Jump to content

சிந்தித்துப் பாருங்கள்.. எத்தனை திரைப்படங்களுக்குச் சென்று, திரையரங்குகளில் இருபது, முப்பது டாலர்களை வீண்விரயம் செய்துவிட்டு விசர்ப்படம் என்று சொல்லி அலுத்து இருப்பீர்கள்..!


Recommended Posts

1999 பிந்திய செய்தி:

தகவல் மூலம்: மின்னஞ்சல்

+++

இனிய வணக்கங்கள் லெனின், நீங்கள் உங்கள் குழுவினருடன் சேர்ந்து கனடாவில் உருவாக்கிய ஓர் அழகிய படமாகிய 1999ஐ பார்த்த பூரிப்புடன், முதலில் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 1999 படம் உருவாக காரணமாக அமைந்த கலைஞர்களுக்கும், 1999 திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்து ஊக்கம் கொடுத்த மக்களிற்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் கூறி உரையாடலை ஆரம்பிக்கின்றேன்.

கலைஞன்:நம்மவர் படைப்புக்களிற்கு அதிகளவு ஊக்கம் தராத, நம்மவர் படைப்புக்களை பெரிதாக கண்டுகொள்ளாத - முக்கியமாக நம்மவர் படைப்புக்களிற்கு பொருளாதார ஆதரவு தருவதற்கு பின்நிற்கும் ஓர் மக்கள் கூட்டத்தை நம்பி 1999 படத்தை எடுப்பதற்கு உங்களுக்கு எப்படி துணிவு, உத்வேகம் வந்தது?

லெனின்: ஒரு கலைஞனாக நான் சிறந்த ஒரு திரைப்படத்தை வழங்காமல் எமது மக்கள் ஆதரவு தரவில்லை என்று வருந்திக்கொண்டு இருப்பது சரியல்ல. கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கு மேலாகத் தொன்னிந்தியத் திரைப்படங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் எமது மக்களின் முழமையான ஆதரவு திடீரெனக் கிடைக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. எமது கதைகளைக் கொண்ட தரமான திரைப்படங்களை மக்கள் நிச்சயமாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அத்தோடு எவ்வளவுதான் சிறந்த கலைஞர்களாக இருந்தாலும் வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு சூழலில் வாழ்பவர்களால் உருவாக்கப்படும் தயாரிப்புகளைவிட, எமது கலைஞர்களால் - எமக்குள் நடைபெறும் நிகழ்வுகள் மிகவும் இயல்பாக வெளிக்கொண்டுவரப்படும்போது, அத் திரைப்படம் நிச்சயமாக மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிப்போகும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதைவிட 1999இல் சொல்லப்படுகின்ற கதை மக்களைச் சென்றடையவேண்டும் என்று விரும்பினேன். மக்களின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நல்ல ஒரு கதைக்கு உயிர்கொடுத்தேன் என்ற திருப்தியாவது மிஞ்சும் என்ற நோக்கத்தில்தான் இத்திரைப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன்.

director.jpg

கலைஞன்: 1999 திரைப்படத்தை படைப்பதற்கு முன்னர் உங்களுக்கு இருந்த கலை அனுபவங்கள் எவை? இதற்கு முன்னதாக நீங்கள் பங்குகொண்ட கலைப்படைப்புக்கள் எவை? ஓர் திரைப்படத்தை உருவாக்குவதற்கு தேவையான சகல திறமைகளும், ஆற்றல்களும், தகுதிகளும் உங்களுக்கு இருப்பதை எப்படி உறுதி செய்துகொண்டீர்கள்?

லெனின்: 1999 திரைப்படத்திற்கு முன்பு இனியவர்கள், உறுதி, பக்கத்திவீடு என்ற மூன்று குறுந் திரைப்படங்களை உருவாக்கியுள்ளேன். அவைதான் எனது முந்தைய கலை படைப்புக்களும், கலை அனுபவங்களும். எனக்கு ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கான திறமைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால், திரைப்படங்களின் மேல் இருந்த அளவுகடந்தஆர்வம், மற்றும் எனது தந்தையின் கலைப்பற்று போன்றவையே என்னையும் எப்படியாவது இதில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் உருவாக்கியது என்று நினைக்கிறேன்.

கலைஞன்: நீங்கள் உங்களினுள்ளே தோன்றிய எண்ணத்தை செயல்வடிவம் கொடுப்பதற்கு தீர்மானித்தபோது யார் யாரெல்லாம் உங்களுக்கு தோளோடு தோளாக உறுதுணையாக நின்றார்கள்? 1999 திரைப்படத்தை எடுப்பது என்று - அதற்கு செயல்வடிவம் கொடுக்க முயன்றபோது எப்படியான சவால்களை எதிர்கொண்டீர்கள்? திரைப்படத்தை உருவாக்கியபோது நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் எவை? ஏதாவது ஓர் கட்டத்தில் திரைப்படத்தை கைவிடவேண்டும் போன்ற எண்ணம் உங்களுக்கு தோன்றியதா? உங்கள் மனதில் ஏதாவது ஓர் கணத்தில் எதிர்மறையான எண்ணங்கள் குடியிருந்து இருக்கும் பட்டசத்தில் அவற்றை எவ்வாறு முகம்கொடுத்து வெற்றி கொண்டீர்கள்?

லெனின்: முதலில் எனது எண்ணத்தை எனது சில நண்பர்களிடம் தெரிவித்தேன், அவர்களும் தமது ஒத்துழைப்பு இப்படத்திற்கு இருக்கும் என்றும் என்னை இதில் இறங்கும்படியும் பணித்தார்கள். பின்பு, பலரின் ஒத்துழைப்புடன் திரைக்கதையை எழுதி முடித்தேன். அதன்பின்பு தயாரிப்பாளரை தேடினேன், எவரும் முன்வரவில்லை. நானே தயாரிக்க தீர்மானித்தேன். பின்பு அதிர்ஸ்டவசமாக சபேசன் அவர்களை சந்தித்தேன், அவரும் கதையை கேட்டபின் என்னைப்போலவே இந்த கதை எமது மக்களை சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். பின்பு, நடிகர்களை தேர்வுசெய்தோம். படப்பிடிப்பை 2008 மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்தோம்.

திரைக்கதையை எழுதும் போது மட்டுமே எந்த ஒரு பிரச்சனையையும் நான் சந்திக்கவில்லை. மற்றைய ஒவொரு கட்டத்திலும் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொருகட்டத்திலும் எதாவது பிரச்சனைகள் வந்த வண்ணமே இருந்தன. பொருளாதார பிரச்சனைகளை விட எமது சில கலைஞர்களின் பழக்க வழக்கங்களால் வந்த பிரச்சனைகளே அதிகம். படம் எடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விடயம், அதிலும் ஒரு திரைப்பட துறையில்லாமல் தரமான படத்தை எடுப்பது என்பது மிகவும் கடினமான விடயம். இதற்கு 1999 ஒரு விதிவிலக்கல்ல. சொல்லப்படும் கதை எனது மனதை ஆழமாக பாதித்திருந்ததால் என்னால் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருந்தது.

1999_Still3.jpg

கலைஞன்: 1999 திரைப்படத்தில் பங்குகொண்ட கலைஞர்களை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்? எதிர்காலத்தில் நீங்கள் படைக்கக்கூடிய கலைப்படைப்புக்களில் பங்கேற்க விரும்புகின்ற கலைஞர்கள் எப்படி உங்களுடன் இணைந்துகொள்ள முடியும்? உங்கள் படைப்புக்களில் பங்கேற்கும் கலைஞர்கள் எவ்விதமான தகமைகள், ஆற்றல்கள் உடையவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

லெனின்: கலைஞர்களை தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒரு விடயம். ஆற்றல் உள்ளவர்களாகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். 1999 க்கும் இவற்றையே தேடினேன். எதிர்காலத்திலும் இவற்றையே பார்ப்பேன். நான் எப்போதுமே நடிகர், நடிகைகளை தேடியவண்ணமே உள்ளேன். ஆற்றலும், உண்மையாகவே ஆர்வமும் (கலையில் வெறி) உள்ளவர்களுக்கு எப்போதுமே எனது திரைப்படங்களில் இடமிருக்கும்.

கலைஞன்: ஓர் தாய் பத்துமாதம் சுமந்து ஓர் குழந்தையை பிரசவம் செய்கின்றாள். பலரதும் கவனத்தை ஈர்த்துள்ள 1999 திரைப்படம் சுமார் எத்தனை கிழமைகளில் அல்லது மாதங்களில் உருவாக்கப்பட்டது? உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இதற்கு ஏற்பட்ட பொருட்செலவுகள் பற்றி கூறமுடியுமா?

லெனின்: 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1999 இன் கதையை எனது நண்பர்களிடம் சொன்னேன். 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்கதையை முடித்தேன். 2008 ம் ஆண்டு மார்ச்மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் திகதி வன்கூவரில் 1999 படத்தை முதன்முதலில் திரையிட்டோம். நீங்களே கணக்கை போட்டுக்கொள்ளுங்கள்... ஆரம்பித்ததில் இருந்து திரைக்கு கொண்டு வரும்வரை நாம் ஏறக்குறைய $35,000 கனேடிய டாலர்களை 1999க்காக செலவுசெய்தோம்.

கலைஞன்: உங்கள் திரைப்படத்தின் கருப்பொருளாக 'குழு வன்முறைகள்' பற்றி நமது சமூகத்திற்கு மாத்திரம் அல்லாது பொதுவாகவே கனேடிய மக்களுக்கும், இந்தப்படத்தை பார்க்கக்கூடிய அனைவருக்கும் அறிவூட்டப்படுகின்றது. 'குழு வன்முறைகளை' படத்தின் கருப்பொருளாக அமைக்கவேண்டும் என்று ஏன் தீர்மானித்தீர்கள்?

லெனின்: உண்மையை சொன்னால்.. எனது படத்தின் கருப்பொருள் புலம்பெயர்ந்து வாழும் ஓர் இனம் சந்திக்க நேர்கின்ற தவிர்க்க முடியாத இன்னல்களைப்பற்றியது என்றே சொல்வேன். குழு வன்முறை இவ் இன்னல்களின் ஒரு வடிவம் என்பதையே இப்படம் காட்ட எத்தணிக்கின்றது. என் மனதை பாதித்த சில குழு வன்முறை சம்பவங்கள் ஏன் இந்த நாட்டில் நடக்க நோரிட்டது என்ற என் கேள்விக்கு பதில் தேடும்போது கிடைத்ததுதான் இந்த கருப்பொருள்..!

1999_Still1.jpg

கலைஞன்: 1999 திரைப்படத்தை உருவாக்குவதில் தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? நம்மவர் படைப்புக்களில் தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு தூரம் முதன்மையானது? ஏதாவது ஓர் ரூபத்தில் தென்னிந்திய கலைஞர்களை பயன்படுத்தாமல் நம்மவர்களின் ஒட்டுமொத்த வளங்களை, தொழில்நுட்ப அறிவை, ஆற்றல்களை பயன்படுத்தி ஓர் திரைப்படம் உருவாக்குவது சாத்தியமானது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? தனியே நம்மவர்களை மாத்திரம் உள்ளடக்கிய படைப்புக்களை உருவாக்குவது தற்போதைய நவீன உலகில் சாத்தியமானதா மற்றும் தேவையானதா? இதன் அனுகூலங்களை, பிரதிகூலங்களை உங்கள் பார்வையில் பகிர்ந்துகொள்ளமுடியுமா?

லெனின்: பாடல்களை பாடியவர்களை தவிர வேறு எந்த ஒரு தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பும் 1999ல் இல்லை. பாடல்களுக்கும் முதலில் எம்மவரையே பயன்படுத்த இருந்தோம். பின்பு நானும், 1999 இசையமைப்பாளர் ராஜ் அவர்களும் தென்னிந்திய பின்னணி பாடகர்களினால் பாடப்படும் பாடல்களை எமது மக்கள் கூடுதலாக வரவேற்பார்கள் என்பதனால் பிரபல பாடகர்கள் எஸ். பாலசுப்ரமணியம், திப்பு, கார்த்திக் போன்றோரை பயன்படுத்தினோம்.

கண்டிப்பாக மிகவும் தரமான படைப்புக்களை முழுவதுமாக நம்மவர்களையே வைத்து உருவாக்கலாம். 1999இனை நான் இவ்வாறான ஒரு படைப்பாகவே கருதுவேன். வன்கூவர் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவுசெய்யப்பட்டு, சிறந்த முதல் 10 கனேடிய திரைப்படங்களில் ஒன்றாக வந்த எமது 1999 திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை. பாடல்களை எமது மக்களை கவர்வதற்காகவே படத்தில் திணித்தோம். ஆதலால் வன்கூவர் சர்வதேசத் திரைப்படவிழாவில் தெரிவுசெய்யப்பட்ட 1999 திரைப்படம் முற்றுமுழுதாக நம்மவர்களின் படைப்பே என்று கூறுவேன். இதிலிருந்து தென்னிந்திய கலைஞர்களின் துணையில்லாமலே தரமான திரைப்படங்களை நாங்கள் உருவாக்க முடியும் என்று நம்புகின்றேன்.

ஆனால், தென்னிந்திய கலைஞர்களின் துணையின்றி தனியாக திரைப்படம் தயாரிப்பது தேவைதானா என்று கேட்டால் இல்லை தேலையில்லை என்றே சொல்வேன். ஏனெனில், தென்னிந்திய திரைப்படத்துறை மிகவும் முதிர்ச்சியடைந்த, பல அனுபவம்மிக்க, சிறந்த கலைஞர்களைக் கொண்ட ஓர் துறை. அதைப் பயன்படுத்துவதனால் நாம் பல நன்மைகளையும் சிறந்த அனுபவங்களையும் பெறலாம். ஆனால், யாதார்த்தத்தை பார்த்தால் இதுவரை தென்னிந்திய திரைப்படத்துறையை எமது படைப்புக்களுக்காக பயன்படுத்த எத்தணித்தவர்கள் பலர் தோல்விகளையே சந்தித்து இருக்கின்றார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எனவேதான் எனது படங்களை நான் முடிந்தளவு எமது கலைஞர்களை வைத்தே தயாரிக்கின்றேன்.

கலைஞன்: திரைப்படங்களை நம்மவர்கள் உருவாக்குவதில் எமது சமூகம் எவ்வாறான பங்களிப்பை, ஊக்கத்தை வழங்கமுடியும், வழங்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள்? கலை, கலாச்சார செயற்பாடுகள் என்கின்றவகையில் அரசாங்க மட்டத்தில் எவ்வாறான உதவிகளை, சேவைகளை திரைப்படங்களை உருவாக்கும்போது நம்மவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்? நீங்கள் 1999 படத்தை உருவாக்கும்போது ஏதாவது உதவிகளை கனேடிய அரசாங்க திட்டங்களில், சேவைகளில் இருந்து பெற்று இருந்தீர்களா?

லெனின்: எமது சமூகம் எமது தரமான படைப்புக்களை இனங்கண்டு அதற்க்கு ஆதரவளிக்க வேண்டும். இதுவரை எமது பெரியோர் சிலர் "தரமான படத்தை எடுத்தால் எமது மக்கள் ஆதரிப்பார்கள்" என்றும், "நாம் தரமான படைப்புக்களை உருவாக்குவதில்லை. அதனால்தான் எம்மால் ஒரு திரைப்பட துறையை தக்க வைக்க இயலாமல் உள்ளது" என்றும் பேசினார்கள். இக்கருத்தில் எனக்கும் ஓரளவு உடன்பாடு இருந்தது. ஆனால், முதன்முதல் சர்வதேசத் திரையரங்கில் வெளியிடப்பட்டு சிறந்த 10 கனேடியத் திரைப்படங்களினுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட எமது கலைஞர்களின் படைப்பான 1999ஐ பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கையைவிட ஒரு சாதாரண (மசாலா) தென்னிந்தியத் திரைப்படத்திற்குச் செல்லும் எமது மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகமாகவுள்ளது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இன்று ஏதாவது ஒரு படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டு, ஒரு திரையரங்கினுள் சென்று அங்கு ஓடும் ஏதாவதொரு தென்னிந்தியத் திரைப்படத்தை பார்க்கும் எங்கள் மக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் வானொலிகள், தொலைக்காட்சிகளில் பேசப்பட்ட எமது படைப்பான 1999 திரைப்படத்தை எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்போம் என்றேனும் யோசிக்கவில்லை. "எமது படைப்புகள் தரமானவையாக இருக்காது" என்கின்ற எண்ணம் மக்களிடையே இருந்தாலும், எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்தானே..!

வடஅமெரிக்காவிலுள்ள சிறந்த திரைப்பட விழா ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படத்திற்குகூட எம்மக்கள் வரத் தயங்கினால்... எமக்கென்று ஒரு திரைப்படத்துறை எவ்வாறு உருவாகும்? எமது மறைந்துபோன, மறைக்கப்பட்ட பல்லாயிக்கணக்கான கதைகளை நாம் எப்படி வெளியுலகிற்கு கொண்டுவருவது? 1999 ஒரு தனிப்பட்டவரின் படமல்ல..! நூற்றுக்கணக்கான எம் இளைஞர்களின் கூட்டுமுயற்சி. சிந்தித்துப் பாருங்கள்.. எத்தனை திரைப்படங்களுக்குச் சென்று, திரையரங்குகளில் இருபது, முப்பது டாலர்களை வீண்விரயம் செய்துவிட்டு "விசர்ப்படம்" என்று சொல்லி அலுத்து இருப்பீர்கள்..! அப்படி வீணடிக்கும் ஒரு பத்து டாலரை ஏன் எமது கலைஞர்களை ஊக்குவிக்க நீங்கள் செலவு செய்யக்கூடாது? திரையரங்கிற்கு வந்து பார்த்தால்தானே 1999 படத்தின் தரம் புரியும்!

திரைப்படங்கள் உருவாக்குவதற்கு கனேடிய அரசாங்கத்தில் பல சலுகைகள் உள்ளன. அவை ஒன்றையுமே நாம் 1999இற்கு பெறவில்லை. எமக்கு எவ்வாறு அச் சலுகைகளை பெற்றுக்கொள்வதென்று தெரிந்து இருக்கவில்லை.

1999_Still0.jpg

கலைஞன்: வழமையாக நாங்கள் ஓர் படைப்பை செய்தபின்னர் அதில் உள்ள நிறைகள் எங்கள் மனதை மகிழ்ச்சிப்படுத்தும் அதேசமயம், அதில் உள்ள குறைகள் மீண்டும் மீண்டும் நினைவில்வந்து எங்கள் மனதை வாட்டி எடுத்துக்கொண்டு இருக்கக்கூடும். 1999 திரைப்படத்தை மீண்டும் புதிதாக படைக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்று வைத்தால் நீங்கள் இப்படத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் எவை? படத்தில் ஏதாவது தவறுகள் இடம்பெற்று இருக்கின்றன என்று நீங்கள் இப்போது நினைக்கின்றீர்களா?

லெனின்: ஒரு இயக்குனராக நான் அறிந்த உண்மை "ஒரு போதும் நாம் நம்மை முழுமையாக திருப்திப்படுத்தும் திரைப்படங்களை உருவாக்க மாட்டோம்!" எப்போதுமே, படத்தின் எத்தனையோ பல பகுதிகளை இன்னமும் நன்றாக செய்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றும். 1999இல் உள்ள எந்த ஒரு காட்சியும் என்னை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்றே கூறுவேன். எனது எதிர்கால திரைப்படங்களில் தவிர்க்கக்கூடிய பல குறைகளை தவிர்ப்பேன்.

கலைஞன்: படத்தை உருவாக்கும் காலத்தில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

லெனின்: பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன. எனக்கு மிகவும் சுவாரசியமானது மட்டுமல்லாமல் பெருமைப்படக்கூடியதும் என்றால் படத்தில் K.S. பாலச்சந்திரன் (Uncle) அவர்களோடு பணிபுரிந்ததையே சொல்வேன். K.S. பாலச்சந்திரன் அவர்கள் எமக்கு கிடைத்த பெரும் கொடையென்றே கூற முடியும்.

கலைஞன்: கனடா வன்கூவரில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு 1999 திரைப்படமும் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னரே இந்தப்படம் நம்மவர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது என்று நினைக்கின்றேன். வன்கூவர் திரைப்பட விழாவில் 1999 திரையிடப்பட்டது சம்மந்தமான அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

லெனின்: வன்கூவர் திரைப்பட விழாவில் 1999 திரையிடப்பட்டது சம்மந்தமான அனுபவங்கள் உண்மையாகவே மறக்க முடியாதவை. எத்தனையோ பல பிரபல்யமான இயக்குனர்களையும், திரைப்பட கலைஞர்களையும் சந்தித்து அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. "எம்மால் தொடமுடியாத உயரத்தில் இருப்பவர்கள்" என்று எண்ணியவர்களுடன் மனம்விட்டு பேசியபோதுதான் அவர்களும் எங்களைப்போல சாதாரண நிலையிலிருந்துதான் உயர்ந்திருக்கிறார்கள் என்றும், எமக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைத்திருந்தால் அவர்களை போல பிரபல்யமாகியிருப்போம் என்ற தன்னம்பிக்கையும் எனக்கும், சக 1999 குழுவினருக்கும் வந்தது. பல பெயர்பெற்ற இயக்குனர்களின் நட்பு கிடைத்தது என்பதுடன் மட்டுமல்லாமல் 1999 பற்றிய அவர்களது கருத்துக்களைக்கூடப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இவ்வாறான அனுபவசாலிகளின் நட்பு திரைப்படத்துறையிலுள்ள எமக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே எண்ணுகின்றோம்.

1999_Still4.jpg

கலைஞன்: 1999 திரைப்படத்தை உருவாக்குவதில் தமிழர்கள் அல்லாத பிறமொழி கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்புக்கள் எவ்வாறு இருந்தன? பிற சமூகங்கள் மத்தியில் 1999இற்கு எவ்வாறான வரவேற்பு கிடைத்துள்ளது?

லெனின்: எந்த ஒரு பிறமொழி கலைஞர்களும் இதில் பங்கு பெறவில்லை, 1999 முழுவதுமாக எமது கலைஞர்களினால் உருவாக்கப்பட்டது. உண்மையை சொன்னால்... எமது மக்களைவிட வேற்றினத்தவர்களே 1999 திரைப்படத்தை அதிகளவில் வரவேற்றார்கள். படம் முடிந்த பின்பும் மணிக்கணக்கில் என்னுடன் 1999 படத்தைப்பற்றி உரையாடியவர்களும் உள்ளார்கள். வன்கூவரில் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் (UBC) 1999ஐ வைத்தும், புலம்பெயர்ந்து வாழும் மக்களைப்பற்றியும் ஓர் ஆய்வுக்கட்டுரை வரைகின்றார். 1999ஐ நான் எமது மக்களுக்காக மட்டுமே எடுக்கவில்லை, சக கனேடிய மக்களுக்குமாகவும்தான் உருவாக்கினேன்.

கலைஞன்: கனடாவில் நம்மவர்களிடையே நிலவுகின்ற குழு வன்முறைகளை பல்வேறு கோணங்களில் விபரிக்கும் அதேநேரம் வேற்று இனத்தவர்களுக்கு தாயக பிரச்சனைகள் பற்றிய அறிவூட்டல் செய்கின்ற ஓர் திரைப்படமாகவும் 1999ஐ பார்க்க முடிகின்றது, பாராட்டுக்கள்! திரைப்படம் - கலைப்படைப்புக்கள் மூலம் எவ்வாறு எமது பிரச்சனைகளை இன்னமும் காத்திரமான முறைகளில் வேற்று இனத்தவர்களுக்கு கூறமுடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

லெனின்: திரைப்படங்கள் மிகவும் எளிதில் மக்களைப்பாதித்து விடும். காரணம், திரைப்படத்தை பார்க்கும்போது மக்கள் தங்களை உள்வாங்கி, கதையோடு தம்மையும் இணைத்துக் கொள்கின்றார்கள். இதனால் மிகவும் எளிதாக நாம் சொல்ல நினைப்பவற்றை மற்றவர்களுக்கு சொல்லலாம். இதனால்தான் நாம் எமக்கென்று ஒரு திரைப்படத்துறையை அமைத்தால் மேலும் தரமான எமது கதைகளைக்கொண்ட பல திரைப்படங்களை உருவாக்கலாம். ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த உண்மையை நம்மில் பலர் புரிந்து கொள்வதில்லை.

1999_Poster_Image.jpg

கலைஞன்: உங்கள் குருவாக நீங்கள் யாரை கருதுகின்றீர்கள்? படைப்புக்களை செய்யும்போது குறிப்பாக நீங்கள் முன் உதாரணமாக கையாளுகின்ற - பயன்படுத்துகின்ற ஆக்கங்கள், கலைஞர்கள் பற்றி அறிந்துகொள்ளலாமா?

லெனின்: உண்மையைச் சொன்னால்.. குருவுக்கு நான் எங்கே போவது? இதனாலேயே எனக்கு குருவாக யாரும் இல்லை! ஆனால்.. மணிரத்தினம் அவர்கள், மற்றும் ஒரு சிலரின் ஒவ்வொரு படத்தையும் மனப்பாடம் பண்ணியிருக்கின்றேன். இவர்களின் படங்களில் இருந்து நிறையவே பல கற்று இருக்கின்றேன்.

கலைஞன்: புலம்பெயர் மண்ணில் நம்மவர்கள் படைத்த திரைப்படங்கள், புலம்பெயர் மண்ணில் நம்மவர்கள் படைக்கப்போகின்ற திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கூறக்கூடிய ஆலோசனைகள் எவை?

லெனின்: என்ன காரணம் என்று உண்மையாகவே எனக்குத்தெரியாது. 1999 எமது சக்திகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி இயன்ற அளவிற்கு முறையாக உருவாக்கினோம். ஆனால், எதிர்பார்த்த வெற்றி எமக்கு கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். என்னதான் வெற்றி பெற்றதோ இல்லையோ ஆனால்... ஒன்று மட்டும் உண்மை, நாங்கள் எல்லோரும் 1999திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்தோம். இந்த கடின உழைப்பினால்தான் இன்று 1999 திரைப்படம் உங்களையும் (கலைஞன்) சேர்த்து எத்தனையோபேரின் மனங்களை பாதித்துள்ளது என்று நம்புகின்றேன். இதற்குமேல் என்னால் என்ன கூறுவது என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த படத்தை பற்றி இப்ப தான் கேள்விப்படுகிறேன்...பாட்டுக்களையும் நம்மவர்களை கொண்டு பாட‌ வைத்திருக்கலாம் ...அவர்களது முயற்சிக்கு பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான்... விரிவான்.....தெளிவான் ......ஒரு நேர்முக உரையாடலை பதிந்துள்ள் கலைஞ்சன் , உண்மையில் உங்கள் திறமை வெளிப்பட்டு இருக்கிறது. பாராடுக்கள்.

Link to comment
Share on other sites

ரதி, விரைவில் ஐரோப்பாவிலும் 1999 திரைப்படத்தை காண்பிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன என்று நினைக்கின்றேன்.

+++

நன்றி நிலாமதி அக்கா. எங்கள் கலைப்படைப்புக்கள், கலைஞர்களை ஊக்குவிக்கவேண்டியது காலத்தின் தேவை. இல்லாவிட்டால் மிச்சம் சொச்சம் எஞ்சியுள்ள எங்கள் அடையாளங்களும் காலப்போக்கில் அழிந்துவிடும். நம்மவர்களுக்கு ஏதோ என்னாலான சிறிய உதவி, அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

நானும் 1999 பிரிவியூ அன்று பார்த்தேன்(fஏமஸ் பிலேயேர்ஸில்). 15 வருடங்களாக கனடாவை ஆட்டிப்படைத்த "காங் சண்டை" தான் கரு.அரைவாசி சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றவை.மிகவும் அழகாக எவர் படத்தையும் கொப்பி பண்ணாமல் தனக்கென ஒரு பாணியில் படத்தை எடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.அதுவும் சுதன் (கதாநாயகன்) பாத்திரம் சூபேர்ப்,சுகனும் மிகத்திறமையாக நடித்திருந்தார்.மற்ற எல்லா கலைஞர்களுமே மிகச்சிறப்பாகத்தான் நடித்திருந்தார்கள்.கரெக்டர்களின் பெயர்களைத் தெரிவுசெய்ததில் இருந்து இயக்குனரின் திறமையையும் தேடலையும் புரிந்துகொள்ளலாம்{மரநாய்,உடும்பன்)

பாட்டுக்களின் இடைசெருகல் தேவையற்றது.கதாநாயகி?

மற்றப்படி 1999 இற்கு 79 மாக்ஸ்.

Link to comment
Share on other sites

நன்றாக நினைவில வச்சு இருக்கிறீங்கள் பெயருகளை. எனக்கு இவரது நடிப்பு நன்றாக பிடிச்சு இருக்கிது. தனது பகுதியை படத்தில நன்றாக செய்து இருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகின்றேன்.

லெலின் சிவம் மனதைத் தளராது இன்னும் பல திரைப்படங்களைத் தரவேண்டும். மக்களைக் கவர சந்தைப்படுத்துவதில் கவனம் எடுத்தால் "விசர்ப்படம்" பார்க்கப் போகின்றவர்களும் வருவார்கள். மற்றது, நமது கலைஞர்களின் பழக்கங்கள் பிரச்சினையாக இருந்தது என்று சொல்லியுள்ளார்.. ஆனால் என்ன பிரச்சினை என்று சொல்லவில்லை. கலைஞர்கள் "பந்தா" காட்டுகின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கும் இடத்தில் திரையிட்டால் கட்டாயம் போய் பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஏதாவது ஒரு படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டு, ஒரு திரையரங்கினுள் சென்று அங்கு ஓடும் ஏதாவதொரு தென்னிந்தியத் திரைப்படத்தை பார்க்கும் எங்கள் மக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் வானொலிகள், தொலைக்காட்சிகளில் பேசப்பட்ட எமது படைப்பான 1999 திரைப்படத்தை எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்போம் என்றேனும் யோசிக்கவில்லை. "எமது படைப்புகள் தரமானவையாக இருக்காது" என்கின்ற எண்ணம் மக்களிடையே இருந்தாலும், எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்தானே..!

ஒரு கலைஞனின் உள்ளக்குமுறல் .....யாழுக்காக பேட்டி கண்ட கலைஞனுக்கு பாராட்டுகள்

Link to comment
Share on other sites

1999 பட இயக்குனரின் செவ்வி மகிழ்ச்சி தருகிறது. படம் சென்னையில் திரையிடப் படவேண்டும் என்பது எனது வேண்டுகோள். காங் வன்முறை பற்றி 1999லும் பின்னும் 3 தடவைகள் கனடா வந்து வெளிக்கள வேலை செய்திருக்கிறேன். ஹொப்பர் ஹட் பக்கத்து புடவைக்கடை (சேலைகளின் சோலை என நினைக்கிறேன்) பெண்மணி சுடப்பட்டபோது அந்தக் கட்டிடத்தின் மேல்மாடியில் லோகன் கணபதியுடன் காங் வன்முறை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். சில தடவைகள் காங் வன்முறையாளர்கலை எதிர் கொண்டு முரண்பட்டும் இருக்கிறேன். அவர்களுடன் தொடர்பில் இருந்த வர்கள் பலரை பேட்டி கண்டிருக்கிறேன். காவல்துறை அதிகாரிகளுடன் பேசி இருக்கிறேன். லோகன் அந்த நாட்க்களில் காங் தொடர்பாக கோபத்துடன் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு காங் குழுவினர் லோகன் கணபதி வெளிநாட்டில் இருந்து என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டை கொண்டுவந்திருப்பதாகக் கருதி விட்டனர். நகைக்காதீர்கள் உண்மைதான். லோகனும் நானு போய் இறங்கியபோது ஒரு பெறோல்செட்டில் அவர்கள் மிரண்டு காரை எடுத்ஹுக்கொண்டு ஓடிய சம்பவமும் இடம் பெற்றது. நான் எப்பவும் தோழில் மாட்டி இருக்கும் ஜொல்னா பை செய்த மாயம் அது. இது தொடர்பான எனது நாவலை இன்னும் எழுத முடிய வில்லை. வசதி கிட்டும்போது இன்னும் ஒரு 3 மாதம் கனடாவில் வந்திருந்து எழுதி முடிக்கவே விருப்பம். முக்கியமாக பதிவாக வேண்டிய காலக்கட்டம் அது. எனது நண்பர் பலாவும் பங்குபற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. திரைப்பட இயக்குனர் லெனினுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி கண்டு பேசவைத்த கலைஞனுக்குப் பாராட்டுகள்.

திரைப்படத்தை வெளிக்கொணர உழைத்த உள்ளங்களும் பாராட்டுக்குரியவர்கள். லெனின் அவர்கள், திரையாக்கத்திற்காக அவர்பட்ட சிரமங்கள் அவரது பேட்டியில் இளையோடி இருக்கிறது. அந்தச் சிரமங்களுக்கான ஒத்தடமாக இருப்பது பாராட்டுகள் மட்டுமே. இதற்கு எம்மவர்களது எத்தனை ஊடகங்கள் முக்கியம் கொடுத்தனவோ தெரியவில்லை. யாழ் இணையமூடாகவே நான் அறிந்து கொண்டுள்ளேன்.

இந்தியத் திரைத்துறை மசாலாக்களை துக்கிக்பிடித்து உண்டு செரிக்க வைக்கும் பல நிறுவனங்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றன. ஏன் அந்த நிறுவனங்கள் இவற்றையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தக்கூடாது. புலவரது கருத்தும் ஏற்புடையதே. அதாவது சென்னையில் வெளியிட முயற்சிகள் செய்ய வேண்டும். அவர்கள் வண்ணங்கள் கொண்ட வானவேடிக்கை காட்டி எமது பொருண்மியத்தைக் குறிவைக்கும்போது நாமேன் செய்யக் கூடாது.

இந்தப் படத்தை குறுந்தகட்டிலும் வெளியிட்டு குறைந்தது 7 யூரோவிற்கு ஒரு 10,000 பிரதிகள் விற்றாலே தயாரிப்புச் செலவுகளை ஈடுகட்டுவதும் அடுத்தயாரிப்புக்கு உதவுவதுமாக இருக்கும். இதற்கான உதவியை எமது திரை வெளியீட்டகத்தினரது உதவியைக் கோருவதூடாக அவர்களது எம்மவர் தயாரிப்புகள் மீதான மனப்போக்கையும் பதிவு செய்யலாம்.

Link to comment
Share on other sites

நன்றி புத்தன், கவிஞர் அண்ணா, நொச்சி.

+++

உங்கள் வேண்டுகோளை விரைவில் லெனின் அவர்கள் நிறைவேற்றுவார் என்று நினைக்கின்றேன் கவிஞர் அண்ணா. கனடா குழுவன்முறை சம்மந்தமாய் பலவிதமான கதைகள் கதைக்கப்படுவது வழமை. ஒவ்வொருத்தர் ஒவ்வொருவிதமாய் சொல்வார்கள். ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்த ஓர் தமிழ்குழுவே இந்த குழுவன்முறை இல்லாமல் போவதற்கு பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து இருந்தார்கள் என்றும் நான் காதுவழி கேட்டு இருக்கின்றேன். எப்படி இருப்பினும், குழுவன்முறைகள் ஓரளவுக்காயினும் நிறுத்தப்பட்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகின்றது.

ஆனாலும்... ஆயுதங்கள் பயன்படுத்தாவிட்டாலும்.. பாடசாலை மட்டத்திலேயே சிறுவர்களிடையேகூட சுமார் பதினொரு வயது மட்டத்தில் இருந்தே பலவிதமான குழுக்கள் இருந்துதான் வருகின்றன. பெரும்பாலும் வயதில் சற்று கூடியவர்கள் தம்மிலும் இளையவர்களை வெருட்டி - bullying - தமது கட்டுப்பாட்டில்.. அதாவது தமக்கு எதிராக செயற்படாதவகையில் வைத்து இருப்பார்கள். இதனால் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் பலவிதமான நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கின்றது. பல பிள்ளைகள் பெற்றோருக்கு பயத்தில் ஒன்றும் சொல்வதும் இல்லை.

இந்த குழுவன்முறைகள்... தற்கால சினிமா, ஹாலிவூட், நவீன இசை கலாச்சாரத்தின் மூலம் நெருப்பூட்டி வளர்க்கப்பட்டு இருக்கின்றது, வளர்க்கப்படுகின்றது. குழுவன்முறையில் ஆயுதமாக துப்பாக்கிதான் பயன்படுத்தப்படுகின்றது என்று இல்லை. கத்திகள், கம்புகள் - விளையாட்டு உபகரணங்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை.

சில சம்பவங்கள் - கொலைகள் - குழுவன்முறைகளுடன் நேரடியாக தொடர்புகொண்டு இருக்காவிட்டாலும்.. குழுவன்முறையின் செல்வாக்கு இருந்து இருக்கின்றது.

+++

நொச்சி, 1999திரைப்படம் பற்றி கனடாவில் நமது தமிழ் ஊடகங்கள் பரவலாக விளம்பரம் செய்து இருந்தார்கள் என்று நினைக்கின்றேன். இதரநாடுகள் பற்றி தெரியவில்லை. ஆனால் நடந்த பிரச்சனை என்ன என்றால்.. 1999 திரைப்படம் விளம்பரம் செய்யப்பட்டபோதும் ஆதவன் என்ற பெயரில் வந்த தென்னிந்திய திரைப்படம் பார்க்கவே சனம் அல்லோல கல்லோலப்பட்டது. ஏக காலத்தில் திரையிடப்பட்டதால் ஆதவனை பார்த்து குசியடைந்தால் போதும் என்று 1999 திரைப்படத்திற்கு போதிய ஆதரவு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆதவன் படம் ஓர் காரணமாக இருந்தாலும்.. இதனால் மட்டும்தானே மக்கள் ஆதரவு தரவில்லை என்பதும் கேள்விக்குறியே.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் வாரமாதம் இப்படம் திரையிடப்படவுள்ளது. விபரங்கள் விரைவில்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட சின்னனுகள் எல்லாம் ஒவ்வொரு வழியில கலக்கி எடுக்குதுகள். சந்தோசமா இருக்கு. இந்த படத்த நானும் கட்டாயம் போய் பாப்பன். எண்ட கனடா நண்பனும் நல்லா இருக்கெண்டு சொன்னவன். வேட்டை காரனுக்கு கொண்டு போய் காசை குடுத்து ஜோசப் ஆய் ஊய் எண்டு கத்தி காதை பிளக்குரதிலும் பாக்க இது எவ்வளவோ நல்ல விஷயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி தமிழ் மன்றம் 32ஆம் ஆண்டு நிறைவாக, மன்ற வரலாற்றில் முதன்முறையாக திரையிடும் தமிழ்த் திரைப்படம் 1999!

அனைவரும் பேராதரவு தந்து படத்தினைப் பார்த்து மகிழுமாறு அன்புடன் அழைக்கிறது சிட்னி தமிழ் மன்றம்!

தமிழன் படத்திற்க்கு தர‌ணியில் தனிச்சிறப்பு!

முழுக்க ஈழத் தமிழர் உழைப்பில் லெனின் சிவத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த முதல் தமிழ்ப் படம் ‌ "1999"!

2009 வான்கூவர் இன்டர்நேஷ‌னல் திரைப்ப‌டவிழாவில் சிறப்புக் காட்சி!

2010 ரீல்வோர்ல்ட் திரைப்பட விழாவில் சிறப்புக் காட்சி!

திரையரங்கம்: க்ரேடர் யூனியன், பர்வுட்

திரை நாட்கள் :

வெள்ளி கிழமை, 19 பெப்ருவரி 2010 ‍ 8:45 மாலையளவில்

சனிகிழமை 20 பெப்ருவரி 2010 ‍ 5:45 மாலையளவில்

அனுமதிச் சீட்டு : $12

ஜான் நிவென் - மன்ற தலைவர் (0411 259 978)

26102805.png

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி இரு காட்சிகள் காண்பிக்கப்பட்டன. 2 வது காட்சி அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்பட்டது. 2 வது காட்சியில் திரைப்படம் பார்க்க வந்த 15க்கு மேற்பட்டவர்களுக்கு நுளைவுச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றார்கள். மொன்றியல், ரொன்ரோ, நோர்வேயில் பார்த்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

இப்படம் சிட்னியில் பலரைக் கவர்ந்தது. நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. நேரம் கிடைக்கும் போது எனது விமர்சனத்தை புதிய தலைப்பில் விரைவில் உங்களுடன் பகிரவுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நார்வே பட விழாவும் நான்கு படைப்பாளிகளின் அனுபவமும்!

எஸ்.பி.ஜனநாதன் கூட முதலில் இந்த விழாவுக்கு போக தயங்கினாராம். அதற்கான காரணத்தை அவரே சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் என்னுடன் வருகிறவர்கள் நண்பர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால் என் தம்பிகளுடன் போயிருந்த உணர்வு என்றார். இந்த திரைப்பட விழாவில் ஜனநாதனை அதிகம் கவர்ந்த படம் 1999 என்ற திரைப்படம். முழுக்க முழுக்க நார்வேயில் எடுக்கப்பட்ட படம்தான் இது. புலம் பெயர்ந்த தமிழர்களின் கஷ்டத்தை சொல்கிற படமாம் இது.

http://www.envazhi.com/?p=16336

Link to comment
Share on other sites

நன்றி குளவி, கந்தப்ஸ்

+++

கந்தப்பு, பிரபாவும் ஒரு பதிவு போட்டு இருக்கறார். பார்த்தீங்களோ http://kanapraba.blogspot.com/2010/02/1999.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் லெனின் பேட்டியை வாசித்தேன். பல விடயங்களை அறிந்து கொண்டேன். தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழ் சாதனைபெற்ற ஈழத்தமிழர்களை செவ்வி கண்டு யாழில் இணைக்கும் கலைஞனின் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் பணி தொடரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி, 1999திரைப்படம் பற்றி கனடாவில் நமது தமிழ் ஊடகங்கள் பரவலாக விளம்பரம் செய்து இருந்தார்கள் என்று நினைக்கின்றேன். இதரநாடுகள் பற்றி தெரியவில்லை. ஆனால் நடந்த பிரச்சனை என்ன என்றால்.. 1999 திரைப்படம் விளம்பரம் செய்யப்பட்டபோதும் ஆதவன் என்ற பெயரில் வந்த தென்னிந்திய திரைப்படம் பார்க்கவே சனம் அல்லோல கல்லோலப்பட்டது. ஏக காலத்தில் திரையிடப்பட்டதால் ஆதவனை பார்த்து குசியடைந்தால் போதும் என்று 1999 திரைப்படத்திற்கு போதிய ஆதரவு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆதவன் படம் ஓர் காரணமாக இருந்தாலும்.. இதனால் மட்டும்தானே மக்கள் ஆதரவு தரவில்லை என்பதும் கேள்விக்குறியே.

வன்னியில் நடந்த இன அழிவுக்கு துணைபோன காங்கிரசு அரசுக்கு துணை நின்ற கலைஞரின் வாரிசின் 'ஆதவன்' படத்தைப் புறக்கணிக்கும் படி ஊடகங்களில் செய்திகள் வந்தன. யாழிலும் கருத்துக்கள் வைக்கப்பட்டன. ஆனால் கனடாவாழ் ஈழத்தமிழர்கள் ஆதவனுக்கு ஆதரவு தந்து '1999'க்கு ஆதரவைத் தராமல் விட்டார்களே. எனினும் 1999னைப் பார்க்காதவர்கள் ,'1999'னைப் பார்த்தவர்களின் கருத்துக்களைக் கேட்டு '1999'னைப் பார்க்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். சிட்னியில் காண்பிக்கப்பட்ட 2 காட்சியிலும் பார்க்கதவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 3 வது காட்சி விரைவில் திரையரங்கில் காண்பிக்கப்படவுள்ளது. 2 வது காட்சி அரங்கு நிறைந்த காட்சியாக இருந்ததினால் 15 க்கு மேற்பட்டவர்கள் நுளைவுச்சீட்டு இன்றி ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி எலிகள், 1999

வியக்கும் தமிழ் இயக்குனர்கள்!

நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் பாராட்டுகளையும், பரிசுகளையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கும் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின், சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். முதலில் இந்த விழாவை நடத்திய வசீகரனுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள் அத்தனை பேரும்.

படப்பிடிப்பு இருந்ததால் எனக்கு நார்வே போகிற ஐடியாவே இல்லை. ஆனால் அங்கிருந்து என்னை தொடர்பு கொண்ட வசீகரன், "அண்ணா. நீங்க அவசியம் வரணும்" என்று வற்புறுத்தினார். அவர் கேட்ட முதல் கேள்விதான் என்னை அங்கு போக வைத்தது. "உங்களுக்கு நான் வெஜ்ஜா? வெஜ்ஜா" என்று கேட்டார். விருந்தோம்பலில் தமிழன் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறான் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். எனக்கு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. பிளைட்டில் இறங்கிய நிமிடம் முதல், இங்கு புறப்பட்டு வருகிற வரை என்னை சுற்றி தமிழர்கள்தான் இருந்தார்கள். "அண்ணே, யாருக்கு விருது கிடைக்கும்னு தெரியாது. உங்களுக்கு கிடைக்காம போனாலும் நீங்க பொறுத்துக்கணும்" என்றார் வசீகரன்.

நான் அவரிடம், "இங்கு யார் விருது பெற்றாலும் எனக்கு சந்தோஷம். எல்லாருமே என்னோட சகோதரர்கள்தான். எனக்கு வருத்தமெல்லாம் வராது" என்று சொன்னேன் என்று வெளிப்படையாகவே தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் சசிக்குமார்.

மிஷ்கினின் அனுபவம் வேறு மாதிரியானது. மற்ற இயக்குனர்கள் சென்னைக்கு திரும்பிய போதும், இவர் மட்டும் மேலும் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்துவிட்டுதான் திரும்பினார். "வசீகரனின் அப்பா என்னை அழைத்துக் கொண்டு நார்வேயில் இருக்கும் புகழ்பெற்ற மியூசியம், நு£லகத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றார். நீயும் என்னோட மகன்தான் என்று அவர் சொன்னது என்னை சந்தோஷப்பட வைத்தது" என்றார். இவருடைய 'நந்தலாலா' படத்திற்கு சிறந்த மக்கள் தேர்வு பட விருது கிடைத்திருக்கிறது.

எஸ்.பி.ஜனநாதன் கூட முதலில் இந்த விழாவுக்கு போக தயங்கினாராம். அதற்கான காரணத்தை அவரே சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் என்னுடன் வருகிறவர்கள் நண்பர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால் என் தம்பிகளுடன் போயிருந்த உணர்வு என்றார். இந்த திரைப்பட விழாவில் ஜனநாதனை அதிகம் கவர்ந்த படம் 1999 என்ற திரைப்படம். முழுக்க முழுக்க நார்வேயில் எடுக்கப்பட்ட படம்தான் இது. புலம் பெயர்ந்த தமிழர்களின் கஷ்டத்தை சொல்கிற படமாம் இது.

இந்த படத்தை பற்றிதான் அதிகம் பேசினார் சமுத்திரக்கனி. ரொம்ப ஸ்டன்னிங்கான படம் அது. பிரமாண்டமாக எடுத்திருக்காங்க. அதுமட்டுமல்ல, புலம் பெயர்ந்த தமிழர்களில் பல அற்புதமான இயக்குனர்கள் அங்கு இருக்காங்க. வன்னி எலிகள் என்றொரு படம் பார்த்தேன். இரண்டே இரண்டு எலிகளை வைத்துக் கொண்டு ஒரு அற்புதமான கதையை சொல்லியிருக்கிறார் அந்த இயக்குனர். மனிதர்களை நடிக்க வைப்பதே கஷ்டம். இதில் எலியை நடிக்க வைத்திருக்கிற அந்த இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று வியந்தார் சமுத்திரக்கனி.

இந்த நால்வரும் வியந்த 1999 படத்தை விரைவில் தமிழகத்திலும் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருக்கிறார் வசீகரன். இப்பவே ஒரு வெல்கம் போர்டு வைப்போம்...

- தமிழ்சினிமா

Link to comment
Share on other sites

நன்றி கந்தப்ஸ். தொடர்ந்து சமயம் கிடைக்கும்போது நம்மவர் படைப்புக்கள் பற்றி அலசுகின்றேன். உங்கள் தகவல்களுக்கும் நன்றிகள். லெனின் நிச்சயம் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார் 1999இன் அவுஸ்திரேலிய காட்சிகள் பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிட்னியில் 1999 ஐ வெளியிட்ட சிட்னி தமிழ் மன்றம் இந்திய தமிழ் நண்பர்களுடைய மன்றம். ஒரு ஈழத்து தயாரிப்பை அவர்கள் முன்வந்து வெளியிடுகிற அதே சிட்னியில் நம்மவர்கள் வெளியிடும் படம் விண்ணைத் தாண்டி வருவாயா :rolleyes::):)

இந்த லட்சணத்தில உலகத்தில தமிழை உய்விக்க வந்த இனமென்று வரட்டுக் கூச்சல் வேறு எங்களுக்கு..

Link to comment
Share on other sites

சிட்னியில் 1999 ஐ வெளியிட்ட சிட்னி தமிழ் மன்றம் இந்திய தமிழ் நண்பர்களுடைய மன்றம். ஒரு ஈழத்து தயாரிப்பை அவர்கள் முன்வந்து வெளியிடுகிற அதே சிட்னியில் நம்மவர்கள் வெளியிடும் படம் விண்ணைத் தாண்டி வருவாயா :rolleyes::):lol:

இந்த லட்சணத்தில உலகத்தில தமிழை உய்விக்க வந்த இனமென்று வரட்டுக் கூச்சல் வேறு எங்களுக்கு..

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.