Jump to content

திருமணம் அவசியமா ?


திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ?  

31 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

ஒரு சின்ன சந்தேகம்.

திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ?

இவ்விடயத்தில் அனுபவசாலிகளான முகத்தார், சாத்திரியார், சின்னப்பு போன்றோர் உங்கள் கருத்தை முன் வையுங்கள்.

Link to comment
Share on other sites

மனசு புரிந்தால் போதும் புரியாதமனங்களை சேர்த்து வைத்து சிரமப்படுவதைவிட புரிந்து திருமணம் இல்லாமல் இருக்கலாம்

Link to comment
Share on other sites

மனிதன் பலமான சமூகப்பிராணி...அந்த வகையில் நோக்கும் போது பலமான குடும்ப அமைப்பு இல்லையேல்.... அது தனி மனித வாழ்வியல்.. உட்பட மனித இனத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கும்...!

ஆதிகால மனிதன் திருமணம்.. போன்ற எந்தச் சமூகச் சடங்குகளின் அறிமுகம் இன்றி விலங்குகள் போல வாழ்ந்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்..! 500,000 ஆண்டுகள் உயிரியல் வரலாற்றுப் பின்னணி உள்ள மனிதன் எப்போ பலமான சமூக வாழ்வியலுக்குள் நுழைந்தானோ அதன்பின் தான் கூட்டு முயற்சி மூலம் சிந்தனைப் பெருக்கத்துக்கும் பரவலுக்கும் இடமளித்து பலமான நாகரிகங்களையும் வளர்ச்சிகளையும் தனதாக்கி இன்று குறிப்பிடத்தக்க அளவுக்கு இயற்கையை வென்று வாழப்பழகி இருக்கிறான்..! உலகில் வேறு எந்த உயிரினமும் இயற்கையை வென்று வாழவில்லை...அவை இயற்கைக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன..! அவற்றிலும் கூட பலமான சமூக வாழ்வியல் நடத்தையைக் காண்பிக்கும் உயர் விலங்குகளே...நீண்ட காலம் தப்பிப்பிழைத்து வாழ்வதில் அதிகம் வெற்றி கண்டுள்ளன. மனித அறிவு வளர்ச்சியில்- அவன் மூளை விருத்தியில்- பலமான சமூக வாழ்வு பல சந்தர்ப்பங்களில் அவனுக்கு உதவி இருக்கிறது..! குறிப்பாக தனி நபர் பாதுக்காப்பென்பது சமூகத்தினது பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது என்ற நிலை வரும் போது மனிதனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட அவனின் சிந்தனை வேறு வடிவங்களில் வளர்க்கப்பட உதவியாகிவிடுகிறது..! அதன்பால் உருவானதே மனித அறிவியல் வளர்ச்சி..! பல விலங்குகள் தம்மை பாதுக்காப்பது குறித்து செயற்படுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துவதால் அவற்றை இயற்கை எளிதாக கட்டுப்படுத்திவிடுகிறது..!

மீண்டும்.. பலவீனமான சமூக கட்டமைப்பு நிலை என்பது மனிதரில் பலவீனத்தையே உண்டாக்கும்..! அது பல்வேறு வடிவங்களில் உருவாகும்..! குறிப்பாக மனோவியல் பலவீனங்களுக்கு அது வித்திடும்..! அது முழு உடலையும் கட்டுப்படுத்தும்..பாதிக்கச் செய்யும்..! காரணம்..மனிதன் ஒரு சமூக விலங்கு..என்பது கட்டாய நிலை..! பலமான சமூகம் தன்னோடு இருக்கிறது என்பதே மனிதருக்குப் பல சந்தர்ப்பங்களில் பலம் சேர்த்திருக்கிறது..! அதற்கு திருமணம் குடும்பம் என்ற நிலைகளும் முக்கிய பங்காற்றி இருக்கின்றன...! பலமான உறுதிமிக்க வளர்ச்சி நோக்கிய சமூகக் கட்டமைப்புக்கு புரிந்துணர்வின்பாலான திருமணம் நிச்சயம் அவசியம்..! :idea: :idea:

Link to comment
Share on other sites

ஒரு சின்ன சந்தேகம்.

திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா

தம்பி இவ்வளவு காலத்துக்குப் பிறகு இந்தகேள்வியை கேக்க வெளிக்கிட்டிருக்கிறீர் எங்கடை உழைப்பிலை மண்ணைப் போடவேணுமெண்டு என்ன வேண்டுதலோ தெரியேலை. . . முன்னைய எங்கடை காலங்களில் திருமணம் வாழ்க்கையில் குறிப்பிட்ட வயசில் இருபாலருக்கும் நடந்திட வேணும் அல்லாவிட்டால் ஊரில் அவர்களைப் பற்றி நெளித்துக் கதைப்பதே பொழுபோக்காவிடும் ஆனால் இப்பத்தைய இயந்திர வாழ்க்கையில் திருமணத்தை காலம் தாழ்த்தி செய்கிறார்கள் அல்லாமல் முற்றாக அதை தேவையில்லை எனும் நிலையில் எமது இனம் இல்லைஎண்டுதான் சொல்லவேண்டும் இப்போதைய சீதனப்பிரச்சனை குடும்பப் பொறுப்பு மேற்படிப்புகள் காரணமாக சிலபேருக்கு திருமணங்கள் தள்ளிப் போகிறது அதுக்காக அவர்கள் திருமணம் தேவையில்லை எண்டு சொல்லவில்லை வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தபின் தங்களுக்கொண்டு ஒரு குடும்பத்தை அமைக்க விரும்புகிறார்கள் இதே கேள்வியை எங்கடைஅப்பா அம்மா கேட்டு திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இதுக்கெல்லாம் பதிலெழுதுற வில்லங்கம் எங்களுக்கு வந்திருக்காது என்ன.........

Link to comment
Share on other sites

அப்பா..வாக்கு போட்டாச்சு..இங்கையும் ஏதாச்சுமு; கொடுப்பிங்களா? ஒட்டு போட்டதுக்கு? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

எங்கடை உழைப்பிலை மண்ணைப் போடவேணுமெண்டு என்ன வேண்டுதலோ தெரியேலை. . .

தாத்தா நிச்சயமா உங்க உழைப்பிலை மண்ணைப் போடவேணுமென்பது என் வேண்டுதலன்று.

இதே கேள்வியை எங்கடைஅப்பா அம்மா கேட்டு திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இதுக்கெல்லாம் பதிலெழுதுற வில்லங்கம் எங்களுக்கு வந்திருக்காது என்ன.........

நான் இந்தக் கேள்வியைக் கேட்டு யாரையும் திருமணம் செய்ய வேண்டாமென வற்புறுத்தவில்லையே !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பா..வாக்கு போட்டாச்சு..இங்கையும் ஏதாச்சுமு; கொடுப்பிங்களா? ஒட்டு போட்டதுக்கு? :roll: :roll: :roll:

அங்க சொன்னது தான் இங்கையும் கிடைக்கும்.

ஆரோக்கியமான கட்டுக்கோப்பான அன்பான அழகான குடும்பவாழ்க்கைக்கு திருமணம் அவசியமானதுவே. :P

Link to comment
Share on other sites

ஆரோக்கியமான கட்டுக்கோப்பான அன்பான அழகான குடும்பவாழ்க்கைக்கு திருமணம் அவசியமானதுவே. :P

எனது கருத்தும் அதுவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில என்ன சந்தேகம்.... அவசியம் தானே?? நாங்க என்ன ஆடு மாடா?? யாரும் நொந்துபோனவங்க வேறு மாதிரி சொல்லுவாங்க... ஏற்ற்க்கொள்ளாதீங்கப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க என்ன ஆடு மாடா??

ம் அப்படிக்கேளுங்க... :wink: :P

Link to comment
Share on other sites

இது என்ன கேள்வி

ஆகாதவங்களுக்கு ரொம்ப அவசியம்

ஆனவங்களுக்கு அவசியம் இல்லை

Link to comment
Share on other sites

திருமணம் அவசியம். ஆனால் திருமணத்தின்போது வெத்திலை பாக்கு சரைக்கு பதிலா.. சந்தண குங்கும சிமிழ், பன்னீர்க் கும்பா, குத்து விளக்கு.. அண்மைல பவுண் காசென வந்தவர்களுக்கு கொடுத்தனுப்புறதுதான் மகா மகா கேவலம்னு சொல்ல வாறேன்.. :P

Link to comment
Share on other sites

யோவ் கரி ளொள்ளா

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஆகா அடிபட்டாலும் புடுங்குப்பட்டாலும் சின்னாச்சி ஓட வாழுற வாழ்க்கையே ஒரு தனிசுகம் தானப்பா குடுத்து வச்சிருக்கனும்

யோவ் கூடவே 2 வாரிசும் இருந்திட்டா

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

யோவ் கரி சந்தோச எண்டா அது தானய்யா எது சொல்லும் பாப்பம் இல்லற வாழ்க்கை தானய்யா

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அது சரி உமக்கு கல்யாணம் ஆச்சா ????

(மகனே முதலில அத செய்யும் பிறகு பாரும் வாழ்க்கையை ஏதாவது ஐடியா வேணும் எண்டா தனிமடல் போடும் )

:D:D:D:D:D:D:D:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் அவசியம். ஆனால் திருமணத்தின்போது வெத்திலை பாக்கு சரைக்கு பதிலா.. சந்தண குங்கும சிமிழ், பன்னீர்க் கும்பா, குத்து விளக்கு.. அண்மைல பவுண் காசென வந்தவர்களுக்கு கொடுத்தனுப்புறதுதான் மகா மகா கேவலம்னு சொல்ல வாறேன்.. :P

இப்படி வேறை நடந்கிதா?? என்ன கொள்ளை அடிச்சே கலியாணம் நடந்தீனம். இதை விட இன்னொரு பகிடி அண்மையில ஒரு விசேசம் போனா வித்தியாசமாய்ச்செய்யணும் என்றிட்டு வாழை இலையை மேசைக்கு கொண்டந்திட்டாங்க. கையால சாப்பிட்டு.. கைகழுவிறதுக்கு கழிவறையை நோக்கிச்சென்ற மக்கள்.. நம்ம சங்கக்கடையில கியூ நிண்டமாதிரி நிண்டாங்க. அங்க சுத்தம் பண்ண வந்த வெள்ளைக்காரர் சினந்து கொண்டு பேச்சுதுகள் இதை ஓவரிலும்ஓவர் :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி உமக்கு கல்யாணம் ஆச்சா ????

(மகனே முதலில அத செய்யும் பிறகு பாரும் வாழ்க்கையை ஏதாவது ஐடியா வேணும் எண்டா தனிமடல் போடும் )

உருப்பட்ட மாதிரித்தான். :wink: :P

Link to comment
Share on other sites

உருப்பட்ட மாதிரித்தான். :wink: :P

அப்ப களத்தில ஒரு சபமியாரம்மா ரெடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

:P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

சின்னப்பு சாமியார் ஆகிறதுக்கும் கலியாணம் கட்டி பாத்திட்டுத்தான் போறவை எண்டு கேள்விப்பட்டன் அப்ப டமிழுக்கு எல்லாம் முடிஞ்சுபோல..............சந்தோஷம்

Link to comment
Share on other sites

அப்ப களத்தில ஒரு சாமியாரம்மா ரெடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

:P :P :P :P :P :P :P

அப்படியே சாமியாரம்மாக்கு ஒரு பெயர் வையுங்களன் சின்னப்பு... ! :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

திருமணம் அவசியம் அற்றது மட்டும் அல்ல சமத்துவம் அற்ற மனித சமூக அமைப்புக்கு அடிப்படையாக இருப்பதும் குடும்பம் ஆகும்.

அது தனிச்சொத்துக்கும் அரசு நிறுவனப்படவும் வழிவகுத்தது என்கிறார் எங்கெல்ஸ். அவரது குடும்பம், தனிச்சொத்து, அரசு நாம் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம். அது தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப களத்தில ஒரு சபமியாரம்மா ரெடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

:P :P :P :P :P :P :P

சிதம்பரம் அழுகுறார்.. இப்படி நீங்க சொல்ல. :wink: :P

சின்னப்பு சாமியார் ஆகிறதுக்கும் கலியாணம் கட்டி பாத்திட்டுத்தான் போறவை எண்டு கேள்விப்பட்டன் அப்ப டமிழுக்கு எல்லாம் முடிஞ்சுபோல..............சந்தோஷம்

_________________

கட்டாமல் போனவையைக்காணல்லையோ?? கிண்டல் தானே.. :wink: :P

Link to comment
Share on other sites

திருமணம் அவசியம் அற்றது மட்டும் அல்ல சமத்துவம் அற்ற மனித சமூக அமைப்புக்கு அடிப்படையாக இருப்பதும் குடும்பம் ஆகும்.

அது தனிச்சொத்துக்கும் அரசு நிறுவனப்படவும் வழிவகுத்தது என்கிறார் எங்கெல்ஸ். அவரது குடும்பம், தனிச்சொத்து, அரசு நாம் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம். அது தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

புத்தகத்தில் சிலதை கொள்கை அளவில் எழுதலாம்.. நடைமுறையில் சாத்தியமானதை செய்ய வேணும் சொல்ல வேணும்..! சமத்துவம் என்பது குடும்ப நிலையில் எப்படி பாதிக்கப்படும்..குடும்பம் தான் புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தையே அளிக்கிறது..! அந்தக் கட்டமைப்பு இல்லையேல் சமூகம் என்ற நிலைக்கும் புரிந்துணர்வுக்கும் வழி ஏற்பட்டிருக்காது..! அது இல்லாமல் மனிதனிடம் கூட்டு முயற்சிக்கு வழி இடமிருக்க வாய்ப்பில்லை..! அது மனிதருக்குள் பலவீனமான நிலையே...! தனி மனிதன் சாதித்ததிலும் மனிதன் சமூகமாகச் சாதித்ததே அவைப் பலப்படுத்தி இருக்கிறது..! :P :idea: :idea:

Link to comment
Share on other sites

இதெல்லாம் ஒரு கேள்வியா? இளம்புள்ளைகளின் வாழ்க்கையோடு விளையாடாதீங்கப்பா. நாங்க இனித்தான் கரையேறணும்.

Link to comment
Share on other sites

ஓய் கரி கலா என்ன நக்கலா வருடம் முழுக்க படிச்சிட்டு வருச கடைசியிலை வாற பரீட்சையிலைதான் நீர் பாடத்திலை சித்தியடைஞ்சனீரா இல்லையா எண்டு தீர் மானிக்கிற மாதிரி தான் வாழ்க்கை பாடத்திலை திருமணம் ஒரு பரீட்சை அதை நீர் செய்து ஓழுங்கா சித்தியடைஞ்சாதான் உமது வாழ்க்கையிலை யாரும் சித்தியடைஞ்ச மாதிரி இல்லாட்டி ம்...எல்லாமே கோட்டை விட்டமாதிரித்தான்

Link to comment
Share on other sites

அது சரி உமக்கு கல்யாணம் ஆச்சா ????

(மகனே முதலில அத செய்யும் பிறகு பாரும் வாழ்க்கையை ஏதாவது ஐடியா வேணும் எண்டா தனிமடல் போடும்

இன்னும் இல்லை அப்பு :lol:

இனிமேலும் திருமணம் செய்யிற ஐடியா இல்லை. 8) :wink:

யாருய்யா அது அவசியமற்றதுக்கு வாக்குப்போட்டவங்க ?

எங்க உங்க கருத்து ????????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.