Jump to content

தமிழீழ தேசிய கொடி இங்கிலாந்தில் தடை செய்யப்படவில்லை.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நுனாவிலன் அண்ணா, நல்ல செய்தி!

இனி ஒவ்வொருவரின் கையிலும் ஒரு தேசிய கொடியை ஏந்தி கொண்டே நிற்போம்...(டிம் மார்ட்டின் கையிலும் ஒன்று குடுப்பது நல்லது <_< !!!!)

கைது செய்வதென்றால் எல்லாரையும் கைது செய்யட்டும் - யாருக்கு செலவு?! அதனாலேயே செய்ய மாட்டாங்கள்....

இருந்தும், எங்களை விட சிங்களவன் அதிக அழுத்தம் குடுக்கிறான் போல, அது தான் தேசிய கொடிக்கும் புலி கொடிக்கும் வித்தியாசம் தெரிந்தும் இந்த கண் நோண்டின இறால்கள் கூட இம்சை குடுக்குதுகள் எமக்கு!

Link to comment
Share on other sites

இணைப்புக்கு ரொம்ப நன்றி நுணாவிலான் அண்ணாச்சி.

தமிழீழ தேசிய கொடி இங்கிலாந்தில் தடை செய்யப்படவில்லை என்ற உண்மையை போலீஸ் மூலம் சந்தேகங்களைப் போக்கி எமக்கு அறியத்தந்த மரியாவுக்கும் எமது நன்றிகள்.

சும்மா வீதில நின்று கோசம் போட்டு என்ன வரப் போகுது என்று கிண்டல் செய்தவையளுக்கு இது ஒரு நல்ல செருப்படி. வீதி இறங்கி போராடாமல் இருந்திருந்தால் இந்த உண்மை எமக்கு இன்று தெரிந்து இருக்குமா???

07.04.09 அன்று தேசியக்கொடி பிடிக்கவேண்டமாம் போலீஸ்கார் சொல்றார் என்று ஓர் ஆன்டி ஒலிபெருக்கியில் சொல்லி சிலபேர் மடிச்சு வைச்சதும், சிலபேர் அவன் கைது செய்தாலும் பறவாயில்லை என்று துணிந்து உயர்த்தி பிடிச்சதும் ஞாபகத்துக்கு வருகிறது....

Link to comment
Share on other sites

04/06/2009, 02:27 [லண்டன் செய்தியாளர்]

லண்டனில் வேற்றினப் பெண்ணொருவர் தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கிப் போராட்டம்

தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு வேற்றினப் பெண்னான மரியா கலஸ்ரிக்குயி (Maria Gallastegui) லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

நேற்று காலை 10 மணி 30 நிமிடம் அளவில் நாடாளுமன்ற சதுக்கத்திலுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் சேர்ச்சிலின் சிலையின் மீது ஏறிய மரியா, தேசியக் கொடியைத் தாங்கிவாறு பல மணி நேரங்கள் கவனயீர்ப்பி்ல் ஈடுபட்டார்.

தமிழீழத் தேசியக் கொடி தடை செய்யப்பட்ட கொடி அல்ல என்பதை எடுத்துக் காட்டவும், தமிழ் மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளும் அறவழிப் போராட்டத்திற்கு இந்தக் கொடி எவ்வாளவு முக்கியத்துவம் என்பதை எடுத்துக் காட்டவும், கொடிதாங்கிப் போராட்டம் நடத்துவதாக அவர் கூறினார்.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள 3 இலட்சம் மக்களிற்கான அடிப்படை உதவிகள் சென்றடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய மரியா, இதனை பன்னாட்டு சமூகத்திற்கு உணர்த்துவதற்கு, நாடாளுமன்ற சதுக்கத்தில் போராட்டம் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் 26ஆம் நாள் தமிழீழத் தேசியக் கொடியுடன் பிரித்தானியா காவல்துறையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மரியா தனி ஆளாக நின்று போராட்டம் நடத்தியிருந்தார்.

இதனை உள்ளிருந்து அவதானித்த பிரித்தானிய பயங்கரவாத தடுப்புக் காவல்துறையினர் தமிழீழத் தேசியக் கொடி பற்றி ஆராய்ந்து, சிவப்பு வர்ணத்திலுள்ள கொடி தடை செய்யப்படவில்லை எனவும், வெள்ளை நிறத்திலுள்ள புலிச்சின்னமே விடுதலைப் புலிகளினது எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

02-06-09%20015.jpg

[Pathivu]

Link to comment
Share on other sites

04/06/2009, 09:26 மணி தமிழீழம் ]

பிரித்தானியாவில் 12 மணித்தியால தொடர் கொடிப் போராட்டம் வெள்ளை இன பெண்ணால் முன்னெடுப்பு

பிரித்தானியாவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் கவனயீப்பு போராட்டம் வழமைபோல் இன்றும் (03-04-09)பலத்த கோரிக்கை கோசங்களுடன் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களின் அடையாலத்தை நிரூபிப்பதற்காக தமிழீழ தேசியக் கொடியுடன் வெள்ளை இனப் பெண் மரியா அவர்கள் பிரித்தானியா முன்னால் பிரதமர் சேச்சில் அவர்களின் சிலையில் இருந்த படி 12 மணித்தியால கொடிப் போராட்டத்தை முன்னெடுத்தார். கடந்த வாரம் பிரித்தானியா காவல்துறை காரியாலத்தின் முன் இவர் இவ்விதமான போராட்டத்தை முன்னெடுத்தது இங்கே குறிப்பிடதக்கது.

இன்றும் வன்னி மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் ஒவியங்கள் பிரித்தானிய மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி தொடர்ந்தும் காட்சிக்கு வைக்கப்பட இருப்பதால் உங்களிடம் இருக்கும் ஓவியங்களையும் இதில் இணைக்கும் சந்தர்ப்பத்தை அளித்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.

தமிழீழ தாயகத்தில் தமிழர்கள் மீதான படுகொலையை செய்துகொண்டு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் போராட்டத்தில் சில குழப்பங்களையும் விளைவிக்கின்றது சிறீலங்கா அரசாங்கம். இவர்களின் இந்த கொடூரமான செயல்களை தடுத்து நிறுத்தி எங்கள் குரல்களை எழுப்புவது ஒவ்வொரு தமிழனின் கடமை. நூற்றுக்கணக்கான மக்கள் மட்டும் கலந்துகொள்ளும் பிரித்தானியா நாடாளுமன்ற போராட்டம் அவர்களுக்கு ஒரு வேடிக்கையாக இருக்கின்றது. தயவுசெய்து தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் தடுக்க அனைத்து தமிழ் மக்களும் நாடாளுமன்ற சதுக்கத்தில்

கூடவேண்டும் என தாழ்மையாக வேண்டுகின்றனர் தமிழ் இளையோர்கள்.

இந்த நேரத்தில் ஜரோப்பிய நாடாளுமன்ற தேர்த்தலில் போட்டியிடம் ஜனனி ஜனநாயகத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

04/06/2009, 09:26 மணி தமிழீழம் ]

பிரித்தானியாவில் 12 மணித்தியால தொடர் கொடிப் போராட்டம் வெள்ளை இன பெண்ணால் முன்னெடுப்பு

பிரித்தானியாவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் கவனயீப்பு போராட்டம் வழமைபோல் இன்றும் (03-04-09)பலத்த கோரிக்கை கோசங்களுடன் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களின் அடையாலத்தை நிரூபிப்பதற்காக தமிழீழ தேசியக் கொடியுடன் வெள்ளை இனப் பெண் மரியா அவர்கள் பிரித்தானியா முன்னால் பிரதமர் சேச்சில் அவர்களின் சிலையில் இருந்த படி 12 மணித்தியால கொடிப் போராட்டத்தை முன்னெடுத்தார். கடந்த வாரம் பிரித்தானியா காவல்துறை காரியாலத்தின் முன் இவர் இவ்விதமான போராட்டத்தை முன்னெடுத்தது இங்கே குறிப்பிடதக்கது.

இன்றும் வன்னி மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் ஒவியங்கள் பிரித்தானிய மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி தொடர்ந்தும் காட்சிக்கு வைக்கப்பட இருப்பதால் உங்களிடம் இருக்கும் ஓவியங்களையும் இதில் இணைக்கும் சந்தர்ப்பத்தை அளித்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.

தமிழீழ தாயகத்தில் தமிழர்கள் மீதான படுகொலையை செய்துகொண்டு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் போராட்டத்தில் சில குழப்பங்களையும் விளைவிக்கின்றது சிறீலங்கா அரசாங்கம். இவர்களின் இந்த கொடூரமான செயல்களை தடுத்து நிறுத்தி எங்கள் குரல்களை எழுப்புவது ஒவ்வொரு தமிழனின் கடமை. நூற்றுக்கணக்கான மக்கள் மட்டும் கலந்துகொள்ளும் பிரித்தானியா நாடாளுமன்ற போராட்டம் அவர்களுக்கு ஒரு வேடிக்கையாக இருக்கின்றது. தயவுசெய்து தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் தடுக்க அனைத்து தமிழ் மக்களும் நாடாளுமன்ற சதுக்கத்தில்

கூடவேண்டும் என தாழ்மையாக வேண்டுகின்றனர் தமிழ் இளையோர்கள்.

இந்த நேரத்தில் ஜரோப்பிய நாடாளுமன்ற தேர்த்தலில் போட்டியிடம் ஜனனி ஜனநாயகத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள்

02060920013.jpg

02060920016.jpg

02060920026.jpg

02060920031.jpg

02060920037.jpg

பதிவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.