Jump to content

ஸ்கிரீன்சேவர் உருவாக்க


Recommended Posts

பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை வைத்து ஸ்கிரீன்சேவர் உருவாக்க

மைக்ரோசாப்டின் பவர்பாயிண்ட் அப்ளிகேஷனில் ஸ்லைடுகளைத் தயாரித்து மகிழ்ந்தவர்கள் அந்த ஸ்லைடுகளை ஸ்கிரீன் சேவராக மாற்ற விரும்புகின்றனர். பல வாசகர்களும் எப்படி பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றுவது எனக்கேட்டு கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றி தர பல சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றின் பெயர்களும் அவை கிடைக்கிற வெப் தளங்களின் முகவரிகளும் கீழே தரப்பட்டுள்ளன.

Screensaver Powerpoint Studio (www.1stss.com)

Screen Time for Powerpoint (www.screentime.com)

Any Saver (www.dgolds.com)

Active Screensaver Personal (www.automatedofficesystems.com)

Showtime (www.alienzone.com)

Apex Powerpoint Screensaver Maker (www.zc2003.com)

மேற்படி சாப்ட்வேர்கள் எல்லாமே ஷேர்வேர் பிரிவைச் சேர்ந்தவை. எனவே இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் பணம் கட்டி அந்த சாப்ட்வேரை நிரந்தரமாக்க வேண்டும்.

பைசா செலவு இல்லாமலே பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன் சேவராக மாற்ற வழி உள்ளது. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இருக்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி உள்ளதா? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள் பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றும் வழியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1) உங்களது பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் பைலைத் திறந்து கொள்ளுங்கள்.

2) File Save As கட்டளையை பவர்பாயிண்ட்டில் கொடுங்கள்.

3) Save as tybe என்ற டிராப்டவுன் லிஸ்ட் பாக்ஸை கிளிக் செய்யுங்கள். அதில் GIF அல்லது JPEG அல்லது PNG பார்மட்டுக்களில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

4) My Documents போல்டரின் கீழுள்ள My Pictures என்ற போல்டருக்கு மாறிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே My Pictures போல்டரில் வேறு ஏதாவது இமேஜ் பைல் காணப்பட்டால் அதை வேறு போல்டருக்கு நகர்த்தி கொள்ளுங்கள். அப்படி நகர்த்தாமல் விட்டால் அந்த இமேஜ் பைலும் நீங்கள் உருவாக்கப் போகிற ஸ்கிரீன்சேவரில் இடம் பெற்று விடும்).

5) பைல் பெயர் ஒன்றை டைப் செய்து Save பட்டனை அழுத்துங்கள்.

6) பிரசண்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளையும் இமேஜ் பைல்களாக உருவாக்கவா என பவர்பாயிண்ட் உங்களிடம் கேள்வி கேட்கும். ஆம் எனப் பதில் கொடுங்கள். Export செயல் முடிவடந்தவுடன் ஒவ்வொரு ஸ்லைடிற்கும் ஒரு இமேஜ் பைலானது My Pictures போல்டரில் வெளிப்பட்டிருக்கும்.

7) பவர்பாயிண்ட் இனி தேவையில்லை. எனவே அதை மூடிவிடுங்கள்.

8) விண்டோஸ் எக்ஸ்பியின் டெக்ஸ்டாப்பில் ஐகான்கள் இல்லாத இடத்தில் ரைட் கிளிக் செய்து Properties கட்டளையைத் தேர்வு செய்யுங்கள்.

9) Screen Saver டேபைக் கிளிக் செய்யுங்கள்.

10) Screen Saver என்ற பகுதியில் உள்ள டிராப்டவுன் லிஸ்ட் பாக்ஸை கிளிக் செய்து My Pictures Slideshow என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

11) விரும்பினால் Settings பட்டனை கிளிக் செய்து ஸ்கிரீன்சேவர் பற்றிய செட்டிங்களை மாற்றுங்கள்.

12) Ok பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவுதான். பவர்பாயிண்ட் பிரசண்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளும் ஒவ்வொன்றாக ஸ்கிரீன் சேவரில் காட்சியளிக்கும். இந்த ஸ்கிரீன்சேவரில் அனிமேஷனைக் காண முடியாது, ஒலியைக் கேட்க முடியாது. இந்த குறைகளைப் பெரிதாக நினைக்காதீர்கள். காரணம், எவ்வித செலவுமின்றி எளிதாக ஸ்கிரீன்சேவரை உருவாக்கி விட்டீர்கள்.

நன்றி

தினமலர் Computer மலர்

http://www.dinamalar.com/2005july22compuma...malar/index.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி.. நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வசி

Link to comment
Share on other sites

  • 5 months later...

நன்றி நன்பரே நீங்கள் சொன்ன இந்த முறையில் செய்து வெற்றி கிடைத்தது ....இது போல் பல விடையங்களை தர எனது வாழ்த்துக்கள்........

மற்றும் நன்பரே...

www.webshots.com

இந்த வெப்சைற்ற பைசா இல்லாமலே டவன்நோட் செய்யலாம் .டவன்நோட் செய்து பாருங்கள் உதவியாக இருக்கும் ..மற்றும் இதில் ஒரு சிறப்பு என்ன வென்றால்..டிஸ்க்டொப் பிக்சரில் நாட்கலண்டரையும் காட்டும்....

செய்து பாத்துவிட்டு சொல்லுங்கள்

>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<

Link to comment
Share on other sites

  • 6 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.