Jump to content

இப்படியும் ஒரு குடும்பமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானென்ன பெரிதாய்க் கேட்கப்போறன். 3 டிக்கட்தான்!!!

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

தங்கச்சி சுஜி,

நீங்கள் சொன்னமாதிரியும் இருக்கலாம். ஆனால்.. எனது கருத்து இன்னொரு பக்க கதையை கேட்காமல் நீங்களும் கனக்க கதைக்கக்கூடாது. உங்களுக்கு அறிஞ்சவர், சொந்தக்காரர் எண்டபடியால உங்களுக்கு அவர்பக்கம் கூட ஒருபக்கச் சார்பாக இருக்கலாம். ஆனால்.. மற்றப்பக்க என்ன எண்டு உங்களுக்கு சரியாக தெரியாமல் இருக்கலாம். நிலா அக்கா உங்களுக்கு சொன்ன தனது பக்க நியாயங்களை மட்டும் கேட்டுப்போட்டு நீங்கள் போட்டுத்தாக்க கூடாது.

எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. யாராக இருந்தாலும்.. என்ன பிரச்சனை இருந்து இருந்தாலும்... இருவரும் பிறக்கப்போகின்ற குழந்தையுக்காக ஒன்று சேர்ந்து நிம்மதியாக வாழவேணும். இல்லாவிட்டால் கடைசியில பாதிக்கப்படப்போவது அந்த ஒன்றும் அறியாத அப்பாவிக் குழந்தைதான்.

கலையன் எனக்கு இருவரையும் நல்லாவே தெரியும்.. இருவரும் எனக்கு நண்பர்களே.. ஒருவரை மட்டும் குறை சொல்ல மாட்டன்.. இருவரையும் தெரிந்த படியால்தான் ஒருவர் பக்கம் நியாயம் இருக்கு என்று அறிந்தேன்.. இதில் சொல்ல போனால் பொண்ணை விட பெடியன் எனக்கு நன்கு தெரிந்தவர் ஆவர்.. தெரியாமல் ஒரு பக்கம் மட்டும் தப்பாய் நான் ஒரு பொழுதும் என் கதையில் எழுத மாட்டன்.. நன்றி அண்ணா..

இன்னும் ஒரு விடயம் எனக்கு பெண் சொந்தம் இல்லை..

நானென்ன பெரிதாய்க் கேட்கப்போறன். 3 டிக்கட்தான்!!!

இதுதானே பிரச்சனை.. அம்மா தாயே யாழ் வரும் எனது அன்பு உறவுகளே எனக்கு பிச்சை போடுங்கள் நான் இந்த சுவிக்கு ரிக்கட் எடுத்து கூட்டி இட்டு வர.. :blink:

Link to comment
Share on other sites

தங்கச்சி சுஜி,

பெண்ணை விட ஆண் உங்களுக்கு நல்ல நண்பர் எண்டால் அவருடன் நீங்கள் கதைச்சுப் பார்த்து இருக்கலாமே? அவருடன் கதைச்சு அவரின் பிரச்சனைகள் என்ன எண்டு அறிஞ்சு இருக்கலாமே? அப்பிடி எண்டால் அவர் சொன்னதுகளை ஏன் நீங்கள் கதையில சொல்ல இல்லை? இல்லாட்டிக்கு அவரோட கதைக்க இல்லையா?

நண்பன் எண்டுறவன் யார்? ஆபத்துக்காலங்களில இன்னொருவனுக்கு உதவுறவன், பிழையான வழியில செல்லும்போது தவறுகளை சுட்டிக்காட்டி சரியான பாதையில போறதுக்கு உதவுறவன் இவர்கள் தானே நண்பர்கள்? அப்பிடி எண்டால் நீங்கள் ஏன் உங்கள் நண்பனுக்கு ஓர் நல்லதொரு நண்பியாக இருக்கவில்லை அல்லது இருக்கக்கூடாது? சும்மா கண்டவரையும் நண்பன், நண்பி எண்டு சொல்லலாமா தங்கச்சி?

சரி, என்னமோ... என்ன பிரச்சனையோ.. இனியும் காலம் போக இல்லை. உங்கள் நண்பர்கள் மீண்டும் சேர்ந்து வாழ ஆக்கபூர்வமாய் ஏதாவது செய்யுங்கோ. ஆரோக்கியமான உரையாடல்களை முதலில அவர்களோட செய்து பாருங்கோ.

Link to comment
Share on other sites

கலையன் நீங்கள் சொன்னது சரிதான் பேசினால் கேட்க வேணும் நீ யார் என்று கேட்டால் என்ன பண்ண... சொல்லி பிரஜோசனம் இல்லை..அவர் எனக்கு நெருங்கிய நண்பன் இல்லை.. ஆனாலும் தெரியும்.. நான் பேசி பார்த்தன்..சின்ன பிள்ளைகள் வாய முடிட்டு இருக்கணுமாம்.. நான் என்ன பண்ண.. அவர் ஒரு முட்டாள்..இவர்கள் வாழ்க்கை எப்படி போகுது என்று தொடர்ந்து எழுதுவன் பாருங்கள்.. நான் அவர்களிடம் சொன்னன்.. என்னால் முடிந்த வரை அவர்களின் லீலைகள் தெரிய படுத்துவன் என்று.. என்னால் இது மட்டும்தான் முடியும்.. அது ஒரு படித்த முட்டாள்.. கேட்கும் நிலையில் இல்லை கலையன் அண்ணா அவர்களே.. நன்றி

Link to comment
Share on other sites

தங்கச்சி சுஜி,

இதில லீலை என்ன இருக்கிது? வெளிநாட்டில எம்மவர் வாழ்க்கையில இதுகள் எல்லாம் சகஜமாய் போயிட்டிது. இதுக்கு அவர்களை சொல்லி குற்றம் இல்லை. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்ததால நம்மவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவேண்டி இருக்கிது. பல்வேறு உளவியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கிது. எதையும் மேலோட்டமாக பார்த்து விமர்சனம் சொல்ல ஏலாது.

முக்கியமாக, பல குடும்பங்கள்: கணவன் மனைவி, காதலன் காதலி எண்டு உறவுகளில பிரிவுகள் வாறதுக்கு மூன்றாம் மனிதர்கள்தான் காரணம். வீட்டுக்கு வீடு வாசல்படி. அதாவது பிரச்சனைகள் எப்பவும் வந்துகொண்டுதான் இருக்கும். அவை நிரந்தரமானவை. ஆனால்... வெளி ஆக்கள் குடும்பத்துக்க போகேக்கதான் அது ஊதிப்பெருத்து இன்னும் அகோரமாகிது.

அதுக்காக உங்களை நான் குறை சொல்லுறதாய் நினைக்ககூடாது. நல்லது நடக்கும் என்று நினையுங்கள். அப்படி நினைச்சு செயற்படுங்கள். ஏன் எதிர்மறையாக நினைச்சு நாங்களே பிடிகொடுக்க வேணும்?

Link to comment
Share on other sites

[ஐயோ அண்ணா நான் ஊதி பெருது படுத்த வில்லை நானும் சரி பண்ணதான் நினைத்தன்.. ஆனால் முடியலை.. காதலில் உடனையும் போயு விழ கூடாது அதுதான் நான் எழுதினன்.. நான் உங்களுக்கு தனி மடலில் இதின் உண்மை விபரம் சொல்லுறன் .இதில் பிரச்சனை இருவரின் குடும்பம்தான் வேற யாரும் இல்லை..

Link to comment
Share on other sites

ஐயோ தங்கச்சி சுஜி,

நான் உங்களை பிழை சொல்வதாக நினைக்ககூடாது. எனக்கே ஆயிரம் பிரச்சனைகள். மற்றவர் பிரச்சனையை தனிமடலில அறிஞ்சு என்ன செய்யுறது?

நான் அறிஞ்ச ஒருத்தர் இப்ப சுமார் பத்து பதினைஞ்சு வருசங்களாக தனது மனைவியை விவாகரத்து செய்யப்போறன் எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால்.. இன்னும்தான் ஆரம்ப முயற்சியைக்கூட செய்ய இல்லை. அவருக்கு அவவில அன்பு அதிகம். இதனால... சின்னப்பிரச்சனையைக் கூட சரியாக எதிர்கொள்ளமாட்டார், தாங்கிகொள்ளமாட்டார்.. இப்படி ஒரு வகை இருக்கிது.

நான் அறிஞ்ச இன்னொருத்தர் குடும்பத்தில என்ன நடந்திச்சிது எண்டால்... சொந்தக்காரர் கணவன் மனைவியை பிரித்து விட்டார்கள். கணவன் பிள்ளைகளைக் கூட பார்க்க வழியில்லை. அவர் அவர்கள் வீட்டுக்கு சுமார் 300மீற்றர் அருகாகக்கூட போக முடியாது. போனால் காவல்துறை அவரை உள்ளே போட்டுவிடும். இப்படி சட்டரீதியாககூட அவர் வருத்தப்பட்டார். ஆனால்.. அண்மையில அவர் இறந்துவிட்டார். மனைவியும், பிள்ளைகளும் பல வருடங்களுக்கு பிறகு அவரது உயிரற்ற உடலிற்கு அஞ்சலி மட்டும்தான் செலுத்த முடிஞ்சிது... இப்படி ஒரு வகை இருக்கிது.

இந்தவகையில... நல்லது நடக்கும், நடக்கவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு எமது கடமையைச் செய்வோம். இதைத்தான் நான் சொன்னன். ஏன் நாங்களே எதிர்மறையாக தீர்ப்பை தீர்மானிக்கவேண்டும். கணவன் மனைவி பிரிய, தகராறுகள் ஏற்பட அவர்கள் பெற்றோர், சகோதரங்கள், உறவினர்கள், நண்பர்கள், மூன்றாம் நபர்கள்தான் காரணமாய் இருக்கிறீனம். பெரும்பாலான இடங்களில பிரச்சனைகள் இப்படித்தான் உருவாகிது.

ஆனால்.. ஆரோக்கியமான உரையாடல்கள் கணவன் மனைவி / காதலன் காதலியிடையே நிகழும் போது... நிலமைகள் மாற்றம் பெற்று நல்ல விசயங்கள் நடைபெற சந்தர்ப்பம் ஏற்படுகிது. இதனால... எப்பவும் சுமுகமாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்பை பிரச்சனைக்குரியவர்களிடம் கொடுத்துவிட்டு மற்றவர்கள் கொஞ்சம் விலத்தி நிற்பதுதான் நல்லது.

நன்றி!

Link to comment
Share on other sites

[ ஐயோ கலையன் நான் எந்த பிரச்சனையும் இதில் பண்ண வில்லை.. நான் உங்கள் குறை நினைக்க வில்லை.. ஒகே எனக்கு ஏன் வேண்டாத பிரச்சனை நல்லதே நடக்கும் என்றும் நம்புவோமே.. நன்றி உங்கள் கருத்துக்கு.. இதில் இன்னும் ஒரு விஷயம் நான் அறிந்தேன் அவருக்கு வேறு பொண்ணு பார்த்தாசு என்று.. ஆனாலும் நல்லது நடந்தால் நல்லம்தான்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.