Jump to content

பூகோள அரசியல் சதுரங்கம் : சீன-இந்தியப் போர் மூளுமா?


Recommended Posts

உங்கள் ஆக்கபூர்வமான முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் இசைக்கலைஞன். இன்றுதான் முழுமையாக படித்து முடித்தேன். சிலந்தி வலைபோல் சிக்கலான இந்த முரண்பட்ட பிணைப்பில் இருந்து எமது தேசம் விடுபடுதல் என்பதும் சிங்களத்தின் பிடியில் இருந்து விடுபடுதல் என்பதும் ஒன்றாகவே அமைந்துள்ளது. இந்த முரண்பட்ட உலக அரசியலை சிங்களம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றது என்பது அதன் ராஜதந்திரம் என்பதை விட ஒருவிதமான நல்லகாலமும் அதே நேரம் தமிழர்தரப்பு மீது தனித்துவமான நம்பிக்கையை பிறநாடுகள் வைக்கமுடியாதளவு தமிழர் சிதைந்து கிடப்பதும் என்று சொல்லலாம்.

ஒரு வகையில் சீன இந்திய மற்றும் மேற்கு நாடுகள் நலன்சார்ந்த அரசியல் என்பது இறுக்கமாகிக் கொண்டே போகின்றது. ஈரானின் பெருமளவு எண்ணைவளத்தை சீனா மற்றும் ரசியா கட்டுப்படுத்துகின்றது. வளைகுடா மீதான யுத்தம் என்ற போர்வையில் அமரிக்காவும் அதுசார்பு நாடுகளும் இந்த வளத்தை கட்டுப்படுத்துகின்றது. ஆபிரிக்க பிராந்தியத்தில் சீனாவின் ஆழுமையே வலுப்பெறுகின்றது. பொருளாதார நலனை மையமாகவைத்த இந்த நகர்வு இறுகிக் கொண்டே போகும் போது சிங்கள அரசு ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு பக்கத்திற்கு போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது தவிர்க்கமுடியாமல் ஏற்படும். நாம் ஒரு பலமான சக்தியாக ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் மறுதரப்பு எம்மை பயன்படுத்த முனைய அந்த முனைவோடு எமது விடுதலை சாத்தியப்பாடாக அதிக வாய்பிருக்கின்றது. ஆனால் எமது நிலை கவலைக்கிடமாக சிதைந்து இருப்பது துர்ரதிஸ்டம்.

இந்த ஆய்வில் முரண்படும் நாடுகள் சிங்களத்தை கைக்குள் வைத்திருக்க பெரும்பிரயச்சித்தம் மேற்கொள்கின்றதை அறிய முடியும். சீனாவின் டாங்கிகள் ரசியாவின் மிக் விமானங்கள் இந்தியாவின் கலன்கள் உதவிகள் அமரிக்க இஸ்ரேல் ஈரான் என எல்லாம் எம்மை சிதைத்தது. உலகநாடுகளின் பொருளாதார நலன்சார்ந்த முரண்பாடுகள் சிங்களத்துக்கு சாதகமாக அமைவதற்கு ஒருவகையில் எமது ஒற்றுமையின்மை காரணமாக அமைகின்றது.

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • Replies 51
  • Created
  • Last Reply

"இன்னும் மூன்றே ஆண்டுகளில், அதாவது 2012ம் ஆண்டுக்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கப் போகிறது" என்று அடித்துச் சொல்கிறார் பரத் வர்மா. ‘இண்டியன் டிஃபென்ஸ் ரிவ்யூ’ என்ற புகழ்பெற்ற பாதுகாப்புத் துறை பத்திரிகையின் ஆசிரியரான இவர், தேசத்தின் முக்கியமான பாதுகாப்பு நிபுணரும்கூட!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65558&page=2#entry551329

 

மேலே உள்ள கருத்தைத் தெரிவித்த பரத் வர்மா இப்போது என்ன சாட்டை வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.. ஆனால் ஆருடம் சொன்ன அவரது செய்கையால் இன்று அவரது நம்பகத்தன்மை கீழிறங்கிவிட்டது என்பதைச் சொல்லத்தேவையில்லை..

 

இங்கே களத்திலும் ஆருடம் சொல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.. நாளை என்ன நடக்கும் என்பதை யாரறிவார்? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.