Jump to content

விளையாட்டல்ல… சூதாட்டம்! -IPL CRICKET


Recommended Posts

விளையாட்டல்ல… சூதாட்டம்! -IPL CRICKET

April 17, 2010

iplcheerleadersmumbai.jpg

previewde4.jpg

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தைக் காட்டிலும் மேலதிகமான பணம் படைத்த அமைப்பாக இருக்கிறது. அதனால்தான் மத்திய அமைச்சர் சரத் பவார் அந்த வாரியத்தின் தலைவர் பதவியை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எதிர்ப்புகளை முறியடித்துக் கைப்பற்றினார். அப்போதே இந்திய கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்பதை மீறி, வேறு தளங்களுக்குத் தாவிவிட்டது.இப்போது மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், ஐபிஎல் போட்டியில் கொச்சி அணிக்கான ஏலத்தில் தலையிட்டார் என்பதும், இதில் ரூ.70 கோடி அளவுக்கான பங்குகளை, அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறப்படும், சுனந்தா புஷ்கர் என்ற பெண்மணிக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்தார் என்பதும் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வலம் வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் தலையீடு இருக்கிறது என்பதையும், ஐபிஎல் போட்டிகளில் அரசியல்வாதிகள் இன்னும் பலபேர் இடம்பெற்றிருக்கக்கூடும் என்பதையும் இது உறுதிப்படுத்தி இருக்கிறது.சசி தரூர் தன் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் மறுத்துப் பேசியிருப்பதும், இது குறித்து விசாரித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் அறிவித்திருப்பதும், அமைச்சர் சசி தரூரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்திருப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் ஆகிய இவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் கேட்க வேண்டியதாக இருக்கிறது. இப்போது, ஐபிஎல் டிவென்டி20 விளையாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாபம் கிடைப்பதால், இதில் அரசியல்வாதிகள் தற்போது பினாமி பெயர்களில் நுழைவது ஆச்சரியமளிக்கவில்லை. இவர்கள் வெளிப்படையாகத் தகராறைத் தொடங்கியது ஏன் என்பதில்தான் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.சசி தரூர் தன் காதலிக்கு இலவசமாக கொச்சி அணியிலிருந்து 18 சதவீதம் பங்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகப் புகார் எழுப்பியுள்ள, ஐபிஎல் கமிஷனர் லலித் மோடிக்கு, உண்மையிலேயே யார் உரிமையாளர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் என்றால் இதை ஏலம் எடுப்பதற்கு முன்பாகவே உறுதி செய்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.கொச்சி அணி ஏலம் எடுக்கப்படும் நாள் திடீரென தள்ளிவைக்கப்பட்டது ஏன் என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஏலம் மார்ச் 21-ம் தேதி நடைபெற்றாலும் அதற்கான ஒப்பந்தம் ஏறக்குறைய 20 நாள்கள் கழித்து, ஏப்ரல் 10-ம் தேதிதான் கையெழுத்தாகியுள்ளது.சாதாரண ஏலக்கேட்பு நிகழ்ச்சி அல்லது டெண்டரில்கூட குறைந்தபட்ச டேவணித் தொகை செலுத்தவும், தங்களது முகவரி, வருமான வரி செலுத்திய ஆதாரங்கள், தங்களுக்குள்ள சொத்து மதிப்பின் விவரம் எல்லாவற்றையும் படிவத்தில் குறிப்பிட்டு ஆக வேண்டும். பினாமியாகவே இருந்தாலும்கூட அவரது பெயர், முகவரி இடம்பெற்றாக வேண்டும். இவை எதையுமே சரிபார்க்காமல், ஏலம் நடத்தி, ஏலத்தில் பங்கேற்றவருடன் ஒப்பந்தமும் போட்டுவிட்டு, இப்போது இந்த பிரச்னையைக் கிளப்புவது ஏன்? ஏலக் கேட்பு ஆவணங்கள் கொடுத்தவர்களுக்கும்கூட உரிமையாளர்கள் யார் என்று தெரியாது என்று இப்போது நல்லபிள்ளையாகப் பேசுவது ஏன்?ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் யார்யார் என்ற நிருபர்கள் கேள்விக்கு மோடி இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஏலத்திலிருந்து விலகிக்கொண்டால் ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுக்கு 50 மில்லியன் டாலர் பணம் தருவதாக லலித் மோடி பேரம் பேசினார் என்று ரெண்டஸ்வஸ் செயல் அலுவலர் சைலேந்திர கெய்க்வாட் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை மோடி மறுத்துள்ளார்.ஐபிஎல் போட்டிக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுப்பதே நாகரிகமான செயலாக இல்லை. கிரேக்க அரசில் அடிமைகளை விலை கூவுவதுபோல, வீரர்களை ஏலத்தில் எடுப்பதே அந்த விளையாட்டின் தரத்தைக் குறைத்து வியாபாரமாக்கியது. இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக விளையாட்டுத் தேதிகளை தள்ளி வைக்காமல், தென்ஆப்ரிக்காவில் ஐபில் போட்டிகளை நடத்தியபோதும், இவர்கள் பணத்தில்தான் குறியாக இருக்கிறார்கள், இவர்களுக்கு விளையாட்டைவிடப் பணம் தான் முக்கியம் என்பதும் அப்பட்டமானது. அந்த நேரத்திலாவது இந்திய அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.ஆனால் வழக்கம்போல இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததால், அரசின் தலையீடு அல்லது கண்காணிப்பு எதுவுமே இல்லாமல் விருப்பம் போல செயல்பட்டு வந்தார்கள். உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆட்டத்துக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கின்ற ஒன்றை மட்டுமே முதலீடாக வைத்து, எந்த உழைப்பும் இல்லாமலேயே ஒரு கூட்டம் மிக எளிதாக, பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்கும் என்றால் அதை இந்திய அரசு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் என்றால்… இதன் பின்னணியில் என்னென்ன ரகசியங்கள் இருக்கின்றனவோ!ஐபிஎல் நடத்தும் டிவென்ட்டி20 ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. இதை நடத்துகிற, ஏலத்தில் பங்கேற்கும் அமைப்புகள், கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கிறது. கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தப் பயனும் இல்லாத நிலையில் இதை ஏன் தொடர்ந்து நடத்த வேண்டும்?சசி தரூர் மீதான புகாரை விசாரிப்பது மட்டுமன்றி, ஐபிஎல் போட்டியில் இதுவரை ஏலம் எடுத்த அமைப்புகளின் பங்குதாரர் அனைவரது விவரங்களையும் வெளியிடுவதோடு, இவர்களது லாபக் கணக்குகளையும் வருமான வரி மற்றும் தணிக்கைத் துறைக்கு உட்படுத்துவதாக நடவடிக்கை அமைய வேண்டும். இப்பிரச்னை எழுந்தவுடன் வருமான வரித் துறையினர் ஐபிஎல் அலுவலகத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆனால் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. கிரிக்கெட் ஆட்டம் சூதாட்டமாக மாறிவிட்டது. முன்பு அதன் பெயர் பெட்டிங். இப்போது ஐபிஎல்! லாட்டரி டிக்கெட்டை ஒழித்து விட்டோம், சூதாட்டத்தை மக்கள் நலன் கருதித் தடை செய்து விட்டோம் என்று கூறும் அரசு, இந்த சூதாட்டக் கொள்கைக்குத் தடை விதிக்கத் தயங்குவதேன்? ஆட்சியாளர்களுக்கும் பங்கு போகிறதா என்ன?

நன்றி- தினமணி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நாட்டை நாசமாக்கும் வர்த்தக சூதாட்டம்-கிரிக்கெட்..

கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பண ஊழலிலும், ஒழுக்கக் கேட்டிலும் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மத்திய அமைச்சர் சசிதரூர் போன்றோரை காங்கிரஸ் ஆட்சியில் வைத்திருக்கக் கூடாது; உடனே வெளியேற்றுங்கள் என்று பிரதமருக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வர்த்தக சூதாட்டம்-கிரிக்கெட்

அண்மையில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையிலிருந்து மாறி, மிகப்பெரிய வர்த்தக சூதாட்டமாகி விட்டது. ஊழல்களின் சுரங்கமாகவும் ஆகிவிட்டது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இதில் புரளுகின்றன.

விளையாடுகின்ற விளையாட்டாளர்களையும் கூட நல்ல விலை கொடுத்து வாங்கியே வெற்றி_ தோல்விகளை முன்கூட்டியே நிர்ணயிக்கின்றனர்!

நம் நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் முதற்கொண்டு வயது முதிர்ந்த பாட்டிகளையும்கூட இப்போதை விடவில்லை என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

முன்பெல்லாம் ஆண்டுக்கொருமுறை, இருமுறைதான் இது சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பெருநகரங்களில் சில நாள்கள் நடக்கும்.

ஆனால் இப்போது அய்.பி.எல்., (மி.றி.லி) என்ற அமைப்பு_ கிரிக்கெட் அணிகள் உருவாகி, ஏல மோசடி முதற்கொண்டு பலவும் நடை-பெறுவதும், இதில் பல செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள், மத்திய அமைச்சர் நிலையில் உள்ளவர்கள், நட்சத்திரங்கள் ஈடுபட்டு, இந்த வர்த்தக சூதாட்டத்தை நடத்துகின்றனர். இது மிகவும் கேவலமானது.

நாட்டை நாசமாக்கி வரும் கிரிக்கெட் போதை

பஞ்ச பாண்டவர் காலத்திலேயே பாரதக் கலாச்சாரமாக இந்த கிரிக்கெட் போதை, நாட்டை நாசமாக்கி வருகிறது என்பது தான் இதற்கு மூலவேர் ஆகும்!

கடந்த சில நாள்களாக, ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது_இந்த அய்.பி.எல். (மி.றி.லி) 20 ஓவர் கிரிக்கெட்டுகளில் புழங்கிய பண விளையாட்டும், பரஸ்பர குற்றச்சாட்டு ஊழல்களும்தான்!

நடுத்தர வர்க்கம் முதல் எளிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளைப் போல, இது மக்களைச் சுரண்டுகிறது, 3 ஆண்டுகளாக.

அய்.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 8 அணிகள் உள்ளனவாம்! உலகின் அனைத்து நாட்டு வீரர்களும் (உலக மயத்தின் மற்றொரு கூறு போலும் இது) இதில் பங்கேற்கிறார்களாம்!

மர்மம் நீடிக்கிறது

இதனால்_ போட்டியின் மொத்த பணப்புழக்கம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்கள்! இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அய்.பி.எல். போட்டிக்கு மேலும் 2 அணிகளைச் சேர்க்க முடிவு செய்-யப்-பட்டதாம். சமீபத்தில் அந்த 2 அணிகளுக்கான (கொச்சி, புனே அணிகள்) ஏலத்தின் மூலம் நடந்தனவாம். கொச்சி அணி 1530 கோடி ரூபாயும், புனே அணி 1670 கோடி ரூபாயும் கொடுத்தும் அய்.பி.எல்.லில் இடம் பிடித்துள்ளனவாம்!.

இதில் கொச்சி அணி தேர்வு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி-யுள்ளது.

கொச்சி அணியின் விளையாட்டு அமைப்பான ரெண்டஸ்வஸ் (ஸிமீஸீபீணீஸ்ணீக்ஷ்) என்ற நிறுவனம் கொச்சி அணியை விலைக்கு வாங்கி-யுள்ளது. அதன் உரிமையாளர் யார் என்று தெரியாதாம்!. இதனால் (எப்படி இருக்கிறது நியாயம் பார்த்தீர்களா?) கொச்சி அணியை வழிநடத்தப்போகும் உரிமையாளர்கள் யார்? யார்? என்று மர்மம் நீடிக்கிறது.

செய்தியாளர்களிடம் அய்.பி.எல். போட்டி ஆணையர் லலித் மோடி என்பவர், கொச்சி அணி உரிமையாளர் யார் என்பது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது என் கடமையாகும்.

காஷ்மீரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணுக்கு கொச்சி அணியில் உள்ள 25 சதவிகித பங்கில் 19 சதவிகித பங்கு (70 கோடி ரூபாய்கள் மதிப்பு) இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

சசி தரூர் என்ற கேரளப் பார்ப்பனர்

சர்ச்சைகளை நாளும் உருவாக்கி அதனையே சுவாசிக்கும் வழக்கமாக்கிக்கொண்டே அறிவு ஜீவி, சசிதரூர் என்கிற (கேரளப் பார்ப்பனர் இவர்) பெயரும் இதில் பெரிதும் உருளுகிறது. நாடாளுமன்றத்திலும்,எதிர்க்கட்சியான பா.ஜ.க., இடதுசாரிகளாலும் பேசப்பட்டு வருகிறது!.

அந்த இலவசப் பங்கு பெற்றதாகக் கூறப்படும் காஷ்மீர் பெண்ணை இந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் என்பவர் மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம்!. இதனால் நிதி அமைச்சரின் விசாரணைக்கு இவர் அழைக்கப்பட்டு விளக்கம் அளித்துள்ளாராம்!

ஏன் நனைந்து சுமக்க வேண்டும்?

இத்தகையவர்களை அமைச்சகளாக, மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் ஏன் நனைந்து சுமக்கிறது என்பது நம்மைப் போலவே பலருக்கும் புரியவில்லை!.

இது போலவே சர்ச்சைகளுக்குப் பெயர்போன அமைச்சர் மேலும் 2,3 பேர்கள் இடம்பெற்று, மத்திய ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்ற நிலையும் உள்ளது.

ரூ.70 கோடி கைமாறியிருக்கிறது

சசி தரூர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அய்.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில், தலையிட்டார் என்றும், அவரது உத்தரவின் பேரில் சுனந்தா (காஷ்மீர் அழகிக்கு) ரூபாய் 70 கோடி கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது!.

லலித் மோடியின் இணையதளத்தில், சசி தரூர் ஏன் அய்.பி.எல். ஏலத்தில் தலையிடுகிறார் என்று கேட்டிருந்தார்; அதற்கு சசிதரூர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தாராம்!.

ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளில் லலித்மோடிக்கு ரகசியமாக பங்கு உள்ளது. அதுபற்றி அவர் ஏன் வாயைத் திறப்பது இல்லை என்று சசிதரூர் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி ஊழல் ஒரு தொடர் கதை_ இத்துறையில் எனக்காட்டி வருவதாக தெரிகிறது!

இதற்கிடையில் கொச்சி அணியின் செய்தித் தொடர்பாளர் சத்திய ஜித் கெய்க்குவாட் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், லலித்மோடி எங்களைத் தொடர்புகொண்டு ரூ.230 கோடி தருகிறேன்; கொச்சி அணியை நான் சொல்பவர்களிடம் விற்றுவிடுங்கள் என்றார், நாங்கள் மறுத்துவிட்டோம் என்று ஒரு தகவல்!

திடீர் சோதனை

இதற்கிடையில் ஒரு நல்ல செய்தி: வருமான வரித்துறையினர் இந்த அய்.பி.எல். அலுவலகங்களை திடீர் சோதனையிட்டனர் என்பது _ கொள்ளை லாபக் குபேரர்களை வருமான வரித்துறை விட்டுவிடக் கூடாது. திமிங்கலங்கள் தப்பி, சிறுசிறு மீன்கள்தான் வலையில் சிக்குவது வழமை. இதற்கு மாறான நடவடிக்கையாக அது அமையவேண்டும்.

காங்கிரசுக்கு தலைவலி-திருகுவலி

காங்கிரஸ் கட்சி_ஆட்சிக்கு இப்படி ஒரு தலைவலி_ திருகுவலி தேவையா? இவர் போன்றவர்களை விரைவில் வெளியேற்றுவதுதான் நாட்டிற்கும், ஆட்சிக்கும், அக்கட்சிக்கும் நல்லது. இந்த கிரிக்கெட் ஊழல்களுக்கு என்றுதான் முற்றுப்புள்ளியோ?

----- நன்றி விடுதலை (16.04.2010)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.