Jump to content

இப்படியும் ஒரு குடும்பமா?


Recommended Posts

நிலா அக்காவின் குடும்பம் பெரிய குடும்பம். நிலா அக்காவுக்கு அப்பா, அம்மா , நான்கு அண்ணன்மார்கள்.இரண்டு அண்ணன்மார் திருமணம் ஆனவர்கள்.இரண்டு பேர் படித்து முடித்து விட்டு வேலை செய்கிறார்கள்.. நிலா அக்காவும் ஒரு பட்டதாரிதான்....

இரண்டு தினத்துக்கு முன் நான் நிலா அக்கா வீட்டிற்குப் போயிருந்தேன் நிலா அக்காவைக் கண்டதும் எனக்கு சந்தோசமாய் இருந்தது..

”என்னக்கா இந்த பக்கம்.?. குழந்தை பிறக்கப் போகுது போல? என்ன குழந்தை” என்று ஆவலாய்க் கேட்டேன்...

”ஏன்டி நான் என்ர அம்மா வீட்டுக்கு வரக் கூடாதோ? ம்ம்ம்ம் இன்னும் இரண்டு மாதம் தான் இருக்கு.. குழந்தை பிறந்து விடும்.. ஆனால் என்னை மாதிரி பெண்ணாய் பிறக்காமல் இருந்தால் சரிதான்” என்றார் சோகமாக....

பதிலுக்கு நானும்..”ஏன் அக்கா இப்படிச் சொல்லுறியள்.. உங்களுக்கு என்ன குறைச்சல்” என்றன்.

நிலா அக்காவின் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம்.. எல்லோரும் படித்தவர்கள்.. நிலா அக்கா வீட்டின் ஒரே மகள்.. அவரின் அப்பா அவருக்கு நீச்சல் குளத்துடன் வீடு கட்டிக் கொடுத்திருந்தார் ..

”என்னக்கா உங்கள் கணவர் வர வில்லையா” என்றேன் . அவ்வளவுதான் அழ ஆரம்பித்தார்.. எனக்கு ஒன்றும் புரிய வில்லை..

நிலாக்காவின் அப்பா வெளியில் வந்தவர் மகளைப் பார்த்ததும் அவரும் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..

நான் எதுவும் புரியாமல் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தேன்..

நிலா அக்கா என்னைப் பார்த்து "அதை விடு உனக்கு எப்ப கலியாணம்" என்றார்.

எனக்கு ஒன்றும் புரியா விட்டாலும் ”ஏன் அக்கா கலியாணத்துக்கு என்ன அவசரம்” என்று கேட்டேன்...

ம்ம்ம் ”அதுகும் சரிதான். படித்து முடி” என்றார் நிலா அக்கா.

ஆனால் சற்றுத் தயங்கியபடி “இந்த அக்கா எது சொன்னாலும் கேட்பியா?” என்றார்..

”என்னக்கா நீங்களும் எனக்கு ஒரு அக்காதானே சொல்லுங்கோ” என்றேன்.

”இல்லை நீ கலியாணம் பண்ணும் போது அப்பா அம்மா பாக்குற பொடியனை செய்.அதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லம் .என்னோட வாழ்க்கை மாதிரி உனக்கும் ஆகக் கூடாது ” என்று சொல்லி அழுதார்...

”என்னக்கா நீங்கள்தானே சொன்னீங்கள் உங்கட கலியாணத்துக்கு முதல் நாள் என்னைப் போல நீயும் காதலித்து செய் என்று இப்ப என்ன நடந்தது” என்று கேட்டேன்.

அவ்வளவுதான் அந்த அக்கா திரும்பவும் அழ ஆரம்பித்தார்....

எனக்கு ஒன்றும் புரியா விட்டாலும் ”நீங்கள் சொல்லுறதைக் கேக்குறன் ஆனால் நீங்கள் அழாதையுங்கோ” எனறேன்...

அப்போது வெளியில் சென்றிருந்த நிலாக்காவின் அண்ணன் வந்தார்..”சுஜிம்மா அவள் அழட்டும் விடும்மா ”என்றார்

அவர்கள் இப்படி கூறி நான் கேட்டதே இல்லை..அவர்களின் ஒரே தங்கையின் கண்ணில் இருந்து கண்ணீர் வரக் கூடாது என்று முந்தி அடிக்கடி கூறுவார்கள்.. இப்ப என்ன இப்படிக் கூறுகிறார் என்று கவலையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.....

"சுஜிம்மா என் தங்கையின் வாழ்க்கையில் நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது அதனால் தான் உனக்குச் சொல்லுகிறேன். நீயும் எனக்கு ஒரு தங்கைதான் என்று தன் தங்கையின் சோகக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்..

நிலாக்கா அவரின் ஊரைச் சேர்ந்த பிரதீப் என்பவரைக் காதலித்தார் அவரின் நான்கு அண்ணான்மாரும் சேர்ந்து நிலா அக்காவின் ஆசைப்படி காதலித்தவரையே திருமணம் செய்து கொடுத்தனர்,,... ..யாரும் எதிர் பார்க்காத அளவு விமரிசையாக அவர்கள் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை..படிப்பிலும் சரி பணத்திலும் சரி மாப்பிள்ளை வீட்டாரும் குறைந்தவர்கள் இல்லை...பெடியன் விமான ஒட்டுனர்.. நல்ல வேலை நல்ல சம்பளம்.. நிலா அக்காவும் படித்தவர்தான்..அவரும் நல்ல வேலையில்தான் இருந்தார்..

பிரதீப்பின் தங்கை நிலாக்காவின் அண்ணனைக் காதலித்து இருக்குறார்...எல்லாருக்கும் தெரிந்த விடயம் தான் ,,நிலாக்காவின் அண்ணனை விருப்பம் இல்லை என்று கூறி இருந்தும் .. பிரதீப்பின் குடும்பம் மாப்பிளை கேட்டு வந்த போது அவர் வேறு பெண்ணை விரும்புகின்றேன் என்றும் அவளுக்கு துரோகம் செய்ய இயலாது என்றும் கூறி மறுத்துள்ளார். கதை பழசாகி காலங்களும் உருண்ட்டோடி விட்டன..பிரதீப்பின் தங்கை வேறு திருமணமும் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகிவிட்டர்..

ஆனால் பழிவாங்க எண்ணினான் பிரதீப் ..

நிலா அக்காவை ஆசை வார்த்தைகள் பேசி காதலித்துத் திருமணமும் முடித்து தன்னோடு கூட்டிக் கொண்டு போய் கொடுமைப் படுத்தினான் அந்தப் பாவி..கட்டியவன் என்றால் பொறுத்துக் கொள்ளலாம் குடும்பமே சேர்ந்து கொடுமைப் படுத்தியது தன் குடும்பத்துடன் நிலா அக்காவை பேச விடாமல் தடுத்தனர்... வீட்டிலேயே சிறை வாழ்க்கை வாழ்ந்தார்... இப்படிச் சொல்ல முடியாத அளவு துன்பங்களை அனுபவித்தார் நிலா அக்கா..தற்போது வயிற்றில் குழந்தையுடன் பிறந்த வீட்டுக்கே துரத்தி விட்டனர்..

வீட்டுக்குத் துரத்தியது மட்டுமில்லாமல் கொடிய பிரதீப் குடும்பத்தார் ரோட்டில் வைத்து காரால் இடிக்கவும் வந்தார்கள்.. இது மட்டும் இல்லாமல் அவருக்கு டைவோர்ஸ் நோட்டீசும் அனுப்பி விட்டார்கள்..

பிரதீப்புக்கு இரண்டாம் திருமணம் நடாத்த அவரின் பெற்றோர்கள் பொண்ணு பார்க்கிறார்கள்..

இந்த அக்காவுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் குழந்தை பிறக்கப் போகுது.. இந்த குழந்தையோட அப்பா மறு மணம் முடிக்கத் தயாராகிறார்.... என்ன கொடுமையோ....

நான் இரண்டு தினம் முதல் பிரதீப்பின் அப்பாவை ஒரு கலியாணவீட்டில் பார்த்தேன்..அவர் வேறு ஒருத்தரிடம் பேசிக்கொண்டிருப்பதை நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்..அவர்கள் நிலா அக்காவின் குடும்பத்தைப் பழி வாங்கவே பிரதீப்புக்குக்கு நிலா அக்காவை கலியாணம் செய்து கொடுத்தார்களாம்...இந்த குடும்பம் சந்தோசமாய் இருக்கவிடக் கூடாதாம்..என்று ஆவேசமாக கூறிக்கொண்டிருந்தார்

அவர் சொன்னதை கேட்டு என்னால கண்ணீர் வடிக்கதான் முடிந்தது.. நான் ஏசுவதற்குப் போனேன்.. ”இப்படி கதைத்தால் உன்னை வாயாடி பொண்ணு என்று சொல்லுவார்கள்” என்று எனது அம்மா என்னைத் தடுத்து விட்டார்..

அந்த அக்கா நிம்மதி தேடி எனது விட்டுக்கு வந்துள்ளார்.. அவர் இரவில் அழுவதை நானும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்..தாங்க முடிய வில்லை. வாயால் ஏசினால் தானே வாயாடி...அதனால் பேனாவால் பேச எண்ணி உங்களிடமும் கூறி என் கவலைகளையும் குறைத்துக் கொள்கின்றேன்..

நிலா அக்கா மாதிரி ஒரு பெண்ணை இவர்கள் தேடினாலும் எடுக்க முடியாது அவ்வளவு நல்ல மனசு. அவர் நினைத்து இருந்தால் அவர்கள் வாழ்க்கையை வேறு விதமாய் அமைத்திருக்க முடியும்.. அவரைத் தேடி எத்தனை நல்லவர்கள் வந்தார்கள்.. இதுதான் விதி என்பார்கள் போல.. ”நல்லவர்களுக்கு காலம் இல்லை” என்று எனது அம்மா அடிக்கடிச் சொல்வார் ஆனால் அதை இப்போது தான் நான் உண்ர்கின்றேன்

...(தொடரும்)..

நம் நாட்டில் பாவம் மக்கள் எப்படியோ கஸ்ர படுகுறார்கள்.. ஆனால் இப்படி பட்ட சிலது இருக்குதுகள்..இவர்களை முதலில் நாடு கடத்த வேணும்..

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுகளுக்கு எல்லாம் கதைத்து சரிவராது .............. கத்தியால ஒரு கை எடுத்தால் தான் அவன் அடுத்த கலியாணமும் செய்யமாட்டான்(ஒரு கை இல்லாதவனுக்கு யார் பொம்பிளை வருவார்) தான் மற்றவர்களுக்கு தான் என்ன செய்தது என்றும் விளங்கும் ஆனால் ஓன்று அந்த பொடியனுக்கு கை எடுக்கும்போது தகப்பனுக்கு ஒரு வெட்டாவது வெட்டனும். உங்கட அக்கவிண்ட அண்ணாமார் நல்லவர்கள் போல் இருக்கு அதுதான் சட்டத்தின்வழி போகினம்.பல நேரங்களில் வன்முறைதான் சிலவற்றுக்கு நிரந்தர தீர்வை விரைவாக தேடித்தருகின்றது :unsure: .

Link to comment
Share on other sites

உதுகளுக்கு எல்லாம் கதைத்து சரிவராது .............. கத்தியால ஒரு கை எடுத்தால் தான் அவன் அடுத்த கலியாணமும் செய்யமாட்டான்(ஒரு கை இல்லாதவனுக்கு யார் பொம்பிளை வருவார்) தான் மற்றவர்களுக்கு தான் என்ன செய்தது என்றும் விளங்கும் ஆனால் ஓன்று அந்த பொடியனுக்கு கை எடுக்கும்போது தகப்பனுக்கு ஒரு வெட்டாவது வெட்டனும். உங்கட அக்கவிண்ட அண்ணாமார் நல்லவர்கள் போல் இருக்கு அதுதான் சட்டத்தின்வழி போகினம்.பல நேரங்களில் வன்முறைதான் சிலவற்றுக்கு நிரந்தர தீர்வை விரைவாக தேடித்தருகின்றது :unsure: .

அது உண்மைதான் சுப்பண்ணை.. அவர்கள் றொம்ப நல்லவர்கள் அதனால்தான் அவர்கள் எதுகும் பண்ணமால் இருக்குறார்கள்.. நான் ஒரு பெடியானாய் பிறந்து இருந்தால் சத்தியாம அடி குடுத்து இருப்பன்..அந்த அக்கா படும் வேதனை பாக்கவே பரிதாமாய் இருக்கு.. ஒரு கணவன் தான் பக்கத்தில் இருக்க வேணும் குழந்தை பிறக்கும் போது வயித்தில இருக்கும் போது ஆனால் இங்கு வேற நிலமை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூல்ல்ல்.... சுப்ஸ்.... கூல்ல்ல்.....

ஒருபக்க வாக்குமூலத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதிகமாய் உணர்ச்சிவசப் படக்கூடாது. நாம் பார்வையாளர்கள் என்பதையும் மறக்கக் கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனம்மா என் பெயரை கதா நாயகிக்கு வச்சீங்க . (சும்மா ) நான்( நிலாமதி )என்று நினைச்சுக்க போறாங்க . :unsure: .........

...நல்ல படிபினையான கதை i திக்கி திணறி சொல்லி முடிசுடீங்க.

Link to comment
Share on other sites

கூல்ல்ல்.... சுப்ஸ்.... கூல்ல்ல்.....

ஒருபக்க வாக்குமூலத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதிகமாய் உணர்ச்சிவசப் படக்கூடாது. நாம் பார்வையாளர்கள் என்பதையும் மறக்கக் கூடாது

தெரியாதவங்கள் இப்படிதான் சொல்லுவார்கள் சுவை.. இது உண்மை சுவை நான் நேரில் பார்த்தன்..குடும்ப விபகாரம் எழுத கூடாது என்று நினைத்தன்..ஆனால் அந்த அக்கா மேல் எந்த தப்பும் இல்லை அதனால் எழுதினன் சுவை.. ஊருக்கு தெரியும் மாப்பிளை வீட்டு காரார் மேல் தப்பு என்று.. அவர்கள் வாயாலயே சொல்லி இருக்குறார்கள்.. தங்கள் மகளுக்கு மாப்பிளை குடுக்கலை.. நாங்கள் ஏன் சந்தோசமாய் வத்து இருக்கணும் இவங்க பெண்ணை என்று.. என்னை மன்னிக்கவும் தப்பா சொன்னால்.. நன்றி சுவை

ஏனம்மா என் பெயரை கதா நாயகிக்கு வச்சீங்க . (சும்மா ) நான்( நிலாமதி )என்று நினைச்சுக்க போறாங்க . :unsure: .........

...நல்ல படிபினையான கதை i திக்கி திணறி சொல்லி முடிசுடீங்க.

நிலாமதி அக்கா நிலா என்பது துய்மையானது உங்களை போல அதுதான் இந்த பெயர் வத்தன்.. என் என்றால் அந்த அக்காவும் துய்மையானவங்கள்தான்..அந்த அக்காவின் பெயர் கூட இதுல சமந்த பட்டுதான் வரும் அதனாலும்தான் வத்தன்.. நன்றி அக்கா நான் தப்பா எதுகும் சொன்னால் மன்னிக்கவும் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்யுறது..இதுக்கு தமிழீழ காவல் துறையிட்ட விட்ட 'வயரிங்' வேலை செய்து இப்படியான வழக்கெல்லாம் நல்ல வடிவா தீர்ப்பு சொல்லு அனுப்புவாங்கள்..என்ன செய்யிறது எல்லாம் காலம்

Link to comment
Share on other sites

என்ன செய்யுறது..இதுக்கு தமிழீழ காவல் துறையிட்ட விட்ட 'வயரிங்' வேலை செய்து இப்படியான வழக்கெல்லாம் நல்ல வடிவா தீர்ப்பு சொல்லு அனுப்புவாங்கள்..என்ன செய்யிறது எல்லாம் காலம்

உண்மைதான் லேயர் எல்லாம் காலம்தான். என்ன செய்வது இது கரி காலம்.. நன்றி உங்கள் கருத்துக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி உங்கள் கதையை மூன்று முறை படித்தேன் அப்போதுதான் விளங்கியது எழுத்து பிழைகளை திருத்தி கொண்டால் இன்னும் நன்றாக இனிக்கும் [இருக்கும்]

காதலின் கபளிகரம் பல பேருக்கு பாடமாக அமைகிறது

Link to comment
Share on other sites

சுஜி உங்கள் கதையை மூன்று முறை படித்தேன் அப்போதுதான் விளங்கியது எழுத்து பிழைகளை திருத்தி கொண்டால் இன்னும் நன்றாக இனிக்கும் [இருக்கும்]

காதலின் கபளிகரம் பல பேருக்கு பாடமாக அமைகிறது

முனிவர் நன்றி உங்கள் கருத்துக்கு எனக்கு உண்மையில் எங்க எழுத்து பிழை என்று தெரியவில்லை நானும் திரும்ப திரும்ப படித்து எழுத்து பிழைய சரி பண்ணுறேன்.. நன்றி முனிவர்

Link to comment
Share on other sites

உண்மைக்கதையென்று சொல்கிறீர்கள்

சினிமாவில்தான் இப்படியெல்லாம் நடப்பதாக காட்டுவார்கள்

நிஜவாழ்க்கையிலும் இப்படியான பேர்வழிகள்

இருக்கின்றார்களா? இப்படியாக பேர்வழிகளுக்கு

தகுந்த தண்டனை வாங்கிக்குடுக்கவேண்டும்

உண்மைதான் லேயர் எல்லாம் காலம்தான். என்ன செய்வது இது கரி காலம்.. நன்றி உங்கள் கருத்துக்கு

சுஜிம்மா இது என்ன காலம்

Link to comment
Share on other sites

உண்மைக்கதையென்று சொல்கிறீர்கள்

சினிமாவில்தான் இப்படியெல்லாம் நடப்பதாக காட்டுவார்கள்

நிஜவாழ்க்கையிலும் இப்படியான பேர்வழிகள்

இருக்கின்றார்களா? இப்படியாக பேர்வழிகளுக்கு

தகுந்த தண்டனை வாங்கிக்குடுக்கவேண்டும்

சுஜிம்மா இது என்ன காலம்

இருக்குறார்கள் சிவா ஆனால் சிலர் வெளியில் சொல்லுவது இல்லை.. நானும் சினிமாவில்தான் பார்த்தன் சிவா ஆனால் இப்பதான் நேரில் பார்த்தன்.. கல்யாணம் பண்ணுவதுக்கு பயமாய் உள்ளது.. இது என்ன காலம் என்று தெரிய வில்லை.. ஏன் இப்படி மக்கள் என்று புரிய வில்லை.. நாம் ஒரே இனம்தானே இதில் என்ன பழி வாங்குதல்.. நாம் இங்கு ஒற்றுமையா இருக்கா வேணாமா? அங்க இருக்குற உறவுகளைதான் பிரிந்து இருக்குறம் என்றால் இங்குமா இப்படி? என்னமோ ஒன்றும் புரிய வில்லை..

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்தும் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது ஒருவேளை ஒரே நபர்களாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தாலும் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்துவிட்டது... இவ்வாறு இருப்பதைக்காட்டிலும் நாக்கை இழுத்து சாகலாம்

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்தும் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது ஒருவேளை ஒரே நபர்களாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தாலும் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்துவிட்டது... இவ்வாறு இருப்பதைக்காட்டிலும் நாக்கை இழுத்து சாகலாம்

நன்றி நிலவன் உங்கள் கருத்துக்கு.. இவருக்கு நான் அறிந்த வரையில் கல்யாணம் இன்னும் ஆக வில்லை.. ஒரு வேளை நீங்கள் சொன்னது போல் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம்.. நாக்கு இழுத்து வைத்து எல்லாம் சாக மாட்டார்கள்..உயிரோட நல்லாதன் இருக்குறார்கள் என்ன பண்ண..இதுதான் உலகம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையில் நடந்த கதைதானா?

நம்பவே முடியவில்லை!!!!!!!

அதுசரி

இன்று என்னதான் நம்பும்படியாக நடக்கிறது?????????

Link to comment
Share on other sites

இது உண்மையில் நடந்த கதைதானா?

நம்பவே முடியவில்லை!!!!!!!

அதுசரி

இன்று என்னதான் நம்பும்படியாக நடக்கிறது?????????

தியா நான் ஏன் பொய் சொல்லுறன் உங்களுக்கு சந்தேகம் என்றால் நான் தனி மடலில் எழுதுறன் இது யாருக்கு நடந்தது என்று.. அப்ப புரியும்.. ஆமாம் எனக்கு அதிர்ச்சியாதான் முதலில் இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூல்ல்ல்.... சுப்ஸ்.... கூல்ல்ல்.....

ஒருபக்க வாக்குமூலத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதிகமாய் உணர்ச்சிவசப் படக்கூடாது. நாம் பார்வையாளர்கள் என்பதையும் மறக்கக் கூடாது

சரி சுவி நான் கூலாயிட்டன் அதுசரி சுவி எங்களுக்கு பிரீத்தி டிக்கற் போட்டு தந்தா என்றால் என்னவென்று போய் பார்க்கலாம் என்ன சொல்லுறிங்கள் சுவி :( (முதல் ஜம்முவோட இந்த வேலை தானே இங்க பார்த்திட்டு இருந்தனாங்கள் இப்பத்தான் ஆளை காணல :wub: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிஅக்கா எனது பெயரைபார்த்துவிட்டு பதில் சொல்லவும். நீங்கள் அவர்களை பற்றியா எழுதியுள்ளீர்கள்?

Link to comment
Share on other sites

சரி நடந்தது நடந்துபோச்சு. கவலைப்பட்டு அழுது ஒன்றும் ஆகப்போறதில்லை. விழுந்தா எழுந்திருக்கவேண்டும். புதுத்பலத்துடன் எழுந்திருக்கவேண்டும். விவாகரத்து பத்திரமும் தந்திருக்கிறார். சந்தோசமா வாங்கி பயன்படுத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரெடி சுப்ஸ்! கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று திரிந்து கையையும் கடிக்கத் துவங்கீட்டுது. அவ ரிக்கட் எடுத்துத் தந்தால் நீங்கள் ஆச்சிரமத்திலிருந்து தேங்காய்ச் சொட்டு கொண்டு வாங்கோ, நான் பரிஸில வாங்கின புழுக்கொடியல் கிடக்கு கொண்டுவாறன் கொறிச்சுக் கொண்டுபோய் இரண்டுபேருமாய் குட்டையைக் குழப்பிப்போட்டு வருவம். (பிரச்சிணையை சீக்கிரம் முடிக்கக் கூடாது இரண்டு மூன்று ட்ரிப்பாவது அடிக்கவேனும்!!!

சுஜி! சும்மா, சும்மா மன்னிப்பெல்லாம் கேட்கக் கூடாது. எனது அகராதியிலேயே இல்லாத வார்த்தை 'மன்னிப்பு". அடுத்த அகராதி வாங்கும்போது கவணமாய் பார்த்து வாங்க வேணும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சுவி நான் கூலாயிட்டன் அதுசரி சுவி எங்களுக்கு பிரீத்தி டிக்கற் போட்டு தந்தா என்றால் என்னவென்று போய் பார்க்கலாம் என்ன சொல்லுறிங்கள் சுவி :D (முதல் ஜம்முவோட இந்த வேலை தானே இங்க பார்த்திட்டு இருந்தனாங்கள் இப்பத்தான் ஆளை காணல :lol: )

சுப்பு தாத்தா எனக்கும் சேர்த்து பயணசீட்டு போடுங்கோ நான் வந்தால் அந்த மாப்புக்கு கடிதான்[சங்கு இருக்காது] :D:lol:

Link to comment
Share on other sites

சரி சுவி நான் கூலாயிட்டன் அதுசரி சுவி எங்களுக்கு பிரீத்தி டிக்கற் போட்டு தந்தா என்றால் என்னவென்று போய் பார்க்கலாம் என்ன சொல்லுறிங்கள் சுவி :D (முதல் ஜம்முவோட இந்த வேலை தானே இங்க பார்த்திட்டு இருந்தனாங்கள் இப்பத்தான் ஆளை காணல :lol: )

ஜோவ் சுப்பண்ணை நானே படிச்சுட்டு இருக்குற பிள்ளை.. என்னயா இது இடையில் திக்கெட் எல்லாம் போட சொன்னால் நான் ரோட்டில் பிச்சைதான் எடுக்க வேணும்.. இதுக்கு நீங்கள் எல்லாம் ஒகே என்றால் வாங்க பிச்சை எடுத்து விட்டு அவர்களை பாக்கலாம்

சுஜிஅக்கா எனது பெயரைபார்த்துவிட்டு பதில் சொல்லவும். நீங்கள் அவர்களை பற்றியா எழுதியுள்ளீர்கள்?

அவர்கள் என்றால் யாருங்க? மருதங்கேணி... என்னுடன் படித்தவரை பற்றி நான் எழுதினன்.. அப்ப உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு இப்படி நடந்து இருக்கா?

சரி நடந்தது நடந்துபோச்சு. கவலைப்பட்டு அழுது ஒன்றும் ஆகப்போறதில்லை. விழுந்தா எழுந்திருக்கவேண்டும். புதுத்பலத்துடன் எழுந்திருக்கவேண்டும். விவாகரத்து பத்திரமும் தந்திருக்கிறார். சந்தோசமா வாங்கி பயன்படுத்துங்கோ.

நன்றி உங்கள் கருத்துக்கு ஆதிபன் சொல்லி பாக்குறன் உங்கள் கருத்தை அவர்களுக்கு

நான் ரெடி சுப்ஸ்! கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று திரிந்து கையையும் கடிக்கத் துவங்கீட்டுது. அவ ரிக்கட் எடுத்துத் தந்தால் நீங்கள் ஆச்சிரமத்திலிருந்து தேங்காய்ச் சொட்டு கொண்டு வாங்கோ, நான் பரிஸில வாங்கின புழுக்கொடியல் கிடக்கு கொண்டுவாறன் கொறிச்சுக் கொண்டுபோய் இரண்டுபேருமாய் குட்டையைக் குழப்பிப்போட்டு வருவம். (பிரச்சிணையை சீக்கிரம் முடிக்கக் கூடாது இரண்டு மூன்று ட்ரிப்பாவது அடிக்கவேனும்!!!

சுஜி! சும்மா, சும்மா மன்னிப்பெல்லாம் கேட்கக் கூடாது. எனது அகராதியிலேயே இல்லாத வார்த்தை 'மன்னிப்பு". அடுத்த அகராதி வாங்கும்போது கவணமாய் பார்த்து வாங்க வேணும்!!!

ஜோவ் சுவை யார் ரிக்கட் வாங்கி குடுக்குறது... எனக்கு நீங்கள் சாப்பிடுறதுல கொஞ்சம் கொண்டு வாங்க.. என்ன புதுசான சாப்பாட இருக்கு.. குட்டை குழப்புறது என்றே முடிவு பண்ணி விட்டிங்களா?ஒகே மன்னிப்பு கேட்க வில்லைங்கோ

சுப்பு தாத்தா எனக்கும் சேர்த்து பயணசீட்டு போடுங்கோ நான் வந்தால் அந்த மாப்புக்கு கடிதான்[சங்கு இருக்காது] :D:lol:

எல்லாரும் முதல் என்னுடன் பிச்சை எடுக்க வாங்க அப்புறம் நம் அவர்களை கடிக்குறவங்க கடிக்கலாம் சப்பிடுறவங்க சாப்பிடலாம்.. குட்டை குழப்புறவங்க குழப்பலாம்.. எதோ நல்லது நடந்தால் சரிதான்.. முனிவர் கதை திருத்த பட்டு உள்ளது பாருங்கள்.. சியா திருத்தி குடுத்து உள்ளார்..

Link to comment
Share on other sites

சீ இப்படியும் மனிதர்களா

நினைக்கவே அருவருப்பாக உள்ளது

இருக்குறார்கள் சிவா ஆனால் சிலர் வெளியில் சொல்லுவது இல்லை.. நானும் சினிமாவில்தான் பார்த்தன் சிவா ஆனால் இப்பதான் நேரில் பார்த்தன்.. கல்யாணம் பண்ணுவதுக்கு பயமாய் உள்ளது.. இது என்ன காலம் என்று தெரிய வில்லை.. ஏன் இப்படி மக்கள் என்று புரிய வில்லை.. நாம் ஒரே இனம்தானே இதில் என்ன பழி வாங்குதல்.. நாம் இங்கு ஒற்றுமையா இருக்கா வேணாமா? அங்க இருக்குற உறவுகளைதான் பிரிந்து இருக்குறம் என்றால் இங்குமா இப்படி? என்னமோ ஒன்றும் புரிய வில்லை..

சுஜி

அதற்காக நீங்கள் திருமணம் செய்ய பயப்பிடாதீர்கள்

எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை .

எத்தனையோ நல்ல மனிதர்கள் இன்னும்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

கண்டதும் காதல் கொள்ளாமல்

நல்ல மனதை கண்டதும் காதல் கொண்டால்

வாழ்வு வழமாக அமையும் .

வழமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ....................

Link to comment
Share on other sites

சீ இப்படியும் மனிதர்களா

நினைக்கவே அருவருப்பாக உள்ளது

சுஜி

அதற்காக நீங்கள் திருமணம் செய்ய பயப்பிடாதீர்கள்

எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை .

எத்தனையோ நல்ல மனிதர்கள் இன்னும்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

கண்டதும் காதல் கொள்ளாமல்

நல்ல மனதை கண்டதும் காதல் கொண்டால்

வாழ்வு வழமாக அமையும் .

வழமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ....................

நிகே நன்றி உங்கள் கருத்துக்கு உண்மையில் அருவருப்பாகதான் உள்ளது என்ன பண்ண இதுதான் உலகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ இப்படியும் மனிதர்களா

நினைக்கவே அருவருப்பாக உள்ளது

சுஜி

அதற்காக நீங்கள் திருமணம் செய்ய பயப்பிடாதீர்கள்

எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை .

எத்தனையோ நல்ல மனிதர்கள் இன்னும்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

கண்டதும் காதல் கொள்ளாமல்

நல்ல மனதை கண்டதும் காதல் கொண்டால்

வாழ்வு வழமாக அமையும் .

வழமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ....................

எரிகின்ற வீட்டில் புடுங்கியது லாபம்???

அவர்கள் என்றால் யாருங்க? மருதங்கேணி... என்னுடன் படித்தவரை பற்றி நான் எழுதினன்.. அப்ப உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு இப்படி நடந்து இருக்கா?

என்ன சுஜிஅக்கா எனது பெயரை பார்த்துவிட்டு பதில் சொல்ல சொன்னே. நீங்கள் வெறுமனயே இப்படி கேட்டால் எப்படி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.