Jump to content

முகத்தார் வீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான நாடகங்கள்.

 

 

அது  ஒரு கனாக்காலம்  எண்டுதான் சொல்லலாம். இப்பவெல்லாம்  இப்படி  பலர் இணைந்து  நகைச்சுவையோடை  ஒரு  சமூக  பிரச்னை கருத்தை எழுத  முடியுமா என்பது சந்தேகம்  அப்படி எழுதினாலும்.அதற்குள் ஒருவர் புகுந்து    அதனை திசை  திருப்பி வெட்டு குத்தாகி  திரியை பூட்டிவிட்ட பிறகு  ஒற்றுமை இல்லை   சிலர்  குழுசேர்கிறார்கள்  என்று பிரித்தவர்களே  ஒற்றுமை பற்றி எழுதிக்கொண்டிருப்பார்கள்.  முகத்தார்  சின்னா  இப்பவும் யாழ் படிக்கிறார்கள்  என்பது தெரியும் ஆனால் எழுதுவது இல்லை.அதே நேரம் நானும்  யாழை விட்டு  அன்னியமாகிக் கொண்டிருக்கிறேன் 

 

நீங்கள் அன்னியமாகும்  அளவு யாழில் உங்களுக்கு ஒன்றும் நடந்ததுபோல் தெரியவில்லையே சாத்திரி.
 

Link to comment
Share on other sites

  • Replies 428
  • Created
  • Last Reply

முகத்தார் வீடு பாகம் 9 வரை வாசித்தேன். மிகுதி பின்னர் வாசிக்கிறேன்.

 

முகத்தார் என்பவரும் சாத்து அண்ணாவும் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்கள். :) :) :) (ஒரு சில ஓவர் வசனங்களும் உள்ளன)

யார் இந்த முகத்தார்? நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். :)  offline - march 2009 என்று உள்ளது. அதன் பின்னர் ஏன் எழுதாமல் விட்டார்? :unsure:  சின்னப்பு என்ற பெயரில் உள்ளவரை இடைக்கிட யாழில் நான் கண்டிருக்கிறேன். இந்த கூட்டணி மீண்டும் சேராதா? :rolleyes:

 

சாத்திரி : முகத்தான் நீ குடுத்து வைச்ச ஆளடப்பா பொண்ணம்மா மாதிரி பெண்சாதி கிடைக்கிறதுக்கு . . .

முகத்தார் : (நான் போட்டு வைச்ச தேத்தண்ணியை கொண்டு வந்து குடுத்தவுடனை பொண்ணம்மா நல்லம் நான் குடுத்து வைச்சனான் யாரிட்டை சொல்லுறது) சாத்திரி இதெல்லாம் விதிப் பலன் . . . .

:lol: :lol:

 

 

பொண்ணம்மா: சின்னப்பு மனுசி வீட்டிலை இல்லாட்டி இஞ்சை நேரை வந்து சாப்பிட்டுப் போறதுதானே இண்டைக்கு சாப்பிட்டுட்டுப் போங்கோ என்ன. .

முகத்தார் : (அடிப்பாவி கூட்டிக்கொண்டு வந்ததுக்கு உள்ளுக்கை கத்திப் போட்டு இப்பிடிக் கதைக்கிறாளே ) எதாவது குடிக்கத் தாருமன்

இப்படி பலவற்றை நானும் பார்த்திருக்கிறேன். :lol: :lol:

 

முகத்தார் : தம்பி வணக்கம் என்ன படம் எடுக்கப் போறீயளாம்?
தல : அதுதான் வந்திருக்கிறம் படம் எடுக்க ஜடியா குடுத்திட்டு சாத்திரியார் இன்னும் கதையையே சொல்லேலை….
சாத்திரி : கதையா அது என்னத்துக்கு தமிழ் படத்துக்கு தேவையில்லையே அதை நான் பாத்துக் கொள்ளுறன். .

------------

------------
முகத்தார் : எனக்கெல்லாம் அப்பிடி ஆட ஏலாதடா. .
சாத்திரி : உன்னை ஆர் ஆடச் சொன்னது நீ சும்மா நில்லு நான் கமராவை ஆட்டுறன்


:lol: :lol:

 

முனியம்மா: இல்லையப்பா
பேன கிழைமை அந்த அறுபதாம் கலியபணத்துக்கு போட்டு வந்ததிலை இருந்து
எனக்கும் ஒரு ஆசை நானும் அறுபதாம் கலியாணம் செய்யலாமெண்டு
நினைச்சிருக்கிறன்

சாத்திரி: நான் ஒருத்தன் இருக்கிறன் இந்த வயசிலை இனி இன்னும் 59 பேரை எங்கை தேடிபிடிச்சு செய்ய போறாய்

:lol: :lol:

 

வந்தவர் : அம்மா நாங்க அகதிமுகாமுக்கு சாமான் சேர்க்கிறம் உங்களிட்டை நல்ல தேவையில்லாத பொருட்கள் இருந்தா தாங்கோவன்

பொண்ணம்மா: அப்பிடியெண்டா (யோசிக்கிறா) இந்தா இவரை கொண்டு போங்கோ

வந்தவர் : (அதிர்ச்சியாக) என்னம்மா இது நாங்களே அகதிகளுக்கு சாமான் சேக்கிறம் எங்களிட்டையே ஒரு அகதியைத் தரப் பாக்கிறீயள்

பொண்ணம்மா: இல்லைதம்பி திடீரெண்டு நீங்க கேட்டதிலை வாயிலை வந்திட்டுது நாளைக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்

:lol: :lol: :icon_idea:

 

பழணியாண்டி : மனுசிக்காரி சொல்லிறா குத்துவிளக்காட்டம் மருமகள் வரவேணும் எண்டு

முகத்தார் : ஏன் அப்பதான் திரி இழுத்து பத்த வைக்க லேசோ. . .

:lol: :lol:

 

பொண்ணம்மா : என்னப்பா ஏதோ கருகி மணக்கிது கதையெண்டா எல்லாத்தையும் மறந்திடுங்கோ

முகத்தான் : வெங்காயம் வெங்காயம்

பொண்ணம்மா : ஆரை வெங்காயம் எண்டுறியள் வரட்டே உங்கை

முகத்தான் : இல்லையப்பா பருப்புகறிக்கு வெங்காயம் தாழிக்கிறன் அதைதான் சொன்னனான்

சாத்திரி : நீயடாப்பா சரியான கில்லாடி சரி இப்ப என்ன செய்ய சொல்லுறாய்

:icon_mrgreen::D:lol:

 

முகத்தார் : என்ன திடீரெண்டு பணச்சடங்கு வைக்கிறார் என்ன விசயம்

பொண்ணம்மா : அவற்ரை 2 பிள்ளைகளும் வெளியிலைதானே இனி வீட்டிலையும் ஒரு விசயமும் வராது ஊருக்கை குடுத்த காசுகளை எப்படி எடுக்கிறது அதுதான்

:D :D :icon_idea:

Link to comment
Share on other sites

மிகுதிப்பகுதிகளை வாசித்து முடித்து விட்டேன். உண்மையில் சமூகத்தில் நடைபெறும் பல விடயங்களை நகைச்சுவையுடன் முன்வைத்துள்ளார்கள். :)  மிகவும் பாராட்டுதற்குரியது. :)  யார் அந்த முகத்தார் என்று தெரியவில்லை. ஆனால் அவரை ரொம்ப மிஸ் பண்ணுறன். :( :( :(

 

அது  ஒரு கனாக்காலம்  எண்டுதான் சொல்லலாம். இப்பவெல்லாம்  இப்படி  பலர் இணைந்து  நகைச்சுவையோடை  ஒரு  சமூக  பிரச்னை கருத்தை எழுத  முடியுமா என்பது சந்தேகம்  அப்படி எழுதினாலும்.அதற்குள் ஒருவர் புகுந்து    அதனை திசை  திருப்பி வெட்டு குத்தாகி  திரியை பூட்டிவிட்ட பிறகு  ஒற்றுமை இல்லை   சிலர்  குழுசேர்கிறார்கள்  என்று பிரித்தவர்களே  ஒற்றுமை பற்றி எழுதிக்கொண்டிருப்பார்கள்.  முகத்தார்  சின்னா  இப்பவும் யாழ் படிக்கிறார்கள்  என்பது தெரியும் ஆனால் எழுதுவது இல்லை.அதே நேரம் நானும் யாழை விட்டு  அன்னியமாகிக் கொண்டிருக்கிறேன் 


சாத்து அண்ணா, முகத்தார் என்பவரை மீண்டும் அழைக்க முடியாதா? அழைத்து பாருங்களன். சின்னப்பு என்பவரையும் வர சொல்லுங்கள். :(

இந்த திரியை நீங்கள் தொடரலாமே. அல்லது இப்படியொரு திரியை நீங்கள் ஆரம்பித்து எழுதலாம் தானே.  இன்றைய அரசியலை சேர்க்காமல் வேறு சமூக விடயங்கள் தொடர்பாக நகைச்சுவையாக எழுதுங்கள். திரி குழம்பாது. :rolleyes:

Link to comment
Share on other sites

அது  ஒரு கனாக்காலம்  எண்டுதான் சொல்லலாம். இப்பவெல்லாம்  இப்படி  பலர் இணைந்து  நகைச்சுவையோடை  ஒரு  சமூக  பிரச்னை கருத்தை எழுத  முடியுமா என்பது சந்தேகம்  அப்படி எழுதினாலும்.அதற்குள் ஒருவர் புகுந்து    அதனை திசை  திருப்பி வெட்டு குத்தாகி  திரியை பூட்டிவிட்ட பிறகு  ஒற்றுமை இல்லை   சிலர்  குழுசேர்கிறார்கள்  என்று பிரித்தவர்களே  ஒற்றுமை பற்றி எழுதிக்கொண்டிருப்பார்கள்.  முகத்தார்  சின்னா  இப்பவும் யாழ் படிக்கிறார்கள்  என்பது தெரியும் ஆனால் எழுதுவது இல்லை.அதே நேரம் நானும்  யாழை விட்டு  அன்னியமாகிக் கொண்டிருக்கிறேன் 

 

அது ஒரு கனகாலம் மட்டுமில்லை  முந்தி என்க்கு யாழில காலுக்கை ஒன்று கைக்கை ஒன்று என்று பிகர் எல்லாம் இருந்திச்சு இப்பா  பட்ப்பிடிப்பே இல்லாத  வடிவேலு போல் காஞ்சுபோய் இருக்கேன்,.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மகிந்த படுத்த கட்டிலில் தம்பி படுத்து எழுந்து வந்திட்டார். மற்றவர்களுக்கும் அந்த ஆசை வரும் தானே? (நான் ஜனாதிபதிக்கட்டிலை சொன்னேன் ராசா😜)
    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.