Jump to content

கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா


Recommended Posts

இதே இடத்தில , நாங்கள் எல்லாரும் மீண்டும் டக்கிலச திட்ட ஆரம்பிப்போம்,

ஏனெண்டா நாங்க யார திட்டேலை , யார ஆதரிக்கேல

இண்டைக்கு ஆதரிப்போம் . நாளைக்கு திட்டுவோம்

டக்கிலசின்ர இருப்பும் கேள்விகுறிதான்?? நம்பி?? ( நம்பிக்கை தான் வாழ்க்கை எண்டு யாரோ சொல்லிறது கேட்குது , எஸ்கேப்............................)

Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

நான் மோட்டு அரசியல் ஆய்வு செய்கின்றேன் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். தாங்கள் மீண்டும் அதை எனக்கு நினைவுபடுத்தியமைக்கு நன்றி!

சரி... நீங்கள் அங்குள்ள மக்களை காப்பாற்ற எனன செய்யப்போகின்றீர்கள் என்று கொஞ்சம் எடுத்துவிடுங்கள். நீங்கள் தாயகம் சென்று ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு தயாராக இருக்கின்றீர்களா என்று கொஞ்சம் சொல்லுங்கள். எப்போது தாயகம் செல்லப்போகின்றீர்கள்?

ஜயா ஆக உங்கள் போன்ற நடுநிலையாளர்கலால் கேக்க கூடிய கேள்வி இது தான்.

அங்கு உள்ள மக்களை காப்பாற்ற டக்கிளசின் கூட சேர்த்து தான் என்றால் ஏன் மகிந்தாவுடன் சேர்ந்து செய்ய முடியாது?

கேவலம் வடக்கில் மட்டுமே சொற்ப சீட்கலை பெற்று தமிழ் மக்களை மீட்பார் என்றால் ஜதே கா கட்சியுடன் சேர்ந்தால் இவர்களுக்கு அதிக சீட் செல்வாக்கு இருகே இஅவர்களுடன் சேர்ந்து செயற்படலேமே?

வேனாம் ஜயா 22 எம்பி உள்ள கூட்ட அமைப்பு இருக்கே?

Link to comment
Share on other sites

குட்டி,

டக்கியை பற்றி நீங்கள் சொல்லியோ அல்லது வேறு யாரும் சொல்லியோ அறிய வேண்டிய தேவை யாருக்கும் இல்லை

எனது உறவினர் பலர் இன்றும் யாழில் தான் உள்ளனர். அவர்கள் சொல்வார்கள் நீங்களும் பலரும் அறியாத பல படு பயங்கரங்களை.

இன்று இந்த திரி நீள்வதற்கு அது அல்ல காரணம்

சிங்களவன் தன் தேவைக்காக தன்னை அழிக்க லெபனானில் பயிற்சி எடுத்த டக்கிளசை பயன் படுத்தினான்/ பயன் படுத்துகின்றான். ஆனால் நாம் டக்கிளசை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய நேரத்திலும் பயன்படுத்தாமல் விடுகின்றோம். ஒன்றிணைவோம் என புலிகளின் கே.பி சொல்வதை கூட நிராகரிக்கின்றோம்

ஏன் எமக்கு மட்டும் தந்திரமோ அல்லது சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தும் அறிவோ இல்லை?

சிங்களவன் Lucky person(s)... ஏனெனில் தின்று விட்டு களியாட்ட நிகழ்வில் அரசியல் பேசும் புலம்பெயர் சமூகம் என்று பெரிசாக அவனுக்கு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கு உள்ள மக்களை காப்பாற்ற டக்கிளசின் கூட சேர்த்து தான் என்றால் ஏன் மகிந்தாவுடன் சேர்ந்து செய்ய முடியாது?//

யாருக்குத்தெரியும். அதுவும் நடக்கலாம்.

..

இலங்கைக்கும் போகாமல்/ அங்கு மக்களுக்கு இருக்கிற தெரிவையும் மறுத்து /

இங்கேயிருந்து கொண்டே - அந்த மக்களுக்கு செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை பட்டியல் இடுங்கள். அதன்மூலம் முதலில் அந்த மக்களுக்கு முகாம்களில் அடிப்படை வசதிகள் கிடைக்க - பிறகு மீளக்குடியேற்ற - (மிச்சமெல்லாம் பிறகு) வெளிநாடுகளில் இருந்து செய்யக்கூடிய வேலைத்திட்டம் என்ன?

இல்லை. மானத்திற்காக அந்தசனம் உயிரை விட்டாலும் விடட்டும். ஆனால் சோற்றுக்காக யாரையும் கெஞ்சக்கூடாதென்பதே உங்கள் நிலைப்பாடு எனில் -

வவுனியா வரை ஒரு நடைபோய் அந்தச் சனத்திற்கு முன்னால் சொல்லிப்பாருங்கள். திரும்பி வரமாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

நிழலி இந்தே கதை பல குடும்பங்களுக்கு உண்டு;

எனது சகோதரியின் கனவிரின் தம்பி கிழ்மட்ட தளபதி அவர் 14 திகதியில் இறுதியாக கனடாவுக்கு போன் பன்னி பேசிய போது( சகோதரனுடன்) எனது மனைவி ப 2 பிள்ளைகள்) மக்களோடு மக்களாக வவுனியாவுக்கு அனுப்பியததகவும் ஆர்மி கிட்ட வந்து விட்டான் நாங்கள் குப்பி தான் கடிக்க வேண்டும் போல இருக்கு என்பது அவரின் இறுதி செய்தி எப்படியாவது தனது மனைவி பிள்ளைகளை உதவி செய்து காப்பாற்ற சொன்னார்.

ஆக நீங்கள் நினைப்ப்பதை தான் இறுதியில் போராடிய போராளிகளும் நினைத்து இருக்கிறார்கள்.

வினீத்,

ஒரு விடயத்தில் நான் தெளிவாக இருக்கின்றேன் என நம்புகின்றேன்

அண்ணாவை டக்கி எடுத்து விட தன் கு..யை கழுவி விட சொன்னால்...கையால் அல்ல நாக்கால் கூட கழுவ நான் தயார்

இது just அண்ணன் என்ற உறவுக்காக அல்ல....இறுதிவரை தலைவனின் கரம் பற்றி அவனின் சொல்லுக்காய் கடற்கரையோரம் சுக துக்கம் இன்றி போராடிய ஒரு போராளிக்காய்

இதனை எல்லோரும் துரோக செயல்...பச்சோந்தி செயல் என்று அழைத்தால்..... I JUST DONT CARE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர் எல்லாம் தமிழ் மக்களைப் பார்த்து அறிக்கை விடுற அளவுக்கு வளர்ந்துட்டாரோ..??! அதையெல்லாம் பிரசுரித்து கருத்துக் கேட்கிற நிலைக்கு யாழும் வந்திட்டுது.

தமிழீழம் கேட்டு பின்னர் மாகாணாசபை கேட்டு பின்னர் ஒட்டுக்குழு அரசியல் நடத்தி.. தமிழினத்தின் போராட்டத்தையே கருவறுக்க நின்றவங்க எல்லாம் இப்ப தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தாமே என்னும் அவலமான நிலை தமிழ் மக்களுக்கு வந்திருப்பதுதான் கவலைக்கிடமானது.

ஆனால் ஒன்று டக்கிளசோ.. இன்னும் துரோகிகளோ.. உங்களை நோக்கிய துப்பாக்கிகள் எப்போதும் மெளனிக்காது.

மறப்பம்.. மன்னிப்பம் என்பது உங்களுக்கு எப்போதும் பொருந்தாது. ஏனெனில் நீங்கள் புலிகளாகவும் மக்களாகவும் அழித்தது எல்லாம் தமிழ் மக்களையே..! அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். நிச்சயம் புலிகள் இல்லாத இடைவெளியில் புகுந்து கூத்தாடலாம் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்ற 1987 கனவு எனியும் பலிக்காது..! :icon_idea:

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்த டமில்லர்கள்ட குடும்பி பிடி சண்டை முடிய முதல்ல அங்க இருக்கிற 3 லட்சமும் போயிடும் போல கிடக்கு :icon_idea:

ஐயா புண்ணியவான்களே...துரோகி பட்டங்களை பிறகு சாவகாசமா குடுக்கலாம் முதல்ல அங்க கஷ்டப்படுற சனங்களுக்கு உதவ வாருங்கள்...கனடாவில இருப்பவர்கள் அடுத்த சனிக்கிழமை ஐ.எம்.எச்.ஓ செய்யிற நிதி சேகரிப்புக்கு சென்று கொஞ்சம் பணமாவது குடுங்கோ...

வவுனியாவில கால் இழந்து தவிப்பவர் ஒருவருக்கு செயற்கை கால் பொருத்த கனடிய டொலர் 250 தேவைப்படுது...இதுவரைக்கும் எங்கட மக்களின் பங்களிப்பு மிக மிக குறைவாகவே இருக்கு.....

தயவு செய்து கெஞ்சி கேக்கிறம்...உங்கட கேவலமான சண்டைகளை நிப்பாட்டி போட்டு அங்க எங்கட சனத்துக்கு உதவ முயற்சிக்கிற இளைய தலைமுறையினரின்ட கைகள பலப்படுத்துங்கள்..உங்களுக்கு புண்ணியமா போகும்

Link to comment
Share on other sites

ஒகே.

இலங்கையில் தமிழர்கலுக்கு எண்டு ஒரு உண்மையான தலைமையோ தலைமைகளோ(முஸ்லீம்மாரி....) இருக்காது. அமெரிக்காவில் சம உரிமை வழங்கப்பட்ட காப்பிலியல்போல.. வாழவேண்டியதுதான்.

நான் எனது கடமைகளை செய்தேன்.... செய்கிறேன்.... செய்வேன்....

என்னதான் நடந்திருக்கும்..... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியின் காலடியை பற்றினால் பிறகு நாங்களும் நாய்களாகி விடுவோமே.. அது பரவாயில்லையா?

அதாவது எதிரியின் காலடியை பற்றினால் நாங்களும் நாய்கள் என்று வகைப்படுத்தப்படுவோமே!

எம்முடைய முயற்சிகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்று இன்னும் நான் சொல்ல வில்லை. உங்கள் கருத்துப்படி எதிரியின் ஏவல் நாய்யாக இருப்பவர்களின் கால்களைப் பற்றுவது உங்களிற்கு ஏற்புடையதாய் இருக்கும் என்றால், எதிரியின் கால்களில் வீழ்வது வெட்கப்படவேண்டியதே இல்லையே.

எம்போராட்டத்தில் எதிரியோடு இருந்தவர்கள் எந்தக் கட்டத்திலும் அவர்களின் துணை எமக்கு நன்மை செய்யப் பயன்படாது.

அவர்கள் பணத்திற்காக மனிதப் பிணம் தின்னும் பேய்கள். இந்த நாய்கள் அரசியல் அமைப்புக்கள் அல்ல எதிரியின் கூலிகள்.

Link to comment
Share on other sites

வவுனியா முகாம்களில் உள்ள மூன்று இலட்சம் மக்களை விட கைதிகள் ஆக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான போராளிகளின் நிலை மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்தப் போராளிகளின் உயிரைக் காப்பதற்கு யாருடைய காலில் என்றாலும் நாம் விழலாம்.

டக்ளஸ் ஏற்கனவே இந்தப் போராளிகள் பற்றி சாதகமான முறையில் பேசியிருக்கின்றார்.

உண்மையிலேயே அவர் இந்தப் போராளிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவாராக இருந்தால், அவரை நாம் ஆதரிக்கலாம்.

முரண்பாடான பல சக்திகளோடு விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக நட்பு பாராட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு டக்ளஸ் மூலம் சில நன்மைகளை எம்மால் பெற முடியும் என்றால், அவருடன் நட்பை பேணுவது தவறு இல்லை.

அவருக்கு எமது தயவு தேவைப்படுகிறது. எமக்கும் அவரது தயவு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் உணர்ச்சிகளை சற்று ஒதுக்கி விட்டு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வோம்.

Link to comment
Share on other sites

சபேசன், அவர் இப்ப பிஸ்னஸ்மானாம்!!! வவுனியா அகதி முகாம்களில் உள்ளவர்களை அவரைப் பிடித்தால் எடுத்து விடுவராம், என்று சொல்லி 10 தொடக்கம் 30 வரை கேட்கிறாரம்!!! ஆயிரம் அல்ல இலட்சங்கள்!! இங்கு எனக்கு தெரிந்தவர் 30 கொடுத்து, விடுபட்டு, கொழும்பில் மீண்டும் பிடிபட்டு, மீண்டும் முகாமிலாம்!!! அப்ப 30 அம்போ!!!!!!!!

இங்கு லண்டனிலும் இவர்களது ஏஜன்டுகள் தோன்றியிருக்கிறார்களாம். இந்த பிஸினஸ்ஸின் முக்கிய பங்காளி பசில் ராஜமக்ஸவாம்!! ... முழு விபரங்களும் திரட்டுகிறேன், ......... முடிந்தால் கொண்டு வாறன் ........

வாழ்க டக்லஸ், வழ/ளர்க அவர் பிசினஸு!! ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(((((((((((((((((((((((( டட்டடாய்ங்................டட்டடாய்ங் ))))))))))))))))))))))))))))))))))

காட்சிகள் அரங்கேறுகின்றன.

Link to comment
Share on other sites

அடியேனுக்கு இந்த கிரடிட் கிரன்ஞில் வேலை போனாலும் போகலாம், யாராவது இந்த பிசினச்மானின் தொலைப்[ஏசி இலக்கம் இருந்தால் கொடுங்கள்!!!! சேர்ந்தால் எனது வீட்டு மோட்கேயும் கட்ட பிரட்சனை இருக்காது!!!!!!!!!

Link to comment
Share on other sites

போடு....... அப்படிப் போடு!!! புலத்திலிருந்து நாம் அழிந்தாலும் அழிவோம்!!! ...... உரத்துச் சொல்லு!! அதுவும் புலத்திலிருந்து .... அங்கு எம்மcவர்கல் தெரு நாய்களை விட கேவலமாக அகதி முகாங்களில் அவதியுற, கேட்பார் இல்லாமல் இனம் தொடர்ந்து நிற்கதியாக நிற்க ............ நிச்சயமாக உன் போன்றோரின் குரல்கள் எமக்குத் தேவை!! உரத்துச் சொல்!! இரூதி மட்டும் அழிவோம் என்று!!

அது கிடக்க ஓர் கேள்வி, நீர் இங்கு தொடர்ந்து வாழ்ப் போகிறீர் என்ன??????????

அழிவுக்கு எட்டப்பர் காரணம் ....... உண்மை!! 100 பங்கில் அவர்கள் 25 விழுக்காடு, மிச்சம் 75 ??????? அது நாங்கள்!!!!!!! எதிரியை வளவிற்குள் கூட்டி வந்து அழிந்தோம்!!! இல்லையா??????? வேறு வேண்டாம் என நினைக்கிறேன் .......

இனியாவது நண்பர்களை சந்திப்போம்!! அது இந்தியன் என்றால் என்ன, அமெரிக்கன் என்றால் என்ன???

தெருநாய்கள் விட கேவலமாக அகதிமுகாமில் அவதியுற ,கேட்போர் இல்லாமல் இனம் தொடர்ந்து நிற்கதியாய் நிற்க காரணமான அரசுடன் இருக்கும் ஒரு எட்டப்பன் கூட்டம் ஏன் புலம் பெயர் தமிழரை அழைக்க வேண்டும்? தனக்கு தெரிந்த வழியில் அந்த மக்களுக்கு தீர்வு பெற்று கொடுக்க வேண்டியது தானே.

நாங்கள் இங்கு குரல் கொடுப்பது அந்த மக்கள் வாழ்வுக்கான அரசியல் தீர்வு. அதற்கும் எட்டப்பன் கொடுக்கும் நிவாரனதீர்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை

அந்த எட்டப்பனால் கொண்டு வரமுடியாத எம்மக்களின் அவலங்கள் புலம் பெயர் மக்கள் தான் சர்வதேச சமூக முன் கொண்டு வந்தார்கள். அவர்கள் தான் சர்வதேசம் முன் தொடர்ந்து தீர்வு கேட்கிறார்கள். அதை இல்லாமல் செய்யவே அரசின் கூலியாக புலம் பெயர் தமிழரோடு சமரசம் செய்து சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கிறான்.

அவன் அரசிடம் கதைத்து ஒரு தீர்வை பெற்று மக்களிடம் கொடுக்க வேண்டியது தானே.

ஏன் மொட்டந்தலக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடிறியள்.

நாங்க தான் டக்ல்ஸ் தேவாவின் அரசியல் தீர்வுக்கு தடையாய் இருகிற மாதிரி சொல்றியள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா , டக்கிளஸ் போன்றவர்களை இணைத்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் ஜீவா போன்ற அறிவு ஜீவிகளிடம் ஒரு கேள்வி,

தனது தமிழன் என்கிற அடையாளத்தை இழந்து சிங்களப் பேரினவாதக் கட்சியுடன் இணைந்துகொண்டு, வடக்கை விடுங்கள், ஏன் கிழக்கு மாகாணத்துக்குக் கூட "தனியான எந்த அதிகாரமும் தேவையில்லை, அது பிரிவினை வாதத்தைத் தூண்டிவிடும்" என்று சிங்களத்துக்குச் சற்றும் குறையாத தொணியில் பேசிவரும் கருணா என்பவனை எப்படி உங்களுடன் இணைத்துக்கொள்ளப் போகிரீற்கள்? சரி, இது கருணா விரும்பிச் சொல்லவில்லை, சொல்லவைக்கப்பட்டிருக்கிறான

Link to comment
Share on other sites

இன்னும் சில வாரங்களுக்குள் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து ஒரு ஒற்றுமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியான போராட்டத்தை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றால், நான் ஈபிடிபியை ஆதரிப்பதாக தீர்மானித்திருக்கின்றேன்.

வன்னியில் இருக்கும் மக்களின் நிலையைக் காட்டி பல வேலைகள் நடக்குது. சிலர் காசு சேர்க்கிறார்களாம். சிலர் இப்போது இந்த வேலைகளும் ஆரம்பித்திருக்கிறார்கள். யாரையும் முத்திரை குத்தாமல் இந்த அறிக்கை வெளி வந்த பின்னணி பற்றி மட்டும் எனக்கு சில கருத்துகள் உண்டு:

1. கண் பார்வை மங்கி வரும் டக்கிளசுக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் புலம் பெயர் வாசிகள். இப்போது புலம் பெயர் தமிழர்களிடையே இருக்கும் இடைவெளியை நன்றாக எடுத்துச் சொல்லியிருப்பார்கள் இந்த ஆலோசகர்கள். "கேப்பில கிடா வெட்டுற வேலை" சில கிடாக்கள் மாட்டுப் பட்டும் விட்டன.

2. மூன்று லட்சம் மக்களைக் காக்க இந்த அறைகூவல் என்கிறார்கள். இதே மூன்று லட்சம் மக்கள் வன்னிக் கொலைக் களத்தில் இருந்த போது ஒரு பிரிட்டிஷ் பா.உ "சொந்த மக்களையே குண்டு வீசிக் கொல்லும் ஒரே அரசு சிறி லங்கா" என்று சொன்ன போது " அது உண்மையல்ல" என்று மறுத்தார் டக்ளஸ். இது பல வருடங்கள் முன்பு நடந்ததல்ல, சில வாரங்கள் முன்பு நடந்தது! இந்த வெளிப் படையான உண்மை கூடத் தெரியாத அல்லது தெரியாதது போல நடிக்கும் ஒருவர் மக்களைக் காக்கும் பணிக்கு தலைமை தாங்கப் போவதாக அறிக்கை விட்டால் அதை நாங்கள் நம்பும் அளவுக்கு தலைவர்களுக்காக அலையும் பேர்வழிகளாக ஆகி விட்டோம்.

3. சரி. மக்கள் நிலை கருதி மறப்போம் மன்னிப்போம். இப்போது இந்த மக்களை வதை முகாம்களில் இருந்து விடுவிக்கும் வேலைக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் எதற்கு டக்ளசுக்குத் தேவை? காசு கொடுக்கவா? அல்லது புலம் பெயர் மண்ணில் போராட்டம் செய்யவா? அரசின் ஆதரவாளருக்கு எதற்கு மக்கள்? சிறி லங்காவின் அரசியல் கூத்துகள் பற்றி அறியாதவர்களா நாங்கள்?

4. ஆனால் ஒரு விஷயத்திற்காக புலம் பெயர் மக்கள் டக்கிளசுக்கு (அவர் பின்னாலிருக்கும் சிங்கள அரசுக்கும்) தேவை.புலம் பெயர் மக்கள் டக்ளசை ஆதரித்தால் தமிழர்களுக்கு நாம் ஜனநாயக வழித் தீர்வைக் கொடுத்து விட்டோம் என்று சிங்களவன் சொல்லும் போது அதற்கு poster boy ஆக டக்ளஸ் பயன் படுவார்.(டக்ளஸ் ஜனநாயக ஒளியாக இருப்பார் என்று நம்புவோர் தீவகத்தில் நடந்த பாலியல் வல்லுறவுகளையும், நடேசன் போன்றோரின் கொடூரமான கொலைகளையும் நினைவு மீட்டிப் பார்க்க வேண்டுகிறேன்!)

5.அறிக்கையில் கவனிக்க வேண்டிய ஒரு சொல் "நாம்" என்பதாகும். "நாம் போராடினோம்" என்கிறார். டக்ளஸ் ரசிகர்கள் இதை எப்படி மறந்தார்கள்? எங்கே டக்ளஸ் போராடினார் தமிழர்களுக்காக? பல்லாயிரம் தமிழர்களுக்கு அரச துறை வேலை வாய்ப்பு எடுத்துக் கொடுத்ததாக சிலர் சொல்கிறார்கள். எல்லாம் முறைப்படி நடக்கும் ஒரு நாட்டில் தகுதி உள்ளவன் விண்ணப்பித்தால் வேலை கிடைக்க வேணும். ஊழலில் ஊறிய சிறி லங்காவில் தகுதியை தூக்கிப் போட்டு விட்டு மந்திரியின் சிபார்சுக்கு வேலை கிடைக்கிறது. இந்த ஊழல் இயந்திரத்தை டக்ளஸ் பயன் படுத்த சிறி லங்கா அனுமதித்தது என்பது தானே உண்மை? இதை எப்படி "டக்ளஸ் போராடினார்" என்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா முகாம்களில் உள்ள மூன்று இலட்சம் மக்களை விட கைதிகள் ஆக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான போராளிகளின் நிலை மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்தப் போராளிகளின் உயிரைக் காப்பதற்கு யாருடைய காலில் என்றாலும் நாம் விழலாம்.

டக்ளஸ் ஏற்கனவே இந்தப் போராளிகள் பற்றி சாதகமான முறையில் பேசியிருக்கின்றார்.

உண்மையிலேயே அவர் இந்தப் போராளிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவாராக இருந்தால், அவரை நாம் ஆதரிக்கலாம்.

முரண்பாடான பல சக்திகளோடு விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக நட்பு பாராட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு டக்ளஸ் மூலம் சில நன்மைகளை எம்மால் பெற முடியும் என்றால், அவருடன் நட்பை பேணுவது தவறு இல்லை.

அவருக்கு எமது தயவு தேவைப்படுகிறது. எமக்கும் அவரது தயவு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் உணர்ச்சிகளை சற்று ஒதுக்கி விட்டு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வோம்.

புலிகள் இருக்கும்வரையிலும் அவர்களை ஆகா ஓகோ என்று புராணம் பாடினீர்கள்.யதார்த்தம் தெரிந்த பின்னரும் அடிப்பார்கள், வெட்டுவார்கள் என்று எழுதினீர்கள். ஆனால் அவர்கள் இல்லையென்று வந்துவிட்ட பின்பு இப்போது டக்கிளஸ் புராணம் பாடுகிறீர்கள்? அதெப்படி? இங்குள்ள தமிழ் அமைப்புகள் தமக்குள் சரியான ஒரு முடிவை எடுக்காவிட்டால் நீங்கள் டக்கிளசை ஆதரிப்பீர்களா? நல்ல விஷயம் ! இதை இங்கிருந்து செய்வதைவிட, அவனுக்கு அருகிலிருந்தே செய்யலாமே? இங்கிருந்து ஒருவர் ஓடோடிப்போய் பிள்ளையானுடன் இணைந்துகொண்டு நடந்ததைப் பார்த்தீர்கள் தானே? அதை நீங்களும் செய்துபாருங்களேன். உங்களின்"எழுத்தாற்றல்?!" அவனுக்குப் பயனுள்ளதாகக்கூட இருக்கலாம்(அது எங்களுக்கு எந்தப்பயனுமற்றது என்று நாங்கள் எப்போதோ அறிந்துகொண்டது வேறுவிடயம்). டக்கிளஸுக்குப் பக்கப்பாட்டு பாடுவதை அங்கிருந்தே செய்வது சிறப்பு. அற்புதராஜா முதல் கேதீஸ்வரன் வரை ஒரு பட்டியலே இருக்கிறது. அதில் உங்கள் பெயரையும் இணைத்துக்கொள்வதில் அவனுக்கு எந்தக் கஷ்ட்டமுமில்லை.

ஆட்கடத்தல்கள். கடத்தலின் பின்னரான கொலைகள், கப்பம் அறவிடுதல் என்று சிங்களவனுக்கு நிகரான தமிழினக்கொலையை நடத்திவரும் டக்கிளஸ் , கருணா என்கிற கொலைக்குழுக்களின் தலைவர்களை தமிழ் மக்களின் இன்னல் போக்க ஆதரவு தரும்படி வேண்டுவது எப்படியிருக்கிறதென்றால், கசாப்புக்கடையில் வேலை செய்பவனிடம் இறைச்சி வெட்ட வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது.

புலிகளின் கதை முடிந்தது. இனி, அவர்களைத் தாக்கிக்கொண்டே இந்த கொலைக்குழுக்களை நியாயப்படுத்தலாம் என்று அறிவார்ந்த ரீதியில் சிந்தித்த உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். ஏனென்றால் ஒரு கோடரிக்காம்பின் பசப்பலை (அந்தப் பசப்பல் சிங்களத்தின் தூண்டுதலின்பெயரால்தான் எழுதப்பட்டிருந்தது என்று தெரிந்த பின்னரும்)இங்கு 89, 90 கருத்துக்களாக நீண்டுசெல்ல களமமைத்துக்கொடுத்திருக்கிற

Link to comment
Share on other sites

யாழ்கள பயங்கரவாதிகளினால் நீக்கப்ப்ட்ட கருத்துக்களை விட 90 பதில்கள்........ கொஞ்சம் கூட உப்புசப்பு இல்லாத ஒரு தலைப்புக்கு.

எல்லொருக்கும் தெரியும். டக்லசுக்கு ஒரு கக்கூஸ் கட்டக்கூட அனுமதியில்லையென்ன்டு.......

இங்கு எனக்கு என்ன உறைக்குது என்ன்டா... எதிரி எவ்வள்வு கவனமாக காஇனடத்துகிற்றன்.. அதுவும் யாழில்.. அடி வருடிகளும், காசுக்ககவும், குழம்பின கேசுக்களும்..... அம்மாடி.....

டக்லஸ் செத்து கனகாலம்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா முகாம்களில் உள்ள மூன்று இலட்சம் மக்களை விட கைதிகள் ஆக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான போராளிகளின் நிலை மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்தப் போராளிகளின் உயிரைக் காப்பதற்கு யாருடைய காலில் என்றாலும் நாம் விழலாம்.

டக்ளஸ் ஏற்கனவே இந்தப் போராளிகள் பற்றி சாதகமான முறையில் பேசியிருக்கின்றார்.

உண்மையிலேயே அவர் இந்தப் போராளிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவாராக இருந்தால், அவரை நாம் ஆதரிக்கலாம்.

முரண்பாடான பல சக்திகளோடு விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக நட்பு பாராட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு டக்ளஸ் மூலம் சில நன்மைகளை எம்மால் பெற முடியும் என்றால், அவருடன் நட்பை பேணுவது தவறு இல்லை.

அவருக்கு எமது தயவு தேவைப்படுகிறது. எமக்கும் அவரது தயவு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் உணர்ச்சிகளை சற்று ஒதுக்கி விட்டு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வோம்.

வன்னிக் கள முனையின் இறுதிநாட்களில், சுமார் 50,000 தமிழர்களை கொன்று தீர்த்துவிட்ட சந்தோசத்தில் வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பிய மகிந்தவை விமான நிலையத்தில் வைத்து கட்டுத்தழுவி முத்தமிட்ட டக்கிளஸைத்தானே தமிழரின் பிரதிநிதியாக ஏற்றுகொள்ளப்போகிறீர்கள். சரியான தெரிவு!!இப்படியான தெரிவுக்கு வர உங்கள் அரசியல் சாணக்கியமும், அனுபவமுதான் காரணமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.சமரசம் உங்களுடன் மட்டுமே இருக்கட்டும். நீங்கள் எங்களுக்கும் சேர்த்து மணியாட்ட வேண்டாம். உங்கள் அரசியல் அறிவிடம் ஒரு கேள்வி, எனக்குத் தெரிந்த நாள்முதல் ஈ.பி.டி.பி யும் அதன் தலைவனும் தமிழருக்கு என்று செய்த நண்மை ஒன்றையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.உங்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் செய்த நண்மைகளை இங்கு நான் கேட்கவில்லை, மற்றைய தமிழர்களுக்குச் செய்ததுபற்றித்தான் கேட்கிறேன். ஆட்கடத்தல், கப்பம், காட்டிக்கொடுத்தல், தமிழருக்குச் சார்பான குரல்களை சிங்கலத்தின் சார்பில் போட்டுத்தள்ளுதல்...என்று ஒரு பட்டியலே இருக்கிறதே? அதில், தமிழரின் நலன் பேணல் என்று ஒரு வரியும் எனது கண்களுக்குத் தெரியவில்லையே? சிலவேளை நாங்களும் உங்களின் கண்ணாடியை அணிய வேண்டுமோ? அதாவது சந்தர்ப்பவாதமென்கிற கண்ணாடி?!

ஆனந்த சங்கரியே ஒரு கூட்டத்தில் வன்னியிலிருக்கும் மக்கள் தொகை அரசு கூறுவதைக் காட்டிலும் 3 அல்லது 4 மடங்கு அதிகம், ஆகவே அதிகளவு உணவு அனுப்புங்கள் என்று கேட்டபோது , "இல்லை, அது பொய், அங்கிருப்பது வெறும் 50,000 பேர் மட்டுமே, ஆகவே அதிகளவு உணவு அனுப்பத் தேவையில்லை"என்று சிங்களத்தின் தலைவனின் முன்னால் ஆக்ரோஷமாகப் பாய்ந்த டக்கிளஸுடந்தானே சமரசம் என்கிறீர்கள்? நல்ல விஷயம்.

டக்கிளசின் பசப்பல் சிங்களத்துக்குத் தெரியாமல் எழுதப்பட்டிருந்தது என்று நம்புவதற்கு இவ்வளவு அரசியல் சாணக்கியமும், எழுத்தாற்றலும் கொண்ட உங்கள் போன்றவர்களால் மட்டுமே முடியும் என்பது பெருமைக்குறிய விடயம்தான்.

உங்களின் ஆதங்கத்தை ஒரே வழியில் சொல்லி முடித்துவிடுகிறேன்,.............பிழை

க்கும் வழி!!!!இதைத்தவிர வேறு எந்த சொல்லும் எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை இப்போதைக்கு !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர் எல்லாம் தமிழ் மக்களைப் பார்த்து அறிக்கை விடுற அளவுக்கு வளர்ந்துட்டாரோ..??! அதையெல்லாம் பிரசுரித்து கருத்துக் கேட்கிற நிலைக்கு யாழும் வந்திட்டுது.

தமிழீழம் கேட்டு பின்னர் மாகாணாசபை கேட்டு பின்னர் ஒட்டுக்குழு அரசியல் நடத்தி.. தமிழினத்தின் போராட்டத்தையே கருவறுக்க நின்றவங்க எல்லாம் இப்ப தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தாமே என்னும் அவலமான நிலை தமிழ் மக்களுக்கு வந்திருப்பதுதான் கவலைக்கிடமானது.

ஆனால் ஒன்று டக்கிளசோ.. இன்னும் துரோகிகளோ.. உங்களை நோக்கிய ***.

மறப்பம்.. மன்னிப்பம் என்பது உங்களுக்கு எப்போதும் பொருந்தாது. ஏனெனில் நீங்கள் புலிகளாகவும் மக்களாகவும் அழித்தது எல்லாம் தமிழ் மக்களையே..! அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். நிச்சயம் புலிகள் இல்லாத இடைவெளியில் புகுந்து கூத்தாடலாம் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்ற 1987 கனவு எனியும் பலிக்காது..!

நெடுக்கு, உங்களின் கருத்து, இங்கே தம்மை அரசியல் அறிவு ஜீவிகளாகவும், பிரபல பந்தி எழுத்தாளர்களாகவும் கருதிவரும் பச்சோந்திகளுக்கு சரியான சாட்டையடை! சிங்களத்தின் பசப்பலுக்கு பலியான முதல் ஆடு அவராகத்தானிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா"

-அனுபவங்களில் இருந்து உணர்ந்து தெளிவது தான் வாழ்க்கை - மறப்பது அல்ல - உமக்கு என்ன விலை என்று சொல்லும் - உம்மால ஆக வேண்டியதை பார்ப்போம்...

-முரண்பாடுகளை "களைய" ஏலாது - அதுகளை கருத்தில வச்சிருக்கிரம்...

-ஒன்று பட்டு? உம்மோட ஒன்று பட்டால் "பாடு படுவோம்" என்பது நீர் சொல்லி அறியவேண்டியது இல்லை...இழிவான வேலையளுக்கு பயன்பட்ட நீர் இனி மேலாவது இரண்டொரு பிரயோசனமான காரியங்களுக்கு பயன்படும்...

:icon_idea:

Link to comment
Share on other sites

இன்றைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க என்னால் தொடங்கப்பட்ட தலைப்பு இடம் மாற்றப்பட்டதால் கருத்தாளர்களின் கவனத்துக்கு எனது கருத்தை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.....

1. `புதியன புகுதலும் பழையன கழிதலும்` என்பது முன்னெப்தையையும் விட தமிழ் மக்கள் தற்சமயம் தாரக மந்திரமாக கொள்ளவேண்டி அரசியல் அரிச்சுவடியாக போயுள்ள அவலத்தையும் தண்டனையையும் வரலாறு எமக்கு திணித்துள்ளது.

நான்காவது `ஈழப்போர்` முடிவு மூன்று லட்சம் எம் தமிழ் மக்களை முகாம்களுக்குள் முடக்கியுள்ளது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை அரசியல் கைதிகளாக அரச படையினர் இன்னும் உயிருடன் வைத்துள்ளனர். வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அரசியல் சூனியத்துக்குள் தமிழ் மக்கள் மூழ்கியுள்ள இன்றைய சூழலில் நாம் நடந்து வந்த பாதையை மட்டும் அல்ல எமது இலக்கு குறித்தும் மீள்பார்வைகள் செய்ய வேண்டியுள்ளது.

மூன்று லட்சம் மக்களினதும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகளின் எதிர்காலத்தை விட, அவர்களின் இயல்பு நிலையான வாழ்வைவிட, அவர்களின் வருகைக்காக ஏங்கிக் காத்திருக்கும் வன்னி மண்ணைவிட `புலம் பெயர்` தமிழர் அரசியல் வேறொன்றில் அக்கரை கொள்ளுமாயின் `அவர்கள்` குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

அடுத்து, இலங்கை பாராளுமன்ற சட்டவாக்கத்துக்குள் அரசியல் செய்யும் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் வெட்டிப்பேச்சில் காலத்தைக் கழிக்க இனியும் என்ன தேவையுள்ளது?

அரசியல் திர்வுக்கு பின்னால்தான் வன்னி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்களாயின் அந்த அரசியல் தீர்வின் பலான்கள் மக்களை போய் சென்றடையாது.

ஆக, தமிழ் தேசிய கூட்டமைப்பு முகாம்களில் முடங்கியுள்ள மூன்று இலட்ச மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு கொண்டு செல்ல கூடிய வகையில் தனது சமகால அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களுக்கு சூடான செய்திகளை கொடுக்க மட்டும் கொழும்பு வாழ்வை பயன்படுத்தாது மக்கள் மீள்குடியேற்றத்துக்கு ஆளும் அரசுக்கு `ஆக்கபூர்வமான அழுத்தத்தைக்` கொடுக்க முன் வர வேண்டும்.

`ஆக்கபூர்வமான அழுத்தம்` என்பது வெறும் எதிர்ப்பரசியல் அல்ல.

2. ஆளும் கட்சிக்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒரு இணக்கத்துக்கு வருவதன் மூலம் ஆளும் கட்சிக்கு `ஆக்கபூர்வமான` அழுத்தத்தைக் கொடுக்கலாம். இலங்கையில் உள்ள ஏறக்குறை அனைத்து சிறுபான்மையின கட்சிகளும் ஆளும் கட்சிக்கு எதிரான நிலையிலேயே உள்ளன. அதனை சரிவர பயன்படுத்தி அரசியல் பேரம்பேசும் சக்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவு தழுவியதாக பெருப்பித்துக் கொள்ளவேண்டும்.

அடுத்த ஜனாதிபதி அல்லது பாராளுமன்ற தேர்தலில் ஒரு தீர்மானகரமான சக்தியாக தமிழர் தரப்பு மற்றைய சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து எழுந்தால் `அரசியல் கைதிகளாக` உள்ள எம்மவர் அனைவருக்கும் ஒரு விடிவு கிட்டும்

3. தமிழர் உரிமைகள் சட்டம் தெரிந்த வின்னர்களைவிட அரசியல் தெரிந்த தலைமைகளால் மட்டுமே பெற்றுக் கொடுக்க வாய்ப்புள்ளது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் யாழ் கருத்து களத்தில் `சமாதானம்` தமிழர் ஆயுதப்போராட்டத்தில் வகிக்கும் பங்கு குறித்து விரிவாக விவாதித்தும் இருந்தேன். அப்போது, நாரதர், குறுக்காலபோவான், கிருபன், தயா இன்னும் பலர் அந்த விவாவத்தில் ஈடுபட்டோம்.

இப்போது சாத்திரி, சாந்தி ரமேஸ், நெல்லையன் போன்றோர் ஒரு புதிய திசையில் தமது பர்வையை திருப்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது

காத்திரமான விவாதங்கள் இன்னும் எம்முள் நடக்காது இருப்பது ஆரோக்கியமானது அல்ல.

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாம் புடுங்குப்படுவதிலருந்து ஒன்று தெரியுது

புலிகள் தீர்க்கதரிசிகள் என்பது

இப்படியான புடுங்குப்பாடு இருக்கக்கூடாதென்பதற்காகத்த

Link to comment
Share on other sites

சரி இவ்வளவும் ஆராய்ததன் அடிப்படையில் மேலே கருத்தாடல் செய்தவர்களின் கருத்துக்களை மூன்றுவிதமாக பிரிக்க முடிகின்றது.

தாயக மக்களின் அவலங்களைபோக்க தேவானந்தாவின் உதவியை பெறவிரும்புவோர்:

ஜீவா

காவடி

சபேசன்

வந்தியத்தேவன்

கலைஞன்

நிழலி

சாந்தி

பொண்ட்

ATOZ

புதியசமாதானம்

தாயக மக்களின் அவலங்களை நீக்கவேனும் தேவானந்தாவின் உதவியை நாட விரும்பாதோர்:

முற்போக்கு சிந்தனையாளன்

வினித்

பனங்காய்

தராக்கி

மேகன்

நெல்லையன்

ரதி

வசிசுதா

ரகுநாதன்

அரசி

குட்டி

நெடுக்காலபோவான்

தேவன்

srtipi

சித்தன்

பருத்தியன்

ஜஸ்டின்

நேசன்

நான் அடிமையில்லை

மீரா

இதுவரை மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளிலும் அடங்காதவர்கள்:

சூறாவளி

வல்வைமைந்தன்

தூயவன்

நுணாவிலான்

பல்லவன்

குமாரசாமி

விசிவா

ஆக மொத்தத்தில் புலம்பெயர் தமிழர்கள் தற்போது கருத்தியல் ரீதியாக ஆகக்குறைந்தது யாழ் களத்தில் பிரிந்து நிற்கின்றோம் என்பதே தற்போதைய உண்மை. இந்தக் கருத்தியல் வேறுபாடு நம்மிடையே முன்பைவிட அதிகரித்து இருப்பதையும் காணமுடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா முகாம்களில் உள்ள மூன்று இலட்சம் மக்களை விட கைதிகள் ஆக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான போராளிகளின் நிலை மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்தப் போராளிகளின் உயிரைக் காப்பதற்கு யாருடைய காலில் என்றாலும் நாம் விழலாம்.

டக்ளஸ் ஏற்கனவே இந்தப் போராளிகள் பற்றி சாதகமான முறையில் பேசியிருக்கின்றார்.

உண்மையிலேயே அவர் இந்தப் போராளிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவாராக இருந்தால், அவரை நாம் ஆதரிக்கலாம்.

முரண்பாடான பல சக்திகளோடு விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக நட்பு பாராட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு டக்ளஸ் மூலம் சில நன்மைகளை எம்மால் பெற முடியும் என்றால், அவருடன் நட்பை பேணுவது தவறு இல்லை.

அவருக்கு எமது தயவு தேவைப்படுகிறது. எமக்கும் அவரது தயவு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் உணர்ச்சிகளை சற்று ஒதுக்கி விட்டு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வோம்.

3 இலட்சம் மக்களை பாதுகாக்கிற திறனோ.. சரணடைந்த போராளிகளை காக்கிற திறனோ டக்கிளஸ் தேவானந்தா போன்ற கொலைகாரர்களிடம் கிடையாது. அவனே மண்டையன் குழு என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்று கோணிப்பையில் கட்டி எறிந்தவன். அவனே கோவில்களில் கொள்ளையடித்துவிட்டு அதையும் சுருட்டிக் கொண்டு இந்தியப் படைகளோடு இந்தியாவுக்கு ஓடினவன். அவனே சிங்களத்தின் எலும்புக்கு ஒட்டி இருந்து காட்டிக் கொடுப்பு அரசியல் நடத்தியவன். அவனே பல பொதுமக்களின் சாவுக்கு காரணமாக இருந்திருக்கிறான். இந்த நிலையில் அவனிடம்... போய் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுபவர்கள் கையாலாகாதவர்கள் மட்டுமே..!

இவர்கள் 22,000 மாவீரர்களினதும் கனவுக்கு சாவு மணி அடித்தவர்கள். 1,20,000 மக்களின் இறப்பினில் குளிர் காயத்தயங்காதவர்கள்.

3 இலட்சம் மக்களையும் போராளிகளையும் காக்க வேண்டின் அதற்காக ஒரு அமைச்சுப் பதவியில் இருக்கிறவன் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவனால் எத்தனையோ விடயங்களை செய்திருக்க முடியும். ஆனால் இவனாலோ அல்லது இதர ஒட்டுக்குழு ஆயுத தாரி தலைவன்களாளோ இந்தியப் படை காலத்தில் செயற்பட்டது போன்று எதிரியின் மடிக்குள் உறங்கிக் கொண்டு ஆயுத அரசியல் செய்ய முடியுமே அன்றி வேறெதனையும் செய்ய முடியாது. இவர்களால் பிரிந்த வடக்குக் கிழக்கு மாகாண சபையைக் கூட இணைக்க முடியாது. கனவுதான் காண முடியும்.

இவன்.. தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பிரபாகரனை வைச்சே இவ்வளவு காலமும் காலத்தை ஓட்டிட்டான்.. பிரபாகரன் இல்லை என்று அவனே நம்பும் இக்காலத்தில் அவனுக்கு இந்தக் கட்சியும் தேவையில்லை.. அமைச்சும் தேவையில்லை. அவற்றைக் கலைத்துவிட்டு.. லண்டனில் செய்துள்ள பல கோடி முதலீட்டை கவனிக்க லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த பெருமக்களோடு இணைவதே சிறப்பு. அங்கிருந்து இவன் செய்யும் காட்டிக் கொடுப்பு அரசியலை கைவிட்டால்.. போராளிகளிற்கும் மக்களுக்குமான அச்சுறுத்தல் வெகுவாகக் குறையும்.

சிங்களவர்கள் போராளிகளை மக்களை இனங்கண்டு அழித்ததிலும்.. இந்த ஒட்டுக்குழு நாய்கள் காட்டிக் கொடுத்து அழித்ததே அதிகம். இந்த நாய்களிடம் மக்களை பாதுகாக்கக் கோரும்.. மு... மு..ள் களை மக்கள் சரியாக இனங்காண வேண்டும்.

டக்கிளஸ் பேசினாராம்.. போராளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கச் சொல்லி. அதனை கோத்தபாய உடனடியாக நிறைவேற்றுவாராம் என்று சிலர் சிராட்டிக்குளத்தில் வைத்து புலிகள் மரண அடி அடிக்கப் போகிறார்கள் என்று கட்டுரை வரைந்த கணக்காக கற்பனையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

டக்கிளஸ் தேவானந்தா என்பவன்.. தெளிவான தமிழினத் துரோகி மட்டுமன்றி அவன் சிங்கள அரசில் செல்வாக்குள்ள ஆளும் அல்ல. அவன் அங்கு ஒரு போடுதடி. அவனை நம்பி 3 இலட்சம் மக்களையும் சரணடைந்தவர்களையும் காப்பாற்ற கோருவது கையாலாகதவர்களின் வேலை.

சர்வதேச அமைப்புக்களாலும் இந்தியா போன்ற நாடுகளாலும் அரச அமைச்சுக்களில் எதிர்கட்சிகளில் உள்ள சிங்களவர்களாலும் மட்டுமே இது சாத்தியம். டக்கிளஸ் தேவானந்தாவிடம் கெஞ்சுவதைக் காட்டினும் கோத்தபாயவிடம் கேட்கலாம். ரணிலிடம் கேட்கலாம். ஐசிஆர்சி யிடம் கேட்கலாம். ஐநாவிடம் கேட்கலாம். இந்தியாவிடம் கேட்கலாம்.

இங்கு சிலர் டக்கிளஸ் தேவானந்தாவை ஏதோ சிறீலங்கா அரசில் சக்தி மிக்க ஒருவராக சித்தரிக்க விரும்புகின்றனர். அவனே ஒரு போடுதடியாக இருக்கும் போது..???! இவர்களுக்கு ஏன் இந்த நப்பாசை..! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.