Jump to content

பிரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் முடித்தவுடன் மனைவி கணவனுக்குச் சில பணிவிடைகளை செய்ய ஆரம்பிப்பார். தேனீர் பரிமாறுதல், குளிக்கும்போது துவாய் எடுத்துக் கொடுத்தல், உணவுபரிமாறுதல் என்று தொடங்கும். பின்னர் கணவன் திருமணத்திற்கு முன்ன தானாகச் செய்துகொண்டிருந்த பல கருமங்களை மனைவியே செய்ய வேண்டி வரும். வயது போகப் போக மனைவிக்கு அப் பணிவிடைகள் கடினமாக இருந்தாலும் பழகி விட்டதால் செய்தே ஆகவேண்டிய நிலைக்கு வந்து விடுவார். கணவனும் மனைவி இன்றி வீட்டில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது பழக்கப்பட்டு விடுவார்.

வயதானவர்களைக் கூடப் பார்த்திருக்கிறேன். இருந்த இருப்பில் அந்தக் கண்ணாடியை எடு. பத்திரிகையை எடு. தேத்தண்ணி கொண்டுவா. என்று அதட்டிக் கொண்டிருப்பார்கள்.

இருவரும் பிரியும்போது இருவருக்குமே கடினமாக இருக்கும். கணவன் நான் இல்லாமல் தனியாக எப்படி எல்லாவற்றையும் செய்கிறாரோ என்று மனைவியும், மனைவி இல்லாமல் எதையும் சரியாகச் செய்ய முடியாது கணவனும் தவிப்பார்கள்.

இதைத்தான் அன்பு என்கிறோம். :D

இணையவன் அண்ணா எல்லாம் சொன்னீங்க சரி.. கடைசியில சொன்னீங்க பாருங்க இதுதான் அன்புன்னு.. அது உலக மகா பொய்..!

அன்பு பணிவிடை செய்வதால் தான் வருமா..??! பிள்ளை தாய்க்கு எதுவும் செய்யாத போதும்.. தாய் பிள்ளை மீது காட்டுவது அன்பு. தகப்பனும் அப்படியே. சகோதரங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவாவிட்டாலும் அன்பு காட்டுவார்கள். அதுதான் அன்பு.

இது ஒரு வகை அடிமைத்தனம். அதில் இருந்து இருவரும் விடுபட முடியா நிலையில்.. அதற்கு இடும் பெயர் அன்பு என்ற போலி அடையாளம் என்றே நான் நினைக்கிறேன்..! :D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் மனைவி திரும்பி வந்தபின் ஒரு மாத இடைவெளியில் திருப்பி எங்கையாவது அனுப்பிவிடுங்கள்.பகிடிக்கு இல்லை உண்மையாகத்தான் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யா மெய்யா எதை எழுதுவதென்றே தெரியவில்லை.2 கிழமைகள் ஆகிவிட்டது யாழில் பல நண்பர்களின் புத்திமதியடன் சிற்றிங் ரூமிற்கு காட்வூட்டும் அடித்து பெயின்ரையும் மாத்திவிட்டேன்.தோட்டத்தில் இருக்கும் முந்திரிகை பந்தலுக்கு புது மரமும் போட்டுவிட்டேன்.முடிந்த அளவுக்கு மாற்றங்கள்செய்துகொண்டுதானிருக்கின்றேன்

இருந்தும் என்னால் மனைவியின் பிரிவை ஒரு கணமும் தாங்க முடியவில்லை என்னில் ஏதும் பிழையா அல்லது எனது மனைவி என்னை அப்படி வைத்துவிட்டாரா?

அர்ஜுன் எங்களை வைச்சுக் காமெடி பண்ணவில்லைத் தானே

எனென்டால் முந்திரிகை மரத்துக்குப் பந்தல் போடுவதை விட்டுப் பந்தலுக்கு மரத்தைப் போட்டிருக்கிறிங்கள் :lol:

வாத்தியார்

***********

Link to comment
Share on other sites

யாழில் எழுது பெரும்பான்மையானோர் 20 இல் இருந்து 40 வரை என்றுதான் எனது கணிப்பு.50 தாண்டத்தான் எனது நிலை வரும் என நினைக்கின்றேன்.

அடுத்து முந்திரிகை பந்தல் .முதலில் டெக்கை சுற்றி வைத்தால் நிழலாக இருக்கும் என்று எண்ணினேன் பின்னர் அந்தளவுக்கு வளருமோ தெரிடாது என வேலியுடன் வைத்திவிட்டேன்.3 வருடங்களிலேயே வளர்ந்து தள்ளிவிட்டது.ஒரு செரியும்,ஒரு அப்பிள் மரமும் வைத்தேன்.அப்பிள் இன்னமும் காய்க தொடங்கவில்லை.செரி யூனிலெயே காய்கத்தொடங்கிவிடும்.குருவிகள் ஒன்றயும் விடாது இம்முறை மினுங்க்ல்கள் கொஞ்சம் கட்டிவிட்டேன் குருவி வந்தது குறைவு.நல்ல ருசியாக இருக்கும் வீட்டுத் தோட்டம் என்றபடியால்.

வீடு வாங்கும் போது பல வித மரங்களுடன் தான் வாங்கவேணுமென நினைத்தேன் மனைவியின் விருப்பத்திற்கு புது வீடு வாங்கியதால் எல்லாமே நாங்கள் தான் உருவாக்கியது.

நான் கொஞ்சம் அந்தக் காலத்து ஆள்பாருங்கோ.நேற்றுக்கூட சலசலப்பு இணையத்தில் ஒரு வீடியோவை உங்களயும் பார்க்க பண்ணுவமென்றால் இணக்க தெரியவில்லை.மகனிடம் கேட்டு முந்திரிகை பந்தலை இணத்துவிடுகின்றேன்.

Link to comment
Share on other sites

யாழில் எழுது பெரும்பான்மையானோர் 20 இல் இருந்து 40 வரை என்றுதான் எனது கணிப்பு.50 தாண்டத்தான் எனது நிலை வரும் என நினைக்கின்றேன்.

அடுத்து முந்திரிகை பந்தல் .முதலில் டெக்கை சுற்றி வைத்தால் நிழலாக இருக்கும் என்று எண்ணினேன் பின்னர் அந்தளவுக்கு வளருமோ தெரிடாது என வேலியுடன் வைத்திவிட்டேன்.3 வருடங்களிலேயே வளர்ந்து தள்ளிவிட்டது.ஒரு செரியும்,ஒரு அப்பிள் மரமும் வைத்தேன்.அப்பிள் இன்னமும் காய்க தொடங்கவில்லை.செரி யூனிலெயே காய்கத்தொடங்கிவிடும்.குருவிகள் ஒன்றயும் விடாது இம்முறை மினுங்க்ல்கள் கொஞ்சம் கட்டிவிட்டேன் குருவி வந்தது குறைவு.நல்ல ருசியாக இருக்கும் வீட்டுத் தோட்டம் என்றபடியால்.

வீடு வாங்கும் போது பல வித மரங்களுடன் தான் வாங்கவேணுமென நினைத்தேன் மனைவியின் விருப்பத்திற்கு புது வீடு வாங்கியதால் எல்லாமே நாங்கள் தான் உருவாக்கியது.

நான் கொஞ்சம் அந்தக் காலத்து ஆள்பாருங்கோ.நேற்றுக்கூட சலசலப்பு இணையத்தில் ஒரு வீடியோவை உங்களயும் பார்க்க பண்ணுவமென்றால் இணக்க தெரியவில்லை.மகனிடம் கேட்டு முந்திரிகை பந்தலை இணத்துவிடுகின்றேன்.

இப்படியே மனைவி வந்த பின்னும் செய்தால்(creative) சிறு பிரிவும் பெரிய விடயமாக தெரியாது.

Link to comment
Share on other sites

நன்றி. மகனுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இணைத்து விடுங்கள். நானும் ஒரு செரியும் ஒரு Asian Pear (ஸ்ரீலங்கா Pears - சிலோன் ஆப்பிள்) நட்டேன். செரி நன்றாக காய்த்தது. Asian Pears காய்கள் இப்பொழுது மரத்தில் பழுக்கத் தொடங்கியுள்ளன. நல்ல சுவையான கனிகள். இந்த வருடம் இதன் கிளைகளில் 3 வேறு வகையான Asaian Pears ஒட்டியுள்ளேன்.

Link to comment
Share on other sites

சிறிய இடைவேளையின் பின் மீண்டும்.

இந்த திரியை நானா தொடங்கினேன் என்று எனக்குள்ளேயே ஒரு வியப்பு.கடவுள் நம்பிக்கை அறவேயில்லாத நான். நடக்கும் ஒரு நிகழ்வுகளுக்கும் மூடநம்பிக்கையை அதற்குள் இழுக்காதீர்கள் என கத்திப்பேசும் எனக்கு இம் முறை எனது மனைவியின் பயணம் ஏனோ ஒரு சிறு தடுமாற்றத்தைக் கொடுத்தது.வயது போக எங்களின் மீது எமக்கே வரும் ஒரு விதபயம் கலந்த உணர்வு என இருந்தாலும் இந்த பிரிவு திரியை உங்களுடனும் பகிருவோம் என நினைத்தேன்.

எனது மனைவியின் தாயார் ஞாயிற்றுக்கிழமை கோவில் தேருக்கு போட்டுவந்து உணவு உண்ட கையுடன் அப்படியே மாரடைப்பில் எனது மனைவியின் கைகளில் சாய்ந்துவிட்டார்.யாழ் வைத்தியநிலையத்திற்கு உடனடியாக கொண்டு சென்றும் அவர்களின் பலத்த முதலுதவியாலும் கூட உதவமுடியவில்லை.எனது ந்ண்பரொருவர் யாழ் வைத்தியசாலையில் டொகடராக இருக்கின்றார் நன்றாக உதவிசெய்தாராம்.இருந்தும் தான் கூட்டிபோன தனது தாயாருக்கு இந்த நிலை வந்ததையிட்டு மிகவும் உடைந்து போய் போன் எடுக்கும் நேரமெல்லாம் ஒரே அழுகை.ஜேர்மனில் இருந்து ஒருவரும் கனடாவில் இருந்து இரு சகோதரர்களும் இன்றுதான் புறப்பட்டார்கள்.

என்று போன் எடுக்கும் போது சொன்னா இனி எனக்கு ஒன்றும் வேண்டாம் கனடா வந்து தனது கட்டிலில் படுத்தால் காணும் என்று.அம்மா இறந்தபின் அந்த இரண்டு நாட்களும் அங்கு இருக்கும் நடைமுறைகள்தன்னை போட்டு சிப்பிலி ஆட்டி தான் படாதபாடுபட்டுவிட்டதாக சொன்னா.

நொந்து நூலாகியிருக்கும் எனது மனைவியை நினைக்க எது என்னை இந்த திரியை எழுதத்தூண்டியது என யோசித்துப் பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

உங்கள் மாமியாருக்கு அஞ்சலிகள். தெரிஞ்ச அக்கா ஒருவரின் அம்மா ஒருவரும் இப்படித்தான்.. கலியாண வீட்டு பொன்னுருக்குக்கு போயிருந்தாராம். திடீரென மயங்கி விழுந்து மரணித்துவிட்டார் இரண்டு நாட்களுக்கு முன்னர். இந்த உலகம் எவ்வளவு தூரம் மகிழ்ச்சிகளாலும் கலகலப்பினாலும் நிறைந்து உயிர்ப்பாய் காணப்படுகின்றதோ.. அவ்வளவு தூரம் பிரிவுகள், துயர்களினால் நிறைந்து சூனியமானது. உயிர்ப்பிற்கும் சூனியத்திற்கும் இடையிலான போராட்டத்தில் எங்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

Link to comment
Share on other sites

அர்ச்சுன், உங்கள் மாமியாரின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.வாழ்க்கையே இப்படி தான் ஒன்று நினைக்க இன்னொன்று நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dear Arjun ........

...Please accept my Heart felt condolence to you and your family.

My prayers for her. always .

Nilaamathy akka .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...அந்த அம்மா கொடுத்து வைத்தவ ஊரில போய் இறந்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

உங்கள் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்

உங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இறுதிநேரத்தில் பெற்ற தாயை மடியில் சுமக்கும் அரியவாய்பு உங்கள் மனைவிக்கு கிட்டியிருக்கிறது இதைநினைத்து நீங்கள் மனநிறைவு கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

அர்ஜுன்,

உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பேரிழப்புக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்கள் மாமிக்கு அஞ்சலிகளும்.உங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய உறவை இழந்து தவிக்கும் உங்கள் எல்லாருக்கும் எனதும் எனது குடும்பத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன், பெற்றோரைப் பிரிந்து நினக்கும் எந்தப் பிள்ளைக்கு ஆறுதல் சொன்னாலும் இப்போதைக்கு மனம் ஏற்றுக் கொள்ளாது... இருப்பினும் உங்கள் மனைவியை நீங்கள் தான் ஆறுதல் படுத்த வேண்டும். கடவுளைத் தரிசித்து விட்டு வந்ததும் உயிர் பிரிந்துள்ளது என்று சொல்லுறீர்கள், குடுத்து வைத்தவ...

அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்., உங்கள் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜின் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா,

உங்கள் மாமியாரின் பிரிவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். அத்தோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!சாந்தி!!சாந்தி!!!

Link to comment
Share on other sites

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

post-7784-064442500 1282784089_thumb.gif

Link to comment
Share on other sites

அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

அதைவிட யாழ்களத்தில் பெரும்பாலோருடன் ஒத்துபோகாத நான் யாழில் இருந்து பல பாடம் கற்றேன்.எனது அரசியல் முகம் என்றுமே மாறாது ஆனால் மனிதனுக்கு அதைவிட பல வித முகங்களும் இருக்க வேண்டும் என எனக்கு உணர்த்தியதே யாழ் தான். ஒரு நாள்கூட ஊர்புதினத்தை விட அடுத்த பக்கத்திற்கு செல்லாத நான் இப்போது நாவுறவரைக்கும் என்னை கொண்டு வந்ததே யாழின் வெற்றி.

வெள்ளிக்கிழமை மாமியின் மரணச் சடங்கு.சகோதரர்கள் அங்கு போனதால் மனைவி ஓரளவிற்கு ஆறுதல் அடைந்துள்ளார்.

மீண்டும் யாழுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன் ..உங்கள் மாமியாரின் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

சிலருக்கு மட்டும் தான் தாய் மண்ணில் உயிரைவிடும் பாக்கியம் கிடைக்கும். அது உங்கள் மாமிக்கு கிடைச்சிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின் தாயார் ஞாயிற்றுக்கிழமை கோவில் தேருக்கு போட்டுவந்து உணவு உண்ட கையுடன் அப்படியே மாரடைப்பில் எனது மனைவியின் கைகளில் சாய்ந்துவிட்டார்.யாழ் வைத்தியநிலையத்திற்கு உடனடியாக கொண்டு சென்றும் அவர்களின் பலத்த முதலுதவியாலும் கூட உதவமுடியவில்லை.எனது ந்ண்பரொருவர் யாழ் வைத்தியசாலையில் டொகடராக இருக்கின்றார் நன்றாக உதவிசெய்தாராம்.இருந்தும் தான் கூட்டிபோன தனது தாயாருக்கு இந்த நிலை வந்ததையிட்டு மிகவும் உடைந்து போய் போன் எடுக்கும் நேரமெல்லாம் ஒரே அழுகை.ஜேர்மனில் இருந்து ஒருவரும் கனடாவில் இருந்து இரு சகோதரர்களும் இன்றுதான் புறப்பட்டார்கள்.

ஏன் பிரிவென்று தலைப்புப் போட்டிங்க.

இறுதியில்.. உங்க மாமியாரை நிரந்தரமா பிரிய வேண்டியதாப் போச்சே. ஆழ்ந்த அனுதாபங்கள். :lol:

அதேன் என் மாமியார் இறந்திட்டாங்கன்று சொல்லாம.. மனைவியின் தாயார் என்று சொல்லுறீங்க. அவர் மேல உங்களுக்கு அவ்வளவு வெறுப்போ இல்ல பாசமோ....???! அவரும் உங்க அம்மா போலத் தானே..! :):wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் ..உங்கள் மாமியாரின் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

நல்லதொரு கேள்வி நெடுக்ஸ்.எனது குடுப்மபத்தில் எவருக்கும் உறவு முறை சொல்லி அழைக்கும் பழக்கமில்லை.மனைவியின் குடும்பம் முழுக்க முறை சொல்லித்தான் அழைபார்கள்.நாங்கள் இன்னாரின் தாயோ , தகப்பனோ என்றுதான் அழைப்போம்.

இன்று பொழுதுபோகவில்லை பேஸ்மன்ட்டிற்குள்ளிருந்த பழைய அல்பங்களை கொண்டுவந்து புரட்டிப் பார்த்தேன்.பழைய நினைவுகளை மீட்டுவதில் தான் எத்தனை சுகம்.எமது வாழ்க்கை என்பது இன்னொருவரால் எழுதமுடியாதது நாமே அதன் நாயகர்கள்.ஒவ்வொரு படங்களையும் பார்க்க நானா இப்படி இருந்திருக்கின்றேன் என ஒரு வியப்பு..வீடியோ இன்னுமொரு மீடியம் ஆனல் புகைபடம் பார்க்கும் சந்தோசம் எதிலும் வரமாட்டாது.

லண்டனில் நடந்த எனது கலியாணவீட்டில் இப்போது பேர் அடிபடுக் கொண்டிருக்கும் அரைவாசிப் பேர்கள் நிற்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.