Jump to content

உராய்வு


Recommended Posts

உராய்வு கவிதைத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் தனித்தனியே அவற்றிற்கான சிறப்பியல்புகளை சொல்லி செல்கின்றன. இவ்வளவு ஆற்ற்ல்களையும் கொண்டுள்ள ஒரு படைப்பாளியின் கவிதை ஒவ்வொன்றினையும் படிக்கின்ற போது அழகிய எண்ணக்கருக்களை அழமாய் உள்வாங்கவைத்து, அடுத்த கவியினை வேகமாய் புரட்டிடும் ஆவலை தூண்டியது என்றால் மிகையல்ல. உண்மையில் இவ்வளவு திறமைகளை கொண்டுள்ள ஒரு படைப்பாளியை யாழ்களம் பெற்றதில் நாம் பெருமையும் பேர் உவகையும் கொள்கின்றோம்.

வீதியில் வாழும் மானிடர்க்கு -இங்கே

வீடுகள் இல்லையடா

வீதியில் கிடந்த கற்களுக்கு -இங்கே

கோவில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா

கூவும் குயிலும் கூடிவாழும் -காட்டில்

கடவுள் அவைக்கில்லை

தாவும் குரங்கும் வரங்கள் வேண்டிடக்

கோவில் செல்வதில்லை

ஆயிரம் ஆண்டவர் ஆயினும் குறைகள்

இன்னும் தீரவில்லை

ஊருக்கு ஊர் ஓர் கோவிலைக் கட்டியும்

வேதனை ஆறவில்லை.

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 318
  • Created
  • Last Reply

உராய்வு கவிதைத் தொகுப்பில் இருந்த ஒரு கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றி மதுரன் அண்ணா....

வீதியில் வாழும் மானிடர்க்கு -இங்கே

வீடுகள் இல்லையடா

வீதியில் கிடந்த கற்களுக்கு -இங்கே

கோவில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா

கவி வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு ... நல்லா எழுதியிருக்குறீங்க இளைஞன் ... வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உராய்வு கவிதைத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் தனித்தனியே அவற்றிற்கான சிறப்பியல்புகளை சொல்லி செல்கின்றன. இவ்வளவு ஆற்ற்ல்களையும் கொண்டுள்ள ஒரு படைப்பாளியின் கவிதை ஒவ்வொன்றினையும் படிக்கின்ற போது அழகிய எண்ணக்கருக்களை அழமாய் உள்வாங்கவைத்து, அடுத்த கவியினை வேகமாய் புரட்டிடும் ஆவலை தூண்டியது என்றால் மிகையல்ல. உண்மையில் இவ்வளவு திறமைகளை கொண்டுள்ள ஒரு படைப்பாளியை யாழ்களம் பெற்றதில் நாம் பெருமையும் பேர் உவகையும் கொள்கின்றோம்.  

வீதியில் வாழும் மானிடர்க்கு -இங்கே

வீடுகள் இல்லையடா

வீதியில் கிடந்த கற்களுக்கு -இங்கே

கோவில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்  

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா

கூவும் குயிலும் கூடிவாழும் -காட்டில்

கடவுள் அவைக்கில்லை

தாவும் குரங்கும் வரங்கள் வேண்டிடக்

கோவில் செல்வதில்லை

ஆயிரம் ஆண்டவர் ஆயினும் குறைகள்

இன்னும் தீரவில்லை

ஊருக்கு ஊர் ஓர் கோவிலைக் கட்டியும்

வேதனை ஆறவில்லை.

:lol:

கவிவரிகள் அருமை தொடர்ந்தும் எழுதுங்கள் :lol:

Link to comment
Share on other sites

உராய்வு

கவிதை தொகுப்பு கிடைத்தும் பல நாட்களாகியும் நேரம் இல்லை என்றா காரணத்தால் முழுமையாக ரசித்து வாசிக்க முடியவில்லை. இன்று கிடைத்தது அரிய சந்தர்ப்பம்.

வெண்ணிலாவைப்போல் மாமரத்திற்க்கடியில் தென்றலோடு கதை பேசிக்கொண்டு வாசிக்க ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் பனிக்காலத்தில் தனது இலைகளை இழந்து வசந்த காலத்தின் அறிகுறியாக கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட்டு கொண்டு இருக்கும் ஆப்பிள் மரம் தான் எனக்கு வசதியாக கிடைத்தது. இதமான இளம் தென்றலுக்கு பதிலாய் பலமான குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. குளிர்காற்றின் குளிர்மையை உணராமல் மெய்மறந்து கவிதைக்குள் மூழ்கினேன்

அன்புடன், உராய்வுடன், நன்றியுடன் என்று பக்கங்களில் கி.பி அரவிந்தன் அவர்களின் முகவுரையுடன் கவிதை தொகுப்பின் ஆசிரியார் சஞ்சீவ்காந்த் (இளைஞன்) அறிமுகமும் அதனைத்தொடர்ந்து நன்றியுரையும் தொடர்ந்தது. நான் வாசித்த தொகுப்புகளில் நன்றியுரை கடைசியில் தான் இடம்பெறும். ஆனால் இந்த தொகுப்பில் புதுமையாக நன்றியுரையை முதல் பக்கத்திலே போட்டிருந்தார்கள்.

"காலத்தின் கவிக்கூர் இவன்" என்ற ஏ.சி. தாசீயஸ் அவர்களின் அடை மொழிக்கு ஏற்ப ஒவ்வொரு கவி வரிகளும் மிகவும் உயிரோட்டமாகவும் திரும்பவும் வாசிக்க தூண்டும் தன்மையையும் கொண்டிருந்தது.

வருக 2004 என்ற தலைப்பின் கீழ்

" வருகவென வரவேற்று வாழ வைத்த ஆண்டுகளே வரலாற்றில் நீர் எங்கு போனீர்?"

என்ற கேள்வியுடன் முதல் கவி தொடர்கின்றது.

"விருந்துண்டு விடைபெற்று விரைந்தோடிய ஆண்டுகளே வரலாற்றில் நீர் என்ன செய்தீர்?"

என்று கவிவரிகள் தொடருகின்றன.

"வெள்ளை நிழலும் வேண்டாம் வெளிச்ச நிலவும் வேண்டாம்.

சூரிய நிலவும் வேண்டாம் . சூடாத வெயிலும் வேண்டாம்.

பூவாய் மழை பெய்யவும் வேண்டாம். நிலவில் நிலமொன்றும் வேண்டாம்.

புன்னகை தேசம் வேண்டும் புதுமை தேசியம் எமக்கிங்கு வேண்டும்."

நிலவில் ஒரு வீடு கட்டி தாருகின்றேன். மழை பூவாய் பொழிய வேண்டும் என்று சின்ன சின்ன ஆசைகளில்

கவிதை எழுதுபவர்களுக்கு ஒரு கடி அங்கை.

அன்புள்ள என்று தொடங்கும் கவி வரிகளில் கண்களை ஒடவிடுகின்றேன். அன்புள்ள என்ற வரிகளை பார்த்தவுடன்

அட இளைஞன் கவிதை தொகுப்பிலும் தன் காதலுக்கு தூது விடுகின்றாரா என்ற எண்ணத்துடன் பக்கங்களை புரட்டுகின்றேன்.

"அன்புள்ள தாயகமே

ஆசை மகன் எழுதும் மடல்

நானிங்கு நலமம்மா

நீயங்கு நலம் தானா"

என கண்ணீருடன் எமது தாய் நிலத்தை நினைத்து உருகிய வரிகள் எமது கண்களையும் நனைக்கின்றன.

"எத்தனை நாள் ஆகியதோ

உன் மடியில் நானுறங்கி."

ஆம் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களின் ஏக்கங்களையும் அந்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.

"என் வீட்டு தோட்டத்தில் பூத்த கொடி நலம் தானா?"நான் வைத்த மல்லிகையே நலம் தானா? நான் வைத்த பல நிறமுடைய ரோஐாவே நலம் தானா? இலையே தெரியமால் புத்து குலுங்கும் நித்தியாகல்யாணியே நீ நலம் தானா? ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு நிறத்தை காட்டும் குரோட்டான்ஸ்களே நீங்களும் நலம் தானா என்று நம்மையும் கவி எழுத தூண்டும் வரிகள்.

நமது பாரம்பரிய பாட்டுக்களில் ஒன்றான தாலாட்டு பாடல்களை இப்போது நாம் கேட்பது மிகவும் அருமையாக இருக்கின்றது. பிள்ளைகளை தூக்க வைக்கும் போதும் சினிமா பாடல்களை முணுமுணுக்கும் எமது தலைமுறைக்கு விடுதலையின் பங்குதாரர் என்னும் தலைப்பில் எமக்காக உயிர் நீத்த மாவீரார்களின் புகழ் பாடி புதுமையாக "ஆராரோ ஆரோ ஆராரோ" வரிகளில் தந்து இருக்கின்றார்.

"சுட்டெரிக்கும் சூரிய வீரார்

எட்டிப் பகை வென்ற வீரர்"

ஆம் நமக்காக தம்முயிரை தியாகம் செய்த நம் மாவீரார்கள் புகழ் பாடுகின்றது அந்த தலாட்டு கவி வரிகள்.

கடவுள்:

"வீதியில் வாழும் மானிடர்க்கு

இங்கோ வீடுகள் இல்லையாடா

வீதியில் கிடந்த கற்களுக்கு இங்கே

கோயில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறு இல்லையாடா

நாள்தோறும் இந்த வெற்றுச் சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா?.

முக்கியமாக புலம் பெயர்ந்து கோயில்கள் அமைப்பதை வியாபாரமாக கொண்எருக்கும் அடியார்கள் உணர வேண்டிய உண்மை வரிகள்.

கவிதை வரிகளுடன் கூடிய அனைத்து காட்சிப் படங்களும் அருமை. ஒவியார் மூனாவின் திறமைக்கு இந்த இளைஞனின் உராய்வு தொகுப்பு சிறந்த சான்று. ஒரு சில கவிதை வரிகளில் சில ஆங்கில சொற்கள் உட்புகுந்தியிருந்தாலும் அதற்கான விளங்கங்கள் அந்த பக்கங்களின் முடிவில் தென்படுகின்றது.

"இவள் யாரோ" என்று காதல் வரிகளில் தொடங்கி இளவயதினள் இவள் யாரோ? என்று கேள்வியையும் கேட்டு விட்டு இவள் என் தோழி என்று சாதரணமாக

சொல்லி தப்பித்து கொள்கின்றார்.

வர்ணிக்க தோன்றுகின்றதே, சிற்பி, பிறந்த நாள் பரிசு, காதல் நோய், வெளிச்ச குப்பை என பல சிறு தலைப்புகளிட்டு அந்த தலைப்புகளுக்கு ஏற்றவாறு கவி

படைத்திருப்பது பாராட்டதக்கது.

"உண்ணா விரத்தின் பசிக்கு தன்னை உணவாக கொடுத்தவன்"

என்று தியாகி தீலிபன் அண்ணாவையும் வர்ணிக்க தவறவில்லை இந்த கவிஞர்.

"அகிம்சை தன்னை கூவி ஏலம் விட்ட

தற்போதை பாரத்தின் அன்றை தீலிபன்."

மகாத்மா காந்தி அவர்களை நமது திலீபன் அண்ணாவோடு ஒப்பிட்டு இருப்பது சிறிது முரண்பாடாக தான் எனக்கு தெரிகின்றது. காந்தியின் நிலை வேறு. தீலிபன் அண்ணாவின் நிலை வேறு. காந்தியின் சாவின் அடக்கு முறையாளன் சம்மதப்படவில்லை. ஓரு ஆயுதம் தாங்கிய போராளி தன்னை அகிம்சைவாதியாக மாற்றுவது கடினம் என எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் தீலிபன் அண்ணா அதை சாதித்து காட்டினார். இதில் ஆசிரியாரின் கூற முனைந்தது என்ன என்பதை அறிய ஆவல்.

"மரித்து விட்ட மனிதம்

மறந்து விட்ட மனித மனம்"

என்று இந்த கலியுக காலத்து மனித மனங்களை பற்றி கவி வடித்து அனைவரையையும் சிந்திக்க வைத்து இருக்கின்றார்.

ஒளி வழி விழி என்ற தலைப்பின் கீழ்

"நிழலின் நிசத்தை நீ உணர மறுக்கிறாய் என்னென்றால் கடலின் கண்ணாடியில் உன் முகத்தை பார்க்கின்றாய்."

சில விடயங்கள் நடக்காது என்று நன்கு தெரிந்திருந்தும் ஏனோ சிறு குருட்டு நம்பிக்கையை உருவாக்கி வாழ பழகிக் கொண்டு விட்டோம்.

"நன்மதியில் உன் விதியை உணர மறுக்கிறாய்" அழகான கருத்து நிறைந்த வரிகள்.

அடுத்த தலைப்புகளான கூடல், ஊடல், காதல் அனைத்து தலைப்புகளிலும் வரைந்த கவிகள் அற்புதம்.

புலம்(பல்) இலக்கியம்

"கூட்டிலே பூட்டிய குரங்குளாக

வெளிநாட்டிலே மாட்டிய நம்மினம் ஐயனே"

அருமையான கற்பனை வளத்துடன் கூடிய வரிகள். புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் எம்மை குரங்குகளாக வர்ணித்து இருப்பது வருத்தத்தை தந்தாலும் அந்த வரிகள் மறுக்கப்படதா உண்மை வரிகள். கறுப்பினத்தவர்களை பார்த்து உடுப்பு, வெள்ளையார்களை பார்த்து நடை, சீனார்களை பார்த்து சாப்பாடு என்று எல்லா இனத்தையும் பார்த்து மாறி மாறி தாவிக் கொண்டிருக்கும் நம்மை குரங்குக்கு ஒப்பிட்டதே மேல் என்று படுகின்றது.

புகைக்காதீர், மரபணு, கணணி, ஒசோன் தலைப்பில் கீழ் வந்த கவிகள் வியப்பில் ஆழ்த்துகின்றது.

இணையம் பகுதியில்

"வலைக்குள் ஒர் உலகம்

வலைப்பின்னலினால் பின்னப்பட் நாடுகள்"

இந்த கவிதையை வாசிக்கும்போது யாழ் இணையத்தை பற்றி தனது சொந்த அனுபவத்தில் எழுதியிருக்கின்றார் என்று தான் தோன்றுகின்றது.

"முகமூடிகள் கூட அங்கு முகமூடி அணிகின்றன. அதையும் அடிக்கடி மாற்றல்"

பாடசாலையில் படிக்கும்போது மனிதனின் அடிப்படை தேவைகள் மூன்று என்றே படித்திருந்தோம். இங்கே கவிஞர் நான்கவதாக கணணியையும் சேர்த்திருப்பது நிஐமானதாக இருக்கின்றது. "உடை, உணவு, உறையுள் நான்காவது அத்தியாவசியம் கணணி" என்கின்றார் இந்த இளைஞன். .

பெண்ணியப் பேச்சுப் பகுதியில் இருந்து "அடக்கம் என்றார் அதில் அர்த்தம் அடங்கி கிடக்கும் என்றார். அவளை முடங்கச் செய்தார்." பெண் விடுதலை பற்றி பேசிப் பேசியே பெண்களை முடங்க வைக்கும் மூடவர்களை பார்த்து கோபத்துடன் தனது கேள்விக் கணைகளை வீசுகின்றார்.

நான் மட்டும் பகுதியில் இருந்து

"வெளிச்சம் தேடி இருட்டுக்குள் பயணிக்கின்றேன்." யாருமில்லமால் வாழ்கின்றேன். எதிரே எனக்கு ஆறுதல் சொல்லி அரவணைக்கவும் இல்லை. அதே நேரம் எனக்கு எதிரியாகவும் ஒருவரும் இல்லை என்று தனது தனிமையை நினைத்து புலம்புவார்களுக்காக அந்த வரிகளை படைத்திருக்கின்றார் இந்த கவிஞர்.

வாழ்க்கை

"பிறப்புக்கும்

இறப்புக்கும்

தோன்றிய முரண்பாடு"

உண்மை"

உண்மை உணர்வுகளை உன்னுள் உணராதவன்

உண்மை உணர்வுகளை உன்னுள் துளிர்க்காதவன்

உணரும் உர்வுகளை உன்னுள் நினைக்கதவன்

உன்னையே உணரா நீ உண்மையா அறிவாயா?

இன்னும் இங்கு குறிப்பிடதா தலைப்புக்களில் ஏராளமான கவித்துளிகள். வாசிக்க இன்பம் தரும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கின்றது. உண்மையான வாழ்க்கை நடைமுறையினை தனது எழுத்துக்களால் நம்முன் கொண்டு வந்து இருக்கின்றார் இந்த இளைஞன்.

தொகுப்பில் பல அறிவியல் துறை சார்ந்த கவிதைகள் காணப்படுவது சிறந்த முயற்சி.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளைய தலைமுறைக்கு நல்லா எடுத்துக்காட்டாக இளைஞன் திகழ்கின்றார். உராய்வு தொகுப்பில் தனது பணியைத் தொடங்கிய இளைஞன் இன்னும் பல தொகுப்புக்களை வெளிவிட கடவுள் கிருபை புரியவேண்டும் என்று வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

வாவ்.....பிரமாதம்.....அற்புதமான விமர்சனம்.... இன்னொமொரு படைப்பாளியை அடையாளம் கண்டு கொள்கிறது யாழ் களம்....

Link to comment
Share on other sites

எனது பார்வையில் உராய்வு

யாழ் களத்தில் எல்லோரினது விமர்சனத்தை பார்த்த பின்பு எனக்கும் அந்தப்புத்தகத்தை எப்படியாவது வாசிக்க வேண்டும் என்று ஆவல் என்னுள் கொளுந்துவிட்டு எரிந்தது. எனது நீண்ட நாள் ஆவல் இன்றே பூர்த்தியடந்தது. வெண்ணிலா ரமா போல எனக்கு ஆற அமர இருந்து வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கவிதைப்புத்தகம் கையில் கிடைத்தவுடன் அதை வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஒரு வேகமே என்னுள் ஏற்பட்டது.

தொடர்ந்து வாசிக்க...

http://rasikai.blogspot.com/2006/05/blog-post_27.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"அகிம்சை தன்னை கூவி ஏலம் விட்ட

தற்போதை பாரத்தின் அன்றை தீலிபன்."

மகாத்மா காந்தி அவர்களை நமது திலீபன் அண்ணாவோடு ஒப்பிட்டு இருப்பது சிறிது முரண்பாடாக தான் எனக்கு தெரிகின்றது. காந்தியின் நிலை வேறு. தீலிபன் அண்ணாவின் நிலை வேறு. காந்தியின் சாவின் அடக்கு முறையாளன் சம்மதப்படவில்லை. ஓரு ஆயுதம் தாங்கிய போராளி தன்னை அகிம்சைவாதியாக மாற்றுவது கடினம் என எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் தீலிபன் அண்ணா அதை சாதித்து காட்டினார். இதில் ஆசிரியாரின் கூற முனைந்தது என்ன என்பதை அறிய ஆவல்.

போராட்ட வழிமுறை மட்டுமே ஒப்பீட்டுக்கு அடித்தளமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதாவது அகிம்சை வழிப் போராட்டம். கவிதையில் கூறப்படும் ஒப்பீடுகள் சரியாக அனைத்தும் பொருந்த வேண்டும் என்பதல்ல. உதாரணமாக பிரபாகரனை "முருகனுக்கு நிகரானவன்" என்று பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றது எனது இந்தக் கவிதையில் ஒரு மறைமுகமான விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்படையாகப் பார்த்தால் காந்தியைப் பற்றிய கவிதை. ஆழநோக்கினால் இக்கவிதையின் நோக்கம் வேறு...

நன்றி ரமா. கவிதைகள் அனைத்தையும் வாசித்து உங்கள் கருத்துக்கைள பொறுமையாக எழுதியமைக்கு.

நன்றி ரசிகை. எனது எழுத்துக்களை இரசித்தமைக்கு. இரசித்ததோடு நில்லாமல் உங்கள் வெளிப்படையான கருத்துக்களை எழுத்துவடிவில் தெரிவித்தமைக்கு எனது நன்றி.

Link to comment
Share on other sites

2 வருசம் முன்பு - இதே தலைப்பில் நடந்த புடுங்கலை பார்த்து -(வேட்டி ஏன் கட்டல - பொட்டு ஏன் வைக்கல )

வாசிக்காமலே - தவிர்த்தன் -!

இப்போதானே கவனிச்சன் -முந்தி போல இல்ல -எவ்ளோ விசயம் !

நானும் - இங்க வாறன் - யாரும் வேணாம் - என்று சொன்னாலும்! :roll: 8)

Link to comment
Share on other sites

ரமாக்கா...ரசிகை பெரியம்மா......விமர்சனங்கள் அருமையாக இருக்கின்றன...நீங்கள் எல்லாம் இப்பிடி எழுதுவிங்களானு நினைக்க தோணுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க எழுதவில்லை சுண்டல் தம்பி அவங்க Type பண்ணிதான் இருக்கிறாங்க.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பற்றி சரியா புரிந்து வைத்திருக்காய் பிள்ள u have a very bright future sundhal......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலாக இருந்து கரம் (கார சுண்டல்) சுண்டலாக புரமோஷன் நான் தாறன்...............

Link to comment
Share on other sites

ரமாக்கா...ரசிகை பெரியம்மா......விமர்சனங்கள் அருமையாக இருக்கின்றன...நீங்கள் எல்லாம் இப்பிடி எழுதுவிங்களானு நினைக்க தோணுது...

பெரியம்மாவா? :roll: எப்பேல இருந்து? :shock: சொல்லவே இல்லை. :lol:

Link to comment
Share on other sites

மேற்கோள்:

அப்போ 2 வருஷத்துக்கு முதலே நீங்கள் யாழ் வாசகராஃ?

ஆமா சுண்டல் - இணைந்ததுதான் - பிந்தி! 8)

Link to comment
Share on other sites

  • 6 months later...

http://manaosai.blogspot.com/2006/12/blog-post_21.html

வலைபதிவர் சந்திரவதனாவின்... உராய்வு பற்றிய விமர்சனம்... மேலை உள்ள இணைப்பில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.