Jump to content

வரலாறு எழுதிய கதைகளில் வாழாது போயினர்.


Recommended Posts

மெல்ல மெல்லக் கசியும்

உண்மைகளிலிருந்து

நீண்ட பெருவெளிக் கனவு

தற்கொலை செய்து கொள்கிறது.....

முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து

சொட்டுச் சொட்டாய்

சேர்த்து வைத்தவையெல்லாம்

இரத்தம் குளி(டி)த்துப்

பெருத்து நாறிப் பிணங்களாய்

மனித எலும்புக் கூடுகளாய்

வெளிவருகிறது.

நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய்

விட்டுச் சென்ற வார்த்தைகளும்

ஆள்மாறி ஆள்மாறி

அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு

துயர் வலியில் தடயமறிவிக்காமல்

தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள்.

சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள்

சாவின் நிணம்மாறாத்

தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து....

யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று

ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால்

அவர்கள் உண்மை அடையாளம்

அழிக்கப்படுகிறார்கள்.

களம் விட்டால் அன்றி நிலமறியாப் பிள்ளைகளின்

நிலமை கவலை தருவதற்கும் மேலாய்

இக்காலத்தைச் சப்பித்துப்பிச் சபிக்கிறது.

இன்னொருவன் போராட

இன்னொருத்தி இறந்து போக

மிடுக்கோடு கவியெழுதிய கையில் - அவர்கள்

விட்டுச் சென்ற துயரம் வழிகிறது.

தோழியே என்றவன்(ள்) தொடர்பறுத்துத்

தொலைந்ததும்....

தங்கையே என்றவன் தன் கடைசிச் சிரிப்பை மட்டும்

தந்துவிட்டுச் சென்றதும்....

அக்கா என்றவன் அசுமாத்தமின்றிப் போனதும்....

மகளே என்றவர் மவுனமாய் ஆனதும்....

மருமகளே என்றவர் மண்ணணையில் வீழ்ந்ததும்.....

எல்லாம் போயிற்று

எல்லார் உயிரும் என்னைப் போல

இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்

வாழாது போயினர்.....?

வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்

பெயரிட்ட பிள்ளைகளும்

துணைவந்த துணைவிகளும்

தனித்துப் போயினர்......

ஒரு நேர உணவிற்கும்

ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்

எவரையெல்லாமோ இறைஞ்சி....

எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான

இயலாத் துயரோடு

இன்னும் நம்புகிறார்கள்....

என்னை உன்னை எம் எல்லோரையும்......

01.01.2010

Link to comment
Share on other sites

"ஒரு நேர உணவிற்கும்

ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்

எவரையெல்லாமோ இறைஞ்சி....

எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான

இயலாத் துயரோடு

இன்னும் நம்புகிறார்கள்....

என்னை உன்னை எம் எல்லோரையும்"

இதைத்தான் என்னால் இன்னமும் நம்பமுடியாமல் இருக்கின்றது.குழப்பம் நிறைந்த" மே" யும், அடுத்த "யூன்"இயும் விடுவம்.அதன் பின் நாம் முதலில் செய்திருக்கவேண்டியது என்ன,உலகம் முழுக்க பெரும் பணத்துடன் வியாபித்திருந்த இந்த அமைப்பு உங்களை நம்பிவந்த போராளிகளையும்,பொது மக்களையும் எப்படியாவது வெளியில் எடுப்பதற்கு ஒரு பொது வேலைதிட்டத்துடன் உலகம் முழுக்க இறங்கியிருக்க வேண்டும்.அதைவிட்டு இரத்தம் இன்னமும் காயவில்லை,பலருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை,அதற்கிடையில் அங்கு எதுவுமே நடக்காத மாதிரியும்,எங்களுக்கும் அவர்களுக்கும் எதுவித சம்பந்தமே இல்லாத மாதிரியும் "வட்டுக்கோட்டை தீர்மானம்" "நாடு கடந்த தமிழீழம்" என்று இறங்கிவிட்டார்கள். அதற்கு புலம் பெயர்ந்தவர்களிடமும்,இளையவர்களிடமும் போராட்டத்தை தலைவர் கொடுக்க சொன்னவர் என்ற நொண்டிச் சாட்டு வேறு.

"கனடியர்கள் என்ன நினைகின்றார்கள்"என்று மச்சான் ஒரு இணைப்பு இணைத்திருந்தார்.எத்தனை பேர் வாசித்தார்கள்,பதில் எழுதினார்கள்.அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்று எவருக்கும் அக்கறையில்லை.எல்லாம் படித்த பெடியங்கள் பலரின் குடும்பங்கள் அவர்களை நம்பித்தான் இருந்தன.

வானொலியிலும்,டீ.வீ யிலும் வந்து ஏதேதோ கதைக்கின்றார்கள்.

கடைசி ஒட்டுக்குழுக்களாவது அவர்களைப் பற்றி அக்கறைபடுகின்றார்களே என்று ஆறுதல் பட வேண்டியதுதான்.

நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

கொடுந் துயரை வெளிப்படுத்தும் உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்

இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிறையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களை விடுவிக்கும் நிபந்தனையை பிரதானமாக முன்வைத்திருக்கவேண்டும். இதைவிட தற்போதைய அத்தியாவசியம் என்ன இருக்கின்றது. இவ்வளவு அழிவுகளும் அரங்கேறியபின் இந்தியாவுக்கு திரும்ப நக்கப் போயிருக்கின்றார்கள். இவர்களை விட்டால் டக்ளஸ் சங்கரி போன்றதொரு கூட்டம். தமிழ்நாட்டு அரசியலோடு ஒப்பிடுகையில் எமது நிலமை அதைவிட பன்மடங்கு அருவருக்கத் தக்கதாக உள்ளது.

புலத்தேசியத்தின் ஆதரவு தமிழீழம் என்ற பின்னணி அடயாளத்தை நோக்கியது. அது நிறைவேறாது என்ற நிலை வந்ததும் தாயக மக்களின் விருப்புவெறுப்புகளை கடந்து வேறு வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. மக்களின் அவலங்களோ மனிதஉரிமைக்கான குரல்களோ சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது தொடர்பான முனைப்புகள் எதுவுமற்று அதன் தேவை என்னவோ அதைநோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை தோண்டி எடுத்து இவ்வளவு பூராயம் புடுங்கும் புலத்தேசியம் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் போராடி சிறைப்பட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான பிள்ளைகளை விடுவிப்பது தொடர்பாக ஏதாவது முயற்ச்சித்துள்ளதா?

இயலாத் துயரோடு

இன்னும் நம்புகிறார்கள்....

என்னை உன்னை எம் எல்லோரையும்......

மன்னிக்கவேண்டும் நாம் தமிழீழத்தை நம்புகின்றோம். உங்கள் நம்பிக்கைகளுக்கு செவிசாய்க்க நேரமில்லை. போரில் இதெல்லாம் சகஜம்.

கடைசி ஒட்டுக்குழுக்களாவது அவர்களைப் பற்றி அக்கறைபடுகின்றார்களே என்று ஆறுதல் பட வேண்டியதுதான்.

நிச்சயமாக.. அவலப்படும் மக்கள் இனி டக்ளஸ் பிள்ளையான் கருணா போன்றவர்களை நம்புவதை விட வேறு ஒரு மார்க்கமும் இல்லை.

Link to comment
Share on other sites

சாந்தி,

சிறையில் இருக்கும் போராளிகள் பற்றி இன்னமும் நினைத்துகொண்டு கவிதை வடிக்க உங்களுக்கு என்ன விசரா?

இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிறையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களை விடுவிக்கும் நிபந்தனையை பிரதானமாக முன்வைத்திருக்கவேண்டும். இதைவிட தற்போதைய அத்தியாவசியம் என்ன இருக்கின்றது. இவ்வளவு அழிவுகளும் அரங்கேறியபின் இந்தியாவுக்கு திரும்ப நக்கப் போயிருக்கின்றார்கள். இவர்களை விட்டால் டக்ளஸ் சங்கரி போன்றதொரு கூட்டம். தமிழ்நாட்டு அரசியலோடு ஒப்பிடுகையில் எமது நிலமை அதைவிட பன்மடங்கு அருவருக்கத் தக்கதாக உள்ளது.

என்ன சுகன் இப்படிச் பகிடி விடுகின்றீகள்.... த.தே.கூ இனதும், சம்பந்தர் ஐயா வினதும் அரசியல் சாணக்கியம், எதிரியை அகற்ற இன்னொரு எதிரியை கொண்டு வரும் தந்திரம், சிங்கள் பேரினவாத அரசியலமைப்பை போற்றும் ஆழ்ந்த ஞானம் என்பனவெல்லாம் புரியாமல் இப்படிச் சொல்கின்றீர்களே... இப்படியான நுண்ணறிவு இருப்பவர்கள் எப்படி சிறையில் இருக்கும் கேடு கெட்ட எமக்காக போராடப் புறப்பட்ட போராளிகள் பற்றிச் சிந்திக்க முடியும்...

அப்படி நீங்கள் சொல்லும் விடயத்தை முன்வைத்தால் பிறகு மகிந்த ஐயா அதனையே சிங்கள மக்கள் முன் கொண்டு சென்று இனவாத முலாம் பூசி சரத்துக்கு தோல்வியை ஏற்படுத்தித் தந்துவிடுவார் என்று சொல்லிச் சமாளிக்கக் கூட எம் இனத்தில் பலர் உண்டு தெரியுமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நுண்ணறிவு இருப்பவர்கள் எப்படி சிறையில் இருக்கும் கேடு கெட்ட எமக்காக போராடப் புறப்பட்ட போராளிகள் பற்றிச் சிந்திக்க முடியும்...

தற்போதய நிலையில் சிறையிலுருப்பவர்களிடம்.......???

போய்க்கேட்டாலும்

மூச்சுவிட உதவுங்கள் என்ற பதில்தான் வரும்

வரலாற்றுக்கதை

தமிழீழம் கூட அதற்கு பிறகுதான் நண்பர்களே......

Link to comment
Share on other sites

நாம் முதலில் செய்திருக்கவேண்டியது என்ன,உலகம் முழுக்க பெரும் பணத்துடன் வியாபித்திருந்த இந்த அமைப்பு உங்களை நம்பிவந்த போராளிகளையும்,பொது மக்களையும் எப்படியாவது வெளியில் எடுப்பதற்கு ஒரு பொது வேலைதிட்டத்துடன் உலகம் முழுக்க இறங்கியிருக்க வேண்டும்.அதைவிட்டு இரத்தம் இன்னமும் காயவில்லை,பலருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை,அதற்கிடையில் அங்கு எதுவுமே நடக்காத மாதிரியும்,எங்களுக்கும் அவர்களுக்கும் எதுவித சம்பந்தமே இல்லாத மாதிரியும் "வட்டுக்கோட்டை தீர்மானம்" "நாடு கடந்த தமிழீழம்" என்று இறங்கிவிட்டார்கள். அதற்கு புலம் பெயர்ந்தவர்களிடமும்,இளையவர்களிடமும் போராட்டத்தை தலைவர் கொடுக்க சொன்னவர் என்ற நொண்டிச் சாட்டு வேறு.

அவசியமாகச் செய்ய வேண்டியவற்றுக்கு முக்கியம் கொடுக்காமல் கதையளப்பதுதான் பெரும்பணியென்ற மனநிலை இருந்திருந்தால் மே 18வரை காட்டிய உலகத்தை எழுப்பிய வீச்சை தொடர்ந்து மேற்கொண்டிப்போம். *ஆண்டிகள் போக மடமும் கலைஞ்சுது* (27வருடங்கள் முதல் பாட்டா சொல்வதுதான் ஞாபகம் வருகிறது) இதுபோல் நீங்கள் கருத்துச் சொன்னா துரோகம் நண்பரே :(

புலம் பெயர்ந்தவர்களிடமும்,இளையவர்களிடமும் போராட்டத்தை தலைவர் கொடுக்க சொன்னவர் என்ற நொண்டிச் சாட்டு வேறு.

கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியே இருக்கிற மிச்சத்தையும் சுடலைக்கு அனுப்புவதில்தானே உள்வீட்டு அரசியல் நிலமை இருக்கிறது arjun.

இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிறையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களை விடுவிக்கும் நிபந்தனையை பிரதானமாக முன்வைத்திருக்கவேண்டும். இதைவிட தற்போதைய அத்தியாவசியம் என்ன இருக்கின்றது. இவ்வளவு அழிவுகளும் அரங்கேறியபின் இந்தியாவுக்கு திரும்ப நக்கப் போயிருக்கின்றார்கள். இவர்களை விட்டால் டக்ளஸ் சங்கரி போன்றதொரு கூட்டம். தமிழ்நாட்டு அரசியலோடு ஒப்பிடுகையில் எமது நிலமை அதைவிட பன்மடங்கு அருவருக்கத் தக்கதாக உள்ளது.

கூட்டமைப்பு பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. அடுத்த பொதுத்தேர்தலில் எத்தனை ஆசனங்களைக் கவ்வுவது என்ற கணக்கில் அவர்கள் எதையும் தாங்கும் இதயமாக இத்தேர்தலில் மதில்மேல் ஏறிக்குந்தியிருக்கிறார்கள். பாச்சலா அல்லது எதுவென்பது 26இன் பின்தான் வெளிச்சம்.

புலத்தேசியத்தின் ஆதரவு தமிழீழம் என்ற பின்னணி அடயாளத்தை நோக்கியது. அது நிறைவேறாது என்ற நிலை வந்ததும் தாயக மக்களின் விருப்புவெறுப்புகளை கடந்து வேறு வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. மக்களின் அவலங்களோ மனிதஉரிமைக்கான குரல்களோ சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது தொடர்பான முனைப்புகள் எதுவுமற்று அதன் தேவை என்னவோ அதைநோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டது.

தாயக மக்களின் குரல் மறுக்கப்படுகையில் அதை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் புலத்தாராக இருக்க பயணங்களின் நகர்வு தன்னியல்புக்கு ஏற்ப ஆரம்பித்துள்ளது.

உள்ளிருப்போர் வெளிவரவும் கூடாது செத்துப்போனவர்கள் கனவு செத்துக்கிடக்க உண்டியல்கள் நிரப்பி சுதந்திர தமிழீழக்கனவை ஏந்தி நிற்கும் கனவான்களின் கைகளில் கைதான உயிர்களின் கதையிருக்கிறது.

சொன்னால் கசக்கும் கனபேரைக் கலக்கும் உண்மை இதுதான்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை தோண்டி எடுத்து இவ்வளவு பூராயம் புடுங்கும் புலத்தேசியம் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் போராடி சிறைப்பட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான பிள்ளைகளை விடுவிப்பது தொடர்பாக ஏதாவது முயற்ச்சித்துள்ளதா?

வட்டக்கோட்டை சதுரக்கோட்டைக் கனவில் எஞ்சிய கோவணத்துண்டையும் கொள்ளை கொடுப்பதில் நமக்கு நிகர் யாருளர்? சிறையில் உள்ளோரை மானத்தின் மகுடம் வீரத்தின் அடையாளம் என்று வரிக்கவிதையிலும் வாயிலும் சொன்னால் போதும்தானே. அதுவே அவர்களை விடுவிக்கும் வீரமந்திரமல்லவா சுகன். சிறைகளில் இருப்போரின் குடும்பங்களில் பலர் தற்கொலைக்குத் தயாராக நிற்கிறார்கள். அவர்களுக்கான ஒரு ஒளியைக்காட்ட ஒரு வழியையும் காட்டாமல் வீராப்பில் குறைவில்லாத வீரம் நிறைந்த நமது வீரத்தை என்ன நினைத்தீர்கள்?

மன்னிக்கவேண்டும் நாம் தமிழீழத்தை நம்புகின்றோம். உங்கள் நம்பிக்கைகளுக்கு செவிசாய்க்க நேரமில்லை. போரில் இதெல்லாம் சகஜம்.

நம்பிக்கையில்லாமல் வெற்றியில்லை. ஆனால் நம்பியவர்கள் சாகக்கிடக்கிறார்கள். செவிசாய்க்க வேண்டாம் மூடிக்கொண்டிருந்தாலே கோடிபுண்ணியம்.

ஓம் போரில் சகஜம் - போர்க்களத்தின் கொடுமையும் போர்க்காலத் துயரமும் புகாத இடங்களில் இருந்து போராடுதல் அதைவிட சகஜமல்லவா. :)

சாந்தி,

சிறையில் இருக்கும் போராளிகள் பற்றி இன்னமும் நினைத்துகொண்டு கவிதை வடிக்க உங்களுக்கு என்ன விசரா?

என்ன செய்வது நிழலி விசர்பிடிக்கும் வரையிலுமாகிலும் விசராய் எழுதுவோம்.

தற்போதய நிலையில் சிறையிலுருப்பவர்களிடம்.......???

போய்க்கேட்டாலும்

மூச்சுவிட உதவுங்கள் என்ற பதில்தான் வரும்

வரலாற்றுக்கதை

தமிழீழம் கூட அதற்கு பிறகுதான் நண்பர்களே......

யதார்த்தமாக இம்முறை கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள் விசுகு. நாயை கனவைக்காட்டிலும் இன்றைய வாழ்வு மீதான நம்பிக்கைதான் அவசியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனசுநிறைய பாரங்களை ஏத்திவைத்த கவிதை.

நன்டறாக இருக்கிறது.

எல்லோரும் நா.க.அரசு,வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று தேர்தல்கால கூட்டுவைத்து தொலைக்காட்சியில் தோன்றி

பாவ்லா காட்டுபவர்களுக்கு நடுவில் சிறையில் இருப்பவர்களையும் சிந்தித்து கவிதை எழுதும் உங்கள் கருத்துக்கள் அருமை.

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி சாந்தி, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரில்லாமல் கெடும் என்ற திருக்குறள்தான் ஞாபகம் வருகிறது. வெல்ல வேண்டுமெற நல் நோக்கத்துடன் இடித்தாரை எல்லாம் துரோகி என்று போட்டுத்தள்ளியாயிற்று. வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்து ஈழத்தவருக்கு மருத்துவப்பணி புரிந்தபடி ஐ.பி.கே.எப்பின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய அந்தப் பெண் இடிபாரின் இறுதிக்குரல்கள் இப்பவும் என்காதில் ஒலிக்கிறது.

உங்கள் முகாம் பற்றிய குறுநாவல் புத்தகமாக வெளிவருவது நல்லது. உங்கள் குறு நாவல்களைப் பதிப்பிக்கும் ஆர்வம் இருப்பின் உதவ முடியும்.

Link to comment
Share on other sites

மனசுநிறைய பாரங்களை ஏத்திவைத்த கவிதை.

இப்போதெல்லாம் பாரங்களை நினைவு கொள்ளத்தான் முடிகிறது four four bravo. தீர்மானங்களை மீண்டும் தீர்மானித்தலே தமிழின விடியெல் என்ற கனவுகள் நடுவில் நின்று என்னத்தை செய்வோம்.

Link to comment
Share on other sites

வணக்கம் பொயட்,

நல்நோக்கங்கள் சரியாக சென்றடையாமை அல்லது செல்ல விடாது தடுப்பாக நின்றவையும் நின்றவர்களும் இன்று எங்கென்றே தெரியாதுள்ளது. எதையும் கேட்கவோ அல்லது திருந்தவோ யாருமில்லை. ஆளாளுக்கு அறிக்கைகளால் சுதந்திரதமிழீழதாயகத்தை கனவில் மட்டும் காணும் நிலைதான் உண்மையான நிலையாகவுள்ளது. நாவல் புத்தகமாக்கும் எண்ணமுள்ளது. பலதரம் ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் செழுமைப்படுத்திக் கொண்டு வரவேண்டும். தங்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.