Jump to content

இந்தியனும் பதில் அடி குடுத்துட்டான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441826.html

கோல்கட்டா: டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது நம்பர் - 1 இடத்தை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து 0-1 கணக்கில் பின்தங்கியது.

இந்நிலையில், கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே, முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில், 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில், பீட்டர்சன் மற்றும் ஆம்லா ஆகியோர் சதமடித்தனர். இந்திய தரப்பில், ஜாகீர்கான் 4 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடத் துவங்கிய இந்திய அணி, சச்சின், சேவக், லஷ்மணன் மற்றும் சேவக் ஆகியோரின் அபார சதத்தால், 6 விக்கெட் இழப்பிற்கு 643 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

347 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக தடைபட்ட நான்காம் நாள் ஆட்ட முடிவில், தென் ஆப்ரிக்க அணி, 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், போட்டியின் க‌டைசி நாளான இன்று (வியாழக்கிழமை), தென் ஆப்ரிக்க அணியின் விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் மடமடவென சரித்தனர். ஆம்லா மட்டும் சிறப்பாக விளையாடி, கடைசிவரை ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்தார். இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, தனது இரண்டாவது இன்னிங்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 290 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ‌டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது. முதல் போட்டியில் அடைந்த இன்னிங்ஸ் தோல்விக்கு பழி தீர்த்த இந்திய அணி, கிரிக்கெட் தரவரிசையில், தனது முதலிடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.