Jump to content

கொடுமையிலும் கொடுமை என்ன என்று உங்களுக்கு தெரியுமோ?


Recommended Posts

இடியப்பம் அவிப்பவர்கள் இடியப்பம் அவித்துக்கொண்டு இருப்பார்கள். இடியப்பத்தை ஒருபொழும் அவித்து அனுபவம் இல்லாதவர்கள் இடியப்பம் அவிப்பதைபற்றி ஆய்வுகள் வெளியிட்டுக்கொண்டு இருப்பார்கள். தாயகத்தில் எங்கள் சமூகம் இத்தனை கொடுமைகளை அனுபவிப்பதற்கு மூலகாரணங்களில் இதுவும் ஒன்று.

விசயம் தெரிஞ்சவன் வாய் திறக்கிறான் இல்லை. அல்லது வாயைத் திறப்பதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. விசயம் அறியாதவன் பல்வேறு விடயங்கள் பற்றி விபரணம் செய்கின்றான். எங்கள் சமூகத்தில் இது காலம் காலமாக நடக்கின்றது.

உண்மை எது பொய் எது என்று பிரித்து அறியமுடியாத அளவுக்கு நாங்கள் முட்டாள்களாக இருப்பதற்கு வாயைத் திறக்கவேண்டியவர்கள் பொத்திக்கொண்டு இருப்பதுவும், வாயை மூடிக்கொண்டு கிடக்கவேண்டியவர்கள் அதை அகலத்திறந்து வைத்து இருப்பதும் காரணமாக இருக்கின்றது.

இவ்வளவு காலமும் சிங்களத்தினது ஆயுதங்களினால் செத்துக்கொண்டு இருக்கும் எங்கள் தமிழினம் இனி தினமும் பல்வேறுவிதமான செய்திகளைக் கேட்டுக்கேட்டு ஏங்கி ஏங்கியே ஏக்கத்தில் சாகப்போகின்றது.

Link to comment
Share on other sites

கலை சரியான ஒரு கருத்தை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறியள்......

உண்மைதான். தமிழ் மக்கள் ஒரு போதும் தெளிந்த சிந்தனையுடன்

எதையும் செய்ததாக சரித்திரம் இல்லை........

அப்படி செய்யும் ஒரு சிலரும் பல இன்னல்களை எதிர் கொள்வார்கள்.......

இன்று எங்களின் இனம் இப்படியான கொடூரமான நிலமைக்குள் தள்ளப்

பட்டுக்கொண்டிருப்பதற்கு நாங்கள் தான் முழு முழு காரணமாக இருக்கிறோம்

தமிழனுக்கு பிறப்போடு வந்த சாவக் கேடு என்னவென்றால்........

ஒன்றாக இருக்கும் போது உயிரையும் கொடுப்பதாக சொல்லுவான் பின்

தனக்கு மறு பக்கத்தில் இலாபம் கிடைக்க போகிறது என தெரிந்தால்

உயிரையும் எடுப்பதற்கு தயங்க மாட்டான்...........

எங்களிடம் தெளிவான சிந்தனையும் உறுதியான மன நிலையும் நாட்டுப் பற்றும்

இல்லாத காரணத்தால் தான் இன்று எங்களின் போராட்டம் இந்த வடிவம்

பெற்றுள்ளது என்ற கசப்பான கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க

முடியாது...............

எங்கள் தலைவனின் செய்தியின் பின் பல பேரின் உண்மை முகம் தெளிவாக

தெரிகிறது.......... அதை எங்கள் தலைவனும் தொலைவில் இருந்து உன்னிப்பாக

கவனித்துக்கொண்டிருப்பான்........

..

நடக்க வேண்டிய வேலைகள் 1000 ம் இருக்க கட்சி அமைப்பதில் காலத்தை வீணாக்கிக்

கொண்டிருக்கிறான் பேராசை பிடித்து திரியும் தமிழன்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசயம் தெரிஞ்சவன் வாய் திறக்கிறான் இல்லை. அல்லது வாயைத் திறப்பதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை.

இதில் பலர் சுயநலவாதிகளாகவே இருக்கினம். தானுண்டு தன்வாழ்வுண்டு என் றெ இருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்கென தாரப்பட்டகடமையை நீர் சரியாகச்செய்யும், கண்டவற்றைக் காதில் வாங்கி கலங்காதே.

இந்தத்தருணத்தில் நம்பிக்கை பேணப்படவேண்டியது மிகவும் முக்கியம். எமது அறுபதாண்டு போராட்டம் ஒரு காலமும் வீண் போகாது.

விசயம் தெரிந்தவன் காலம் வரும்முன் பேசமாட்டான், தெரியாதவன் தான் பேசிக்கொண்டேயிருப்பான்.

எமக்கு விசயம் தெரிவதால் நாம் ஒன்றும் சாதிக்கபோவதில்லை. தரப்பட்ட கடமையை சரியாகச்செய்.

Link to comment
Share on other sites

விசயம் தெரிஞ்சவன் வாய் திறக்கிறான் இல்லை. அல்லது வாயைத் திறப்பதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை.

உண்மை எது பொய் எது என்று பிரித்து அறியமுடியாத அளவுக்கு நாங்கள் முட்டாள்களாக இருப்பதற்கு வாயைத் திறக்கவேண்டியவர்கள் பொத்திக்கொண்டு இருப்பதுவும், வாயை மூடிக்கொண்டு கிடக்கவேண்டியவர்கள் அதை அகலத்திறந்து வைத்து இருப்பதும் காரணமாக இருக்கின்றது.

கலைஞன்,

விசயம் தெரிந்த எத்தனையோ பேர் வாயை அகலத் திறந்து கதைத்ததினால் எல்லா இயக்கங்களாலும் போட்டுத் தள்ளப் பட்டதும், அவ்வாறு சொல்லப் படும் கருத்து இயக்க அரசியல் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக அமைந்தால் (தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரானதாக அல்ல) சொன்னவர்களை துரோகி என்று பட்டம் சுமத்தப் பட்டதும் எம் 30 வருட ஆயுத போராட்ட வரலாற்றின் கறுப்பு நிற செயல்கள். இந்த அணுகுமுறையால், நடுத்தர வர்க்கத்தினை அதிகமாக கொண்ட எம் சமூகத்தில் பலர் வாயை மூடிக் கொண்டு இருக்க பழகிவிட்டனர். எப்போதுமே எந்த சமூகத்திலும் நடுத்தர வர்க்கம் தன் இருப்பை பேண அதிகாரத்துடன் சமரசம் செய்து கொண்டு வாழ பழகி விடும்.

இந்த அணுகுமுறையின் உச்ச கட்ட வளர்ச்சிதான் தலைவர் இருக்கின்றார் என சொல்பவர்களும் இல்லை என்று சொல்பவர்களும் ஆளுக்காள் மற்றவரைப் பார்த்து துரோகி என்று பட்டம் கொடுக்கப் படுகின்றமை

மகிந்த எனும் கொடுங்கோலனின் வருகைக்கு பின் (பிரேமதாச number 2) இதே போக்கு சிங்களத்திடமும் அவர்களின் சமூகத்திற்குள்ளே மிக வேகமாக வளர்ந்து வளருகின்றது. அவர்களுக்கான புதைகுழியை அவர்களே வெட்டுகின்றார்கள், நாம் எமக்கு வெட்டிக் கொண்டதைப் போல

Link to comment
Share on other sites

ஓமோம் எங்கடை அறுபதாண்டு போராட்டம் ஒருபோதும் வீண்போகாது. ஆனால் விரைவில் மீதம் உள்ள தமிழ் மக்களின் உயிர்களும் வீண் போய்விடும். தாயகத்தில் எஞ்சியுள்ள தமிழ்மக்களின் உயிர்களும் வீண்போவதற்கு நாங்கள் எங்கள் வாய்களிற்கு பூட்டுவிட்டு செய்யவேண்டிய கடமைகளைச் செய்வோம்.

விசயம் தெரிஞ்சவன்கள் சரியான காலத்தில் அறிவித்தல் கொடுத்து இருந்தால் இத்தனை உயிரிழப்புக்கள், பின்னடைவுகள் எங்கள் தாயகபோராட்டத்தில் ஏற்பட்டு இருக்காது.

ஆனால் விசயம் தெரியாத லூசுகள் ஆய்வுகள் ஆய்வுகளாய் எழுதி வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு உசுப்போ உசுப்பு என்று உசுப்பேத்தி அதீத கற்பனையை, நம்பிக்கையை வளர்த்துவிட்டதால் தமிழ்மக்கள் தகுந்தநேரத்தில் தெருவில் இறங்கவில்லை. சூசை அண்ணா இறுதி நேரத்தில் விடுத்த அந்த உருக்கமான வேண்டுகோளை மன்னார் மாவட்டம் சிங்களப்படைகள் வசம் விழுந்த தருணத்தில் அறிவித்து இருந்தால் இப்போது தாயகத்தில் தமிழர்களின் நிலமை வேறு.

விசயம் தெரியாதவன் தெரியாத விசயத்தை பற்றி கதைத்துகொண்டு இருப்பதைவிட விசயம் தெரிந்தவன் தெரியப்படுத்தவேண்டிய நேரத்தில் விசயத்தை தெரியப்படுத்தாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது. இது வி.பு.அமைப்பிற்கு மட்டும் அல்ல... எங்கள் சமூகத்தில் உள்ள சகலமட்டங்களில் உள்ள புத்திசீவிகள், சமூக ஆர்வலர்களுக்கும் பொருத்தமானது.

இனியாவது நிழலைத் தொடராமல் நிஜத்தை தொடருவோம். பொத்திக்கொண்டு இருக்கும் விசயம் தெரிந்தவர்களின் வாய்களை திறக்க வைப்போம்.

Link to comment
Share on other sites

நிழலி, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யப்பட்ட தவறுகள் இனியும் தொடரக்கூடாது. இனியாவது நாங்கள் பழைய தவறுகள் மீண்டும் நிகழாதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எல்லாருக்கும் நிச்சயம் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

கவிஞர் அண்ணா, எனது கருத்துக்கள் ஆய்வுகளை செய்பவர் என்றவகையில் உங்களை தாக்கி இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

ஆனாலும்... இதயசுத்தியுடன் பணியாற்றி இருந்தால்கூட ஆய்வாளர்கள் தமது தவறுகளை ஒத்துகொள்ளவேண்டும். இனிவரும் காலங்களில் இதே தவறுகள் விடுவதை தவிர்க்கவேண்டும். இந்த ஆய்வுவாளர்களின் நாசமாய்ப்போன ஆய்வுகள்தான் உலகெங்கும் வாழும் தமிழ்மக்களை சோம்பேறிகள் ஆக்கியது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்மக்கள் மனங்களில் அதீக கற்பனைகளை வளர்த்து, தூவிவிட்டதில் செய்தி ஆய்வாளர்களின் பங்கு கணிசமானது. பொய்களிற்கும், புளுகுகளிற்கும் தமிழ்மக்கள் அடிமையாய்ப்போனது யதார்த்தத்தை அவர்கள் விளங்கிக்கொள்ள முடியாதபடிசெய்துவிட்டது.

நீண்ட காலத்திற்கு ஒரு தடவை புலிகளின் தலைவர்களினால் விடப்பட்ட அறிக்கைகள், சொல்லப்பட்ட தகவல்களைவிட உடனுக்குடன் தினமும் நான்கு ஐந்து தடவைகள் சிறீ லங்கா அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட தகவல்கள் பரப்புரை ரீதியாக வெற்றிபெற்று உள்ளது. அதாவது பொறுமை, நிதானம் என்பதைவிட இந்த அவசர உலகில் அவசரம் அவசரமாக விடப்படும் செய்திகள் சர்வதேசத்தை கட்டினுள் வைத்து இருக்க உதவி இருக்கின்றது.

மேலும், மேலே நிழலி கூறியதுபோல் சகல மட்டங்களிலும் உள்ளவர்களின் கருத்துக்கள் செவிசாய்க்கப்படவில்லை. அல்லது சகல மட்டங்களிலும் உள்ளவர்களின் கருத்துக்கள் கேட்டு அறியப்பட்டு உள்வாங்கப்படவில்லை.

தோல்வி வந்தால் என்ன வெற்றி வந்தால் என்ன... முதலில் பெறுபேற்றின் மூலகாரணங்கள் கண்டுபிடிக்கப்படவேண்டும். தவறுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஆனால், நம்மவர்களில் பலர் இன்னமும்கூட தோல்வியை ஒப்புக்கொள்ளாது தொடர்ந்து அதீத கற்பனை உலகில் சஞ்சாரம் செய்வது நாங்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை காட்டி நிற்கின்றது.

எனவேதான் விசயஞானம் உள்ளவர்கள், அனுபவம் உள்ளவர்கள் தங்கள் பொன்னான வாய்களை திறக்கவேண்டும். ஓர் குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் மீண்டும் மீண்டும் வாயை அகலத்திறந்து வைத்துஇருப்பது பயனற்றது.

எல்லாவற்றுக்கும் முதலாக தமிழ் புத்திசீவிகள் தாயகபோராட்டம் சார்பாக தங்களை ஈடுபடுத்திக்கொள்வதில் முட்டுக்கட்டையாக உள்ள விடயங்கள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

கவிஞர் அண்ணா, எனது கருத்துக்கள் ஆய்வுகளை செய்பவர் என்றவகையில் உங்களை தாக்கி இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

ஆனாலும்... இதயசுத்தியுடன் பணியாற்றி இருந்தால்கூட ஆய்வாளர்கள் தமது தவறுகளை ஒத்துகொள்ளவேண்டும். இனிவரும் காலங்களில் இதே தவறுகள் விடுவதை தவிர்க்கவேண்டும். இந்த ஆய்வுவாளர்களின் நாசமாய்ப்போன ஆய்வுகள்தான் உலகெங்கும் வாழும் தமிழ்மக்களை சோம்பேறிகள் ஆக்கியது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி கலைஞன், உங்கள் கருத்து என்னைப் பாதிக்கவில்லை. உங்கள் கவலை இப்போது புரிகிறது. வன்னியில் முன்னிலை ஆய்வாளநான எனது நண்பன் அதிதமான யுத்த கற்பனைகளை வளர்பதைக் கண்டு அதிர்ந்துபோனதுண்டு. அந்த வகையில் நீங்கள் சொல்வதன் தார்பரியத்தை புரிந்துகொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் கவிஞர் அண்ணா உங்கள் கருத்துக்கு நன்றி. யாழ் வாசகர் ஒருவர் கீழ்வரும் மின்னஞ்சல் ஒன்றை இந்தவிடயம் சம்மந்தமாக அனுப்பி இருக்கின்றார். குறிப்பிட்ட நண்பரின் கருத்துக்கு நன்றி. இந்த மின்னஞ்சலில் கேட்கப்பட்டு இருக்கும் விடயங்களிற்கான பதில் கீழே இருக்கின்றது.

மின்னஞ்சல்:

People like you and poet are the real obstacles to the freedom. There is a duty which has always been on the shoulder of the Diaspora. That is to get the recognition for Tamil Eelam after this much destruction there is a space opening in the west to progress on this - see Times article, etc. Instead of grabbing that opportunity and further the goal people like you and poet are involved in postmortem analysis of what happened back home and whether the leader is dead or not.

This is not about victory and defeat you idiot. It is about what is the value we get for the sacrifices made back home. Only after this much sacrifice it became possible that some openings happening in the West. Probably this is the only way this opening would have happened. So just shut up and go. Work for the recognition. Talk to your MP, neighbour work colleague. Tell them what happened. Get them to support Tamil Eelam on this basis. When America agrees Tamil Eelam is good then liberating the land is not difficult - even if the chinese are supporting the Sinhalese. So don't think you are clever. While posting all these half baked debate you are actually distrupting the unity of our community and damaging Tamil Eelam course.

But idiots like you never listern. Do you?

பதில்:

ஐயா நாங்கள் இங்கு செத்தபிணத்தை வைத்து ஆராய்ச்சி ஒன்றும் செய்யவில்லை. மீதம் தாயகத்தில் எஞ்சியுள்ள உயிர்கள் செத்துப்போகாது எப்படி காப்பாற்றப்படமுடியும் என்று சிந்தித்து பார்க்கின்றோம். மேலும் தலைவர் உயிருடன் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்று நான் மேலே ஒரு இடமும் கருத்துக்கூறவில்லை. எனது கருத்துக்களை முழுமையாக வாசித்து பாருங்கள்.

இங்கு நாங்கள் சும்மா குந்தி இருந்து கதைக்கவில்லை. கடந்த சுமார் ஆறு மாதங்களில் சிக்காகோ, வாசிங்டன், நியூயோர்க், ஓட்டாவா, டொரண்டோ என்று இரவு, பகலாக நாய்கள் போல அலைந்து திரிந்து கடைசியில் வருத்தங்களைதேடி மருத்துவமனை வரை சென்று சிகிச்சைகள் பெற்றுக்கொண்டு தாயகம்பற்றி தொடர்ந்தும் சிந்திக்கின்றோம். யாழ் கனவயீர்ப்பு பகுதியில் கடந்த காலங்களில் நாங்கள் எழுதி இருக்கும் கருத்துக்களை பார்த்தால் நாங்கள் எப்படி பரதேசிகள்போல் தெருத்தெருவாக அலைந்து திரிந்தோம் மற்றும் ஒவ்வொருத்தன் கால்களாய்போய் விழுந்தோம் என்று தெரியும். இதேபோல் வலைத்தளம் மூலமாகவும் எம்மால் முடியுமான பணிகளைச் செய்தோம்.

ஆமாங்க சாமி... நீங்கள் சொல்வதுபோல் நாங்கள் வடிகட்டிய முட்டாள்கள்தான். இல்லாவிட்டால் பேசாமல் படிப்பிலும், தொழிலிலும், காசு பண்ணுவதிலும் எங்கள் பொன்னான நேரத்தை செலவளிக்காமல் இப்படி வீணடித்து இருக்கமாட்டோம்.

யாழில் இந்தத்தலைப்பில் நான் விவாதம் ஆரம்பித்தது தமிழர்களை பிரிப்பதற்காக அல்ல பிரிந்துள்ள தமிழர்களை இணைப்பதற்காக என்று சொன்னால் நீங்கள் நம்பப்போவது இல்லை. இதனால் தமிழர்களிடையே பிரிவினையை வளர்ப்பதற்காகவே என்று உங்கள் பாசையிலேயே புரிந்து கொள்ளுங்கள். நன்றி!

மின்னஞ்சல்:

Hi

I have been silently reading your comments in Yarl.

It is quite clear that you are either working for Anti-Tamil Eelam forces or completely being an idiot without realising distrupting the unity of Tamils.

If you have any patriotic feeling you would just shut up. It is quite clear KP's comments are not helping the Tamil cause at the moment and you trying to promote him in Tamil forums is clearly anti-Tamil.

What we need to do now is fight politically in the West to win the recognition for Tamil Eelam state. Not debating about Thalaivar is dead or not. Or how do we pay homage to him etc.

If you really want to pay homage to him then - go, work for the recognition of Tamil Eelam.

But I am sure you would continue because I am convinced you are a traitor and collaborator of Anti-Tamil forces.

பதில்:

நாங்கள் துரோகிகள் என்று கண்டுபிடித்து கூறியதற்கு மிக்க நன்றி! நாங்கள் தொடர்ந்து துரோகிகளாகவே இருந்துவிட்டு போகின்றோம். நீங்களாவது நாட்டுப்பற்றுடன் இருந்து தாயகத்தில் எஞ்சியுள்ள உயிர்களை காப்பாற்றுங்கள். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் விசயம் தெரியாத லூசுகள் ஆய்வுகள் ஆய்வுகளாய் எழுதி வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு உசுப்போ உசுப்பு என்று உசுப்பேத்தி அதீத கற்பனையை, நம்பிக்கையை வளர்த்துவிட்டதால் தமிழ்மக்கள் தகுந்தநேரத்தில் தெருவில் இறங்கவில்லை. சூசை அண்ணா இறுதி நேரத்தில் விடுத்த அந்த உருக்கமான வேண்டுகோளை மன்னார் மாவட்டம் சிங்களப்படைகள் வசம் விழுந்த தருணத்தில் அறிவித்து இருந்தால் இப்போது தாயகத்தில் தமிழர்களின் நிலமை வேறு.

வணக்கம் கலைஞன் நான் முல்லைத்தீவை ஆமி பிடித்தவுடன் வேறு ஒரு தலைப்பில் ஏன் புலிகள் இப்படி பின் வாங்குறார்கள் அவர்களிடம் ஆளணி பற்றாக்குறை,ஆயுதப் பற்றாக்குறை இருந்தால் முதலிலேயே சொல்ல வேண்டியது தானே என நான் எழுதினேன் அதற்கு நீங்கள் என்ன எழுதினீர்கள் தெரியுமா? இடங்களை இழந்தால் திரும்பவும் பிடிக்கலாம் இந்தியன் ஆமி காலத்தில் கூட புலிகள் எல்லாத்தையும் இழந்து தானே இருந்தார்கள் ஆனால் திரும்ப பிடிக்கவில்லையா? என எழுதியிருந்தீர்கள் உண்மையில் நீங்கள் மட்டும் இல்லை எல்லோரும் அப்படித் தான் இருந்தோம்.உண்மையில் சூசை அண்ணா இப்ப கூறியதை முதலே அதாவது மன்னார் பிடிபட்ட போது சொன்னாலும் புலம் பெயர் உறவுகள் ஆகிய நாங்கள் அதை நம்ப போறதும் இல்லை அதை கேட்க போறதும் இல்லை அது தான் உண்மை.சூசை அண்ணா கடைசியாக விடுத்த வேண்டுகோளை கூட பல பேர் ஏற்கவில்லை.கிட்டதட்ட 3 லட்சம் பேர் இருக்கும் லண்டனில் அவரது இறுதி கோரிக்கையை ஏற்று வந்தவர்கள் 500யும் தாண்டாது.மக்கள் புலம் பெயர் நாட்டில் போராட்டம் செய்கிறார்கள் தான் நான் இல்லை என சொல்லவில்லை ஆனால் ஒரு குறிப்பிட்ட மக்களே தொடர்ந்தும் வருகிறார்கள் என்பது என் கருத்து.உண்மையிலே புலிகளின்[வன்னியின்] இன்றைய நிலைக்கு என்ன காரணம் என்பது புலிக்கு மட்டுமே தெரியும் அவர்கள் வந்து சொல்லப் போறதில்லை அதனால் மற்றவர்கள் நான் அப்படி சொன்னேன் புலி கேட்கவில்லை இப்படி சொன்னேன் புலி கேட்கவில்லை என கதை விடுவார்கள்.மாற்று கருத்துக்காரர் கூட புலி தோற்றுப் போக வேண்டும் என விரும்பினார்களே தவிர மக்கள் நலனை கொஞ்சம் கூட கருத்தில் எடுக்கவில்லை.எனக்கு உங்கள் நிலை புரிகிறது எல்லோரது நிலையும் அது தான் நடந்ததை விடுத்து இனிமேல் புலம் பெயர் நாட்டில் எப்படி போராட்டத்தை பலப்படுத்துவோம் என யோசிப்போம்.இது எனது தனிப்பட்ட கருத்து தப்பாயிருந்தால் மன்னிக்கவும்.யாழில் வந்து எழுதவே பயமாயிருக்குது ஆளாளுக்கு பாய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் ரதி,

நீங்கள் என்ன எழுதி இருந்தீர்கள் என்று நினைவில் இல்லை. ஆனாலும்.. நான் யாழ் இணையத்தில் இந்திய இராணுவம் வெளியேறியபின்னர் திடீரென பலம்பெற்று இடங்கள் கைப்பற்றப்பட்டதுபோல் தற்போதும் அதாவது எதிர்காலத்தில் சாத்தியம் இருக்கின்றது என்று கூறி இருந்தேன்.

ஆனால்... பிரச்சனை அதுவல்ல. தாயகத்தில் மக்களின் உயிர்கள் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றது. ஏற்கனவே எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் சில மாதங்களில் அழிந்துபோனது என்று ஒருவருக்கும் தெரியாது. முன்பு இந்திய இராணுவம் வெளியேறிய அல்லது இருந்த காலகட்டத்தில் இப்படியோர் கற்பனை செய்துபார்க்க முடியாத மனிதப்பேரவலம் ஏற்பட்டதில்லை.

வாயைத் திறக்கவேண்டியவர்கள் உரியநேரத்தில் வாயைத் திறந்து இருக்கலாம். மேலே நண்பர் ஒருவர் எமக்கு தந்தபடி துரோகி பட்டம் தாராளமாக நமது சமூகத்தில் உடனுக்குடன் விநியோகம் செய்யப்படுவதனால் பலர் தாம் உண்டு தமது வாழ்க்கை உண்டு என இருக்கின்றார்கள். அவர்கள் வாயை திறப்பதுவும் இல்லை. எமது போராட்டங்களில் பங்குபற்றுவதும் இல்லை அல்லது ஒதுங்கி இருக்கின்றார்கள்.

புலிகள் இயக்கம் மட்டும் அறிக்கைகள் விட்டால் போதும் அல்லது புலிகள் இயக்கம் மட்டும் தங்கள் கருத்துக்களை சொன்னால்போதும் அல்லது சில சில பொறுப்பில் உள்ளவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தால் போதும் என்று நாங்கள் இருந்ததுவும் இப்படியான பேரவலம் ஏற்படக் காரணம். முதலில் வி.பு.அமைப்புக்கூட உரிய நேரத்தில் உரிய தகவல்களை தெரிவிக்கவில்லை.

இந்த கருத்தாடலில் நோக்கம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் உள்ள விசயஞானம், அனுபவம் உள்ளவர்களின் வாய்களை திறக்கவைத்து தாயக போராட்டம் வெற்றிபெறுவதற்கு, தாயக மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அவர்கள் கருத்துக்களை செயற்பாடுகளை உள்வாங்கிக்கொள்வது பற்றியது.

தொடர்பாடல் ஒருவழியாக இல்லாமல் இருவழியாக (two way communication) நடைபெறவேண்டும். இந்த இருவழி தொடர்பாடல் விசயஞானம், அனுபவம் உள்ளவர்கள், புத்திசீவிகளின் பங்கு இல்லாவிட்டால் அது அறைகுறை தொடர்பாடலாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

மேலும் ஓர் மின்னஞ்சல் இந்த தலைப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்று உள்ளது. இதற்கான எனது கருத்தும் கீழே இணைக்கப்பட்டு இருக்கின்றது. மின்னஞ்சலை அனுப்பி வைத்த நண்பருக்கு நன்றி!

Don't assume that you are the only one running around trying to fight for Tamils. If you did 6 months there are others who have been doing it for years. They also lost their family lives, black listed by governments, etc.

நான் அப்படி சொல்லவில்லையே நான் மட்டுதான் குரல் கொடுக்கின்றேன் என்று. மேலும் ஆறுமாதமாக கவனயீர்ப்பில் கலந்துகொண்டது பற்றி கூறி இருந்தேன். ஆனால் இதற்குமுன் ஒன்றும்செய்யவில்லை என்றுகூறவில்லையே. ஆனாலும்.... அவனவன் உயிரையே கொடுத்து இருக்கின்றான். தவிர, பலர் தீவிரமாக பல வருடங்களாக குரல்கொடுத்து வருகின்றார்கள். அதற்காக நீண்டகாலமாக அறியப்பட்டவர்கள் அல்லது குரல் கொடுத்தவர்கள் மட்டும்தான் வாயைத் திறக்கவேண்டும் என்றும் இல்லைத்தானே.

Now think:

1. Poet is commenting on how we lost the war. Do you think he is the right person to analyse the tactical and strategical aspects of a military conflict? No clearly he is not. Military conflicts are fought with many known and unknown secrets and we would never know what was happened and why it happened. But only thing we need to believe is the leader who led that campaign was the best one our community had produced and no one else could have done it better. If the end came this way then that leader would have been the best person to know this coming and he would have made plans on how to continue that part of the struggle beyond that. Just believe in that.

தலைவரின் தலமையையும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இங்கு பேசப்படும்விடயம் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி செயற்படுவது பற்றியது. எமது சமூகத்தில் எத்தனையோ கல்விமான்கள், புத்திசீவிகள், தொழில் அதிபர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். இவர்களில் எத்தனைபேர் புலிகளுடன் தொடர்பில் இருந்தார்கள் அல்லது அவர்களிற்கு வெளிப்படையாக தமது கருத்துக்களை - ஆலோசனைகளை கூறினார்கள்? அல்லது கூறவில்லை? இங்கு முழுமையான இருவழி தொடர்பாடல் நடைபெற்றதா?

எங்கள் சமூகத்தில் உள்ள பல தரப்பினரும் முழுமையான தொடர்பாடலில் இருந்து இருந்தால் அல்லது அவர்களின் அறிவு, அனுபவம் பயன்படுத்தப்பட்டு இருந்தால் இப்படியோர் மனிதப்பேரவலம் நடந்து இருக்காது.

தவிர, மேலே கவிஞர் அண்ணா பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்தான் பதில்கூறவேண்டும்.

2. Now KP. Leader appointed him for LTTE's international relations. Nothing else. Not as the leader after him. Not as a leader for Tamil Diaspora. Since the leader cannot come out and say whether KP is a good guy or bad guy - we can only work that out using our little brains. Let's see this: What should the Diaspora focus on now? It should continue to expose the murders committed by Colombo, expose the plight of the people in the concentration camps, and based on this seek the recognition for Tamil Eelam (as the only solution) from the West. Since Sinhalese have moved closer to Chinese West is angry. Until now they held back because they did not like our freedom movement and our beloved leader. But now the leader has created a space where he himself and the movement are not in the way. That is why some in the West are condemning the Sinhalese. This an opportunity for us and the same people who were not listening to you for the last six months would probably listen to you now. So do not give up. Talk to them again and again. This is where you need to judge KP. What are his comments doing? They are just pulling us back into the debate about whether our leader is alive or dead. His comments then clearly show that he wants to grab the leadership position of the LTTE. That is why he should be ignored and not promoted. These issues are not needed. We need to work for the recognition of Tamil Eelam. We need to talk and convert every citizen in the west as possible. This is the most easiest time to do it. So we should not miss that. If KP wants to continue and maintain relationship with international governments then that is fine - that was the role leader given to him. But we do not need him to tell us on how to fight for recognition of Tamil Eelam. Or we do not need his statements addressing the diaspora as the new leader. Unlike the military struggle this political struggle abroad is not a secret operation - So we do not need a military type leadership to do this. All we need to make sure is that we do not appoint people who would sell our interests. After so much suffering the best / safe hands to keep an eye on this is the Tamil people themselves - the Diaspora. Tamil people will easily identify who is honest and who is trying to sell Tamil interests. So any one emerges from within Diaspora would have to stay honest.

கே.பி அவர்கள் சொல்லும் சில விடயங்கள் பிடிக்காமல் இருந்தால் அதை நீங்கள் பின்பற்றாது இருங்கள். ஆனால் அவர் சொல்கின்ற நல்ல விசயங்கள் ஏற்புடையதாய் இருந்தால் அதை வரவேற்பதில் தவறு இல்லைதானே.

3. Only way to save the rest of the Tamils with respect is to get the West to accept that Tamil Eelam is the only solution. Of course another way. Fall at Sinhalese feet as slaves and forfeit your Tamilness. Choose which one you want to do.

எனது தனிப்பட்ட கருத்து தனித்தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் சர்வதேசம் (ஆகக்குறைந்தது ஒரு சில நாடுகளாவது) பகிரங்கமாக ஆதரவு தரும்வரை தள்ளிவைக்கப்படவேண்டும் அல்லது கைவிடப்படவேண்டும். ஆயுதம் அழிவு தவிர வேறு ஒன்றையும் இனி எங்களுக்கு பெற்றுத் தரப்போவது இல்லை. இது நாம் எமது வரலாற்றில் படித்த யதார்த்தம்.

அதற்காக நாங்கள் எங்கள் மண்ணின் செல்வங்களை - மாவீரர்களை - மரணித்த எங்கள் மக்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டோம் என்று இல்லை. ஆயிரம் ஆயிரம் போராளிகள், மக்கள் தங்கள் உதிரம் சிந்தி - உயிரை ஆகுதியாக்கி தாயக விடுதலைப் போராட்டத்தை இவ்வளவு தூரம் வளர்த்துவிட்டு சென்று இருக்கின்றார்கள். இனி அடுத்த கட்டம் நாங்கள் சர்வதேச அளவில் அரசியல் ரீதியாக மட்டும் தொடர்ந்து போராடுவதிலேயே தங்கியுள்ளது.

தாயக மக்களுக்கு எவ்வளவு சுதந்திரம், உரிமை கிடைக்கும் என்பது தாயக மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்களின் கைகளில் தங்கியுள்ளது. இதன் முடிவு தமிழீழமாக அமையுமா என்பது எங்கள் கைகளில் மட்டும் தங்கியில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

ஆனால்.. தமிழீழ கனவு காணும் எங்களுக்கு... ஒருவிடயம் தெரியவேண்டும். தற்போது தாயகத்தில் உள்ள மக்களுக்கு சிங்கள பிச்சைக்காரன் ஒருவனுக்கு... சிறீ லங்காவின் தென்பகுதியில் உள்ள ஆடு, மாடுகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

எமது கதை - தாயக மக்களின் வாழ்வு அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாய் போகக்கூடாது.

நன்றி!

Link to comment
Share on other sites

புலத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டு, ஒருசில தியாகங்களைச் செய்த உங்களுக்கே தமிழ் மக்கள் பற்றி அக்கறை இருக்கும்போது, தமிழ் மக்களின் விடிவிற்காக நாற்பது வருடங்கள் போராடிய தலைவருக்கும், பலவருடங்களாக போரே வாழ்வாகக் கொண்டு வாழந்த தளபதிகளுக்கும் எவ்வளவு அக்கறை இருந்திருக்கும்? இப்போது, புலிகள் செயலிழந்துவிட்டார்கள் என்றதும் எல்லோரும் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவேண்டுமென்றுதான் அவர்கள் போராடினார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு கருத்தெழுதுங்கள். ஒட்டுமொத்த உலகின் சதியினால்தான் எம்மினத்திற்கு இத்தனை அழிவுகள் வந்தது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வன்னியில் அகப்பட்டிருந்த மக்களைக் காப்பதற்காகக் கடைசிவரை அவர்கள் உலகோடு பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், கடைசியில் சதியினால் அவர்கள் வென்றெடுக்கப்பட்டுவிட்டார்

Link to comment
Share on other sites

கவிஞர் அண்ணா உங்கள் தகவல்களிற்கு நன்றி. உங்கள் அனுபவங்கள் நூலுருவில் வெளிவருவது எங்கள் தாயக போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் அதை வெளியில் கொண்டுவாருங்கள்.

குறிப்பிட்ட நண்பர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கருத்துக்களை நான் இங்கு இணைத்ததன் நோக்கம் வித்தியாசமான பார்வைகள், மேலும் வெளியார் என்ன நினைக்கின்றார்கள் என்பதை அறிய யாழ் உறவுகளிற்கும் ஓர் வாய்ப்பாக இருக்கும். எல்லாருக்கும் யாழ் இணையத்தில் உறுப்பினராக இணைந்து எண்ணங்களை பகிர்வதற்கு வசதி இருக்காது. தவிர, பலருக்கு வலையில் தமிழில் எழுதுவது எப்படி என்றும் தெரியாது.

தமிழச்சி, நாற்பது வருடங்கள் போராடினார்கள். ஆனால்.. அதன் பயனை அனுபவிப்பது வெளிநாடுகளில் உள்ள தமிழர்களாகிய நாங்கள் மட்டுமே. போரை காரணம்காட்டி வெளிநாடுகளிற்கு அகதிகளாக தப்பி ஓடிவந்துவிட்டோம். அதேசமயம் மறுபுறத்தில் தாயகத்தில் உள்ள தமிழர்களின் வாழ்க்கை நாற்பது வருடங்களின் முன்பு இருந்ததைவிட பல மடங்கு படுகேவலம் ஆகிவிட்டது.

இப்போது என்ன செய்யப்போகின்றோம்? நாங்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு தாயகத்தை இன்னும் சுடுகாடு ஆக்கப்போகின்றோமா?

தாயகத்து மக்களுக்காகத்தானே போராளிகள் போராடினார்கள்? தாயகத்தில் மக்களே இல்லை என்றால் பிறகு போராட்டம் எதற்கு? வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகத்தில் - தமிழீழம் சென்று சொகுசாக வாழ்வதற்கு தாயகத்திலுள்ள மக்கள் தங்கள் குருதியை சிந்தவேணுமா? எங்களுக்காக அவர்கள் ஏன் சாகவேண்டும்? நாங்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் சொகுசாகத்தானே இருக்கின்றோம்? சாமத்தியவீடு என்ன.. கலியாணவீடு என்ன.. பிறந்தநாள் விழா என்ன... எல்லாம் Hollywood rangeஇல் நம்மவர்கள் இங்கு அனுபவிக்கின்றார்கள்.

சர்வதேச தடைகளோ என்னவோ... போராளிகளினால் தாயகத்தில் உள்ள மக்களின் உயிர்களை காப்பாற்றமுடியவில்லை. ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் நிலங்களை இழந்தமைக்காகவோ அல்லது போராளிகள், தலைவர்கள் பெருமளவில் உயிரிழந்தமைக்காகவோ தற்போது மக்கள் ஆயுதபோராட்டத்தை விமர்சிக்கவில்லை. பதிலாக, ஆயுதப்போராட்டம் மூலம் தாயகத்து மக்களின் உயிர்களை காப்பாற்றமுடியாது போய்விட்டது. ஆயுதம்மூலம் நம்மக்களிற்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாத பட்சத்தில் நாங்கள் செய்யக்கூடியது என்ன? தொடர்ந்து ஐந்தாம் ஆறாம் அறுபதாம் கட்ட ஈழப்போர்களிற்கு உசுப்பேத்தலாமா?

Link to comment
Share on other sites

புலத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டு, ஒருசில தியாகங்களைச் செய்த உங்களுக்கே தமிழ் மக்கள் பற்றி அக்கறை இருக்கும்போது, தமிழ் மக்களின் விடிவிற்காக நாற்பது வருடங்கள் போராடிய தலைவருக்கும், பலவருடங்களாக போரே வாழ்வாகக் கொண்டு வாழந்த தளபதிகளுக்கும் எவ்வளவு அக்கறை இருந்திருக்கும்? இப்போது, புலிகள் செயலிழந்துவிட்டார்கள் என்றதும் எல்லோரும் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவேண்டுமென்றுதான் அவர்கள் போராடினார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு கருத்தெழுதுங்கள். ஒட்டுமொத்த உலகின் சதியினால்தான் எம்மினத்திற்கு இத்தனை அழிவுகள் வந்தது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வன்னியில் அகப்பட்டிருந்த மக்களைக் காப்பதற்காகக் கடைசிவரை அவர்கள் உலகோடு பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், கடைசியில் சதியினால் அவர்கள் வென்றெடுக்கப்பட்டுவிட்டார்
Link to comment
Share on other sites

நுணாவிலான், இதேமாதிரித்தான் முன்பு ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் இளைஞர்களை குறிப்பாக சிறுவர்களை பலவந்தமாக வீடுகளில் இருந்து கடத்திச்சென்று தமிழீழ இராணுவத்தில் சேர்த்தபோது காசு உள்ள சனங்கள் லட்சக்கணக்கில் காசுகொடுத்து தங்கள் பிள்ளைகளை வெளியே எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அதாவது ஆட்களை வெளியே எடுப்பதற்கு பணம்பேரம் பேசுவது, பணம் கொடுப்பது, வாங்குவது வழமையாக நடைபெறும் விடயம். வி.புலிகள் இயக்கத்தில் இணைந்த இளைஞர்களைகூட பெற்றோர் பணம்கொடுத்து பிள்ளைகளை வெளியே எடுத்து இருக்கின்றார்கள்.

நாங்கள் மற்றவர்கள் தங்கள் உறவுகளை பணம்மூலம் வெளியில் எடுப்பதை விமர்சித்தாலும்... எங்கள் குடும்பத்தில் ஒருவர் இப்படியான நிலமையில் இருக்கும்போது நிச்சயம் நாங்களும் இப்படித்தான் செய்யக்கூடும்.

முதலில் நாங்கள் எல்லோரும் பொதுவான கட்டமைப்பின்கீழ் ஒன்றிணைந்துதான் இருப்போம். ஆனால், பிரச்சனைகள் வரத்துவங்கியதும் நாங்கள் தனித்தனியாக செயற்படத் துவங்கிவிடுவோம். அங்கு பணமும், செல்வாக்கும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும். பொதுநலம் என்ற பேச்சுக்கே அப்போது இடம் இருக்காது.

நான் சிறீ லங்கா காவல்துறையால் ஓர் காரணமும் இல்லாமல் முன்பு கைதுசெய்யப்பட்டு இருந்தேன். காவல்துறை நிலையத்தில், நீதிமன்றத்தில், சிறையில் இருந்தபோது எல்லாம் இந்த பணம், மற்றும் செல்வாக்கு எப்படி எப்படி எல்லாம் புகுந்து விளையாடும் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.

சிங்கள அரசாங்கத்திற்கும் அல்லது நிருவாகத்திற்கும், குறிப்பாக சிங்கள இராணுவம், காவல்துறை என்பனவற்றிக்கும் சாதாரண தமிழ் பொதுமக்களிற்கும் உள்ள இடைவெளியை சாதகமாக பயன்படுத்தி அதற்குள் இருந்து குளிர்காய்ந்து அந்த இடைவெளியை பயன்படுத்தி எம்மவர்கள் பலர் எத்தனையோ விதமாக வியாபாரம் செய்கின்றார்கள்.

எனக்கு அந்த ஆமிக்கமாண்டருடன் நல்ல பழக்கம், இந்த இன்ஸ்பெக்டருடன் நல்ல பழக்கம், எனக்கு அவனைத் தெரியும், இவனைத்தெரியும் என்று சொல்லி பெருமை அடிக்கும் நம்மவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.

தவிர, பணம், செல்வாக்கு மூலம் இக்கட்டான நிலமையிலிருக்கும் தங்கள் உறவுகளை வெளியே எடுத்துவிட்டு அதைக்கூட பெருமையாக சொல்லும் நம்மவர்கள் இருக்கின்றார்கள்.

இந்தவகையில் பார்க்கும்போது நாங்களும் சிங்கள நிருவாகத்துடன் நேரடியாக தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக்கொள்வது நன்றாக இருக்குமே? இப்படிச் செய்வது இடைத்தரகர்களான கூலிக்குழுக்கள் மற்றும் தமிழ் வியாபாரிகள் நம்மை வைத்து வியாபாரம் செய்வதை தடுக்க உதவுமே.

கூலிக்குழுக்கள் வளர்ச்சிபெறுவதற்கும், கண்ட கண்ட சாக்கடைகளும் அதிகாரத்தில் வருவதற்கு நாங்கள்தான் காரணமாக இருந்து இருக்கின்றோம். ஏனப்பா வீண்தொல்லை, வில்லங்கம் என்று கல்விமான்கள், புத்திசீவிகள், அனுபவஸ்தர்கள் எல்லோரும் தமிழ்சமூக பொதுக்கட்டமைப்பில் இருந்து ஒதுங்கிச்சென்றதால், விலகிச்சென்றதால் அதை சாதகமாக பயன்படுத்தி அரசியல் வியாபாரிகள் ஊடுருவி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

அன்புள்ள கலைஞனுக்கு,

மக்களின் அவலங்கள் கொடுமையிலும் கொடுமை என்ன தெரியுமா என்கிற உங்கள் விவாதத்தில் என்னை பாதித்த ஒரு கொடுமைபற்றி பதிவுசெய்ய அனுமதியுங்கள். புலம் பெயர்ந்த எங்கள் விடுதலைச் சார்ப்புச் செயல்பாடுகளில் ஒரு சில இடங்களிலேனும் நம்ம ஊர் நம்ம சாதியென நமது தாய்நாட்டின் சமூக இயல்ழுக்குகள் தூக்கலாகச் செயல்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் அண்மைக் காலங்கலில் மிகக் கேவலமான முறையில் என்றும் இல்லாதவாறு இந்துதுவ வெறிக் குரல்கள் மேலோங்கி வருகிறது. இதனை முளையிலேயே இனம் கண்டு நசுக்கவேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். வன்னிப் பகுதி அகதி முகாம்களிலே அல்லல்ப் பட்டு ஆற்றது அழுகிற நாம் உறவுகள் மத்தியில் ஆபத்துக்களுகு முகம்கொடுத்த ஏழு கிறிஸ்துவ அமைப்புகள் தொண்டாற்ற அனுமதிக்கப் பட்டுள்ளன. அவர்களுக்கு உதவும் முகமாக புலம்பெயர்ந்த நாடுகளில் பணம் திரட்டும் ஆர்வலர்களுக்கு எதிராக மதவெறி கட்டவித்து விடப் படுகிறதாக அறிந்தபோது இந்த உலுத்தர்களைத் தட்டிக்கேட்க்க யாருமே இல்லையா என மனம் நொந்தது. கவி மனசால் அவர்களைச் சபிக்க மட்டுமே முடிந்தது. இத்தகைய கேவலமான சாதி மத வெறியர்களுக்கு எக்காரணம் கொண்டும் செவிகொடுக்க வேண்டாம் என்று இதனை வாசிக்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

எங்களிடம் இருக்கும் பிரதேச, சாதி, மத வேறுபாடுகள் இவ்வளவு பெரிய ஒரு மனித அவலம் ஏற்பட்ட பின்னரும் எங்களிடம் இருந்து நீங்காமல் இருப்பது வேதனையானது கவிஞர் அண்ணா. இந்துத்துவ வெறிக்குரல்கள் குதிக்கின்றனவோ இல்லையோ... கடைசியில் வெற்றி பெற்றுக்கொண்டு இருப்பது வெற்றி பெறப்போவது பெளத்த வெறிக்குரல் ஒன்று மட்டுமே. ஒவ்வொருத்தனும் தன்னைவிட பலவீனமாய் இருக்கிற ஒருத்தனைத்தான் சீண்டிப்பார்க்கிறான். பலமாய் இருப்பவனுடன் முட்டிப்பார்க்க ஏலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலதினங்களுக்கு முன்னம் காவடி என்ற உறுப்பினர் ஜெயசுக்குறு வெற்றிக்கு கவிஞரின் பங்கு உள்ளது என்று வன்னியில் சொன்னதாக எழுதி பின்னர் அந்தக் குறிப்பு அகற்றப் பட்டிருந்தது.

கவிஞரே, எனக்கு விளங்கிய வரை காவடி என்ற உறுப்பினர் "முரண் நகையாக" (sarcastic) உங்களைப் பற்றி அப்படிக் கூறியிருந்தார். பின்னர் மோகனின் அறிவுறுத்தலாலோ என்னவோ நீக்கி விட்டு "இனி எல்லாரும் ஏதோ சொல்லுங்கள்!" என்று எழுதியிருந்தார். உங்களை நான் அறியேன், உங்கள் பங்களிப்புகள் பற்றியும் எதுவும் அறியேன். ஆனால் எனக்குள்ள சந்தேகம்: ஒரு முகம் தெரியா கள உறவு நக்கலாகச் சொன்னதை உங்கள் CV யில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு வங்குரோத்துத் தனமாக நீங்கள் இருக்கிறீர்களா? முகம் தெரியாத ஒருவரின் மின்னஞ்சல் விமர்சனத்திற்காக உங்கள் பங்களிப்புப் பற்றி புத்தகம் போடும் அளவுக்கு சுய தம்பட்டம் இப்போது அவசியமா? தங்கள் பங்களிப்புப் பற்றி வெளியே தெரிய வேண்டும் என்று விரும்பும் நபர்களை புலிகள் ஆய்வாளராக நியமித்தார்களா? "தகைமையுடையோர் யாருமில்லை" என்று புலிகள் உங்களிடம் சொன்ன போது திரு.பாலகுமாரன் அவர்கள் எங்கே இருந்தார்? நம்பக் கடினமாக உள்ளதால் எழுதினேன். தனிப்பட்ட வருத்தம் எதுவும் வேண்டாம்!

Link to comment
Share on other sites

இப்பக்கத்தில் நீங்கள் கருத்தாடும் விடயத்தைத் தாண்டி ஒரு செய்தியைப் போடுகிறேன். யாரும் தடியோடை வராதையுங்கோ.

இங்கு நான் எழுதவிருக்கும் விடயம் பற்றி பலர் பலவகையில் தங்கள் எண்ணங்களை எடுத்து விடுவார்கள். சிலர் தனிநபர்கள் ஊடாக எதையும் உய்யோம் என தன்னலமாக தப்பிக்க முனைவார்கள். இன்னும் ஒருசாரார் மகிந்தவுக்கு அலுப்பில்லாமல் உதவுகிறோம் என்பார்கள். இன்னும் சிலர் சோறுகுடுக்க வேண்டாம் சுதந்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கோ என்பார்கள். இதைவிடப்பெருடங்கில் தனித்தமிழீழம் அமைப்பதற்காக செலவு செய்வோம் என்பார்கள்.

ஆயினும் செத்துவிடுங்கள் நாங்கள் கத்திக்கொண்டிருக்கிறோம் என இருக்க முடியவில்லை. ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உதவியுள்ளோம். உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்துள்ளது. அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கான பாதணிகள் வாங்கிக்கொடுப்பதற்கு முயற்சியெடுக்கிறோம். யாராவது நல்மனம் படைத்தோர் உங்களால் இயன்றதைச் செய்ய முடியுமாயின் உதவுங்கள்.

அந்த முகாம்களில் அல்லல்படுவோர் பலருடன் கதைக்கக் கிடைத்ததில் அவர்களை அப்படியே சாகவிடாமல் ஏதாவது செய்யலாம் எனத் தோன்றுகிறது.

(மனமிருந்தா உதவுங்கொ என்ற தலைப்பில் ஏற்கனவே இணைத்துள்ளேன்)

Link to comment
Share on other sites

Dear Justin,

Very sorry. If you think your attitude can leads to further and future victories carryon. People like you contributing to the success of the struggle of the Diaspora. I have no time to answes your questions in Yarl. Have the yarl with you. I wish you good luck. Good buy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர், உங்களுடைய உளப் பாங்கிலுள்ள குறையைத் தான் சுட்டிக் காட்டினேன். உங்கள் பங்களிப்புப் பற்றி மற்றவர்கள் அறிய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களின் விமர்சனங்கள் குறை நிறைகளையும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அந்த மனப்பாங்கு இல்லையேல் யாழில் இருக்கும் பலர் போல நீங்களும் திரை மறைவில் துரும்பு சுமக்கும் அணிலாக இருப்பதே நல்லது! என்ன செய்தேன் என்ற சுய தம்பட்டத்தை விடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற முன்னோக்கிய பார்வை கிடைக்க வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.