Jump to content

உராய்வு


Recommended Posts

ஆகா மதனுக்கு இனி கால் நிலத்தில படாதே :P :)

இந்தப்பக்கம் மதன் அண்ணாவைக் காணவே முடியல்லை. ஏன் என்னாச்சு? :roll:

Link to comment
Share on other sites

  • Replies 318
  • Created
  • Last Reply

இளைஞனின் உராய்வுக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு சிறப்புற நிகழ்ந்ததைக் களம் வழி கேள்வியுற்று மகிழ்வுறுகின்றோம்..! முன்னர் கூறியது போல அன்றி தற்போது...குருவிகள் லண்டன் தேம்ஸ் நதிக் கரையில் பறந்து கொண்டிருந்தாலும்...அதே தினம் வேறொரு நிகழ்வுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்த படியால்...வரமுடியவில்லை..!

வாழ்த்துக்கள் இளைஞன்...! நிகழ்வு தொடர்பான..சொந்த அனுபவங்களை சுவையாக பகிர்ந்து கொண்ட வசி, கிருபன்ஸ், ஸ்ராலின் ஆகியோருக்கும் நன்றிகள்...! :P

Link to comment
Share on other sites

குருவியா கொக்கா?! :)

Link to comment
Share on other sites

குருவியா கொக்கா?! :lol:

இதில என்ன சந்தேகம் உங்களுக்கு...குருவிண்ணா..! :P :wink: :)

Link to comment
Share on other sites

இதில என்ன சந்தேகம் உங்களுக்கு...குருவிண்ணா..! :P :wink: :)

"தற்போது...குருவிகள் லண்டன் தேம்ஸ் நதிக் கரையில் பறந்து கொண்டிருந்தாலும்...அதே தினம் வேறொரு நிகழ்வுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்த படியால்...வரமுடியவில்லை..! "

கொக்குத்தான் தண்ணிரை கண்டவுடன் ஒற்றைகாலில் நிற்குமாம். அதனால் தான் அப்படி கேட்டாராக்கும்

Link to comment
Share on other sites

"தற்போது...குருவிகள் லண்டன் தேம்ஸ் நதிக் கரையில் பறந்து கொண்டிருந்தாலும்...அதே தினம் வேறொரு நிகழ்வுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்த படியால்...வரமுடியவில்லை..! "

கொக்குத்தான் தண்ணிரை கண்டவுடன் ஒற்றைகாலில் நிற்குமாம். அதனால் தான் அப்படி கேட்டாராக்கும்

தண்ணீருக்குள் நிக்கும் என்பது சரி...தண்ணீரைக் கண்டவுடனுமா நிக்கும்...?! எது எப்படியோ...கொக்கு ஒற்றைக்காலில் நிப்பதும் விசயத்தோடதான்...அது கொக்கு..இது குருவி...! :P :lol:

Link to comment
Share on other sites

அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று

ஓகஸ்ட் மாதம் (2005ம் ஆண்டு) 27ம் நாள், சனிக்கிழமை மாலை ஈலிங் கனகதுர்க்கை அம்மன்கோவில் மண்டபத்தில் (இலண்டன்) இளைஞன் சஞ்சீவ்காந்தின் "உராய்வு" கவிதை நூல் வெளியீடு சிறப்புற நிகழ்ந்தது. நூல் வெளியீட்டை முதன்மையாகக் கொண்டு அரங்கு ஒன்று நிகழ்வு மூன்று என்ற நோக்கில் நூல் வெளியீடு, ஆவணக்கண்காட்சி, கலைநிகழ்வு என மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றன. இம் மூன்று நிகழ்வுகளினதும் நாயகர்கள் இளந்தலைமுறையினராய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

nool13.jpg

மாலை 3:30 மணிக்கு ஆவணக்கண்காட்சி தொடங்கியது.இந் நிகழ்வினை கவிஞரும், தமிழ்ப்பற்றாளருமாகிய திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் மரபுவழியாக ஒளியேற்றி தொடக்கி வைத்தார். யேர்மனியில் வசித்து வரும் திரு.அன்ரன் யோசப் அவர்களால் நடத்தப்பட்ட இக் கண்காட்சியில் இலங்கை - இந்திய - உலக நாணயங்கள், பணஓலைகள், முத்திரைகள், செய்தித்தாள்கள், கேலிச்சித்திரங்கள் என பல்வகையான சேகரிப்புக்களும், ஆவணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் தமிழ் மன்னர் காலத்து நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் என இதுவரை பலர் பார்த்திராத நாணயங்கள் மற்றும் பணஓலைகள் காணக்கிடைத்தன. தனது சேகரிப்பின் ஒரு சிறு பகுதியையே திரு.அன்ரன் யோசப் அவர்கள் இந்நிகழ்வில் காட்சிக்கு வைத்திருந்தார் - இருப்பினும் அத்தனை பொருட்களும் நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கியது. பலரின் ஆர்வத்தையும் தூண்டிய இந்நிகழ்வை பலரும் வரவேற்றார்கள் - அதேபோல் இந்த அரும் பெரும் பணியை விடாமுயற்சியுடன் செய்துகொண்டிருக்கும் திரு.அன்ரன் யோசப்பின் செயல்வீரத்தை வியந்து பாராட்டினார்கள். கிடைத்தற்கரிய இந்த ஆவணங்களை நம் நாட்டில் மக்கள் பார்க்கவேண்டும் - எனவே ஈழத்திலும் இதுபோன்ற கண்காட்சிகளை வைக்கவேண்டும் என்கிற கருத்துக்களை சிலர் கூறினர். புலம்பெயர்ந்த இளந்தலைமுறையினர்க்கு பயனுள்ள இக் கண்காட்சியை இலண்டனில் இன்னும் விரிவாக நடத்தவேண்டும் என்கிற கருத்தையும் இன்னும் சிலர் முன்வைத்தார்கள். நாம் பலவிடயங்களை முன்னர் ஆவணப்படுத்தத் தவறியமையால் தான் இன்று பலதை இழந்து நிற்கிறோம் என்கிற ஆதங்கக்குரல்களையும் கேட்க முடிந்தது.

nool1.jpg

nool17.jpg

nool18.jpg

மாலை 4:30 மணிக்கு உராய்வு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு தொடங்கியது. இந் நிகழ்வினை திருமதி.சங்கரலிங்கம் அம்மையார் மங்கள விளக்கேற்றி மரபுவழி தொடக்கி வைத்தார்.அடுத்து தாயக விடுதலைக்காய் தம்முயிர் நீத்த மாவீரர்க்கும், மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செல்வி.அபிராமி இராஜமனோகரன் தாய்மொழி வாழ்த்து பாட நிகழ்வு இனிதே தொடங்கியது.

nool19.jpg

nool3.jpg

nool2.jpg

நிகழ்வில் முதலாவதாக நாடகக் கலைஞர், ஊடகவியலாளர் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் [iBC] தொடக்க காலப் பணிப்பாளர் - தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் [TTN] தலைமைப் பொறுப்பில் இருந்தவர்) திரு.ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் நிகழ்விற்கு தலைமையேற்று தலைமையுரை நிகழ்த்தினார். தொடர்ந்தும் நிகழ்வுகளை அவரே நெறிப்படுத்தினார். இந்த உராய்வு கவிதைத் தொகுப்பின் கவிஞன் எப்படி தனக்கு அறிமுகமானான், அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (IBC) அவனது கவிதை வாசிப்புக்கள், தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (TTN) உண்டான நேரடிச் சந்திப்பு என தனக்கும் கவிஞனுக்கும் இடையிலான பல்வேறு அனுபவங்களை நிகழ்வின் இடையிடையே பகிர்ந்துகொண்டார். இளங்கவிஞன் சஞ்சீவ்காந்த்தை உரிமையோடு கவிக்கூர் என்று அழைத்து, தனக்கு பிடித்த கவிதைகளை கவிஞனின் குரலிலேயே வாசிக்கச் செய்து தனது விளக்கத்தை உணர்வுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் கூறினார். நாடகபாணியிலான இந்த தலைமையுரையை பலரும் இரசித்தார்கள்.

nool20.jpg

அதனையடுத்து சிவசிறி பாலகுமாரக் குருக்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். உராய்வு என்கிற கவிதை நூலின் பெயரை அறிவியல் அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும் அணுகி விளக்கம் சொன்னார். உராய்வு என்பது இரு பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது உருவாகிறது என்றும், அதுபோலவே இக் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளும் சமூகத்தினது பல்வேறுபட்ட உராய்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இக் கவிதைகள் வேண்டிநிற்கும் சமூகமாற்றங்கள் நம் சமூகத்தில் நிகழவேண்டும் என்பதைக் கூறி, கவிஞனை வாழ்த்தி தனதுரையை நிறைவுசெய்தார்.

nool5.jpg

அடுத்ததாக கவிஞர் திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார். இவ்வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பு எப்படித் தனக்கு கிட்டியது என்றும், கவிஞனுக்கும் தனக்குமிடையிலான அறிமுகம் பற்றியும் குறிப்பிட்டார். கவிதைத் தொகுப்பில் கையாளப்பட்டுள்ள அறிவியல், பெண்விடுதலை போன்ற பல்வேறு கருப்பொருட்களையும் முன்னிறுத்தி அவை சார் கவிதைகளையும் வாசித்து தனது உரையை ஆற்றினார். உராய்வு என்றால் என்ன என்கிற விஞ்ஞான விளக்கத்தையும் அளித்தார். உராய்வு தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒலிநயத்துடன் இருக்கின்றன என்றும், ஒலிநயமுள்ள கவிதைகள் உணர்வை தீண்டுவனவாகவும், இலகுவாக பிறரைச் சென்றடைவனவாகவும் அமையும் என்றும் கூறினார்.அதேபோல் இவ்வயதிலேயே தனது கவிதைகளை சமூகம் சார்ந்து இயற்றும் இவ் இளங்கவிஞன், தம் வயதில் மாபெரும் கவிஞனாக திகழ்வான் எனக் கூறினார்.

nool4.jpg

அதன்பின் திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் உராய்வு கவிதை நூலை வெளியிட்டு வைக்க, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும் - தமிழ் மாணவர் பேரவையின் நிறுவனருமான பொன் சத்தியசீலன் அவர்கள் நூலைப் பெற்றுககொண்டார். அதைத் தொடர்ந்து வாழ்த்துரை நிகழ்த்திய பொன் சத்தியசீலன் அவர்கள் இளங்கவிஞன் சஞ்சீவ்காந்தை மனதார வாழ்த்தியதோடு, இந்த இளந்தலைமுறையினரையும் அவர்களது முயற்சிகளையும், படைப்புக்களையும் வரவேற்றார்.

nool6.jpg

nool7.jpg

அவரைத் தொடர்ந்து "அப்பால் தமிழ்" இணையத்தள நெறியாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். இளந்தலைமுறையினர் மீது நம்பிக்கை கொள்ளுதல் பற்றியும், தலைமுறை இடைவெளியை குறைப்பதுபற்றியும் குறிப்பிட்ட அவர், இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழ் அழியப் போகிறது என்று எதிர்காலம் பற்றி புலம்புவதை தவிர்த்து - இப்படியான இளைஞர்களை வரவேற்று செயலில் இறங்கவேண்டும் என்பதை அழுத்திக் கூறினார். கவிஞன் சஞ்சீவ்காந்தின் புனைபெயரான இளைஞன் என்பதைக் குறியீடாகப் பயன்படுத்தி, இன்றை இளைஞர்களும் - தமிழ் சமூகமும் பற்றி சிறப்பாக தனது கருத்துக்களை முன்வைத்த அவர், கவிதை பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. கவிதையின் இயல்பு கவிதையின் எளிமை என்றும், சாதாரண சொற்களே கவிதையாக மாறுகிறது என்றும் சில எடுத்துக்காட்டுக்கள் மூலம் தெளிவாக விளக்கினார்.

nool8.jpg

அடுத்ததாக மேடையேறிய அரசியல் ஆய்வாளர் திரு.பற்றிமாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அறிவுடை சமூகத்தின் தேவை பற்றியும், தேடல் பற்றியும் பேசிய அவர் உராய்வு கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் அவற்றைத் தான் காண்பதாகவும் தெரிவித்தார். அறிவியல் - தொழில்நுட்பம் சார் கவிதைகளை முன்னிறுத்திப் பேசி, இக் கவிஞன் கவிதை என்கிற படைப்போடு மட்டும் நின்றுவிடப்போவதில்லை வேறுபல துறைகளிலும் மிளிர்வான் என்று கூறி உரையை நிறைவுசெய்தார்.

nool9.jpg

மாலை 19:00 மணியளவில் கலைநிகழ்வுகள் தொடங்கின. நூல் வெளியீட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வாக அமைந்த இந்நிகழ்வில் முதலாவதாக இசை நிகழ்வு இடம்பெற்றது. உராய்வு கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் மூன்றைத் தெரிவு செய்து அவற்றைப் இனிமையாக இசையமைத்து செல்வி அபிராமி இராஜமனோகரன் மிக அற்புதமாகப் பாடினார். செல்வன் செந்தூரன் இராஜமனோகரன் வேய்ங்குழல் இசைக்க, செல்வி சிவகாமி இராஜமனோகரன் வயலின் இசைக்க, செல்வன் செந்தூரன் அனந்தசயனன் மிருதங்கம் இசைக்க இசை நிகழ்வு செவிக்கு விருந்தாகியது.

nool16.jpg

அதைத் தொடர்ந்து நடன ஆசிரியை திருமதி சாந்தி தயாபரன் நெறிப்படுத்திய இரண்டு நடனங்கள் இடம்பெற்றன. அவரது மாணவர்களான செல்வன் கஜிநாத் ஜெயக்குமார், செல்வன் சாயிபிரகாஷ் இராமகிருஷ்ணன், செல்வி சோபனா தயாபரன், செல்வி தீபிகா குணராஜா, செல்வி நிஷாந்தினி பாஸ்கரன், செல்வி ஸியான் யேசன், செல்வி கரோஷினி சிவராஜா, செல்வி ஷர்மி சிவராஜா, செல்வி பிரியங்கா குமாரகுலசிங்கம், செல்வி சரணியா குமாரகுலசிங்கம் ஆகியோர் சிறப்புற அபிநயித்த நடன நிகழ்வு பார்வையாளர் கண்களுக்கு விருந்து படைத்தது. குறிப்பாக திருக்குறளுக்கு பொருள் சொல்வதாய் அமைக்கப்பட்ட நடனம் பலரைக் கவர்ந்தது.

nool12.jpg

உராய்வு கவிதைத் தொகுப்பின் கவிஞன் சஞ்சீவ்காந்த் ஏற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்வை இனிதே நிறைவுசெய்து வைத்தார்.

nool15.jpg

nool14.jpg

நன்றி - குயிலி

Link to comment
Share on other sites

ஏன் வாழ்த்துக்களை சோகமா சொல்றீங்க ?

இல்லை..வாழ்த்து சொல்ல தாமதமாகி விட்டது அதுதான்.. :lol:

Link to comment
Share on other sites

விழா நிகழவுகளை அழகுற தொகுத்துத் தந்த குயிலிக்கும் அதை இங்கு தந்த மதனுக்கும் நன்றிகள்..! :idea:

எங்க மதன் உங்களை ஒளிச்சிட்டீங்கள்..! :P :lol:

Link to comment
Share on other sites

போட்டிருக்கே முதல் படத்தில் ... ஆனா முகம் மட்டும் தான் தெரியலை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளை எங்க வாசிக்கலாம்?

புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினால் வாசிக்கலாம். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினால் வாசிக்கலாம். :wink:

ஒரு சில கவிதைகளை களத்தில் போடலாமே.. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்...

Link to comment
Share on other sites

அனைவருக்கும் எனது நன்றிகள் முதலில்.

நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய விபரங்களை நான் இங்கு விபரமாக எழுத நினைத்தேன். அப்பால் தமிழில் இருந்து விரிவான விளக்கமான கட்டுரையை இங்கிணைத்து எனது வேலையை மதன் சுலபமாக்கவிட்டார். நன்றி. இருப்பினும் மேலதிகமாக அக்கட்டுரையில் குறிப்பிடப்படாத சில விடயங்களை மட்டும் இங்கு நான் எழுதுகிறேன்.

* நிகழ்வு ஏற்கனவே குறிப்பிட்டது போல் சரியாக மாலை 3:30 மணிக்கு தொடங்கியது.

* ஆவணக்கண்காட்சி பலரையும் வியப்புக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இடப் பற்றாக்குறை காரணமாகவும், விமானத்தில் அனைத்தையும் கொண்டு செல்லமுடியாத காரணத்தினாலும் அன்ரன் அண்ணாவின் சேகரிப்பில் 50 இல் 1 பகுதியே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* எதிர்வரும் காலங்களில் இலண்டனில் இந்த ஆவணக்கண்காட்சியை முழுமையாக வைப்பதற்கு சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. சிலர் அதற்கான செயற்பாடுகளில் இறங்க முன்வந்துள்ளார்கள்.

* திரு ஏ.சி.தாசீசியஸ் ஐயாவும் அவரது மனைவியும் அரங்குள் வந்தவுடன் மாலை 4:30 மணியளவில் நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

* கிருபன் எற்கனவே குறிப்பிட்டது போல் நாடகபாணியிலான முறையில் தனது தலைமையுரை ஏ.சி.தாசீசியஸ் ஐயா நிகழ்த்தினார். அங்கு உரையாற்ற வந்தவர்களையும், அவர்களது தனித்துவங்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

* லண்டனில் இருந்தபோதும் பல கவிஞர்கள் நிகழ்விற்கு வராததை உரிமையோடு கண்டித்தார். வெத்திலை பாக்கு வைத்து அழைத்தால் தான் இப்படியான இலக்கிய நிகழ்வுகளிற்கு இவர்கள் வருவார்களா என்று கோபித்தார்.

* இரவி அருணாச்சலம் அவர்களை நிகழ்விற்கு உரையாற்ற அழைத்திருந்தபோதும், சில பல காரணங்களால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை.

* நிகழ்விற்கு அழைக்கப்பட்டோரில் ஒரு சிலர் வராதது மனதுக்கு சிறு கவலையை அழித்தபோதும், எதிர்பார்க்காமல் பலர் நிகழ்விற்கு வருகை தந்தது உற்சாகத்தையும் பெருமையையும் தந்தது.

* 50 - 60 வரையிலான ஆர்வலர்கள் நிகழ்வில் சமூகமளித்திருந்தார்கள்.

* திருமண, பிறந்தநாள் வைபவங்கள் போன்று உற்றார், உறவினர்கள், நண்பர்கள் வந்து அரங்கை நிறைக்காமல் படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், வாசகர்கள் என்று பலரும் வந்து நிகழ்வை முழுமையாக்கியமை மகிழ்ச்சியளித்தது.

* பொன். சத்தியசீலன் (தமிழ் மாணவர் பேரவை), அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன், கவிஞர் கந்தையா இராஜமனோகரன், கவிஞர் கி.பி.அரவிந்தன், கவிஞர் வேணுகோபால், மருத்துவர் சசிகலா இராஜமனோகரன், திரு. ஏ.சி.தாசீசியஸ் ஐயா, ரி.ஜி.சிங்கம் (ஆரம்பகாலத்தில் ஐபிசி இல்), அங்கயற்கண்ணி (தமிழரசு கட்சி), கவிஞர் புதுவை இரத்தினதுரையின் தம்பி மற்றும் பலர் (பெயர்கள் ஞர்பகத்தில் இல்லை) நிகழ்விற்கு வந்திருந்தார்கள்.

* யாழ் இணைய நண்பர்கள் மதன், வசி சுதா, ஸ்ராலின், கிருபன் ஆகியோர் வந்திருந்தார்கள். கிருபன் நூல் வெளியீடு முடிந்ததும் அவசரமாய் பொகவேண்டும் என்று சொல்லிவிட்டு மின்னல் போல் மறைந்துவிட்டார். நிகழ்விற்கு முதலில் வருகை தந்தவர் வசி. பின்பு ஸ்ராலின். மதன் வாகன நெரிசலில் சிக்கி சிறிது தாமதமாக வந்து சேர்ந்தார். மதனை இலகுவாக அடையாளம் கண்டுகொண்டேன். ஸ்ராலின் தன்னை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார். கிருபன் நிகழ்வு மேடையில் நூலை பெறும்போது தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

* கோவில் மண்டபத்தில் இவ் இலக்கிய நிகழ்வு நடந்ததால் விழா ஒழுங்கமைப்பாளர்கள் கோவில் குருக்களை வாழ்த்துரைக்காக அழைத்திருந்தார்கள். அவரும் கோவில் பற்றியோ, கடவுள் . மதம் பற்றியோ எதுவும் கதைக்காமல், உராய்வு என்றால் என்ன என்பதை விஞ்ஞான ரீதியாகவும், மொழி ரீதியாகவும் விளக்கி உரையாற்றியது குறிப்பிட வேண்டிய ஒன்று.

* மேடையேறிவிட்டோம் - கவிஞனைப் புகழவேண்டும் என்பதற்காக பொய்யாக யாரும் புகழ்ந்து தள்ளவில்லை என்பது மன நிறைவைத் தந்தது. கவிதைகள் பற்றியும், என்னுடனான தமது அறிமுகங்கள், அனுபவங்கள் பற்றியும் பகிரப்பட்டது. உரைகளின் இடையே சில விடயங்கள் நகைச்சுவையாக பேசப்பட்டன. திருமணமாகாத ஆண்கள் - விசாவுக்கான திருமணம் பற்றிய கவிதை, சீதனம் பற்றிய கவிதை போன்றவற்றை நகைச்சுவையாக கையாண்டார்கள்.

* மகாகவியின் கவிதையினை சொல்லிவிட்டு மிச்சம் என்னவென்று ஏ.சி.தாசீசியஸ் ஐயா கேட்க அரங்கில் அமர்ந்திருந்த கவிஞர் கி.பி.அரவிந்தனின் மனைவி அதை அழகாகச் சொன்னார்.

* காந்தி, திலீபன், தந்தை பெரியார் பற்றிய குட்டிக் கவிதைகள் ஏ.சி.தாசீசியஸ் ஐயாவிற்கு மிகவும் பிடித்து போயின.

* அறிவியல் சார்ந்த கவிதைகள் அனைவருமே தங்களது உரையில் முக்கியமாக தொட்டுச் சென்ற ஒரு விடயமாக இருந்தது.

* எனது மூன்று கவிதைகளை செல்வி அபிராமி இராஜமனோகரன் அழகாக பாடினார். பாடலாக்குவதற்கு இலகுவாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். அதில் ஒரு கவிதை ஏற்கனவே பாடலாக்கப்பட்டு இராகம் 2001 இறுவட்டில் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* இரண்டு நடன நிகழ்வுகள் நடைபெற்றன. அவர்களும் இளைஞர்கள் தான்.

* எதிர்பாராத விதமாக நிகழ்விற்கு தீபம் தொலைக்காட்சியிலிருந்து தினேஷ் (செய்தி வாசிப்பவர்) வந்திருந்தார். அவருடன் K.T.குருசாமி(மலையக மக்கள் முன்னணி) வந்திருந்தார். ஏ.சி.தாசீசிய் ஐயாவின் கையால் கவிதை நூலை பெற்றுச் சென்றார்.

* மொத்தத்தில் இது இளைஞர்களின் நிகழ்வாகவே அமைந்திருந்தது. எல்லோருக்கும் நிறைவைத் தந்த நிகழ்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமது நேரத்தை பயனுள்ளதாகக் கழித்த மனநிறைவை எல்லோரிடமும் காணக்கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.

* ஒரு இளைஞனாக எனது எழுத்துக்களை எல்லாம் தொகுத்து அரங்கேற்றிய இந்த நிகழ்வு எனக்குள் பல பொறுப்புக்களை தந்துள்ளது. பல விமர்சனங்களை எதிர்நோக்குவதற்கான தொடக்கப்புள்ளியை இட்டுள்ளது. உராய்வு தொகுப்பின் பல உராய்வுகளை சந்திப்பதற்கான அடித்தளத்தை நிறுவியுள்ளது.

* உரையாற்றிய அனைவருமே என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையும் காணக்கிடைத்தது.

நன்றி

* நூல் வெளியீட்டு நிகழ்வு நடக்கப்போகிறது என்கிற அறிவிப்பை செய்த ஊடக நண்பர்களிற்கு எனது நன்றி.

- தினக்குரலில் செய்தியை இணைத்த சாந்தி அக்காவிற்கும், தினக்குரல் பத்திரிகையினர்க்கும் நன்றி.

- இலண்டனில் வெளியாகும் ஒருபேப்பர் நாளிதழுக்கும் நன்றி. நிகழ்வு பற்றிய செய்தியை இணைத்திருந்தார்கள்.

- தீபம் தொலைக்காட்சியினர் முதல்நாள் செய்தியின் முடிவில் நூல் வெளியீட்டு நிகழ்வையும் ஒரு செய்தியாகச் சொன்னார்கள். நன்றி.

- ஐ.பி.சி. வானொலி 22.08.2005 (ஞாயிற்றுக்கிழமை) காலையில் என்னுடனான நேர்காணலின் மூலம் நிகழ்வு பற்றிய தகவலையும் சொல்லியிருந்தார்கள். நன்றி.

- ரி.ரி.என் தொலைக்காட்சியினர் நிகழ்வைப் பதிவு செய்வதற்கு வருவதாக இருந்தார்கள் - தவிர்க்கமுடியாத காரணத்தினால் அவர்களால் வருகைதரமுடியவில்லை. அவர்களுக்கும் நன்றி.

- இலண்டன் வானொலி என்கிற வானொலியும் நிகழ்வு பற்றிய விரிவான அறிவிப்பை செய்திருந்தது அவர்களுக்கும் எனது நன்றி.

- மற்றும் இணையத்தளங்கள் அப்பால் தமிழ், தமிழமுதம், வன்னித்தென்றல் போன்றனவிற்கும் நன்றி.

* நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கமைத்து தந்த உலகத் தமிழ்க் கலையகம், அப்பால் தமிழ் ஆகியவற்றிற்கும் எனது மனமார்ந்த நன்றி.

- நிகழ்வை ஒருங்கமைத்த எஸ்.கே.இராஜன் (ஐ.பி.சி) அண்ணாவிற்கு முதலில் எனது நன்றிகள்.

- நிகழ்வை ஒழுங்கமைத்த திரு கந்தையா இராஜமனோகரன், கி.பி.அரவிந்தன் அண்ணா ஆகியோர்க்கும் மனம்நிறைந்த நன்றி.

- நிகழ்வன்று உதவிகளை செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி. :lol:

*** இந்த நிகழ்வில் முக்கியமான ஒரு விடயம் உள்ளது.

- நூலை படைத்த இளைஞன் நான் யேர்மனி நாட்டில் உள்ளேன்.

- நூல் அச்சானது இலங்கையில்.

- நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கமைத்தவர் கி.பி. அரவிந்தன் அண்ணா பிரான்சில் உள்ளார்.

- நூல் வெளியீட்டு நிகழ்வு நடந்த இடம் இலண்டன்.

இப்படி நான்கு நாடுகள் சங்கமம் ஆன நிகழ்வு இது. பல்துறை இளைஞர்கள் இணைந்த அரங்கு இது. ஒரு வித்தியாசமான நிகழ்வாகவே இது நடந்தது. எனவே இந்நிகழ்வில் நேரடியாகவும், புறம்நின்றும் பங்காற்றிய அனைவர்க்கும் மறுபடியும் நன்றி.

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றிகள் இளைஞன். உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

படங்களுக்கு நன்றி மதன் ஆமா எங்க உங்கள் படத்தை காணவில்லை நீங்கள் இளைஞனுடன் சேர்ந்து எடுக்கவில்லையா?

Link to comment
Share on other sites

நன்றி மதன். :lol:

உராய்வு தளத்தில் அனைத்து படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

http://uraayvu.appaal-tamil.com/

இதோ அனைவரும் எதிர்பார்க்கும் அந்த 1000$ படம்:

nool78.jpg

:lol:

Link to comment
Share on other sites

நல்லாயிருக்கு படங்கள்

வாழ்த்துகள்.......................

nool78.jpg

யாழ்கள நண்பர்களின் படம்

தெளிவாயிருக்கு.................. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.