Jump to content

சொதி வைப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

சொதி வைப்பது எப்படி?

Sothi.JPG

இது தாயகத்தில் தினமும் நமது உணவுடன் இடம் பிடிக்கும் முக்கிய பொருள்.

ஆனால், தற்போது பலருக்கு சொதி வைக்கத் தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை.

காரணம்: சொதிக்கு இடியப்பம் தான் தோதான கூட்டாளி.

பலர் இடியப்பம் பிழியிற பஞ்சியிலை, இடியப்பத்தை செய்யாமல் விட்டு சொதி வைக்கும் முறையையே மறந்து விட்டார்கள்.

சொதி மிகவும் குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய சமையல் மாத்திரமல்லாது .........,

சொதி வைக்கும் போதே...... உங்களுக்கு விருப்பமான பொருட்களை போடலாம்.

தேவையான முக்கிய பொருட்கள்.

பசுப் பால் மூன்று கப் (அல்லது தேங்காய்ப் பால் )

பச்சை மிளகாய் 6

வெங்காயம் 3 (சிறிய வெங்காயம் எனில் 8)

செத்தல் மிளகாய் 4

உள்ளி 3 பல்

விரல் அளவு இஞ்சி

மஞ்சள் ஒரு தேக்கரண்டி.

தேசிக்காய் ஒன்று.

தாளிக்க கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணை.

செய்முறை:

பாத்திரத்தில் கடுகு, சீரகம், அரிந்த வெங்காயம் சிறிதளவு, செத்தல் மிளகாய் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

இப்போ அதற்குள் சிறிது தண்ணீர் விட்டுமிகுதி வெங்காயம், நீளமாக அரிந்த பச்சை மிளகாய், உள்ளி, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை போட்டு மூடி கொதிக்க விடவும்.

முக்கிய குறிப்பு:

இப்போது சொதி தனது முக்கிய‌ அவதாரத்தை எடுக்கும் நேரம். நீங்கள் உருளைக் கிழங்கு போட்டால் கிழங்குச் சொதி, தக்காளிப் பழம் போட்டால் தக்காளிச்சொதி, சிறிய மீன் போட்டால் மீன் சொதி, ஒண்டும் போடாமல் விட்டால் பால் சொதி.

நீங்கள் போட்ட பொருட்கள் அவிந்தவுடன் அடுப்பை குறைந்த வெப்பத்தில் விட்டு, பாலை விடவும்.

பால் விட்ட பின் மூடி அதிக வெப்பத்தில் கொதிக்க விடப்படாது.

சிறிது நேரத்தில் கறி வேப்பிலையையும் போட்டு அடுப்பை அணைக்கவும்.

சிறிது ஆறிய பின் தேசிக்காயை பிழிந்து விட்டால்.......நாவூறும் சொதி ரெடி.

.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொதிக்க விட்டு விட்டு அடுப்பை அணைக்காமல் சின்னத் திரைக்குள் மூழ்கி விட்டால் சொதி சட்டிக்குள் இருக்காது. அப்படித் தானே சிறி அண்ணை? :lol::lol::o

வாத்தியார்

............................

Link to comment
Share on other sites

கொதிக்க விட்டு விட்டு அடுப்பை அணைக்காமல் சின்னத் திரைக்குள் மூழ்கி விட்டால் சொதி சட்டிக்குள் இருக்காது. அப்படித் தானே சிறி அண்ணை? :lol::o:D

வாத்தியார்

............................

:D :D :D

தேங்காய்ப்பாலில் வைக்கும் சொதியே கூடுதலான சுவை கொண்டது போல் இருக்கு... பசும்பாலில் சொதி பண்ணும் போது ஒரு மாதிரியான பசும்பாலில் மணம் வீசுவதைப்போலே உள்ளது... நன்றி இணைப்பிற்க்கு சிறி அண்ணா :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓ சிறி அண்ணோய் சின்ன ஒரு சொதிக்கு 6 பச்சை மிளகாய் போட்டால் வயிறு என்னத்துக்கு உதவும்.?நல்லவேளை நான் சொதியே சாப்பிடுறது இல்லை..அதுகின்ட ரகசியம் சொன்னால் என்னை யாரும் திட்டக் கூடா..ஏன் சொதி சாப்பிடுறததை விட்டனான் எண்டால் இங்கு எல்லாம் கடையில் இடியப்பத்தோடை வாற சொதி, கை களுவிற தண்ணி மாதிரி இருக்கிறதால் சொதியைக் கண்டால் அலர்ஜி ஆகிட்டு.. :o:D

இத்தால் அறியத் தருவது என்னவெனில்:

மட்டுமார் இந்த ஆக்கத் பார்த்துப் பிடிக்காது விட்டால் அவர்களின் கத்தரிக்கோலுக்கு வெட்டி விடுவதற்கு அனுமதி அளிக்கிறேன். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன ..........சந்தேகம்.

செத்தல் மிளகாயும் பச்சை மிளகாயுமா?

நானேதும் ஒரு மிளகாய் தான்போடுவேன். வித்தியாசமான் சொதி .பதிவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

இறால் சொதி எப்படி வைப்பது...? எந்த நேரத்தில் இராலை போடுவது?

சிறிது நேரத்தில் கறி வேப்பிலையையும் போட்டு அடுப்பை அணைக்கவும்.

இறுக்கி அணைத்தால் தீக்காயம் வராது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி!

சொதியைப்பத்தி நல்லவடிவாய் ஆற அமர சொல்லியிருக்கிறியள்.சந்தோசம் :) :)

என்ரை வீட்டிலை புட்டோ இடியப்பமோ இல்லாட்டி சோறோ புக்கையோ

சொதிச்சட்டி ஒரு சயிற்றிலை இருக்கும்.

அதுவும் தக்காளிப்பழசொதி நல்லாய் கனிஞ்ச தக்காளிப்பழத்திலை வைச்சால் அந்தமாதிரியிருக்கும்.அதோடை கொஞ்ச உள்ளியும் மிளகும் அரைச்சுப்போட்டு கலந்துவிட்டால்....... சொல்லி வேலையில்லை :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொதிக்க விட்டு விட்டு அடுப்பை அணைக்காமல் சின்னத் திரைக்குள் மூழ்கி விட்டால் சொதி சட்டிக்குள் இருக்காது. அப்படித் தானே சிறி அண்ணை? :):):D

வாத்தியார்

............................

வாத்தியார், அடுப்பை அணைக்காமல் சின்னத்திரை பார்த்தால் சொதி மட்டுமல்ல...... சமைத்த அடுப்படி, இருக்கும் வீடு, உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம். feuer-3438.gif

நான் ஆரம்பத்திலேயே ஒரு நேரத்தில் ஒரு அலுவல் தான் பார்க்க வேண்டும் என்று வீட்டில் கண்டிப்பாக சொல்லி வைத்துள்ளேன். சமைக்கும் நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தால், வீட்டின் மணி அடித்து அவ்விடத்தை விட்டு விலக நேர்ந்தால் அடுப்பை நிற்பாட்டி விட்டு போகவேண்டும் என்று. நெருப்போடை மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் நிலமையை தலைகீழாக்கி விடும். :D

தேங்காய்ப்பாலில் வைக்கும் சொதியே கூடுதலான சுவை கொண்டது போல் இருக்கு... பசும்பாலில் சொதி பண்ணும் போது ஒரு மாதிரியான பசும்பாலில் மணம் வீசுவதைப்போலே உள்ளது... நன்றி இணைப்பிற்க்கு சிறி அண்ணா :wub::D

தேங்காய்ப் பாலில் வைக்கும் சொதி சுவையாக இருக்கும் என்பது உண்மை சுஜி. :)

ஆனால் உடம்பில் அதிக கொலஸ்ரோல் faint.gif ஏற்பட்டு விடும். கூடியவரை தேங்காப்பாலை தவிப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட இன்னும் இன்று இருக்கு.கிட்டதட்ட இது மததித்தான்.சின்ன வெங்காயம் கடுகு சீரகம் வெந்தையம் போட்டு தாழித்து பொன்னிறமாக வரும் போது கரைத்த பழப்புழி விட்டு கொஞ்ச நேரம் கொதித்தபின் பால் விட்டு இறக்கினால் வாசம் தூக்கும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் சொதி எப்படி வைப்பது...? எந்த நேரத்தில் இராலை போடுவது?

இறால் சொதிக்கு இறால் மூஞ்சை முக்கியம்.இந்த வதக்கிற சமாச்சாரம் எல்லாம் செய்து பின் அதற்குள் மூஞ்சயை(இறால்)போட்டு தன்னியில் அவிந்த பின் பால் விட்டு இறக்கலாம்.இறால் போடுவதானால் பால் விடுவதற்க்கு சற்று முன் போட்டால் சரி.

இறுக்கி அணைத்தால் தீக்காயம் வராது??

அங்கை வராத காயமா இங்க வரப்போகுது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு நன்றிகள் பல தோழர் தமிழ்சிறி... :)

இன்று இரவு செய்முறையை ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன்... நம்பி ஆரம்பிக்க்கலாமா? :wub:

Link to comment
Share on other sites

சொதிக்கு சுவை சேர்ப்பதில் முக்கிய பங்கு மிளகு உள்ளி தக்காளியும் என்பது உண்மையே, அதே நேரம் கொஞ்சம் அகத்தி இலை, :wub: அல்லது நெய்தொலி (நெய்த்தலி) :) சேர்த்தால் சுவை மட்டும் இல்லை ஆரோக்கியமாகவும் இருக்கும்.

றால் சொதி வைப்பத்தற்கு நீங்கள் எந்த றால் பாவிக்கப் போறீர்கள் என்பதை வைத்து தான் சொல்லலாம்.

frozen றால் என்றால் அதை இளகவைதபின்பு, சொதி கொதித்த பின்பு போடலாம், fresh றால் என்றால் சொதியை அடுப்பில் வைக்கும் போதே போட்டால் நல்லது.

சொதி இணைப்பிற்கு நன்றி சிறி அண்ணா :)Green_plus_icon.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொதி பிரமாதம் தமிழ் சிறி! வீட்டில் சொதி தினமும் வைக்கப்படும்! சில சமயம் உள்ளி, மிளகு கொஞ்சம் தூக்கலாய் போட்டு ரசத்துக்கும் சொதிக்கும் இடைப்பட்ட தரத்தில் வைப்பினம்!

கொழும்பில் சைவக் கடைகளில் அகத்தியிலைச் சொதிதான் மன்சளும் போட்டு அதிகமாக வைப்பார்கள்! நல்ல சுவையாக இருக்கும். இன்னைப்புக்கு நன்றி! :wub:

Link to comment
Share on other sites

சொதிக்கு உப்பை மறந்துவிட்டீர்கள்.

தக்காளிப் பழமும் சின்னத் திரளி மீனும் போட்டால் 10-15 இடியப்பத்தைப் போட்டுத் தாக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் சொதி எப்படி வைப்பது...? எந்த நேரத்தில் இராலை போடுவது?

இறுக்கி அணைத்தால் தீக்காயம் வராது??

எதை?

இப்போ அதற்குள் சிறிது தண்ணீர் விட்டுமிகுதி வெங்காயம், நீளமாக அரிந்த பச்சை மிளகாய், உள்ளி, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை போட்டு மூடி கொதிக்க விடவும்.

ஆஆஆஆஆ.......வாய் மணக்குமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிற்கு நன்றி தமிழ்சிறி நீங்கள் இப்பதிவை போட முன்புதான் ஒரு தவனத்தில் விளைமீன் போட்டு ஒரு சொதி வைத்து பிள்ளைகளுக்கும் கொடுத்து நானும் உண்டேன். அதற்கு மாங்காய் மற்றும் தக்காளிப்பழம் ஆகியன சேர்த்தல் சுவையை அதிகரிக்கும். கதையோடு கதையாக முல்லைச் சொதி சாப்பிட்டுள்ளீர்களா? தேவாமிர்தம் தோற்றுப் போகும்.... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓ சிறி அண்ணோய் சின்ன ஒரு சொதிக்கு 6 பச்சை மிளகாய் போட்டால் வயிறு என்னத்துக்கு உதவும்.?நல்லவேளை நான் சொதியே சாப்பிடுறது இல்லை..அதுகின்ட ரகசியம் சொன்னால் என்னை யாரும் திட்டக் கூடா..ஏன் சொதி சாப்பிடுறததை விட்டனான் எண்டால் இங்கு எல்லாம் கடையில் இடியப்பத்தோடை வாற சொதி, கை களுவிற தண்ணி மாதிரி இருக்கிறதால் சொதியைக் கண்டால் அலர்ஜி ஆகிட்டு.. :D:)

இத்தால் அறியத் தருவது என்னவெனில்:

மட்டுமார் இந்த ஆக்கத் பார்த்துப் பிடிக்காது விட்டால் அவர்களின் கத்தரிக்கோலுக்கு வெட்டி விடுவதற்கு அனுமதி அளிக்கிறேன். :wub::)

யாயினி, யாழ் களத்துக்கு வருகின்றவர்கள் எல்லோரும் உறைப்பு கோஸ்டியாய் இருக்குது, என்ற படியால் தான் ஆறு பச்சைமிளகாய் போட சொன்னனான். : :)

மட்டூஸ் இங்கை வெட்டுறதுக்கு வெங்காயமும், பச்சை மிளகாயும் தான் கிடக்குது. z04_smileys70.gif:D

Link to comment
Share on other sites

சொதிக்கு உப்பை மறந்துவிட்டீர்கள்.

தக்காளிப் பழமும் சின்னத் திரளி மீனும் போட்டால் 10-15 இடியப்பத்தைப் போட்டுத் தாக்கலாம்.

உப்பு இல்லாவிட்டால் சாப்பிடாமலா விடப் போறீங்கள்? :wub::) உப்பை உங்களுக்குத் தேவையான அளவு போட்டுக் கொள்ளுங்கோவன்... :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ.......வாய் மணக்குமே

ஆண் வாசனையே தெரியாத உங்களுக்கு வாய் மணத்தால் என்ன? மணக்காவிட்டால் என்ன? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன ..........சந்தேகம்.

செத்தல் மிளகாயும் பச்சை மிளகாயுமா?

நானேதும் ஒரு மிளகாய் தான்போடுவேன். வித்தியாசமான் சொதி .பதிவுக்கு நன்றி

நிலாமதி அக்கா,

செத்தல் மிளகாயை தாழிக்கும் போது போடுங்கோ...

பச்சை மிளகாயை சொதி கொதிக்கும் போது போடுங்கோ....smiley_cooking.gif

வாய்க்கு ருசியாக இருந்தால் சரி தானே.... :wub:

.

Link to comment
Share on other sites

சிறி அண்ணாட புண்ணியத்துலதான் இப்ப சமையற்கட்டு களை கட்டுது போல

அது சரி தூயா சமையற்கட்டை மூடிட்டாவோ அவவை காணக்கிடைக்குல

ஆஆ சொல்ல மறந்துட்டன் உங்க சொதி நல்ல கார சாரமா இருக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் சொதி எப்படி வைப்பது...? எந்த நேரத்தில் இராலை போடுவது?

இறுக்கி அணைத்தால் தீக்காயம் வராது??

நிழலி நீங்கள் இரட்டை அர்த்தத்திலை கேக்கிறீங்கள். :lol:

அலை அடிக்கிற கடலில் இறால் போடக்கூடாது, smilie_water_144.gif

அமைதியான கடலில் தான் இறால் போடவேண்டும். :)angler.gif

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட இன்னும் இன்று இருக்கு.கிட்டதட்ட இது மததித்தான்.சின்ன வெங்காயம் கடுகு சீரகம் வெந்தையம் போட்டு தாழித்து பொன்னிறமாக வரும் போது கரைத்த பழப்புழி விட்டு கொஞ்ச நேரம் கொதித்தபின் பால் விட்டு இறக்கினால் வாசம் தூக்கும். :wub:

சஜீவன் இதனையா வெந்தய சொதி என்று சொல்கின்றவர்கள்?

அடுத்த முறை சொதி வைக்கும் போது. உங்கள் முறையில் பழப்புளி போட்டு நிச்சயம் செய்வோம். :wub:

என்னுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு நன்றிகள் பல தோழர் தமிழ்சிறி... :lol:

இன்று இரவு செய்முறையை ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன்... நம்பி ஆரம்பிக்க்கலாமா? :lol:

ஆம் புரட்சி, நீங்கள் கனநாட்களுக்கு முன் திண்ணையில் உரையாடிய போது சொதி வைக்கும் முறையை கேட்டீர்கள். பின்பு நான் மறந்து விட்டேன். :)

பிறகு அண்மையில் நீங்கள் ஞாபகமூட்டிய போது தான் , உங்களுக்கு ஊரில் இருந்து வந்த மாங்காய் பழுக்க முன்னர் சொதி வைக்கும் முறையை பதிந்து விட்டேன். புரட்சி சொதிக்கு நல்ல புளி மாங்காயை, தோல் சீவி நீளமாக விரல் அளவு மொத்தத்தில் போட்டால் நன்றாக இருக்கும்.

ஊரில் உள்ள சந்தையில் சொதி மாங்காய் என்று, நல்ல புளி மாங்காய் விற்பார்கள்.mango_fruechte.jpg

Link to comment
Share on other sites

நேற்று இரவு எம் உறவுகள் சிலர் விருந்துக்கு வந்தனர், என் மனைவி ஆட்டுக் கறியுடன் தமிழ் சிறியின் குறிப்பை பார்த்து அப்படியே பால் சொதியும் செய்தார். இடியப்பத்துடன் ஆட்டுக்கறியையும் போட்டு சொதியையும் விட்டுச் சாப்பிட அந்த மாதிரி இருந்தது

தமிழ் சிறிக்கு நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி!

சொதியைப்பத்தி நல்லவடிவாய் ஆற அமர சொல்லியிருக்கிறியள்.சந்தோசம் :D :D

என்ரை வீட்டிலை புட்டோ இடியப்பமோ இல்லாட்டி சோறோ புக்கையோ

சொதிச்சட்டி ஒரு சயிற்றிலை இருக்கும்.

அதுவும் தக்காளிப்பழசொதி நல்லாய் கனிஞ்ச தக்காளிப்பழத்திலை வைச்சால் அந்தமாதிரியிருக்கும்.அதோடை கொஞ்ச உள்ளியும் மிளகும் அரைச்சுப்போட்டு கலந்துவிட்டால்....... சொல்லி வேலையில்லை :)

tomatoes_lead_narrowweb__300x3070.jpg

குமாரசாமி அண்ணை, நீங்கள் வித்தியாசமான உணவுப்பிரியராக இருக்கிறீர்கள். :D

யாரும் புக்கைக்கு சொதி விட்டுச் சாப்பிடுவார்களா....... :lol:

பகிடியாக சொல்கிறீகள் போல் உள்ளது. :lol:

சொதிக்கு சுவை சேர்ப்பதில் முக்கிய பங்கு மிளகு உள்ளி தக்காளியும் என்பது உண்மையே, அதே நேரம் கொஞ்சம் அகத்தி இலை, :wub: அல்லது நெய்தொலி (நெய்த்தலி) :wub: சேர்த்தால் சுவை மட்டும் இல்லை ஆரோக்கியமாகவும் இருக்கும்.

றால் சொதி வைப்பத்தற்கு நீங்கள் எந்த றால் பாவிக்கப் போறீர்கள் என்பதை வைத்து தான் சொல்லலாம்.

frozen றால் என்றால் அதை இளகவைதபின்பு, சொதி கொதித்த பின்பு போடலாம், fresh றால் என்றால் சொதியை அடுப்பில் வைக்கும் போதே போட்டால் நல்லது.

சொதி இணைப்பிற்கு நன்றி சிறி அண்ணா :(Green_plus_icon.png

agaththikkeerai.jpgDSC01730.JPG

குட்டி, வீட்டில் நாங்களும் மாதத்துக்கு ஒருமுறையாவது அகத்தி இலை சொதி, அல்லது நெத்தலி சொதியாவது வைப்போம். :D

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.