Jump to content

காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக (கே.எஸ். பாலச்சந்திரனின் கரையைத் தேடும் கட்டுமரங்கள் )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சாகரா.. எனது நாவல் படித்துப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் உங்கள் அபிப்பிராயத்தை எழுதலாமே.

எதிர்பார்க்கிறேன்

முதலில் என்னைப்பற்றி… விமர்சனம் எழுதிப்பழக்கம் இல்லை. விமர்சனத்தின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான பார்வையும் என்னிடம் இல்லை ஆதலால் இங்கு நான் எழுதப் போகும் கருத்துகள் விமர்சனப்பார்வைக்குள் அடங்குமா இல்லயா என்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் ஒரு படைப்பாளியின் ஆக்கல் பிரசவம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. சிறுகதைகள் எழுதும் போதே திக்குமுக்காடும் நிலைகளும் அக்கதையைப்பல கோணத்தில் இருந்து பார்க்கும் பார்வைகளையும் திருப்திப்படுத்துவது என்பதும் எத்தகையது என்பதை அறிவேன் எனக்கும் அனுபவங்கள் உண்டு. ஒரு பெண்ணாகவும், ஒரு படைப்பாளியாகவும் பிரசவத்தின் அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன். இத்தகைய ஒரு நிலையிலிருந்தே எனது பார்வை இந்நாவலில் மீதான பார்வையாகப் படர்கிறது.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” கரையும் கரை சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தைத் தளமாகக் கொண்டு விரிந்திருக்கிறது. பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை அடிப்படையாகக் கொண்ட கடற்றொழில் செய்பவர்களின் வாழ்விற்குள் கரை தேடும் கட்டு மரங்களைத் தேடிச் சென்றிருக்கிறார் கதாசிரியர். நெய்தலின் வனப்பை தென்னோலைச் சலசலப்பாகவும், பழுத்த தென்னோலைகள் நெட்டுக்கழன்று விழும்போது காற்றின் திசைக்கு ஒப்ப அதனோடு பயணித்து தென்னையின் அடியில் வீழாது சற்றுத் தள்ளி விழும் ஒரு நிகழ்வை எழுதும்போது கதாசிரியர் கையாண்ட விதத்திலேயே அவர் அந்தக் கடற்கரையில ஓலை விழும் அழகையும் சலசலப்பும் அவரை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. விட்டுக் கொடுக்காத மனித சுபாவங்களும், காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக தொக்கி நிற்கின்றன.

சீதனம் வாங்கி மணந்தவர்களிடம் ஏற்பட்ட அந்தஸ்துப் பேதமும், பிரியங்கள் அற்ற வெறுமை தோய்ந்த வாழ்க்கையும் இந்நாவலின் மூலம் சொல்லாமல் கிடக்கும் சோகங்களைச் சொல்லிச் செல்கிறது. ஒரு தந்தைக்கு மகிழ்வளித்த அதே வீட்டில் மகனின் மனம் பறிபோவது நெருடலாக இருக்கிறது. ஸ்ரெல்லாவின் அம்மா இவ்விடயத்தில் தன் எதிர்ப்பை காட்டாமல் ஒதுங்குவது என்பது ஒழுக்க நெறிகளைச் சிதைத்துப் போடுவதாக அமைகிறது. ஒருநாள் பழக்கத்திலேயே வீட்டுக்கு அழைத்துச் செல்வதும், உரிமையோடு சரளமாகப்பழகுவதும் காதல் என்று பார்க்கத் தோன்றவில்லை. கதாசிரியர் மனங்களின் புனிதமான இணைப்பாகவே இக்காதலைச் சித்தரிக்க விழைந்தாலும் நாவலில் அதனை அதாவது அவ்விருவரின் சந்திப்பை இச்சந்திப்பு ஏற்படுத்தக்கூடிய மனப் போராட்டத்தை சித்தரிக்கத் தவறிவிட்டார். ஏனெனில் ஒரு இளம் விதவையான பெண்ணுக்கு இன்னொரு ஆண்மகனுடன் நட்பு ஏற்படுமாயின் அது அவளையும் அவள் சார்ந்த உறவுகளையும் எப்படியெல்லாம் சீரழிக்க முயலும் என்பதை அவளின் மனஞ்சார்ந்ததான போராட்டமாகவும், ஏற்கனவே காதல் என்று பழகி பின் ஏமாந்த விரக்தியில் இருக்கும் ஒரு இளைஞன் ஒரு விதவைப் பெண்ணான அவள்மீது தான் கொள்ளும் காதல் பற்றி தன்னிலை சார்ந்த சுயவிமர்சனத்தையும் செய்ய வேண்டிய ஒரு பகுதியை இந்நாவலின் தளத்தில் காண முடியவில்லை. இவ்விடத்தில் ஒரு மேலோட்டமாகக் கதை நகர்ந்திருக்கிறது. இவ்விடத்தை கதாசிரியர் தவற விட்டாரா அல்லது தவிர்த்து விட்டாரா என்பதை கதாசிரியர்தான் கூறவேண்டும்.

இந்நாவலில் சில சிறப்பம்சங்களான அந்தந்தப் பிரதேசத்தில் பாவிக்கப்படும் சொற்களை நாவலில் பயன்படுத்தியுள்ளார் உதாரணத்திற்கு “குட்டான்” என்கிற மாதிரியான சொற்கள் இன்று பேச்சில்கூட இல்லாமல் அற்றுப் போயிருக்கும் சொற்களாக இருக்கின்றன. அடுத்து இன்னொரு விடயம் மதனலேனாளின் ரவிக்கையின் முடிச்சுகள்… அந்தநாட்களில் கொக்கிகளையோ, ஊசிகளையோ பாவிக்காத பெண்கள் இரவிக்கைகளை முடிச்சுப் போட்டு முடிவதை அவதானித்திருக்கிறேன். கதாசிரியர் கச்சிதமான அவதானித்து எழுத்தில் பின்னி எடுத்திருக்கிறார். சந்தியில் சிற்பம் ஏற்ற நின்ற மதனலேனாளின் எடுப்பான மார்புகள் திமிர இரவிக்கையை முடிந்திருந்தாள் என்ற அந்த இடம் தொடர்ந்து வாசித்த எனது வாசிப்பில் பொருத்தமற்று நிற்கிறதோ என்று தோன்றுகிறது காரணம் பாடசாலையில் ஓஎல் படிக்கச் செல்லும் அவளின் இளைய மகள் லேடீஸ் சைக்கிளில் செல்லக்கூடிய அளவில் வைத்திருக்கும் நாகரீகமான நிலையில் இருக்கும் தாயாகிய அவள் எப்படி மெயின் ரோட்டில் ரவிக்கைக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் அநாகரிகமான தோற்றத்தில் நிற்க முடியும்? கதாசிரியர் எழுதியிருக்கும் தெளிவான காட்சிகள் சில இடங்களில் கதையின் ஓட்டத்திற்கு பொருத்தமின்றி நிற்பது போல் தோன்றினாலும் இந்தக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி வைக்கும் இடத்தில் கதாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மரியாம்பிள்ளையின் பிள்ளைப்பாசமும், கடந்த காலத்தை எண்ணி தனக்குள் உருகும் கணங்களும் முத்திரை பதிக்கும் இடங்களாக இருக்கின்றன. மற்றும் ஸ்ரெல்லாவுடன் பஸ்ஸில் சில்மிசம் செய்யும் இளைஞன் போன்ற இடங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.( மணியண்ணே ரைட் அழகாக வெளிப்பட்டிருக்கிறது) இதே மாதிரி நாவலின் சில கனமான இடங்களில் கொஞ்சம் விரிவுபடுத்தி கதாசிரியர் முத்திரை பதித்திருந்தால் ஈழத்து நாவல் இலக்கியத்தில் உச்சம் பெற்ற நாவலாக இது அமையும். ஒரே வீட்டிலேயே இரு சகோதரிகளையுமே ஒருவன் தன் வலையில் மாட்டியிருப்பதையும் தெளிவான சகோதரிகள் புரிந்து கொள்வதும், குற்றமற்ற நட்போடு வரும் கதரினைத் தவிர்ப்பதா கதைப்பதா என்பது மாதிரியான இடங்கள் ஒரு நாவலின் முழுமைத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. மற்றது கடலோடிகளின் வெள்ளிபார்த்த கணிப்புகள், மான்பாய்ஞ்சவெளிக் காற்றில் சைக்கிள் உலக்குவது எல்லாம் அருமையாக இருக்கிறது. ஒரு கடலோரக் கிராமத்தின் சுவார்ஸ்யமான கதையை இந்நாவலில் புகுத்திய கதாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொருவர் மனங்களுக்குள்ளும் இழையோடும் ஏக்கங்கள், சோகங்கள் அவர்களுக்கு மட்டுமானதாகவே உள்ளுக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியம் இந்நாவல்.

ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் விமர்சனம் செய்யும் முறைமைகள் எனக்குத் தெரியாது. இந்நாவல் பற்றிய ஒரு எண்ணப்பதிவே இது. தவறுகளும், பார்வைக்குழப்பங்களும் இருக்கக்கூடும் கதாசிரியர் தனது நாவலைப்பற்றிய என்னுடைய பதிவை எதிர்பார்ப்பதாக எழுதியிருந்தார் அதற்கிணங்கவே இதுவரை விமர்சனம் எழுதிப்பழக்கமில்லாதவள் எழுதியிருக்கிறேன். ஒரு இலக்கியப் படைப்பாளி இதனை எவ்வாறு எதிர் கொள்வார் என்பதனை அவர் மேற்கொள்ளும் பதிவில் இருந்தே அறிய முடியும். அத்தகைய பதிவை எதிர்பார்க்கிறேன். இதில் கதாசிரியருக்கு ஏதேனும் மனச்சங்கடம் ஏற்றட்டிருப்பின் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

சகாரா அக்கா, நூலை உங்கள் பார்வையில் அழகாய் சொல்லி இருக்கிறீங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பார்வைகள், கோணங்கள் இருக்கும். இந்தவகையில் நீங்கள் விபரிக்கின்ற சில விசயங்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக.. ஸ்ரெல்லாவின் காதல் விசயம், மற்றது மதனலேனாளின் எடுப்பான தோற்றம். கதாசிரியர் நீங்கள் சொன்னமாதிரி பல விசயங்களை நல்லாய் நினைவுபடுத்தி எழுதி இருக்கிறார். எனக்கும் வாசிக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்திச்சிது. நான் கடைசியாக ஊரில இருந்தது பதினைஞ்சு வருசங்களுக்கு முன்னம்தான். ஆனால்.. பல விசயங்களை நினைவுபடுத்திப்பார்ப்பதே கடினமாய் இருக்கிது. ஆனால் இங்கு நூலில் எத்தனையோ பல வருடங்களுக்கு முன்னர் தான் பெற்ற அனுபவங்களை, தரிசனத்தின் சிறிய சிறிய விபரங்களைக்கூட நுணுக்கமாக, அழகாக ஆசிரியர் வர்ணனை செய்து இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா, நூலை உங்கள் பார்வையில் அழகாய் சொல்லி இருக்கிறீங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பார்வைகள், கோணங்கள் இருக்கும். இந்தவகையில் நீங்கள் விபரிக்கின்ற சில விசயங்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக.. ஸ்ரெல்லாவின் காதல் விசயம், மற்றது மதனலேனாளின் எடுப்பான தோற்றம். கதாசிரியர் நீங்கள் சொன்னமாதிரி பல விசயங்களை நல்லாய் நினைவுபடுத்தி எழுதி இருக்கிறார். எனக்கும் வாசிக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்திச்சிது. நான் கடைசியாக ஊரில இருந்தது பதினைஞ்சு வருசங்களுக்கு முன்னம்தான். ஆனால்.. பல விசயங்களை நினைவுபடுத்திப்பார்ப்பதே கடினமாய் இருக்கிது. ஆனால் இங்கு நூலில் எத்தனையோ பல வருடங்களுக்கு முன்னர் தான் பெற்ற அனுபவங்களை, தரிசனத்தின் சிறிய சிறிய விபரங்களைக்கூட நுணுக்கமாக, அழகாக ஆசிரியர் வர்ணனை செய்து இருக்கிறார்.

கலைஞன் உங்கள் பார்வையும் எனது பார்வையும் வித்தியாசமாக இருக்குந்தானே. அதைப்போல கதாசிரியரின் பார்வையும் இன்னொரு விதமாக இருக்கும். இன்னும் வாசிக்கும் மற்றையோருக்கு இங்கு குறித்த எம்மூவரைக் காட்டிலும் வேறு விதமானமாகத் தோன்றும். மொத்தத்தில் வாசகர்கள் அத்தனை பேரையும்ஒரு கதாசிரியன் ஒரு நாவலில் திருப்திப்படுத்திவிட முடியாது என்பதை நீங்களும், நானும், ஏன் இந்நாவலைப்படைத்த கதாசிரியரும் உணர்வார். இந்நாவலை வாசித்த போது எனக்குள் தோன்றிய கருத்துகளை முழுவதையும் இங்கு எழுதாவிட்டாலும் சில இடங்களில் இப்படியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவற்றைத்தான் இங்கு குறிப்பிட்டிருந்தேன் கலைஞன். மற்றப்படி குறைகள் பிடிக்கும் நோக்கில் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் என்னைப்பற்றி… விமர்சனம் எழுதிப்பழக்கம் இல்லை. விமர்சனத்தின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான பார்வையும் என்னிடம் இல்லை ஆதலால் இங்கு நான் எழுதப் போகும் கருத்துகள் விமர்சனப்பார்வைக்குள் அடங்குமா இல்லயா என்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் ஒரு படைப்பாளியின் ஆக்கல் பிரசவம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. சிறுகதைகள் எழுதும் போதே திக்குமுக்காடும் நிலைகளும் அக்கதையைப்பல கோணத்தில் இருந்து பார்க்கும் பார்வைகளையும் திருப்திப்படுத்துவது என்பதும் எத்தகையது என்பதை அறிவேன் எனக்கும் அனுபவங்கள் உண்டு. ஒரு பெண்ணாகவும், ஒரு படைப்பாளியாகவும் பிரசவத்தின் அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன். இத்தகைய ஒரு நிலையிலிருந்தே எனது பார்வை இந்நாவலில் மீதான பார்வையாகப் படர்கிறது.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” கரையும் கரை சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தைத் தளமாகக் கொண்டு விரிந்திருக்கிறது. பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை அடிப்படையாகக் கொண்ட கடற்றொழில் செய்பவர்களின் வாழ்விற்குள் கரை தேடும் கட்டு மரங்களைத் தேடிச் சென்றிருக்கிறார் கதாசிரியர். நெய்தலின் வனப்பை தென்னோலைச் சலசலப்பாகவும், பழுத்த தென்னோலைகள் நெட்டுக்கழன்று விழும்போது காற்றின் திசைக்கு ஒப்ப அதனோடு பயணித்து தென்னையின் அடியில் வீழாது சற்றுத் தள்ளி விழும் ஒரு நிகழ்வை எழுதும்போது கதாசிரியர் கையாண்ட விதத்திலேயே அவர் அந்தக் கடற்கரையில ஓலை விழும் அழகையும் சலசலப்பும் அவரை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. விட்டுக் கொடுக்காத மனித சுபாவங்களும், காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக தொக்கி நிற்கின்றன.

சீதனம் வாங்கி மணந்தவர்களிடம் ஏற்பட்ட அந்தஸ்துப் பேதமும், பிரியங்கள் அற்ற வெறுமை தோய்ந்த வாழ்க்கையும் இந்நாவலின் மூலம் சொல்லாமல் கிடக்கும் சோகங்களைச் சொல்லிச் செல்கிறது. ஒரு தந்தைக்கு மகிழ்வளித்த அதே வீட்டில் மகனின் மனம் பறிபோவது நெருடலாக இருக்கிறது. ஸ்ரெல்லாவின் அம்மா இவ்விடயத்தில் தன் எதிர்ப்பை காட்டாமல் ஒதுங்குவது என்பது ஒழுக்க நெறிகளைச் சிதைத்துப் போடுவதாக அமைகிறது. ஒருநாள் பழக்கத்திலேயே வீட்டுக்கு அழைத்துச் செல்வதும், உரிமையோடு சரளமாகப்பழகுவதும் காதல் என்று பார்க்கத் தோன்றவில்லை. கதாசிரியர் மனங்களின் புனிதமான இணைப்பாகவே இக்காதலைச் சித்தரிக்க விழைந்தாலும் நாவலில் அதனை அதாவது அவ்விருவரின் சந்திப்பை இச்சந்திப்பு ஏற்படுத்தக்கூடிய மனப் போராட்டத்தை சித்தரிக்கத் தவறிவிட்டார். ஏனெனில் ஒரு இளம் விதவையான பெண்ணுக்கு இன்னொரு ஆண்மகனுடன் நட்பு ஏற்படுமாயின் அது அவளையும் அவள் சார்ந்த உறவுகளையும் எப்படியெல்லாம் சீரழிக்க முயலும் என்பதை அவளின் மனஞ்சார்ந்ததான போராட்டமாகவும், ஏற்கனவே காதல் என்று பழகி பின் ஏமாந்த விரக்தியில் இருக்கும் ஒரு இளைஞன் ஒரு விதவைப் பெண்ணான அவள்மீது தான் கொள்ளும் காதல் பற்றி தன்னிலை சார்ந்த சுயவிமர்சனத்தையும் செய்ய வேண்டிய ஒரு பகுதியை இந்நாவலின் தளத்தில் காண முடியவில்லை. இவ்விடத்தில் ஒரு மேலோட்டமாகக் கதை நகர்ந்திருக்கிறது. இவ்விடத்தை கதாசிரியர் தவற விட்டாரா அல்லது தவிர்த்து விட்டாரா என்பதை கதாசிரியர்தான் கூறவேண்டும்.

இந்நாவலில் சில சிறப்பம்சங்களான அந்தந்தப் பிரதேசத்தில் பாவிக்கப்படும் சொற்களை நாவலில் பயன்படுத்தியுள்ளார் உதாரணத்திற்கு “குட்டான்” என்கிற மாதிரியான சொற்கள் இன்று பேச்சில்கூட இல்லாமல் அற்றுப் போயிருக்கும் சொற்களாக இருக்கின்றன. அடுத்து இன்னொரு விடயம் மதனலேனாளின் ரவிக்கையின் முடிச்சுகள்… அந்தநாட்களில் கொக்கிகளையோ, ஊசிகளையோ பாவிக்காத பெண்கள் இரவிக்கைகளை முடிச்சுப் போட்டு முடிவதை அவதானித்திருக்கிறேன். கதாசிரியர் கச்சிதமான அவதானித்து எழுத்தில் பின்னி எடுத்திருக்கிறார். சந்தியில் சிற்பம் ஏற்ற நின்ற மதனலேனாளின் எடுப்பான மார்புகள் திமிர இரவிக்கையை முடிந்திருந்தாள் என்ற அந்த இடம் தொடர்ந்து வாசித்த எனது வாசிப்பில் பொருத்தமற்று நிற்கிறதோ என்று தோன்றுகிறது காரணம் பாடசாலையில் ஓஎல் படிக்கச் செல்லும் அவளின் இளைய மகள் லேடீஸ் சைக்கிளில் செல்லக்கூடிய அளவில் வைத்திருக்கும் நாகரீகமான நிலையில் இருக்கும் தாயாகிய அவள் எப்படி மெயின் ரோட்டில் ரவிக்கைக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் அநாகரிகமான தோற்றத்தில் நிற்க முடியும்? கதாசிரியர் எழுதியிருக்கும் தெளிவான காட்சிகள் சில இடங்களில் கதையின் ஓட்டத்திற்கு பொருத்தமின்றி நிற்பது போல் தோன்றினாலும் இந்தக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி வைக்கும் இடத்தில் கதாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மரியாம்பிள்ளையின் பிள்ளைப்பாசமும், கடந்த காலத்தை எண்ணி தனக்குள் உருகும் கணங்களும் முத்திரை பதிக்கும் இடங்களாக இருக்கின்றன. மற்றும் ஸ்ரெல்லாவுடன் பஸ்ஸில் சில்மிசம் செய்யும் இளைஞன் போன்ற இடங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.( மணியண்ணே ரைட் அழகாக வெளிப்பட்டிருக்கிறது) இதே மாதிரி நாவலின் சில கனமான இடங்களில் கொஞ்சம் விரிவுபடுத்தி கதாசிரியர் முத்திரை பதித்திருந்தால் ஈழத்து நாவல் இலக்கியத்தில் உச்சம் பெற்ற நாவலாக இது அமையும். ஒரே வீட்டிலேயே இரு சகோதரிகளையுமே ஒருவன் தன் வலையில் மாட்டியிருப்பதையும் தெளிவான சகோதரிகள் புரிந்து கொள்வதும், குற்றமற்ற நட்போடு வரும் கதரினைத் தவிர்ப்பதா கதைப்பதா என்பது மாதிரியான இடங்கள் ஒரு நாவலின் முழுமைத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. மற்றது கடலோடிகளின் வெள்ளிபார்த்த கணிப்புகள், மான்பாய்ஞ்சவெளிக் காற்றில் சைக்கிள் உலக்குவது எல்லாம் அருமையாக இருக்கிறது. ஒரு கடலோரக் கிராமத்தின் சுவார்ஸ்யமான கதையை இந்நாவலில் புகுத்திய கதாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொருவர் மனங்களுக்குள்ளும் இழையோடும் ஏக்கங்கள், சோகங்கள் அவர்களுக்கு மட்டுமானதாகவே உள்ளுக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியம் இந்நாவல்.

ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் விமர்சனம் செய்யும் முறைமைகள் எனக்குத் தெரியாது. இந்நாவல் பற்றிய ஒரு எண்ணப்பதிவே இது. தவறுகளும், பார்வைக்குழப்பங்களும் இருக்கக்கூடும் கதாசிரியர் தனது நாவலைப்பற்றிய என்னுடைய பதிவை எதிர்பார்ப்பதாக எழுதியிருந்தார் அதற்கிணங்கவே இதுவரை விமர்சனம் எழுதிப்பழக்கமில்லாதவள் எழுதியிருக்கிறேன். ஒரு இலக்கியப் படைப்பாளி இதனை எவ்வாறு எதிர் கொள்வார் என்பதனை அவர் மேற்கொள்ளும் பதிவில் இருந்தே அறிய முடியும். அத்தகைய பதிவை எதிர்பார்க்கிறேன். இதில் கதாசிரியருக்கு ஏதேனும் மனச்சங்கடம் ஏற்றட்டிருப்பின் மன்னிக்கவும்.

வல்வை சாகராவிற்கு உங்கள் விமர்சனத்தை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். எழுதியது சந்தோசம். உங்கள் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவது என் நோக்கமல்ல. இருப்பினும் ஒரு படைப்பாளியின் தன்னிலை விளக்கமாக இதை ஏற்றுக்கொள்வீர்கள் என கருதுகிறேன்.

அந்தோனி ஸ்ரெல்லாவின் மீதான தன் விருப்பத்தை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் பகுதி..

"எங்கெல்லாமோ சென்று அவனே எதிர்பார்க்காத வகையிலே, ஆஸ்பத்திரியில் கண்ட அவளில் வந்து நின்றது. அவளின் அமைதியான சிரிப்பும், பார்வையும், பழகிய பண்பும், அவன் நினைவுகளைத் திசை திருப்ப விடாமல் திரும்பத் திரும்ப அவளிடமே கொண்டு சென்று விட்டது.

"இவ்வளவு எளிதாக வேறொருத்தியால் பட்ட காயத்தை ஆற்றிக் கொண்டு, இவள் மேல் சலனப்படும் அளவிற்கு, தன்னுடைய மனம் வைராக்கியம் அற்றதா" என்று அந்தோனி தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

"பட்டபாடே போதும்.... இனி இந்த மாதிரி யோசிக்கவே கூடாது" என்ற அலைமோதும் எண்ணத்தின் தொடர்ச்சியாக...

"அவள் யாரென்றே தெரியாது....திருமணம் முடித்தவளா... இல்லையா என்று தெரியாது....ஒரு வார்த்தை ஆதரவாகப் பேசி விட்டாள் என்பதற்காக..."

தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து சிரித்தவன் - சற்று உரத்துச் சிரித்திருக்க வேண்டும்.

"என்ன அந்தோனி... சிரிச்சனியோ...| என்ற நட்சத்திரத்தின் ஆச்சர்யத்தொனி கலந்த கேள்வியினால், மீண்டும் சூழலை உணரும் நிலைக்கு வந்தான்.

மற்றது மூன்று மாதங்கள் மட்டுமே திருமண வாழ்வின் சுகந்தங்களைஅனுபவித்து தட்டிப்பறிக்கப்பட்ட அந்த வாழ்வை அந்த இளம்விதவை மீளப்பெறவேண்டும் என்ற என்விருப்பம் தவறானதா?

பாரதிதாசனின் "கோரிக்கையற்று கிடக்குதண்ணே..இங்கு வேரிற் பழுத்த பலா.." என்று வரிகள் வரும். கோருவார் அற்று கிடக்கும் அந்தசோகத்தை நினத்தேன்.

தந்தைக்கு மகிழ்வு தந்த வீட்டிலேயே மகன் உற்வு கொள்வது நெருடலாக இருந்தாலும் அப்படி நிகழ்வதின் சாத்தியம் இல்லையா?

நான் இதை பொதுமைப்படுத்தவில்லை. இப்படி நிகழ்ந்தது. அதனால் அவர்கள்வாழ்வு திசை திரும்பியது என்று சொல்லவந்தேன்.

“:அபூர்வராகங்கள்” படம் பார்த்தீர்களா?

மதனேளாவின் ரவிக்கை முடிச்சு பற்றிய பகு்தி இதுதான்..

ஏன் அதிகம் சொல்ல வேண்டும்? இந்தச் செக்கல் பொழுதில்...

ஐஸ், மரத்தூள் போட்டு மீன் நிரப்பிய மரப்பெட்டிகளை றோட்டுக்கரையில் அடுக்குவித்து விட்டு, அவற்றை கொழும்புக்கு கொண்டு போகும் மயிலிட்டி லொறிகளுக்காக காத்துக் கொண்டுதான் மதலேனா நிற்கிறாள்.

'வஞ்சனை'யின்றி வளர்ந்து விட்ட உடம்பில் சாரம் போல சுற்றியுள்ள கம்பாயமும், சட்டை ஊசிகளுக்கு க~;டம் கொடுக்காமல் முடிந்து விட்ட மேல்சட்டையும், கழுத்தில் தொடங்கி பின்னர் காணாமல் எங்கோ மறைந்து விட்ட சங்கிலியுமாக, வாயின் வெற்றிலைச்சாற்றை விரல்களின் ஊடே பீச்சியடித்துவிட்டு, நாரியில் கைதரித்து பலாலிச்சந்திப்பக்கமாக பார்த்துக்கொண்டு நின்றாள்.

இருள் கவ்வும் நேரத்தில் கணவன் செய்யவேண்டியதை தான் செய்யவந்த மதலேனாள் போட்ட அவச்ர முடிச்சு..

உங்கள் விமர்சனம் என்னை மனதளவில் எந்த வகையிலும் பாதிக்காது. யாழ்கள அன்பர்களில் என்நாவலைப் பெற்றுக்கொண்டவர்கள் என்று நான் நிச்சயமாக அறிந்த நீங்களும் கலைஞனும் விமர்சன்ம எழுதியது சந்தோசமே.

அன்புடன்

கே.எஸ்.பால்சச்நதிரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கே. எஸ். பாலச்சந்திரன் அண்ணா

Link to comment
Share on other sites

தந்தைக்கு மகிழ்வு தந்த வீட்டிலேயே மகன் உற்வு கொள்வது நெருடலாக இருந்தாலும் அப்படி நிகழ்வதின் சாத்தியம் இல்லையா?

இதை வாசிக்கும்போதுதான் எனக்கும் கதையின் அந்தப்பகுதி மீண்டும் நினைவுக்கு வருகின்றது. கதையில் தந்தையின் அதேபாணியில் மகனும் சென்றது... தந்தைக்கும் மகனுக்கும் கிட்டத்தட்ட ஒரேவிதமான அனுபவங்கள் ஏற்பட்டது.. சாத்தியப்படாத விசயம் என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும்... அதை கதையில் நீங்கள் கொஞ்சம் மாற்றி எழுதி இருக்கலாமோ என்று யோசிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வாசிக்கும்போதுதான் எனக்கும் கதையின் அந்தப்பகுதி மீண்டும் நினைவுக்கு வருகின்றது. கதையில் தந்தையின் அதேபாணியில் மகனும் சென்றது... தந்தைக்கும் மகனுக்கும் கிட்டத்தட்ட ஒரேவிதமான அனுபவங்கள் ஏற்பட்டது.. சாத்தியப்படாத விசயம் என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும்... அதை கதையில் நீங்கள் கொஞ்சம் மாற்றி எழுதி இருக்கலாமோ என்று யோசிக்கின்றேன்.

நன்றி கலைஞன், தந்தை திருமணம் முடித்து பிள்ளகளும் இருக்கும்போது வேறோரு பெண்ணோடு தொடர்பு கொண்டார். அந்தோனி அப்படியல்ல.அவன் அப்போது திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு பெண்ணினால் கைவிடப்பட்டபோது அவனுக்கு இந்த உறவு ஏற்பட்டது. அவனது வாழ்வில் திருமபவும் மாற்றத்தை அவனது பெற்றோரே கொண்டுவந்தார்கள்.

Link to comment
Share on other sites

ஓம் ஐயா... ஆனால்.. தந்தை நோண்டியாக்கிவிட்ட ஓர் குடும்பத்தினுள் மகனும் காலைவச்சுப் பார்த்தது எதிர்பாராதவிசயம் எண்டாலும்... நடைமுறை வாழ்வில கொஞ்சம் சிக்கலான விசயம்தானே. சிலவேளைகளில.. ஸ்ரெல்லாவின் தாயாருக்கு அந்தோனியின் அப்பா ஏமாற்றி இருந்தாலும்.. அவரில் உள்ளூர அன்பு இருந்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

கே.எஸ். இன் நாவலை நான் இன்னமும் படிக்கவில்லை.ஈழத்து எழுத்தாளர்கள்தான் என்றும் எனது முதல் சொய்ஸ்.படிக்க ஆவலாக இருக்கின்றது.

ஒரு வாசகன் அல்லது விமர்சகன் ஒரு நாவலை படித்தவுடன் அவனுக்கு மனதில் உடன்வரும் அயிப்பிராயமே உண்மையான விமர்சனம்.

எத்தனையோ ஆயிரம் பெயர்கள் நாவலை படிப்பார்கள் எல்லோருக்கும் தன்நிலை விமர்சனம் கொடுக்க முடியாது.வாசிப்பவனின் மனதிற்கு என்ன படுகின்றதோ அதை அப்படியே விட்டு விட வேண்டும் அதுவே உண்மை நிலை ஊட.

சிந்துபைரவி படம் பார்த்து வந்த கையுடன் பாலச்சந்தரை சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது.படம் எப்படி என்று கேட்டார்.மிக நல்ல தமிழ்படம் என்று சொன்னேன்.அதன் அர்த்தம் புரிந்து என்னுடன் வந்த நண்பர் எனது காலை உழக்கினார்.இருந்தாலும் சிவக்குமாரை கடைசியில் அப்படி ஒரு குடிக்காக "தண்ணீர்தொட்டி தேடிவந்த "பாடல் பாட வைத்திருக்க கூடாது என்று சொன்னேன்.அவருக்கு வந்ததே கோவம்.படமே அதுதான் என்று ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தார்.நீர் என்ன அப்படிச் சொல்கின்றீர் என்று எகிறிவிட்டார்.இன்றும் நான் அந்தப்படத்தை பார்க்கும் போது நான் சொன்னது சரி போல் தான் எனக்கு படுகின்றது.எனக்கு அவர் தன்னிலை விளக்கம் தேவையில்லை நான் படம் பார்த்தவுடன் எனக்கு வந்த அபிப்பிராயமே உண்மையான விமர்சனம்.

Link to comment
Share on other sites

தன்னிலை விளக்கமா.. யார் யாருக்கு கொடுக்கிறது? புரியவில்லை. ஒரு படைப்பை செய்த கதாசிரியர் அல்லது கலைஞன் தன்னிலை விளக்கம் கொடுக்காவிட்டால் அந்த படைப்பை வேறு பரிமாணங்களில் - கோணங்களில் பார்ப்பது மிகவும் கடினம் அல்லது முடியாது. சுவிட்சை போட லைட் எப்பிடி எரியுது எண்டு தெரியாட்டிக்கு வெறும் லைட்டை காண்பவர்களுக்கு - அனுபவிப்பவர்களுக்கு அதனால் பிரச்சனை இல்லை. ஆனால்.. அதை உருவாக்குபவர்களுக்கு ஆதி அந்தம் தெரிஞ்சிருக்க வேண்டும். எனவே, விமர்சனங்கள் வரும்போது படைப்பாளி தனது படைப்புபற்றிய விளக்கத்தை நிச்சயம் கொடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பக்கங்களை பார்வையிடுங்கள். நன்றி

http://ksbcreations.blogspot.com/2009_12_17_archive.html

http://ksbcreations.blogspot.com/2009_12_26_archive.html

http://ksbcreations.blogspot.com/2009_12_16_archive.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.