Jump to content

இளமை 20 : 36 வயதிலும் அசைக்க முடியாத ஹீரோ சச்சின்


Recommended Posts

tblfpnnews_52751886845.jpg

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 16வயதில் இந்திய அணிக்காக "பேட்' பிடித்த இவர், 36 வயதிலும் அசைக்க முடியாத "ஹீரோவாக' ஜொலிக் கிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 175 ரன்களை விளாசிய இவர், தனது ஆட்டத்தில் இன்னும் இளமை மாறவில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்தார். மிக நீண்ட காலமாக அசத்தி வரும் இவரது சாதனை பயணத்தை பார்ப்போம். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இளம் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். அண்ணன் அஜித் ஊக்கம் அளிக்க, உள்ளூர் போட்டிகளில் தூள் கிளப்பினார். முதலில் பள்ளி அளவிலான "ஹாரிஸ் ஷீல்டு' போட்டியில் சாதித்து காட்டினார். சிரத்தாஸ்ரமம் பள்ளி அணிக்காக ஆடிய இவர் வினோத் காம்ப்ளியுடன் (349) சேர்ந்து 664 ரன்கள் சேர்த்தார். இதில் சச்சின் மட்டும் 329 ரன்கள் விளாசினார். தியோதர், துலீப், இரானி டிராபி தொடரில் அசத்திய இவர், ஒரு நாள் வலை பயிற்சியின் போது கபில் தேவ் பந்துவீச்சைசுலபமாக சமாளித்தார். இதைகவனித்த மும்பை அணியின் கேப்டன் வெங்சர்க்கார், இவரை தேர்வு செய்தார். இந்த சீசனில் மும்பை அணி சார்பில் அதிக ரன் எடுத்து சாதித்தார் சச்சின். இதையடுத்து இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.

டெஸ்ட் அறிமுகம் : கடந்த 1989, நவ. 15ம் தேதி கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சச்சின் அறிமுகமானார். அப் போது அவருக்கு வயது 16 தான். இப்போட்டியில் பாகிஸ்தான் "வேகங்களை' மிக எளிதாக சமாளித்த இவர் 15 ரன்கள் எடுத்தார். சியால் கோட்டில் நடந்த கடைசி டெஸ்டில் வக்கார் யூனஸ் வீசிய பந்து சச்சினின் வாயில் பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்த கேப்டன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் "இளம் கன்று பயமறியாது' என்பதற்கேற்ப சிகிச்சை கூட எடுத்துக் கொள் ளாமல் தொடர்ந்து துணிச்சலாக ஆடினார். தனது 17வது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் சதம் விளாசினார். தொடர்ந்து கலக்கிய இவர் டெஸ்டில் அதிக சதம், அதிக ரன் எடுத்து சாதித்தார்.

ஒரு நாள் போட்டியில் : கடந்த 1989, டிச., 18ம் தேதி குஜ்ரன்வாலாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சச்சின் அறிமுகமானார். இதில் வக்கார் யூனஸ் பந்தில் "டக்' அவுட்டானார். முதல் போட்டி ஏமாற்றம் அளித்த போதும், பின்னர் துவக்க வீரராக களமிறங்கி திறமை நிரூபித்தார். 78வது ஒரு நாள் போட்டி வரை சதம் அடிக்காதஇவர், இன்றைக்கு அதிக சதம்,அதிக ரன் அடித்து மகத்தானசாதனையாளராக உள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 175 ரன்களளை விளாசிய இவர், ஒரு நாள் அரங்கில் 17 ஆயிரம் ரன்களை கடந்து, மற்ற வீரர்களால் எட்ட முடியாத சாதனையை நிகழ்த்தினார். இவர் மைதானத்தில் களமிறங்கினாலே ஏதாவது ஒரு சாதனை அரங்கேறிவிடும் என வர்ணிக்கப்படும் அளவுக்கு தொடர்ந்து சாதித்து வருகிறார். "இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால்; சச்சின் தான் கடவுள்' என்று கூறலாம். நாட்டில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இவர், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். இதனால் தான் இவரது பெயரில் "காமிக்ஸ்' புத்தகங்கள் கூட எழுதப்பட்டன.

சில சர்ச்சைகள் : கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் சச்சின் பெரிய அளவில் சர்ச்சை எதிலும் சிக்கவில்லை. 2001ல் நடந்த தென் ஆப்ரிக்க தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக இவர் மீது புகார் எழுந்தது. பின்னர் இதிலிருந்து விடுபட்டார். டெஸ்ட் அரங்கில் 29வது சதம் அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பான் பிராட்மேன் சாதனையை சமன் செய்ததற்காக, இவருக்கு "பெராரி' கார் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை இந்தியாவுக்கு கொண்டு வர வரிவிலக்கு கோரியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின்னர் பெராரி கார் நிறுவனமே வரியை செலுத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டது.

ஒழுக்கமானவர் : கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ள சச்சின், சொந்த வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமானவர். களத்தில் எதிரணி வீரருடன் வீணாக மோதிக் கொள்ளாத இவர், மிகவும் பணிவானவர். புகழின் உச்சியில் இருந்த போதும் அடக்கத்துடன் நடந்து கொள்வார். இதனால் தான் அடுத்த தலைமுறை வீரர்களின் "ரோல் மாடலாக' உள்ளார். தனது குழந்தை சச்சின் போல வரவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கும் அளவுக்கு மிகச் சிறந்த வீரராக உள்ளார்.

அடுத்த இலக்கு : வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க காத்திருப்பதாக சச்சினே அறிவித்துள்ளார். இவர் 2015, உலக கோப்பை தொடரிலும் விளையாடுவார் என கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர், கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் கடக்க வேண்டும், உலக கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். இதனை மனதில் வைத்து இன்னும் பல ஆண்டுகள் விளையாடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார் என நம்புவோம்.

நிரந்தர முதல்வன் : ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்துள்ளார் சச்சின். இதுவரை 436 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள இவர் 45 சதம், 91 அரைசதம் உட்பட 17178 ரன்கள் எடுத்துள்ளார். 154 விக்கெட், 132 கேட்ச் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (13377 ரன்கள்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (12311 ரன்கள்) உள்ளனர்.

சத நாயகன்: ஒருநாள் போட்டியில் இதுவரை 45 சதம் பதிவு செய்துள்ள சச்சின், அதிக சதம் கடந்தவர்கள் வரிசையில் முதலிடத்தில்நீடிக்கிறார். இவரை தொடர்ந்து பாண்டிங் மற்றும் ஜெயசூர்யா(இலங்கை)இருவரும் தலா 28 சதம் பதிவு செய்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

டெஸ்டிலும் "ஹீரோ' : டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை சச்சின் தன்வசப்படுத்தியுள்ளார். இவர் இதுவரை 159 டெஸ்ட் போட்டியில் விளையாடி 42 சதம், 53 அரைசதம் உட்பட 12773 ரன்கள் எடுத்துள்ளார். 44 விக்கெட், 102 கேட்ச் பிடித்துள்ளார்.

* டெஸ்ட் போட்டியில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின்முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 42 சதம் பதிவு செய்துள்ளார்.

தொடர் நாயகன் : ஒருநாள் போட்டியில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இவர் 14 தொடரில் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (11 முறை), தென் ஆப்ரிக்காவின் போலக் (9 முறை) உள்ளனர்.

சகவீரர்கள் யாருமில்லை : கடந்த 1989,நவ., 15ல் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார் சச்சின். அப்போது முதல் டெஸ்டில் இவருடன் விளையாடிய இந்திய வீரர்கள் யாரும் இப்போது அணியில் இல்லை. இவர் மட்டும் இன்னும் நீடிக்கிறார். அந்த அணி விபரம்:ஸ்ரீகாந்த் (கேப்டன்), சித்து, மஞ்ச்ரேக்கர், அசார், மனோஜ் பிரபாகர், சச்சின், ரவி சாஸ்திரி, கபில் தேவ், கிரண் மோரே, அர்ஷத் அயூப், சலீல் அங்கோலா.

தவறான தீர்ப்புகள் : அம்பயர்களின் தவறான தீர்ப்புகளால் கிரிக்கெட் அரங்கில் அதிகம் பாதிக்கப் பட்ட வீரர் சச்சின் தான். கடந்த 1997 ம் ஆண்டு முதல் இது வரை சுமார் 63 முறை அம்பயர்கள் சச்சினுக்கு தவறாக தீர்ப்புஅளித்துள்ளனர்.

இது உண்மை... :

* சச்சின் சதம் அடித்த போட்டிகளில் இந்திய அணியின் நிலைமை?

சச்சின் ஒரு நாள் போட்டிகளில் 45 சதம் அடித்துள்ளார். இதில், 32 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி "சேஸ்' செய்த போட்டிகளில் சச்சின் 14 சதம், 28 அரை சதம் உட்பட 5033 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 56. 55 சதவீதம். ஒரு நாள் தொடரில் 39 பைனல்களில் சச்சின் விளையாடி உள்ளார். இவற்றில் 6 சதம் 10 அரை சதம் உட்பட 1833 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 55.54 சதவீதம். இது ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை (40 போட்டி, 1344 ரன்கள்) விட அதிகம்.

* சச்சின் பலவீனமான அணிகளுக்கு எதிராக அதிக ரன் குவித்துள்ளாரா?

இந்தக் கருத்தும் பொய் தான். சச்சின் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகம் சாதித்துள்ளார். டெஸ்டில் 7, ஒரு நாள் போட்டிகளில் 9 சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்துள்ளார். இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட உலகின் தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிராகவும் அதிக ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

* நெருக்கடியான நேரங்களில் சச்சின் சொதப்புகிறார் என்ற கருத்து உண்மையா?

இல்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த 5 வது ஒரு நாள் போட்டியில் தனி ஆளாக இந்திய அணியின் வெற்றிக்குப் போராடிய சச்சின் 175 ரன்கள் குவித்தார். பைனல் போட்டிகளில் 6 சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் தான். வெற்றி இலக்கை "சேஸ்' செய்த போட்டிகளில் சச்சின் 17 சதங்களை கடந்துள்ளார். இதில் 14 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

* அந்நிய மண்ணைக் காட்டிலும் இந்திய மண்ணில் அதிகம் சாதித் துள்ளாரா?

இந்தியாவை காட்டிலும் அந்நிய மண்ணில் தான் சச்சின் அதிகம் சாதித் துள்ளார். டெஸ்ட் அரங்கில் சச்சின் பதிவு செய்த 42 சதங்களில் 24 அந்நியமண்ணில் அடித்தவை. இந்தியாவில் அடித்தவை 18 சதம். ஒரு நாள் அரங்கில் அடித்த 45 சதங்களில் அந்நிய மண்ணில் அடித்தவை 28. இந்தியாவில் 17 சதங்கள்.

சச்சின் வாழ்க்கையில் "மறக்க முடியாத 20' : 1. சச்சின் டெண்டுல்கரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்திய மொழியில் நாவல்கள் பல எழுதியுள்ளார். பிரபல இசை அமைப்பாளர் சச்சின் தேவ் வர்மன் மீதான ஈர்ப்பின் காரணமாக, தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் என பெயரிட்டார்.

2. தனது சிறு வயதில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று தான் சச்சின் விரும்பினார். போதிய உயரம் இல்லாததால்,ஆஸ்திரேலிய பவுலர் டெனிஸ் லில்லி, சச்சினை பேட்டிங்கில் கவனம் செலுத்தும்படி ஆலோசனை வழங்கினார்.

3. சச்சினின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேகர் "ஸ்டெம்பின்' மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, சச்சினை அவுட்டாக்கும்பவுலர்களுக்கு அது பரிசு என்பார்.பவுலர்கள் தோல்வி அடைய, சச்சின் 13 நாணயங்களை பரிசாகப் பெற்றார்.

4. தன்னை விட 5 வயது மூத்த அஞ்சலியை கடந்த 1995 ம் ஆண்டு காதலித்து மணந்தார் சச்சின். இவர்களுக்கு சாரா(12 வயது) என்ற மகளும், அர்ஜூன்(10 வயது) என்ற மகனும் உள்ளனர்.

5. அடுத்தவர்களுக்கு உதவும் குணம்சச்சினுக்கு அதிகம் உண்டு. "அப்னாலயா' என்ற என்.ஜி.ஓ., மூலம் 200 ஏழைக் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் "ஸ்பான்சர்' செய்து வருகிறார்.

6. பேட்டிங், பவுலிங், பீல்டிங் எனஅனைத்திலும் வலது கை பழக்கம்கொண்டவர் சச்சின். ஆனால் எழுதுவதும், ரசிகர்களுக்கு "ஆட்டோ கிராப்'வழங்குவதும் இடது கையில் தான்.

7. சச்சின் 14 வயதில் இருக்கும் போது, கவாஸ்கர் தனது கால் "பேடுகளை' அவருக்குப் பரிசாக வழங்கினார். தவிர, ரஞ்சிக் கோப்பையில் முதன் முதலாக களமிறங்கும் போது, திலீப் வெங்சர்க்கார் தனது "பேட்டை' சச்சினுக்கு பரிசளித்தார்.

8. கடந்த 1999 ம் ஆண்டு உலககோப்பை தொடரின் போது, சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மரணமடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின், மீண்டும் இங்கிலாந்து திரும்பினார் சச்சின். கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அதனை தந்தைக்கு சமர்ப்பித்தார்.

9. ராஜிவ் கேல் ரத்னா (1997-98), அர்ஜூனா விருது (1994), பத்ம ஸ்ரீ (1999), விஸ்டன் சிறந்த வீரர் விருது (1997), பத்ம விபூஷன் (2008) ஆகிய விருதுகளை சச்சின் பெற்றுள்ளார்.

10. "ஆல்-டைம்' சிறந்த டெஸ்ட், ஒருநாள் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 2 வது இடம் வழங்கி சச்சினை கவுரவித்துள்ளது பிரபல விஸ்டன் இதழ்.

11. நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 1994 ம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியில், காயம் காரணமாக துவக்க வீரர் சித்து விலகினார். இதனால் சச்சின் முதன் முதலாக துவக்க வீரராக களமிறங்கினார்.

12. பிராட்மேன், சுனில் கவாஸ்கர், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், சனத் ஜெயசூர்யா, பிரையன் லாரா ஆகியோரது ஆட்டங்கள் சச்சினை மிகவும் கவர்ந்தவை.

13. திருமணத்துக்குப் பின் தீபாவளி திருநாளை தனது குடும்பத்தாருடன் சச்சின் இதுவரை கொண்டாட வில்லை. இடைவிடாத போட்டிகள் தான் இதற்கு காரணம்.

14. ஒரு முறை பி.பி.சி., தொலைக்காட்சியில் பேட்டி அளித்த சச்சினிடம், உங்கள் கனவுப் பெண் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சச்சின்,எனது மனைவி அஞ்சலி தான் என்றுபதிலளித்தார்.

15. ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் "50' சிறந்த கிரிக்கெட் வீரர்கள்பட்டியலை கடந்த 2007 ம் ஆண்டு வெளியிட்டார். அதில் சச்சினுக்கு முதலிடம் அளித்து பெருமைப் படுத்தினார்.

16. உலக பிரபலங்களை கவுரப்படுத்தி வரும் லண்டனை சேர்ந்த "மேடம் டுஸாட்ஸ்' மியூசியம், சச்சினுக்கு மெழுகுச் சிலை தயாரித்து அவரை பெருமைப்படுத்தியது.

17. 1992 ம் ஆண்டு முதல் இதுவரை 5 உலககோப்பை (50 ஓவர்) தொடர்களில் விளையாடியுள்ள சச்சின், வரும் 2011 ம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை தொடரில் விளையாட காத்திருக்கிறார்.

18. தொடர்ந்து அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனைக்கும் சச்சின் தான் சொந்தக்காரர். இவர் 185 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.

19. ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் (8,227) சேர்த்த ஜோடி (176 இன்னிங்ஸ்) என்ற பெருமையை சச்சின், கங்குலி ஜோடி பெற்றுள்ளது.

20. ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 17 முறை 90 ரன்களுக்கு மேல் எடுத்து சதத்தை நழுவ விட்டுள்ளார் சச்சின். இப்பட்டியலிலும் இவர் தான் முதலிடம்.

சரியாத சச்சின் "மார்க்கெட்' : கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்த வீரர் என்ற பெருமை பெற்றவர் சச்சின்.தவிர, விளம்பர தூதராக அதிக பணம் சம்பாதித்த கிரிக்கெட் வீரரும் இவர் தான். 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்தி வரும் சச்சின், முதன் முதலாக "பூஸ்ட்' விளம்பரத்தில் சக வீரர் வினோத் காம்ப்ளியுடன் தோன்றினார். அதற்குப் பின் 100 விளம்பரங்களுக்கு மேல் தோன்றியுள்ளார். 20 ஆண்டுகளாக விளம்பர மார்க் கெட்டில் நீடிக்கும் அவரது மதிப்பு குறையவில்லை. கடந்த 1995 ம் ஆண்டு சர்வதேச தொலைதொடர்பு நிறுவனமான "வேர்ல்டு டெல்', சச்சினை ரூ. 30 கோடிக்கு விளம்பர தூதராக நியமித்தது. இதே நிறுவனம் 2001 ம் ஆண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 80 கோடிக்கு சச்சினுடன் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டது.

ரூ. 180 கோடி ஒப்பந்தம் : இதனையடுத்து ஷாட்சி அண்டு ஷாட்சி விளம்பர நிறுவனம், சச்சினை ரூ. 180 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. "பாலிவுட்' சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாருக் கானுக்கு நிகராக விளம்பர உலகில் கொடிகட்டிப் பறக்கிறார்.

மூன்று ஓட்டல்கள் : இவற்றை தவிர, சச்சின், "டெண்டுல்கர்ஸ்', "சச்சின்ஸ்' என்ற பெயர்களில் மும்பையிலும் "சச்சின்ஸ்' என்ற பெயரில் பெங்களூருவிலும் ஓட்டல்களை நடத்தி வருகிறார்.

தற்போது சச்சினிடம் உள்ள விளம்பர ஒப்பந்தங்கள்:பெப்சி (1992 முதல்), கேனான் (2006-2009), சன்பீஸ்ட் (2007-2014), பூஸ்ட் (2002 முதல்), அடிடாஸ் (2000-2010), ரெனால்ட்ஸ் (2007 முதல்), ஈ.ஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (2002 முதல்), சான்யோ பி.பி.எல்.,(2007 முதல்). இவைகள் தவிர்த்து கோல்கேட் பாமோலிவ், எம்.ஆர்.எப், பிலிப்ஸ், விசா, அவிவா, ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து ஆகிய நிறுவனங்களும் சச்சினை ஒப்பந்தம் செய்துள்ளன.

பிராட்மேன் பாராட்டு : சச்சின் ஆட்டம் குறித்து கருத்து மறைந்தஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட் மேன் கூறுகையில்,"" சச்சின் ஆட்டத்தை நேரில் பார்த்ததில்லை. பலமுறை"டிவி'யில் பார்த்துள்ளேன். அவர் என்னைப்போலவே விளையாடுகிறார். தற்போது நான் விளையாடவில்லை என்றாலும் எனது ஆட்டத்தை சச்சினிடம் பார்க்கிறேன்,'' என்றார்.

கனவுத் தொல்லை : ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவான்வார்ன் கூறுகையில்,"" நான் தூங்கும் போதுகனவில் கூட, எனது பந்தை இறங்கி வந்து சிக்சர் அடிப்பது போல உள்ளது. எனது தூக்கத்தில் கூட தொல்லை தரும்வீரர் இவர் தான்.பிராட்மேனுக்கு அடுத்து சிறந்த வீரர் சச்சின் தான்,'' என்றார்.

இரண்டாவது இடம் : அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சச்சின் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 436 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார். முதலிடத்தில் இலங்கையில்ஜெயசூர்யா (441 போட்டி) நீடிக்கிறார்.

ஆட்ட நாயகன் : ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் இதுவரை 60 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (48 முறை), வெஸ்ட்இண்டீசின் ரிச்சர்ட்ஸ் மற்றும் இந்தியாவின் கங்குலி தலா 31 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் கடவுள் : கிரண்மோரே (முன்னாள் இந்திய வீரர்): பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அவரை கவனித்தேன். அச்சுறுத்தும் பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை துணிச்சலாக எதிர்கொண்டார். அப்போதே, இவர் இந்திய அணிக்காக மிக நீண்ட காலம் விளையாடுவார் என எனக்குத் தோன்றியது. முதல் போட்டியில் இருந்த அவரது துணிச்சலான திறன் தான், காயம் காரணமாக சிறிது காலம் ஓய்வு எடுத்தாலும், மீண்டும் வெற்றிகரமாக திரும்பி வரச் செய்கிறது. அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் கடவுள்.

சூப்பர் ஜோடி ; ஒருநாள் போட்டியில் எந்த ஒரு விக்கெட் டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் சச்சின்,டிராவிட்முதலிடத்தில்உள்ளனர். இந்த ஜோடி (1999, எதிரணி நியூசி.,) 2வது விக்கெட் டுக்கு அதிகபட்சமாக 331 ரன்கள் சேர்த்தது.

கிரிக்கெட்டின் "சூப்பர் மேன்' : அஜித் வடேகர் (முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர்): என்னைப்பொறுத்த வரையில் கிரிக்கெட்டின் "சூப்பர் மேன்' சச்சின் தான். ஏனெனில் நீண்ட காலமாக வெற்றிகரமாக தொடர்ந்து இருந்து வருகிறார்.சச்சினை கடந்த 1989ல் இருந்தும், அதற்கு முன்பும் பார்த்து வருகிறேன். அவர்கடவுளால் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டஅதிசயம்.20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தாலும்அவரது ரன் எடுக்கும் வேட்கை இன்னும் குறையவில்லை என்பதற்கு, ஐதராபாத்தில் அவர் எடுத்த ரன்களே சாட்சி.

source:dinamalar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சச்சின் இதுவரை 5 உலகக்கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார். இதில் இந்தியா ஏதாவது ஒரு கோப்பையை வென்றுள்ளதா?

ரிக்கி பொன்டிங்குடன் சச்சினை ஒப்பிட முடியாது. பொன்டிங் ஒரு சிறந்த மட்டையாளர் மட்டுமல்ல ஒரு சிறந்த தலைவரும் கூட. மூன்று தடவை உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற அவர் அதில் இரண்டு தொடர்களுக்குத் தலைவராகவும் இருக்கின்றார். சராசரியில் இருவரும் சமநிலையிலேயே உள்ளனர்

சச்சின்

  • டெஸ்ட் 54.58
  • ஒருநாள் 44.50

பொன்டிங்

  • டெஸ்ட் 55.88
  • ஒருநாள் 43.19

(இது 16 நவ. 2009 cricinfo.com தகவலை அடிப்படையாக கொண்டது)

இன்று(16 நவ. 2009) அகமதாபாதில் இலங்கையுடன் ஆரம்பமாகிய முதலாவது டெஸ்ட்டில் சச்சின் 4 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். அவர் களமிறங்கும் போது இந்தியா 27/2 என்ற நிலையில் இருந்தது. ஆட்டம் இழந்த போது 31/3 என்று ஆகியது. ஒருகட்டத்க்டில் இந்தியா 32/4 என்ற பரிதாபமாக இருந்தது. ஆனால் முதலாவது விக்கட் 14 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டபோது களமிறங்கிய ட்ரவிட் 177 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரின் பொறுப்பான சிறப்பான ஆட்டத்தால் முதல்நாள் முடிவில் இந்தியா 385/6 என்ற வலுவான நிலையில் இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் யார் மிகச் சிறந்த வீரர் என்று.

ஒருவரை இன்னுமொருவருடன் கிரிக்கட் விளையாட்டில் ஒப்பிட கூடாது என்பதே எனது வாதம். திறமை மட்டுமல்ல அதிகாரத்தில் செல்வாக்கும் இருந்தால் 20 வருடங்கள் அல்ல வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் கிரிக்கட் விளையாடலாம்.

Link to comment
Share on other sites

சச்சின் மட்டுமே உலக கோப்பை போட்டியில் விளையாடுவதாக நினத்துவிட்டீர்களா?ஆவ்ரோடு விளையாடும் அனைத்து வீரர்களையும் சார்ந்தது தான் வெற்றி என்பது.உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்றவர் சச்சின் என்பது ஒரு தகவல்

பாண்டிங் சிறந்த வீரர்தான் யார் இல்லை என்று சொன்னது.ஆஸ்திரேலிய அணி மிகச்சிறந்த வீரர்களை கொண்டுள்ளது.டிராவிட் 177 அடித்தால் போதுமா? மற்ற வீரர்கள் ஆட வேண்டாமா? இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றுவிட்டால் டிராவிட் அடித்த ரன்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சச்சின் மட்டும் ஆடவில்லை என்பது உண்மைதான். 1983 உலகக் கோப்பையின் போக்கை தனி ஒருவராக நின்று சிம்பாப்வேக்கு எதிரான உலககிண்ண கோப்பை ஆட்த்தில் கபில்தேவ் ஆடிய ஆட்டத்துக்கு நிகரான ஆட்டம் இதுவரை சச்சின் ஆடவே இல்லை.

தனித்து ஒருவரால் போட்டியை மாற்றமுடியும் என கபில் அன்று நிரூபித்தார்.

இவ்வரிசையில் வஸீம் அக்ரம், இம்ரான் கான், லான்ஸ் குளூஸ்னர், ஷோன் பொலக், விவ் ரிச்சாட்ஸ், லாறா, விட்டோரி, ஜயசூரியா என்பவர்களை சொல்லலாம். இவ் வரிசையில் பரிதாபம் சச்சின் வரமாட்டார். புள்ளி விபரங்கள் ஒருபோதும் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை.

இந்தியா தோற்குதோ இல்லையோ இங்கு ட்ராவிட் அடித்த ரன்கள் தேவையான நேரத்தில் பெறப்பட்ட ரன்கள். இனி எந்த ஒரு பிரஷரும் இல்லாமல் 2வது இன்னிங்ஸில் சச்சின் ஒரு சதம் அடித்தாலும் அடிப்பார். சச்சினால் ஒரு போதும் அணியின் பிரஷருக்கு ஈடுகொடுத்து ஆடமுடியாது. மற்றவன் வழியக் கிளியர்பண்ணி விட சச்சின் கும்பலோடு கோவிந்தா. இவ்வாறான ஒரு சச்சினின் பொறுப்பான ஆட்டத்தினை குறிப்பிடுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் மட்டும் ஆடவில்லை என்பது உண்மைதான். 1983 உலகக் கோப்பையின் போக்கை தனி ஒருவராக நின்று சிம்பாப்வேக்கு எதிரான உலககிண்ண கோப்பை ஆட்த்தில் கபில்தேவ் ஆடிய ஆட்டத்துக்கு நிகரான ஆட்டம் இதுவரை சச்சின் ஆடவே இல்லை.

தனித்து ஒருவரால் போட்டியை மாற்றமுடியும் என கபில் அன்று நிரூபித்தார்.

இவ்வரிசையில் வஸீம் அக்ரம், இம்ரான் கான், லான்ஸ் குளூஸ்னர், ஷோன் பொலக், விவ் ரிச்சாட்ஸ், லாறா, விட்டோரி, ஜயசூரியா என்பவர்களை சொல்லலாம். இவ் வரிசையில் பரிதாபம் சச்சின் வரமாட்டார். புள்ளி விபரங்கள் ஒருபோதும் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை.

இந்தியா தோற்குதோ இல்லையோ இங்கு ட்ராவிட் அடித்த ரன்கள் தேவையான நேரத்தில் பெறப்பட்ட ரன்கள். இனி எந்த ஒரு பிரஷரும் இல்லாமல் 2வது இன்னிங்ஸில் சச்சின் ஒரு சதம் அடித்தாலும் அடிப்பார். சச்சினால் ஒரு போதும் அணியின் பிரஷருக்கு ஈடுகொடுத்து ஆடமுடியாது. மற்றவன் வழியக் கிளியர்பண்ணி விட சச்சின் கும்பலோடு கோவிந்தா. இவ்வாறான ஒரு சச்சினின் பொறுப்பான ஆட்டத்தினை குறிப்பிடுங்கள் பார்க்கலாம்.

அகபர் கான் உன்மையை சொன்னால் உலகம் நம்பாது :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.