Jump to content

சைவ உணவு வகைகள்.


Recommended Posts

மாமிசம் சாப்பிடாதவர்கள் பிராமணர்கள் என்றில்லைத்தானே. இங்கே வெள்ளையர்கள் பலர் இப்போ சைவமாக மாறிக் கொண்டு வருவதை காணக்கூடியதாய் இருக்கு.

ஆசையிருந்தும் மனக்கட்டுபாட்டுடன் அதை விடுவது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன?

(யாழ்களத்தின் சமையல்பகுதியிலேயே தெரிகிறதே)

அப்படி ஒருவேளை சைவமாக மாறினால் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

... :lol:

கறுப்பியின் (கடுப்பேத்தும் திரியில் கேட்டுக் கொண்டது போல) வேண்டுகோளுக்கு இணங்க, இந்தத்திரியில் சைவ உணவு வகைகளை மட்டும் தமிழில் தேடி எடுத்து இணைக்கக்கவும் அத்துடன் நேரம் கிடைப்பின் புதிய முறைகளையும் அறியத் தர முடிவு எடுத்துள்ளேன். தயவு செய்து அனைவரும் இணைத்து கொள்ளவும்- நன்றி :lol:

கறுப்பி இந்தாங்கோ, பிரவுன் பிரட் உப்புமா மைக்கிறோவேவில் செய்யும் முறைய இந்த ஆன்டி சொல்லி காட்டி இருக்கிறா. :lol:

பிரவுன் பிரட் உப்புமா

http://www.youtube.com/watch?v=aHokrVq1PW4

http://www.youtube.com/watch?v=vHuSxf3_6PY&NR=1

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

இடியாப்ப பிரியாணி

இரண்டு பேருக்கு அளவாக

தேவையான பொருட்கள்

இடியாப்பம் 12

உருளைக் கிழங்கு – 1

கரட் -1

லீக்ஸ் - 1

கோவா (ஊயடியபந)– ¼ துண்டு

வெங்காயம் - 1

கஜீ -10

பிளம்ஸ் சிறிதளவு

நெய் அல்லது பட்டர்- 4 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள், ஏலக்காய் தூள்- சிறிதளவு

உப்பு தேவைக்கு ஏற்ப

dinners.jpg

செய்முறை

கரட்டை துருவி வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கு, லீக்ஸ், கோவா, வெங்காயம் ஆகியவற்றை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

இடியாப்பத்தை உதிர்த்து வையுங்கள்.

பாத்திரத்தில் நெய் விட்டு கிழங்கு வதங்கிய பின், வெங்காயம் போட்டு அவிந்த நிறம் வரும் வரை வதக்குங்கள். கஜீ, பிளம்ஸ் போட்டு வறுத்து, கரட், லீக்ஸ், கோவா சேர்த்து 2 நிமிடங்கள் பிரட்டிக் கொள்ளுங்கள்.

மிளகு தூள் ஏலத்தூள் உப்புப் போட்டு உதிர்த்த இடியப்பம் போட்டுக் கிளறி எடுத்து சேவிங் பிளேட்டில் போட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

(இத்துடன் பட்டாணிக்கறி, சோயாக்கறி, கத்தரிக்காய்ப் பிரட்டல், கிழங்கு மசாலா, அச்சாறு, சலட், கட்லற் அல்லது வடை வைத்துப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

சாப்பாட்டுக்குப் பின் டெசேட்டும் பரிமாறுங்கள்.)

http://sinnutasty.blogspot.com/2008/08/blog-post_26.html

Link to comment
Share on other sites

தக்காளி சாதம்

தேவையானவை

* அரிசி - 150 கிராம்

* வெங்காயம் - 100 கிராம்

* தக்காளி - 250 கிராம்

* பூண்டு - 50 கிராம்

* பச்சை மிளகாய் - 3

* பச்சை பட்டாணி - 50 கிராம்

* இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

* பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 1

* சோம்பு - 1/2 தேக்கரண்டி

* தேங்காய் - 2 தேக்கரண்டி

* காய்ந்த மிளகாய் - 3

* தயிர் - 3 தேக்கரண்டி

* எண்ணெய் / நெய் - 50 ml

* உப்பு - தேவையான அளவு

* புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

* தேங்காய், சோம்பு காய்ந்த மிளகாய் மூன்றையும் ஒன்றாக அரைக்கவும்.

* நெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை கருவேப்பில்லை போடவும்.

* பொரிந்ததும் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

* தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதிக்கி அரைத்த விழுது சேர்த்து மேலும் 5 நிமிடம் வரை வதக்கவும்.

* நறுக்கிய கொத்தமல்லி புதினா பச்சை பட்டாணி மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அரிசி சேர்த்து 5 நிமிடம் வதக்கி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.

* சுவையான தக்காளி சாதம் ரெடி.

http://www.arusuvai.com/tamil/node/15611

Link to comment
Share on other sites

புளிக்குளம்பு

pulikulampu.jpg

தேவையானப்பொருட்கள்:

புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு

தயிர் – 1 கப்

சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வெண்டைக்காய் – 4 அல்லது 5

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் – 5 முதல் 6 வரை

உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் – 1/2 அல்லது 3/4 கப்

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். (கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்). அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.

குறிப்பு: இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும்

http://barthee.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி

'கறுப்பி' யை பெண் என்று குட்டியில் இருந்து கனக்க பேர் நம்பிக்கொண்டு இருக்கினம் என்று மட்டும் விளங்குது.... :lol:

Link to comment
Share on other sites

சுஜி, நுணா, நிழலிக்கு நன்றிகள்.

...

'கறுப்பி' யை பெண் என்று குட்டியில் இருந்து கனக்க பேர் நம்பிக்கொண்டு இருக்கினம் என்று மட்டும் விளங்குது.... :lol:

நிழலி மன்னிக்கவும்!!

கறுப்பி அந்த முகம் தெரியாத உறவு 'கடுப்பேற்றுவது எப்படி' என்ற திரியில் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தி இருப்பதால், (அடிக்கடி சமையலறைப் பக்கம் போய் நானே எனது சாப்படுக்களை செய்வதால், எதோ கொஞ்சம் சமையல் பற்றி அறிந்து இருக்கிறேன். அறிய வேணும் என்ற ஆர்வமும் இருக்கிறது.) மற்றவருக்கு சாப்பாட்டை செய்தது குடுப்பதை விட, அதை எப்படி செய்யலாம் என்று செய்முறையச் சொன்னால் அவர்கள் செய்தது பார்த்து அந்த முறை பிடித்திருப்பின் அவர்கள் கடைப் பிடிப்பார்களே? எனக்குத் தெரிந்த ஒரு சில குறிப்புக்களை தேவையானவர்களுக்குப் பகிர்வது நல்லெண்ணம் என்றே நினைக்கிறன்.

(இதை விட்டு, கறுப்பி ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அதைத் தெரிந்து கொள்ள நான் முயற்சி எடுத்ததில்லை. எடுக்கப் போவதும் இல்லை- யாழில் ஒவ்வொருவரும் எழுதும் கருத்துக்களில் இருந்து ஓரளவுக்கு அவர்கள் யார் என்பதை விளங்கிக் கொள்ளும் தன்மை இருக்கு. கறுப்பி யார் என்று எனக்கு எப்போதோ தெரியும் :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நல்ல தலைப்பு குட்டி,

:lol:

விரதம் பிடிக்கின்ற நாட்களில் இந்தப் பக்கம் நிச்சயம் எட்டிப் பார்க்க வேணும்.

நாம் வீட்டில் செய்யும் சுகமான வாழைக்காய் தோல் சம்பல்.

best_green_bananas.jpg

வாழைக்காய் தோல் சம்பல்.

தேவையான பொருட்கள்;

மூன்று கறி வாழைக்காயின் தோல்.

சின்ன வெங்காயம் 3.

பச்சை மிளகாய் 3.

உப்பு சுவைக்கேற்ப.

தேசிக்காய் 1

செய்முறை;

வாழைக்காய் தோலை ஆவியில் (Steemer) அவிக்கவும்.

(அல்லது சிறிய பாத்திரத்தில் கொஞ்ச தண்ணீர் விட்டும் அவிக்கலாம்.)

அவிந்த வாழைத்தோலை சிறிய துண்டுகளாக வெட்டி.... ஒரு பாத்திரத்தில் போடவும்.

அதனுடன் சிறிதாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கிளறிய பின்......

உப்பு, புளி விட்டு...... சோத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளான் குருமா

MASHROOM.jpg

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கசகசா - 1/4 தேக்கரண்டி

தேங்காய் - 1/4 மூடி

மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பட்டை - 3

கிராம்பு - 3

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - 1 கொத்து

செய்முறை:

காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக சிறிது நேரம் அடுப்பை மெல்லிய தீயில் எரியவிட்டு, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லி தழை சேர்க்க வேண்டும்.

நன்றி கீற்று நளன்

இது தோழர் விஜிக்கு... Unknown-8.gif

Link to comment
Share on other sites

.

நல்ல தலைப்பு குட்டி,

:blink:

விரதம் பிடிக்கின்ற நாட்களில் இந்தப் பக்கம் நிச்சயம் எட்டிப் பார்க்க வேணும்.

நாம் வீட்டில் செய்யும் சுகமான வாழைக்காய் தோல் சம்பல்.

best_green_bananas.jpg

வாழைக்காய் தோல் சம்பல்.

...

உங்கள் கருத்துக்கு நன்றி சிறி அண்ண!

வாழைக்காய்ப் பொரியல் சாப்பிட்டு இருக்கிறேன். வாழைக்காய் தோலில் சம்பல் கேள்விப் பட்டதே இல்லை சிறி அண்ணா. அறியத் தந்தமைக்கு நன்றி :lol:

நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி சிறி அண்ண!

வாழைக்காய்ப் பொரியல் சாப்பிட்டு இருக்கிறேன். வாழைக்காய் தோலில் சம்பல் கேள்விப் பட்டதே இல்லை சிறி அண்ணா. அறியத் தந்தமைக்கு நன்றி :lol:

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :blink:

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும்.

சிறி உங்கள் கவலை எனக்குப் புரியுது! இந்தத் தகவல் ரொம்ப முக்கியமானது! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அசைவத்தை விட சைவ உணவுகளே அதிகம் பிடிக்கும்.

இணைப்பிற்கு நன்றி குட்டி,சிறி அண்ணா.புரட்சி அண்ணா

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்காக இலகு முறையில் செய்யக் கூடிய அல்வா...கறுப்பி உங்கள் மனைவியிடம் செய்ய சொல்லி செய்து சாப்பிடவும்;

அன்னாசி அல்வா

இப்ப இங்கு அன்னாசி காலமாதலால் நான் அன்னாசியில் செய்து பார்த்தேன்...நீங்கள் விரும்பினால் மாம்பழத்திலும் செய்யலாம்.

செய்யத் தேவையான பொருட்கள்;

ஓரளவு நன்கு பழுத்த அன்னாசிப்பழம்

பால்

சீனி

ஏலக்காய்

வனிலா ஏதென்ஸ்

நெய் அல்லது பட்டர்

இனி செய்முறையைப் பார்ப்போம்;

முதலில் அன்னாசியை தோல் நீக்கி அளவான துண்டுகளாக வெட்டவும்.

அளவான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை சூடாக்கவும்[நீலக் கலர் பாலை பாவிக்கவும்.]

பாலை அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்...பால் கொஞ்சம் திரண்டு வரும் போது சீனிப் போட்டு கிளறவும்.

கொஞ்சம் பதத்திற்கு வந்ததும் அன்னாசியைப் போட்டு விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்[அன்னாசியின் நடுத்தண்டைப் பாவிக்க வேண்டாம்]

பின்னர் இறக்கும் தருவாயில் வனிலா எதென்ஸ்,அரைத்த ஏலக்காய்,நெய் விட்டு இறக்கவும்.

இறக்கும் முன் ஒரு டிரேயில் நெய் அல்லது பட்டர் தட‌வி வைக்கவும்.

விரும்பினால் கயூ,முந்திரி தூவலாம்.

அளவான துண்டுகளாக வெட்டி என்னை நினைத்துக் கொண்டே சாப்பிட‌வும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும்.

சிறி உங்கள் கவலை எனக்குப் புரியுது! இந்தத் தகவல் ரொம்ப முக்கியமானது! :blink:

சுவி, சும்மா எறியிற வாழைத்தோலிலை சம்பல் செய்ய வெளிக்கிட்டு...... புதுச்சட்டியை எறிய வேண்டி வரப்படாது எல்லோ...... :lol:

இந்த தகவலை சொல்லாமல்..... சம்பல் செய்யிற ஆக்களின்ரை சட்டியை எறிய வைப்பம் எண்டும்...... யோசிச்சனான். :D

யாழ் உறவுகளும் பாவம் எல்லோ.... என்று நினைத்து, மனதை மாற்றி விட்டேன். :D

எனக்கு அசைவத்தை விட சைவ உணவுகளே அதிகம் பிடிக்கும்.

இணைப்பிற்கு நன்றி குட்டி,சிறி அண்ணா.புரட்சி அண்ணா

வாத்தியார்

*********

வாத்தியார், உண்மையில் வெய்யில் காலங்களில்...... உறைப்பு குறைந்த மரக்கறி உணவுகளே ஆரோக்கியமானது.

அத்துடன் இந்தக் காலங்களில்..... பலவகையான மரக்கறி வகைகள், குளிர் காலத்தை விட அதிகமாக கிடைக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :blink:

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :lol:

சிறி இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருகிறேன்.உங்கள் மனைவி உங்களை பேய்காட்டிப்போட்டா :D

Link to comment
Share on other sites

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

நானும்தான் சிறி அண்ணை முதலே சாப்பிட்டு இருக்கன் எங்கள் வீட்டில் அம்மா பண்ணுவார்கள்... :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலாக்காய் உருளை கிழங்கு சொதி..

Jack_Fruit_1_B.JPG

potato(3).jpg

தேவையான பொருட்கள்

பிலாக்காய் சிறியது - 1

உருளைகிழங்கு - 2

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 1

முழு பூண்டு - 1

அரைப்பதற்கு

தேங்காய் - 1 மூடி

பச்சை மிளகாய் - 15

சோம்பு - 1 டீஸ்பூன்

கசகச- 1சிட்டிகை

பூண்டு- 5பல்

உப்பு -தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணைய்- 2 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

சோம்பு- 1 டீஸ்பூன்

பட்டை - 1

கருவேப்பிள்ளை- சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

பிலாக்காயை கையில் எண்ணைய் தடவி கொண்டு இரண்டாக நறுக்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போடவும். உருளை கிழங்கையும் அந்த அளவில் நறுக்கி கொள்ளவும். உப்பு போட்டு இரண்டையும் தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும்.. வெங்காயம் தக்காளி .கசகச, சோம்பு .பூண்டு பல், பச்சை மிளகாய்,உப்பு.ஆகியவற்றை நைசாக அரைக்கவும் அடுப்பில் வாணலை வைத்து 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம் .. தக்காளி ... பூண்டு போட்டு .1 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வதக்கவும் நன்கு வதங்கிய பின்பு வேகவைத்துள்ள பிலக்காயையும் உருளைகிழங்கையும் போட்டு.. அரைத்த விழுதையும் கூட சேர்த்து கொத்திக்கவிடவும் குருமா மாதிரி வந்த உடன் இறக்கவும் ... கெட்டியாக கொழ கொழப்பாக சேர்ந்தாற்போல் இருக்கவேண்டும்.

நன்றி:செட்டி நாட்டு சமையல் குறிப்புகள்...

ஆசிரியர்:ராஜஸ்வரி..

இது பிலாக்காய் பிரியர் தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு.. Unknown-8.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற ஞாயிறு லூர்து சர்ச்சுக்கு போனோம். மதியம் அங்குள்ள காட்டில் அடுப்பு மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டோம். சமைத்த பாத்திரங்களை தேய்த்துக் கழுவி முடியவில்லை. அதுதான் உங்கள் குறிப்பை பார்த்ததும் சிரிப்பு வந்தது. :lol:

அது சரி தோலில் சம்பல் வைத்தால் உள்ளே இருக்கும் காயை என்ன செய்வது என ஏன் யாரும் யோசிக்கவில்லை. :blink:

Link to comment
Share on other sites

கறுப்பிக்காக இலகு முறையில் செய்யக் கூடிய அல்வா

என்ன கறுப்பிக்கே அல்வாவா?? :blink::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் சாதம்..

தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 கப்

தேங்காய்த்துருவல் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 4

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 10

தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.ஒரு தட்டில் சாதத்தைக் கொட்டி, சிறிது தேங்காய் எண்ணையை அதன் மேல் விட்டு பரப்பி விடவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (நறுக்கியது), கறிவேப்பிலைச் சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.

இது சகோதரிக்கு.. :blink:

நன்றி: சமையல் அறை.காம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாராவது அச்சாறு செய்முறை போட்டு விடவும். சைவம். :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ உணவு வகைகள் என்ற பகுதியை ஆரம்பித்த குட்டிக்கு கோடி நன்றிகள்.

Link to comment
Share on other sites

தயவு செய்து யாராவது அச்சாறு செய்முறை போட்டு விடவும். சைவம். :D

அச்சாறு

IMG_0211.JPG

தேவையானவை

* பச்சைமிளகாய் - 250 கிராம்

* வெங்காயம் - 250 கிராம்

* பப்பாசிக்காய் - 125 கிராம்

* போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்

* கேரட் - 125 கிராம்

* வினிகர் - 3 கப்

* செத்தல் மிளகாய் - 5

* கடுகு - ஒரு மேசைக்கரண்டி

* உள்ளி - 5 பல்

* இஞ்சி - 2 இன்ச் நீளத்துண்டு ஒன்று

* உப்புத்தூள் - தேவையான அளவிற்கு

* மிளகுத்தூள் - தேவையான அளவிற்கு

* பெருங்காயம் - ஒரு துண்டு

செய்முறை

* கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி வினிகர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.

* அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது போல அரைக்கவும்.

* வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3") துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒருபாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின் தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின் காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி வைக்கவும்.

* பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து அதில் அரை கப் வினிகரை ஊற்றி அதனுடன் விதை நீக்கிய பச்சை மிளகாயை போட்டு அவிய விடவும்.

* பச்சைமிளகாய் அவிந்து வினிகர் வற்றியதும் அதிலிருக்கும் பச்சைமிளகாயை வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* பின்பு அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி வெங்காயத்தை போட்டு அவித்து வினிகர்வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி கேரட்டை போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில் விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

* கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை போட்டு நன்றாக கலக்கவும்.

* பின்பு அவித்த கேரட்டை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.

* பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

* அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி அதை ஆற விடவும்.

* அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.

* அதன் பின்பு அச்சாறு தயராகிவிடும் அதை தேவையான நேரங்களில் எடுத்து பரிமாறலாம்.

http://www.arusuvai.com/tamil/node/11457

சைவ உணவு வகைகள் என்ற பகுதியை ஆரம்பித்த குட்டிக்கு கோடி நன்றிகள்.

இதுக்ககெல்லமா சின்னப் புள்ளத் தனமா கோடி நன்றிகள் சொல்லுறது? :) பிரயோசனப் பட்டால் சந்தோசம் கறுப்பி :lol:

Link to comment
Share on other sites

அது சரி தோலில் சம்பல் வைத்தால் உள்ளே இருக்கும் காயை என்ன செய்வது என ஏன் யாரும் யோசிக்கவில்லை. :)

வாழைக்காய் உள்ளே இருப்பதை உப்பு தூள் பிரட்டி பெரித்து சோறுடன் சாப்பிடால் றொம்ப நல்லா இருக்கும்... வட்டம் வட்டமாக கட் பண்ணி விட்டு பண்ணினால் பார்க்க வடிவாகவும் இருக்கும்... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.