Jump to content

குறுக்கு வழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தேவகுரு அவர்கட்கு

நான் முயற்சிசெய்து பார்க்கிறேன்

கணேஸ்

Link to comment
Share on other sites

  • Replies 358
  • Created
  • Last Reply

குறுக்குவழிகள்-12

வின்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள "மை பிக்சர்ஸ்" என்னும் கோப்பு தனித்துவமானதும், பிரயோசனம் பற்றி அதிகம் அறியப்படாததுமாகும். இது டிஜிட்டல் கமெறா பாவனையாளர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இதில் படங்கள் ஸ்டாம் சைஸில் சேமிக்கப்படுகிறது, ஆனால் படங்களை பலவித அளவுகளில் பார்வையிடலாம், முழுத்திரையளவிலும் பெரிதாக்கி பார்க்கலாம். Actual size, Best fit size, என்னும் அளவுகளும் உண்டு. வேண்டியளவில் zoom பண்ணியும் பார்வையிடலாம்.

இந்த "MY Pictures" கோப்பை போல் இன்னொரு கோப்பை பிரதிபண்ணி பக்கத்தில் போடலாம். (Right click, copy & paste) அப்போது "copy of My Pictures" என வரும். மற்றவேளைகளில் உருவாக்குவதுபோல் புதிய கோப்பை இதே வசதிகளுடன் உருவாக்கமுடியாது. இப்படி பிரதிபண்ணி ஒவ்வொன்றிலும் வகை வகையாக படங்களை சேமிக்கலாம்

Link to comment
Share on other sites

ஏன் copy பண்ண வேண்டும் புதிய கோப்பு ஒன்றை உருவாக்கி அதிலும் படத்தை போடலாம் தானே

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு சந்தேகம் தேவகுரு அண்ணா. இரண்டு வெப்பதளங்களை பார்கிறோம். ஒன்றை மினிமைஸ் செய்து உள்ளோம். ஆல்ட் டப் பயன்படுத்தி ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தாவிச்செல்லமுடிகிறது. சிலவேளை அது முழுவதுமாக தெரிவதில்லை. மினிமைஸ் ஆகியோ சிறிய அளவிலோ தெரிகிறது. இதை மினிமைஸ், மக்சிமைஸ் பண்ண shortcut keys என்ன?

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்- 13

இன்ரனெட் எக்ஸ்புளோரரில் நாம் பாவிக்கக்கூடிய short cuts

அழுத்தவும்.................. விளைவு

ctrl+d .................... favorites லிஸ்ற்ல் பதியப்படும்

ctrl+b,,,,,,,,,.............. organise டயலக் பொக்ஸ் திறக்கப்படும்

ctrl+f .................. சொற்கள் தேடி கண்டுபிடிக்கப்படும்

winkey+m ............... திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மினிமைஸ் ஆகும்

winkey+shift+m ........ திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மக்ஸிமைஸ் ஆகும்

alt+tab ................... திறந்திருக்கும் ஜன்னல்களில் மாறிக்கொள்ள

எனக்கும் சிலவேளைகளில் ஜன்னல்கள் பாதியளவில் திறப்பதுண்டு. இடைக்கிடையென்பதால் அலட்டிக்கொள்வதில்லை. ஜன்னல்களை பெருப்பிப்பதற்கு உள்ள ஒரே வழி (short cut) வலபக்க மேல் மூலையில் உள்ள தர அடையாளத்தை கிளிக் செய்வதாகும். வின்கீ+சிவ்ற்+எம் களை ஒருசேர அழுத்தியும் பெருப்பிக்கலாம்.இது சுருக்கு வழியல்ல.

நித்தம் ஒரு ஜன்னல் பாதியளவே திறக்கிறதென்றால் டெஸ்க்ரொப்பில் ஈ என்ற் ஐகொன் ஐ டபுள் கிளிக் செய்து, புறொப்பட்டீஸை கிளிக் செய்து, அங்கே open in large window ( This depend on the o/s you are using) என்று அல்லது அதன் அர்த்தத்தில் உள்ள ஏதாவது ஒன்றை கிளிக் செய்ய்து, ஒகே பண்ணவும்.

இதற்கும் முடியாவிடின் திறந்திருக்கும் பாதி ஜன்னலின் மேல் இடது பின் கீழ் வலது மூலைகளை ஒவ்வொன்றாக பிடித்து இழுத்து ஜன்னலை பெருப்பிக்கவும். பின் ஜன்னலை வழமைபோல் மூடி அடுத்த முறை திறக்கும்போது சரியாகிவிடும்.

Also, Please see Page No, 3

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-14

டெஸ்க்ரொப் ஐ சுத்தம் செய்யுங்கள்

உங்கள் டெஸ்க்ரொப் அதிக ஐகொன்களாலும் மற்றும் ஈ-புத்தகங்களாலும் நிறைந்து காணப்பட்டு, அவலட்சணமாக காணப்படுகிறதென்றால், அதை இப்படி சுத்தம் செய்யலாம், டெஸ்க்ரொப்பில் வலது கிளிக் செய்து -> நியு ->வ்போல்டர், அதற்கு வேண்டிய பெயர் கொடுக்கவும். இப்போது இந்த புதிய வ்போல்டர் ஐகொன்கள் மத்தியில் காணப்படும், அடுத்து, குறைந்த பாவனையில் உள்ள ஐகொன்கள் முழுவதையும் இழுத்து வந்து இந்த வ்போல்டரின் மேல் போடுங்கள். தற்போது டெஸ்க்ரொபில் ஐகொன்கள் குறைந்து சுத்தமாக காட்சியளிக்கிறதல்லவா?

தேவை ஏற்பட்டால், இந்த வ்போல்டரை டபுள் கிளிக் செய்தால் அது திறந்து நீங்கள் இழுத்து போட்ட ஐகொன்களை காட்டும்.பின் வழமைபோல் அந்த ஐகொனை கிளிக் செய்து அதனுடன் தொடர்புடைய புறோகிறாமை இயக்கலாம்.

நீங்கள் அதிகமாக பாவிக்கும் ஒரு புறோகிறாம் உள்ளதெனில் அதன் ஐகொனை டெஸ்க்ரொப்பிலிருந்தோ அல்லது ஸ்ராட் மெனுவின் பட்டியலில் இருந்தோ இழுத்து வந்து ஸ்ராட் பட்டன் அருகிலிருக்கும் க்விக் லோஞ் பாரில் போட்டும் பாவிக்கலாம். இது ஸ்ரேரஸ் பாரில் இருப்பதால் ஜன்னல்கள் திறந்திருக்கும் போதும் தெளிவாக தெரியும்.

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள் எல்லாம் வாசிக்க நன்றாக இருக்கின்றது.

வாழ்த்துக்கள்......

ஆனால் எனது கணனி டொச். நீங்கள் கூறுவது ஆங்கிலத்தில்.

இங்கு டொச் பாதி, இலங்கையில் ஆங்கிலம் பாதி என கலந்து செய்த கலவையாகி விட்டதே ?

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-15

யுனிகோட் வெப்தளங்களின் பக்கங்களை எம்.எஸ். வேட்டில் கொப்பிபண்ணமுடியாது தவிக்கிறீர்களா? இதோ வழி!

யுனிகோட் பந்தியை கொப்பி பண்ணி, Tscii Format க்கு மாற்றி பின் வேட்டில் கொப்பி பண்ணும்முறைதான் இது.

விரிவாக உதாரணத்துடன் கூறின்,

1) எம்.எஸ். வேட்டை இயக்குங்கள்; View-->Tool Bar-->Clipboard and minimize; இப்போது நீங்கள் 12 முறை அடுத்தடுத்து கொப்பிபண்ணலாம், கிளிப்போட்டில் எல்லாம் பதிவாகும்

2) போங்கள்--> யாழ்.கொம்-->கருத்துக்களம்-->கணனி (கொம்பியூட்டர்)-->குறுக்குவழிகள், ஒவ்வொன்றாக 4 குறுக்குவழிகளை தேர்வு செய்து கொப்பி பண்ணுங்கள். (ஒன்றை மாத்திரம் கொப்பி பண்ணுவதானால் அடுத்தபந்தியை தவிர்த்து 4ம் பந்திக்கு போகவும்)

3)எம்.எஸ்.வேட்டுக்கு மீண்டு, கிளிப்போட்டில் உள்ள Paste All என்ற பட்டனை கிளிக் பண்ணவும்; இப்போது 4 பந்தியும் பிரதி பண்ணப்பட்டுவிடும்; அதை எடிட் செய்யவும்; கிளிப்போட்டில் உள்ள Delete பட்டனை கிளிக் பண்ணி கிளிப்போட்டை துப்பரவுசெய்துவிட்டு, பிரதி பண்ணப்பட்ட 4 பந்திகளையும் ஒன்றாக தேர்வு செய்து மீண்டும் கொப்பிபண்ணவும்.

4) போங்கள்--> http://www.suratha.com/uni2tsc.htm தளபக்கத்திற்கு, அங்கே 2 பெட்டிகள் காணப்படும். அதன் மேல் பெட்டியில் Paste பண்ணி அதனுள் ஒரு முறை கிளிக் பண்ணவும். நீங்கள் பேஸ்ற் பண்ணியவை கீழே Tscii க்கு உருவிற்கு மாற்றப்பட்டு காணப்படும்; இரண்டுபெட்டிகளின் அடியில் காணப்படும் கொப்பி பட்டனை கிளிக் பண்ணவும்.

5) வேட்டுக்கு மீண்டு, ஒரு புதிய பக்கத்தை திறந்து அதில் புதிய Tscii Format ஐ பேஸ்ற் பண்ணவும்; இப்போது எழுத்துக்களை வாசிக்கமுடியாமலிருக்கும்; Edit-->Select All; மேலே formatting Tool Bar ல் உள்ள Font Box ல் உள்ள முக்கோணத்தை கிளிக் பண்ணி TscArialஅல்லது Tscu_Inaimathi ஐ கிளிக் பண்ணவும்; வேண்டிய பெயர் கொடுத்து Save பண்ணவும். இந்த இரண்டுமே தங்களின் Font file லில் காணப்படாவிடின் Download பண்ணி பொருத்திவிடவேண்டியதுதான்

6) இது தவிர வேறு முறை ஏதாவது இருந்தால் தயவுசெய்து யாராவது Post செய்யவும்

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-16

Address Bar

நீங்கள் அடிக்கடி வெப் உலா செல்பவரா?

மூன்று வழிகளில் ஏதாவதொரு வெப்தளத்திற்கு செல்லலாம்.

1) Favorites List ல் உள்ள Link ஐ கிளிக் பண்ணலாம்.

2) அட்றஸ் பாரின் வலது பக்க முக்கோணத்தை கிளிக் பண்ணவரும் Dropdown Menu வில் ஒன்றை கிளிக் பண்ணலாம்.

3) அட்றஸ் பார் இல் விலாசத்தை தட்டலாம்

விலாசத்தை தட்டும்போது பொது சொற்களாகிய http://, www, com என்பவற்றை நமக்கு சிரமமின்றி, கம்பியூட்டரையே போடவைக்கலாம். உதாரணம் :- அட்றஸ் பாரில் yarl என தட்டிவிட்டு Ctrl+Enter ஐ அழுத்தினால், http://www.yarl.com என கம்பியூட்டர் தானாகவே போட்டுக்கொள்ளும்.

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-17

Favorites Menu

இந்த மெனுவை கிளிக்பண்ணினால் அது இரண்டு கட்டங்களாக விரிவடையும். முதற்கட்டம் விரிவடைந்தவுடன் அதன் அடியிற் காணப்படும் இரட்டை அம்புக்குறியை கிளிக்பண்ணியவுடன் அடுத்த கட்டம் விரிவடையும். கிளிக்பண்ணாவிடின் அது தானாகவே சில விநாடிகள் தாமதித்து விரிவடையும். வேகமாக வேலை செய்பவர்களுக்கு இது எரிச்சலை கொடுக்கலாம்

இதை தவிர்த்து இரண்டு கட்டங்களும் ஒரேயடியாக முழுமையாக திறக்கவேண்டுமெனில் இப்படி செய்யவும்.

உலாவியை இயக்கி, Tools, Internet Options, Advanced, இவைகளை கிளிக்பண்ணி, Enable Personalized Favorites Menu என்பதன் முன் உள்ள Tick ஐ எடுத்துவிடவேண்டும், பின் உலாவியை மூடி மீண்டும் திறந்து Favorites Menu வை கிளிக்பண்ண; அது ஒரே முறையில் திறக்கும்,

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-18

Opening Many Files at Once

வங்கி அல்லது காரியாலயங்களில் ஒரே நேரத்தில் பல வ்பைல்களை திறந்து வைத்துக்கொண்டு அவற்றில் மாறிமாறி கருமமாற்ற நேரிடலாம். அப்போது பல வ்பைல்களை ஒவ்வொன்றாக திறக்காமல் ஒரே அடியாக எத்தனை வ்பைல்களையும் திறக்க ஒரு வழியுள்ளது. Word, Excel போன்ற ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை இயக்கி, அதில் Open Dialog Box ஐ திறந்து அதில் காணப்படும் பல வ்பைல்களில் தேவையான ஒன்றை முதலில் Click பண்ணவும், பின் மற்றவைகளை Ctrl ஐ அழுத்திப்பிடித்துக்கொண்டு Select பண்ணவும். அந்த வ்பைல்கள் ஒன்றின் பின் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பின்பு Open பட்டனை கிளிக் பண்ணவும். செலெக் செய்யப்பட்ட வ்பைல்கள் ஒன்றன் பின் ஒன்றாக தானாகவே திற்ந்துகொள்ளும்.

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-19

Autoplay

தற்கால CD க்களை CD Rom டிறைவினுள் செலுத்தியவுடன் அது உடனேயே இயங்க ஆரம்பிக்கும். Autoplay எனும் அம்சம் இருப்பதால்தான் இது நடைபெறுகிறது. சிலவேளைகளில் இதை தவிர்க்க வேண்டிய தேவையும் ஏற்படுவது உண்டு. CD ஐ Browse பண்ணி அதன் உள்ளே என்ன இருக்கிறதென்று பார்க்க விரும்புபவர்களுக்கு அப்போதைக்கு இது தேவையில்லாத ஒன்று, இதை நீங்கள் தற்காலிகமாக தடுக்கலாம்.

CD ஐ டிறைவினுள் செலுத்தும்போது Shift கீயை சில விநாடிகள் அழுத்தி பிடியுஙகள்; அது இயங்குவது தடுக்கப்படும்.

Also, please see page no.4

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள் எல்லாம் வாசிக்க நன்றாக இருக்கின்றது.

வாழ்த்துக்கள்......

ஆனால் எனது கணனி டொச். நீங்கள் கூறுவது ஆங்கிலத்தில்.

இங்கு டொச் பாதி, இலங்கையில் ஆங்கிலம் பாதி என கலந்து செய்த கலவையாகி விட்டதே ?

ஷண்முகி உங்கள் கணணி மொழியை ஆங்கிலத்தில் மாற்றலாமே? :wink:

Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் மாற்றலாம் வசிசுதா,

ஆனால் பிள்ளைகள் டொச் மொழியைத்தான் விரும்புகிறார்கள்.

அதுதான் அவர்களுக்கு இலகுவாக இருக்கின்றது.

அதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணனியை இரண்டு மொழியிலும்

இயங்கவையுங்கள் ? இரண்டு கணனி வாங்கதேவையில்லை?

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-20

வின்டோஸ் ஓபறேட்டிங் சிஸ்டம் சிடி களில் ஒரு சிறிய கோப்பை தேடுவது எப்படி?

பல பத்து கணக்கான அழுத்தப்பட்ட (compressed) உதவி வ்பைல்களை கொண்ட 50 வரையான ,cab என்னும் எக்ஸ்டென்ஸன் கொண்ட (cabinet) கோப்புக்களை தாங்கிய பாரிய ஒபறேட்டிங் சிஸ்டம்களான வின்டோஸ், லினக்ஸ் போன்றவை விநியோக சீடி களில் பதியப்பட்டு வெளிவருகின்றன,

இவைகளில் மொத்தமாக ஆயிரக்கணக்கில் உள்ள அழுத்தப்பட்ட உதவி வ்பைல்களில் ஏதாவது ஒன்றை Search or Find வசதியை பயன்படுத்தி தேடிக்கண்டுபிடிப்பது இயலாத காரியம். ஒவ்வொரு ,cab கோப்பையும் அன்ஸிப் பண்ணி அதன் ஒவ்வொன்றினுமுள்ள பல பத்து கணக்கான வ்பைல்களுக்குள் ஒரு சிறிய வ்பையிலை தேடிப் பிடிப்பதற்கு பல மணித்தியாலங்கள் செலவழித்தாலும் இலேசில் வெற்றியடையமுடியாது. இதற்கு உள்ள வழி

www.zipscan.co.uk

என்ற வெப்தளத்திலிருந்து zipscan என்னும் ஒரு சிறிய புறோகிறாமை டவுண்லோட் செய்து அதை இயக்கி விபரங்களை கொடுத்து சில விநாடிகளில் தேடிக்கண்டுகொள்வதாகும். வின்டோஸ் 98 சீடியில் இருந்து msconfig.exe என்ற வ்பைலை இப்படித்தான் கண்டுபிடித்தேன். பின்பு அந்த வ்பைலை கொப்பி பண்ணி வின்டோஸ் 2000 த்தில் உள்ள system 32 என்ற வ்பைலில் பேஸ்ற் பண்ணி System Configuration Utility என்ற வசதியை பாவிக்கின்றேன். இதனுடாக boot பண்ணும்போது தானாகவே இயங்கத்தொடங்கும் சிறிய புறோகிறாம்களை disable பண்ணி, கம்பியூட்டரை விரைவுபடுத்தலாம்

இந்த புறோகிறாமை இறக்கி இன்ஸ்டோல் செய்தவுடன் டெஸ்க்ரொப்பில் ஒரு ஐகொன் தோன்றும். அதை டபுள் க்ளிக் செய்தவுடன் ஒரு பெட்டி தோன்றும். அதில் விபரங்களை கொடுத்து றன் ஐ க்ளிக் செய்தவுடன் விடை அந்த பெட்டியிலேயே தோன்றும்.

நீங்கள் தரும் உற்சாகம்தான் என்னை மேலும் என் பணியில் ஊக்குவிக்கின்றது. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லின்ட்டோவ்ஸ் கேள்விப்பட்டீர்களா? யாராவது தகவல் தந்தால் நல்லது

Link to comment
Share on other sites

ÌÚìÌÅÆ¢¸û-21

Mouse

¦ÁÇŠ ²Ø Å¢¾Á¡É §Å¨Ä¸¨Ç ¦ºö¸¢ýÈÐ. «¨Å¡ÅÉ point, click, double click, treble click, right click, drag and right drag. Intelli-Mouse É¡ø rotate wheel, click wheel, drag wheel ±ýÀÉÅü¨ÈÔõ Üξġ¸ ¦ºöÔõ. ´Õ À󾢨 §¾÷× ¦ºöÂÅ¢ÕõÀ¢ý «ôÀ󾢨 treble click ¦ºö¾¡ø «ôÀó¾¢ §¾÷Å¡Ìõ. wheel ³ rotate ¦ºö¢ý «Ð scroll box §À¡ýÚ §Å¨Ä ¦ºöÔõ

º¢Ä §Å¨Ç¸Ç¢ø ¦ÁÇŠ ´Øí¸¡¸ §Å¨Ä ¦ºö¡Ð; ÌÆôÀÊÀñÏõ. ¿£ñ¼ ¿¡ð¸Ç¡¸ Íò¾õ ¦ºöÂôÀ¼Å¢ø¨Ä ±ýÀÐ þ¾ý «÷ò¾õ. þ¨¾ ¿£í¸§Ç Íò¾õ ¦ºöÂÄ¡õ.

¸õÀ¢äð¼¨Ã off ÀñÏí¸û. Port Ä¢ÕóÐ ¦ÁÇŠ Å¨à ¸ÆüÚí¸û. ¦ÁǨ… ÒÃðÊ À¡÷ò¾¡ø ´Õ ŨÇÂÓõ «¾ý ¿ÎÅ¢ø ´Õ ÀóÐõ ¸¡½ôÀÎõ. ŨÇÂò¨¾ «¨Ã Åð¼õ, §À¡ò¾ø ãÊ ¸ÆüÚŨ¾ §À¡ø ¸ÆüÈ¢ «¨¾Ôõ Àó¨¾Ôõ ¦ÅÇ¢§Â ±Îì¸×õ. Àó¨¾ §º¡ô §À¡ðÎ ¦Åó¿£Ã¡ø ¸ØÅ×õ. ¯û§Ç À¡÷ò¾¡ø ÒøÄ¡íÌÆø §À¡ø Á¢¸ º¢È¢Â ŨÇÂõ þÃñÎõ, ÅñÊø º¢øÖ §À¡ø ´Õ ŨÇÂÓõ ¸¡½Ä¡õ. þó¾ º¢øָǢø áø ÍüȢɡø §À¡ø ÐõÒ àº¢ ÀÊóÐ ¸¡½ôÀÎõ. §ÀôÀ÷ ¸¢Ç¢ô ´ý¨È ¿¢Á¢÷ò¾¢ ¸¡ÂõÀ¼¡Áø ÍÈñÊ àº¢¸¨Ç «ôÒÈôÀÎò¾×õ. À¢ýÒ alcohol ¿¨Éò¾ ¦ÁøĢ н¢Â¡ø ŨÇÂí¸¨Ç Íò¾õ ¦ºöÂ×õ. ±øÄ¡õ ¸¡öó¾ À¢ý À¨ÆÂÀÊ Àó¨¾ ÌƢ¢Ûû ¨ÅòРŨÇÂò¨¾ ¦À¡Õò¾¢ «¨Ã Åð¼õ ÅÄôÀì¸õ ÍÆüÈ×õ. Ũà âðÊ ¸õÀ¢äð¼¨Ã ŠÃ¡ð Àñ½×õ. þÉ¢§Áø ¦ÁÇŠ ¾¡Á¨Ã¢¨Ä¢ø ¾ñ½£÷ ¯Õñ¼Á¡¾¢Ã¢ §Å¨Ä ¦ºöÔõ.

Link to comment
Share on other sites

நன்றி தேவகுரு அவர்களே.. நானும் இவ்வாறு சுத்தம் செய்வதுண்டு.. ஆனால் மெளஸ் வயரை கழட்டுவதில்லை.. அதனால் ஏதாவது பாதிப்பா? :shock:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி தேவகுரு.இப்போதெல்லாம் லேசர் mouse வாங்கலாம். சுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. புதிதாக வாங்குபவர்கள் இவ்வகையானவற்றை வாங்குவது நல்லது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.