Jump to content

மிதிவெடி


Recommended Posts

வன்னியில் "மிதிவெடி" எனும் சிற்றுன்டி மிக பிரபலம். அது எப்படி செய்வது என தெரியுமா? அதன் பெயர் எப்படி வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது யாழ்ப்பாணத்திலதான் உந்தச் சொல்லும் உணவுப்பண்டமும் முதல்முதல் வந்தது.

நானறிய 1993 இன் இறுதிப்பகுதியில் இந்த மிதிவெடி எண்ட தின்பண்டம் எனக்கு அறிமுகமானது.

ஆனைக்கோட்டை - உயரப்புலத்தில இருந்த "சும்மா ரீ ரூம்' தெரிஞ்ச ஆக்கள் இருக்கிறீங்களோ?

அங்கதான் முதன்முதல் நான் மிதிவெடி வாங்கிச் சாப்பிட்டன். நான் தீர விசாரிச்சதில யாழ்ப்பாணத்தில அங்கதான் முதன்முதல் அது தொடங்கினதா அறிஞ்சன். அத படிப்படியா யாழ்ப்பாணத்தின்ர மற்றப் பகுதிகளுக்குப் பரவவே நீண்ட காலமெடுத்திச்சு. அது பிறகு வன்னிக்கும் இடப்பெயர்வோட வந்திட்டுது.

ஆனா ஏன் மிதிவெடி எண்டு பேர் வந்திச்சு எண்டு தெரியேல. சும்மா கவர்ச்சிக்காக வைச்சிருக்கலாம். அதோட அதுக்குள்ள நிறையக் கலவைகள் இருந்ததால அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம்.

--------------------------------------------------------

இதுகளுக்கு முதலே மனிதன் கழித்துவிட்ட மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இளைய சமுதாயத்திட்ட பரவலா இருந்திச்சு எண்டதையும் இந்த நேரத்தில பதிவு செய்ய விரும்பிறன்.

Link to comment
Share on other sites

என்ன மிதிவெடி சிற்றுண்டியா போற போக்கை பாத்தா எங்கடைசனம் மதியசாப்பாடு கண்ணிவெடி மலை சின்னதா சில செல் இரவு ஆட்லெறி அப்பப்ப கொறிக்க கொஞ்ச 50 மற்றும் 90 கலிபர் இரவைகள் எண்டு வர போகுது

Link to comment
Share on other sites

ஆஆ மிதிவெடி என்டும் சாப்பாடு இருக்கா?

அடக் கடவுளே அப்ப அதை தொட்டால் (மிதிச்சால்) வெடிச்சுடுமா? :P :P :P

Link to comment
Share on other sites

ஏன் கனடாவில வேண்டலாம் தானே?

றோள்ஸ் செய்யிற பொருட்களில தான் செய்யிறது ஆன மிதிவெடி உருவத்தில பெரிசா இருக்கும். அதைவிட என்ன விசேடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆ மிதிவெடி என்டும் சாப்பாடு இருக்கா?

அடக் கடவுளே அப்ப அதை தொட்டால் (மிதிச்சால்) வெடிச்சுடுமா? :P :P :P

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிதிவெடி என்று சாப்பாடு இருக்கு ஆனால் நான் சாப்பிட்டதில்லை? நன்றாக இருக்குமா :P

Link to comment
Share on other sites

சும்மா ரீ ரூம்' என்ற கடையில் நானும் சாப்பிட்டனான். ரொம்ப நல்லாயிருக்கும். :):lol:

Link to comment
Share on other sites

என்ன மிதிவெடி சிற்றுண்டியா போற போக்கை பாத்தா எங்கடைசனம் மதியசாப்பாடு கண்ணிவெடி மலை சின்னதா சில செல் இரவு ஆட்லெறி அப்பப்ப கொறிக்க கொஞ்ச 50 மற்றும் 90 கலிபர் இரவைகள் எண்டு வர போகுது

யாழ்பாணத்தில் தான் முதலில் மிதிவெடி எனும் சிற்றுண்டியை கண்டேன். அதற்குள் பாதிமுட்டை, இறைச்சி கறி என்பன வைத்து றோல்ஸ் மாதிரி பெரிதாக செய்திருப்பார்கள். இதை முதன் முதலில் கண்டது கொக்குவிலில் உள்ள கடையில். அந்த உணவகத்துக்கு நாம் வைத்த பெயர் அரையண்டவிலாஸ். அதை பற்றி ஆறுதலாக விபரமாக எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

பாருங்க, மிதிவெடிக்கு எத்தனை ரசிகர்கள் என்று :P :P

Link to comment
Share on other sites

யாராவது செய்முறை போட்டால் நன்றாக இருக்கும் ;)

Link to comment
Share on other sites

யாராவது செய்முறை போட்டால் நன்றாக இருக்கும் ;)

ஏன் மிதிவெடியை செய்து களத்தில விதைக்கபோறியளோ???? :evil: :twisted: :oops:

Link to comment
Share on other sites

எது நான் வேற விதைக்கணும் நீங்கள் விதைத்த மிதிவெடி போதாதா?;)

Link to comment
Share on other sites

  • 3 months later...

இன்றூ எங்கட வீட்டில மிதிவெடி செய்யபோறேனே..செய்திட்டு எப்பிடி வெடிச்சது என்றூ சொல்லுறேன் ;)

Link to comment
Share on other sites

இன்றூ எங்கட வீட்டில மிதிவெடி செய்யபோறேனே..செய்திட்டு எப்பிடி வெடிச்சது என்றூ சொல்லுறேன் ;)

ஆழ்ந்த அணுதாபங்கள்... :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

எங்கட வீட்டில இருக்கிறவங்களுக்கு தானே? ;) செய்திட்டு உங்களுக்கும் கொண்டு வந்து தரவா??

Link to comment
Share on other sites

அஸ்க்கு புஸ்க்கு நாங்க எத்தன மிதிவெடிய பாத்து இருப்பம் உங்க வெடி ; எங்கள ஒன்னும் செய்யாதாக்கும்... :lol::lol:

Link to comment
Share on other sites

என்னது மிதிவெடி எண்டு ஒரு சாப்பாடா? :shock:

எதுக்கும் நாலுபேர்கிட்ட விசாரிச்சிட்டுதான் - சாப்பிட வெளிக்கிடணும்- :roll:

சாப்பிடேக்க வெடிச்சுது எண்டு வைய்யுங்க-

வாய் வெடிச்ச பலூன் மாதிரி ஆயிடும்! :evil:

Link to comment
Share on other sites

இன்றூ எங்கட வீட்டில மிதிவெடி செய்யபோறேனே..செய்திட்டு எப்பிடி வெடிச்சது என்றூ சொல்லுறேன் ;)

துயா எங்கை மிதிவெடி செய்முறை? தந்தால் நாங்களும் விதைக்கலாமே சீ செய்யலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டன் ரொட்டியை தானே மிதிவெடி என்றியள்..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.