Jump to content

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்


Recommended Posts

.காவி உடை போட்டவர்கள், கோவணத்தையும் காவி நிறத்தில் தான் கட்டுவார்கள் என்று இவ்வளவு நாளும் நான் ினைத்திருந்தேன்,

நித்தியானந்தரின் கோவணம் வெள்ளை நிறத்தில் உள்ளதை பார்த்த பின், நான் நினைத்தது தவறு என்று இப்போ புரிந்து கொண்டேன்.

முற்றும் துறந்தவர்கள் கோவணமும் கட்டுவதில்லை எண்டுதான் நான் நினைத்தேன்... கடவுளுக்கே ஹைரோசல் பிரச்சினை வருமோ...??

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

முற்றும் துறந்தவர்கள் கோவணமும் கட்டுவதில்லை எண்டுதான் நான் நினைத்தேன்... கடவுளுக்கே ஹைரோசல் பிரச்சினை வருமோ...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணாசை யாரை விட்டது, ரண்டு மூண்டு பிள்ள பெத்த நிழலியே இப்பிடி அம்மணக்கட்டையா அலையேக்க, பாவம் பிரம்மச்சரிய விரதம் இருந்து காயுற சாமிக்கு எப்பிடி இருக்கும் என்டு ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோவன்! :D^_^

பாவம் சாமி. பாக்கிற எங்களுக்கே எவ்வளவு பரவசமாய் இருக்குதெண்டால் ரஞ்சிதாவின் லீலையை நேரில் அனுபவித்த சாமி என்ன தான் செய்வார் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Print | E-mail : Email this Article

சனிக்கிழமை, 6, மார்ச் 2010 (12:31 IST)

நடிகை ரஞ்சிதா தற்கொலை முயற்சி?

நடிகை ரஞ்சிதா ஆந்திராவை சேர்ந்தவர். நித்யானந்தாவுடன் டெலிவிஷனில் வெளியான ஆபாச காட்சிகளால் மனம் உடைந்த ரஞ்சிதா ஆந்திராவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தற்கொலை முயற்சியில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டார் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் அவர் இப்போது என்ன நிலையில் இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை என்கிறது தெலுங்கு திரையுலகம்.

நக்கீரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்யானந்தா ஆசிரமத்தில் கனடா பெண் சீடர் கொலை: லெனின் கருப்பன் புகார்

சென்னை: பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் சீடர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்ற நித்ய தர்மானந்தா புகார் [^] தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோவை ரகசியமாக எடுத்த இவர் மேலும் நித்யானந்தாவின் மேலும் லீலைகள் அடங்கிய வீடியோக்கள் அடங்கிய சிடிக்களை இன்று சென்னை நகர போலீஸ் கமிஷ்னரிடம் தந்தார்.

பின்னர் அவர் அளித்த புகாரில், ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா சீரழித்துள்ளதாகவும், ஒரு கனடா நாட்டுப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் நித்யானந்தாவிடம் சீடர்கள் ஏமாறுவதைத் தடுக்கவே இந்த வீடியோவை எடு்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வழக்குகள் பெங்களூருக்கு மாற்றம்:

இந் நிலையி்ல் நித்யானந்தா மீது தமிழகத்தில் தரப்பட்ட புகார்கள், தாக்கலான வழக்குகள் அனைத்தையும் பெங்களூர் காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

நித்யானந்தா மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், நில மோசடி, பண மோசடி, இந்து மத நம்பிக்கையை புண்படுத்தியது என்று பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், குற்றங்கள் அனைத்தும் பெங்களூர் ஆசிரமத்தில் தான் நடந்தன என்பதால் அவை அனைத்தும் பெங்களூர் காவல்துறைக்கு மாற்றப்படுவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் மீது பாலியல் வல்லுறவு, கூட்டுச் சதி, மோசடி, ஆள் கடத்தல் உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

thatstamil.com

நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் அளிக்க முடியாது - நடிகை ரஞ்சிதா

நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் அளிக்கவோ, அவருக்கு எதிராக திரும்பவோ முடியாது என்று நடிகை ரஞ்சிதா கூறி விட்டதாக அவருக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது.

நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோ காட்சி போலியானது, அது கிராபிக்ஸ் வேலை என்று நித்தியானந்தா பீடத்தின் பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார். மேலும், சாமியாருக்கு எதிராக புகார் அளிக்குமாறு ரஞ்சிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் ரஞ்சிதாவோ, சாமியாருக்கு எதிராக புகார் தரவோ, எதிராக செயல்படவோ முடியாது என்று உறுதிபடக் கூறி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் ரஞ்சிதா புகார் கொடுத்தால் மட்டுமே சாமியார் மீது நடவடிக்கை எடுக்க உறுதியான வாய்ப்புகள் உண்டு. எனவே ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பிடியில் சிக்காமல் ரஞ்சிதா நழுவி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஞ்சிதா எப்படி நித்தியானந்தாவுடன் இணைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை மகளான நடிகை ராக சுதாதான், ரஞ்சிதாவை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாராம். கணவருடன் ஏற்பட்ட பிரிவால் மனம் உடைந்து போயிருந்த ரஞ்சிதாவை, ராக சுதாதான், பெங்களூர் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் ஆறுதல் அளித்துள்ளார்.

ஆசிரம சூழல் ரஞ்சிதாவுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. இதையடுத்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். அங்கு பல மணி நேரம் தியானம் செய்வாராம். யோகா குறித்த ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தாராம்.

மேலும் நித்தியானந்தர் மீது வைத்திருந்த மதிப்பு காரணமாக அவரது அறையைக் கூட ரஞ்சிதாதான் சுத்தம் செய்வாராம். அப்போதுதான் நித்தியானந்தாவுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டதாம்.

இந்த சமயத்தில்தான் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளது ஆசிரமத்திலேயே இருந்து வந்த நித்தியானந்தா எதிர்ப்பு கோஷ்டி. இவர்கள் செய்த சதியில்தான் ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் மாட்டிக் கொண்டு விட்டதாக கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயமும் இதேபோல உலா வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா.

32 வயதிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம் அமைத்து உலகம் முழுவதும் மடத்துக்கு 1500 கிளைகள் உருவாக்கிய நித்யானந்தா மீது வேறு சில மடங்களின் சாமியார்களுக்கு பொறாமை இருந்ததாம்.

அவர்களும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியைத் தூண்டி விட்டு, நித்தியானந்தாவை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள்.

இப்படி பல முனைகளிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகள், பொறாமைகள் உள்ளிட்டவை சேர்ந்துதான் நித்தியானந்தாவை, இன்று ரஞ்சிதா மூலம் வீழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறத

thatstamil.com

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

எந்த ஆசிரமத்துக்கும் நான் இதுவரை போனதில்லை, சாமியார்களை நம்புவதுமில்லை... கடவுளை மட்டுமே நம்புவேன்'' என்று நடிகை திரிஷா கூறினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், திரிஷா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டி:

சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது சென்றிருக்கிறீர்களா?

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. இனிமேல் நான் போகமாட்டேன். நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

thatstamil.comஎ

'நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா

நித்யானந்த சாமியார் ஒரு மோசடிப் பேர்வழி. அவரை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி என்று புலம்பியுள்ளார் நடிகை தாரா.

கன்னடத்தில் முன்னணி நடிகை கம் அரசியல்வாதி இந்த தாரா. தமிழில் இங்கேயும் ஒரு கங்கை, நாயகன் என சில படங்களில் நடித்தவர்.

நித்யானந்தரின் மிகத் தீவிரமான பக்தை இந்த தாரா. நித்யானந்தமே பக்தர்களுக்கு 'நித்திய ஆனந்தம்' என்றும், கடவுள் அவதாரம் என்றெல்லாம் வெளிப்படையாக ஆதரவு அளித்தவர் தாரா. நித்யானந்தத்துக்காக பல ரியல் எஸ்டேட் டீல்களில் இவர் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கன்னடத் திரையுலகில் நித்யானந்தன் புகழ் பரப்புவதில் முன்னணியில் இருந்தார்.

தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நித்யானந்தனின் பெங்களூர் பிடாதி ஆசிரமத்துக்குப் போய் நாள் முழுக்க அங்கே சேவைகள் செய்வது தாராவின் வழக்கம்.

இந்த நிலையில் நித்யானந்தன் - ரஞ்சிதா பலான டிவிடி சன் செய்திகளில் ஒளிபரப்பாகி, நாடு முழுவதும் கொதிப்பைக் கிளப்ப, அதிர்ந்து போய்விட்டாராம் தாரா.

இன்று தாராவின் பிறந்த நாள்!

ஆசிரமத்துக்குப் போவீர்களா என அவர் முன் மைக்கை டிவிக்காரர்கள் நீட்டியதுதான் தாமதம். கண்ணீரும் கோபமுமாக பொறிந்து தள்ளினாராம் தாரா.

அவர் கூறுகையில், "என்ன விளையாடறீங்களா.. மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு (!). இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இந்த பக்தர்களை ஏமாற்ற எப்படி நித்யானந்தனுக்கு மனசு வந்தது. இனி மனித உருவில் சாமிகள் என்று சொல்லும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த ரஞ்சிதா விவகாரத்தின் முழுப் பின்னணியையும் வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த மாதிரி போலிச் சாமியார்களை ஒழிக்க வேண்டும்...!" என்றார்.

தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா

ஆசிரமத்துக்குப் போவீர்களா என அவர் முன் மைக்கை டிவிக்காரர்கள் நீட்டியதுதான் தாமதம். கண்ணீரும் கோபமுமாக பொறிந்து தள்ளினாராம் தாரா.

அவர் கூறுகையில், "என்ன விளையாடறீங்களா.. மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு (!). இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இது என்ன கேள்வி,

சூடு கண்ட பூனை மீண்டும் அடுப்பங்கரை நாடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

எந்த ஆசிரமத்துக்கும் நான் இதுவரை போனதில்லை, சாமியார்களை நம்புவதுமில்லை... கடவுளை மட்டுமே நம்புவேன்'' என்று நடிகை திரிஷா கூறினார்.

thrisha.gifthrisha_3.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

திரிஷா போலை எல்லா நடிகைகளும் புத்திசாலிகளாக இருந்தால், ஒரு வில்லங்கமும் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ

சென்னை: நித்யானந்தா சாமியார்-ரஞ்சிதா லீலைகளை படம் பிடித்தவர் அவரது சீடராக இருந்த லெனின் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா தான் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த வீடியோவை கடந்த டிசம்பர் மாதம் எடுத்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த லெனின், சாமியாரின் உல்லாசங்கள் அடங்கிய சிடிக்களை அவர் கொடுத்தார். மேலும் சாமியாரால் ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த பல அந்தரங்கத் தகவல்களையும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 2006ம் ஆண்டு முதல் பெங்களூர் நித்யானந்தர் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தேன். ஆசிரமத்திற்கு வரும் அப்பாவி பெண்களை தான் கிருஷ்ணர் அவதாரம் என்று கூறிக் கொண்டும், அவர்களை கோபியர் என்று கூறிக் கொண்டும் நித்யானந்தா கட்டிப்பிடிப்பார்.

நடிகை ரஞ்சிதாவிடம் அவர் அடிக்கடி உல்லாசமாக இருப்பதை பார்த்தேன். அப்போது தான் நான் உள்பட எல்லா பக்தர்களும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றும் நித்யானந்தாவின் செயலை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் ரஞ்சிதாவிடம் உல்லாசமாக இருப்பதை படம் எடுத்தேன்.

இது எப்படியோ நித்யானந்தாவுக்குத் தெரிந்துவிட்டது. சேலம், சீரகப்பாடியில் புது ஆசிரமம் திறப்பு விழாவிற்கு வந்தபோது என்னை அவருடைய வேனுக்குள் அழைத்து, நீ ஆசிரமத்தில் படம் ஏதாவது எடுத்தாயா? என்று கேட்டு மிரட்டினார். உன்னை கொலை செய்து விடுவேன் என்று அவரும் அவருடன் இருந்த சீடர்களும் மிரட்டினர்.

அப்போது அவர்களிடமிருந்து சமயோஜிதமாக தப்பிவிட்டேன். எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து லெனினுக்கு போலீ்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவரது பெயர் முதலில் பிரேமானந்தா என்று கூறப்பட்டது. ஆனால், தனது பெயர் லெனி்ன் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா என்று போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம ஆத்தூரைச் சேர்ந்த இவர் நித்யானந்தாவுக்கு உதவியாளராகவும் டிரைவராகவும் சீடராகவும் இருந்தவர் ஆவார்.

ரஞ்சிதாவுடனான உல்லாசக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதையடுத்து இதை லெனின் தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று நித்யானந்தா தரப்பு புகார் [^] கூறியது நினைவுகூறத்தக்கது.

இந்த வீடியோவையே ரஞ்சிதா தான் தனது ஏற்பாட்டில் எடுத்ததாகவும் முதலில் கூறப்பட்டது. இது உண்மையா இல்லையா என்பது லெனினை முழுமையாக விசாரித்தால் தான் தெரியவரும்.

thatstamil.com

உறுப்பினர் பொறுப்பிலிருந்து ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்?

விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து கையும் களவுமாக சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடிகர் [^] சங்கம் நீக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்து மதத்தின் தீவிர நம்பிக்கையாளர்களையும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது நித்தியானந்தா- ரஞ்சிதாவின் லீலைகள் அடங்கிய வீடியோ.

இந்த சம்பவம் தொடர்பாக நித்தியானந்தாவை விட தற்போது ரஞ்சிதாதான் அதிகம் விமர்சிக்கப்பட ஆரம்பித்துள்ளார். காரணம், ரஞ்சிதாதான் நித்தியானந்தா மீது விழுந்து புரளுகிறார். அவரை டிவி கூட பார்க்க விடாமல் வேறு செயலுக்கு அழைப்பது போல காட்சிகள் உள்ளன.

ரஞ்சிதா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆவார். நாடோடித் தென்றலில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்துள்ளார்.

தனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த பின்னர் மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கினார். பாரதிராஜாவின் தெக்கித்திப் பொண்ணு தொடரில் நடித்து வந்தார். தற்போது மணிரத்தினத்தின் ராவணன் படத்திலும் நடித்து வந்தார்.

இந் நிலையில்தான் நித்தியானந்தாவுடன் சல்லாபம் செய்து சிக்கிக் கொண்டிருக்கிறார்.

முன்பு புவனேஸ்வரி விபச்சாரம் செய்து போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டபோது அது குறித்து செய்திகள் [^] வெளியிட்ட பத்திரிக்கை உலகம் மீது திரையுலகம் கடுமையாகப் பாய்ந்தது.

இன்னின்னார் விபச்சாரம் செய்கிறார்கள் என்று ரேட் வாரியாக ஒரு செய்தியை வெளியி்ட்ட நாளிதழ் மீது சட்டம் பாய்ந்து கைது வரை போய் நின்றது.

கூடவே, கூட்டத்தைக் கூட்டி கடுமையான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தங்களது கோபத்தையும் தீர்த்துக் கொண்டது நடிகர் சங்கம்.

ஆனால் இன்று ஒரு நடிகை விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து சிக்கியுள்ளார். இவர் மீது நடிகர் சங்கம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உறுப்பினர் பதவியிலிருந்து ரஞ்சிதாவை நீக்குவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தையாவது தெரிவிப்பார்களா என்றும் தெரியவில்லை.

thatstamil.com

உறுப்பினராகவே சேரவில்லை

பிறகெப்படி நீக்குவதாம்?

-ரஞ்சிதா விவகாரத்தில் நடிகர் சங்கம்

சாமியார் மேட்டரில் சிக்கிய ரஞ்சிதா இப்போது எங்கிருக்கிறார்? ஆளாளுக்கு ஒரு யூகத்தை கிளப்பிக் கொண்டிருக்க, நடிகைகளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசும் பல நடிகர்கள் கப்சிப் ஆகிவிட்டார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கம் ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்குமா? அவரை சங்கத்திலிருந்து நீக்குமா?

நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. "அவர் நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை. அப்படியிருக்கும் போது அவரை எப்படி நாங்கள் நீக்க முடியும்?" என்றார் சரத்.

இது ஒருபுறம் இருக்க, ராவணா படத்திலும் நடித்திருக்கிறார் ரஞ்சிதா. இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. அப்போது ஐந்து நாட்கள் முழுசாக அங்கே இருந்தாராம் ரஞ்சிதா. உடன் நடிக்கும் விக்ரமுக்கும் இவருக்கும் அந்த சில நாட்களுக்குள்ளாக ஒரு திடீர் கெமிஸ்ட்ரி ஏற்பட்டதாக கிசுகிசுக்கிறார்கள் யூனிட்டில். அந்த ஐந்து நாளும் இருவரும் இணைபிரியாமல் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

இப்படி ஆளாளுக்கு ரஞ்சி(த்) டிராபி விளையாடியதை பற்றிதான் காது வலிக்க பேசிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

Tamilcinema.com

Link to comment
Share on other sites

டிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ

உறுப்பினர் பொறுப்பிலிருந்து ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்?

விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து கையும் களவுமாக சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடிகர் [^] சங்கம் நீக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஞ்சிதா என்ன காசு வாங்கிக்கொண்டோ செஞ்சவர்? வெறும் மன சாந்திக்காகத் தானே செஞ்சவர்.. அதெப்படி விபச்சாரம் ஆகும்? :D

thrisha.gifthrisha_3.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

திரிஷா போலை எல்லா நடிகைகளும் புத்திசாலிகளாக இருந்தால், ஒரு வில்லங்கமும் வராது.

சாமிகள் வேண்டாம் எண்டால், அப்ப எங்களைமாதிரி ஆசாமிகளை ஆதரிப்பாராமா திரிசா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிகள் வேண்டாம் எண்டால், அப்ப எங்களைமாதிரி ஆசாமிகளை ஆதரிப்பாராமா திரிசா? :D

அதுக்கும் பொறுத்த இடத்திலை, மச்சம் இருக்க வேணும். :D

டிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ

சென்னை: நித்யானந்தா சாமியார்-ரஞ்சிதா லீலைகளை படம் பிடித்தவர் அவரது சீடராக இருந்த லெனின் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா தான் என்பது உறுதியாகியுள்ளது.

யாழ் களத்திலுள்ள கறுப்பனும், நித்தியானந்தரின் லீலைகளை வீடியோ எடுத்த கருப்பனும் ஒன்றா.....? :D:D

------

இந்த நிலையில் நடிகர் சங்கம் ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்குமா? அவரை சங்கத்திலிருந்து நீக்குமா?

இதுக்கு எல்லாம் ரஞ்சிதாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வெளிக்கிட்டால், நடிகர் சங்கத்திலை ஒரு ஈ, காக்காய் கூட மிஞ்சாது. ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

SwamijisFreeDarshanInTheMorning.jpgSwami_Paramahamsa_Nithyanandaswamiji_3.JPG1197643356_vedic_california.jpgSwamiji%20felicitates%20organizers.JPGKumbh_Mela_2007_USA.jpgWelcome.jpg101.jpgDSC_0130.JPG

எப்படி இருந்த நான், இப்படி ஆயீ............

nithyanandha_swami.jpg

.

Link to comment
Share on other sites

இதில வெள்ளைக் கள்வரும் சேர்ந்துள்ளார்கள், இவர்கள் தமது நாடுகளில் தேடப்படுபவர்களாகவிருக்கலாம்.

Link to comment
Share on other sites

அதுக்கும் பொறுத்த இடத்திலை, மச்சம் இருக்க வேணும். :blink:

இதுக்கு எல்லாம் ரஞ்சிதாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வெளிக்கிட்டால், நடிகர் சங்கத்திலை :unsure:

அவருக்கு மச்சம் இருக்குதோ யாருக்கு தெரியும்?

ரஞ்சிதாவை தடை செய்யும் நடிகர் சங்கத்தை நாம் பகிஷ்கரிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

ஒரு படத்தில் புத்தர் சிலையும் உள்ளது. சிங்களவன் கையாளாக மாறிவிட்டாரோ?

சிங்களவன் பெண்களை கொடுத்து வளைத்துப்போட்ட பண்டாரி, ... தீட்சித், ....., சிவசங்கர் மேனன், நாராயணன், ........ ,இந்து ராம், மணிசங்கர ஐயர், ......, தங்கபாலு, ......., அலோ பிரசாத், வரிசையில் நிதியானந்தாவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thrisha.gifthrisha_3.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

திரிஷா போலை எல்லா நடிகைகளும் புத்திசாலிகளாக இருந்தால், ஒரு வில்லங்கமும் வராது.

தான் சாமியார்களை நம்புவதில்லை என்றுதான் திரிஸா சொல்லியுள்ளாரே தவிர. அவர்களிடம் போவதில்லை என்று உறுதியாக சொல்லவில்லை. அரசியல்வாதிகளைவிடவும் அள்ளி கொடுப்பதில் சாமியார்கள் கர்ணன்கள் என்று நடிகைகளிடம் ஒரு பிசுபிசுப்பு எப்போதும் உண்டு. இதை நம்பி திரிசாவிடம் ஆண்கள் யாரும் ஏமாறாதுபோனாலே நன்று.

அதுக்கும் பொறுத்த இடத்திலை, மச்சம் இருக்க வேணும். :blink:

இதுக்கு எல்லாம் ரஞ்சிதாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வெளிக்கிட்டால், நடிகர் சங்கத்திலை ஒரு ஈ, காக்காய் கூட மிஞ்சாது. :unsure:

பிடிபட்ட கள்வர் பிடிபடாத கள்வர் என்று இரண்டாக பிரித்து வேண்டுமென்றால் நீக்கலாம்.

Link to comment
Share on other sites

ravisangar.jpg

ஈழத் தமிழரும் இதற்கு அடிமையா

புலத்தில முக்கிய பக்தர்களே ஈழத்தமிழர்தான் அதுவும் படித்த பட்டம் பெற்றவர்கள் அதிகம்

Link to comment
Share on other sites

ஜான்சிராணி நீங்கள் ஒரு கேள்வியை கேட்டு, சும்மா 5 பக்கங்களை தாண்டி ஓடுது. முள்ளிக்கால்வாய் பிரச்ச்னைக்கு பிறகு போற அடுத்த செய்தி இதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜான்சிராணி நீங்கள் ஒரு கேள்வியை கேட்டு, சும்மா 5 பக்கங்களை தாண்டி ஓடுது. முள்ளிக்கால்வாய் பிரச்ச்னைக்கு பிறகு போற அடுத்த செய்தி இதுதான்

அது சரி முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது ?

ர்ம்பா கலியாணம் கட்டினது,நித்தியானந்தா இதுகளைபற்றித்தான் இப்ப செய்தி பிரபல்யம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி' - நித்யானந்தாவுக்கு சிவசேனா புகழாரம்!!

சென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள்ளது.

பிரம்மச்சாரி என்று கூறியும், பிரம்மச்சரியம் காத்தால்தான், உடலை கருவியாக வைத்து நினைத்ததை அடைய முடியும் என்றும் போதனை செய்து ஆன்மீக உலகில் வலம் வந்த நித்யானந்தா, மறுபக்கம் நடிகை ரஞ்சிதாவுடன் காவி உடையில் காம லீலை நடத்தியது முழுமையாக அம்பலத்துக்கு வந்துவிட்டது.

அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது பக்தர்களில் பெரும்பாலானோர் நித்யானந்தாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சில இந்து அமைப்புகள் நித்யானந்தாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன. அதில் சிவசேனாவும் ஒன்று.

இந்த அமைப்பின் சார்பில் சென்னை முழுக்க நேற்றும் இன்றும் நித்யானந்தாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

நித்யானந்தா சாமியார் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும், இந்து மதத்தை வளர்க்கவும், இந்து இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் அயராது பாடுபட்ட இளம் ஞானி நித்யானந்தாவை களங்கப்படுத்துவதா? என்று அந்த போஸ்டர்களில் கேள்வி எழுப்பியுள்ளனர் சிவசேனா கட்சியினர்.

பாரதிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பும் இது போன்ற போஸ்டர்களை சென்னையில் ஒட்டியுள்ளது.

நித்யானந்த சாமியார் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று வெளிப்படையாகவே இந்த அமைப்பு வக்காலத்து வாங்கியுள்ளது.

போஸ்டர்களில் 9025971867, 9941760340, 9840124044, 9941918645, 9840185002 ஆகிய 5 செல்பேசி எண்களை வேறு கொடுத்துள்ளனர்.

--------

நித்தியானந்தா மீதான ஒரு வழக்கை மட்டும் தமிழக போலீஸே விசாரிக்கும்

சென்னை சாமியார் நித்தியானந்தா மீது தொடரப்பட்டுள்ள ஆறு வழக்குகளில் ஒன்றை மட்டும் தமிழக போலீஸே விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐந்தும் கர்நாடகத்திற்கு மாற்றப்படுகிறது.

நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலாக இருந்து சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீது தமிழக போலீஸார் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட ஆறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

குற்றங்கள் நடந்த இடம் கர்நாடக மாநிலத்திற்குள் இருப்பதால், வழக்குகளை மொத்தமாக கர்நாடகத்திற்கு மாற்றுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.

தற்போது இதில் சிறிய மாற்றம். ஒரு வழக்கை மட்டும் தமிழக போலீஸே விசாரிக்கவுள்ளதாம். நித்தியானந்தா, தனக்கு கொலை [^] மிரட்டல் [^] விடுத்ததாக அவரது சீடரும், சாமியாரின் லீலைகளைப் படம் பிடித்தவருமான லெனின் என்கிற நித்ய தர்மானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் [^] கொடுத்துள்ளார்.

இதையடுத்து கொலை மிரட்டல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்து அதை மட்டும் இங்கேயே விசாரிக்கவுள்ளனர்.

இதுதவிர மீதமுள்ள பாலியல் முறைகேடு, கூட்டுசதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 வழக்குகள் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்படும்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் வேலை பார்த்தவர்தான் இந்த நித்ய தர்மானந்தா என்ற லெனின். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர்.

-----

எனக்கு எதிராக பொய்ப் பிரசாரம்- ரீதியாக சந்திப்பேன்: நித்தியானந்தா

சென்னை: எனக்கு எதிராகவும், எனது தியான பீடத்திற்கு எதிராகவும் சிலர் விஷமத்தனமான, பொய்யான அவதூறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டவிரோதப் பிரசாரத்தை எதிர்கொண்டு அதை முறியடிப்பேன் என்று கூறியுள்ளார் சர்ச்சைக்குள்ளாகியுள்ள சுவாமி நித்தியானந்தா.

நடிகை ரஞ்சிதாவுடனான செக்ஸ் வீடியோ சர்ச்சையில் சிக்கிய பின்னர் நித்தியானந்தாவைக் காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

அவர் சார்பில் சென்னை [^]யில் வழக்கு [^] தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக வீடியோ ஒன்றின் மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் நித்தியானந்தா.

அது...

அன்பான பக்தர்களே. சமீப காலமாக எனக்கு எதிராகவும், எனது அமைப்புக்கு எதிராகவும் பல பொய்யான புகார் [^]கள் எழுந்துள்ளதை அறிவீர்கள்.

அதே நேரத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்து இ மெயில்கள் மூலமும், கடிதங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நலம் விரும்பிகள் உலகம் [^] முழுவதுமிருந்து அனுப்பி வருகின்றனர். அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனது போதனைகளால் பலன் பெற்றோர் பலரும் எனக்கு எதிரான புகார்களை நிராகரித்துள்ளனர்.

நான் தற்போது உங்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நானோ அல்லது எனது அமைப்போ சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. எங்களுக்கு சாதகமான ஆதாரங்களை நாங்கள் திரட்டி வருகிறோம்.

எனக்கும், எனது அமைப்புக்கும் எதிரான பொய்யான, உள்நோக்கத்துடன் கூடிய பிரசாரதத்தை எதிர்கொண்டு முறியடிப்போம்.

விரைவில் உரிய ஆதாரங்களுடன் எனக்கு எதிரான புகார்கள் பொய் என்பதை நிரூபிப்பேன். எனவே அதுவரை அனைவரும் பொறுமையுடன் காத்திருக்குமாறும், அவசரப்பட்டு எந்தத் தீர்ப்புக்கும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். அனைத்து உண்மைகளையும், ஆதாரங்களையும் நான் வெளியிட்ட பின்னர் விரிவாக, கவனமாக ஆராய்ந்து எந்த முடிவுக்கும் வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிக்கலான இந்த நேரத்தில், எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த, ஆதரவு அளித்து வரும் உலகம் எங்கும் உள்ள எனது பக்தர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

ரஞ்சிதா விவகாரத்தைத் தொடர்ந்து தலைமறைவான நித்தியானந்தா தற்போதுதான் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம், ரஞ்சிதா குறித்த விளக்கத்தை அவர் வெளியிடவில்லை. அதேபோல செக்ஸ் புகார்கள், பக்தை கொலை உள்ளிட்டவை குறித்தும் அவர் விளக்கம் தரவில்லை. விரைவில் அவர் விரிவான விளக்கத்தை அளிப்பார் என்று அவரது தியான பீட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----

சாமியார்களை கண்காணிக்க அறநிலையத் துறைக்கு தகுதியில்லை: ராமகோபலன்

மதுரை: சாமியார்களை கண்காணிக்க அறநிலையத் துறை மூலம் ஒரு குழுவை அரசு [^] அமைக்கும் நடவடிக்கையை கண்டிக்கிறோம் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டில் உள்ள சாமியார்களை கண்காணிக்க அறநிலையத் துறை மூலம் ஒரு குழுவை அரசு அமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. காரணம், குற்றமற்றவர்கள் தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும்.

ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியை தண்டிக்க முடியது. அப்படி நினைப்பதே வேடிக்கையானதாகும்.

அறநிலையத் துறையே குற்றவாளிகளின் கூடாரம் என்று பக்தர்கள் கருதுகிறார்கள். அப்படி இருக்க அறநிலையத் துறைக்கு அதிகாரம் கொடுத்து விட்டால் துறவிகளுக்கு 'லைசென்ஸ்' கொடுப்பதை ஏலம் விட்டு பணம் பார்த்து விடுவார்கள்.

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை, ஆச்சார்ய சபை போன்றவற்றிற்குத் தான் அந்த தகுதி உண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்.

thatstamil.com

Link to comment
Share on other sites

பாலியல் உறவுகளில் தாராள போக்குடையவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள் கூட, தமது நாட்டு தலைவர் ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் (கிளிண்டன் விவகாரம்).

பாலியல் சொர்க்கபுரியாக கருதப்படும் ரோம் மக்கள் ஒரு விலைமாதுவுடன் தமது பிரதமரின் பாலியல் தொடர்பை அவரது தனிப்பட்ட விவகாரமாக கருதவில்லை!

மேற்குலக கிறிஸ்தவர்கள் தமது போப்பாண்டவர், ஏன் சேர்ச் father / sister, பாலியல் உறவு வைத்திருப்பதை விரும்பப் போவதில்லை.

இருவர் விரும்பி பாலியல் தொடர்பு வைத்திருப்பதை எந்த சட்டமும் கண்டிக்கவில்லை என்றாலும், மேற்குலகிலேயே சட்டத்துக்கு அப்பற்பட்ட ஒன்றை மக்கள் மனதில் வைத்துள்ளார்கள். அதைத்தான், சமூக நியதி, தனிமனித நியதி அல்லது விழுமியங்கள் என்று அழைப்பார்கள்.

இது இப்பிடியிருக்க எம்மவர் சிலர், போலிச்சாமி நித்தியானந்த செய்தது தவறில்லை என்று வாதிடுவது, வாதிடுபவர்கள் மீது கீழ்த்தரமான தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாமா?

நித்தியானந்த செய்தது தவறில்லை என்றால் காவி கட்டாத கருணா செய்தது மட்டும் எப்படித் தவறாகும்?

எம்மவர் கீழ்த்தரமான தமிழ் சினிமா (சின்னத்திரை தொடர்கள்) உலகில் இருந்து விடுபடும்வரை, எமது விடிவு வெகு தூரத்தில் தான்.

காவி உடை தரித்த போலிச் சாமியார் நித்தியானந்தாவின் செயல்கள் வன்மையாக கண்டிக்கப்படல் வேண்டும். அவரைப் போன்ற ஏமாற்று பேர்வழிகள் சமூகத்திலிருந்து தூக்கி வீசப்படவேண்டியவர்.

Link to comment
Share on other sites

அது சரி முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது ?

ர்ம்பா கலியாணம் கட்டினது,நித்தியானந்தா இதுகளைபற்றித்தான் இப்ப செய்தி பிரபல்யம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேரளாவில் பெண் பக்தை வீட்டில் நித்தியானந்தா பதுங்கியதாக தகவல் - போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள இளம்பெண் பக்தை வீட்டில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர்.

நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்தியானந்தா படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சி வெளியானது. இதையடுத்து நித்தியானந்தாவுக்கு எதிராக பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி பல பகுதிகளில் போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நித்யானந்தா மீது பாலியல் வல்லுறவு, மோசடி உள்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படுக்கை அறை காட்சி வெளியானதை தொடர்ந்து நித்யானந்தாவு்ம், ரஞ்சிதாவும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை பெற்ற கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நித்யானந்தாவின் பக்தையாக இருந்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள நித்யானந்தரின் ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இவருக்கு சொந்தமான பங்களா ஒன்று கோழஞ்சேரியில் உள்ளது. அவ்வுப்போது கேரளா வரும் அந்த இளம்பெண் அந்த பங்களாவில் தங்கி விட்டு மீண்டும் அமெரிக்கா செல்வார்.

சமீபத்தில் அந்த பெண் நித்யானந்தாவை கோழஞ்சேரி அழைத்து வந்து அங்கு அவரது பெயரில் ஆசிரமம் ஓன்றை தொடங்கியுள்ளார். இதில் ஏராளமான பக்தர்களும் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள நித்யானந்தா கோழஞ்சேரியில் பதுங்கியிருப்பதாக கேரள தனிப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கோழஞ்சேரி பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

thatstamil.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.