Jump to content

பிருந்தனின் கவிதைகள்


Recommended Posts

அம்மா

அம்மா என்காத உயிர் இல்லையே

அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!

எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்

எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!

எம்மை காக்க அரும்பாடுபட்டாள்

எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!

திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்

நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!

எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள்

எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!

தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க

தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு!

நாம் உண்ணும் அழகு கண்டு

தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்!

தன் உயிர் கொடுத்து

எம் உயிர் வளர்த்தாள் அன்னை!

அவள்தான் நான் உலகில் வந்து

கண்ட முதல் தெய்வம்.

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன்அண்ணா உங்கள் தாய்க்காக வடித்த கவிதை நல்லாய்ருக்கு நன்றி

-------------

jothika

Link to comment
Share on other sites

இது ஒரு காலத்துக்கு முந்திய அம்மாக்களுக்குத் தான் பொருந்தும்...இப்ப அம்மாக்கள் ரெம்ப பிசி.... நீங்க கெயார் சென்ரரிலதான் உதுகளக் காண வேணும்...! அதுபோக இப்ப உணவைக் கொடுத்திட்டு ரசிக்கிற அளவில அவைக்கு பொறுமை நிதானம் புரிந்துணர்வு இல்ல...கெதியா திண்ணு...ரெலி சீரியல் தொடங்கப் போகுது இல்ல இன்ரெநெட்டில டேட்டிங்க என்று துடிக்கும் அம்மாக்களும்...வங்கியில கடன் எடுத்து அது கட்ட வேலைக்கு ஓடி ஓடி தேய்ந்து போன அப்பாக்களும் அம்மாக்களும்...விரக்தியில பெற்ற பிள்ளையை கொல்லும் அம்மாக்களும்...பெறாமலே அழிக்கும் விசித்திரப் பிறவிகளும் என்று உலகம் ரெம்ப மாறிட்டு...! ஆனா என்ன...நம்ம பறவைகள் மாறவே இல்லை...அதே அன்பு பாசத்தோட இருக்குதுகள்...! உலகம் மாறினதா..மனிசன் மாறிட்டு..மாத்திட்டு...உலகம் மாறினது என்றான் போல...! :P :idea:

எனிவே...உங்க கவிதை அம்மாவை நினைக்க வைச்சுது...நன்றி..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவுக்காய்

அருமையாய் கவி எழுதிய

புதுவுறவு பிருந்தனுக்கு

நன்றி சொல்லி......

வாழ்த்துவதோடு...

நீங்கள் உங்கள் அம்மாவக்காய் எழுதிய கவிதையாய் இருந்தால் நிச்சயம் என்னால் கருத்து சொல்ல முடியாது..ஆனால் பொது வாக எழுதியிருந்தால்........குருவிகளி

Link to comment
Share on other sites

அம்மாக்காக எழுதிய கவி அருமை. தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்க:ள்

Link to comment
Share on other sites

அம்மாவுக்காய்  

அருமையாய் கவி எழுதிய

புதுவுறவு பிருந்தனுக்கு

நன்றி சொல்லி......

வாழ்த்துவதோடு...

நீங்கள் உங்கள் அம்மாவக்காய் எழுதிய கவிதையாய் இருந்தால் நிச்சயம் என்னால் கருத்து சொல்ல முடியாது..ஆனால் பொது வாக எழுதியிருந்தால்........குருவிகளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு காலத்துக்கு முந்திய அம்மாக்களுக்குத் தான் பொருந்தும்...இப்ப அம்மாக்கள் ரெம்ப பிசி.... நீங்க கெயார் சென்ரரிலதான் உதுகளக் காண வேணும்...! அதுபோக இப்ப உணவைக் கொடுத்திட்டு ரசிக்கிற அளவில அவைக்கு பொறுமை நிதானம் புரிந்துணர்வு இல்ல...கெதியா திண்ணு...ரெலி சீரியல் தொடங்கப் போகுது இல்ல இன்ரெநெட்டில டேட்டிங்க என்று துடிக்கும் அம்மாக்களும்...வங்கியில கடன் எடுத்து அது கட்ட வேலைக்கு ஓடி ஓடி தேய்ந்து போன அப்பாக்களும் அம்மாக்களும்...விரக்தியில பெற்ற பிள்ளையை கொல்லும் அம்மாக்களும்...பெறாமலே அழிக்கும் விசித்திரப் பிறவிகளும் என்று உலகம் ரெம்ப மாறிட்டு...! ஆனா என்ன...நம்ம பறவைகள் மாறவே இல்லை...அதே அன்பு பாசத்தோட இருக்குதுகள்...! உலகம் மாறினதா..மனிசன் மாறிட்டு..மாத்திட்டு...உலகம் மாறினது என்றான் போல...!  

அநுபவம் போல ஆசான் உண்டா என்ன?? சிலர் காணுறது பாக்கிறது எல்லாம் உந்தக்கேசு போலான் கிடக்கு. :wink: :P

Link to comment
Share on other sites

லிபரேஷன் ஒப்பரேஷன்

வீதி எங்கும் சடலம்

எத்தனை போர் எடுப்பு படலம்!

உருண்டு செல்லும் தலைகள்

பிணங்களால் எத்தனை மலைகள்!

தனித்தனியாக எத்தனை கைகால்கள் தெரியும்

இது யார் யாருடையது என்று எங்குபுரியும்!

சிதறிய கண் துடிக்குது

அது யாரை எண்ணி ரத்தம் வடிக்குது!

எங்கும் ஈயக்குண்டின் ரீங்காரம்

எத்தனை உடல்களை துளையிட்டு செல்லும் சிங்காரம்!

திடீர் திடீரென பெரும் இடிகள்

இவைகள் நம்மை நோக்கிவரும் பீரங்கிவெடிகள்!

விமானங்கள் கூட போடுது குண்டு

எம் தலைகளை சரியாகக் கண்டு!

எதற்கு இந்த வெறி ஆட்டம்

பிணங்களின் மணமோ தாங்கவில்லை நாற்றம்!

எமது மண்ணை தனதாக்க

நடக்குது யுத்தம்!

இவர்களுக்கு மண்பறிப்புப் போராட்டம்

எமக்கு மரனப்போராட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிக்கு பிருந்தன்அண்ணா உங்கள் சொந்த கவிதையா ?

.........................

jothikaaaaa

Link to comment
Share on other sites

சொந்த கவிதை மட்டும் அல்ல சொந்த கதையும் கூட,அந்த நேரத்தில் நானும் அதில் மாட்டுப்பட்டேன்.அந்த அவலங்களை நேராக கண்டேன்.

Link to comment
Share on other sites

நல்ல கவிதை மேலும் எழுதுங்கள்,மேலும் வாசியுங்கள்.

வாழ்த்துக்கள் பிருந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த கவிதை மட்டும் அல்ல சொந்த கதையும் கூட,அந்த நேரத்தில் நானும் அதில் மாட்டுப்பட்டேன்.அந்த அவலங்களை நேராக கண்டேன்.

நல்ல கவிதைகள் பிருந்தன் கவி தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பிருந்தன் கவிதைகள் நன்றாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த கவிதை மட்டும் அல்ல சொந்த கதையும் கூட,அந்த நேரத்தில் நானும் அதில் மாட்டுப்பட்டேன்.அந்த அவலங்களை நேராக கண்டேன்.

அப்படியா

..............

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ரொம்ப நல்லா கவிதை எழுதுரீங்க பிருந்தன்அண்ணா...

நல்லா எழுத தெரிந்ததாலா தான் எழுதுறார்... :wink:

வாழ்த்துக்கள் பிருந்தன் உங்கள் கவிதைகள் தொடரட்டும்..

Link to comment
Share on other sites

காதல்அவஷ்த்தை

உனக்காக நான் சந்தியில் காத்திருந்தேன்

நீ வரும் திசையை என்றும் பார்த்திருப்பேன்!

தூரத்தில் உனது உருவம் கண்டால்

என் உடல் குளிர்ந்திருக்கும்!

உன் தரிசனம் கிடைத்துவிட

தன்னந்தனியாக புலம்பி நிற்பேன்!

நீ அருகில் நெருங்க நெருங்க

எனது இதயம் நொருங்கும்படி அடித்திருக்கும்!

உன்னை அருகில் கண்டவுடன்

எனது இரத்தம் உறைந்துவிடும்!

உனது தலை எனது பக்கம் திரும்ப

எனது விழிகள் படபடத்து மூடும்!

உன் முகத்தை முழுவதும் கண்டுவிட்டால்

என் தொண்டைகுழி ஏறி இறங்கும்!

உன்னுடன் பேச நினைக்கையிலே

நா உலர்ந்து பேச மறுக்கும்!

உனது நடை வேகம் குறைய

எனது கைகள் பிசைந்திருக்கும்!

என்னை தாண்டி நீ செல்கையில்

மூக்கையே சுட்டெரிக்கும் பெருமூச்சு வெளிவரும்!

முன்னே சென்று நீ திரும்பிப் பார்த்தால்

எனது நெஞ்சு விம்மித் தவிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.