Jump to content

வைத்திய ஆலோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த உறவுக்கார பெண் ஒருவர் இள வயது இலங்கையில் இருக்கும் போது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு நிறைய செலையின் ஏற்றப்பட்டது.அதன் பின் அவர் சுகமடைந்து வீடு வந்த பின் அவரது தலைமுடி முளைக்கையில் அடியில் வெள்ளையாகவும்[நரை]முடியாகவும

் பின் முளைக்கும் முடி [நுனிமுடி] கறுப்பாகவும் இருக்குறது இதற்கு என்ன காரணம் என யாருக்காகவது தெரியுமா? தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.அத்தோடு என்ன செய்தால் இதை இல்லாமல் ஆக்கலாம் நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

வெள்ளை முடி வந்தால் அதுக்கு மருதாணி போட்டு தலை குளித்து வந்தால் முடி ஒரே கலர்லை வரும் அது கறுப்பாக வரும். நரை முடி வராது ...தலைக்கு குளிர்ச்சியாவும் இருக்கும்... நல்ல அழகாக பள பளக்கும் முடி... ஆனால் இப்படி வளர்வதுக்கு என்ன காரணம் என்று அறிவு ஜீவிகளட்ட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ரதி....

மருதாணி போட்டு குளிக்கணும் என்றால் அதுக்கு நிறைய மிக்ஸ் பண்ண வேண்டும்.....இப்படி பண்ணினால் சில பேருக்கு முடி உதிர்வது குறையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த உறவுக்கார பெண் ஒருவர் இள வயது இலங்கையில் இருக்கும் போது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு நிறைய செலையின் ஏற்றப்பட்டது.அதன் பின் அவர் சுகமடைந்து வீடு வந்த பின் அவரது தலைமுடி முளைக்கையில் அடியில் வெள்ளையாகவும்[நரை]முடியாகவும

் பின் முளைக்கும் முடி [நுனிமுடி] கறுப்பாகவும் இருக்குறது இதற்கு என்ன காரணம் என யாருக்காகவது தெரியுமா? தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.அத்தோடு என்ன செய்தால் இதை இல்லாமல் ஆக்கலாம் நன்றி.

Saline என்பது 0.9% Sodium Chloride solution (உப்பு + சுத்தீகரிக்க பட்ட தண்ணி) மட்டும் தான்.

அதை உடம்பில் ஏற்றுவதால் மட்டும் இந்த தலைமயிர் பிரச்சனை வந்து இருக்க முடியாது.

வயிற்று வலி என்றால் அது எப்படியான நோயின் அடிப்படையில் வந்த வலி என்று அறிந்து அதற்கும் ஏதும் மருந்துகள் ஏற்றி இருக்க கூடும்... உங்கள் உறவினருக்கு என்ன வருத்தம் என்று எனக்கு தெரியாது... ஆனால் தலைமயிர்/ தோல்/ நிகம் இவற்றை பாதிக்க கூடிய மருந்துகள் "Chemotherpay -கீமோதெரபி" வகையான மருந்துகளாய் இருக்கும். இவ்வகை மருந்துகளை புற்றுநோய் சமந்தமான வருத்தங்களுக்கு அதிகமாய் பாவிப்பார்கள்..

உங்கள் உறவினருக்கு வந்த வருத்தம் அவ்வளவு பாரியதாய் இல்லை எனில், மருத்துவமனையில் அவருக்கு அளித்த மருந்துகளின் பெயர்களை அறிந்து வைத்திருத்தல் நல்லது.. தலை மயிர் நரைப்பது மட்டுமன்றி கொட்டுவதும் போல இருந்தால், இன்னொரு வைத்தியரை ஆலோசிப்பதும் நல்லது.

வாந்தி பேதிக்கு கொடுக்கப்படும் Antibiotics மருந்து வகைகள் இவ்வளவு தாட்பரியமான பக்க விளைவுகளை கொண்டு இருக்க சாத்தியங்கள் குறைவு.

அதிகம் ஜோசித்து குழம்ப வேண்டாம், இளநரை அவர் குடும்பத்தில் தோன்றும் சாத்தியகூறுகள் குறைவு என்றால், - மருந்துகளால் வந்த தலைமயிர் பிரச்சனை சிறிது காலம் செல்ல தீரும். தலைமயிருக்கு அதன் நிறத்தை தீர்மானிப்பது Melanocyte என்னும் செல்கள் தான். அவற்றின் உற்பத்தியையும், எண்ணிக்கையையும் தீர்மானிப்பது எமது DNA மரபணுக்கள். சிலவகை மருந்துகளால் இந்த செல்களின் செயற்பாடுகள் சிறிது காலம் பாதிப்படைந்து இருக்கலாம்... ஆனால் இளவயது என்றால் அந்த செல்களின் சீரான செயட்பாட்டிட்கு உதவும் சத்துக்களை உட்கொள்ளவது - தலைக்கு சாயம் பூசுவதிலும் திறம்.

தலைக்கு சாயம் பூசுவது தற்காலிக மாற்றத்தை தான் கொண்டு வரும், உண்மையான தலைமயிர் சீராகும் வரை சாயம் பூசுவதிலும் தவறில்லை.

Vitamin B செறிந்து உள்ள சாப்பாடுகளை (தானிய வகைகள், முட்டை, மீன், மற்றும் கீரை ) சாப்பிட வேணும், அத்துடன் மேலதிகமாகவும் Vitamin B supplements + Iron + Zinc குளுசைகளை எடுக்கலாம்..

Niacin அல்லது vitamin B-3 தலைமயிர் வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராய் கொண்டு செல்ல உதவும். Biotin தலைமயிர் நரைப்பதை குறைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ilayapillai நீங்கள் மருத்துவம் படித்தவர் போல் தெரிகின்றது!

உங்களால் இந்த யாழ்கள உறவுகளும் பயனுறட்டும்.

மேலும் பயனுள்ள மருத்துவ தகவல்களை தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளையபிள்ளை அவவுக்கு நீங்கள் சொன்ன மாதிரி எதற்காக வயிற்று வலி வந்தது என கண்டு பிடிப்பதற்காக நிறைய மருந்துகள் கொடுத்தார்கள் அத்தோடு xray,scan எல்லாம் எடுத்தார்கள் ஆனால் அவவுக்கு புற்று நோய் இல்லை அது சம்மந்தமான மருந்துகள் கொடுக்கப்படவில்லை கடைசியில் அவ தண்ணீர் குடிப்பதில்லை என்றும் அதனால் சிறுநீர் கழிப்பது குறைவு எனவும் அதனால் தான் அவவுக்கு வயிற்று வலி வந்தது எனவும் நிறைய தண்ணீரை சுட வைத்து ஆறிய பின் குடிக்கச் சொன்னதாகவும் சொன்னா ஆனால் அதற்கு பின் தான் அவவின் தலை முடி இப்படி வந்ததாக சொன்னார்.மண்டையோட்டோடு உள்ள முடி மட்டும் தான்[புதிதாக முளைக்கும் முடி] வெள்ளையாக இருக்குறதாகவும் பின் அதே முடி அடியில் மட்டும் வெள்ளையாக இருக்க பின் வளரும் அதே முடி கறுப்பாக இருக்குறது எனவும் சொன்னா.இள நரை என்றால் முடி அடியில் இருந்து நுனி வரை வெள்ளையாக இருக்காதா? மண்டையோட்டில் ஏதாவது பிரச்சனை இருந்தால் இப்படி வருமா? மேலதிக தகவல்கள் தர முடிந்தால் தாருங்கள் நீங்கள் சொன்ன தகவலுக்கு நன்றி.

சுஜி அவவுக்கு மருதாணி அடிப்பதோ கலர் அடிப்பதோ பிரயோசனமில்லை ஏனென்றால் புதிதாக முளைக்கும் முடி மட்டும் தான் வெள்ளையாக இருக்குற படியால் முடி முளைக்க முளைக்க அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இளையபிள்ளை அவவுக்கு நீங்கள் சொன்ன மாதிரி எதற்காக வயிற்று வலி வந்தது என கண்டு பிடிப்பதற்காக நிறைய மருந்துகள் கொடுத்தார்கள்

- வணக்கம் ரதி, முடிந்தால் உங்கள் உறவினரிடம் கேட்டு அவருக்கு எழுதி கொடுக்க பட்ட மருந்துகள்/ ஏற்றப்பட்ட மருந்துகளின் பெயரை எடுத்து தந்தால் அவற்றின் பக்க பாதிப்புக்கள் என்ன என்பதை அறிந்து சொல்லலாம்.

அத்தோடு xray,scan எல்லாம் எடுத்தார்கள் ஆனால் அவவுக்கு புற்று நோய் இல்லை. அது சம்மந்தமான மருந்துகள் கொடுக்கப்படவில்லை

- நல்லது!

கடைசியில் அவ தண்ணீர் குடிப்பதில்லை என்றும் அதனால் சிறுநீர் கழிப்பது குறைவு எனவும் அதனால் தான் அவவுக்கு வயிற்று வலி வந்தது எனவும் நிறைய தண்ணீரை சுட வைத்து ஆறிய பின் குடிக்கச் சொன்னதாகவும் சொன்னா.

- சிறுநீரகம் அல்லது சலப்பை (kidney or bladder) சமந்தமான பிரச்சனைகளை கண்டு பிடிப்பது மருத்துவர்களுக்கு சுலபம். பெரும்பாலும் வலி எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்தும், அத்துடன் சலப் பரிசோதனை (urine sample test) செய்வதின் மூலமும் - இதை அறிந்து கொள்ளலாம். மற்ற பரிசோதனைகள் செய்ய முதல் பெரும்பாலும் இவற்றை தான் செய்து இருப்பார்கள்.

-நோயாளிகளை தண்ணீர் நிறைய அருந்த சொல்வது வழக்கம். உடல் தனது சுத்தீகரிப்பு வேலைகளை சீராக மேற்கொள்ள ஒரு நாளைக்கு 2லீட்டர் தண்ணி அருந்த சொல்வார்கள். சுடவைத்த தண்ணியில் வெளிக் கிருமிகள் குறைவாக இருக்கும் என்பதால் அவ்வாறு செய்ய சொல்லி இருப்பார்கள்.

மருந்துகள் அதிகம் எடுக்கும் போதும் எமது சிறுநீரகம் / ஈரல் (kidneys & liver) தான் அவற்றில் உள்ள வீண் கழிவுகளை உடலில் இருந்து அகற்ற வேணும், அந்த அகற்றல் சீராக இருப்பதற்கும் தண்ணீர் அதிகம் குடிக்க வேணும்.

-உங்கள் உறவினருக்கு வந்தது சிறுநீரகம்/ சலப்பை சம்மந்தமான வருத்தம் தான் என்றால் அந்த வருத்தத்தால் தலை முடி பாதிக்க பட சாத்திய கூறுகள் குறைவு.

ஆனால் வருத்தம் என்னவென்று அறிய முதல் மருந்துகளை கொடுத்து பார்த்திருந்தார்கள் என்றால் மருந்துகளின் பக்க விளைவுகளில் ஒன்றாக இது இருக்கலாம்.

-ஆண்களை விட பெண்களுக்கு சலப்பையில் Infection (Urinary tract infection/ cystitis) வருவதற்கு 50 x சாத்தியகூறுகள் அதிகம். குறித்த நேரத்தில் வைத்திய ஆலோசனை பெறாமல் விடுவது தான் அந்த நோயையும்/ அதன் வெளிப்பாடான வயிற்று வலி, சலம் போவதில் சிக்கல்/ வலி போன்றவற்றையும் அதிகரிக்கும். இந்த நோயின் பாதிப்பை அதிகரிப்பது -சலம் போவதற்கு கடினமாய் இருக்கிறது என்று தண்ணீர் அதிகம் குடியாமல் இருப்பதும் தான். இதனால் சலம் கழிப்பதும் மேலும் கடினமாகிறது. மருந்தால் மாற்ற கூடிய வருத்தம் தான்.... ஆனால் என்ன மருந்தை, எவ்வளவு காலத்திற்கு எடுக்க சொன்னார்கள் என்று அறிந்திருத்தல் நலம்.

அதற்கு பின் தான் அவவின் தலை முடி இப்படி வந்ததாக சொன்னார்.

- இளநரை வருவதற்கு ஒன்று நான் முன்னர் கூறியது போல - பரம்பரை வருத்தமாக இருக்கலாம்.

பரம்பரை இள நரையாக இருந்தால் மட்டும் மாற்றுவது இயலாத காரியம் :( - சாயம் தொடர்ந்து ஒவ்வொரு கிழமையும் பூசுவதை தவிர...

பரம்பரை என்றால் கட்டாயம் இவரின் தாய்/தகப்பன் சகோதரங்கள் எல்லரிட்கும் அவ்வாறே இள நரை இருக்க வேண்டியது இல்லை. தாய் வழி இல்லை தகப்பன் வழி யாரும் ஒருவருக்கு இள நரை இருந்து இருந்தாலே இன்னொரு குடும்பத்தில் பிறந்தவரை விட இவருக்கு இள நரை வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் ஆகிறன. உடம்பு பெலவீனமாக இருக்கும் நேரத்தில் இந்த வகை இள நரை வருவதற்கும் சாத்தியங்கள் கொஞ்சம் அதிகம் தான்.

நரைக்கு இன்னொரு முக்கிய காரணி - ஜோசனைகள்/ மனகவலைகள்!! நம்ப முடிகிறதோ தெரியவில்லை - அதுவும் உண்மை.

இளவயது மாணவர்கள் கூட சிலர் இந்த நரை பிரச்சனைக்கு உள்ளாகி இருப்பார்கள் - மேற்படிப்பு பாட பரீட்சை/ பாவ சோதனைகளின் போது :) !

இவர்களுக்கு தலை முழுக்க நரைக்காது.. சில முடிகளில் வேர் மட்டும் சிறிது காலத்திற்கு நரைக்கும். ஆனால் ஆறு மாதத்தில் இருந்து ஓரிரு வருடங்களுக்குள் இந்த நரைகள் மீண்டும் கறுப்பாக வளர்வதை காண்பார்கள்.

உங்கள் உறவினர் இளவயது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் - அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு - ஏக பட்ட பரிசோதனைகளுக்கு உள்ளாக்க பட்டு இருந்தால் - அவரிற்கு மனகவலைகள்/ பயம்/ அதிக ஜோசனைகள் வந்து இருக்க கூடும் என்பது இயல்பு தானே.

இப்படியான காரணத்தால் தோன்றும் நரைகள் - ஜோசனைகளை மனகவலைகளை முதலில் குறைத்து, நான் முன்னர் குறிப்பிட்ட Vit-B (niacin+biotin), Vit-E, Zinc, Iron குளுசைகளையும் உண்டு, உடம்பையும் தேற்றி வந்தால் தானாக மறையும்.

மண்டையோட்டோடு உள்ள முடி மட்டும் தான்[புதிதாக முளைக்கும் முடி] வெள்ளையாக இருக்குறதாகவும் பின் அதே முடி அடியில் மட்டும் வெள்ளையாக இருக்க பின் வளரும் அதே முடி கறுப்பாக இருக்குறது எனவும் சொன்னா.இள நரை என்றால் முடி அடியில் இருந்து நுனி வரை வெள்ளையாக இருக்காதா?

- தலைமயிர் முளைப்பது வேரில் இருந்து தான். இந்த மருத்துவமனை அனுபவம்/ வைத்தியம் எல்லாம் நடந்தது அண்மையில் என்றால்... நரை மாற்றத்தை வேரில் தான் முதல் உணர்வார். உடனேயே வேரில் இருந்து முழு தலைமயிர் நீளத்திற்கு வெள்ளையாக மாறாது.

மண்டையோட்டில் ஏதாவது பிரச்சனை இருந்தால் இப்படி வருமா?

- தலைமயிர் நிறைய உதிர்வது உட்பட வேறும் ஏதும் பிரச்சனைகள் இருந்தால் இன்னொரு வைத்தியரின் ஆலோசனையை பெறுவது நலம். மற்றும் படி மண்டை ஓட்டில் பிரச்னை என்று அதிகம் ஜோசிக்க வேண்டியது இல்லை - இதே போன்ற அதிக ஜோசனைகள்/ பயம்கள் தான் அன்னாரின் இளநரைக்கும் காரணியாக இருக்க கூடும். :)

மனதிற்கு பயம் / கவலை தரும் ஜோசனைகளை முடிந்த அளவு குறைக்க சொல்லுங்கள். பயம் கவலை மன சோர்வு போன்ற சிந்தனைகளின் போது மூளையில் சுரக்கும் சில ஹோர்மொன்களின் (stress hormones) வெளிப்பாடு உடலில் தானே காட்டும். அதில் இள நரையும் ஒன்று.

தந்த குறிப்புகள் உங்கள் உறவினரின் ஜோசனைகளை அதிகமாக்காமல் அவரின் விளக்கத்தை கூட்டுவதாக அமையட்டும் என்று நினைத்து தான் எழுதி உள்ளேன்.

அவரை அறிந்தவர் நீங்கள், பக்குவமாக எடுத்து சொலுங்கள்.

Link to comment
Share on other sites

நல்லதொரு பயனுள்ள விளக்கம் குடுத்திருக்கிறிங்க இளையபிள்ளை. உங்களிடம் மருத்துவம் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் கேட்க்கலாமா?

Link to comment
Share on other sites

வணக்கம் இளயபிள்ளை. மிகவும் அருமையான விளக்கங்கள். மிகவும் பக்குவமாகவும் மிகவும் ஆழமாகவும் பொறுப்பாகவும் விளங்கப்படுத்தி உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நான்கூட எனது நன்பர் ஒருவரின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சகல இணையத்தளங்களையும் தேடிப்பார்த்து களைத்துவிட்டேன். மருத்துவ விளக்கம் தருவதற்கு இதுவரை உங்களளவிற்கு விளக்கமானவர்களை இணையத்தளங்களில் நான் இன்னும் காணவில்லை. உங்கள் விளக்கங்களை கண்டவுடன் ஒருவித மகிழ்ச்சி.

எனது நன்பர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது மிகவும் கவலைப்பட்டு அவர் கதைத்த ஒரு விடயம்,

அதாவது அவரிற்கு பலவருடங்களாக உள்ள ஒரு குறை என்னவெனின்,

தினமும் காலையில் எழும்பும் போதும் அவரது வாய்நிறைய உமிழ்நீர் (அல்லது எச்சில் அல்லது வாய்நீர் எப்படி சொல்வது என்று புரியவில்லை) ஊறிவிடுமாம். தனது தலையனை அனைத்தும் ஈரமாகிவிடுமாம். அத்துடன் அவரது கடவாயில் இந்த நீர் வடிந்து காய்ந்து விடுமாம். அத்துடன் அவர் எழுந்து சென்று அதனை துப்பியபின் வாய் கழுவாமல் இருந்தால்(எழும்பி புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தால் கூடவாம்) மீண்டும் வாய்நிறைய இந்த உமிழ் நீர் நிரம்பி விடுமாம். சில நாட்களில் மஞ்சளாகவும், சில நாட்களில் வெள்ளை நிறத்திலும் காணப்படுமாம். பின்னர் அதனை துப்பிய பின் பல்விளக்கி வாய்கழுவிய பின் அன்று இல்லாமல் போய்விடுமாம். அவர் பகல் நித்திரைக்கு சென்றாலும் இதே பிரச்சினையாம். இது அவரிற்கு சின்ன வயதிலோ அதற்கு பின்கூட இல்லையாம். கிட்டத்தட்ட கடந்த பலவருடங்களாக இது காணப்படுகின்றதாம்.

மிகவும் கவலைப்பட்டு என்னிடம் கூறினார். நான் அவரது குடும்ப வைத்தியரைப் பார்க்கும் படி கூறினேன். அவரும் குடும்ப வைத்தியர், பல்வைத்தியர் போன்றோரை நாடி சில மருந்துக்கள் எடுத்துப்பார்த்hராம். ஆனால் எந்த மாற்றமும் இல்லையாம். என்னை அணுகினார், இணையத்தளங்களில் எங்காவது வைத்தியரின் ஆலோசனை பெற்றுத்தரும்படி. நானும் தேடிக்களைத்துவிட்டேன்.

இளையபிள்ளை அவர்களே அவரின் இந்தப்பிரச்சினைக்கு யதார்தத்தமான பதில் தருவீர்களா. அவரின் சந்தோசத்தை நான் பார்க்கனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இளயபிள்ளை. மிகவும் அருமையான விளக்கங்கள். மிகவும் பக்குவமாகவும் மிகவும் ஆழமாகவும் பொறுப்பாகவும் விளங்கப்படுத்தி உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நான்கூட எனது நன்பர் ஒருவரின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சகல இணையத்தளங்களையும் தேடிப்பார்த்து களைத்துவிட்டேன். மருத்துவ விளக்கம் தருவதற்கு இதுவரை உங்களளவிற்கு விளக்கமானவர்களை இணையத்தளங்களில் நான் இன்னும் காணவில்லை. உங்கள் விளக்கங்களை கண்டவுடன் ஒருவித மகிழ்ச்சி.

எனது நன்பர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது மிகவும் கவலைப்பட்டு அவர் கதைத்த ஒரு விடயம்,

அதாவது அவரிற்கு பலவருடங்களாக உள்ள ஒரு குறை என்னவெனின்,

தினமும் காலையில் எழும்பும் போதும் அவரது வாய்நிறைய உமிழ்நீர் (அல்லது எச்சில் அல்லது வாய்நீர் எப்படி சொல்வது என்று புரியவில்லை) ஊறிவிடுமாம். தனது தலையனை அனைத்தும் ஈரமாகிவிடுமாம். அத்துடன் அவரது கடவாயில் இந்த நீர் வடிந்து காய்ந்து விடுமாம். அத்துடன் அவர் எழுந்து சென்று அதனை துப்பியபின் வாய் கழுவாமல் இருந்தால்(எழும்பி புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தால் கூடவாம்) மீண்டும் வாய்நிறைய இந்த உமிழ் நீர் நிரம்பி விடுமாம். சில நாட்களில் மஞ்சளாகவும், சில நாட்களில் வெள்ளை நிறத்திலும் காணப்படுமாம். பின்னர் அதனை துப்பிய பின் பல்விளக்கி வாய்கழுவிய பின் அன்று இல்லாமல் போய்விடுமாம். அவர் பகல் நித்திரைக்கு சென்றாலும் இதே பிரச்சினையாம். இது அவரிற்கு சின்ன வயதிலோ அதற்கு பின்கூட இல்லையாம். கிட்டத்தட்ட கடந்த பலவருடங்களாக இது காணப்படுகின்றதாம்.

மிகவும் கவலைப்பட்டு என்னிடம் கூறினார். நான் அவரது குடும்ப வைத்தியரைப் பார்க்கும் படி கூறினேன். அவரும் குடும்ப வைத்தியர், பல்வைத்தியர் போன்றோரை நாடி சில மருந்துக்கள் எடுத்துப்பார்த்hராம். ஆனால் எந்த மாற்றமும் இல்லையாம். என்னை அணுகினார், இணையத்தளங்களில் எங்காவது வைத்தியரின் ஆலோசனை பெற்றுத்தரும்படி. நானும் தேடிக்களைத்துவிட்டேன்.

இளையபிள்ளை அவர்களே அவரின் இந்தப்பிரச்சினைக்கு யதார்தத்தமான பதில் தருவீர்களா. அவரின் சந்தோசத்தை நான் பார்க்கனும்.

வணக்கம் Nalim,

உமது நண்பரின் பிரச்னை குறிப்பிலேயே அதற்கான பதிலும் உள்ளது. பல் விளக்கிய பின் இந்த உமிழ் நீர் பிரச்னை இல்லை என்று அவரே அறிந்து இருக்கிறார்.

- சாதரணமாக பலருக்கு ஓரளவிற்கு உள்ள பிரச்னை தான் இது - நித்திரையின் போது வாயில் எச்சில் ஊறுவதும், நித்திரையில் எமது வாய்/ தொண்டை தசைகள் தளர்ந்து இளைப்பாறியிருக்கும் வேளையில், சுரக்கும் எச்சிலை விழுங்க முடியாது அது வாய் வழி வெளியேறுவதும் சகஜம். சரிந்து/ குப்பற படுத்து நித்திரை கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் அதிக பேர் தலையானியில் எச்சில் வடிப்பதும் உண்மை.

எச்சியில் செமிபாட்டுக்குரிய அமிலங்களும் உள்ளதால், வாய்க்குள் எதை வைத்திருந்தாலும் அதை செமிப்படைய செய்வதற்காக உமிழ்நீர் சுரப்பிகள் இன்னும் மேலதிகமாக சுரப்பது இயல்பு. அதனால், எழும்பியவுடன் அவரின் வாயில் சுரக்கும் எச்சிலை துப்பிவிட்டு பல் விளக்கி விட்டு பிறகு இருந்து படிக்கட்டும். இல்லாவிட்டால் அவர் வாய்க்குள் வைத்திருப்பது வெறும் எச்சில் தான் என்று உணராமல் இன்னும் அதிகம் எச்சிலை சுரந்து தள்ளும் வாய்.

- இந்த உமிழ்நீர் அதிக அளவில் சுரக்கிறது (Sialorrhea) என்றால் அதன் காரணியாக சிலது இருக்கலாம்:

* இரவு சாப்பாட்டை பிந்தி சாப்பிட்டுவிட்டு, உண்ட உடனேயே உறங்க செல்லும் பழக்கம் - முதல் குறிபிட்டது போல எச்சில் சுரப்பிகளும் (salivary glands) செமிபாட்டுக்கு உரிய அமிலங்களை (digestive enzymes) சுரக்கிறது, அதனால் சாப்பிட்ட உடனேயே உறங்கும் போது, உடம்பில் செமிபாடும் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கும் நேரம் அது- வாயிலும் உமிழ்நீர் சுரந்து கொண்டு இருக்கும், செமிபாட்டு குழாய் (oesophagus) வழி சில அமிலங்கள் மேலேறி வருவதற்கும் சாத்தியகூறுகள் அதிகம் - நாம் சரிந்து படுத்து இருப்போமேயானால்!

* செமிபாட்டு பிரச்னை ஏற்கனவே உள்ளவர்கள்...

* புகை பிடிக்கும் பழக்கம் உள்ளர்வர்களின் வாய்க்குள் தேங்கி நின்று பின் தலையானியில் வெளியேறும் எச்சில் சற்றே புகையிலையின் சாயத்துடன் தென்படும். தேநீர்/ கோப்பி குடித்து விட்டு நித்திரை கொள்பவர்களும் சாயமூறிய எச்சிலை உமிழ்வது அதிகம்.

* மது அருந்தி விட்டு படுப்பது - ஏற்கனவே நித்திரையில் தளர்ச்சியில் காணப்படும் எமது வாய்/ தொண்டை தசைகளை மேலும் உணர்ச்சிகள் இன்றி செயட்பாடிழக்க செய்யும். இதனால் இடைக்கிட நாமாகவே விழுங்கி எச்சிலை உள்ளே தள்ள முடியாமற்போகும்.

* இனிப்பு வகை அல்லது உறைப்பு வகை உணவை இரவில் தவிர்க்க வேணும். இவை இரண்டும் வாயில் இருந்து நீரை அதிகமாக உமிழ வைக்கும்.

இது தவிர Asthma/ Hypertension இவற்றிற்கு எடுக்கும் ஒரு சில மருந்துகள் கூட இந்த உமிழ் நீர் பிரச்சனையை அதிகமாக்கலாம். ஆனால் உடல் நலத்திற்கு மேற்குறிபிட்ட இந்த வருத்தங்களின் பாதிப்பை குறைப்பது முக்கியம் - எச்சில் ஊறும் பிரச்சனையை விட என்பதால்... இந்த மருந்துகளை எடுக்கவேண்டியவர்கள் எடுக்காமல் விட்டு விட கூடாது!

கீழ் குறிபிட்டது போன்ற மேலும் வேறு பிரச்சனைகளும் இந்த உமிழ்நீருடன் சேர்ந்து காணப்பட்டால், வைத்தியரின் ஆலோசனை பெறுவது முக்கியம். உமிழ்நீர் சுரப்பிகளில் பிரச்னை என்றால் - இந்த சுரப்பிகள் வீங்கி தென்படும். இது தான் சுரப்பிகள் (salivary glands) உள்ள இடம்கள்:

9654.jpg

அல்லது செமிபாட்டு குழாயில் உள்ள இரசாயனங்கள் படுத்து இருக்கும் போது நெஞ்சை அரிச்சு (indigestion) கொண்டு மேலே வருவதாய் தென்பட்டால்.

சாதரண எச்சில் தண்ணீர் நிறத்திலும், சுவையற்றதாகும் இருக்கும். எச்சிலின் பதமும் அறிந்து இருப்பீர்கள். இவை எதிலும், காரணங்கள் அற்ற மாற்றங்கள் இருந்தால் வைத்தியரின் கவனத்திற்கு அவற்றை முன் வைக்க வேணும்.

* பஞ்சியாக இருந்தாலும் படுக்க போவதற்கு முன்னும், எழும்பிய உடனும் பல்லை விளக்கி - mouthwash போட்டு கொப்பிளித்து விட்டு மற்ற வேலைகளை செய்வது முக்கியம்.

நேர வசதி அமைந்தால் இரவு சாப்பாட்டை படுப்பதற்கு இரண்டு மணத்தியாலம் முதல் சாப்பிடுவது நல்லது. Pepper-Mint Tea இரவு சாப்பாட்டின் பின் குடிப்பது செமிபாட்டிட்கு நல்லது.*

இவற்றை உங்கள் நண்பர் சிறிது காலம் பின்பற்றி பலனளிக்கிறதா என்று பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு பயனுள்ள விளக்கம் குடுத்திருக்கிறிங்க இளையபிள்ளை. உங்களிடம் மருத்துவம் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் கேட்க்கலாமா?

ஆ... என்னை அங்கால இங்கால போய் ரெண்டு பேரை கலாய்க்க :lol: விடாமல் இங்கேயே மடக்க எனக்கு எதிராக கூட்டு சதி...

குமாரசாமி அண்ணாவும் செவ்வந்தியும் என்னை இங்கேயே கட்டி போட பார்க்கீனம்... :lol:

கேட்கலாம் செவ்வந்தி, ஓம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல கூடிய மாதிரி சுலபமான கேள்வியள் தாராளமாய் கேக்கலாம்!

அதுக்கு மேல என்றால், ஆளுக்கு ஒரு கொத்து ரொட்டி பார்சல், திருக்கை வறை :lol: , ஆட்டு பிரட்டல் என்று செய்து தந்து விட்டு கேக்கலாம். எனக்கு பசி பிடுங்குகிறது... என்ன செய்வது! :lol:

:lol:

Link to comment
Share on other sites

வணக்கம் இளயதம்பி அவர்களே. மீண்டும் ஒரு அருமையான விளக்கம். உங்களது நேரத்தை ஒதுக்கி மிகவும் பொறுப்புணர்வுடன் அதனை விளங்கப்படுத்தி உள்ளீர்கள். நான் எனது நண்பரிற்கு உங்கள் விளக்கத்தினை தெரியப்படுத்துவதுடன் அவரது கருத்தையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். எனது நண்பர் சார்பாக எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இளயதம்பி அவர்களே. மீண்டும் ஒரு அருமையான விளக்கம். உங்களது நேரத்தை ஒதுக்கி மிகவும் பொறுப்புணர்வுடன் அதனை விளங்கப்படுத்தி உள்ளீர்கள். நான் எனது நண்பரிற்கு உங்கள் விளக்கத்தினை தெரியப்படுத்துவதுடன் அவரது கருத்தையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். எனது நண்பர் சார்பாக எனது நன்றிகள்.

பிரச்னை இல்லை நண்பரே ....

குறிப்புகள் பிரயோசனமாக இருந்தால் சந்தோசம்.

:unsure:

Link to comment
Share on other sites

இளைய பிள்ளை,

உங்களின் மருத்துவ குறிப்புகள் நிச்சயம் பலருக்கு உதவும். நன்றி (எனக்கும் கனடாவிற்கு வந்த பின் தலை நரைக்க தொடங்கிவிட்டது )

என்னிடமும் சில மருத்துவ சந்தேகங்கள் உள்ளன...ஆனால் கொஞ்சம் வில்லங்கமாக இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைய பிள்ளை,

உங்களின் மருத்துவ குறிப்புகள் நிச்சயம் பலருக்கு உதவும். நன்றி (எனக்கும் கனடாவிற்கு வந்த பின் தலை நரைக்க தொடங்கிவிட்டது )

என்னிடமும் சில மருத்துவ சந்தேகங்கள் உள்ளன...ஆனால் கொஞ்சம் வில்லங்கமாக இருக்கும்...

நன்றி நிழலி அண்ணா ,

கனடாக்கு போனா பிறகு நரைக்காட்டி தான் பிரச்னை.... :unsure:

நீங்களும் கவலையளை குறையுங்கோ... ஆசிரம வாழ்கை மனதிற்கு நிச்சயம் சாந்தியை தரும்... !!!

மேலும் உங்கள் "வில்லங்கமான" சந்தேகங்களை - யாழில் அல்ல - யாம் தங்கள் ஆசிரமத்திற்கு வரும் போது விளக்கமாக கூறுங்கள்! :unsure:

Link to comment
Share on other sites

மன்னிக்கனும் இயைபிள்ளை அவர்களே.... என் நண்பரது தொடர்பு கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகிவிட்டது,

சரி விடயத்திற்கு வருவோம்.

உங்கள் விளக்கங்களை கொடுத்தேன். சந்தோசமாக இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் மாறாக தனது தேவையை இம்முறை தெளிவாக கூறினார் என்று நினைக்கின்றேன். அதை இயன்றளவிற்கு அப்படியே இங்கே தரப்பார்க்கின்றேன்.

1) அவர் அண்மையில் திருமணமானவர். ஆனால் இந்த வாய்நீர் விடயம் அவரை ரொம்பவும் சிரமப்படுத்துவது மட்டுமல்லாமல் அவரை அவரது புது மனவி நெருங்கவிடாமல் தடுப்பதாகவும் குறைப்பட்டார். காரணம் அவரது தலையணை அடிக்கடி; நனைவதாகவும், துர்நாற்றம் ஏற்படுவதினாலும் அவரது மனைவி அவரது தலையணையில் தலைவைத்துப் படுப்பதற்கு தயங்குவதாகவும் மிகவும் கவலைப்பட்டார்.

2) அவரிடம் நான் உங்கள் பதிலை சொல்லும் போது சந்தோசப்படுவார் என நினைத்தேன். ஆனால் நடந்ததோ வேறு. அதற்கான காரணம் அவர் கூறினார் தனக்கு இந்தப் பிரச்சிணை ஏன் ஏற்படுகின்றது என்பது முக்கியமல்ல எனவும் (ஆனால் எம்போன்றோரிற்கு அறிவு பூர்வமாக இருந்தது உங்கள் விளக்கம்) அதற்குரிய தீர்வே தனக்கு முக்கியம் எனவும் தலையை சொறிந்தபடி கூறினார். அவர் கூறியது என்னவெனில் தான் பல முயற்சிகள் செய்து பார்த்துவிட்டேன். எதற்கும் இது நிற்கவில்லை. ஆகவே தனக்கு இதனை எவ்வாறு இல்லாமல் செய்யலாம் என்ற விளக்கமும் அதற்குரிய உதவியுமே தேவை என்று சலித்துக் கொண்டார். அவரது சலிப்பிலிருந்து எனக்கு புரியக்கூடியதாக இருந்தது எவ்வாறு இது அவரிற்கு தொந்தரவு கொடுக்கின்றது எனவும் இதனை நிற்பாட்ட அல்லது முற்றிலும் இல்லாமல் பண்ணுவதற்கு அவர் முயன்று களைத்திருப்பது புரிகின்றது.

-இது (பகல் மற்றும் இரவு) நித்திரை நேரத்திலும் நடைபெறுகின்றதாம்

-நித்திரை(பகல், இரவு) முடிந்து படுக்iயில் அப்படியே விழித்திருந்தாலும் அல்லது எழுந்து இருந்தாலும் கூடவும் இது நடைபெறுகின்றதாம்.

-இதனால் தினமும் தலையனை தோய்க்க வேண்டி உள்ளதால் மனைவியுடன் ஒரே படுக்கையில் படுக்க முடியாமலும் உள்ளதாம்.

செமிபாட்டு பிரச்னை ஏற்கனவே உள்ளவர்கள்...

* புகை பிடிக்கும் பழக்கம் உள்ளர்வர்களின் வாய்க்குள் தேங்கி நின்று பின் தலையானியில் வெளியேறும் எச்சில் சற்றே புகையிலையின் சாயத்துடன் தென்படும். தேநீர்/ கோப்பி குடித்து விட்டு நித்திரை கொள்பவர்களும் சாயமூறிய எச்சிலை உமிழ்வது அதிகம்.

* மது அருந்தி விட்டு படுப்பது - ஏற்கனவே நித்திரையில் தளர்ச்சியில் காணப்படும் எமது வாய்/ தொண்டை தசைகளை மேலும் உணர்ச்சிகள் இன்றி செயட்பாடிழக்க செய்யும். இதனால் இடைக்கிட நாமாகவே விழுங்கி எச்சிலை உள்ளே தள்ள முடியாமற்போகும்.

* இனிப்பு வகை அல்லது உறைப்பு வகை உணவை இரவில் தவிர்க்க வேணும். இவை இரண்டும் வாயில் இருந்து நீரை அதிகமாக உமிழ வைக்கும்.

இது தவிர Asthma/ Hypertension இவற்றிற்கு எடுக்கும் ஒரு சில மருந்துகள் கூட இந்த உமிழ் நீர் பிரச்சனையை அதிகமாக்கலாம். ஆனால் உடல் நலத்திற்கு மேற்குறிபிட்ட இந்த வருத்தங்களின் பாதிப்பை குறைப்பது முக்கியம் - எச்சில் ஊறும் பிரச்சனையை விட என்பதால்... இந்த மருந்துகளை எடுக்கவேண்டியவர்கள் எடுக்காமல் விட்டு விட கூடாது!

கீழ் குறிபிட்டது போன்ற மேலும் வேறு பிரச்சனைகளும் இந்த உமிழ்நீருடன் சேர்ந்து காணப்பட்டால், வைத்தியரின் ஆலோசனை பெறுவது முக்கியம். உமிழ்நீர் சுரப்பிகளில் பிரச்னை என்றால் - இந்த சுரப்பிகள் வீங்கி தென்படும். இது தான் சுரப்பிகள் (salivary glands) உள்ள இடம்கள்:

என்னைப் போலவே அவரும் எந்த பழக்க வழக்கங்களும் அற்றவர்.

ஆகவே இளையபிள்ளை அவர்களே உங்களிற்கு முடிந்தால் அல்லது யாரிடமேனும் இதற்கு விடை கண்டுபிடித்து தருவீர்களா? இந்த பிரச்சினையை முற்று முழுதாக இல்லாமல் செய்வதற்கு அவரிற்கு உதவுவீர்களா? அவரது வாழ்வில் சந்தோசம் மலர உதவுவீர்களா?

-;அத்துடன் அவர் உங்கள் விளக்கத்திற்கு நன்றி கூறும்படியும் கூறியதுடன் உங்களாளாவது தனக்கு உதவ முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கனும் இயைபிள்ளை அவர்களே.... என் நண்பரது தொடர்பு கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகிவிட்டது,

சரி விடயத்திற்கு வருவோம்.

உங்கள் விளக்கங்களை கொடுத்தேன். சந்தோசமாக இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் மாறாக தனது தேவையை இம்முறை தெளிவாக கூறினார் என்று நினைக்கின்றேன். அதை இயன்றளவிற்கு அப்படியே இங்கே தரப்பார்க்கின்றேன்.

1) அவர் அண்மையில் திருமணமானவர். ஆனால் இந்த வாய்நீர் விடயம் அவரை ரொம்பவும் சிரமப்படுத்துவது மட்டுமல்லாமல் அவரை அவரது புது மனவி நெருங்கவிடாமல் தடுப்பதாகவும் குறைப்பட்டார். காரணம் அவரது தலையணை அடிக்கடி; நனைவதாகவும், துர்நாற்றம் ஏற்படுவதினாலும் அவரது மனைவி அவரது தலையணையில் தலைவைத்துப் படுப்பதற்கு தயங்குவதாகவும் மிகவும் கவலைப்பட்டார்.

2) அவரிடம் நான் உங்கள் பதிலை சொல்லும் போது சந்தோசப்படுவார் என நினைத்தேன். ஆனால் நடந்ததோ வேறு. அதற்கான காரணம் அவர் கூறினார் தனக்கு இந்தப் பிரச்சிணை ஏன் ஏற்படுகின்றது என்பது முக்கியமல்ல எனவும் (ஆனால் எம்போன்றோரிற்கு அறிவு பூர்வமாக இருந்தது உங்கள் விளக்கம்) அதற்குரிய தீர்வே தனக்கு முக்கியம் எனவும் தலையை சொறிந்தபடி கூறினார். அவர் கூறியது என்னவெனில் தான் பல முயற்சிகள் செய்து பார்த்துவிட்டேன். எதற்கும் இது நிற்கவில்லை. ஆகவே தனக்கு இதனை எவ்வாறு இல்லாமல் செய்யலாம் என்ற விளக்கமும் அதற்குரிய உதவியுமே தேவை என்று சலித்துக் கொண்டார். அவரது சலிப்பிலிருந்து எனக்கு புரியக்கூடியதாக இருந்தது எவ்வாறு இது அவரிற்கு தொந்தரவு கொடுக்கின்றது எனவும் இதனை நிற்பாட்ட அல்லது முற்றிலும் இல்லாமல் பண்ணுவதற்கு அவர் முயன்று களைத்திருப்பது புரிகின்றது.

-இது (பகல் மற்றும் இரவு) நித்திரை நேரத்திலும் நடைபெறுகின்றதாம்

-நித்திரை(பகல், இரவு) முடிந்து படுக்iயில் அப்படியே விழித்திருந்தாலும் அல்லது எழுந்து இருந்தாலும் கூடவும் இது நடைபெறுகின்றதாம்.

-இதனால் தினமும் தலையனை தோய்க்க வேண்டி உள்ளதால் மனைவியுடன் ஒரே படுக்கையில் படுக்க முடியாமலும் உள்ளதாம்.

என்னைப் போலவே அவரும் எந்த பழக்க வழக்கங்களும் அற்றவர்.

ஆகவே இளையபிள்ளை அவர்களே உங்களிற்கு முடிந்தால் அல்லது யாரிடமேனும் இதற்கு விடை கண்டுபிடித்து தருவீர்களா? இந்த பிரச்சினையை முற்று முழுதாக இல்லாமல் செய்வதற்கு அவரிற்கு உதவுவீர்களா? அவரது வாழ்வில் சந்தோசம் மலர உதவுவீர்களா?

-;அத்துடன் அவர் உங்கள் விளக்கத்திற்கு நன்றி கூறும்படியும் கூறியதுடன் உங்களாளாவது தனக்கு உதவ முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

நண்பரே, உங்கள் நண்பரின் சோர்வும் விரக்தியும் விளங்குகிறது...

இருந்தாலும் பிரச்சனையள் வருவதற்கான காரணிகள் தெரிந்தால் அதை தடுப்பது இலகுவாக இருக்கும். அதனாலேயே விளக்கங்கள் தந்தேன். உங்கள் நண்பர் பல முயற்சிகளை மேற்கொண்டதாக குறிபிட்டார். அவை என்ன என்னவென்று அறியதர முடியுமா? அவர் ஏதும் மருந்துகள் எடுபாரயின் அவற்றை அறிய தர முடியுமா?

எல்லா மருத்துவ கோளாறுகளுக்கும் மருந்து என்ற தீர்வு இல்லை. சொல்லப் போனால் உங்கள் நண்பருக்கு உள்ளது பாரதூரமான மருத்துவ கோளாறும் இல்லை என்பது எனது ஊகம்.. அவ்வாறாக இருந்தால், வாயில் எச்சில் ஊறுவதை விட மேலதிகமான முறைப்பாடுகள் குறிப்பிட்டு இருப்பார்.

உங்கள் நண்பர் நான் குறிபிட்ட எல்லா முயற்சிகளையும் எடுத்து பார்த்து உள்ளார் என்றால் - உங்கள் நண்பரை ஒரு ENT (Ear Nose Throat ) specialist ஐ பார்க்க சொல்லுங்கள். அவரது family physicianயே அதற்கான referralஐ செய்து தரக்கூடும். நீங்கள் சொல்வதை வைத்து மட்டும் என்னால் இயன்றதை கூறினேன். மேலதிக ஆலோசனைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் முக்கியம். மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உங்கள் நண்பரின் முகத்தில் உள்ள நரம்புகளில் ஏதேனும் தளர்ச்சி உண்டா என்று அறியக்கூடும். பற்களில் இருக்க கூடிய பிரச்சனைகளையும் கண்டறிய கூடும்.

மருத்துவரிடம் சொல்லும் போது எச்சில் வடிப்பதை தவிர எனேயே பிரச்சனைகள் ஏதும் சிறிய அளவில் இருந்தால் கூட அதையும் சேர்த்து குறிப்பிடுவது மருத்துவர் உங்கள் நண்பரின் பிரச்சனைக்காக சரியான காரணியையும், தீர்வையும் முன்வைப்பதற்கு இலகுவாக இருக்கும். சாப்பாடோ எச்சிலோ விழுங்குவதில் கஷ்டம் இருந்தால் அதையும் மருத்துவரிடம் சொல்லவும். வாய்ப்புண் அடிக்கடி வருவதாய் இருந்தாலும் மருத்துவரின் கவனத்தில் கொண்டு வருவது அவசியம்.

-உங்கள் நண்பரை அவரயே தனது கன்னம், நாசி, மேல்களுத்து பக்கங்களில் தனது விரல்களால் அமத்தி எங்கேயும் வீக்கம்/ வலி ஏதும் உள்ளதா என்று பார்க்க சொல்லுங்கள்.

- ஒரு நாளைக்கு இரு தரம் பல்விளக்கி வாய் கொப்பளித்தும் (mouthwash) பிரயோசனம் இல்லா விட்டால் - ஒவ்வொரு நேர சாப்பாட்டின் பின்னும் பல் விளக்க சொல்லுங்கள். இதை உங்கள் நண்பர் சுகாதாரம் இல்லாதவர் என்ற கணிப்பீட்டில் சொல்லவில்லை. சிலரின் எச்சில் பதத்தில் கிருமிகள் வளர்வது மற்றவர்களை காட்டிலும் அதிகம். பற்கள் நெருக்கமாக உள்ளவர்களது பள்ளிடைகளில் சாப்பாட்டு மிச்சங்கள் சிறிதளவேனும் சேர்ந்து இருந்தால் அங்கே கிருமிகளும் வளர்வது சுலபமாகிறது.

-பற்கள் சற்றே மிதப்பானதாய் உள்ளவர்களும் நித்திரையில் வாய் திறந்து கொள்வது சகஜம்.

-இதற்கும் மேல் மருத்துவ ரீதியாக stomatitis, neurological disorders, gastro-oesophageal reflux, oral/ sinus infections போன்ற வருத்தங்களும் இல்லை என்ற தீர்ப்பை மருத்துவர் முழு பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகே கூற முடியும்.

தயவு செய்து உங்கள் நண்பரை நல்ல ஒரு ENT நிபுணரிடம் ஆலோசனை பெறச் சொல்லுங்கள். இளவயது + அவரின் சந்தோசத்தை இந்த பிரச்னை வெகுவாக பாதிக்கிறதென்றால் அவர் தகுந்த பரிசோதனைகள் மேற்கொண்டு தான் காரணத்தையும் தீர்வையும் பெற முடியும்.

ஒரு பிரச்சனை வருவதற்கு பல காரணம் இருக்கலாம்... காரணத்தின் அடிப்படையை கண்டு பிடிப்பதாலேயே சரியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

எடுத்துகாட்டுக்கு - தலைவலி வருவதற்கு:

-உடலில் நீர்ப்பதம் குறைவாக இருப்பதால் வரலாம்

-அதிக அளவிலான ஜோசனைகளால் வரலாம்

-கண் சம்மந்தமான் பிரச்சனைகளால் வரலாம்

-மூளையில் ஏதும் வீக்கம் உண்டாகி இருந்தால் வரலாம்

- முதல் நாள் நித்திரை காணா விட்டாலும் வரலாம்!

இதை போல் இன்னும் நிறைய காரணங்கள். எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரி தீர்வு இருக்காது! காரணத்திற்கு ஏற்ற மருத்துவம் தான் பிரயோசனம் தரும். அதனால் உங்கள் நண்பர் மனத்தளர்ச்சியை விட்டு சிறிது நம்பிக்கையுடன் பிரச்சனைக்கான காரணிகளை அலசி ஆராய்வது நல்லது என்பது எனது ஆலோசனை.

அன்பரின் பிரச்னை வெகு விரைவில் தீர எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றி அருமையான மருத்துவ பயனுள்ள செய்திகள்.

யாராவது சொடுகுக்கு மருந்து சொல்லுங்களேன். எல்லா டன்ரவ்ற் சம்போ எல்லாம் வைத்து பார்த்திட்டார்.

கடைசியாய் தாய்லாந்துக்காரி யிட தலை மசாச் போனால் இல்லாமல் போகு என்று அது கூட செய்து பார்த்தார். போகல்ல.

இப்ப ஒரு இந்தியாக்காரன் கேரளா மசாச் போக சொல்கிறானாம்..

தெரிந்தவர்கள் இயற்கை வைத்தியம் சொல்லுங்களேன்

Link to comment
Share on other sites

நன்றி அருமையான மருத்துவ பயனுள்ள செய்திகள்.

யாராவது சொடுகுக்கு மருந்து சொல்லுங்களேன். எல்லா டன்ரவ்ற் சம்போ எல்லாம் வைத்து பார்த்திட்டார்.

கடைசியாய் தாய்லாந்துக்காரி யிட தலை மசாச் போனால் இல்லாமல் போகு என்று அது கூட செய்து பார்த்தார். போகல்ல.

இப்ப ஒரு இந்தியாக்காரன் கேரளா மசாச் போக சொல்கிறானாம்..

தெரிந்தவர்கள் இயற்கை வைத்தியம் சொல்லுங்களேன்

குடுத்து வைத்த மனிதர்... இவ்வளவு செய்த பிறகும், தலையில் முடி இருப்பதே நல்ல விஷயம் நேசன் அண்ணா.... Nizoral Anti-Dandruff Shampoo பாவித்துப் பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அருமையான மருத்துவ பயனுள்ள செய்திகள்.

யாராவது சொடுகுக்கு மருந்து சொல்லுங்களேன். எல்லா டன்ரவ்ற் சம்போ எல்லாம் வைத்து பார்த்திட்டார்.

கடைசியாய் தாய்லாந்துக்காரி யிட தலை மசாச் போனால் இல்லாமல் போகு என்று அது கூட செய்து பார்த்தார். போகல்ல.

இப்ப ஒரு இந்தியாக்காரன் கேரளா மசாச் போக சொல்கிறானாம்..

தெரிந்தவர்கள் இயற்கை வைத்தியம் சொல்லுங்களேன்

மண்டைஒட்டு தோலில் உள்ள எண்ணெய் சுரப்பி செல்களில் ஏற்படும் பிரச்சனையால் தான் தலையில் பொடுகு உண்டாகிறது.

தலையில் உள்ள Sebum glands இல சுரக்கும் எண்னைதன்மையாலும், சில சாதரண shampoo களில் உள்ள பொருட்கள் தலையில் படிந்து தண்ணீரால் வடிவாக கழுவு படாமல் இருப்பதாலும் நாளடைவில் இந்த படிவுகளில் சிலவகை Yeast வளர வெளிகிடுவதால் தான் பொடுகு பிரச்னை வருகிறது. இந்த Yeast ஐ கிளப்புவதற்கு head & shoulders shampoo ஐ விட Ketaconazole என்ற இரசாயன கலவை 2% உள்ள மருந்துகள் பாவிப்பது நல்லது.

உடலில் எங்கு கோளாறுகள் சிறிய அளவில் வந்தாலும் எமது உடல் அதை சீர் செய்ய முயற்பட நல்ல ரத்த ஓட்டம் அந்த பிரச்சனைக்கு உரிய இடத்திற்கு தேவை. அப்போது தான் திருத்தல் வேலைகளுக்கு வேண்டிய பொருட்களை ரத்தம் அவ்விடம் எடுத்து சென்று தேவையற்ற கழிவு பொருட்களை அங்கிருந்து அகற்றி வரும்.

இதற்கு தான் பொடுகு பிரச்சனைக்கு தலை மசாஜ் நல்லது என்று சிலர் பரிந்துரைப்பார்கள். நல்லது தான். இரண்டொரு நாளுக்கு தான் அது தலையை சுற்றிய ரத்த ஓட்டத்தை சீர் செய்யும்!!! (மாசாஜ் பண்ற தாய்லாந்துகாரியை வீடோட வச்சிருந்தால் தான் பிரயோசனம் நிலைக்கும்! :unsure: )

தினமும் உங்கள் மண்டைஒட்டுத் தோலின் ஆரோக்கியத்திற்கு - நீங்கள் தலைமுடிக்கு/ தோலுக்கு துணையாய் இருக்கும் vitamin-B மற்றும் Zinc குளுசைகளை எடுத்து வாருங்கள்.

அதோடு ஒரு மருந்து கலந்த shampoo என்றாலும் பாவித்து வருவது நல்லது என்பது எனது ஆலோசனை.

குட்டி குறிபிட்ட Nizoral shampoo UK இல அந்த பெயருடன் வெளியாகிறது. வேறு சில இடங்களில் Dandrazol என்ற பெயரில் வெளியாகிறது. நீங்கள் எந்த நாட்டில் உள்ளவர் என்று தெரியாது - ஆனால் உங்கள் நாட்டில் உள்ள எந்த பெரிய மருந்து கடையிலும் - Ketoconazole 2% உள்ள shampoo என்று கேட்டு பார்த்தால் கிடைக்கும்.

Nizoral/ Dandrazol இரண்டிலும் இது உண்டு.

- இந்த shampoo கிடைத்தால் முதல் இரு மாதங்களுக்கு வாரம் இருமுறை அதை தலையில் வைத்து 5-10 நிமிடம் ஊற விட்டு விட்டு பிறகு முளுகவேனும். அதன் பின்னர் பொடுகு குறைந்து வருவதாய் இருந்தால் வாரம் ஒரு முறை பாவித்தால் காணும். பலர் பாவித்து பிரயோசனபட்டு இருக்கிறார்கள். prescription தேவை இல்லை

(120ml = 8 UK Pounds). (தாய்லாந்து காரியை விட இது மலிவு தான்!!!) :D

-Polytar AF என்ற ஒரு மருந்து கலவை shampoo வை Stiefel என்ற நிறுவனம் வெளியிடுகிறது. அது மூலிகை கலவை மருந்து என்று நினைக்கிறேன். தலையில் வரும் பொடுகு, அதால் உண்டாகும் தோல் பாதிப்புகளை இம்மருந்து நிவர்த்தி செய்திருப்பதாகவும் அறிகின்றோம். இது ஒரு மாதத்திற்கு வாரம் மூன்று முறை என்ற அளவில் பாவித்து வர வேண்டும். (250ml = 8 UK Pounds). ஒரு மாதம் முதலில் பாவித்து பார்த்து விட்டு அதால் உங்களுக்கு பிரயோசனம் இருந்தால் மேற்கொண்டு வாங்குங்கள்.

மருந்து கலந்த shampoo எதுவும் வைக்க விருப்பம் இல்லையென்றால் Aloe Vera, Tea Tree Oil போன்றவை தோலுக்கு நல்லது. பூசி பார்க்கலாம். தோலின் ஆரோக்கியத்திற்கு (அது தலையில் உள்ள தோலாய் இருந்தாலும்) நல்லது என்று தெரியும். ஆனால் பொடுகை இல்லாமல் பண்ணுவதற்கு ஏதும் ஒரு medicated shampoo + vitamin supplements எடுத்து வருவது நல்லது. அதிகம் எண்ணெய் கூடிய சாப்பாடுகளை தவிர்ப்பது தோலுக்கு மட்டும் அல்ல ரத்த ஓட்டத்திற்கும் நல்லது.

பிரச்சனை தீர்ந்தால் தயவு செய்து வந்து சொல்லுங்கள். பலருக்கு சாதாரணமாய் வரும் துவனி தான் இந்த பொடுகு!

Good luck! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை தீர்ந்தால் தயவு செய்து வந்து சொல்லுங்கள். பலருக்கு சாதாரணமாய் வரும் துவனி தான் இந்த பொடுகு!

இளையபிள்ளை.... தகவலுக்கு நன்றி... எனக்கும் உந்த பொடுகுப்பிரச்சனை இருக்கு...கூடுதலா head and sholder தான் வைக்கிறது... நீங்கள் சொன்ன மாதிரி அந்ந நேரத்துக்கு பறவாய் இல்லை... ஆனால் அடுத்த நாள் எண்ணைக்கசிவு வந்திடும்.. ஒவ்வொரு நாளும் தலையில தோஞ்சால் பிரச்சனை இல்லை...Nizoral பாவிச்சு பாத்தனான் ஆனால் 5-10 நிமிடம் ஊற வைக்க இல்லை. மருந்து கூடாதெண்டு உடனை கழுவிறது. நீங்கள் சொன்ன மாதிரி 5 நிமடம் ஊற வைச்சு பாக்க போறேன். தகவலுக்கு நன்றி.

பி.கு. மற்ற பிரிவுகளுக்கு போய் ஆக்களை கலாய்க்காமல் இங்கையே இருங்கோ. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை.... தகவலுக்கு நன்றி... எனக்கும் உந்த பொடுகுப்பிரச்சனை இருக்கு...கூடுதலா head and sholder தான் வைக்கிறது... நீங்கள் சொன்ன மாதிரி அந்ந நேரத்துக்கு பறவாய் இல்லை... ஆனால் அடுத்த நாள் எண்ணைக்கசிவு வந்திடும்.. ஒவ்வொரு நாளும் தலையில தோஞ்சால் பிரச்சனை இல்லை...Nizoral பாவிச்சு பாத்தனான் ஆனால் 5-10 நிமிடம் ஊற வைக்க இல்லை. மருந்து கூடாதெண்டு உடனை கழுவிறது. நீங்கள் சொன்ன மாதிரி 5 நிமடம் ஊற வைச்சு பாக்க போறேன். தகவலுக்கு நன்றி.

பி.கு. மற்ற பிரிவுகளுக்கு போய் ஆக்களை கலாய்க்காமல் இங்கையே இருங்கோ. :D

Sabesh, அதில் உள்ள மருந்து தான் முக்கிய தேவை! வைத்து ஊற விட்டு பின் மெல்லிய சூடான தண்ணியில் கழுவி விடுங்கள்.... கொதி தண்ணி தலைமயிருக்கு கூடாது. தலைமயிர் அதிகம் கொட்ட குளிர் நாடுகளில் அதுவும் ஓர் முக்கிய காரணம்!

எனக்கும் ஓர் வருத்தம் - எடக்கு முடக்கா பதில் சொல்லி பழக்கம். இஞ்ச அதை செய்ய ஏலாது. மற்ற பக்கங்களில செய்தால் தான் என்ட வியாதிக்கு தீர்வு கிடைக்கும் :huh: ! விடுங்களனப்பா!! :unsure: !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமேலை அடி அடிக்க அம்மியும் நகரும் என்றது போல

எனக்கும் சுற்றி இருந்தவங்களெல்லாம் இஸ்டத்துகு மொட்டையடிச்சு

இப்ப நிரந்தர மொட்டையாப்போனன்.

நிரந்தரமாக திருப்பதிக்கு வேண்டுதல்தான்.

முடிவளர என்ன பசளை போடலாம்? யாராவது சொல்லுங்களேன்!

Link to comment
Share on other sites

நன்றி டாக்டர் அவர்களே. உண்மையாக எனது நண்பருக்குதான் கேட்டேன்.

சொன்னது மூழுவதும் நகல் எடுத்து கொடுத்து சம்போவும் வாங்கியும் விட்டார்.

என்ன சொடுகு போகாட்டியும் மசாச் போறது ஒரு சுகம் என்கிறார். :mellow:

குடும்பவைத்தியர் கூட இவ்வளவு விளக்கம் கொடுக்க மாட்டார். அழகாக சொல்லி உள்ளீர்கள். இன்று ஒரு 5 ,6 பேருக்கு இந்த தகவலை சொல்லி விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி டாக்டர் அவர்களே. உண்மையாக எனது நண்பருக்குதான் கேட்டேன்.

சொன்னது மூழுவதும் நகல் எடுத்து கொடுத்து சம்போவும் வாங்கியும் விட்டார்.

என்ன சொடுகு போகாட்டியும் மசாச் போறது ஒரு சுகம் என்கிறார். :mellow:

குடும்பவைத்தியர் கூட இவ்வளவு விளக்கம் கொடுக்க மாட்டார். அழகாக சொல்லி உள்ளீர்கள். இன்று ஒரு 5 ,6 பேருக்கு இந்த தகவலை சொல்லி விட்டேன்.

நல்லது நேசன் அண்ணா சந்தோசம். :wub:

பிரயோசனமாய் இருக்கும் என்று எண்ணி தான் எனக்கு தெரிந்த மருத்துவ விளக்கங்கள் குறிப்புகள் தருகிறேன்... தயவு செய்து டாக்டர் என்று சொல்லியழைக்க வேண்டாம். வெறும் இளையபிள்ளை என்று இருப்பதையே விரும்புகிறேன். இங்கு பல துறைகளை சேர்ந்த பலர் இருக்கிறார்கள். அனைவரும் ஏதாவது ஒன்றில் அடுத்தவரை விட விளக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். எல்லாருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை எமது பூர்வீகம் தான். அந்த ரீதியில் ஒராளுக்கு ஒராள் பிரயோசனமாய் இங்கு பழகினால் போதுமே... சும்மா பகிடிக்கு கலாய்க்கிரதை தவிர! பட்டங்கள் பதவியளை விலத்தி வைப்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையபிள்ளை , உங்கள் மருத்துவக் குறிப்புகளை தொடர்ந்து பதியுங்கள் .

அதுகும் கள உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் முறை அருமையாக உள்ளது .

யாழ் களத்தின் மருத்துவப் பகுதி இல்லாத குறை உங்கள் மூலம் தீரட்டும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.