Jump to content

உழுந்து தோசை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

methosai.jpg

மொறு மொறுப்பான உழுந்து தோசை.

தேவையான பொருட்கள்.

இரண்டு சுண்டு உழுந்து.

இரண்டு சுண்டு வெள்ளை பச்சை அரிசி.

இரண்டு மேசைக்கரண்டி வெந்தயம்.

இரண்டு பெரிய வெங்காயம் அல்லது பன்னிரெண்டு சின்ன வெங்காயம்.

ஆறு கெட்டு கருவேப்பிலை.

வெண்ணெய் (Butter அல்லது Margarine)

ஆறு செத்தல் மிளகாய்

சிறிது உப்பு

கொஞ்சம் மஞ்சள் தூள்.

அப்பச்சோடாத் தூள் அல்லது ஈஸ்ட்

செய்முறை.

உழுந்தையும், அரிசியையும், வெந்தயத்தையும் ஒரு நீர் ஊற்றிய பாத்திரத்தில் 5 மணித்தியாலங்கள் ஊற விடவும்.

ஊறிய பொருட்களை கிறைண்டரில் பசை போல் அரைக்கவும்.

அரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் இட்டு அப்பச்சோடாவையும், மஞ்சள் தூளையும் கலந்து 10 மணித்தியாலம் மூடி வைக்கவும்.

புளித்த மாவில் சிறிதாக வெட்டிய வெங்காயம், செத்தல் மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை சிறிது தாளித்து கலக்கவும்.

கையோடு தேவையான உப்பையும் போட்டு மொறு மொறுப்பான தோசையை சுடவும்.

இதனை தேங்காய்ப்பூ சம்பல், பச்சை மிளகாய் சம்பல், சாம்பார் போன்றவற்றுடன் சாப்பிட நல்ல ருசியாக இருக்கும்.

http://www.youtube.com/watch?v=t7Hvm9e-ES4&feature=related

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அண்ணா.நீங்கள் கொண்டு வருகிற சமையல் செய்முறை எல்லாம்...5,10 மணிநேரம் ஊற விட்டு செய்யிற சாப்பாடாக இருக்கே ஏன்?ம்ம்ம்..தோசை திருப்பிக் கேட்டால் பூசை எண்டு வேற பாடல் போட்டு இருக்கிறயள்.நான் ஓடப்போகிறன்...நன்றி. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அண்ணா.நீங்கள் கொண்டு வருகிற சமையல் செய்முறை எல்லாம்...5,10 மணிநேரம் ஊற விட்டு செய்யிற சாப்பாடாக இருக்கே ஏன்?ம்ம்ம்..தோசை திருப்பிக் கேட்டால் பூசை எண்டு வேற பாடல் போட்டு இருக்கிறயள்.நான் ஓடப்போகிறன்...நன்றி. :lol::lol:

யாயினி தங்கச்சி, அடுத்த சமையல் குறிப்பு ஊற விடாமை ....... செய்கின்ற சமையல் தான். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி .....உழுந்து..... அரிசி எல்லாம் மாவாக் பக்கட் பண்ணி

விக்கிறார் களாம் வாங்கி செய்து பாருங்கோ....

Link to comment
Share on other sites

சில யாழ்ப்பாணத்து ஆட்கள் தோசைக்கு நெய் விடுகிறது. ஆரம்பத்தில எனக்கு வயித்தை பிரட்டினாலும், அதிலையும் ஒரு ருசி இருக்கிது எண்டு தொடர்ந்து சாப்பிட உணரக்கூடியதாய் இருந்திச்சிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை தேசிய உணவுகளிலை தோசையும் முக்கியம்.

அதிலையும்

எண்ணைத்தோசை.அதாவது தோசை சுடேக்கை நல்லண்ணையை விட்டு அந்தமாதிரி பிரட்டியெடுத்து......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீட்டில் மாதத்தில் இரண்டு தடவைகள் என்றாலும் தோசை கூடுவோம்.

தோசைக்கு செத்தல் மிழகாய் பொரித்து சம்பல் செய்து சாப்பிட நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

ஓம் தெரியுமே. நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்த சமயமும் தோசை ஊத்தி தாறதாய் சாப்பிடச் சொல்லி கேட்டீங்களே. வீட்டிலை குளிர்சாதனப் பெட்டியுக்கை எப்பவும் தோசை மாவு ஆயத்தமாய் இருக்குமோ ஈழப்பிரியன் அண்ணா. நல்ல காலம் மாவு ஆட்டுற வேலை உங்களுக்கு இல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசையை எல்லோரும் ருசித்து சாப்பிடுவதை பார்க்கத்தான் ஆசையா இருக்கு. எனக்கு மோறு மோறு எண்டு தோசை இருக்கனும். தொட்டுக்க ஒன்றுமே இல்லையே . ஐ மின் சம்பல் அல்லது துவையல்.

அது என்ன பாட்டில் அப்பாவுக்கு நாலு தோசை

அம்மாவுக்கு மூனறு தோசை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தோசை விருப்பம் ஆனால் யாராவது சுடச் சுடச் சுட்டு தந்தால் சாப்பிடுவேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தோசை சாப்பிட தொடங்கினால் நிப்பாட்டுவது கஸ்ரம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் :rolleyes::rolleyes:

எப்பிடியிருந்தாலும் தென்னோலை நெருப்பிலை தோசைக்கல்லை சூடாக்கி சுட்டதோசையின்ரை சுவையேதனி.

தம்பியர் உந்த தோசையெல்லாம் பாக்குறதுக்குத்தான் வடிவு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தோசை சாப்பிட தொடங்கினால் நிப்பாட்டுவது கஸ்ரம் :rolleyes:

ஓமோம் ஊரிலை உங்களை மாதிரி ஆக்களாலைதானே ஒருசில வீட்டிலை தோசை சுடூறதேயில்லை :rolleyes:

Link to comment
Share on other sites

எப்பிடியிருந்தாலும் தென்னோலை நெருப்பிலை தோசைக்கல்லை சூடாக்கி சுட்டதோசையின்ரை சுவையேதனி.

தம்பியர் உந்த தோசையெல்லாம் பாக்குறதுக்குத்தான் வடிவு :(

உண்மை தான் குமாரசாமி அண்ண, ஊரில அம்மம்மா சுட்ட தோசைக்கு நிகரான தோசை எவ்வளவு காசு குடுத்தாலும் வராது :rolleyes: காரணம் அதில ஒரு ingredient சேர்ந்து இருக்கும், அது தான் அன்பு. :(

ஓமோம் ஊரிலை உங்களை மாதிரி ஆக்களாலைதானே ஒருசில வீட்டிலை தோசை சுடூறதேயில்லை :(

சில வீடுகளில சனம் தோசைச் சட்டியை பழைய இரும்புக்கு போடுதுகள் என்று இப்ப தான் விளங்குது... :rolleyes::D

Link to comment
Share on other sites

சின்னனா இருக்கேக்கை அம்மா பூனைக்குட்டி தோசை முயல் குட்டி தோசை எண்டு சொல்லி சுட்டு தந்தது ஞாபகம் வருது.

dosai3.jpg

ஊரிலை தோசை சுடுறதுக்கு பொடுற உழுந்து, மா பொருள் அதாவது அரிசி மா/ அரிசி/ கோதுமை மா 1: 2 என்ற அளவில் இருந்தாலும், சில இடங்களில் மேலதிகமாக தேங்காய்ப் பூ, சோறு, போட்டு அரைப்பார்கள். சில இடங்களில் மஞ்சள் சேர்த்து அரைப்பார்கள். தோசை மஞ்சள் நிறமாக வரும்.

இஞ்சை தோசை சுடுவதென்றால், நான் அரிசி ஊறபோட்டு அரைக்கிறதில்லை.

1 சுண்டு உழுந்து எண்டா 1 சுண்டு அரிசி மா, 1 சுண்டு அவிச்ச கோதுமை மா சேர்க்கிற. சில நேரம் அரிசி மா வேண்ட இந்திய ( நான் இருக்கிற இடத்திலை தமிழ் கடையள் இல்லை, ஆனால் இந்திய கடையளிலை நிரு, நரேன் பிரண்ட் அரிசி மா கிடைக்கும்) கடைக்கு போக நேரமில்லாட்டி 1 சுண்டு அவிச்ச ரவையும், 1 சுண்டு அவிச்ச கோதுமை மாவும் சேர்க்கிற.

ஊரிலை மா புளிக்க பொதுவா ஒண்டும் சேர்க்க தேவையில்லை. இஞ்சை குளிருக்கு ஒழுங்க புளிக்காது/ அல்லது புளிக்க கன நேரம் எடுக்கும். அதிக்காக சிலர் மதுவம்/ ஈஸ்ட் சேர்க்கிறது.

தோசை மா புளிக்க மதுவமும் தேவை அதோட சில லக்டிக் அசிட் பக்ரீரியாவும் சேர்ந்து மாவை புளிக்க வைக்கிறதாலை தான் தோசைக்கு ஒரு தனி சுவை வாறது.

நான் அதுக்காக சிறிதளவு ஈஸ்டும், 2 மேசைக்கரண்டி சாதாரண/ சுவையூட்டாத யோகட்டும் சேர்த்து குழைச்சு வைக்கிறது. ஒரு 4 - 5 மணித்தியாலத்திலை தோசை சுட கூடிய அளவுக்கு தோசைமா புளிச்சிடும்.

dosai11.jpg

dosai21.jpg

dosai4.jpg

dosai5.jpg

dosai6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில யாழ்ப்பாணத்து ஆட்கள் தோசைக்கு நெய் விடுகிறது. ஆரம்பத்தில எனக்கு வயித்தை பிரட்டினாலும், அதிலையும் ஒரு ருசி இருக்கிது எண்டு தொடர்ந்து சாப்பிட உணரக்கூடியதாய் இருந்திச்சிது.

மச்சான், தோசை சாப்பிடும் போது முதலில் நெய் தோசை சாப்பிட்டால்..... வயிறு உடனே நிரம்பிய மாதிரி இருக்கும்.

நான் முதலில் நெய் விடாத தோசையை சாப்பிட்ட பின் , கடைசியாகத்தான் நெய் தோசையில் கை வைக்கிறது. :D

என்ரை தேசிய உணவுகளிலை தோசையும் முக்கியம்.

அதிலையும்

எண்ணைத்தோசை.அதாவது தோசை சுடேக்கை நல்லண்ணையை விட்டு அந்தமாதிரி பிரட்டியெடுத்து......

குமாரசாமி அண்ணை, நல்லெண்ணை விட்டு தோசை தோசை சுட்டால்...... அந்த றோட்டிலை உள்ள எல்லாருக்கும், தோசை சுட்ட விஷயம் தெரிஞ்சு போகும். :D

எமது வீட்டில் மாதத்தில் இரண்டு தடவைகள் என்றாலும் தோசை கூடுவோம்.

தோசைக்கு செத்தல் மிழகாய் பொரித்து சம்பல் செய்து சாப்பிட நன்றாக இருக்கும்

ஈழப்பிரியன், தோசைக்கு முக்கிய கூட்டாளியே....... பொரிச்ச செத்தல் மிளகாய் சம்பல் தான். சாம்பார் எல்லாம் இரண்டாவது தான். :D

தோசைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் :lol::D

The_Dosa_of_Life.jpg

குட்டி, இவ்வளவு பெரிய தோசையை காட்டி பயப்படுத்தி போட்டியள். இது சுட தோசைக்கல்லுக்கு எங்கை போறது.

ஒரு தோசை சாப்பிட்டால் வயிறு நிரம்பி விடும் போலை...... :D

தோசையை எல்லோரும் ருசித்து சாப்பிடுவதை பார்க்கத்தான் ஆசையா இருக்கு. எனக்கு மோறு மோறு எண்டு தோசை இருக்கனும். தொட்டுக்க ஒன்றுமே இல்லையே . ஐ மின் சம்பல் அல்லது துவையல்.

அது என்ன பாட்டில் அப்பாவுக்கு நாலு தோசை

அம்மாவுக்கு மூனறு தோசை

அப்பா..... கஷ்டப் பட்டு வேலை செய்வதால், அவருக்கு நாலு தோசை கறுப்பி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தோசை விருப்பம் ஆனால் யாராவது சுடச் சுடச் சுட்டு தந்தால் சாப்பிடுவேன் :D

உண்மை தான் ரதி, தோசை சாப்பிடும் போது சுட்ட சூட்டுடன் சாப்பிட்டால் அதன் சுவையே தனி,

அதனை பின் சூடாக்கி சாப்பிடும் போது..... அதன் சுவை குறைந்து விடும். :D

நான் தோசை சாப்பிட தொடங்கினால் நிப்பாட்டுவது கஸ்ரம் :D

சஜீவனும் என்னைப் போல, எனக்கும் தோசையை சாப்பிட ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம். :D

உண்மை தான் குமாரசாமி அண்ண, ஊரில அம்மம்மா சுட்ட தோசைக்கு நிகரான தோசை எவ்வளவு காசு குடுத்தாலும் வராது :lol: காரணம் அதில ஒரு ingredient சேர்ந்து இருக்கும், அது தான் அன்பு. :D

சில வீடுகளில சனம் தோசைச் சட்டியை பழைய இரும்புக்கு போடுதுகள் என்று இப்ப தான் விளங்குது... :D:D

பேரீச்சம்பழத்துக்கு தோசைக்கல்லு போகுது எண்டு சொல்லுறியள் குட்டி. (சாந்தி கவனிக்க.....) :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னனா இருக்கேக்கை அம்மா பூனைக்குட்டி தோசை முயல் குட்டி தோசை எண்டு சொல்லி சுட்டு தந்தது ஞாபகம் வருது.

dosai3.jpg

------

நான் அதுக்காக சிறிதளவு ஈஸ்டும், 2 மேசைக்கரண்டி சாதாரண/ சுவையூட்டாத யோகட்டும் சேர்த்து குழைச்சு வைக்கிறது. ஒரு 4 - 5 மணித்தியாலத்திலை தோசை சுட கூடிய அளவுக்கு தோசைமா புளிச்சிடும்.

குளக்காட்டான், இந்த முயல், பூனைக்குட்டி தோசையை அச்சில் போட்டு சுட்டீர்களா?

இப்படி சுடும் தோசைகளை சின்னப் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.

தோசை மா புளிப்பதற்கு தயிர் சேர்க்கும் புதிய முறையை அறியத் தந்தமைக்கு நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க இருக்கிற கூட்டத்தை நம்பி தோசைத் தர்பார் போடலாம் போல இருக்கு.... :lol:

போடலாம் ஆனால் கல்லா இருக்க கூடாது :D

Link to comment
Share on other sites

குளக்காட்டான், இந்த முயல், பூனைக்குட்டி தோசையை அச்சில் போட்டு சுட்டீர்களா?

இப்படி சுடும் தோசைகளை சின்னப் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.

தோசை மா புளிப்பதற்கு தயிர் சேர்க்கும் புதிய முறையை அறியத் தந்தமைக்கு நன்றி. :rolleyes:

அச்சு எல்லாம் வச்சு சுடேல்லை. கரண்டியாலை உருவம் வரகூடிய மாதிரி வாத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க தோசை சுடுறது தெரியாம போச்சு இன்று தான் பார்த்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.