Jump to content

பத்துலட்சம் வேணுமென் தோழி தடையிருளிலிருந்து தப்பிக்க….


Recommended Posts

(15.09.09 தடைமுகாம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பில் தொடர்பு கொண்ட பெண் போராளி ஒருத்தியின் குரல் இது)

கன்னங்கள் நனைத்த கண்ணீர்ச் சொட்டுக்கள்

மெல்லக் காய்ந்து போகிறது.

காலத்திடம் தோற்றுப் போய் மர்மம் நிறைந்த

இருட்பொழுது தன் இருப்புக்காய் இயல்பாகிறது.

எல்லாம் இழந்து நடுத்தெருவில் சனங்கள்.

புதைகுழிகளுக்கான அகழிகள்

புதிது புதிதாய் பிறப்பெடுக்கிறது.

அற்புதங்கள் அநாமதேயமாய்

வியாபாரிகளின் கணக்குகளிலிருந்து

விடுபடுகிறார்கள்….

நாங்கள் போனதும்

உயிர் கொடுத்ததும் இதற்காகத்தானா….?

*‘போராடுங்கள்

சாவு உங்களுக்குச் சர்க்கரையல்லவா*

சொன்னவர்களல்லவா நீங்கள்….

இன்று சாவோடு கம்பிவேலிகளுக்குள்

சமராடிய கைகள் ஓய்ந்து

சத்தமிட்ட குரல்கள் ஒடிந்து

இரவுகளில் ஈனக்குரல்கள் அவர்களின்

போதை மயக்கத்தில் புணரப்படுகிறோம்…*

காப்பாற்றும் கைகளைச்

சேர்த்துவிட்டுக் கதையடி என்றவளே….!

ஒற்றையாய் நின்றுன் குரலை

ஓவென்றுழுது கேட்கத்தான் முடிகிறது…..

கற்றையாய் சேர்த்து அனுப்ப யாருமிங்கு

காசுடன் இல்லையடி…..

19வருடத்தை இந்த இனத்துக்காய்

ஏனிழந்தேனென அழுதவளே….!

பத்துச்சதம் உய்வதற்கே

பலகேள்வி கேட்போரிடம் போய்

பத்துலட்சம் வேணுமென் தோழி

தடையிருளிலிருந்து தப்பிக்க என்றால்

எவர் கைகொடுப்பரென்று தெரியிவில்லையடி….

முயற்சி திருவினையாகுமோ….?

முடிந்தால் மறுமுறை அழை சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

(15.09.09 தடைமுகாம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பில் தொடர்பு கொண்ட பெண் போராளி ஒருத்தியின் குரல் இது)

எல்லாம் இழந்து நடுத்தெருவில் சனங்கள்.

நாங்கள் போனதும்

உயிர் கொடுத்ததும் இதற்காகத்தானா….?

19வருடத்தை இந்த இனத்துக்காய்

ஏனிழந்தேனென அழுதவளே….!

பத்துச்சதம் உய்வதற்கே

பலகேள்வி கேட்போரிடம் போய்

பத்துலட்சம் வேணுமென் தோழி

தடையிருளிலிருந்து தப்பிக்க என்றால்

எவர் கைகொடுப்பரென்று தெரியிவில்லையடி….

வணக்கம் சாந்திஅக்கா

மீண்டும் ஒரு

சோக சுமைகளோடு

நீங்கள்

கண்ணில் கண்ணீரோடு

நாங்கள்

இப்படி இன்னும் எத்தனை எத்தனை பேரோ........

இதுக்கு முடிவே இல்லையா???????

இவர்களுக்கு விடிவே இல்லையா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையான ஒரு போராளியின் கருத்தா..??!

போராளிகள் சரணடைவதில்லை.. சரணடையக் கூடாது என்று சாவை அணைத்தவர் வழியில் பயணிக்கப் புறப்பட்டு.. எந்த உத்தரவாதமும் அற்ற சூழலில்.. சரணடைந்த போது எங்கே போனது.. இந்தக் கேள்விகள்..??!

எதிரியை வழிமறிக்க வேண்டிய இடங்களில் வரவிட்டு.. இறுதியில் சுற்றி வளைத்துவிட்டான்.. சரணடைந்தோம் என்பது.. போராளிகளுக்குரிய குரலாகத் தெரியவில்லை...??!

இறுதித் தமிழன் உள்ளவரை போராடுவோம் என்றதும் நாம்.. இறுதியில் எந்த எதிரிக்கு எதிராகப் போராடினோமோ.. அவனிடமே சரணடைந்ததும் நாம்..??! இன்று அவலப்படுவதும் நாம்..??!

இங்கு யாரில் தவறு..???! எதிரியிலா எம்மிலா..???!

இயலாமைகளை மக்களுக்கு மறைத்தது தவறா.. மக்களை மாயைக்குள் கட்டி வைத்து.. இன்று வதைபடுவது.. தவறா..???!

சங்கரையும்.. மில்லரையும்.. திலீபனையும்.. கண்டு வந்தவர்களா.. சரணடைந்தார்கள்.. ஏன்..???! சரணடையும் போது.. செய்வது துரோகம் என்று எண்ணவில்லையா..??! சரணடைதலுக்குரிய சூழலை ஏன் உருவாக அனுமதிக்க வேண்டும்..???! அனுபவமின்மையா..??! இல்லையே..!!

இருந்தும்.. போராடிய எதிரியிடமே சரணடைந்தது யார் குற்றம்.. மக்களதா..???!

ஒரு வார்த்தை.. போராட முடியாத கட்டம் வரும் எனில் சரணடைவோம் என்று ஒரு வார்த்தை மக்களுக்கு சொல்லப்பட்டதா இல்லையே. சொல்லப்பட்டதெல்லாம்.. இறுதி மூச்சுவரை போராடுவோம் என்பதே. எங்கே போனது அந்தக் குரல். எங்கே போனது எடுத்த சத்தியங்கள்...??!

ஒருவேளை.. நீங்கள் போராடுவீர்கள் என்று நம்பி.. சத்தியத்தின் வழி போனவர்களை ஏமாற்றியதற்கான பாவமோ.. இந்தத் தண்டனைகள்..! :(:lol:

Link to comment
Share on other sites

அண்மையில் 4 லட்சம் 4 பேரிடமும் வாங்கி இந்தியாவுக்கு கொண்டு செல்வதாக இருந்தது. ஒரு வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டிருந்தார்கள். யாராலோ காட்டி கொடுக்கப்பட்டு அன்றிரவு இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்கள். சம்பவம் வவுனியாவில் நடைபெற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு! ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று தலைமை எடுத்த முடிவின் பின் இவர்கள் எவ்வாறு இறுதிவரை போராடுவது? அவர்களுக்கு இருந்த தெரிவு குப்பி கடிப்பது அல்லது சரணடைவது. 10 000 க்கும் மேற்பட்ட போராளிகளும் குப்பி கடித்திருக்கவேண்டும் என்கிறீர்களா? கடைசி கட்டத்தில் அவர்களின் நிலை பாரியதொரு பிரளயத்தில் சிக்குண்ட நிலை. எனவே தயவுசெய்து அவர்களை துரோகிகளென்றும் கொள்கை மறந்தவர்களென்றும் சித்தரிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு! ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று தலைமை எடுத்த முடிவின் பின் இவர்கள் எவ்வாறு இறுதிவரை போராடுவது? அவர்களுக்கு இருந்த தெரிவு குப்பி கடிப்பது அல்லது சரணடைவது. 10 000 க்கும் மேற்பட்ட போராளிகளும் குப்பி கடித்திருக்கவேண்டும் என்கிறீர்களா? கடைசி கட்டத்தில் அவர்களின் நிலை பாரியதொரு பிரளயத்தில் சிக்குண்ட நிலை. எனவே தயவுசெய்து அவர்களை துரோகிகளென்றும் கொள்கை மறந்தவர்களென்றும் சித்தரிக்காதீர்கள்.

50,000 படையினரை 10,000 போராளிகள் ஒரு முனையில் தானும் தடுத்து நிறுத்தி தம்மை தமது தலைமையை போராட்டத்தை காக்க முடியவில்லையா..???! 3000 போராளிகள் 100000 இந்தியப் படைகளை எதிர்கொண்டு தாக்குப் பிடித்ததை விட இது எப்படிக் கடினமானது..??!

மக்களுக்கு எப்போதும் சொல்லப்படவில்லை.. சரணடையும் நிலை எமக்கு வந்தால் சரணடைவோம் என்று. சொல்லப்பட்டதெல்லாம்.. இறுதி வரை போராடுவோம் என்பதே.

இதை நான் அவர்களைத் துரோகிகள் என்று சொல்ல சொல்லவில்லை. இத்தனை பெரிய போராட்ட அனுபவத்தைக் கொண்ட தலைமை.. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கூட ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையத் துணியாத தலைமை ஒருவித உத்தரவாதமும் அற்ற சூழ்நிலைக்குள் போராளிகளையும் போராட்டத்தையும் கொண்டு வந்து விட்டு.. போராளிகளைச் சரணடையச் சொன்னதா..???! ஏன் எதற்காக...????!

இவ்வளவு ஆயிரம் ஆயுதங்கள்.. மீதம் இருந்தும்.. ஏன் இத்தனை ஆயிரம் போராளிகள் இருந்தும்.. ஏன் பின்வாங்கி ஒரு திறந்தவெளி அரங்கை தக்க வைக்கலாம் என்று நினைத்தார்கள். தலைவர்.. தலைமை.. என்ன இராணுவ பரிமானம் அறியாதவையா இருந்தனவா..???! :(:lol: :lol:

Link to comment
Share on other sites

இது உண்மையான ஒரு போராளியின் கருத்தா..??!

போராளிகள் சரணடைவதில்லை.. சரணடையக் கூடாது என்று சாவை அணைத்தவர் வழியில் பயணிக்கப் புறப்பட்டு.. எந்த உத்தரவாதமும் அற்ற சூழலில்.. சரணடைந்த போது எங்கே போனது.. இந்தக் கேள்விகள்..??!

எதிரியை வழிமறிக்க வேண்டிய இடங்களில் வரவிட்டு.. இறுதியில் சுற்றி வளைத்துவிட்டான்.. சரணடைந்தோம் என்பது.. போராளிகளுக்குரிய குரலாகத் தெரியவில்லை...??!

இறுதித் தமிழன் உள்ளவரை போராடுவோம் என்றதும் நாம்.. இறுதியில் எந்த எதிரிக்கு எதிராகப் போராடினோமோ.. அவனிடமே சரணடைந்ததும் நாம்..??! இன்று அவலப்படுவதும் நாம்..??!

இங்கு யாரில் தவறு..???! எதிரியிலா எம்மிலா..???!

இயலாமைகளை மக்களுக்கு மறைத்தது தவறா.. மக்களை மாயைக்குள் கட்டி வைத்து.. இன்று வதைபடுவது.. தவறா..???!

சங்கரையும்.. மில்லரையும்.. திலீபனையும்.. கண்டு வந்தவர்களா.. சரணடைந்தார்கள்.. ஏன்..???! சரணடையும் போது.. செய்வது துரோகம் என்று எண்ணவில்லையா..??! சரணடைதலுக்குரிய சூழலை ஏன் உருவாக அனுமதிக்க வேண்டும்..???! அனுபவமின்மையா..??! இல்லையே..!!

இருந்தும்.. போராடிய எதிரியிடமே சரணடைந்தது யார் குற்றம்.. மக்களதா..???!

ஒரு வார்த்தை.. போராட முடியாத கட்டம் வரும் எனில் சரணடைவோம் என்று ஒரு வார்த்தை மக்களுக்கு சொல்லப்பட்டதா இல்லையே. சொல்லப்பட்டதெல்லாம்.. இறுதி மூச்சுவரை போராடுவோம் என்பதே. எங்கே போனது அந்தக் குரல். எங்கே போனது எடுத்த சத்தியங்கள்...??!

ஒருவேளை.. நீங்கள் போராடுவீர்கள் என்று நம்பி.. சத்தியத்தின் வழி போனவர்களை ஏமாற்றியதற்கான பாவமோ.. இந்தத் தண்டனைகள்..! :):(

நெடுக்காலைபோவான் இந்தக்குரல் ஒரு போராளியின் குரல்தான். இந்தப் போராளி போன்று ஆயிரமாயிரமாய் சரணடைந்தவர்களை ஏன் சரணடைந்தீர்கள் என கேட்கும் எந்த அருகதையும் எனக்கில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் செய்த தவறுகள் இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது என்பதே என முடிவு.

இந்தப்பிள்ளைகள் நம்பியவர்களே கடைசியில் அவரவர் அவரவரைக்காப்பாற்றுங்கோ என கடைசியில் கையைவிரித்துவிட்டு சரணடைந்து இன்று இராணுவ மரியாதைகளுடன் தலையாட்ட இந்தச் சாததாரண போராளிகளை எந்தக் கேள்வியும் கேட்ட முடியவில்லை.

இத்தகைய வெளிப்பாடுகளை இயல்பாக விபச்சாரமாக விபரிக்கும் கருத்தாளர்களின் வீரமாக இன்றை அவர்களின் உயிர்்வாழ்வு அசிங்கப்படுத்தப்படும் போது எந்தக்கருத்தையும் சொல்ல முடியவில்லை.

புலத்துச்சாமிகள் முகாம்களில் உள்ள போராளிகளைக் காசுகொடுத்து மீட்பதாக புலத்தில் பல இடங்களில் பணம் சேர்க்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் குடும்பங்களைத் தவிர வசதியில்லாத போராளிகளால் இப்படி யாரையேனும் கெஞ்சத்தான் முடியும்.

Link to comment
Share on other sites

நெடுக்கு! ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று தலைமை எடுத்த முடிவின் பின் இவர்கள் எவ்வாறு இறுதிவரை போராடுவது? அவர்களுக்கு இருந்த தெரிவு குப்பி கடிப்பது அல்லது சரணடைவது. 10 000 க்கும் மேற்பட்ட போராளிகளும் குப்பி கடித்திருக்கவேண்டும் என்கிறீர்களா? கடைசி கட்டத்தில் அவர்களின் நிலை பாரியதொரு பிரளயத்தில் சிக்குண்ட நிலை. எனவே தயவுசெய்து அவர்களை துரோகிகளென்றும் கொள்கை மறந்தவர்களென்றும் சித்தரிக்காதீர்கள்.

காட்டாறு உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். நம்பியோர் நடுத்தெருவில் விட்டுவிட்டுத் தப்ப இவர்களால் எந்த முடிவை எடுக்க முடியும் ? ஒரு குப்பி கூடவா கிடைக்கவில்லை உங்களுக்கென ஒரு போராளியிடம் கேட்டதுக்கு அவள் சொன்ன பதில் இங்கு எழுத முடியவில்லை. எஞ்சிய அந்தப் பிள்ளைகளை எந்த வன்மமோ கோபங்களாலோ சொற்களாலோ காயப்படுத்தாமல் எங்கள் எழுத்தாளர்கள் இருக்க வேண்டும்.

ஒருத்தி சொன்னாள் தங்களுக்கு 17வருடமாகத் தெரிந்ததெல்லாம் சென்றியும் ஆமியின் குரலும் துவக்கும் கடுமையான வாழ்வும்தான் இதைவிட்டு ஆமியை தொகைதொகையாகக் கண்ணுக்கு முன் ஆயுதங்கள் இன்றி பார்த்த போது என்ன செய்திருக்கலாம் என்கிறாய் என்றாள். இங்கிருந்து எல்லாவகையிலும் சுதந்திரம் விடுதலை பற்றி முழக்கமிடுவது சுலபம் பல்குழல் முன்னின்று பார்த்துவிட்டல்லவா மிகுதியைப் பறைய வேண்டும்.

Link to comment
Share on other sites

50,000 படையினரை 10,000 போராளிகள் ஒரு முனையில் தானும் தடுத்து நிறுத்தி தம்மை தமது தலைமையை போராட்டத்தை காக்க முடியவில்லையா..???! 3000 போராளிகள் 100000 இந்தியப் படைகளை எதிர்கொண்டு தாக்குப் பிடித்ததை விட இது எப்படிக் கடினமானது..??!

மக்களுக்கு எப்போதும் சொல்லப்படவில்லை.. சரணடையும் நிலை எமக்கு வந்தால் சரணடைவோம் என்று. சொல்லப்பட்டதெல்லாம்.. இறுதி வரை போராடுவோம் என்பதே.

இதை நான் அவர்களைத் துரோகிகள் என்று சொல்ல சொல்லவில்லை. இத்தனை பெரிய போராட்ட அனுபவத்தைக் கொண்ட தலைமை.. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கூட ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையத் துணியாத தலைமை ஒருவித உத்தரவாதமும் அற்ற சூழ்நிலைக்குள் போராளிகளையும் போராட்டத்தையும் கொண்டு வந்து விட்டு.. போராளிகளைச் சரணடையச் சொன்னதா..???! ஏன் எதற்காக...????!

இவ்வளவு ஆயிரம் ஆயுதங்கள்.. மீதம் இருந்தும்.. ஏன் இத்தனை ஆயிரம் போராளிகள் இருந்தும்.. ஏன் பின்வாங்கி ஒரு திறந்தவெளி அரங்கை தக்க வைக்கலாம் என்று நினைத்தார்கள். தலைவர்.. தலைமை.. என்ன இராணுவ பரிமானம் அறியாதவையா இருந்தனவா..???! :):D:(

இந்திய இராணுவ காலத்தில் நடந்தது சற்லைட் போரல்ல. இந்திய இராணுவ காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றைய ஊருக்குத் தொடர்பு கொள்ள இந்தியஇராணுவம் வீதிவீதியா பரப்பிய வயர் எத்தனைகிலோ மீற்றர் தூரம் வரை நீண்டிருக்கும் ? அப்படியான வளர்ச்சியில் நின்றுபிடிப்பதற்கும் அதுவும் ஒற்றை நாட்டுடன். இந்தப்போரில் உலகின் பலநாடுகளின் துணையும் பலமும் இருக்க யாரை யார் குற்றம் சொல்ல முடியும்.

கரந்தடியுத்தமும் மரபுவழி இராணுவ யுத்தமும் வெவ்வேறுபட்ட தளங்களில் நடைபெறுபவை.

இவற்றையெல்லாம் விட முக்கியமான விடயம் தவறுகளை தட்டிக்கேட்டுச் சீர்படுத்தக்கூடியவர்கள் அன்று இருந்தார்கள். ஆனால் துதிபாடி தங்கள் இருப்பையும் வசதியையும் பாதுகாத்ததும் பதவிகளில் குந்தியமையும் இன்றைய வீழ்ச்சிக்கு முக்கால்பங்கை ஆற்றியிருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் இதுதான் யதார்த்தமாக உள்ளது.

ஏன் சரணடையச் சொன்னார்கள் ஏன் சரணடைந்தார்களஇ என்பதை ஆராய்ந்து சொல்ல இனி ஆராவது ஓய்வுபெற்றபின் வருவார்கள் அது எரிக்சொல்கைமாகவும் இருக்கும் அல்லது வேறு யாராகவுமு் இருக்கும்.

Link to comment
Share on other sites

கட்டாயம் அந்தப் போராளிக்கு உதவவேண்டும்.உதவமுடியுதோ இல்லையோ அது உங்களின் நிலைப்பாடு. ஆனால்

தயவுசெய்து அந்தப் போராளிகளை ஒருதரும் விமர்சிக்கவேண்டாம்.

Link to comment
Share on other sites

கட்டாயம் அந்தப் போராளிக்கு உதவவேண்டும்.உதவமுடியுதோ இல்லையோ அது உங்களின் நிலைப்பாடு. ஆனால்

தயவுசெய்து அந்தப் போராளிகளை ஒருதரும் விமர்சிக்கவேண்டாம்.

உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் சரணடைவதில்லை என்று சொல்லி அவர்களை மரணம் கொள்ளச் செய்து அதைப் புனிதமாகக் கொண்டாடவே புலம்பெயர் தமிழரால் முடியும்..

50,000 படையினரை 10,000 போராளிகள் ஒரு முனையில் தானும் தடுத்து நிறுத்தி தம்மை தமது தலைமையை போராட்டத்தை காக்க முடியவில்லையா..???!

போராட்டத்தின் தலைமை பாதுகாப்பாகத்தான் உள்ளது. மீண்டும் வெளிப்படும்போது கடவுள் காட்சி தருவார். தமிழர்கள் சமதர்ம சோசலிச தமிழீழக் குடியரசில் தலை நிமிர்ந்து வாழ்வார்கள். நாங்கள் அடுத்த காட்சி பார்க்கத் தயாராகுவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.