை செய்யலாம்..அப்பொழுது இந்த தலைப்பாவது காப்பற்றப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது டாம்.

எங்களால் ஒரு பெயரில் நிதி அமைப்பு என்று தொடங்கி விட்டு கொடுக்கின்ற காசை விட, கொடுக்கின்ற விளம்பரத்தை அதிகமாகச் செய்ய முடியாது. எல்லா விடயத்திலும் எங்களின் பெயரை பிரபல்யமாகச் செலுத்துகின்ற அறிவும் கிடையாது. முடிஞ்சால் வலம்புரி, உதயனின் பெயர் போட்டு வர வைக்கின்ற தொடர்பும் கிடையாது. அதை விடத் தமிழ்நெற், சங்கதி, அனைத்துலகத் தொடர்பகத்தை யார் யார் இயக்குகினம், நான் யார் தெரியுமா என்று படம் போட்டுக் காட்டவும் தெரியா. இப்படி ஏதாவது சில்லறை வேலை செய்து தானே எங்களாலே பிரபல்யம் காட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அழித்த எதரியிடம் என்ன பலம் உள்ளதென்று தேடினேன்............. தமிழனை விட ஏதும் இல்லை.

அப்போ எப்படி அவனால் தமிழனை வெல்ல முடிந்தது என்று தேடினேன்............ ஒரு பெருத்த பலவீனம் இருந்தது.

ஒற்றுமையின்மை! ஒற்றுமையின்மை! ஓற்றுமையின்மை!

சுயநல பேய்கள் எப்படியாவது தாம் வாழ்ந்தால் சரியென இருந்தார்கள்

தேசவிரும்பி தன்னை அழித்தும் தேசத்தை காக்க துடித்தான்.

இரண்டும் இருவேறு துருவங்கள். எதில் எண்ணிக்கை அடிப்படையே வெல்லும் என்பது கணக்கு விகிசாதாரம். நடந்ததும் அதுவே என்றே நான் நம்புகிறேன்.

என்னை பொறுத்தவரையில் தமிழனுக்கு போதுமான அடிகள் இன்னமும் விழவில்லை........

இனிதான் சிங்களவன் தொண்டையை நசிக்க வேண்டும்........... கூட்டிகொடுத்து கும்மாழம்போட்ட துரோகநாய்களின் தங்கைகளையும் தாய்மாரையும் தரையில் போட்டு புனையவேண்டும் தமிழ் என்ற காரணத்திற்காக. இந்த இடைவெளியில் முஸ்லீம் சகோதரர்கள் தமது சொந்த புத்தியை காட்ட வேண்டும்.

இதில் நசிபட்டாலே தமிழனுக்கு நாட்டில் ஏதோ பிரச்சனை இருப்பது புரியும். அப்போது உதவி கேட்டு புலம்பெயர் தேசங்களை நோக்கி கைகள் நீளும்.

அந்த தருணத்திற்கே காத்திருந்தவர்கள்போல்............... நாம் குறைந்தபட்சம் ஒரு கட்மைப்பை கட்டிவைத்திருந்தாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம். நாம் தோற்றுப் போனதால் தான், எதிரி வெற்றி பெற்றான்.

Link to comment
Share on other sites

.

குடும்பம் தான் சமுதாயத்தை கட்டும் அடிப்படை அலகு. சமுதாயத்தின் அடையாளங்கள் குடும்ப அளவில் தான் கட்டப் பட வேண்டும். உதாரணமாக சகஜமாக தமிழில் பேசுதல்.

இங்கேயே பிறந்து வளரும் என் பிள்ளை நன்றாக தமிழில் பேசும்; இந்த நிலமையையே தொடர்ந்து பேண திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

குடும்ப‌த்திற்கு அடுத்ததாக சமுதாயத்தைக் கட்டும் அடுத்த வட்டம்‍ உறவினர்கள். தொலைபேசி ,ஸ்கைப், முகநூல், மின்னஞ்சல், வாழ்த்துமட்டைகள் என்று தொடர்பைத் தொடர்ந்து பேணுதல், பிள்ளைகளையும் பங்கெடுக்க வைத்தல். முடிந்த மட்டும் போய்வருதல்.

தமிழ் நண்பர் வட்டமும் உறவினர்களைப் போலத் தான்.

யூதர்கள் தம்மிடையே வட்டி இன்றி கடன் கொடுத்து ஒருவருக்கொருவர் உதவி அவரவர் வியாபாரத்தை வளர்க்க உதவுவார்கள். இன்று அவர்கள் இந்த அளவுக்கு வளர்ச்சியடைய இதுவும் ஒரு காரணம்.

எம்மிடம் இருக்கும் சந்தை ரீதியான பலமொன்று வட அமெரிக்க, ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, ஆசிய சந்தைகளை அணுகக் கூடிய வாய்ப்பு. இதன் மூலம் வியாபாரத்தை வளர்த்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருப்பவர்கள் மடியமாட்டார்கள், தாயகத்தில் இருப்பவர்கள் எப்படியாவது பிழைத்துவிடுவார்கள். யாழ் களம் 20ம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும்போது மீண்டும் இதே மாதிரி ஒரு தலைப்பு தொடங்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.