Jump to content

சூழலுடன் வாழும் நுட்பம் : யாழ்ப்பாணத்திற்கொரு மணல் வீடு


Recommended Posts

-

யாழ்ப்பாணத்திற்கொரு மணல் வீடு

விகாரை வடிவத்தில் அமைக்கப்பட விருக்கும் வீட்டின்,

eco-dome-08.jpg

மணல் நிறைந்த சாக்குகளால் ஆக்கப்பட்ட, அத்திவாரம்

eco-dome-09.jpg

மணல் நிறைந்த சாக்குகளால் ஆக்கப்படும் சுவர்கள், கதவுகள் ஜன்னல்கள்...உடன்

eco-dome-06.jpg

வீடு கிட்டத் தட்ட முடிவுறும் நிலையில், கூரை கூட மணலில் ஆக்கப்பட்டுள்ளது !

eco-dome-14.jpg

மணல் விடு வசிப்பதற்குத் தயார் thnks to calearth.orgk

இன்னும் ஒரு மணலில் கட்டப்டும் அரண்மனை

பொறிஇயல், கட்டட நிபுனர்களே !

குண்டால அழிக்கமுடியாத, வெப்பதட்ப நிலைகளிலிருந்து பாதுகாக்கும், பழுதடைந்தாலும் இலகுவாக திருத்திக்கொள்ளக்கூடிய இந்த வீட்டை

யாழ்ப்பாணத்தில் கடல் முழுக்க நிரம்பி வளியும் மணலால் யாரும் தங்கள் இஷ்டப்படி கட்டிக் கொள்ளலாம்,

தேவைப்படுவது நிலமும், பிளாஸ்டிக் சாக்கும் அயலவர் தோள்களுமே !

உங்களது ஆக்க பூர்வமான ஆலோசனைகள் இங்கே எங்களுக்கு விளக்கமாகத் தருவீர்களா ?

-

Link to comment
Share on other sites

வெளிநாட்டில அவன் ஆயிரம் நுட்பங்கள், வசதிகளை பாவிச்சு மணலில வீடு கட்டுவான், பனிக்கட்டியில கட்டுவான், பச்சத்தண்ணியிலையும் கட்டுவான். எங்கண்ட மேசன்மாரை நம்பி மணலில வீட்டை கட்டிப்போட்டு பிறகு குடும்பத்தோட கையாலயம் போறதோ..? வேணுமெண்டால்.. பரீசார்த்தமாய் சுற்றுலா பயணிகளை கவருகிற வகையில மணலில ஏதாச்சும் கட்டிப்பார்க்கலாம். அதுவும் யாழ்ப்பாணத்து மணல்வீட்டுக்கை குடிவாசம் செய்து கொஞ்சநாள் இருந்து பார்க்கவேணும் எப்பிடி நாவுக்கரசர் சுண்ணாம்பு அறையுக்கை இருந்தமாதிரி இருக்கிதோ எண்டு. யாராச்சும் மடியுக்கை காசு இருக்கிற ஆக்கள் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

வெளிநாட்டில அவன் ஆயிரம் நுட்பங்கள், வசதிகளை பாவிச்சு மணலில வீடு கட்டுவான், பனிக்கட்டியில கட்டுவான், பச்சத்தண்ணியிலையும் கட்டுவான். எங்கண்ட மேசன்மாரை நம்பி மணலில வீட்டை கட்டிப்போட்டு பிறகு குடும்பத்தோட கையாலயம் போறதோ..? வேணுமெண்டால்.. பரீசார்த்தமாய் சுற்றுலா பயணிகளை கவருகிற வகையில மணலில ஏதாச்சும் கட்டிப்பார்க்கலாம். அதுவும் யாழ்ப்பாணத்து மணல்வீட்டுக்கை குடிவாசம் செய்து கொஞ்சநாள் இருந்து பார்க்கவேணும் எப்பிடி நாவுக்கரசர் சுண்ணாம்பு அறையுக்கை இருந்தமாதிரி இருக்கிதோ எண்டு. யாராச்சும் மடியுக்கை காசு இருக்கிற ஆக்கள் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

எப்பிடி இருந்தது எண்டு நாவுக்கரசர் சொன்னத கேட்காமல் கதைகிறீங்களே !

அவர் சொல்கிறர்

"மாசில் வீணையும் ... மாலை மதியமும்... வீசு தென்றலும்... வீங்கிள வேனிலும்... பொய்கையும் போன்றதே, மூசு வண்டறை !! "

:lol:
:lol: ... எங்கடகடவுளோ விருப்ப வெறுப்பற்றவர் அதாவது உதவியோ உபத்திரமோ செய்யாதவர் இந்தநிலையில எஙகட கதாநாயகரை . ... அஸ்பெற்றோஸ அல்லது தகர ... அறையில அடைத்திருந்தால் ...!?

masai3.jpg

just curious! இது ஒரு மறக்கமுடியாத இனிதான பயணம்...

... வீடு கட்டும் மண்ணுக்கும் வாஸ்து உண்டு

வீடு கட்டுவதற்கு வாஸ்து உண்டு. ஆனால் வீடு அமையப்போகும் மண்ணுக்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இது தொடர்பாக வாஸ்து என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்... மணற்பாங்கான இடத்தில் வீடு கட்டுபவர்களுக்கு செல்வாக்கும், புகழும் கூடும். அவர்களின் வாழ்க்கையில் சிறப்புகளும் வந்து சேரும். எனினும் பொருளாதார நிலை அவ்வளவு நன்றாக இருக்காது. மனை கட்டப்படும் மண்ணின் நிறம் கருமை எனில், அங்கு வீடு கட்டி வசிப்போருக்கு பணம் குவியும். பொன், பொருள் என ஐஸ்வர்யம் நிறையும். இதே நிலைதான் இளம் மஞ்சள் நிற மண்ணில் வீடு கட்டினாலும் ஏற்படும். இங்கு வசிப்போருக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஏதாவது நன்மை வந்து கொண்டே இருக்கும். மனை அமையப்போகும் இடத்தின் மண் நிறம் கூழாங்கல் வண்ணத்தில் இருந்தால், அங்கு வசிப்போருக்கு நிலையான வாழ்க்கை உண்டாகாது. உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும். மனையின் மண் பழுப்பு அல்லது சிவப்பு நிறமாக இருந்தால், அங்கு வீடு கட்டி வாழ்பவர்களுக்கு நோய்நொடி ஏற்படலாம். எனினும் பெரிய பாதிப்பு ஏற்படாது. பொதுவாக மார்கழி மாதம் பீடை மாதம் என்ற கருத்து நிலவுகிறது. இம்மாதத்தில் வீடு கட்டும் பணி தொடங்குவதால் பாதகம் எதுவுமில்லை.

எந்தெந்த மாதங்களில் வீடு கட்டும் பணியை மேற்கொள்ளலாம் என்பதை வாஸ்து தெளிவாக விளக்கியுள்ளது.இதன்படி வைகாசி மாதத்தில் வீடு கட்டினால், பணிகள் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கப்படும். குடிபெயரும் குடும்பமும் வளமுடன் இருக்கும்.ஆவணியில் வீடு கட்டினால் குடும்பத்தில் இன்பம் என்றும் குடிகொண்டிருக்கும். பொருளாதாரம் உட்பட அனைத்து விதமான சுபிட்ச நிலையும் உண்டாகும்.கார்த்திகை மாதத்தில் வீடு கட்டுவதால் தெய்வத்தின் அனுகிரஹம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மார்கழியிலும் வீடு கட்டலாம். பீடை மாதம் என்பதெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தை மற்றும் மாசி மாதங்களிலும் எவ்வித யோசனையும் இன்றி வீடு கட்டலாம்..

.... ஃ ....மண்வீடு எங்களுக்கு புதிதல்ல ! இங்கு புதிது : இநத மண் சாக்கு நுட்பம், எற்கனவே இராணுவத்தினர் உபயோகிப்பதை நாங்கள் எல்லோரும் பார்திருக்கிறோம் , ஏன் அவர்கள் இதை உபயோகிக்கிறார்கள ?

0 - குண்டுத் தாக்கத்தை தாங்கக்கூடியது 1 - இலகுவாகக் கட்டிக்கொள்ளலாம் 2 - பழுதடைந்தால் இலகுவாகத் திருத்திக் கோள்ளலாம்

மண் சாக்குகளைப்பற்றி மேலும்மறிய sandbag-property by www.ehow.com

எங்கட சனம் கோடி கோடியாய் கோட்டி, சீமந்து கல்லு சுவருக்குளையும் அஸ்பெறறோ தட்டுக் கூரைக்கு கீழும் குளிர்மையா இருக்கு எண்டு சொன்னா ... என்னத்தை சொல்ல

அதோட நாளைக்கு தண்ணி மட்டம் உயரப்போகுது, நிலம் நடுங்கவிருக்குது, இலங்கைக்கு கீழே கொஞ்சத் தூரத்தில எரிமலை குமுறுது ...பூமியின் காந்தக் கேடையம் பழுதடைவதால் வந்து தாக்கவிருக்ககும் விண்வெளிக்கதிர்கள் ... உது எல்லாம் வெளிநாட்டுக்காரனுக்கேல்லோ, எங்களுக்க நைநாதீவு அம்மன் இருகிறா எண்டால என்னத் ...

... சாக்கில மண்ணப்போட்டு ஒழுங்க அடுக்கிவிட்டால் அது வீடாகிடும் இதுக்கு போய் மடி.. காசு எண்டால் ..?

Hard-working man Obama shoveling sand for protecting the levee. And notice his sleeves are rolled up. McCain shows up a week later and stands in the river in his hip waders. Bush, well he's flyin' over the area in Marine One surveyin' the floodification. This is the real Obama, always willing to jump in and help. - il y a 1 an

வெளிநாட்டவர்கள் வேறு கிரகத்தவர்கள் அல்ல ! ... :lol::(

-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறிஇயல், கட்டட நிபுனர்களே !

குண்டால அழிக்கமுடியாத, வெப்பதட்ப நிலைகளிலிருந்து பாதுகாக்கும், பழுதடைந்தாலும் இலகுவாக திருத்திக்கொள்ளக்கூடிய இந்த வீட்டை

யாழ்ப்பாணத்தில் கடல் முழுக்க நிரம்பி வளியும் மணலால் யாரும் தங்கள் இஷ்டப்படி கட்டிக் கொள்ளலாம்,

தேவைப்படுவது நிலமும், பிளாஸ்டிக் சாக்கும் அயலவர் தோள்களுமே !

உங்களது ஆக்க பூர்வமான ஆலோசனைகள் இங்கே எங்களுக்கு விளக்கமாகத் தருவீர்களா ?

ஜெகுமார்,

நீங்கள் இந்த தலைப்பை நகைச்சுவையாக ஆரம்பித்துள்ளீர்கள் போல் உள்ளது.

எனது சந்தேகம்.....

யாழ்ப்பாணத்தை சூழ கடல் இருந்தாலும், அது குடாநாடு, அங்கு நீங்கள் கடல் மண்ணை தோண்டினால்...... அடுத்த சுனாமிக்கு தாக்குப் பிடிக்குமா?

இந்த மண் வீட்டில் கொம்புயூட்டரையும், தொலைபேசியையும், எந்த இடத்தில் வைப்பது?

Link to comment
Share on other sites

நீங்கள் இந்த தலைப்பை நகைச்சுவையாக ஆரம்பித்துள்ளீர்கள் போல் உள்ளது.

எனது சந்தேகம்.....

யாழ்ப்பாணத்தை சூழ கடல் இருந்தாலும், அது குடாநாடு, அங்கு நீங்கள் கடல் மண்ணை தோண்டினால்...... அடுத்த சுனாமிக்கு தாக்குப் பிடிக்குமா?

இந்த மண் வீட்டில் கொம்புயூட்டரையும், தொலைபேசியையும், எந்த இடத்தில் வைப்பது?

ஆனி, ஆடி மாதங்களில் கிழக்கு ஆபிரிக்கக் கரையில் பிரியும் சோமாலி நீரோட்டத்தை ஆதாரமாகக் கொண்டு அரபிக் கடலில் கிளம்பும் இடசை நீரோட்டம் மன்னார் வளைகுடாவுக்குப் புகுந்து பாக்கு நீரிணை மேடைமேல் ஏறி கோடிக்கரை மாதகல் நீள்படுகையும் தாண்டிக் குதித்து வங்கக்கடலில் புகும். இலங்கையைச் சுற்றியும் அந்த நீரோட்டத்தின் பெரும் பகுதி நீர், வங்கக் கடலைக் கலக்கி, சோழமண்டலக் கரை வழியாக மிதந்து ஊர்ந்து மியன்மாரைத் தொடும். இந்த எதிரெதிர் நீரோட்டங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழுமையடைந்து அரபிக் கடலையும் வங்கக் கடலையும் கலக்கி வண்டலையும் சேற்றையும் பாக்கு நீரிணையின் மேற் பரப்பும் நீரோட்டத்துடன் கொணர்ந்து சேறாக்கித் தங்க வைப்பதால், பாக்கு நீரிணையின் முதல் நிலை உற்பத்தி பெருகுகிறது. அவற்றை நம்பி சிறுமீன்கள் வளர, அவற்றை நம்பி பெருமீன்கள் வளர, சங்குகளும் முத்துகளும் சிப்பிகளும் சிங்கி இறால்களும் பிறவும் பெருமளவில் வளர்கின்றன....

ஃ மணலிற்கு எந்தவிதமான பிரச்சனையும்மில்லை

சமையல் இடம் படுக்கை அறை சாமிஅறை ... எல்லா சாஸ்திரம் தெரிந்த நீங்கள் தான் சொல்லவேண்டும். :D

சுனாமி சூறாவளி விண்வெளிக்கதிர் அல்லது மிக்கின்குண்டு தாக்கினால் ... மணல்சாக்குகளால் வாசலை மூடிவிட்டு சிவசிவ என்று எந்த விதப்பயமுமில்லாமல் இருக்கலாம், பின்பு சிவன் ஊழித்தாண்டவம் முடிந்தபின் நீங்கள் ஆறதலாக வெளியில் வந்து புதிய காற்றை சுவாசிக்கலாம். :lol: :lol:

இநத மண்வீடுகள் கட்ட கறையான்கள் தான் எமக்கு கற்றுக் கொடுத்தன !... ஃ

Termiter.jpg

புற்றின் அமைப்பு

பணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். ஒரு புற்றில்,

பூமிக்குக் கீழே உள்ள அடுக்கு, பூமிக்கு மேலே உள்ள அடுக்கு என இரண்டு அடுக்குகள் உள்ளன. புற்று என்பது நம் கண் பார்வைக்குத் தெரியும், மண்ணிற்க்கு மேலே உள்ள அடுக்கு ஆகும். நிலத்திற்க்கு மேலே தெரியும் உயரத்திற்கு, நிலத்திற்க்குக் கீழே உள்ள அடுக்கும் ஆழமாக இருக்கும். முதலில் அடித்தளம் அமைத்து, அதற்கு மேலே சிறு சிறு வாய்க்கால்களை பணிக்கறையான்கள் அமைக்கும். அதற்கும் மேலே பூஞ்சைத் தோட்டங்களை அமைக்கும். இந்த பூஞ்சைகள், கறையான்களின் உணவுப் பொருட்களை மட்கச்செய்து, கரையான்கள் உண்ண ஏதுவாக மாற்றும். இதற்குக் கைம்மாறாக, கறையான்கள் தங்களின் சுரப்பினால் புற்றில் வேறு எந்த நுண்ணுயிரியும், இந்த பூஞ்சைக்குப் போட்டியாக வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். ( அறிவுள்ள கறையான் தானே! ஏற்றுமதி செய்ய யோசிக்கவில்லை !!?) இந்த பூஞ்சைகள்தான், மழைக்காலத்தில் காளான்களாக, புற்றிலிருந்து முளைக்கும். இந்த பூஞ்சைத் தோட்டங்கள், நிலமட்ட அளவிலேயே இருக்கும்.அதற்கும் மேலே, மண்ணாலான புற்று இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது திறந்த துளைகளுடன் இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

Isoptera_sandias_02.jpg

புற்றின் காற்றோட்டம்

புற்றின் நடுவில், ஒரு உள்ளீடற்ற குழாய் புற்றின் உச்சி வரை நீண்டிருக்கும். புற்றின் மண்சுவரில், மேற்பரப்பிலிருந்து 2 செ.மீ.க்குள், நம் உடலின் இரத்த நாளங்களைப் போன்று, எண்ணற்ற அடிப்பரப்புக் குழாய்கள் இருக்கும். இவை இரண்டையும் இணைக்கும் பக்கவாட்டு இணைப்புக்குழாய் இருக்கும்.

1. திறந்த நிலையிலிருக்கும் புற்றில், அடிப்பரப்புக் குழாய்கள், ஏற்கனவே புற்றிலிருக்கும் திறந்தத் துளைகளில் முடியும்.

2. மூடிய நிலையிலிருக்கும் புற்றில், அடிப்பரப்புக் குழாய்கள், நுண்துளைகளில் முடியும்.

இவ்விதங்களில் அடிப்பரப்புக்குழாய்கள், உரிய துளைகள் மூலம், பூமியின் தட்பவெப்பநிலையுடன் தொடர்பு கொள்கிறது.

காற்றுப்பரிமாற்றம்: கரையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன, ஒருவித மிதவை உந்து விசைகளை உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று, உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது. அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன், கரியமில வாயு, வெப்பம், நீராவி ஆகியன, அடிப்பரப்புக் குழாய் வழியாக, புற்றின் வெளிக்காற்றுடன், வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்றுக்குள், உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று, புற்றினுள் சென்று, புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து, புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.இக்குளுமை எப்பொழுதும் நிலவுவதால், புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது.

மொக்கையா ?... வேண்டாம் நன்றி ! :D :D

சாத்திரப்படி ஒரு தமிழர் நாற்சார் வீடு ஒன்று வரைவோம் வாங்கோ ...

117228626ybvNSB_ph.jpg

imag from webshots.com

இது ஆண்டிகள் கட்டின மடத்தை விட மேலானது தானே ?

-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் ஜெயக்குமார் அவர்கட்கு மிகவும் நல்ல இடுகை தொடருங்கள் இதுபோன்ற இடுகைகளை. கரையான் புற்றின் மாதிரியில் ஒரு நாட்டில் கட்டீடங்கள் கட்டி அதில் வெற்றிகரமாக மக்களைக் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள் என அறிந்தேன் (அது ஸ்பெயின் நாடாக இருக்கலாம்.)

Link to comment
Share on other sites

நன்றி சகோதரரே.. நன்றி,

நீகளும் ஆர்வமுள்ள துனுக்குகளை கண்டால் இங்கே இனைக்கத் தயங்காதீர்கள் .

-

What is a Hogan?

I thought it might be a good idea to stop here and explain why we chose the title of this blog. What exactly is a “Hogan” and why are we building one?

First, a bit of background. The term “Hogan” comes from the Native American Navajo word “hooghan” and it was their traditional dwelling place. When you research the Navajo Hogan, you’ll find that the structure was much more than just a house. It was also a sacred ceremonial place. The earliest Hogans were circular in shape, came in a variety of sizes and were built of logs, sticks and mud. The door was always placed on the east side of the house to welcome the rising sun, for good health and fortune.

The Hogan is not the only round house we find in early America. The circular shape was a constant theme in Native American architecture. The most known structure is of course the Tipi, the portable dwelling of the Crow and other nomadic plains tribes. The Tipi (sometimes spelled “tee-pee”) was possibly the first truly mobile home and has endured until today, finding it’s way into the green housing movement as the Yurt.

Among the Pueblo’s of the southwestern US, the Kiva was also a place of ceremony. A Kiva was often built mostly underground and was used as a ceremonial place for weaving, tribal decisions and other important gatherings.

The circular shape was used by the ancient tribes because it was believed that the circle represents the dwelling place created by the Great Spirit for all people. The Native American tradition of the round house was not only practical from a structural standpoint, it was an integral part of their belief systems. It is said that the attachment to circular housing was so strong that when some of the elders, accustomed to living in round houses, were required to live in rectangular homes they became sullen and depressed.

But getting back to the Hogan… Over time the shape of the Hogan changed to an octagonal or hexagonal shape, some say due to the abundance of pre-made railroad ties that came with the westward expansion of the railroads. In the modern era, the round shapes have been almost entirely replaced by the European tradition of rectangular houses. The rectangular shapes replaced the round houses because of the appearance of dimensional lumber, among other factors.

While researching the sort of house that we wanted to build we learned a lot about the kinds of materials we wanted to use and how the materials went hand-in-hand with the shape of the structure. We learned that when you’re building with earth, for example, that a round shape is especially strong. This coincided well with the general feeling we had about the kind of open space we wanted to create and was reinforced by some our experiences in round architecture, such as that of the Wheelwright Museum, built as an eight-sided Hogan, complete with a reciprocated roof.

post-6858-12716720633098.jpg

Cecilia and I found ourselves drawn to the idea of a circular house. We came to New Mexico pulled by the inspiring landscape, the harmony of its adobe architecture, and the spirit of the people who inhabit it. While we don’t have an ancestral connection to the Native American cultural history of this region we are caught by the wisdom of the voices that call for a return to the simpler life.

We call our house a Hogan because of its design, an eight-sided single story house with a reciprocated roof. We intend to make it primarily of earth and stone. From a material standpoint it’s as basic as you can get. These are the nuts and bolts reasons.

We also call our house a Hogan for what it represents: to honor the traditions of the people who inhabited this region many years ago, to coexist in this landscape in a harmonic way, to satisfy the desire we have to live in such a marvelous space and to best utilize the materials available to us - earth and stone.

what-is-a-hogan? from
- May 8, 2009

Here’s a brief Youtube video for you to enjoy.

http://www.youtube.com/watch?v=3bx7MmXTAyo&feature=player_embedded

If u want to build a earthbag house just go in google with "Earthbags house" thr'a 1000 and 1000 ...

Want to under stand evrything about mud sand or sandbags buildings just click on imag

cover.jpg

-

Link to comment
Share on other sites

.

eco-dome-14.jpg

மிகவும் அழகான வீடு. தொடர்ந்து மழை பெய்தால் பிரச்சனையாகிப் போகும் என்று நினைக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

மிகவும் அழகான வீடு. தொடர்ந்து மழை பெய்தால் பிரச்சனையாகிப் போகும் என்று நினைக்கிறேன். :lol:

-

xin_4320406022030609564120.jpg

An Afghan pulls out the water from his house after a heavy rain in Kabul, Afghanistan, April 2, 2009. Heavy rainfall over the past 24 hours in Afghan capital Kabul claimed the life of one young man and destroyed or damaged some mud houses on Thursday. (Xinhua/Zabi Tamanna)

xin_4320406022030875427922.jpg

An Afghan inspects his wall damaged by heavy rain in Kabul, Afghanistan, April 2, 2009. Heavy rainfall over the past 24 hours in Afghan capital Kabul claimed the life of one young man and destroyed or damaged some mud houses on Thursday. (Xinhua/Zabi Tamanna)

xin_4320406022030750739421.jpg

சில சேதங்கள் மாத்திரம், மண்வீடுகளும் சீம்ந்து வீடுகளும் யாரியாக நிமிர்ந்து நிற்கின்ன ...? :D :D

June%20122.JPG

மாரி மழையை எந்தவிதப் பிரச்சனை இன்றித் தாக்குப்பிடிக்கும் தென்னை ஓலைக் கூரை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

சாத்திரப்படி ஒரு தமிழர் நாற்சார் வீடு ஒன்று வரைவோம் வாங்கோ ...

-----

எனது மாமா ஒருவரின் வீடு நாற்சார் வீடு.

வீட்டின் வாயில் நீண்ட வரவேற்பறையும், அதனை அழகிய மரச் சிற்ப வேலைகளால் காற்றோட்டம் வரக்கூடியதாக மூடி இருக்கும்.

வீட்டிற்கு உள்ளே நடுவில் சூரிய ஒளி கிடைக்கக் கூடியதாக பெரிய முற்றம்.

முற்றத்தை சூழ அறைகள் என்று பார்க்க வடிவாக இருக்கும்.

அதுகும் உறவினர்கள் கூடும் போது அந்த முத்தத்தில் , நிலா வெளிச்சத்தில் இருந்து கதைப்பது இன்றும் நல்ல ஞாபகம் உள்ளது.

சில வருடங்களுக்கு முன் தாயகம் சென்ற போது, அந்த வீட்டை ஒரு விதமாற்றமும் செய்யாமல், மீண்டும் பழுதாகிப் போன மரச் சிற்ப வேலைகளை, மச்சாள் புதுப்பித்து முற்றத்தில் ஒரு சிறிய தாமரைக்குளத்தை , தங்க மீனுடன் புதுப்பித்திருந்ததை பார்த்து எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகிப் போனது. :lol:

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

மாதிரிக்கு சில நாற்சார் வீடுகள்.

pondicherry_projects_pic.jpg

mohanam_courtyard.jpg

Tamil_house_inside_view.jpg

Link to comment
Share on other sites

எனது மாமா ஒருவரின் வீடு நாற்சார் வீடு.

வீட்டின் வாயில் நீண்ட வரவேற்பறையும், அதனை அழகிய மரச் சிற்ப வேலைகளால் காற்றோட்டம் வரக்கூடியதாக மூடி இருக்கும்.

வீட்டிற்கு உள்ளே நடுவில் சூரிய ஒளி கிடைக்கக் கூடியதாக பெரிய முற்றம்.

முற்றத்தை சூழ அறைகள் என்று பார்க்க வடிவாக இருக்கும்.

அதுகும் உறவினர்கள் கூடும் போது அந்த முத்தத்தில் , நிலா வெளிச்சத்தில் இருந்து கதைப்பது இன்றும் நல்ல ஞாபகம் உள்ளது.

சில வருடங்களுக்கு முன் தாயகம் சென்ற போது, அந்த வீட்டை ஒரு விதமாற்றமும் செய்யாமல், மீண்டும் பழுதாகிப் போன மரச் சிற்ப வேலைகளை, மச்சாள் புதுப்பித்து முற்றத்தில் ஒரு சிறிய தாமரைக்குளத்தை , தங்க மீனுடன் புதுப்பித்திருந்ததை பார்த்து எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகிப் போனது. :lol:

.

நல்லது, இனி மறப்பதற்கு முன்னே அதை அளவுகளுடன், ஒரு காகிதத்தில் வரைந்தால் ...? :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.