Jump to content

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்


Recommended Posts

பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும்..

வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவிப்பு.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும்..

வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவிப்பு.

நன்றி: நிதர்சனம்

http://www.nitharsanam.com/?art=26840

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கல்மடு குளம் வாவி அனைக்கட்டு புலிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டதாக பாதுகாப்பு இனையத்தளத்தினை ஆதாரம் காட்டி சக்தி வானொலி செய்தி வெளியிள்ளது.இதனால் வெள்ளம் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கல்மடுக்குளம் உடைக்கப்பட்டு பரந்தன் முல்லைத்தீவு பாதையில் இராமநாதபுரத்துக்கும் தர்மபுரத்துக்கும் இடையில் வெள்ளம் பாயவிடப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் சிறிலங்காவில் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

bcsbb455naa0bm45nlz0hl55_20090124_07.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி உண்மையாக இருந்தால் எமது வீரர்கள் இழப்பின்றி

களமாடி வெற்றிபெற வேண்டுவோம்.

Link to comment
Share on other sites

இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை..உண்

மையானால் மகிழ்ச்சி. இருந்தாலும் நாம் நிதானமாக இருக்கவேண்டிய நேரம் இது.

களமாடும் வேங்கைகளுக்கும் உறுதுணையாகவுள்ள வன்னி உதிர உறவுகளுக்கும் எமது அன்பு கலந்த வாழ்த்துக்கள்.

* வதா *

Link to comment
Share on other sites

:Dகுளக்கட்டு உடைக்கப்ட்டது உண்மை. ஆனால் சரியான தகவல்கள் இதுவரை வரவில்லை. தமிழ்நெற் கூட இதுபற்றி இதுவரை ஒன்றும் தெரிவிக்கவில்லையே. எனவே சரியான தகவல்கள் வரும்வரை பொறுத்திருப்பதே நல்லது. :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா இது உண்மை வசி...

இப்படித் தொடர்ந்து பொதுமக்கள் காயமுற்றால் மருத்துவ சேவை வழங்கவே முடியாது போய்விடும். எம் மக்களைக் காப்பாற்ற அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது மீண்டும் பீரங்கித் தாக்குதல்: வன்னியில் இன்று 10 தமிழர்கள் படுகொலை; 26 சிறுவர்கள் உட்பட 114 பேர் படுகாயம்

இதில் 26 பேர் குழந்தைகள். நாங்கள் வெறுமனே வெற்றிச் செய்திகளுக்கு மட்டுமே நின்று ஆர்ப்பாரிப்பது எம் கடமையை நிறைவு செய்து விடுமா?? நிதர்சனம்காரரைகன் கண்டால் செருப்பால் அடிப்பேன். தேவையில்லாத வேலைகளைச் செய்வதற்கு...

எதிரி அழிய வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் அதைப் பற்றி ஆர்ப்பாரிப்பது எம் கடமையல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா இது உண்மை வசி...

இப்படித் தொடர்ந்து பொதுமக்கள் காயமுற்றால் மருத்துவ சேவை வழங்கவே முடியாது போய்விடும். எம் மக்களைக் காப்பாற்ற அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

இதில் 26 பேர் குழந்தைகள். நாங்கள் வெறுமனே வெற்றிச் செய்திகளுக்கு மட்டுமே நின்று ஆர்ப்பாரிப்பது எம் கடமையை நிறைவு செய்து விடுமா?? நிதர்சனம்காரரைகன் கண்டால் செருப்பால் அடிப்பேன். தேவையில்லாத வேலைகளைச் செய்வதற்கு...

எதிரி அழிய வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் அதைப் பற்றி ஆர்ப்பாரிப்பது எம் கடமையல்ல

Link to comment
Share on other sites

உண்மையாகவா நான் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சோட செய்தி பார்த்தனானே

குளக்கட்டு உடைக்கப்பட்டதென்று போட்டிருப்பார்கள். இவ்வளவு இராணுவத்தினர் இறந்தார்கள் என்றுமா போட்டிருக்கின்றார்கள் ?? :D:(

Link to comment
Share on other sites

சிறீலங்கா கண்டனம் தெரிவிச்சிருக்காம்

1000 மேற்பட்ட படையினர் பலி இந்த ஆண்டின் பெரும் மனித அவலம்

இரணைமடு குளத்துக்கு வடகிழக்காக உள்ள மிகப்பெரும் அணைக்கட்டுகளில் ஒன்றான கல்மடு அணைக்கட்டின் ஒரு பகுதியினை தமிழீழ விடுதலைப்புலிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து வெடிக்க வைத்ததன் காரணமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதான வீதியை நோக்கியிருந்த கல்மடுகுளத்தின் மிகப்பெரும் அணைக்கட்டு கதவே இவ்வாறு குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்தன.

இந்த கதவு தகர்;க்கப்பட்டதும் சுனாமி போன்ற பேரலை படையினர் முன்நகர்வை மேற்கொண்ட பகுதி நோக்கி அடித்துச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் 500 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

கொடுக்கவேண்டியவைகளையும் விரைவுபடுத்துங்கள்

தயவு செய்து அங்கு முன்னோக்கி பாயவேண்டுமென்றால் இங்கும் நீங்கள் முன்னோக்கி நகர்ந்தால் மட்டுமே வெற்றி நிரந்தரம்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்மடுப் பகுதியில் பாரிய இழப்புக்களை சிறிலங்கா இராணுவம் சந்தித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்குமிடையில் பாரிய மோதல்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்திருப்பதாக ஊர்ஜீதப் படுத்தப் படாத ஆரம்பகட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கல்மடுக்குளத்தை உடைத்து விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் பெரும்தொகையான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குளம் உடைக்கப்பட்டுள்ளதை சிறிலங்கா இராணுவத் தரப்பினர் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

இந்தச் செய்தி எழுதப்படுவம்வரை இறந்தவர்களின் தொகை குறித்து எதுவும் உறுதிப்படுத்த முடியவில்லை.

-தமிழ்கனேடியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பீ.சி

இப்பொழுதைய நேரச்செய்தியிலும் எதுவும் சொல்லவில்லை

ஐரோப்பியநேரம்19.00

Link to comment
Share on other sites

தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த
தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் புலம்பெயர் தமிழரின் ஆதரவு போதாமைதான் காரணம்

கொடுக்கவேண்டியவைகளை நாம் கொடுத்திருந்தால்

குளத்தை திறந்துதான் கொளுத்தவேணும் என்றில்லை............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குண்டுகளை போட்டு குடும்பம் குடும்பமாக எமது மக்களை கொன்று குவிப்பது நியாயம் என்றால் இந்த செய்தி கேட்டு இங்க மக்கள் மகிழ்ந்ததும் நியாயம்தான்.

Link to comment
Share on other sites

தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த
தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த
தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

இதேவேளை இந்த தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

இதேவேளை இந்த தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளை போடேக்க பாத்து போடுங்கோ.. இந்த செய்திகள்ள எங்கட மக்கள் படுற அவலங்களை மறக்காம இருந்த சரி..நடகட்டும் நடக்கட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கல்மடுக்குள அணைக்கட்டை இன்று காலை விடுதலைப்புலிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளமையினால், பரந்தன் பூநகரி பிரதான வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் படையினரின் நகர்வை தடுப்பதற்காக அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டை கொண்டு கல்மடுக்குள அணைக்கட்டை புலிகள் தகர்த்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வன்னியில் உள்ள கல்மடுக்குள அணைக்கட்டு விடுதலைப்புலிகளினால் திட்டமிட்டு தகர்க்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி கூறியுள்ளதாக வேறொரு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

எனினும் பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புபட்ட செய்திகள்

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளம் தகர்ப்பால்.... என்ற செய்தியைச் சிறிலங்கா அரசு வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் கொண்டு செல்ல முயலும் என்பதைக் குறித்தவர்கள் அவதானமானக இருக்க வேண்டும். ஒரு யுத்த அரங்கில் அப்படிச் செய்வது தொடர்பான செய்தி பின்விளைவுகளை ஏற்படுத்தும். அது குறித்து பொறுப்புள்ள ஊடகவியளார்கள் கவனிக்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.