Jump to content

கறுப்புப் பட்டியல்


Recommended Posts

யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம்.

இன்று விரிந்து வரும் தமிழ் இணைய ஊடகப் பரப்பில் பல்வேறுபட்ட போக்குகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது செய்தி/கட்டுரை/எழுத்தாக்க திருட்டு. உரிமையாளர் வேறொருவராக இருக்க, அதை பிரதியெடுத்து தமதாகக் காட்டிக்கொள்ளும் மிகக் கீழ்த்தரமான செயல் இன்று பரவலாக இடம்பெறுகிறது. ஆக்கங்களைத் திருடி, உரிய மூலத்தைக் குறிப்பிடாது தமது இணையத்தளங்களில் இணைப்பதும் - அதனூடாக தமது இணையத்தளங்களுக்கு விளம்பரம் தேடுவதும் இவர்களின் வேலை. இதன் விளைவாக அதிக வாசகர்களை தமது தளத்துக்கு திருப்பி - கூகிள் போன்ற விளம்பர சேவைகளினூடாக பணம் சம்பாதிப்பதும் நடைபெறுகிறது. ஒரு செய்தியைப் பெறுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு அல்லது ஒரு கட்டுரையை எழுதுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு - இவைபற்றி இவர்கள் யோசிப்பதில்லை. ஊடக அறத்தை மீறியவர்களாக - நேர்மையற்ற செயல்களை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை முழுமையாக எம்மால் தடுக்க முடியாது - எனினும் யாழ் இணையத்தில் இதுபோன்ற - ஊடக அறத்தை மீறி செயற்படும் - இணைய ஊடகங்களை தடைசெய்ய எண்ணியுள்ளோம். தடைசெய்யப்படும் ஊடகங்கள் இங்கு பட்டியலிடப்படும். அப்படிப் பட்டியலிடப்படும் இணைய ஊடகங்களிலிருந்து செய்திகளையோ ஆக்கங்களையோ யாழ் கருத்துக்களத்தில் இணைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் கீழ்தரமான - ஊடக அறத்தை மீறும் செயல்களை - யாழ் இணையத்திலாவது மட்டுப்படுத்த முடியுமென நம்புகிறோம். குறித்த ஊடகங்களை இனங்காண யாழ் கள உறவுகளாகிய நீங்கள் உங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நன்றி.

Edited by வலைஞன்
Link to comment
Share on other sites

1. அதிர்வு

2. தமிழ் வின்

3. தினமுரசம்

Edited by வலைஞன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • 1 month later...

4. ஈழம் ஈ நியூஸ் (eelamenews)

குறித்த இணையத்தளம் யாழ் இணையத்தில் தடை செய்யப்படுகிறது. பிற இணையத்தளங்களின் செய்திகளை திருடி இணைத்தமை, சரியான மூலத்தைக் குறிப்பிடாமல் அவற்றை பயன்படுத்தியமை போன்ற காரணங்களால் தடை செய்யப்படுகிறது. எனவே, யாழ் இணைய உறவுகளே, குறித்த இணையத்தளத்திலிருந்து செய்திகளையோ, ஆக்கங்களையோ இங்கு இணைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  • Like 6
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • 1 year later...

மேலே குறிப்பிட்ட இணையத்தளங்களுடன் பின்வரும் தளங்களும் சேர்க்கப்படுகின்றது.

5. jaffnawin + tamilenn

6. tamilcnn

7. ethirinews

இதன்படி இன்றுமுதல் எந்த ஒரு செய்தியும் இத்தளங்களில் இருந்து யாழ கருத்துக்களம் பகுதியில் இணைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • 1 year later...

மேலே குறிப்பிட்ட இணையத்தளங்களுடன் பின்வரும் தளங்களும் சேர்க்கப்படுகின்றது.

8. விறுவிறுப்பு

9. நெருப்பு

10. தேனி

இன்றில் இருந்து இவற்றின் பதிவுகளும் செய்திகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாழ் கருத்துக்களம் பகுதில் இணைக்கப்படல் ஆகாது.

நன்றி

  • Like 4
Link to comment
Share on other sites

  • 2 years later...

வணக்கம்,

 

 

அண்மைக்கால செய்திகள் மற்றும் தகவல்களது தர அடிப்படையில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளங்களை மீள் பரிசீலனை செய்தோம். இதனடிப்படையில் தமிழ்வின் இணையத்தளத்தினை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் இனி தமிழ்வின் செய்திகள் யாழின் பொதுவான கருத்துக்கள விதிகளுக்கு ஏற்ப இணைக்க முடியும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • 7 months later...

வணக்கம்,

அண்மைக்காலங்களில் குறுகிய மற்றும் மலினமான அரசியல் காரணங்களுக்காக முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், மிகவும் பொய்யான விடயங்கள் அடங்கிய சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ந்து பிரசுரித்து வந்தமையாலும், சகல ஊடக நெறிகளையும் தர்மங்களையும் மீறி புனைவுகளை செய்திகளாக்கியமையாலும் பின்வரும் இணையத்தளமும்

1. பதிவு:www.pathivu.com

செய்திகளை அதன் உண்மைத்தன்மைகளுக்கு அப்பால் சென்று வணிக நோக்கங்களுக்காக மிகவும் தரக்குறைவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பிரசுரிப்பதாலும், பொய்யான பல தகவல்களை தொடர்ந்து பிரசுரிப்பாதலும் பின்வரும் இணையமும்

2. ஜேவிபி செய்தித் தளம்: http://www.jvpnews.com/

இன்றிலிருந்து கறுப்புப்பட்டியலில் இடப்படுகின்றன.

இனிமேல்

1. இத்தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும்

2. இத் தளங்களை பிரதி பண்ணி இடும் ஏனைய தளங்களின் செய்திகளை பிரசுரிப்பதும்

களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வாறு செயற்படுகின்றவர்களின் செய்திகளை பதியும் உரிமை மட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கின்றோம்.

யாழ் இணையம் பலதரப்பட்ட சமூக மட்டங்களில் நிலையான மதிப்பையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து பேணி வரும் என்றும் இதனூடாக ஆரோக்கியமான உரையாடல் வெளியினை தமிழ் தேசிய அரசியல் மட்டத்தில் உருவாக்குவதில் தன் செல்வாக்கினை தொடர்ந்து காத்து வரும் என்றும் உறுதி அளிக்கின்றோம்.

நன்றி

  • Like 10
Link to comment
Share on other sites

  • 7 years later...

வணக்கம்,

முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், பிரச்சார நோக்கில் சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தமையால் RT News பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு RT News இன் நேரடி இணைய இணைப்பும் பல இணைய வழங்கிகளால் தடுக்கப்பட்டுள்ளது. 

யாழ் இணையம் நம்பகத்தன்மையையான தகவல்களையே அனுமதிக்கும் என்பதால் RT News கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆகவே, RT News இலிருந்து நேரிடையாகவோ அல்லது அதன் செய்திகளை பிரதியிடும் வேறு தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும், பிரசுரிப்பதும் களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வறிவித்தலை சட்டைசெய்யாது செயற்படுவர்கள் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டுவரப்படுவார்கள் என அறியத்தருகின்றோம்.

 

நன்றி

  • Like 1
  • Thanks 3
  • Confused 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.