Jump to content

யாழ் இணையம் - 11ஆவது அகவை


Recommended Posts

அனைத்து யாழ் இணைய உறவுகளுக்கும்,

யாழ் இணையம் தனது 10ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று 11ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் - பல மேடு பள்ளங்களைக் கடந்து - தடைகளைத் தாண்டி - இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாய் - தமிழர்களின் விடுதலை உணர்வையும், தேசிய எழுச்சியையும் வெளிப்படுத்தும் களமாய் - உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாய் - யாழ் இணையம் உள்ளது.

தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது - பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தளங்களுக்கு மத்தியில் - 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இணையத்தளம் தொடர்ந்து இயங்குவது என்பது சாதாரண விடயமல்ல. ஆழ்ந்த அர்ப்பணிப்பு, விடா முயற்சி, பொறுமை, நோக்கம் தவறாமை - யாழ் இணைய உறவுகளின் அன்பும் ஆதரவும் - தளர்ந்து போகும் நேரங்களில் உற்சாகப்படுத்தும் நல்ல உள்ளங்கள் - ஆலோசனைகளை வழங்கி மெருகூட்டும் உறவுகள் - இத்தனையும் தான் இதனை சாத்தியமாக்கியது.

இன்று, இந்த வளர்ச்சியை - இந்த மகிழ்ச்சியை - கொண்டாடும் மனநிலையில் நாம் யாருமே இல்லை என்பதே உண்மை. எமது தமிழீழ நாடு - எமது மக்கள் - எமது போராளிகள் - எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழல் எம்மை துயருக்குள் தள்ளியுள்ளது. நாள்தோறும் சிங்கள இனவெறி அரசால் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எமது போராளிகள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் மண் மீட்கப் போராடி மாவீரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். இழப்புச் செய்திகளையும், மக்களின் அவலங்களையும் தாங்கவேண்டிய ஒரு சூழ்நிலைக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனாலும், நாம் சோர்ந்துவிடவில்லை. சோரப்போவதுமில்லை. எமது எண்ணம், நோக்கு இரண்டும் மாறப்போவதுமில்லை.

எந்தச் சூழலாயிருந்தாலும் அந்தச் சூழலுக்கு ஏற்ப - தமிழ் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப - யாழ் இணையம் தன்னைத் தகவமைத்து உருவமைத்து வெளிப்படும். மண் மீட்புப் போருக்காய், இனப்படுகொலைக்கு எதிராய் எழுச்சிகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களோடு யாழ் இணையமும் தன்னை ஒன்றிணைத்துள்ளது. மக்களின் இன்றைய உணர்வுகளை, எண்ணங்களை, எழுச்சியை காவும் ஒரு ஊடகமாய் தன்னை மையப்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகள், எழுச்சிப் போராட்டங்கள் போன்றவற்றுக்கு தன்னாலான ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கி வருகிறது. தாயக விடுதலைக்கான இணையம் சார்ந்த கூட்டுமுயற்சிகளை ஊக்குவித்து வருகிறது. இதற்கு உறுதுணையாக யாழ் இணைய கருத்துக்கள உறவுகள் உள்ளார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு + எழுச்சிப் பேரணிகளுக்கான பதாகைகளை உருவாக்கினோம். கொட்டொலிகளை எழுதினோம். இணைய ஊடக பரப்புரைக்கான ஒத்துழைப்புகளை வழங்கினோம். மக்களின் அவலங்களை - தமிழரின் விடுதலை உணர்வை வெளிப்படுத்துவதற்கான களத்தை அமைத்துக்கொடுத்தோம். இனப்படுகொலை பற்றி தமிழக மக்களுக்கு தெரிவிக்க தமிழ் வலைப்பதிவைத் தொடங்கினோம். ஆங்கில வலைப்பதிவைத் தொடங்கினோம். "சிறிலங்காவைப் புறக்கணி" என்கிற முயற்சிக்கான ஆதரவை வழங்கினோம் - அதற்கான பதாகைகள் தயாரித்தோம் - அதற்கான இணையப்பக்கம் உருவாக்கினோம். இன்னும் இன்னும் எம்மாலானதைச் செய்துகொண்டிருக்கிறோம். நாம் என்றால் யார்? யாழ் இணைய உறவுகள் நீங்கள்.

நாம் என்ன செய்தோம் என்பதை பட்டியலிடுவதல்ல நோக்கம். கூட்டுமுயற்சியாய் எம்மால் நிறைய செய்ய முடியும் என்பதை உணர்த்தவே இவற்றை பட்டியலிட்டோம். கூட்டுமுயற்சிகளை நாம் ஊக்குவிக்கிறோம். கூட்டுமுயற்சிகளை நாம் வரவேற்கிறோம். நாம் இன்னும் நிறைய செய்யவேண்டும் - என்ன செய்யவேண்டும், என்பதை எண்ணவேண்டியதே இன்றைய தேவையாகவுள்ளது. பயனுள்ள - செயற்திறனுள்ள - புதிய - வித்தியாசமான - தாயக விடுதலை நோக்கிய கூட்டுமுயற்சிகளுக்கு தன்னாலான ஒத்துழைப்பை யாழ் இணையம் வழங்கும்.

இந்த நேரத்தில், யாழ் இணையத்தை நடாத்துவதில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சிலவற்றையும் எடுத்துச்சொல்ல விரும்புகிறோம்:

1. யாழ் இணையத்தை பராமரிப்பதற்கு நாம் செலவிடும் நேரம். வேலை நேரம், குடும்பத்துக்கான நேரம், தனிப்பட்ட வேறு வேலைகள் இத்தனைக்கு மத்தியில் தான் நாம் யாழ் இணையத்தை இயக்குகிறோம். பலநேரங்களில் வேலையில் இருந்துகொண்டு, யாழ் இணையத்தள வேலைகளைச் செய்கிறோம் - குறிப்பாக கருத்துக்களத்தை மட்டுறுத்தும் வேலை. எனவே கருத்துக்கள உறவுகள் பொறுப்புணர்ந்து கருத்துக்களை எழுதுவீர்களானால் எமக்கு மட்டுறுத்தும் நேரம் மிச்சப்படும்.

2. யாழ் இணையத்தை நடாத்துவதற்கான பொருளாதாரச் செலவு. இணைய வழங்கிக்கான மாதாந்தச் செலவு, மென்பொருட்களுக்கான செலவு, இற்றைப்படுத்தலுக்கான செலவு என்று பல்வேறு செலவுகள். விளம்பரங்களூடாக இவற்றை ஈடுகட்டவே நாம் விரும்புகிறோம். எனவே, யாழ் இணைய உறவுகள், உங்களுக்கு தெரிந்த நிறுவனங்களினூடாக விளம்பரங்களைப் பெற்றுதந்தால் பயனுள்ளதாக அமையும்.

3. கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களால் வெளியிலிருந்து வரும் சில சிக்கல்கள். தொலைபேசி, மின்னஞ்சல்கள் ஊடான எச்சரிக்கைகள், வசவுகள், தனிப்பட்ட தாக்குதல்கள். இவற்றை நாம் கணக்கிலெடுப்பதில்லை. எனினும், கருத்துக்களத்தில் வைக்கப்படும் கருத்துக்கள் பொறுப்புணர்ந்து, பண்பான முறையில், நேர்மையாக வைக்கப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

நிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி.

எமது மண்ணோடும் - எமது மக்களோடும் - எமது போராளிகளோடும் - நாம் என்றும் இணைந்திருப்போம்.

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்.

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.