Jump to content

"அயன்" திரைப்படத்தைப் புறக்கணிப்போமா?


Recommended Posts

சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம். பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள்.

சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும்.

அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும்.

"அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

நான் தமிழ்படம் பார்த் 3 வருடங்கள். இருந்தும் இம்முயற்ச்சிக்கு எனது ஆதரவுகள்!

Link to comment
Share on other sites

நான் தமிழ் படங்கள் பார்ப்பது இல்லை.. பாட்டு மட்டுமே கேட்பது... அதுகும் பழைய பாடல்.. உங்கள் முயற்சிக்கு என் மனபுர்வமான ஆதரவு.. :)

Link to comment
Share on other sites

இப்படித்தான் அஜித்தின் கேவலமான படம் ஒண்றை புறக்கணிக்கிறோம் என்று எங்களவர்கள் தேவை இல்லாத விளம்பரத்தை ஓட்டி காட்டினர்... படு தோல்வி அடைந்து இருக்க வேண்டிய அந்த படம் தயாரிப்பாளருக்கு விளம்பர செலவை குறைத்து ஓரளவு குறைந்த நட்டத்தையே கொடுத்தது.....!!

Link to comment
Share on other sites

எச்சரிக்கை :- உங்களின் உளவுரனை குறிவைத்தும் எதிரி தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கிறான்...

கவனமாக நகருங்கள்...

Link to comment
Share on other sites

நான் கடைசியாக திரையரங்கில் திரைப்படம் பார்த்தது எப்ப எண்டு ஞாபகமே இல்லை..! இருந்தாலும் வாழ்த்துகள்..!!

Link to comment
Share on other sites

படம் எப்ப ரிலீஸ்? முதல் நாளிலேயே பார்த்து விட்டுதான் மறு வேலை...!!

பகுத்தறிவு சிங்கங்கள் எல்லாம், படம் புறக்கணிப்பு என்ற போராட்டத்தில இறங்கும் அளவுக்கு தமிழீழ விடுதலைக்கான மக்கள் போராட்டம் விரிவடைந்து போயிருக்கு

கவனம்: எமக்கான முக்கிய எதிரிகளே நாங்கள் தான்... பார்த்து வரவும்

Link to comment
Share on other sites

இங்கே அயன் படத்தை புறக்கணிப்பதை ஒரு வினாவாக வைத்திருக்கின்றேன். நீங்கள் தருகின்ற கருத்துகளின் அடிப்படையில் இதைப் பற்றிய முடிவை எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் எமக்கு செய்கின்ற தீங்குகள் பற்றி இங்கே நிறையப் பேசி விட்டோம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது பற்றி எம்மில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அது நடக்கப் போவது இல்லை. அப்படி நடக்காமல் போவதற்கு சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றனவும் முக்கிய காரணமாக இருக்கும்.

இந்தத் தொலைக்காட்சிகள் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தீங்குகளை எமக்கு செய்து கொண்டிருக்கின்றன.

எங்களுடைய எதிர்ப்பை நாம் எப்படிக் காட்டப் போகின்றோம்?

கடிதங்கள் எழுதிப் பயன் இல்லை என்பது அனுபவம் கண்ட உண்மை.

எதிரியோடும், எதிரிக்கு துணை போகின்றவர்களோடும் சமரசம் செய்து கொள்வதை எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

இங்கே சூர்யாவின் படத்தை புறக்கணிப்பது பற்றிப் பேசவில்லை. சன் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தை புறக்கணித்து, சன் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு எம்முடைய எதிர்ப்பை காட்டுவது பற்றிப் பேசுகிறேன்.

நாங்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தமிழ்நாட்டை சென்றடைவதாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய திரைப்படம் ஒன்றைப் புறக்கணித்துக் காட்டுவதுதான் சிறந்த வழி.

Link to comment
Share on other sites

உலக நாடுகள் எமது போரட்டத்துக்கு எதிராகவே நடந்து கொள்கிறார்கள்.

அப்படியான

அனைத்து நாடுகளையும் எதிர்ப்போம்.

அவர்களிடமிருந்து பெற்றுள்ள அனைத்து வசதி வாய்ப்புகளையும் உதறித் தள்ளுவோம்.

அகதி அந்தஸ்த்து : குடியுரிமைகளைக் கூட துறப்போம்.

வாறீங்களா சபேசன்?

இன்னும் யார் தயார்?

Link to comment
Share on other sites

தலைவன்,

உலக நாடுகளுக்கு எதிராக நாம் ஊர்வலம் போகின்றோம்:. அவர்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றோம். வேறு பல வழிகளில் நாம் எமது எதிர்ப்பைக் காட்டுகின்றோம்.

தாயகம் என்று வருகின்ற பொழுது, எமக்கு அகதி அந்தஸ்த்து தந்து, குடியுரிமை தந்து எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்ட உலக நாடுகளுக்கே நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்க பின்னிற்கவில்லை.

ஆனால் எமது முளையை மழுங்கடிக்கும், எமது போராட்டத்தை இருட்டடிப்புச் செய்யும், எமது எதிரிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பது எந்த வகையிலும் சரியாக இருக்க முடியாது.

சன் நிறுவனத்திற்கு நாம் எப்படி எங்கள் எதிர்ப்பைக் காட்டப் போகின்றோம்? இதுவரை சன் நிறுவனம் வாங்கிய படங்களில் அதிக பொருட் செலவில் உருவானது "அயன்". இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.

எங்கள் எதிர்ப்பை வலுவான முறையில் தெரியப்படுத்துவோம்.

Link to comment
Share on other sites

இயக்குணர் மணிவண்ணன் கூட ஈழத்தழிழருக்காகக் குரல் கொடுத்தார், நடிகர் சூரியா எம் மக்களுக்காக என்ன செய்தார் என்று ஆதரவு வழங்கத் துடிக்கிறீர்கள்?

படம் பார்கக் குடுக்கும் காசில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள், அவர்கள் உயிர் மட்டுமல்ல உங்கள் மனமும் நிறையும்.

Link to comment
Share on other sites

படம் எப்ப ரிலீஸ்? முதல் நாளிலேயே பார்த்து விட்டுதான் மறு வேலை...!!

பகுத்தறிவு சிங்கங்கள் எல்லாம், படம் புறக்கணிப்பு என்ற போராட்டத்தில இறங்கும் அளவுக்கு தமிழீழ விடுதலைக்கான மக்கள் போராட்டம் விரிவடைந்து போயிருக்கு

கவனம்: எமக்கான முக்கிய எதிரிகளே நாங்கள் தான்... பார்த்து வரவும்

புலி எண்டு சொன்னால் குறைஞ்சா போவீங்கள்....??

நேற்று ஒரு அண்னையை கண்டன்.. லண்டனிலை பல கடைகள் வைத்து இருப்பவர்... பொருட்கள் புறக்கணிப்பை பற்றி அவரிட்ட கேட்டன்... அவர் சொன்னார் நான் நிப்பாட்டி கன காலம் ஆச்சுது... ஆனால் சனம் வந்து சாமான் வாங்கி போட்டு சொல்லுதாம் தம்பி கொஞ்சம் பொறுங்கோ சாமானை இங்கை விட்டு போட்டு ஒருக்கா வெளிய போட்டு வாறன் எண்டு போகுதாம்... கேட்டால் அங்கர் பால்மா முடிஞ்சு போச்சுது அதுதான் பக்கத்து கட்டையிலை வாங்கி போட்டு வாறன் எண்று...

இப்படியே போனால் நாங்கள் எங்கட வியாபாரத்தை ஒட்டு குழுக்களின் கடைகளுக்கும், சிங்கள வியாபாரிகளிடமும் இழக்க வேண்டி இருக்கும் எண்று அவர் சொன்னதுதான் பஞ்ச்... சிங்கள , தமிழ் ஆக்கள் நல்லா திட்டம் போட்டு இலங்கை சாஅமானுக்கு எண்று மட்டும் கடைகளை திறந்தால் வியாபாரம் அள்ளலாம் எனும் நிலைமைக்கு தான் நிலமை போய் கொண்டு இருக்கு என்கிறார்...

இப்படி இருக்குது எங்கட புறக்கணிப்புகள்... எதை தொடங்கினாலும் அதை முடிக்க மாட்டினம்... அதுக்கை அடுத்ததுக்கை போக வேணும்... இப்படியே எல்லாத்தையும் கெடுத்து கொண்டு எதையும் முடிக்காமல் அரை குறையாய் விடுவது...

சிலை அரை குறையளுக்கு சொன்னாலும் புரியாது சொந்தமாகவும் புரியாது... இப்படி இருக்கு தமிழர் நிலை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சினிமா, தமிழ் நாட்டு தொலைக்காட்சிகள் ,,மற்றும் தி.மு.க. இவைகளை குறை சொன்ன யாழில சிலபேருக்கு கோவம் பொத்துக்கொண்டு வருகுது... என் எண்டுதான் எனக்கு விழங்கேல்லை...யாரவது நீண்டகால உறுப்பினர் கொஞ்சம் விளக்கம் தாறியளோ?

Link to comment
Share on other sites

தமிழ் சினிமா, தமிழ் நாட்டு தொலைக்காட்சிகள் ,,மற்றும் தி.மு.க. இவைகளை குறை சொன்ன யாழில சிலபேருக்கு கோவம் பொத்துக்கொண்டு வருகுது... என் எண்டுதான் எனக்கு விழங்கேல்லை...யாரவது நீண்டகால உறுப்பினர் கொஞ்சம் விளக்கம் தாறியளோ?

வளர்த்தால் குடும்பி சிரைச்சால் மொட்டை..! இதுதான் சிலருக்கு தெரியுதே அழகாக வெட்டி சீவ முடியும் எண்டது புரிவதில்லையே....!! ஏன் அப்படி எண்டு உங்களுக்கு தெரிஞ்சால் சொல்லுங்கோவன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கருத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்.

கடந்த 2 வருடங்களாக திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பது விருப்பமில்லாமல் இருக்கிறது. இதனால் திரையரங்கில் சென்று படம் பார்ப்பதை தவிர்க்கிறேன். இராமேஸ்வரம் என்ற படம் வந்தபோது ஈழத்துக்கதை என்று தெரிந்தவர் சொல்லக் கேட்டுப் போய் பார்த்தேன். அயனோ, கியனோ எதுவந்தாலும் இப்ப திரையரங்குகளுக்கு செல்வதைத் தவிர்க்கிறேன். சிறுவனாக இருந்த போது திரைப்படம் பார்ப்பது என்றால் நல்ல விருப்பம். இப்ப வயது போகப்போக இவ்விருப்பம் குறைந்து விட்டது. அத்துடன் சன் தொலைக்காட்சி தொடர்ந்து புறக்கணித்து வருபவன். கலைஞர் தொலைக்காட்சி அவுஸ்திரெலியாவில் ஒளிபரப்பாவதில்லை.

Link to comment
Share on other sites

ஆகக் குறைந்தது திரையரங்குக்குச் சென்று பார்ப்பதையும் ஒரிஜினல் டிவிடிக்களை வாங்கிப் பார்ப்பதையுமாவது தவிர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் கள்ளக் கொப்பியில் பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன் திரைப்படத்தை புறக்கணிப்பதற்கு சிறந்த வழி அதை திரையிடுபவனிடம் ( அவனும் தமிழன் தானே) பேசி, வரும் தேர்தல் வரைக்குமாவது திரையிடுவதை நிறுத்த சொல்லலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை சன் நிறுவனம் தயாரிக்கும் 'அயன்' திரைப்படத்தைப் புறக்கணிப்போமா? என்று எழுதினால் நன்றாக இருக்கும் சபேசன்.

Link to comment
Share on other sites

இங்கே அயன் படத்தை புறக்கணிப்பதை ஒரு வினாவாக வைத்திருக்கின்றேன். நீங்கள் தருகின்ற கருத்துகளின் அடிப்படையில் இதைப் பற்றிய முடிவை எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் எமக்கு செய்கின்ற தீங்குகள் பற்றி இங்கே நிறையப் பேசி விட்டோம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது பற்றி எம்மில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அது நடக்கப் போவது இல்லை. அப்படி நடக்காமல் போவதற்கு சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றனவும் முக்கிய காரணமாக இருக்கும்.

இந்தத் தொலைக்காட்சிகள் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தீங்குகளை எமக்கு செய்து கொண்டிருக்கின்றன.

எங்களுடைய எதிர்ப்பை நாம் எப்படிக் காட்டப் போகின்றோம்?

கடிதங்கள் எழுதிப் பயன் இல்லை என்பது அனுபவம் கண்ட உண்மை.

எதிரியோடும், எதிரிக்கு துணை போகின்றவர்களோடும் சமரசம் செய்து கொள்வதை எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

இங்கே சூர்யாவின் படத்தை புறக்கணிப்பது பற்றிப் பேசவில்லை. சன் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தை புறக்கணித்து, சன் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு எம்முடைய எதிர்ப்பை காட்டுவது பற்றிப் பேசுகிறேன்.

நாங்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தமிழ்நாட்டை சென்றடைவதாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய திரைப்படம் ஒன்றைப் புறக்கணித்துக் காட்டுவதுதான் சிறந்த வழி.

சபேசன் உங்களைப் போன்ற தெளிவாக, பிரச்சனைகளை சரியான திசையில் இருந்து பார்த்து எழுதக் கூடியவர்கள் கூட வெறும் சினிமா புறக்கணிப்பு என்று இறங்குவதை பார்க்க கவலையாக இருக்கு.

இந்திய, முக்கியமாக தமிழக சினிமா என்பதே பார்பனியத்தினையும் அதன் இருப்பையும் பேண முயலும் ஒரு ஊடகம். அதன் மூலம் இந்திய பெரும் தேசியத்தின் வல்லாதிக்கத்தினை பார்பனியத்தின் ஊடாக தொடர்ந்து பேணுகின்றது. அது மக்களின் சினிமா அல்ல.

சன் ரீவியும் சன் நிறுவனத்தின் அனைத்து ஊடகங்களும் (கலாநிதி மாறனின் ஊடகங்கள்) பார்ப்பனியத்திற்கு காவடி தூக்கும் பங்காளிகள் தான். என்று தி. மு. க என்ற பெயரில் மட்டுமே திராவிடத்தினை தாங்கி நிற்கும் கட்சி, காங்கிரஸ் எனும் ஆரிய கட்சிக்கு பல்லாக்கு தூக்கியதோ அன்றில் இருந்தே அது தமிழ் தேசியத்திற்கு எதிராகத் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது (இந்திரா அம்மையாரை நேருவின் மகளே என்று வாழ்த்திய காலம் தொடக்கம்) . அப்படியான பின்புலத்தினைக் கொண்ட சன் ரீவியினையும் அதன் சினிமாவையும் நாம் வெறும் நட்டத்தினை ஏற்படுத்தி காட்டுவோம் என்ற பெயரில் மாத்திரமே எதிர்ப்பது வேடிக்கையானது.

முதலில் எமது எதிரி யார் என்பதை புரிந்து கொள்வோம். எதிரி பல்லாக்கு தூக்கிகள் அல்ல. இந்திய பெரும் தேசியவாதமும் அதனின் ஒரு அங்கமாக இருந்து அதனை பேணிவரும் இந்திய சினிமாவும் தான். ஒரு 'அயனை' எதிர்ப்பதால் இந்த இந்து/இந்திய/ பார்பனிய தேசிய வாதத்தில் எந்த ஒரு ஓட்டையும் வந்துவிடப் போவதில்லை. மாறாக எம் ஈழ / தமிழ் சமூகத்தில் இருக்கும் ஓட்டைகள் தான் மேலும் தெளிவாக வெளித் தெரியும்.

எம் பிரதான எதிரி இந்திய வல்லாதிக்க வெறியும் அதன் முதுகெழும்பான பார்பனியமும் தான்.கலாநிதி மாறனும் சன் நிறுவனமும் அதன் கோடிக்கணக்கான கண்ணிகளில் ஒன்று.. அவ்வளவு தான், நாம் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க முயல்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரிதாக தமிழ் படங்கள் திரையில் பார்ப்பதில்லை ஆனால் இந்த படம் வெளிவந்தவுடன் நிச்சயமாக பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

தலைவன்,

உலக நாடுகளுக்கு எதிராக நாம் ஊர்வலம் போகின்றோம்:. அவர்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றோம். வேறு பல வழிகளில் நாம் எமது எதிர்ப்பைக் காட்டுகின்றோம்.

தாயகம் என்று வருகின்ற பொழுது, எமக்கு அகதி அந்தஸ்த்து தந்து, குடியுரிமை தந்து எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்ட உலக நாடுகளுக்கே நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்க பின்னிற்கவில்லை.

ஆனால் எமது முளையை மழுங்கடிக்கும், எமது போராட்டத்தை இருட்டடிப்புச் செய்யும், எமது எதிரிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பது எந்த வகையிலும் சரியாக இருக்க முடியாது.

சன் நிறுவனத்திற்கு நாம் எப்படி எங்கள் எதிர்ப்பைக் காட்டப் போகின்றோம்? இதுவரை சன் நிறுவனம் வாங்கிய படங்களில் அதிக பொருட் செலவில் உருவானது "அயன்". இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.

எங்கள் எதிர்ப்பை வலுவான முறையில் தெரியப்படுத்துவோம்.

சபேசன்

இங்கே உங்கள் பிரச்சனை இந்திய சினிமா எதிர்ப்போ

தமிழர் பிரச்சனைகளை சண் - கலைஞர் எதிர்ப்போ அல்ல

உண்மையிலேயே ஒரு தொலைக் காட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் தேசியத்தை பாவிக்க முயல்கிறீர்கள்.

நான் ஏற்கனவே கூட இது குறித்து எழுதினேன்.

உண்மைகள் கசக்கும்.

இல்லாவிட்டால் இது எதிர்காலத்தில் நமது பயணத்துக்கு தடையாகும் என்றால்

உடனே இவன் எமக்கு எதிரானவன் என்ற கருத்தே நம்மிடம் உள்ளது.

எல்லாத்துக்கும் ஓம் போட வேண்டும்.

இதுதான் எமது குணாம்சம்.

உலக நாடுகளுக்கு எதிராக நாம் ஊர்வலம் போகின்றோம்:. அவர்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றோம். வேறு பல வழிகளில் நாம் எமது எதிர்ப்பைக் காட்டுகின்றோம்.

தாயகம் என்று வருகின்ற பொழுது, எமக்கு அகதி அந்தஸ்த்து தந்து, குடியுரிமை தந்து எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்ட உலக நாடுகளுக்கே நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்க பின்னிற்கவில்லை.

இதே போல் இந்தியாவில்

அதுவும் தமிழகத்தில் மேற்கத்தைய நாடுகளை விட அதிகமான ஈழத்து மக்கள் வாழ்கிறார்கள்.

அகதிகளாக வாழ்வதை விட அங்கே சும்மா வாழ்கிறார்கள்.

இல்லை என்று யாராலும் சொல்ல முடியுமா?

அவர்களுக்கும் நீங்கள் பிரச்சனை கொடுக்கப் போகிறீர்கள்.

இங்கே நாம் தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள்தான் போகிறோம்.

அங்கே மட்டுமல்ல (தமிழகம் : பம்பாய் . டெல்லி)

அமெரிக்கா : மலேசியா போன்ற இடங்களில்

ஊர்வலம் போவது இந்திய தமிழர்

அங்கே தீயிட்டு தன்னையே சாகடித்துக் கொள்வது இந்திய தமிழர்.

இவர்களது உணர்வை : அன்பை இழக்கப் போகிறீர்கள்.

ஏதோ புலம்பெயர் நாடுகளின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துவதாக சொல்கிறீர்களே?

போராடுவதாக சொல்கிறீர்களே?

இந்த நாடுகள் தொடர்ந்து பண உதவிகளை செய்கிறது.

தொடர்ந்தும் ஆதரவு வழங்குகிறது.

சும்மா வீதிகளை தடைசெய்து ஒன்றும் நடக்காது.

கூட்டம் கூட்டி மட்டும் ஒன்றும் ஆகாது.

உங்களைப் போன்றவர்கள் ஒரு குழுவாக போய்

இங்குள்ள அரசியல் தலைமைகளை சந்தியுங்கள். பேசுங்கள்.

போராடுங்கள்.

எமது மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது

எமது சொந்தங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது.

எமது குடியுரிமையை வைத்து எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

நீங்கள் அந்த அரசுக்கு உதவி வழங்குகிறீர்கள்?

அல்லது கண்டும் காணாமல் இருக்கிறீர்கள்.

எமது குடியுரிமையை வைத்து என்ன பிரயோசம்

நாங்களும் இந்நாட்டு பிரஜைதானே?.

எனவே எமது குடியுரிமையை

நாம் திருப்பித் தர முடிவெடுத்திருக்கிறோம்.

நாங்கள் அங்கே போய் சாகப் போகிறோம்.

தாங்க முடியவில்லை.

இப்படி சொல்ல எத்தனை பேரால் முடியும்?

சொல்லுங்கள். செய்யுங்கள்?

மனுவெல்லாம் கொடுக்க முன்னர்

அவர்களிடம் எழுத்து மூலம் அனுமதி பெறுங்கள்.

நாங்கள் இந்த நாளில் நடத்தும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்

நாங்கள் மனுக் கொடுக்கவிருப்பதாக எழுதி

அவர்களது பதிலுக்கு பின் கவனயீர்ப்போ : போராட்டமோ நடத்தி

அவர்களிடம் மனுக்கொடுக்க முயலுங்கள்.

அதை விட்டு விட்டு

அங்க போய் நின்று

வா வெளியே மனுக் கொடுக்க வேணும்

என்று சண்டித்தனம் காட்டாதீர்கள்.

வீதிகளை தடை செய்வதை பெரிய காரியமாக சொல்கிறீர்கள்.

இதை பார்த்து இவர்கள் நகைக்கிறார்கள்?

எம்மை வெறுக்கிறார்கள்?

ஒரு நாட்டின் முகுகெலும்பே போக்கு வரத்துதான்.

ஒரு விபத்து நடந்தாலே

ஒரு சில நிமிடங்களிலேயே அதை சரி செய்து

பாதையை திறக்கிறார்கள் அவர்கள்.

நாம் பல மணி நேரம்

அப்படியானவர்களது ஒழுங்கு முறைகளை மீறுகிறோம்.

ஒருநாள் இருநாள் விடுவார்கள்.

வெகு விரைவில் கைவைப்பார்கள்.

அதன் பின் அது தொடரும். உள்ளே போடுவார்கள்.

அவர்களது நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை என

நாடு கடத்துவார்கள்?

இதையே பேசி வருகிறார்கள். இது நடக்கும்.

இது எங்கட நாடு அல்ல.

அவர்கள் அதிக சிரமப்பட்டு உருவாக்கிய நாடு.

நமக்கு அவர்களைப் போல் வாழ வழியமைத்திருப்பதை கெடுக்காதீர்கள்.

போராட்டம் செய்யுங்கள்.

அது எங்கே அனுமதி தந்துள்ளார்களோ அங்கே?

அவனவன் நேரத்துக்கு தன் பணிகளுக்கு செல்வதற்காக என்று

தான் திரும்பி உடனடியாக வீடு திரும்பி

தன் குழந்தையை அல்லது தன் மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தையை கவனிக்க

அல்லது பள்ளிக்கு அனுப்ப அல்லது

எங்காவது அனுப்ப

அல்லது நேரத்துக்கு தனது அட்டவனைப்படி ஒருவரை சந்திக்க செல்லும் போது

அவனது நேரத்துக்கு அவனது வேலையை செய்ய முடியாவிட்டால்

இவை அவர்களை வெறுப்படைய வைக்கும்.

அவர்கள் தனது நாட்டு போலீஸிடம் : அரசிடம் முறையிடுவார்கள்.

ஒரு மின்அஞ்சல் போதும்.

அதை பரிசீலிப்பார்கள்? முடிவு?

இது போன்ற காட்சிகளை எத்தனை இந்திய படத்திலேயே பார்த்து நாமே திட்டி இருப்போம்.

எத்தனை பிரசவ வேதனைகளை

எத்தனை இழப்புகளை

எத்தனை அவசர தேவைகளை

இழந்து மக்கள் அவலப்படுவதை வெறுத்து பேசியிருக்கிறோம்?

இப்போது நாமே அதை செய்கிறோமே?

இதன் பெயர்தான் அறிவா?

புலம் பெயர்ந்தும் : இங்கு படித்தும் : இத்தனை நாடுகளைப் பார்த்தும் நாமே திருந்தாமல் இருக்கும் போது

அந்த நாடுகள் மட்டும் எப்படி திருந்தும்?

அந்த நாட்டிலுள்ளவர்கள் மட்டும் எப்படித் திருந்துவார்கள்?

வேகமாக போகும் ஒருவனுக்கு வீதி விளக்கின் சிகப்பு விளக்கை கண்டே எரிபவன் அவன்.

உங்கள் செயல்கள் வினையாகவே முடியும்.

இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

உங்கள் எதிர்ப்பை விட

அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை

உரியவர்களுக்கு எழுதினாலே போதும்

இப்போ உள்ளதும் இல்லாமல்தான் போகும்.

உங்களால் இதையெல்லாம் சிந்திக்க எங்கே நேரம்.

எதையாவது குட்டிச் சுவராக்கிவிட்டு

தலையை சொறியத்தான் நேரம் இருக்கும்.

அதே இந்திய சினிமா நடிகர்களை கொண்டு வந்து நிகழ்ச்சி நடத்தும் போது

உங்களுக்கு வராத கோபம் எல்லாம் இப்ப பொத்துக் கொண்டு வருது.

இதனால் பாதிப்படையப் போவது சண் - கலைஞர் மட்டுமல்ல

அங்கு வேலை செய்யும் எமக்கும் ஆதரவான பல்லாயிரம் மக்களும்தான்.

ஒரு நிறுவனத்தை அடித்து உடைத்தால்

அந்த நிறுவனம் சமாளித்துக் கொள்ளும்.

அதை நம்பி வாழும் ஊழியர்களது குடும்பங்கள் பசியோடும் பட்டினியோடும் வேதனைப்படும்.

அவர்களில் பலர் எமக்கு சார்பானவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு சுப்பிரமணியசாமியும் : சோவும்

நமக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும் போது

பல சுப்பிரமணியங்களையும் : சாமிகளையும் : சோக்களையும் : சாக்குகளையும் உருவாக்கும்.

இதுக்குத்தான் சொல்லுறது

பொல்லுக் குடுத்து அடி வாங்கிறதென்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம் போல் தோன்றுகிறது :o

தலைவன் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.