Jump to content

' நீ நீயாக இருக்கக் கற்றுக்கொள்' : கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கம்பவாரிதி உரை _


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'' நீ நீயாக இருக்கக் கற்றுக்கொள்' : கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கம்பவாரிதி உரை _

வீரகேசரி இணையம் 3/12/2010 2:06:13 PM 4

Share _

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற அறிவொளி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது.

சிறந்த பேச்சாற்றல்மிக்க கம்பவாரிதி நடைமுறையில் நாம் கைக்கொள்ளும் பிழையான பழக்கவழக்கங்களை சுவாரஸ்யமாகக் கூறியதுடன் எமது சிந்தனை வட்டத்துக்குள் அந்த வார்த்தைகளை சுழலவும் விட்டமை சிறப்பம்சம்.

"நீ, நீயாக இருக்கக் கற்றுக்கொள்... எதற்காகவும் உனது சுயத்தை மாற்றிக் கொள்ளாதே" என்பதுதான் அவரது உரையின் பிரதான கருப்பொருளாக இருந்தது.

கம்பவாரிதி உரைத்தவை சுருக்கமாக....

"நாம் பிறருடைய பார்வைக்காக வாழப் பழகிவிட்டோம். எமக்கென்று தனித்துவம் உண்டு. தனிப் பாணியுண்டு அவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்காமல் மாயையால் கட்டுண்டுக் கிடக்கின்றோம்.

மேற்குலக வெள்ளைக்காரர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நாம் கடைபிடிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மற்றவர்கள் நம்மை ஏளனமாக நினைப்பார்கள் என்பது பலரது எண்ணம்.

ஏன் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்?

ஏன், நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்? எமக்கென உள்ள தனியான அடையாளங்களை வேற்றுக் கலாசார மோகத்துக்காக ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?

சிலர் காலிலுள்ள உரோமங்களை சவரம் செய்து கொள்கிறார்கள். அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏன் என்று கேட்டால் மற்றவர்கள் பார்ப்பதற்காக என்கிறார்கள். தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வெள்ளைக்காரன் செய்துகொள்ளும் இவ்வாறானவற்றை நாம் ஏன் பின்தொடர வேண்டும்?

இலங்கையிலிருந்து லண்டன் செல்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். புதிய சப்பாத்து, புதிய உடை என மேலை நாட்டுக் கலாசாரத்துக்கு ஏற்ப அவர்கள் உடையணிந்திருப்பார்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தால் வெள்ளைக்காரர்களோ மிகவும் எளிமையான உடையில் இருப்பார்கள்.

எங்களுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுத்து பிறருடைய பார்வைக்காக வாழ்கிறோம்.

சரி, ஆகட்டும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதுமே தாழ்மையுணர்வு இருக்கும். 'எங்களால் முடியாது' என்றே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஏன் முடியாது என அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

நீ... நீயாக இரு. எதற்காகவும் உன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்படித்தான் சாப்பிடுவேன் என்றால் அப்படியே சாப்பிடு. இப்படி உடையணிவது தான் உனக்குப் பிடிக்கும் என்றால் அப்படியே அணிந்துகொள்.

இந்தப் பழக்கத்தை நமது இளம் சமுதாயத்தினரிடையே வளர்க்க வேண்டும். எங்களுடைய தனித்துவம் இழக்கப்படுவதற்கு நாமே காரணமாக அமைந்துவிடக் கூடாது....." இவ்வாறு அவரது உரை தொடர்கின்றது.

கம்பவாரிதி தனது ஆணித்தரமான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பலர் தாம் அணிந்திருந்த உடைகளை ஒருதரம் பார்த்துக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

உண்மையில் இது சிந்திக்கக் கூடிய விடயம் தான். தமிழ்ச் சங்கத்தில் நேற்றுக் கூடியிருந்தோர் இதனை நன்றாக உணர்ந்திருப்பார்கள். நல்ல விடயங்கள், அதுவும் நமது நன்மைக்காகக் கூறப்படும்போது, அவை தொடர்பாக நாமும் எமது சிந்தனையைச் செலுத்த வேண்டியது அவசியமல்லவா?

-என். அஞ்சனா

: கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கம்பவாரிதி உரை _

வீரகேசரி இணையம் 3/12/2010 2:06:13 PM 4

Share _

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற அறிவொளி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது.

சிறந்த பேச்சாற்றல்மிக்க கம்பவாரிதி நடைமுறையில் நாம் கைக்கொள்ளும் பிழையான பழக்கவழக்கங்களை சுவாரஸ்யமாகக் கூறியதுடன் எமது சிந்தனை வட்டத்துக்குள் அந்த வார்த்தைகளை சுழலவும் விட்டமை சிறப்பம்சம்.

"நீ, நீயாக இருக்கக் கற்றுக்கொள்... எதற்காகவும் உனது சுயத்தை மாற்றிக் கொள்ளாதே" என்பதுதான் அவரது உரையின் பிரதான கருப்பொருளாக இருந்தது.

கம்பவாரிதி உரைத்தவை சுருக்கமாக....

"நாம் பிறருடைய பார்வைக்காக வாழப் பழகிவிட்டோம். எமக்கென்று தனித்துவம் உண்டு. தனிப் பாணியுண்டு அவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்காமல் மாயையால் கட்டுண்டுக் கிடக்கின்றோம்.

மேற்குலக வெள்ளைக்காரர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நாம் கடைபிடிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மற்றவர்கள் நம்மை ஏளனமாக நினைப்பார்கள் என்பது பலரது எண்ணம்.

ஏன் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்?

ஏன், நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்? எமக்கென உள்ள தனியான அடையாளங்களை வேற்றுக் கலாசார மோகத்துக்காக ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?

சிலர் காலிலுள்ள உரோமங்களை சவரம் செய்து கொள்கிறார்கள். அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏன் என்று கேட்டால் மற்றவர்கள் பார்ப்பதற்காக என்கிறார்கள். தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வெள்ளைக்காரன் செய்துகொள்ளும் இவ்வாறானவற்றை நாம் ஏன் பின்தொடர வேண்டும்?

இலங்கையிலிருந்து லண்டன் செல்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். புதிய சப்பாத்து, புதிய உடை என மேலை நாட்டுக் கலாசாரத்துக்கு ஏற்ப அவர்கள் உடையணிந்திருப்பார்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தால் வெள்ளைக்காரர்களோ மிகவும் எளிமையான உடையில் இருப்பார்கள்.

எங்களுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுத்து பிறருடைய பார்வைக்காக வாழ்கிறோம்.

சரி, ஆகட்டும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதுமே தாழ்மையுணர்வு இருக்கும். 'எங்களால் முடியாது' என்றே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஏன் முடியாது என அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

நீ... நீயாக இரு. எதற்காகவும் உன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்படித்தான் சாப்பிடுவேன் என்றால் அப்படியே சாப்பிடு. இப்படி உடையணிவது தான் உனக்குப் பிடிக்கும் என்றால் அப்படியே அணிந்துகொள்.

இந்தப் பழக்கத்தை நமது இளம் சமுதாயத்தினரிடையே வளர்க்க வேண்டும். எங்களுடைய தனித்துவம் இழக்கப்படுவதற்கு நாமே காரணமாக அமைந்துவிடக் கூடாது....." இவ்வாறு அவரது உரை தொடர்கின்றது.

கம்பவாரிதி தனது ஆணித்தரமான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பலர் தாம் அணிந்திருந்த உடைகளை ஒருதரம் பார்த்துக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

உண்மையில் இது சிந்திக்கக் கூடிய விடயம் தான். தமிழ்ச் சங்கத்தில் நேற்றுக் கூடியிருந்தோர் இதனை நன்றாக உணர்ந்திருப்பார்கள். நல்ல விடயங்கள், அதுவும் நமது நன்மைக்காகக் கூறப்படும்போது, அவை தொடர்பாக நாமும் எமது சிந்தனையைச் செலுத்த வேண்டியது அவசியமல்லவா?

-என். அஞ்சனா

post-6659-12685154695598_thumb.gif

Link to comment
Share on other sites

பண்டைத் தமிழர் வாழ்வியல் வரலாறு

புலவர். வி.பொ.பழனிவேலனார்., கீ.க.தே.,

இக்காலத்தே தமிழ் மக்களிடையே பரவியுள்ள பழக்க வழக்கங்கள், கடல் கொண்ட தென்னாடாம் குமரிக் கண்டத்தில் வாழ்ந்திருந்த தொல் பழந்தமிழர்களின் வாழ்வியலுக்கு முற்றிலும் மாறுபட்டவையாகவே உள்ளன. இவை கொண்டு பண்டைத் தமிழர் பண்பாடறிவது அரிதாகும்.

தமிழரின் பண்டைய பண்பாடு இன்று தலைமாறிவிட்டது. ஏனெனில், தமிழர் வாழ்க்கையில் ஆரியப் பண்பாடு பெருமளவும், ஆங்கிலப் பண்பாடு ஓரளவும் பின்னிப் பிணைந்து விட்டன. ஆகவே, தமிழர் பண்பாட்டைத் தனிமைப் படுத்திக் காண்பது ஒவ்வாத ஒன்றாகிவிட்டது. எனவே, இன்று இந்தியத் தேசியத் தலைவர்கள் எனப்படும் தமிழர், குமரி முதல் பனிமலை வரை பரவியுள்ள நாகரிகம் "பாரத நாகரிகம்" என்றும் நாம் யாவரும் இந்தியர் என்றும் ஒருமைப்பாடு உரைக்கின்றனர்.

இத்தகையோர் பண்டைத் தமிழர் நாகரிகம், பண்பாடு உணராதவரே. அப்படியானால் இன்று தமிழரிடையே காணப்படும் பழக்க வழக்கங்கள் பெரும்பாலானவை தமிழர்க்குரியவையன்று என்பது உறுதி.

பண்டைத் தமிழர் வாழ்வியலை முழுமையாக அறிவதற்கு கருவிகள் எவையும் இன்றில்லை. சிந்துவெளியில் உள்ள அரப்பா, மொகஞ்சதாரோ, சங்குதாரோ ஆகிய இடங்களில் நடத்திய அகழ்வாய்வு, ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் சிந்து ஆற்றச் சமவெளியில் வாழ்ந்திருந்த திரவிடர்களின் ( தமிழர்களின்) நாகரிகத்தைப் புலப்படுத்துவ தாயுள்ளதென ஆராய்ச்சியறிஞர் அறைகின்றனர். "சிந்துவெளி நாகரிகம்" என்னும் நூல் அதற்குச் சான்றாகும்.

பாண்டிய அரசர்கள், முதல், இடை, கடை என்ற முக்கழகங்கள் நிறுவி முத்தமிழ் ஆய்வு செய்யத் தமிழ்ப் புலவர் பன்னூற்றுவரை அமர்த்தினர். அப்புலவர் பெருமக்கள், ஆய்ந்து எழுதி வைத்துச் சென்ற சுவடிகள் (நூல்கள்) பல்லாயிரம். அவை, பல முதல் இடைக் கழக நூல்கள், சில கடைக்கழகத்தன. தமிழ்ப் பகைவராலும், பரவையாலும், கறையானாலும், கனலாலும், புனலாலும் அழிக்கப்பட்டன. எஞ்சியவற்றுள் முதன்மையானது தொல்காப்பியம் ஒன்றே.

பின்னர் ஆக்கப்பட்ட நூல்கள் யாவும் கலப்புக்குள்ளானவையே. தமிழ்ப் பண்பாட்டைட அவற்றுள் காணவியலாது.

தொல்காப்பியர் ஆரியர் என்பது மொழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களின் ஆய்வு முடிவு. ஏனென்றால், தொல்காப்பியத்தில் ஊடே, ஊடே ஆரியப் பண்பாட இழையோடி உள்ளமையே காரணம். இடைச் செருகல்களும் உள்ளன.

ஆகவே, தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பட்டினப்பாலை, புறப்பொருள் வெண்பாமாலை, பரிபாடல், கலித்தொகை, தேவாரம் முதலான தமிழ் நூல்கள் கொண்டும், இன்றைய கலப்பு நாகரிகம் நுழையாத நாட்டுப்புற மக்கள் வாழ்க்கை முறை கண்டும், பண்டைத் தமிழரின் வாழ்வியல் நெறிகளை ஊகித்துணர்ந்தும், இந்த ஆய்வுரையை மக்களுக்குச் சொல்ல முற்பட்டோம். தமிழறிவுச் சான்றோர் ஆய்ந்து எமது ஆள்வினைக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்துப் பண்டைத் தமிழர் வாழ்வியல் யாண்டும் பரவ ஆவன செய்ய வேண்டுகிறோம்.

காய்தல் உவத்த லகற்றி ஒருபொருட்கண்

ஆய்வ தறிவுடையார் கண்ணதே.

குறிப்பு : ஆரியர் இந்தியாவிற்குள் புகுமுன் இந்தியாவுக்கு நாவலந்தீவு (Jambo - Island) என்ற பெயர்தான் வழங்கியது என உணர்க, ஓர்க.

அக்காலக் கல்வி முறை:-

அக்காலக் கல்வி முறை இக்காலம் போன்று இல்லை. மாணாக்கர், ஆசிரியர் இல்லில் தங்கிக் கல்வி கற்றனர். படித்தல், எழுதுதல், கணிதம் ஆகிய மூன்றுமே முதன்மையானவை. ஆசிரியர்க்குத் தேவையான உதவிகள் செய்தும், உறுபொருள் ஈந்தும் பயின்றனர்.

ஆசிரியர். ஆசு + இரியர் = ஆசிரியர் அதாவது மாணாக்கரின் மனத்திலுள்ள அறியாமையாகிய குற்றத்தைப் போக்குபவர் எனப் பொருளாகும். ஆசான் = ஆசு + ஆன். அதாவது மாணாக்கர்க்கு (கற்பதற்கு) ப் பற்றுக்கோடு போன்றவன்.

தகுதிகள் : அறிவு, திறன், நல்லொழுக்கம், பெருந்தன்மை, சால்பு உடையோரே ஆசிரியராயிருந்தனர். கணக்காயர், ஆசான் என்றும் அழைக்கப்பெற்றனர்.

கலையில் தெளிவு, கட்டுரைவன்மை, நிலம், மலை, நிறைகோல், மலர்நிகர் மாட்சி, உலகியல் அறிவு, உயர்பண்பு முதலான இயல்புகள் உடையவர்களை ஆசிரியர் பணிக்குத் தக்கவராகத் தெரிவு செய்தனர், மதித்தனர்.

இத்தகைய ஆசிரியரைத் தேடிப் பெற்றோர் தம் பிள்ளைகளைக் கல்வி பயில அவரிடம் ஒப்படைத்தனர்.

ஐயம், திரிபு, அறியாமை நீங்கக் கற்று முடித்தபின் ஆசிரியர் பெற்றோரை அழைத்து அவர்களிடம் அப்பிள்ளைகளை ஒப்படைத்து விடுவார்.

மாணாக்கர் : மாண்+ ஆக்கர் = மாணாக்கர். ஆசிரியர்பால் பயிலுங்கால் மாட்சிமையுள்ள சிறந்த பண்புகளைத் தம்மிடம் உண்டாக்கிக் கொள்பவர் எனப் பொருளாகும்.

தகுதிகள் : மாணாக்கரைத் தேர்ந்தெடுக்கும் போழ்து கள்ளுண்டு களிப்பவர், சோம்பேறி, மானமுள்ளவர், காமம் உடையவர், கள்வர், பிணியாளி, அறிவிலி, பிணக்கர், சினமுடையவர், துயிலுவோர், மந்தமானவர், தொன்னூல் கற்க அஞ்சித் தடுமாறுபவர், தீயவர், வஞ்சகர் - ஆகிய இயல்புகள் உடையவர்களை ஆசிரியர் அன்று ஏற்கமாட்டார்.

கற்பித்தல் : மாணாக்கர்கட்கு ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போழ்து காலம், இடம் முதலியவற்றை அறிந்து நன்கமர்ந்து பாடம் சொல்லவேண்டிய பொருள் பற்றி ஆய்ந்து மனத்தில் இருத்தி, விரைவின்றியும், சீற்றங் கொள்ளாமலும், விருப்பத்துடன் முகம் மலர்ந்து, பாடங் கேட்கும் மாணாக்கர் ஏற்கும் வகையுணர்ந்து அம்மாணாக்கர் மனத்தில் பதியும்படி மாறுபாடில்லா மனநிலையோடு கற்பித்தனர்.

மாணாக்கர் பாடங்கேட்டல்: பாடம் கேட்கும் மாணாக்கர் நேரந்தவறாது சரியான நேரத்தில் ஆசிரியரிடம் சென்று ஆசிரியர்க்குப் பணிவிடை செய்வதில் வெறுப்படையாது, அவரது குணமறிந்து பழகி, குறிப்பறிந்து நடந்து, ஆசிரியர் அமரச் சொன்னபடி அமர்ந்து, கேள்வி கேட்டால் விடை சொல்லி, அடக்கமாக இருந்து, ஆசிரியர் சொல்வதைச் செவி வாயிலாகக் கேட்டு, நெஞ்சகத்திருத்தி, ஆசிரியர் சொன்ன நற்கருத்துகளை மறவாமல் மனத்தில் பதிய வைத்துக் கொண்டு, ஆசிரியர் போ என்று சொன்னபின் போதல் முறையாக இருந்தது.

அன்றியும், ஆசிரியரிடம் கேட்ட பாடத்தை மீண்டும் நினைத்துப் பார்த்து மறந்து போயிருந்தால் ஆசிரியரிடம் சரியானவற்றைக் கேட்டறிதல், தன்னுடன் பயிலும் மாணாக்கத் தோழர்களுடன் கலந்து பழகி தனக்குத் தெரியாதவற்றைக் கேட்டறிதல், அவர்கள் கேட்கும் வினாக்கட்கு விடையளித்தல், ஆகியவற்றைக் கடமையாகக் கொண்டு ஒழுகினால் மாணாக்கர்களின் அறியாமை முற்றாக நீங்கிவிடும் என்கிறது நன்னூல்.

கற்றவர்க்குப் பட்டம் : இன்று உள்ளது போல் படித்ததற்குச் சான்று, பட்டம் வழங்கும் முறை அன்றில்லை. ஆனால் எந்த ஆசிரியரிடம் பாடம் கேட்டீர் என்று கேட்பதுண்டு. அது கொண்டு அவரது அறிவுத்திறன் கணிக்கப்பெறும். பெயர் பெற்ற நல்லாசிரியர்களால் பாடங்கேட்டவர்க்குப் பெரு மதிப்புண்டு.

இக்காலத்தில் எந்தக் கல்லுாரி, பல்கலைக்கழகத்தில் பயின்றீர் என்று கேட்பது போன்று அக்காலத்தில் கேட்பதில்லை. யாரிடம் பாடங்கேட்டீர் என வினவுவது வழக்கமாயிருந்தது.

நாளந்தா, தட்சசீலம் பல்கலைக் கழகங்கள் பற்றிப் பேசப் படுகிறது. அவை புத்தம் பிறந்த பிற்காலத்தில் பிறந்தவை.

தமிழகத்தில் எந்தப் பல்கலைக் கழகமும் இருந்ததாகப் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பில்லை. முத்தமிழ்க் கழகங்கள் இருந்த வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடைத்துள்ளன.

முதற்காலப் பாடங்கேட்கும் முறை, செவி வழிக் கேட்டு, மனத்திலிருத்திக் கொள்வதாகவே இருந்தது. அதனாலன்றே மாணாக்கர்களைச் சேர்க்குங்கால் மறதியில்லாத நினைவு வன்மைமிக்காரையே சேர்த்தனர்.

செவிவாயாக நெஞ்சு களனாகக்

கேட்டவை கேட்டு அவைவிடா துளத்தமைத்து.

என்று நன்னூற்பா நவில்வது காண்க.

கிழக்கிந்திய வணிகக் குழுமத்தார் ஆட்சி இந்த நாட்டிற்கு வருமுன் வரை, பாடங்கேட்கும் முறையே தமிழகத்தில் பெருவழக்காயிருந்த தெனலாம்.

யாம் பயிலுங்கால் (1925-1931) தமிழாசிரியராகப் பணிபுரிந்த யாவரும் தமிழறிஞரிடம் பாடங்கேட்டவராகத் தாம் இருந்தனர். புலவர் அல்லது வித்துவான் பட்டம் பெற்றவரல்லர். ஆயினும், பாடஞ் சொல்வதில் இற்றைப் புலவர்களைவிட வல்லவராயிருந்தனர்.

இன்றைய ஆசிரியர், மாணாக்கர் : இக்காலத்தே ஆசிரியர், மாணாக்கர் நிலை முற்றிலும் மாறுபட்டதாகும். பயிலுங்காலத்திலேயே மாணாக்கர் அரசியலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆசிரியர் பலரும் அரசியல் கட்சிகளைச் சார்ந்து செயல்படுகின்றனர்.

மாணாக்கர் பயிலும் போழ்தே அரசியலில் நேரடியாக ஈடுபடுவதால் படிப்பு அரைகுறையாக முடிகிறது. ஆசிரியர் மாணாக்கர் என்கிற அன்புப் பிணைப்பு இன்றி புரட்சியும், உறழ்ச்சியும் உடையராகின்றனர்.

ஆசிரியர்க்கு அடங்கி, அவர் வழிபற்றிப் பயிலும் நிலைமாறி, ஆசிரியரை மாணாக்கர் அதிகாரம் செய்யும் நிலையே உருவாகி வருவது வருந்துதற்குரியது. அறிவு நிரம்பப் பெற்ற பின்னரே உரிமை கோரல் முறையாகும்.

ஆசிரியர் பணிக்கு இன்று தெரிவு செய்யப் பெறுபவர் அரசுப்பணி எதுவும் பெறவியலாத நிலையில் இறுதிப் புகலிடமாக இப்பணிக்கு வருபவரே. பண்டுபோல் அறிவு, ஆளுமை, உயர்பண்பு, உடையவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.

கல்வி கலையில கற்பவர் நாட்சில

மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின்

ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழிய

பாலுண் குருகின் தெரிந்து.

என்னும் பாடல் பொருளுணர்ந்து அன்று மாணாக்கர் கல்வி கற்றனர். இன்றைய ஏந்துகள் அக்கால மாணாக்கருக்கு இல்லை. எனினும், கல்வியைக் கண்ணெனப் போற்றி பேணினர்.

அன்றைய ஆசிரியர்களும், இன்றைய ஆசிரியர்களைப் போன்று, எல்லாப் பாடங்களுக்கும் வினாவிடை நூல்கள் வாங்கிப் படியுங்கள் என்று மாணாக்கரிடம் கூறாமல், தாங்கள் கற்ற, கேட்ட, கருத்துகளையும், செய்திகளையும் மாணாக்கருக்கு அக்கறையுடன், அறிவுத் தெளிவுண்டாகும் வகையிலும், பாடங்களைக் கற்பித்தனர், எமக்குக் கற்பித்த ஆசிரியர்களும் அவ்வாறே கற்பித்தனர் என்றல் மிகையன்று.

ஆண்களும்., பெண்களும் அன்று சமவாய்ப்புகளுடன் கல்வி கற்றனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் நிரம்பவுள.

அவ்வையார், காக்கை பாடினரியார், பொன்முடியார், வெண்ணிக் குயத்தியார், பெருங்கோப்பெண்டு, ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, மாற்பித்தியாார், மாறோக்கத்து நப்பசலையார், வெறிபாடிய காமக்கண்ணியார், முதலான பெண்பாற் புலவர்கள் பண்டு இருந்தமை தக்க சான்றாகும்,

இன்று கல்வி கற்பது பிழைக்க வழிதேட என்னும் நிலையில் இருக்கின்றமையின் கற்றறிவுடையவர்க்கு அன்றிருந்த மதிப்பும் பெருமையும் மக்களிடையே இல்லாமற் போயிற்று.

பண்டைய மக்கள் கல்வியைக் கண்ணெனப் போற்றினர் என்பதற்கு...

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் - என்னும் வெற்றி வேற்கைப் பாடலும்,

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்கிற திருக்குடற்பாவும் சான்று பகர்கின்றன.

அல்லாமலும், பண்டு தமிழ் மக்கள் தம் பிள்ளைகளைக் கல்வி பயில ஆசிரியர்பல் உய்க்குங்கால், இந்தப் பிள்ளைக்குக் கலவிக் கண்ணைத் திறந்து விடுங்கள் ஐயா, என்று சொல்வது வழக்கமாக இருந்தமை ஈண்டு குறிப்பிடற்பாற்று.

காதல் வாழ்வு :

உலக வாழ்க்கையின் இன்றியமையாத பகுதி, காதல்மனையாளும், காதலனும் மாறின்றித் தீதில் ஒரு கருமம் செய்து வாழும் வாழ்க்கையாகும். தமிழில் உள்ள அகப்பொருள் நூல்கள் இதனை, களவு, கற்பு எனக் கூறுகின்றன.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம் காணுங் காலை,

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

என்கிறது தொல்காப்பியம் (நூற்பா 1038)

களவு என்பது இன்பம், பொருள், அறன் என்று சொல்லிய வகையில் அன்புடன் கூடிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளோடு பொருந்திய காதல் வாழ்க்கையை ஆராயுமிடத்து, வேத வழக்கினையுடைய ஆரியரிடத்து நிகழும் திருமண முறை எட்டனுள் இசைப்பாட்டு வகையுடன் இயைந்த நல்ல யாழினையுடைய, தம் மனைவியருடன் இணைபிரியா துறையும், கந்தருவரது மணவியல்புடன் ஒரு வகையில் ஒப்புமையுடையதாகும் என்பது திரள் பொருளாகும்.

இளமை நலஞ்செறிந்த கட்டிளங்காளை யொருவனும், கட்டிளம் பருவம் எய்திய எழில் மிக்க கன்னியொருத்தியும் தனியிடத்தில் ஒருவரையொருவர் சந்தித்து காதல் வயப்பட்டு பிறரறியா வண்ணம் இணைவிழைச்சி மேற்கொண்டு ஒழுகி வருவது "களவு" எனப்பட்டது.

இக்களவொழுக்கத்தை யறிந்த ஊரார், சிலர் மட்டில் பிறரறியாதபடி மறைவாக (கமுக்கமாக) த் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பழிச்சொல் "அம்பல்" எனப்படும். அஃது பலராலும் அறியப்பட்டு பரவலாக பேசப்பட்ட போழ்து "அலர்" என்று கூறப்பட்டது.

இக்களவொழுக்கம் செவிலித்தாய், நற்றாய், ஆகியோரால் அறியப்பட்டு, தந்தை தம்முன் ஆகியோர்க்கு அறிவிக்கப்பெறும். அவர்கள் இசைந்து இருவரையும் வாழ்க்கைப்படுத்துவதும் உண்டு, மறுப்பதும் உண்டு.

அங்ஙனம் பெற்றோரும், உற்றோரும் அவர்களை வாழ்க்கை நெறிப்படுத்த ஒருப்படாவிடின் அக்காளையும் கன்னியும் உடன் போக்கு மேற்கொள்வதும் உண்டு.

இல்லையேல், பனைமரத்திலுள்ள கருக்கு மட்டகளால் குதிரை போல் உருவமைத்து, அக்காதலன் எருக்கம்பூ மாலை என்ற மாலை அணிந்து, அவன் விரும்பிய காதலியின் படம் வரைந்து கொடியைப் பிடித்துக் கொண்டு, அதில் ஏறி ஊர்த்தெருக்கள் வழி வலம் வருவான். கண்டோர் இரக்கப்பட்டு இந்த நல்ல பிள்ளைக்குப் பெண்ணைக் கொடுப்பதில் என்ன தடை? எனப்பேசிக் கொள்வதைப் பெண்ணின் பெற்றோர் அறிந்து, மணஞ் செய்து வைப்பதும் உண்டு.

அவ்வாறு மணமுடிக்க ஒப்பாது பிடிவாதமாய் இருந்தால், அந்த இளைஞன் இறுதியில் வரைபாய்தலை மேற்கொள்வானாம். அஃதாவது மலையில் ஏறிவிழுந்து உயிர்விட முயல்வானாம். ஆனால், வரை பாய்ந்ததாக இலக்கியச் சான்றில்லை.

மடல் ஊர்ந்தாலே மணம் முடித்துவிடுவராம். வரை பாய்ந்தால் காதலியின் பெற்றோர்க்கு நீங்காப் பழியுண்டாகும் என்ற அச்சம் போலும்.

மலையிலிருந்து விழுந்து சாகப்போகிறேன் என்று சொன்னாலே அஞ்சி மணம் முடிப்பாராம்.

கற்பு

களவு முறையில் நாளடைவில் பொய்ம்மையும் கள்ளமும் இழுக்கும் நேர்ந்தமையின் தமிழ்ச் சான்றோர் சடங்குகளுடன் கூடிய கற்பு முறையை வகுத்தனர். இதனைத் தொல்காப்பியம்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப, என்று இயம்புகிறது (நூற்பா 1091)

கற்பு என்பது திருமணச் சடங்கோடு பொருந்த கொள்ளுதற்குரிய முறைமையினையுடைய தலைமகன், தலைமகளைக் கொடுத்தற்குரிய முறைமையுடையோர் கொடுக்க, வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதாம். இதுபற்றித் தொல்காப்பியம் கூறுவது.

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே. என்பதாம் (நூற்பா 1088)

காதல் வாழ்வு நடத்தத் தகுதி வாய்ந்த தலைமகனையும் தலைமகளையும் கொடுப்போரும், எடுப்போரும் மனம் ஒப்பித் தெரிவு செய்து, பலரும் குழுமியிருக்கும் மன்றில் இருவரையும் வாழ்க்கைத் துணைவர்களாக்குவது கற்பு முறையாகும்.

மணம், மன்றல், வரைவு, திருமணம் என்பன காதலர் இருவர் கருத்தும் ஒருமித்தே நடைபெறும்.

ஆயினும் பண்டு மணமக்களைத் தேர்ந்தெடுக்குங்கால் இன்று நடைமுறையில் உள்ள "திதி, யோகம், கரணம், லக்கினம், யோனி, ராசி, கிரகம், நட்சத்திரம், திசை, புத்தி " ஆகிய பத்து வகைப் பொருத்தங்கள் பார்ப்பாரிலர்.

இன்று பிறப்பியங் (சாதகம்) கொண்டு, ஐந்திறம் (பஞ்சாங்கம்) பார்த்தும் பொருத்தம் காணும் முறை அன்றில்லை. மணமக்களை ஒருவரையொருவர் நேரில் சந்திக்க வாய்ப்பளிக்காமல் (சாதகம்) பிறப்பியம் பார்த்து மணமக்களைத் தெரிவு செய்பவர் பலராக உளர். இம்முறை பண்டைய தமிழ் மரபுக்கு மாறானதாகும். தொல்காப்பியர் நூற்பா 1219 நுவலும் பத்துப் பொருத்தங்கள் -

பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டொடு

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொரு திருவென

முறையுங் கிளந்த ஒப்பினது வகையே, என அறிக.

நாள், கோள், ஓரை, நல்லநாள், கெட்டநாள், பார்க்கும் பழக்கம் பண்டைத் தமிழகத்தில் இல்லை. இடைக்காலத்தில் புகுத்தப்பட்டவையே.

நட்சத்திரம், ராசி, கிரகம், யோகம், ஓனி, திதி, ராசி, எமம், குளிசம், சோசியம், சோதிடம், மாந்த்ரீகம், பில்லிசூனியம் - என்பன தமிழ்ச் சொற்களன்று.

பக்கல், கிழமை, திங்கள், ஆண்டு ஆகிய கணக்கிடப் பிற்றைஞான்று தமிழ்ஐயர் ஆக்கிக் கொண்டவையே.

இக்காலத்தில் திருமணத்தின் போழ்து அரசாணைக்கால் நடுகல், காலுங்கரகம் வைத்தல், தீவளர்த்து அவிசொரிதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், தீவலம் வருதல், தாலி கட்டுதல் முதலியன பண்டைத் தமிழர் அறியாதவை.

ஆனால் பிற்கால இலக்கியங்களில் அவை புகுத்தப்பட்டு விட்டன. இதுகொண்டு தமிழர் சிலர் மதிமயங்கி அவை தமிழர் திருமண முறைகள் தாம் என்று பேசியும், எழுதியும் வருகின்றனர்.

தாலி என்பது பண்டு ஆண்குழந்தைக்குப் பிறந்த ஐந்தாம் நாள் அணிந்த ஓர் அணிகலன் ஆகும். அதனை ஐம்படைத்தாலி என்றும் கூறுவர்.

பொன்னுடைத்தாலி என்மகன், என அகநானூறு ஐம்பத்து நான்காம் பாடலும்

தார் பூண்டு,

தாலி களைந்தன்று மிலனே பால்விட்டு

அயினியும் அன்றயின் றனனே,

என்று புறநானூறு எழுபத்தேழாம் பாடலும் புகல்வன காண்க.

ஆகவே, அன்று, ஆணுக்குப் பெண் அடிமை என்பதற்கு அறிகுறியாகத் தாலி அணியப் பெறவில்லை என்பது ஒரு தலை.

குறிப்பு : தமிழ்பேரறிஞர் பண்டாரகர் (டாக்டர்) மா. அரசமாணிக்கனார் எழுதியுள்ள "தமிழர்க்குத் தாலி உண்டா" என்னும் நூல் கண்டு தெளிவு பெறுக.

http://www.naalorunool.com/ithazh/sisae/sis/sis042.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நி நீயாகவே இருரு.இது என்க்கு மகவும் பிடித்த வரி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.