Jump to content

ஆட்டா மாவில் என்ன செய்யலாம் ?


Recommended Posts

மாச்சத்துக் குறைந்த (diet ) தோசை (சைவம்)

ஆரோக்கியமான(diet) தோசை அடுத்து வரும் என்று சொன்ன ஆளையே காணவில்லை என்றுதானே யோசிக்கிறீர்கள். இதோ அந்தத் தோசை எப்படிச் செய்வது என்பதைப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்

1 கப் தோலுள்ள உழுத்தம் பருப்பு

2 கப் ஆட்டா மா (atta flour)

1/2 கப் ரவை

தேவையான அளவு தண்ணீர்

தேவையான அளவு உப்பு

செய் முறை

உழுத்தம் பருப்பை 4 மணித்தியாலம் ஊறவிடவும். பின் அதைக் கழுவி, அரைவாசித் தோலை நீக்காமல் அரைத்தெடுக்கவும்.

ஆட்டா மாவை நீராவியில் அவித்து, கட்டிகளை கைகளால் பிசைந்து மாவாக்கவும். அரைத்து வைத்த உழுந்துடன் மாவையும் ரவையையும் சேர்த்து உப்பும் தேவையானளவு இட்டு 6 மணித்தியாலம் புளிக்க விடவும்.

குளிர் காலங்களில் அவிணை (oven) சூடாக்கி பின் நிப்பாட்டிவிட்டு, அதற்குள் தோசைமாவை இரவுமுழுவதும் வைத்தால் புளித்துவிடும்.

பின்பு, தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுடவும்.தடிப்பான தோசையாகவும் சுடலாம்; மெல்லிய முறுகல் தோசையாகவும் சுடலாம்.

இந்தத் தோசையில் மாச்சத்து மிகவும் குறைவாகவும் , புரதச் சத்து கூடுதலாகவும் உள்ளது. இதை பருப்பும் தக்காளியும் சேர்த்துச் செய்த கறியுடன் இன்னும் கூடுதல் புரதம் கிடைக்கிறது. இந்தத் தோசையைச் சுடும்போது எதுவித எண்ணெயும் பாவிக்கக் கூடாது.

பருப்பும் தக்காளியும் சேர்ந்த கறிக்கும் எண்ணெய் பாவிக்கக் கூடாது.

பருப்பபை வேறாகச் சமைக்கவும். தக்காளியை உப்பு, தூள், இஞ்சி,புதினா இலை சேர்த்து அவித்தபின், மசிக்கவும். பின்னர் அவித்தபருப்பையும் இதனுடன் கலந்துவிடவும். மெல்லிய நெருப்பில் சூடாக்கிய பின் தோசையுடன் பரிமாறலாம்.

ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு இந்த தோசை ஒன்றும், ஒரு கப் இந்தக் கறியுமே போதும். ஆரோக்கியமான சாப்பாடாக இருக்கும்.

[இது எனது ஆக்கம் இல்லை, இணையத்தளத்தில் சுட்ட ஆட்டமாத் தோசை :icon_mrgreen:]

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆ.......................10 கிலோவா அடேயப்பா எடை கூடி , இடை இல்லாமல் போகப்போகுது :lol:

நான் எவ்வளவு 1226.gif சாப்பிட்டாலும் ...... எனது எடை ஒரு அளவிற்கு மேல் அதிகரிப்பது இல்லை கறுப்பி . சிலரின் உடம்பு வாசி அப்படி என்று நினைக்கின்றேன் . :lol:

அய் ஆட்டாமா எங்கட சின்னப்புவையே இந்தப்பக்கம் இழுத்து வந்திட்டுது பிறகென்ன?

சிறி எங்கட வீட்டை நாங்கள் கோதுமை மா பாவிக்கிற இல்லை அதற்குப் பதிலாக ஆட்டாமாத்தான்

பாவிக்கிறனாங்கள்.

சோ பயப்படாம கோதுமைமாவில என்ன என்ன செய்யுறீங்களோ அதெல்லாம் ஆட்டாமாவிலயும்

செய்யலாம். கோதுமையை விட ஆட்டாமா உடம்புக்கும் நல்லது.

இன்று எங்க வீட்டில் ஆட்டாமா தோசை :)

ரசிகை ,

ஆட்டாமா , சின்னப்புவை மட்டுமல்ல ........ பலகாலம் யாழிற்கு வராமல் இருந்த

குளக்காடன் , ஆதிபன் , முனியம்மா

ஏன் உங்களையும் வரவழைத்தது தான் smiley-computer002.gif எனக்கு ஆச்சரியமாக உள்ளது .

நாங்கள் ஒரு சில உணவு வகைகளை ஆட்டாமாவில் செய்து பார்த்தோம் ,

நல்ல சுவையாகவும் , வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது .

இவ்வளவு காலமும் அதன் அருமை தெரியாமல் இருந்துவிட்டோமே என்று யோசித்தோம் . :D:lol:

ஆஆஆஆஆஆஆஆ.....ஆட்டா மாவிலை தோசையா..நடக்கட்டும்..நடக்கட்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது இரண்டு கப் ஆட்டா மாவை நீராவியில் அவிக்கும் சுலபமான வழி தெரியுமா ?

STEAMER மேலே பேப்பரை விரித்து விட்டு அதன் மேல் மாவை கொட்டி அவிக்கவும்.இடைக்கிடையே முள்ளுக்கரண்டியால் கிண்டி விடவும். ஆமாம் உங்கள் குடும்பத்தில் எல்லோரும் சாப்பாட்டுப் பிரியர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

STEAMER மேலே பேப்பரை விரித்து விட்டு அதன் மேல் மாவை கொட்டி அவிக்கவும்.இடைக்கிடையே முள்ளுக்கரண்டியால் கிண்டி விடவும். ஆமாம் உங்கள் குடும்பத்தில் எல்லோரும் சாப்பாட்டுப் பிரியர்களா?

தகவலுக்கு நன்றி ரதி .

எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் smiley-eatdrink020.gif சாப்பாட்டு பிரியன் .smiley-eatdrink023.gif

மற்றவர்கள் நொறுக்கு தீனி smiley-eatdrink028.gif smiley-eatdrink015.gif smiley-eatdrink051.gifsmiley-eatdrink057.gifsmiley-eatdrink036.gif பிரியர்கள் .smiley-eatdrink033.gif :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டா மா whole wheat இரண்டும் ஒன்றா?

ஓம் , செவ்வந்தி இரண்டும் ஒன்று தான் .

http://en.wikipedia.org/wiki/Atta_flour

whole%20wheat.jpgwheat-flour.jpg

Chakki_Atta_Wheat_Flour.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D

எல்லா தமிழ் கடைகளில் இருந்த ஆட்டா மா மூட்டைகளை காணவில்லை!!!

:D:unsure::lol::D

ஆ .......... அப்ப , இனி வழக்கம் போலை அரிசி மா தானா ........?

:rolleyes::D:lol:

400_F_8556281_bKJDPdZlfd8L6QppEQy8EOBtfeXeyiSQ.jpgsmiley-face-surprise-15401-1239161998-4.jpgsmiley-laughing014.giflaughing.smileface2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறி

சப்பாத்தி

அட்டா மா தேவையான அளவு

தேவையான அளவு உப்பு

இரண்டையும் மிக்ஸ் பண்ணவும் பின்னர் தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும் {ரொட்டிக்கு பிசைவது போல் பதம் இருந்தால் நல்லம்} பின்னர் ஒரு தட்டதின் பின்புறத்தில் எண்ணை தடவி ஒரு உருண்டை எடுத்து கைகளால் ரொட்டிபோல் தட்டவும் பின்னர் ஒரு தாய்சியை அடுப்பில்வைத்து கூடு ஏறினதும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணை {உடம்புக்கு நல்லம்} விடவும் தட்டிய சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கழும் வேக விடவும். உங்களுக்கு மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். இதனை சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுகர் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் சுகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி

சப்பாத்தி

அட்டா மா தேவையான அளவு

தேவையான அளவு உப்பு

இரண்டையும் மிக்ஸ் பண்ணவும் பின்னர் தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும் {ரொட்டிக்கு பிசைவது போல் பதம் இருந்தால் நல்லம்} பின்னர் ஒரு தட்டதின் பின்புறத்தில் எண்ணை தடவி ஒரு உருண்டை எடுத்து கைகளால் ரொட்டிபோல் தட்டவும் பின்னர் ஒரு தாய்சியை அடுப்பில்வைத்து கூடு ஏறினதும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணை {உடம்புக்கு நல்லம்} விடவும் தட்டிய சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கழும் வேக விடவும். உங்களுக்கு மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். இதனை சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுகர் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் சுகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

கடைக்காரன் தான் பேக்காட்டி விக்கிறானனெண்டால்

நாசமறுப்பு இஞ்சையும் நடக்குதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைக்காரன் தான் பேக்காட்டி விக்கிறானனெண்டால்

நாசமறுப்பு இஞ்சையும் நடக்குதே?

சிறியர் வாங்கின 5 கிலோ ஆட்டா மா முடிஞ்சு திரும்பவும் ஒரு 10 கிலோ பாக் வாங்கி அதுகும் முடியப்போகுது..... இந்தாளுக்கு என்னும் முறிய இல்லை போல... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி

சப்பாத்தி

அட்டா மா தேவையான அளவு

தேவையான அளவு உப்பு

இரண்டையும் மிக்ஸ் பண்ணவும் பின்னர் தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும் {ரொட்டிக்கு பிசைவது போல் பதம் இருந்தால் நல்லம்} பின்னர் ஒரு தட்டதின் பின்புறத்தில் எண்ணை தடவி ஒரு உருண்டை எடுத்து கைகளால் ரொட்டிபோல் தட்டவும் பின்னர் ஒரு தாய்சியை அடுப்பில்வைத்து கூடு ஏறினதும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணை {உடம்புக்கு நல்லம்} விடவும் தட்டிய சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கழும் வேக விடவும். உங்களுக்கு மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். இதனை சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுகர் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் சுகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

stuffed-egg-paratha.jpg

உங்கள் ஆட்டாமா சப்பாத்தி குறிப்புக்கு நன்றி ஜான்சிராணி .

இதனை விரைவாக செய்யலாம் போல் உள்ளது .

சப்பாத்திக்கும் , ரொட்டிக்கும் என்ன வித்தியாசம் ?

கையோடை சட்னி செய்யிற முறையையும் சொல்லுங்கோவன் . :D

கடைக்காரன் தான் பேக்காட்டி விக்கிறானனெண்டால்

நாசமறுப்பு இஞ்சையும் நடக்குதே?

குமாரசாமி அண்ணை ஆட்டா மாவும் , குரக்கன் மாவும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நல்லது என்று பலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன் .

உங்களுக்கு சிலவேளை , கடைக்காரன் ஆட்டாமா என்று வேறை ஏதாவது மாவை தந்து பேக்காட்டிப் போட்டானோ ...... :lol:

சிறியர் வாங்கின 5 கிலோ ஆட்டா மா முடிஞ்சு திரும்பவும் ஒரு 10 கிலோ பாக் வாங்கி அதுகும் முடியப்போகுது..... இந்தாளுக்கு என்னும் முறிய இல்லை போல... :lol:

ஓம் சபேஷ் , பிறகு வேண்டின பத்து கிலோ ஆட்டா மாவும் முடியிற கட்டத்துக்கு வந்திட்டுது .

இண்டைக்கு மட்டும் ஆட்டா மா வாங்க ஏழெட்டு கடைக்கு போயிருப்பேன் .

thinking-idea-animated-animation-smiley-emoticon-000339-medium.gifஎல்லா இடமும் , ஆட்டா மாவுக்கு பெரிய தட்டுப்பாடாய் கிடக்குது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆஆஆஆஆஆஆஆ.....ஆட்டா மாவிலை தோசையா..நடக்கட்டும்..நடக்கட்
Link to comment
Share on other sites

நான் நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கப்போகும் போது .......

கடையில் அரிசி மா என்று நினைத்து , ஐந்து கிலோ ஆட்டா மாவை தெரியாத்தனமாக வாங்கிவிட்டேன் .

அதனை வீட்டிற்கு கொண்டுவந்தவுடன் ....... என்ரை மனிசி அதனை பார்த்து , அது அரிசி மா இல்லை , ஆட்டா மா என்று கண்டு பிடித்து விட்டா .....

எங்களுக்கு முன் , பின் ஆட்டாமாவில் சமைத்து பழக்கம் இல்லை .

அதன் பெறுமதி குறைவு என்றாலும் உணவுப் பொருட்களை வீணாக்க விரும்பாத கொள்கை உடையவர்கள் நாங்கள் .

அதனை வாங்கிய கடையில் திருப்பிக் கொடுக்கலாம் என்றால் ......, வாங்கிய உணவுப் பொருட்களை திரும்ப எடுக்க கூடாதென்பது கடையின் சட்டம் .

இப்போ பிரச்சினை என்னவென்றால் ......... அரிசி மாவுக்கும் , ஆட்டா மாவுக்கும் வித்தியாசம் தெரியாத ஆம்பிளை என்று ஒரே நெளிப்பு வேறை .

தயவு செய்து , இந்த அஞ்சு கிலோ ஆட்டா மாவை வைத்து நான் என்ன பலகாரம் செய்யலாம் ?

ஆட்டா மாவில் என்ன செய்யலாம்? அவசர உதவி தேவை. என்று அவசர அவசரமாக ஒரு திரியைத் தொடக்கி அறிவுரை கேட்டு, 61 பதில்களை கொண்ட ஒரு நகைச் 'சுவையான' திரியாக அமைத்த தமிழ் சிறி அண்ணாவை இன்று முதல் 'ஆட்டாமா சிறி' என்று யாழ் கள உறவுகளால் அன்போடு அழைக்கப் படுகிறார்... :):unsure::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டா மாவில் என்ன செய்யலாம்? அவசர உதவி தேவை. என்று அவசர அவசரமாக ஒரு திரியைத் தொடக்கி அறிவுரை கேட்டு, 61 பதில்களை கொண்ட ஒரு நகைச் 'சுவையான' திரியாக அமைத்த தமிழ் சிறி அண்ணாவை இன்று முதல் 'ஆட்டாமா சிறி' என்று யாழ் கள உறவுகளால் அன்போடு அழைக்கப் படுகிறார்... :(:):D

என்ன குட்டி சும்மா ஆட்டாமா பட்டத்தை தந்து போட்டியள்.

கையால் அரைத்த ஆட்டா மாவா ..... அல்லது மில்லில் அரைத்த ஆட்டாமாவா ........

அதாவது கையாட்டாமாவா , மெசினாட்டாமாவா ....... :unsure:

Link to comment
Share on other sites

என்ன குட்டி சும்மா ஆட்டாமா பட்டத்தை தந்து போட்டியள்.

கையால் அரைத்த ஆட்டா மாவா ..... அல்லது மில்லில் அரைத்த ஆட்டாமாவா ........

அதாவது கையாட்டாமாவா , மெசினாட்டாமாவா ....... :unsure:

அன்னலட்சுமி அவை இவை என்று ஊருக்குள்ள எவ்வளவு பேர் இருந்தவை... அவையளுக்கும் மரியாதையை குடுக்கத் தானே வேணும், அதற்கு ஏற்றது போல நீங்களே வைச்சுக் கொள்ளுங்கோ... :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கடவுளே இன்னும் இந்த ஆட்டா மாவை விடலையா? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.