Jump to content

வவுனியா ராடர் தளம் தாக்கியழிப்பில் வீர காவியமான கரும்புலிகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

09-09-08

IMG5139-1252455665.jpg

deepam11.gif

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்

நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்

ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

போய் வருகின்றோம் போய் வருகின்றோம்

என்று இவர் எம்மிடம் சொல்வார்கள்

இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம்

புன்னகையாலே கொல்வார்கள்.

பொத்தி பொத்தி கைகளில் இவரை

பூவாய் வளர்கிறோம்

கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை

ஊட்டி புயலாய் வளர்க்கிறோம்

காலம் வரையும் தோள்களில்

இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..)

இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே

மறைவாய் அழுகிறோம்

உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே

உறவினை வளர்ப்பார்கள்

இந்த உறவுகள் ஒருநாள் விலகதும் இன்றி

எரிந்திட போவார்கள்

பாட்டும் கூத்தும் பகிடியுமாக

பால்குடி போல் இருப்பர் (பாட்டும்..)

பகைமீதினில் இவர்கள் மோதிடும் போதும்

ஞானிகளா இருப்பர்

வெடித்திடும் நாளை விரல்களில்

எண்ணி கணக்கெடுத்து இருப்பார்கள்

இந்த வேளையும் பகைவர் மிதினில்

எரியும் விருப்பினில் இருப்பார்கள்

அடிக்கடி எழுதும் வரிகளில்அண்ணன்

முகத்தினை கேட்பார்கள் (அடிக்கடி...)

வழி அனுப்பிடும் கடைசி நொடியினில்

எங்கள் உயிரினில் பூப்பார்கள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்

நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்

ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு வணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

மாவீரர் நினவுகளுடன் வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கை நோக்கிய தீர்க்கம், அர்பணிப்பு, தற்கொடை அனைத்துமிருந்தும், இன்றைய நிலையை எண்ணி மனம் கனக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சிய வீரர்கள் வீழ்வது இல்லை.............

மரணங்களில்தான் அவர்கள் பிறக்கின்றார்கள்.

ஒரு மில்லரால் ஒரு நூறு பேரை உருவாக்க முடிந்ததெனில்..... உங்கள் ஒரு நூறு பேரால் ஒரு ஆயிரம் பேர் ஒருவாகுவதும் சாத்தியமே.

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள். :wub:

படத்தை பார்க்க இருதயமே வெடித்துவிடும் போல இருக்கின்றது. எத்தனை கனவுகள், எவ்வளவு ஆசைகளுடன் சென்றார்கள். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடியும்.... விடியும் என்றார்கள் விடியல் தேடி சென்றார்கள்!

கண்கண்ட தெய்வங்கள் நீங்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாண்ட புலி வீரர் கனவு பலிக்கும்.. மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்..!

ஒப்பற்ற தியாகங்கள் இந்த உலகில்.. அழிவதில்லை..! விடுதலைப் போராளிகளும் அவ்வகையினரே. விடுதலைப் போராட்டங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் போராளிகளின் நினைவுகள் அழிக்கப்பட்டதாக வரலாறில்லை.

இன்றும் ஒரு சேகுவரா வாழ்கிறான் என்றால்.. அதுதான் போராளிகளின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த பூமிப்பந்தில் எத்தனை மனிதர்கள் பிறக்கிறார்கள்.. சாகிறார்கள். எவராவது அவர்களை நினைக்கின்றாரா..! நிலங்களை போராயுத பலங்கள் விழுங்கலாம்.. போராளிகளின் கல்லறைகளை உடைக்கலாம்... சிதைக்கலாம்.. ஆனால்.. மக்களுக்காய் வீழ்ந்த போராளிகள்.. மக்களால் மனங்களில் எப்போதும் பூஜிக்கப்படுவர். அதை எந்த எதிரியாலும் எந்தப் போராயுதத்தாலும் தடுக்க முடியாது..! :wub:

Link to comment
Share on other sites

மாவீரர்களே உங்கள் கனவு என்றாவது பலிக்கும். ஓராயிரம் ஆண்டாலும் உங்களை தமிழ் மக்கள் நினைவு கூருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

IMG5139-1252490626.jpg

IMG5139-1252490706.jpg

IMG5139-1252490836.jpg

IMG5139-1252490916.jpg

IMG5139-1252491013.jpg

IMG5139-1252491273.jpg

IMG5139-1252491369.jpg

IMG5139-1252491463.jpg

IMG5139-1252491551.jpg

IMG5139-1252491634.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ஈடேது இணையேது...இறுதிவரை உங்கள் நினைப்பின்றித் துணையேது'

உங்களின் காலடி பட்ட மண்ணைத் தொட்டு வணங்குவோம் வீரர்களே..வீரவணக்கம்!!

அன்புத் தம்பி 'குட்டிப்பையன்26'.!.எல்லோரும் நடந்துமுடிந்த கடைசி நாட்களை யார் அழகாக சொல்லி முதலிடம் பெறுவது என்றும்

ஏற்பட்ட ராணுவதோல்விக்கு தலைவர் பொறுப்பா..பொட்டர் பொறுப்பா என்று கணணிக்கு முன்பாக அமர்ந்தும் தொலைக்காட்சி

கமேராவுக்கு முன்பாகவும் ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கும்போது தமிழினத்துக்காக தம்மை அர்ப்பணித்தவர்களின்

நினைவு நாளை ஞாபகமாக மீட்டியதற்கு என் வணக்கங்கள்.

குட்டிப்பையன்26..எதிரிகளுக்கு விலைபோய் இப்போது போராட்டத்தை திட்டித்தீர்க்கும் எழுத்துக்களால் மனது சோர்ந்து விடாதீர்கள்.

தொடர்ந்து உங்கள் விடுதலைப் பணி தொடரட்டும்.

'எல்லா கருமேகங்களும் முதல் வெடிச் சத்தம் கேட்டதும் விலகிஓடும்'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிரர்களே உங்களுக்கு எனது வீர வணக்கங்கள்...

எந்த ஓர் உயரிய நோக்கத்துக்காக உங்கள் உயிர்களை இந்த மண்ணுக்காக தியாகம் செய்தீர்களோ அந்த நோக்கம் நிறைவேறும் வரை அயராது உழைப்பதே எங்கள் பணியாகும்..... உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்.....

Link to comment
Share on other sites

தமிழ்த்தாய் மானங்காக்க வெகுண்டெழுந்து

தற்கொடையாய் தமையீந்த தன்மானத் தமிழர்களே!

வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கத்தையும் விமர்சிக்கும் கேடுற்றோர் மத்தியிலே

விடுதலையின் கண்களில் கொடுந்தீயிடுவோர் மத்தியிலே

இந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் வணங்கி நிற்கிறோம்.

கண்களில் பொங்கும் நீரைக் காட்டிலும்

நெஞ்சப் பெருவெளி வலிக்கிறது தேவரீர்,

கல்லறை மேனியரே கண் திறந்து வருக.

ஊன்,உயிர் உருகும் தேவர்களை அடையாளப்படுத்துக

அடிக்கின்ற காற்றுக்கு அள்ளுண்டு போகும் சருகுகளை

துடைத்து தூய்மைப்படுத்துக.

Link to comment
Share on other sites

வீழ்ந்த பேரிடியில்,

திக்குத் தொலைத்து

ஆன்மா மண்ணில் துவள்கிறது..

இனி அவரவர் பாடு என்றே,

மௌனித்து அடங்கும் வேளை,

நினைவு நாள் படங்களில்

உங்கள் திருமுகங்கள்..

பார்வையாலே கேட்கிறீர்,

"எங்களை மறந்து எங்கு

செல்கிறாய்" என்று.

உங்களை மறக்க,

இன்னுமொருமுறை

பிறக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

வீரமறவர்களுக்கு எம் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

வீர வணக்கம்..

எங்கே எங்கே..ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.