Jump to content

'சிறிலங்காவை புறக்கணி' பரப்புரை சுற்றலாத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை: சுற்றுலா துறை இயக்குனர்


Aasaan

Recommended Posts

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 வீதம் அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர்.

பொதுவாகவே சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி மாதத்தில் 32 வீதம் அதிகரித்துள்ளதை புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

விடுதலைப் புலிகளுடனான போர் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் மேற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சீராக வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது.

எனவே போரையும் கணக்கில் கொள்ளாது தொடர்ந்து வந்து கொண்டிருந்த ரஸ்ய சுற்றுலாப் பயணிகளிலேயே சிறிலங்காவின் சுற்றுலாத் துறை தங்கி இருக்க வேண்டி வந்தது.

எது எப்படி இருந்தாலும், போர் முடிந்த பின்னர் வந்துள்ள முதல் குளிர் காலத்தில் சுற்றுலாத்துறை குறிப்பிட்டளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் சஞ்சிக பெரேரா. பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் உள்ள சிறிலங்காவின் சுற்றுலாச் சபையின் இயக்குநர் அவர்.

அண்மையில் நடந்து முடிந்த குடியரசு அதிபர் தேர்தல் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் பெரேரா சொன்னார்.

“சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகவே தமது பயணங்களை 4-5 மாதங்களுக்கு முன்பதாகத் திட்டமிட்டுப் பதிவு செய்து விடுவார்கள். எனவே நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை அவர்களது முடிவுகளில் பெரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்தாது. போரோ தாக்குதல்களோ நடக்கவில்லை என்பது தான் சுற்றுலாப் பயணிகளை நம்பிக்கையடன் ஊக்கப்படுத்துகிறது” என்கிறார் அவர்.

சிறிலங்காவின் அந்நியச் செலாவணி வருமானத்தில் குறிப்பிட்ட அளவு பகுதி சுற்றுலாத்துறை மூலமே கிடைக்கிறது.

பிரித்தானியாவின் கீத்ரோ மற்றும் கேட்விக் வானூர்தி நிலையங்களில் இருந்தே பெரும்பாலான பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள் என்பது பெரேரா தரும் தகவல்.

வெளிநாட்டுத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட 'சிறிலங்காவைப் புறக்கணி' பரப்புரை சுற்றலாப் பயணிகளின் வருகையில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சிறிலங்காவுக்கான பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பிரித்தானியாவின் வெளிவிவகாரத் துறை மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலகம் ஆகியன விடுத்த அறிவிப்புக்களே சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்திருப்பதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போர் காரணமாக யால தேசிய பூங்கா மற்றம் அறுகம் குடா பகுதிகள் முன்னர் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை செய்யப்பட்டிருந்தன. இப்போது அவை திறந்து விடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் இருந்தான சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்புக்கு மற்றொரு காரணம், பிரிட்டனில் வசிக்கும் சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களைப் பார்ப்பதற்குச் செல்வது என்கிறார் பாலா பத்மபாஸ்கரன். லண்டனில் உள்ள ‘ஸ்கைவிங்’ வான் பயண நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்.

இருப்பினும், சிறிலங்காவிற்குச் செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் எதனையும் தங்களால் அவதானிக்க முடியவில்லை என்று கூறுகிறார் தொம்சன். பிரித்தானியாவின் சுற்றுலாப் பயண ஒழுங்குபடுத்தல் நிறுவனம் ஒன்றின் அதிகாரி அவர்.

அதே சமயம் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு இருக்கின்றது என்றும் அவர் கூறுகின்றார்.

http://www.puthinappalakai.com/view.php?20100220100541

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.