Jump to content

.தலை முடி போனாதால் மணமகனை வேண்டாம் என்று சொன்ன பெண்..


Recommended Posts

தலை முடி போனாதால் மணமகனை வேண்டாம் என்று சொன்ன பெண்..

இந்த கதைக்கு உரியவங்கள் இதை படித்தால்...என்னை மண்ணிக்கவும்...யாரயும் கவலை படுத்த வேணும் என்று எழுத வில்லை... இதை படித்தாவது எனி வரும் நம்ம பெண்கள் திரிந்தட்டும்... நான் எல்லராயும் சொல்ல வில்லை..

பூஜா அவளின் பெயர்...பெயர் எவ்வளவு அழாய் இருக்கு..அவளும் அழகனா பெண்தான்..பூஜா அப்பா உனக்கு மாப்பிளை

பார்த்து இருக்குறார் லண்டனில்... போடோ அனுப்பி வக்குறாராம் உன்னை பார்த்து விட்டு முடிவை சொல்ல சொன்னார்..

போடோவும் வந்தது பூஜா எனக்கு புடித்து இருக்கு அம்மா என்றாள் ...

இரண்டு வீடும் சம்மதம் சொல்லி கால்யாணம் இந்த தேதி என்று முடிவு பண்ணினார்கள்.

ரவி போன் பண்ணினான்..பூஜா உனக்கு உண்மையிலே புடித்து இருக்கா?

என்னங்க இப்படி கேட்டு விட்டிர்கள்... எனக்கு சம்மதம் இந்த கல்யாணத்தில்..

பூஜா என்கிட்ட எதுகுமே இல்லை..எனக்கு தலை முடியும் கொஞ்சம் குறைவு.. நான் என்னோட நான்கு தங்கைகளுக்காக உழைத்து இப்பாதான் எல்லாரயும் கல்யாணம் பண்ணி குடுத்தன்...எனிமேல்தான் எனக்கு உழைக்கணும்...

நான் மனசுதான் பாக்குறன் எங்க அப்பா சொன்னார் நீங்க நல்லவர் என்று எனக்கு அது மட்டும் போதும் என்றால்...

என் நான்கு தங்கைகளை கரை சேர்த்த எனக்கு உன்னை நல்லாய் வத்து இருக்கவும் தெரியும்..உன்னை என் தேவதை போல் பாப்பன் என்றான் ரவி..

பூஜா நீ விசிடர் விசாவில் இங்க வாயன்..

பூஜாவும் சரி என்றால்..பூஜா படித்த பெண் வேறா விசாவும் கிடைத்தது..

போனாள்..ரவி சந்தோசப்பட்டான்..

ரவி எல்லா இடமும் கூட்டி கொண்டே காண்பித்தான்...

ரவி உன்கிட்ட நல்ல கார் இல்லயா>? என்ன ரவி உங்க கிட்ட ஒன்றும் இல்லை..ஒரு வீடு ஆவாது வாங்கி வத்து இருக்குறிங்காளா?

பூஜா நான் உன்கிட்ட முதல்லயே சொன்னன் தானே..

சரி சரி பேசாமல் வாங்க எரிச்சலாய் இருக்கு..

பூஜாவும் இந்தியா போனாள்....அம்மா எனக்கு மாப்பிளை புடிக்கலை..ரவிக்கு தலையில் முடியும் இல்லை..அவன் கிட்ட ஒன்றும் இல்லை...

பூஜா இது எல்லாம் ஒரு பிரசனையா? நீ அவனைதான் கல்யாணம் பண்ணுறாய்..தாய் சம்மதிக்குற மாதிரி இல்லை..

அங்க படிக்க போனா இடத்தில் முதல்லயே ஒரு பெடியனை விரும்பி இருந்தாள்..வெளி நாட்டு மாப்பிளை என்றதும் இவனுக்கு ஒம் என்று சொன்னாள்..இப்பதான் ரவி ஒன்றும் இல்லாதவன் முடியும் இல்லயே..வந்து இந்த இந்திய பெடியனை கல்யாணம் பண்ணினாள்..

பாவம் அந்த பெடியன்.. இப்ப அந்த பெடியன் என்ன ஆனான்..என்று தெரியா வில்லை..அந்த பொண்ணு சந்தோசமாய்தான் இந்தியாவில் வழுறாள்

நம்ம நாட்டில் இப்படி பட்டவர்களும் இருக்குதுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியை வைத்து என்னத்தை பிடுங்கிறது என்டு அந்தப்புஜாபிள்ளைக்கு தெரியலபோல.

Link to comment
Share on other sites

முடியை வைத்து என்னத்தை பிடுங்கிறது என்டு அந்தப்புஜாபிள்ளைக்கு தெரியலபோல.

உண்மைதான் வில்லன்..தலை முடி அவள் இப்ப கல்யாணம் பண்ணிய பெடியனுக்கு போகாதா?வயசு போனாள் எல்லாருக்கு முடி போகும் தானே..என் இப்ப உள்ள பெடியன்களுக்கு போகலயா முடி?ஏன் இந்த பொண்ணு புரிந்து கொள்ள வில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில உள்வீட்டு விவகாரங்களில் வெளிவாரியாக கருத்தை கூற முடியாது. இரு பேர் இனி வரும் எல்லா காலத்திற்குமாய் இணைவது என்பது எளிதானதல்ல. வெளியில் கூற முடியாத பல விடயங்கள் இரகசியமாகவே இருந்துவிடுவதால் இல்லாத விடயங்களை நாம் கூறி எது சரி எது பிழை என்று கூறிட முடியாது. எனினும் இதுவரையில் தனது தங்கைகளுக்காக வாழ்ந்த ரவியின் வாழ்வில் நிச்சயமாக ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கும். கெட்டவைகள் இப்படியும் கழிவதுண்டு.

Link to comment
Share on other sites

சில உள்வீட்டு விவகாரங்களில் வெளிவாரியாக கருத்தை கூற முடியாது. இரு பேர் இனி வரும் எல்லா காலத்திற்குமாய் இணைவது என்பது எளிதானதல்ல. வெளியில் கூற முடியாத பல விடயங்கள் இரகசியமாகவே இருந்துவிடுவதால் இல்லாத விடயங்களை நாம் கூறி எது சரி எது பிழை என்று கூறிட முடியாது. எனினும் இதுவரையில் தனது தங்கைகளுக்காக வாழ்ந்த ரவியின் வாழ்வில் நிச்சயமாக ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கும். கெட்டவைகள் இப்படியும் கழிவதுண்டு.

நீங்கள் சொன்னது உண்மைதான்.. நான் இதோட விரிவாக்கம் எழுத வில்லை...எனக்கு இதோட எல்லா உண்மைகளும் தெரியும்.. என் என்றால் அந்த பொண்ணு நான் படித்த இடத்தில்தான் படித்தாள்...தன்னோட நண்பிக்கு கிட்ட சொல்லும் போது நானும் கேட்டேன்.. அந்த பொண்ணுக்கு தெரிய வில்லை.. நானும் இலங்கை சேர்ந்த பொண்ணு என்று.. அவள் பாட்டுக்கு பேசிட்டு இருந்தாள்...உண்மை எழுதி இருந்தால் நான் செருப்பாலதான் அடி வங்க வேண்டும்..அதான் இவ்வளவு குறய்வாய் குடுத்து இருக்குகிறேன்.. அந்த பெடியன் உண்மையில் தப்பித்தான்..அதைதான் நானும் சொல்லுவன்...

நன்றி உங்கள் கருத்துக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரித்தி தலை முடி போனதால் மட்டும் மணமகனை வேண்டாம் என்று சொல்லிருக்க மாட்டார்.நீங்களே உங்கள் கதையில் சொல்லி இருக்கிறீர்கள் மணமகனுக்கு கார்,வீடு ஒன்றும் இல்லை என்று.இந்த காலத்தில் யார் ஒன்றும் இல்லாதவனை கல்யாணம் கட்டுவார்கள்.நீங்கள் கட்டுவீர்களா? முக அழகு இல்லாவிட்டால் பரவாயில்லை.வீடு,காராவது வாங்கி வைத்து இருக்கலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

ப்ரித்தி தலை முடி போனதால் மட்டும் மணமகனை வேண்டாம் என்று சொல்லிருக்க மாட்டார்.நீங்களே உங்கள் கதையில் சொல்லி இருக்கிறீர்கள் மணமகனுக்கு கார்,வீடு ஒன்றும் இல்லை என்று.இந்த காலத்தில் யார் ஒன்றும் இல்லாதவனை கல்யாணம் கட்டுவார்கள்.நீங்கள் கட்டுவீர்களா? முக அழகு இல்லாவிட்டால் பரவாயில்லை.வீடு,காராவது வாங்கி வைத்து இருக்கலாம் இல்லையா?

ரதி நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேணும்..மணமகனுக்கு நான்கு தங்கைகள்..பாவம் தானே..என்ன பண்ணுவார்.. கார் இல்லை என்று இல்லை நல்ல கார் இல்லை இதுதான் பிரசனை...பணம் முக்கியாமா?ஒருவரின் குணம் தானே முக்கியம்.. நான்கு தங்கைகளை கரை சேர்த்த அவனால் அவன் பெண்டட்டியை நல்லாய் வத்து இருக்க முடியதா?...என்னை கேட்டால் நான் பண்ணுவன்..எனக்கு பணம் முக்கியம் இல்லை.. ஒன்றும் இல்லை என்றால் என்ன உழைக்கலாம் தானே..அவர் உழைத்து எதுகுமே இல்லமால் குழப்படி பண்ணி திரிந்து ஒன்றும் இல்லை என்றால்தான் ஜோசிக்கணும்... ஏதும் தவறாய் இருந்தால் என்னை மண்ணிக்கவும்

Link to comment
Share on other sites

preethi82 தங்கள் புதிய வருகையும் எழுத்தும் தொடர வாழ்த்துக்கள்.

எழுதுங்கள் நிறைய அதுபோல நிறைய வாசியுங்கள். வாசிப்பு உங்கள் எழுத்துக்களை இன்னும் செழுமைப்படுத்தும்.

சம்பவங்களை இன்னும் மெருகேற்றி செழுமைப்படுத்துங்கள் நல்லதொரு சிறுகதையாசிரியரை நாம் பெற்றுக்கொள்வோம்.

மீண்டும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

preethi82 தங்கள் புதிய வருகையும் எழுத்தும் தொடர வாழ்த்துக்கள்.

எழுதுங்கள் நிறைய அதுபோல நிறைய வாசியுங்கள். வாசிப்பு உங்கள் எழுத்துக்களை இன்னும் செழுமைப்படுத்தும்.

சம்பவங்களை இன்னும் மெருகேற்றி செழுமைப்படுத்துங்கள் நல்லதொரு சிறுகதையாசிரியரை நாம் பெற்றுக்கொள்வோம்.

மீண்டும் பாராட்டுக்கள்.

சாந்தி உங்கள் கருத்துக்கு நன்றி... என் கதையில் எழுத்து பிழைகள் இருக்காலாம்... ஏதாவது இருந்தால் அறிய தாருங்கள்... எனது தமிழ் நல்ல முறைக்கு வரும் போது என் கதையில் சுவரிசியம் இருக்கும்.. நன்றி உங்கள் கருத்துக்கு.. நீங்கள் நினைப்பத்து போல் நல்ல கதைகளை தர முயசிக்குறேன்

Link to comment
Share on other sites

இதன் மறுபக்கங்களும் இல்லாமலில்லை.

வெளிநாடொன்றில் வாழ்ந்த என் நண்பருக்கு ஊரில் பெண் பார்த்தார்கள்.

அவர் மணிக் கணக்கில் கட்டப் பொறவரோடு போனில் பேசினார் .

கருத்துகளும் பேச்சும் மட்டுமல்ல அனுப்பியிருந்த படத்திலும் பிடித்திருந்தது.

திருமணத்துக்கு திகதி நிச்சயித்து விட்டு

இலங்கைக்கு போனவர் போனில் அழைத்தார்.

எப்படி?

அங்கயிருந்து மணிக்கணக்கில பேசினன்.

நேரில பார்த்த பிறகு 5 நிமிசம் கூட அவளோட இருக்க முடியல்ல வந்திட்டன் என்றார்.

அட பாவி...அமெரிக்க ஜனாதிபதி ஒபாவின் மனிசியை பாரு

அவரோட மனிசி ஐஸ்வரியா ராய் இல்ல.

ஆனா அவருக்கு துணையா அன்பாய் இருந்திருப்பா

அதுதான் உலகத்துக்கு முன்னால கைகோர்த்து நடக்கிறார்.

விசர் அலம்பாமல் , கலியாணத்தை கட்டி இங்க கொண்டு வந்து

பொலிஸாக்க பாரும் எண்டன்.

போனை துண்டித்து விட்டார்.

நல்லது நடக்க அந்த இறைவனை பிராத்திக்கிறேன்.

இப்படியும் உண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடி என்னத்தையா பண்ண போகுது ஒன்றுக்கும் பயன் இல்லை அந்த [***] :D

நன்றி பிரீத்தி

Link to comment
Share on other sites

இதன் மறுபக்கங்களும் இல்லாமலில்லை.

வெளிநாடொன்றில் வாழ்ந்த என் நண்பருக்கு ஊரில் பெண் பார்த்தார்கள்.

அவர் மணிக் கணக்கில் கட்டப் பொறவரோடு போனில் பேசினார் .

கருத்துகளும் பேச்சும் மட்டுமல்ல அனுப்பியிருந்த படத்திலும் பிடித்திருந்தது.

திருமணத்துக்கு திகதி நிச்சயித்து விட்டு

இலங்கைக்கு போனவர் போனில் அழைத்தார்.

எப்படி?

அங்கயிருந்து மணிக்கணக்கில பேசினன்.

நேரில பார்த்த பிறகு 5 நிமிசம் கூட அவளோட இருக்க முடியல்ல வந்திட்டன் என்றார்.

அட பாவி...அமெரிக்க ஜனாதிபதி ஒபாவின் மனிசியை பாரு

அவரோட மனிசி ஐஸ்வரியா ராய் இல்ல.

ஆனா அவருக்கு துணையா அன்பாய் இருந்திருப்பா

அதுதான் உலகத்துக்கு முன்னால கைகோர்த்து நடக்கிறார்.

விசர் அலம்பாமல் , கலியாணத்தை கட்டி இங்க கொண்டு வந்து

பொலிஸாக்க பாரும் எண்டன்.

போனை துண்டித்து விட்டார்.

நல்லது நடக்க அந்த இறைவனை பிராத்திக்கிறேன்.

இப்படியும் உண்டு?

உண்மை தலைவன்..இப்படி நிறை நடந்து இருக்கு.. அழகு என்பது நம்ம இளமை இருக்கும் வரைதான்.. ஆனாள் அன்பு என்பது நம்ம ஆயுள் வரை...அழகை நம்ம வர வக்கலாம்.. ஆனாள் அன்பை அவங்கள் உள்ளத்தில் இருந்துதான் வரணும்..இது நான் கண்ட பாடம்.. ஏதும் யாருக்கு புடிக்காமல் இருந்தால் மண்ணிக்கவும்.. நன்றி தலைவன் உங்கள் கருத்துக்கு

முடி என்னத்தையா பண்ண போகுது ஒன்றுக்கும் பயன் இல்லை அந்த [***] :D

நன்றி பிரீத்தி

நன்றி முனிவர்..உங்கள் கருத்துக்கு.. உங்களுக்கு புரிந்த மாதிரி எல்லாரும் புரிய வேணும் என்றுதான் இந்த கதை எழுதினேன்..செருப்பால அடி வாங்கினாலும் பறுவாய் இல்லை என்றுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரித்தி காதலிக்கும் போது கூட ஆண்,பெண் இருவருமே அழகு ,அறிவு,நல்ல வேலை இருக்க என்று பார்த்து தான் காதலிப்பார்கள்.90% காதல் இவை பார்த்து வருகிறது.10% காதல் தான் மனசு பார்த்து காதலிப்பார்கள்.காதலில் கூட இவை பார்த்து வரும் போது கல்யாணத்தில் இதை பார்க்க கூடாதா?

எதுவும் இருக்கும் போது தெரிவதில்லை.தலையிடியும்,காய்

ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.எனக்கு உங்களையும் தெரியாது.கதையில் இடம் பெற்றவர்களையும் தெரியாது.நீங்கள் சொன்னீர்கள் அவரை கல்யாணம் முடிப்பீர்கள் என்று இனையத்தில் வந்து எதுவும் எழுதலாம் ஏனென்றால் யாரையும் யாருக்கும் தெரியாது.சில வேளைகளில் நீங்கள் நல்ல மனம் படைத்தவராக இருக்கலாம்.

முக அழகு இல்லாவிட்டாலும் பரவாய் இல்லை வீடாவது வைத்து இருக்க வேண்டும்.புலம் பெயர் நாட்டில் வீடு இல்லாமல் ஒவ்வொரு வீடாக திரியும் போது தான் வீட்டின் அருமை தெரியும்.திருமணத்தின் பின் பெண் இங்கு வந்து அதன் பின் இருவரும் உழைத்து வீடு வாங்கி எப்போ பிள்ளை பெத்து எப்போ செட்டில் ஆகிறது.

மற்றும் படி நீங்கள் கதை எழுதிய விதம் அருமை.எழுத்து பிழைகளை திருத்தி கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

ப்ரித்தி காதலிக்கும் போது கூட ஆண்,பெண் இருவருமே அழகு ,அறிவு,நல்ல வேலை இருக்க என்று பார்த்து தான் காதலிப்பார்கள்.90% காதல் இவை பார்த்து வருகிறது.10% காதல் தான் மனசு பார்த்து காதலிப்பார்கள்.காதலில் கூட இவை பார்த்து வரும் போது கல்யாணத்தில் இதை பார்க்க கூடாதா?

எதுவும் இருக்கும் போது தெரிவதில்லை.தலையிடியும்,காய்

ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.எனக்கு உங்களையும் தெரியாது.கதையில் இடம் பெற்றவர்களையும் தெரியாது.நீங்கள் சொன்னீர்கள் அவரை கல்யாணம் முடிப்பீர்கள் என்று இனையத்தில் வந்து எதுவும் எழுதலாம் ஏனென்றால் யாரையும் யாருக்கும் தெரியாது.சில வேளைகளில் நீங்கள் நல்ல மனம் படைத்தவராக இருக்கலாம்.

முக அழகு இல்லாவிட்டாலும் பரவாய் இல்லை வீடாவது வைத்து இருக்க வேண்டும்.புலம் பெயர் நாட்டில் வீடு இல்லாமல் ஒவ்வொரு வீடாக திரியும் போது தான் வீட்டின் அருமை தெரியும்.திருமணத்தின் பின் பெண் இங்கு வந்து அதன் பின் இருவரும் உழைத்து வீடு வாங்கி எப்போ பிள்ளை பெத்து எப்போ செட்டில் ஆகிறது.

மற்றும் படி நீங்கள் கதை எழுதிய விதம் அருமை.எழுத்து பிழைகளை திருத்தி கொள்ளுங்கள்.

புலம் பெயர் நாடுகளுக்கு வரும் போது

உயிர் பிழைத்தால் போதும் என்றுதான் அனைவரும் கப்பல் ஏறுகிறார்கள்.

அனைவரும் கள்ளத் தோணிகள்தான்.

வந்த பின் அவர்களுக்கு ஒரு காட் கிடைக்கவே படாத பாடு படுகிறார்கள்.

ஆரம்பத்தில் வந்த பல பெண்கள் ஏஜன்சி வழிதான் வந்தார்கள்.

அவர்களை நம்பி வந்தவர்களுக்கும் வாழ்ந்த நாட்டில் வாழ சரியான அனுமதி கூட இல்லை.

இன்று வசதியும் வாய்ப்பும் பெற்று வாழ்கிறார்கள்.

அவர்களது குழந்தைகள் கூட உயர்ந்தே நிற்கிறார்கள்.

தாயகத்தில் சொந்த வீடுகளையே விட்டு

காடு மேடாக திரியும் அந்த மக்கள்

தன் சொந்த நிலத்திலேயே வாழ முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு நேர உணவு..... தண்ணி கூட கண்ணீர்தான்.

வெளிநாடுகளில் வீடு நிலம் வேண்டும் என நினைத்தால்

அந்தக் காலத்தில் பார்த்தது போல டாக்குத்தர் என்ஜினியர் வங்கீல் மாப்பிளை எண்டுதான் தேடவேண்டும்.

இல்லை இப்படியான எண்ணம் கொண்டவர்களை திருப்பதிப்படுத்த

களவுதான் எடுக்க வேணும்.

இல்லை மட்டைதான் இழுக்க வேணும்.

பிறகு ஒருநாள் உள்ளதான்?

இப்படியானவங்களை கட்டி வாழ்வு குடுக்க நினைக்கிறதை விட

வெள்ளையோ கறுப்போ மஞ்சலோ ஏதோ ஒன்றைக் கட்டிக் கொண்டு

சிவனே என்று இருக்காலம்?

வாறவள் மனைவியாக வந்தால் பரவாயில்லை

ராணியாக வர நினைத்தால்

அதை பூமி தாங்காதம்மா

லண்டன் வாரதென்றால் டயானாவாகவா வாறாங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதையாய் இருக்கு, தொடருங்கள் வாழ்த்துகள் சகோதரி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளுக்கு வரும் போது

உயிர் பிழைத்தால் போதும் என்றுதான் அனைவரும் கப்பல் ஏறுகிறார்கள்.

அனைவரும் கள்ளத் தோணிகள்தான்.

வந்த பின் அவர்களுக்கு ஒரு காட் கிடைக்கவே படாத பாடு படுகிறார்கள்.

ஆரம்பத்தில் வந்த பல பெண்கள் ஏஜன்சி வழிதான் வந்தார்கள்.

அவர்களை நம்பி வந்தவர்களுக்கும் வாழ்ந்த நாட்டில் வாழ சரியான அனுமதி கூட இல்லை.

இன்று வசதியும் வாய்ப்பும் பெற்று வாழ்கிறார்கள்.

அவர்களது குழந்தைகள் கூட உயர்ந்தே நிற்கிறார்கள்.

தாயகத்தில் சொந்த வீடுகளையே விட்டு

காடு மேடாக திரியும் அந்த மக்கள்

தன் சொந்த நிலத்திலேயே வாழ முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு நேர உணவு..... தண்ணி கூட கண்ணீர்தான்.

வெளிநாடுகளில் வீடு நிலம் வேண்டும் என நினைத்தால்

அந்தக் காலத்தில் பார்த்தது போல டாக்குத்தர் என்ஜினியர் வங்கீல் மாப்பிளை எண்டுதான் தேடவேண்டும்.

இல்லை இப்படியான எண்ணம் கொண்டவர்களை திருப்பதிப்படுத்த

களவுதான் எடுக்க வேணும்.

இல்லை மட்டைதான் இழுக்க வேணும்.

பிறகு ஒருநாள் உள்ளதான்?

இப்படியானவங்களை கட்டி வாழ்வு குடுக்க நினைக்கிறதை விட

வெள்ளையோ கறுப்போ மஞ்சலோ ஏதோ ஒன்றைக் கட்டிக் கொண்டு

சிவனே என்று இருக்காலம்?

வாறவள் மனைவியாக வந்தால் பரவாயில்லை

ராணியாக வர நினைத்தால்

அதை பூமி தாங்காதம்மா

லண்டன் வாரதென்றால் டயானாவாகவா வாறாங்க?

தலைவன் வந்து நீங்கள் சொன்னது சரி தான் :rolleyes::rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு விசயமும் தெரியாவிட்டாலும் என்னைப்பொறுத்தவரையில் அந்த இளைஞன் தப்பிவிட்டான் என்றே நினைக்கிறேன்.மற்றும் ரதியின் பதிவுக்கு பதில் எழுதஇருந்தேன் ஆனால் நான் எழுதநினைத்ததை தலைவன் எழுதிவிட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வீடு நிலம் வேண்டும் என நினைத்தால்

அந்தக் காலத்தில் பார்த்தது போல டாக்குத்தர் என்ஜினியர் வங்கீல் மாப்பிளை எண்டுதான் தேடவேண்டும்.

இல்லை இப்படியான எண்ணம் கொண்டவர்களை திருப்பதிப்படுத்த

களவுதான் எடுக்க வேணும்.

இல்லை மட்டைதான் இழுக்க வேணும்.

பிறகு ஒருநாள் உள்ளதான்?

தலைவன் சொன்னதை நான் கனடா போயிருந்த போது நேரிலேயே பார்த்தேன். எனது உறவினர் குடும்பங்களில் பல, சொந்த வீடு ஹோம் தியேட்டர் புதுக் கார் என்று இருந்தார்கள். பிறகு தானாகவே விசயங்கள் வெளியே வந்தன. இவர்களின் இந்த சொகுசு தேடும் படலம், பக்கத்து வீட்டுக் காரன், நண்பர்கள் மற்றைய உறவினர்கள் போன்றோருடன் தம்மை ஒப்பிட்டுப் போட்டி போட நினைத்ததால் ஆரம்பித்ததாக அறிந்தேன். இது ஒன்றும் தமது கையிலுள்ள காசைக் கொடுத்து வாங்கியவையல்ல (அவ்வளவு பணம் பில் கேட்ஸ் கையில் கூட இருக்காதே!). எல்லாம் கடன், கடனட்டை மூலம் வாங்கியவை. சிலர் வங்குரோத்து அடித்து குறுக்கு வழியால் வேறு போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவரது வருட வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரை தான் ஒருவர் கடன் பெற வேண்டும், அப்போது தான் அவரது நிதி முகாமைத்துவம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். எங்கள் ஆட்கள் பல பேருக்கு இந்த கடன் சதவீதம் அவர்கள் வருமானத்தில் 60 அல்லது எழுவது வீதமாக இருந்தது. எப்படிக் கட்டுவார்கள்? இது ஒரு பக்கம். இன்னும் வாடகை வீட்டில் வாழும் சில பள்ளித் தோழர்களையும் பார்த்தேன். எவ்வளவு செய்திருக்கிறார்கள் தெரியுமா? சகோதரங்களையெல்லாம் கூப்பிட்டு, பள்ளிகளில் சேர்த்து, தந்தை தாயைக் கூப்பிட்டு அவர்களைப் பார்த்துக் கொள்ள மனைவியை வேலையை விடச் சொல்லி இப்படி நிறையக் கடமைகள் முடித்த பிறகும், அட எங்களுக்கு வயதா போயிட்டுது, இனி கொஞ்சம் கடனெல்லாம் போக விட்டு வீடு பாக்கலாம் என்று சொல்லும் இவர்களைப் பார்த்த போது எங்கள் உறவுக் காரர்களுக்கும் இந்த உழைப்பாளிகளுக்கும் எவ்வளவு வேறுபாடுகள் என்று புரிந்தது.

Link to comment
Share on other sites

நல்ல காலம் அந்த பெடியன் தப்பித்தான்...(ஆ...அப்ப என்னை மாதிரி ஆட்களின்ர நிலை கஸ்டம் போல.... :rolleyes:)

Link to comment
Share on other sites

ப்ரித்தி காதலிக்கும் போது கூட ஆண்,பெண் இருவருமே அழகு ,அறிவு,நல்ல வேலை இருக்க என்று பார்த்து தான் காதலிப்பார்கள்.90% காதல் இவை பார்த்து வருகிறது.10% காதல் தான் மனசு பார்த்து காதலிப்பார்கள்.காதலில் கூட இவை பார்த்து வரும் போது கல்யாணத்தில் இதை பார்க்க கூடாதா?

எதுவும் இருக்கும் போது தெரிவதில்லை.தலையிடியும்,காய்

ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.எனக்கு உங்களையும் தெரியாது.கதையில் இடம் பெற்றவர்களையும் தெரியாது.நீங்கள் சொன்னீர்கள் அவரை கல்யாணம் முடிப்பீர்கள் என்று இனையத்தில் வந்து எதுவும் எழுதலாம் ஏனென்றால் யாரையும் யாருக்கும் தெரியாது.சில வேளைகளில் நீங்கள் நல்ல மனம் படைத்தவராக இருக்கலாம்.

முக அழகு இல்லாவிட்டாலும் பரவாய் இல்லை வீடாவது வைத்து இருக்க வேண்டும்.புலம் பெயர் நாட்டில் வீடு இல்லாமல் ஒவ்வொரு வீடாக திரியும் போது தான் வீட்டின் அருமை தெரியும்.திருமணத்தின் பின் பெண் இங்கு வந்து அதன் பின் இருவரும் உழைத்து வீடு வாங்கி எப்போ பிள்ளை பெத்து எப்போ செட்டில் ஆகிறது.

மற்றும் படி நீங்கள் கதை எழுதிய விதம் அருமை.எழுத்து பிழைகளை திருத்தி கொள்ளுங்கள்.

ரதி நீங்கள் சொன்னது சரிதான் வீடு விடாய் போகும் போது கஸ்ரம்தான்.. நான் நடந்த இரண்டு விடயம் உங்களுக்கு சொல்லுறன்..

ஒரு அண்ணா இருக்குறார் இங்க அவருக்கு முன்று தங்கைகள்.. அவர் கல்யாணம் பண்ணும் போது அவருக்கு ஒன்றுமே இல்லை..ஏன் என்றால் அவர்தான் அவங்கள் குடும்ப்பத்தை பார்த்தார்..அவர்தான் எல்லாரயும் வெளி நாட்டுக்கு எடுத்தார்.. ஆனால் இப்ப எல்லாமெ இருக்கு எப்படி அவர் கிட்ட உழைப்பு இருக்கு..

எனக்கு தெரிந்த வேற ஒருதர் இருக்குறார் அவர் கல்யாணம் பண்ணும் போது அவர் கிட்ட எல்லாமே இருந்தது.. நான்கு கடை வீடு நல்ல கார் ஆனாள் இப்ப அவர் கிட்ட ஒன்றும் இல்லை...

எது இருக்குகோ இல்லயோ நல்ல மனமும் உழப்பு இருந்தால் போதும் என்று நான் நினைக்குறேன்.. ரதி மண்ணித்துடுங்க ஏதாவது தப்ப நான் சொன்னால்.. உங்கள் கருத்துக்கு நன்றி..ரதி நான் இணையத்தில் எழுத வேண்டும் என்றதுக்காக சொல்ல வில்லை உண்மைதான் சொன்னன்.. மனம் நல்லாய் இருந்தால் போதும் என்று நினைப்பவள் நான்.. நீங்கள் சொன்னதில் தப்பு இல்லை.. என்னையும் தெரியாது.. சில பேர் எழுத வேணும் என்றதுக்காக எழுதுவார்கள்..

நல்ல கதையாய் இருக்கு, தொடருங்கள் வாழ்த்துகள் சகோதரி!!!

நன்றி சுவி உங்கள் கருத்துக்கு..

நல்ல காலம் அந்த பெடியன் தப்பித்தான்...(ஆ...அப்ப என்னை மாதிரி ஆட்களின்ர நிலை கஸ்டம் போல.... :rolleyes:)

நன்றி கோகிலன் உங்கள் கருத்துக்கு

தலைவன் சொன்னதை நான் கனடா போயிருந்த போது நேரிலேயே பார்த்தேன். எனது உறவினர் குடும்பங்களில் பல, சொந்த வீடு ஹோம் தியேட்டர் புதுக் கார் என்று இருந்தார்கள். பிறகு தானாகவே விசயங்கள் வெளியே வந்தன. இவர்களின் இந்த சொகுசு தேடும் படலம், பக்கத்து வீட்டுக் காரன், நண்பர்கள் மற்றைய உறவினர்கள் போன்றோருடன் தம்மை ஒப்பிட்டுப் போட்டி போட நினைத்ததால் ஆரம்பித்ததாக அறிந்தேன். இது ஒன்றும் தமது கையிலுள்ள காசைக் கொடுத்து வாங்கியவையல்ல (அவ்வளவு பணம் பில் கேட்ஸ் கையில் கூட இருக்காதே!). எல்லாம் கடன், கடனட்டை மூலம் வாங்கியவை. சிலர் வங்குரோத்து அடித்து குறுக்கு வழியால் வேறு போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவரது வருட வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரை தான் ஒருவர் கடன் பெற வேண்டும், அப்போது தான் அவரது நிதி முகாமைத்துவம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். எங்கள் ஆட்கள் பல பேருக்கு இந்த கடன் சதவீதம் அவர்கள் வருமானத்தில் 60 அல்லது எழுவது வீதமாக இருந்தது. எப்படிக் கட்டுவார்கள்? இது ஒரு பக்கம். இன்னும் வாடகை வீட்டில் வாழும் சில பள்ளித் தோழர்களையும் பார்த்தேன். எவ்வளவு செய்திருக்கிறார்கள் தெரியுமா? சகோதரங்களையெல்லாம் கூப்பிட்டு, பள்ளிகளில் சேர்த்து, தந்தை தாயைக் கூப்பிட்டு அவர்களைப் பார்த்துக் கொள்ள மனைவியை வேலையை விடச் சொல்லி இப்படி நிறையக் கடமைகள் முடித்த பிறகும், அட எங்களுக்கு வயதா போயிட்டுது, இனி கொஞ்சம் கடனெல்லாம் போக விட்டு வீடு பாக்கலாம் என்று சொல்லும் இவர்களைப் பார்த்த போது எங்கள் உறவுக் காரர்களுக்கும் இந்த உழைப்பாளிகளுக்கும் எவ்வளவு வேறுபாடுகள் என்று புரிந்தது.

நன்றி ஜஸ்ரின் உங்கள் கருத்துக்கு

முழு விசயமும் தெரியாவிட்டாலும் என்னைப்பொறுத்தவரையில் அந்த இளைஞன் தப்பிவிட்டான் என்றே நினைக்கிறேன்.மற்றும் ரதியின் பதிவுக்கு பதில் எழுதஇருந்தேன் ஆனால் நான் எழுதநினைத்ததை தலைவன் எழுதிவிட்டார்

நன்றி சஜிவன் உங்கள் கருத்துக்கு..

Link to comment
Share on other sites

இப்படி பற்பல சம்பவங்கள்.. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்!

மறுவிசாரணை

சந்தியில் இருக்கும் தபாற்கந்தோர். அதற்குப் பக்கத்தில் உள்ள மதவடிக் கல்வீடு. அதில் இரண்டு பெட்டைகள். அதில் ஒன்றாக இருக்குமா? அட... அதுகள் "கிளாக்கர்" நாகலிங்கத்தாற்றை மகள்மார்.

அந்தப் பள்ளிக்கூடம். அதன் பின்பக்கத்து முள்ளு வேலியாலை தெரியும் வீட்டிலை ஒருத்தி. சைக்கிள்கூட வைத்திருந்தாள். கிப்பித் தலை. அவளாக இருக்குமா?

அட... அது "ஜேபி"யின்ரை மகள்.

பிறக்கறாசியார் பொன்னம்பலமே நினைவில் வர மறுத்தபோது... மகளை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?!

ஆக்கம்: இராஜன் முருகவேல்

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அதேபோல, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவனை அம்மாவின் கடிதம் உசுப்பிவிட்டு, தற்போது "உணவு செல்லவில்லை சகியே, உறக்கம் கொள்ளவில்லை" என்ற நிலை. நந்தகுமாரன். செல்லமாக நந்தன். ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்கள் இருக்குமா? இருக்கும். வசதியாக உள்ளானா? உள்ளான்.

அன்று அம்மாவின் கடிதம் வந்திருந்தது.

"அன்புள்ள நந்தன்!...." என்று ஆரம்பித்து, ஊர்ப் புதினங்கள் கொழும்புப் புதினங்கள் எனச் சுற்றிச் சுழன்று விசயத்துக்கு வந்தாள். "இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடியே வாழப்போறாய்? உனக்கும் முப்பது வயதாகுது. காலாகாலத்திலை ஒரு நல்ல இடமாய்ப் பார்த்து கலியாணம் கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிறக்கறாசியார் பொன்னம்பலம் தன்னுடைய இரண்டாவது மகளுக்கு உன்னைக் கேட்டு வந்தவர். அவையும் வெள்ளவத்தையில்தான் இருக்கினம். உனக்குச் சம்மதம் என்றால் மேற்கொண்டு கதைக்கலாம்..."

கடிதம் வந்த விசயத்தைச் சொல்லி, சில வேண்டுகோள்களை விடுத்துப் பதிலை எதிர்பார்த்து, அன்பைத் தெரிவித்து முடிந்தது.

"பிறக்கறாசியார் பொன்னம்பலத்தின்ரை மகள்....?!" நினைத்துப் பார்த்தான். மனத்திரையில் பத்து வருடத்துக்கு முந்திய காட்சிகள் பசுமையாகப் படம் விரித்தன.

சந்தியில் இருக்கும் தபாற்கந்தோர். அதற்குப் பக்கத்தில் உள்ள மதவடிக் கல்வீடு. அதில் இரண்டு பெட்டைகள். அதில் ஒன்றாக இருக்குமா? அட... அதுகள் "கிளாக்கர்" நாகலிங்கத்தாற்றை மகள்மார். அந்தப் பள்ளிக்கூடம். அதன் பின்பக்கத்து முள்ளு வேலியாலை தெரியும் வீட்டிலை ஒருத்தி. சைக்கிள்கூட வைத்திருந்தாள். கிப்பித் தலை. அவளாக இருக்குமா? அட... அது "ஜேபி"யின்ரை மகள்.

பிறக்கறாசியார் பொன்னம்பலமே நினைவில் வர மறுத்தபோது... மகளை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்? அம்மாமீது ஆத்திரமாக வந்தது. கடிதத்தோடு ஒரு போட்டோவாவது கேட்டு வாங்கி அனுப்பியிருக்கலாம். கலியாணம்தானே... இவ்வளவு காலத்துக்குப் பிறகு அம்மாவுக்கு அக்கறை ஏற்பட்டிருக்கிறது. சம்மதம் தெரிவித்துவிடலாமா?! பெட்டை எப்படி இருப்பாள் என்று தெரியாமல் எவ்வாறு சம்மதம் தெரிவிப்பது?

கிளியை எதிர்பார்த்துக் கற்பனைகளில் காதல் சாம்ராஜ்யம் அமைத்துக் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, மைனா வந்து குதித்துச் சாம்ராஜ்யத்தைச் சிதறடித்துவிட்டால்.... வாழ்க்கையே நரகமாகிவிடும். "போட்டோ அனுப்பினால்தான் முடிவு கூறலாம்" என அம்மாவுக்கு அறிவித்தால் என்ன?! தவறாக நினைத்து விடுவாள். தனது பிள்ளை தன்னிலை நம்பிக்கை இல்லாமல் போட்டோ கேட்கிறானே என்று வருத்தப்படுவாள். பெட்டை எப்படி இருப்பாள் என்று தெரியாமல் பதில் எழுத மனம் ஒப்பவில்லை.

அம்மாவுக்கு தீர விசாரித்துப் பெட்டையைப்பற்றி அறிந்ததன் பின்னர் பதில்போட்டால் என்ன? தாமதமானால் வலிய வந்த சம்பந்தம் தூர விலகிப் போய்விடும். பிறகு, பதில் "லேற்"- அதனால் சம்பந்தம் "லொஸ்ற்"- வாழ்க்கையே "வேஸ்ற்"- அம்மா சொல்லுவாள் நீ எதிலையுமே "லாஸ்ற்".

நந்தனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. என்னவாவது செய்தாக வேண்டும். அதுவும் மிக விரைவாக. யாராவது ஊர் ஆட்களைத் தேடிப் பிடித்தால்தான் விசாரிக்கலாம். ஜேர்மனியில் வாழும் ஊராரைப் பட்டியல் போட்டான். மிகவும் தூரத்தில் வசிப்பவர்களைத் தள்ளிவிட்டான். அவசரம் என்றால் பிறகு தேடிப் பிடிக்கலாம்.

வசந்தி அக்கா.... நூறு கிலோமீற்றர் தூரத்தில்தான் வசிப்பிடம். குடும்பமாக வாழ்கிறார். விசாரிக்கலாம். வசந்தி அக்காவுக்கு எத்தனை பிள்ளைகளோ தெரியவில்லை. போகும்போது வெறுங்கையுடனா போவது?!

Ööö

வரிசையான வீதியெங்கும் உயர்ந்து கம்பீரமாக நிற்கும் அடுக்கு மாடி வீடுகள். அவற்றுள் ஒன்றின் வாசலில்போய் வீட்டிலக்கத்தைச் சரி பார்த்துக்கொண்டு, வசந்தியின் பெயர் பொறித்த அழைப்பு மணியைத் தேடினான்.

"கணேசன்"

வசந்தியின் கணவன்.

அழுத்தினான்.

சிறிது மௌனத்தின் பின் சுவரில் பதிந்திருந்த சிறிய ஒலிபெருக்கியில் வசந்தி அக்காதான்....

"ஹலோ! ஆரது..."

"நான் நந்தன்...."

"நந்தனோ...? எனக்குத் தெரியேலை..."

"என்ன அக்கா உப்பிடிச் சொல்லுறியள்?! நான் சின்னையா வாத்தியாற்றை மகன்..."

"ஓ.... ஓ.... தெரியும். தெரியும். என்ன திடீரெண்டு இந்தப் பக்கம்..."

"உதை றோட்டிலை நிக்க வைச்சே விசாரிக்கிறது? கதவைத் திறவுங்கோவன்..."

பிரயாணக் களைப்பு. அவசரத்தில் தேனீரைமட்டும் பருகிவிட்டு வெளிக்கிட்டது. வசந்தியின் வீட்டில் சாப்பிடலாம்தானே என்ற எண்ணம். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை.... அதுவும் பல வருடங்கள் கழித்து வரும் விருந்தினர்களை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை அவனுக்கு.

சிறிதுநேரம் வசந்தியின் குரலைக் காணவில்லை.

"என்ன அக்கா.... என்ன யோசினை....?!"

"யோசினை இல்லை நந்தன். பயம்..."

"பயமோ...?"

ஆச்சரியத்துடன் கூவினான்.

"எனக்கோ..."

"அவருக்குப் பயம்.... நீர் ரெலிபோன் எடுத்துக்கூடச் சொல்லாமை வந்திட்டீர்...."

"உங்கடை ரெலிபோன் நம்பர் என்னட்டை இல்லை அக்கா..."

"குறை நினையாதையும்.... அவர் இல்லாத நேரத்திலை ஆரையும் வீட்டுக்குள்ளை விடக்கூடாதெண்டு உத்தரவு.... அதுதான் நந்தன். நீர் என்ன நினைப்பீரோ தெரியாது..."

வசந்தியின் குரல் பரிதாபமாக ஒலித்தது.

நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் ஒரு நாட்டில் இப்படியொரு கணவன். அவருக்கு இப்படியொரு மனைவி, கூண்டுக்கிளியாக...!!

நாடு மாறினாலும் பாசை மாறினாலும் உடைகள் மாறினாலும் உள்ளத்தை மாற்ற விரும்பாத மனிதர்கள்.

"அக்கா! அப்ப நான் போவிட்டு வாறன்..."

"கொஞ்சம் பொறும் நந்தன்.... வீட்டுக்குள்ளைதான் கூப்பிட முடியேலை. என்ன விசயமாய் வந்தனீரெண்டு கேக்கலாமில்லையா?"

"நாலு சுவர்களுள் அடைபட்டுக்கிடக்கும் இவளிடம் சொல்லுவதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?" யோசித்தான்.

"விருப்பமில்லாட்டால் வேண்டாம்...."

"இல்லை அக்கா... விசயத்தைச் சொல்லி விசாரிக்கத்தானே விடியவெள்ளண்ண எழும்பி இவ்வளவு தூரம் வந்திருக்கிறன்.... ஆனால் இப்பிடி வாசலிலை நிண்டு கதைக்கிறது புது அனுபவம்..."

"எனக்கு இது பழகிப்போன விதி.... அப்பா அம்மா பெரிசில்லை, காதலன்தான் வேணுமெண்டு நானே என்ரை வாழ்க்கையை அமைச்சுக்கொண்டன். இப்ப பாழாய்ப்போன சந்தேகம்.... அதுக்குப் பயந்து பயந்து வாழவேண்டிக் கிடக்கு...."

"கவலைப்படாதேங்கோ.... காலம் எப்பவும் கஸ்டமாக இருக்காது. அக்கா, எனக்கொரு சம்பந்தம் ஊரிலையிருந்து பேசி வந்தது. பிறக்கறாசியாற்றை மகளாம்.... அவவைப்பற்றி உங்களிட்டை ஏதாலும் விசாரிக்கலாம் எண்டுதான் வந்தனான்..."

"என்னத்தைப்பற்றி விசாரிக்கப் போறீர்? அழகு... குணம்.... படிப்பு... பண்பு... இல்லாட்டில் பணம் காசு...?! நான் சொல்லுறனெண்டு குறை நினைக்காட்டில் ஒண்டு சொல்லுறன்..."

"சொல்லுங்க..."

"உங்கடை தாய் தேப்பன் உங்களுக்கு நல்லதைத்தான் செய்வினம்.... அவையிலை சந்தேகப்படாதையுங்கோ... ஒவ்வொரு மனுசருக்கும் ஒவ்வொரு குறை இருக்கு. ஒருத்தருக்குப் படிப்பு இல்லாட்டில் நல்ல குணம் இருக்கும். பணம் இல்லையெண்டால் நல்ல அழகு இருக்கும். வாழ்க்கைக்கு இதுகளெல்லாம் ஓரளவுக்குத்தான் தேவை... விட்டுக் கொடுத்து வாழுற மனம்தான் முக்கியம்... இண்டைக்கு என்ரை வாழ்க்கையைப் பாருங்கோ... காதலிச்சம்.... படிப்பு "ரியூசன்" எண்டு தாய் தேப்பனை ஏமாத்திக் காதலிச்சம்.... ஓருயிர் ஈருடல் எண்டமாதிரி.... ஆனால் எல்லாம் கொஞ்சநாள் கவர்ச்சி.... இப்ப கவர்ச்சி போய் சந்தேகம் வந்து நான் ஒரு சிறைப்பறவையாய்.... ஓமோம்.... அவருக்கு என்னிலை சந்தேகம்... அடி உதை... குத்து.... நான் ஆசையாகத் தேடிக் கொண்ட வாழ்க்கை. என்ரை "பாஸ்போட்"கூட என்னட்டை இல்லை. அவர்தான் கொண்டு திரியுறார்.... ஓடீடுவனாம்..."

சுவரில் பொருத்தியிருந்த ஒலிபெருக்கியில் வசந்தியின் குரல் விம்மியது.

நந்தனுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை.

"நந்தன்.... விசாரணைகளாலை ஒரு வாழ்க்கையை வளமாக அமைக்க முடியாது. எல்லாத்துக்கும் மனம்தான் முக்கியம். மனம் இருந்தால் மார்க்கம் தானாய்த் தெரியும்.... இப்பிடிச் சொல்லுறதுக்காகக் கோபிக்கிறீரோ..."

"இல்லை அக்கா.... நான் மெனக்கெட்டு வந்ததுக்கு உங்கடை அறிவுரைமூலம் பலன் கிடைச்சிருக்கு.... நான் போவிட்டு வாறன் அக்கா...."

ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் படிப்பினையாகிறது.

அம்மாவுக்குச் சம்மதம் தெரிவித்துக் கடிதம் எழுதினான். நிச்சயமாக அம்மா சந்தோசப்படுவாள். அவள் சந்தோசமடைந்தால் அதுவே வாழ்வின் களிப்பிற்கு அஸ்திவாரமாகும்.

அம்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

Ööö

"அன்புள்ள நந்தன்,

உனது கடிதம் கிடைத்து மிகவும் சந்தோசம். ஆனால் விதி வேறுவிதமாக அமைந்துவிட்டது.

பெண் வீட்டார் உன்னைப்பற்றி விசாரித்தார்களாம். உனக்குப் உந்த நாட்டுப் புத்தகம் இல்லையாம். சொந்த வீடு இல்லையாம். தொழிற்சாலை வேலை இல்லையாம். ஒரு "கார்"கூடச் சொந்தமாக இல்லையாம்.

அதனால் வேறு இடத்தில் சம்பந்தம் பேசுகிறார்களாம்......."

கடிதம் தொடர்ந்தது.

"வசந்தி அக்காவைப்போல ஒருத்தியை அவர்கள் சந்திக்கவில்லைப்போலும்."

நந்தனுக்கு உரத்துச் சிரிக்க வேண்டும்போல் இருந்தது.

(பிரசுரம்: பூவரசு)

நன்றி : யாழ் முற்றம் http://www.yarl.com/articles/node/384

Link to comment
Share on other sites

இப்படி பற்பல சம்பவங்கள்.. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்!

மறுவிசாரணை

சந்தியில் இருக்கும் தபாற்கந்தோர். அதற்குப் பக்கத்தில் உள்ள மதவடிக் கல்வீடு. அதில் இரண்டு பெட்டைகள். அதில் ஒன்றாக இருக்குமா? அட... அதுகள் "கிளாக்கர்" நாகலிங்கத்தாற்றை மகள்மார்.

அந்தப் பள்ளிக்கூடம். அதன் பின்பக்கத்து முள்ளு வேலியாலை தெரியும் வீட்டிலை ஒருத்தி. சைக்கிள்கூட வைத்திருந்தாள். கிப்பித் தலை. அவளாக இருக்குமா?

அட... அது "ஜேபி"யின்ரை மகள்.

பிறக்கறாசியார் பொன்னம்பலமே நினைவில் வர மறுத்தபோது... மகளை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?!

ஆக்கம்: இராஜன் முருகவேல்

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அதேபோல, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவனை அம்மாவின் கடிதம் உசுப்பிவிட்டு, தற்போது "உணவு செல்லவில்லை சகியே, உறக்கம் கொள்ளவில்லை" என்ற நிலை. நந்தகுமாரன். செல்லமாக நந்தன். ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்கள் இருக்குமா? இருக்கும். வசதியாக உள்ளானா? உள்ளான்.

அன்று அம்மாவின் கடிதம் வந்திருந்தது.

"அன்புள்ள நந்தன்!...." என்று ஆரம்பித்து, ஊர்ப் புதினங்கள் கொழும்புப் புதினங்கள் எனச் சுற்றிச் சுழன்று விசயத்துக்கு வந்தாள். "இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடியே வாழப்போறாய்? உனக்கும் முப்பது வயதாகுது. காலாகாலத்திலை ஒரு நல்ல இடமாய்ப் பார்த்து கலியாணம் கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிறக்கறாசியார் பொன்னம்பலம் தன்னுடைய இரண்டாவது மகளுக்கு உன்னைக் கேட்டு வந்தவர். அவையும் வெள்ளவத்தையில்தான் இருக்கினம். உனக்குச் சம்மதம் என்றால் மேற்கொண்டு கதைக்கலாம்..."

கடிதம் வந்த விசயத்தைச் சொல்லி, சில வேண்டுகோள்களை விடுத்துப் பதிலை எதிர்பார்த்து, அன்பைத் தெரிவித்து முடிந்தது.

"பிறக்கறாசியார் பொன்னம்பலத்தின்ரை மகள்....?!" நினைத்துப் பார்த்தான். மனத்திரையில் பத்து வருடத்துக்கு முந்திய காட்சிகள் பசுமையாகப் படம் விரித்தன.

சந்தியில் இருக்கும் தபாற்கந்தோர். அதற்குப் பக்கத்தில் உள்ள மதவடிக் கல்வீடு. அதில் இரண்டு பெட்டைகள். அதில் ஒன்றாக இருக்குமா? அட... அதுகள் "கிளாக்கர்" நாகலிங்கத்தாற்றை மகள்மார். அந்தப் பள்ளிக்கூடம். அதன் பின்பக்கத்து முள்ளு வேலியாலை தெரியும் வீட்டிலை ஒருத்தி. சைக்கிள்கூட வைத்திருந்தாள். கிப்பித் தலை. அவளாக இருக்குமா? அட... அது "ஜேபி"யின்ரை மகள்.

பிறக்கறாசியார் பொன்னம்பலமே நினைவில் வர மறுத்தபோது... மகளை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்? அம்மாமீது ஆத்திரமாக வந்தது. கடிதத்தோடு ஒரு போட்டோவாவது கேட்டு வாங்கி அனுப்பியிருக்கலாம். கலியாணம்தானே... இவ்வளவு காலத்துக்குப் பிறகு அம்மாவுக்கு அக்கறை ஏற்பட்டிருக்கிறது. சம்மதம் தெரிவித்துவிடலாமா?! பெட்டை எப்படி இருப்பாள் என்று தெரியாமல் எவ்வாறு சம்மதம் தெரிவிப்பது?

கிளியை எதிர்பார்த்துக் கற்பனைகளில் காதல் சாம்ராஜ்யம் அமைத்துக் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, மைனா வந்து குதித்துச் சாம்ராஜ்யத்தைச் சிதறடித்துவிட்டால்.... வாழ்க்கையே நரகமாகிவிடும். "போட்டோ அனுப்பினால்தான் முடிவு கூறலாம்" என அம்மாவுக்கு அறிவித்தால் என்ன?! தவறாக நினைத்து விடுவாள். தனது பிள்ளை தன்னிலை நம்பிக்கை இல்லாமல் போட்டோ கேட்கிறானே என்று வருத்தப்படுவாள். பெட்டை எப்படி இருப்பாள் என்று தெரியாமல் பதில் எழுத மனம் ஒப்பவில்லை.

அம்மாவுக்கு தீர விசாரித்துப் பெட்டையைப்பற்றி அறிந்ததன் பின்னர் பதில்போட்டால் என்ன? தாமதமானால் வலிய வந்த சம்பந்தம் தூர விலகிப் போய்விடும். பிறகு, பதில் "லேற்"- அதனால் சம்பந்தம் "லொஸ்ற்"- வாழ்க்கையே "வேஸ்ற்"- அம்மா சொல்லுவாள் நீ எதிலையுமே "லாஸ்ற்".

நந்தனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. என்னவாவது செய்தாக வேண்டும். அதுவும் மிக விரைவாக. யாராவது ஊர் ஆட்களைத் தேடிப் பிடித்தால்தான் விசாரிக்கலாம். ஜேர்மனியில் வாழும் ஊராரைப் பட்டியல் போட்டான். மிகவும் தூரத்தில் வசிப்பவர்களைத் தள்ளிவிட்டான். அவசரம் என்றால் பிறகு தேடிப் பிடிக்கலாம்.

வசந்தி அக்கா.... நூறு கிலோமீற்றர் தூரத்தில்தான் வசிப்பிடம். குடும்பமாக வாழ்கிறார். விசாரிக்கலாம். வசந்தி அக்காவுக்கு எத்தனை பிள்ளைகளோ தெரியவில்லை. போகும்போது வெறுங்கையுடனா போவது?!

Ööö

வரிசையான வீதியெங்கும் உயர்ந்து கம்பீரமாக நிற்கும் அடுக்கு மாடி வீடுகள். அவற்றுள் ஒன்றின் வாசலில்போய் வீட்டிலக்கத்தைச் சரி பார்த்துக்கொண்டு, வசந்தியின் பெயர் பொறித்த அழைப்பு மணியைத் தேடினான்.

"கணேசன்"

வசந்தியின் கணவன்.

அழுத்தினான்.

சிறிது மௌனத்தின் பின் சுவரில் பதிந்திருந்த சிறிய ஒலிபெருக்கியில் வசந்தி அக்காதான்....

"ஹலோ! ஆரது..."

"நான் நந்தன்...."

"நந்தனோ...? எனக்குத் தெரியேலை..."

"என்ன அக்கா உப்பிடிச் சொல்லுறியள்?! நான் சின்னையா வாத்தியாற்றை மகன்..."

"ஓ.... ஓ.... தெரியும். தெரியும். என்ன திடீரெண்டு இந்தப் பக்கம்..."

"உதை றோட்டிலை நிக்க வைச்சே விசாரிக்கிறது? கதவைத் திறவுங்கோவன்..."

பிரயாணக் களைப்பு. அவசரத்தில் தேனீரைமட்டும் பருகிவிட்டு வெளிக்கிட்டது. வசந்தியின் வீட்டில் சாப்பிடலாம்தானே என்ற எண்ணம். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை.... அதுவும் பல வருடங்கள் கழித்து வரும் விருந்தினர்களை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை அவனுக்கு.

சிறிதுநேரம் வசந்தியின் குரலைக் காணவில்லை.

"என்ன அக்கா.... என்ன யோசினை....?!"

"யோசினை இல்லை நந்தன். பயம்..."

"பயமோ...?"

ஆச்சரியத்துடன் கூவினான்.

"எனக்கோ..."

"அவருக்குப் பயம்.... நீர் ரெலிபோன் எடுத்துக்கூடச் சொல்லாமை வந்திட்டீர்...."

"உங்கடை ரெலிபோன் நம்பர் என்னட்டை இல்லை அக்கா..."

"குறை நினையாதையும்.... அவர் இல்லாத நேரத்திலை ஆரையும் வீட்டுக்குள்ளை விடக்கூடாதெண்டு உத்தரவு.... அதுதான் நந்தன். நீர் என்ன நினைப்பீரோ தெரியாது..."

வசந்தியின் குரல் பரிதாபமாக ஒலித்தது.

நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் ஒரு நாட்டில் இப்படியொரு கணவன். அவருக்கு இப்படியொரு மனைவி, கூண்டுக்கிளியாக...!!

நாடு மாறினாலும் பாசை மாறினாலும் உடைகள் மாறினாலும் உள்ளத்தை மாற்ற விரும்பாத மனிதர்கள்.

"அக்கா! அப்ப நான் போவிட்டு வாறன்..."

"கொஞ்சம் பொறும் நந்தன்.... வீட்டுக்குள்ளைதான் கூப்பிட முடியேலை. என்ன விசயமாய் வந்தனீரெண்டு கேக்கலாமில்லையா?"

"நாலு சுவர்களுள் அடைபட்டுக்கிடக்கும் இவளிடம் சொல்லுவதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?" யோசித்தான்.

"விருப்பமில்லாட்டால் வேண்டாம்...."

"இல்லை அக்கா... விசயத்தைச் சொல்லி விசாரிக்கத்தானே விடியவெள்ளண்ண எழும்பி இவ்வளவு தூரம் வந்திருக்கிறன்.... ஆனால் இப்பிடி வாசலிலை நிண்டு கதைக்கிறது புது அனுபவம்..."

"எனக்கு இது பழகிப்போன விதி.... அப்பா அம்மா பெரிசில்லை, காதலன்தான் வேணுமெண்டு நானே என்ரை வாழ்க்கையை அமைச்சுக்கொண்டன். இப்ப பாழாய்ப்போன சந்தேகம்.... அதுக்குப் பயந்து பயந்து வாழவேண்டிக் கிடக்கு...."

"கவலைப்படாதேங்கோ.... காலம் எப்பவும் கஸ்டமாக இருக்காது. அக்கா, எனக்கொரு சம்பந்தம் ஊரிலையிருந்து பேசி வந்தது. பிறக்கறாசியாற்றை மகளாம்.... அவவைப்பற்றி உங்களிட்டை ஏதாலும் விசாரிக்கலாம் எண்டுதான் வந்தனான்..."

"என்னத்தைப்பற்றி விசாரிக்கப் போறீர்? அழகு... குணம்.... படிப்பு... பண்பு... இல்லாட்டில் பணம் காசு...?! நான் சொல்லுறனெண்டு குறை நினைக்காட்டில் ஒண்டு சொல்லுறன்..."

"சொல்லுங்க..."

"உங்கடை தாய் தேப்பன் உங்களுக்கு நல்லதைத்தான் செய்வினம்.... அவையிலை சந்தேகப்படாதையுங்கோ... ஒவ்வொரு மனுசருக்கும் ஒவ்வொரு குறை இருக்கு. ஒருத்தருக்குப் படிப்பு இல்லாட்டில் நல்ல குணம் இருக்கும். பணம் இல்லையெண்டால் நல்ல அழகு இருக்கும். வாழ்க்கைக்கு இதுகளெல்லாம் ஓரளவுக்குத்தான் தேவை... விட்டுக் கொடுத்து வாழுற மனம்தான் முக்கியம்... இண்டைக்கு என்ரை வாழ்க்கையைப் பாருங்கோ... காதலிச்சம்.... படிப்பு "ரியூசன்" எண்டு தாய் தேப்பனை ஏமாத்திக் காதலிச்சம்.... ஓருயிர் ஈருடல் எண்டமாதிரி.... ஆனால் எல்லாம் கொஞ்சநாள் கவர்ச்சி.... இப்ப கவர்ச்சி போய் சந்தேகம் வந்து நான் ஒரு சிறைப்பறவையாய்.... ஓமோம்.... அவருக்கு என்னிலை சந்தேகம்... அடி உதை... குத்து.... நான் ஆசையாகத் தேடிக் கொண்ட வாழ்க்கை. என்ரை "பாஸ்போட்"கூட என்னட்டை இல்லை. அவர்தான் கொண்டு திரியுறார்.... ஓடீடுவனாம்..."

சுவரில் பொருத்தியிருந்த ஒலிபெருக்கியில் வசந்தியின் குரல் விம்மியது.

நந்தனுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை.

"நந்தன்.... விசாரணைகளாலை ஒரு வாழ்க்கையை வளமாக அமைக்க முடியாது. எல்லாத்துக்கும் மனம்தான் முக்கியம். மனம் இருந்தால் மார்க்கம் தானாய்த் தெரியும்.... இப்பிடிச் சொல்லுறதுக்காகக் கோபிக்கிறீரோ..."

"இல்லை அக்கா.... நான் மெனக்கெட்டு வந்ததுக்கு உங்கடை அறிவுரைமூலம் பலன் கிடைச்சிருக்கு.... நான் போவிட்டு வாறன் அக்கா...."

ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் படிப்பினையாகிறது.

அம்மாவுக்குச் சம்மதம் தெரிவித்துக் கடிதம் எழுதினான். நிச்சயமாக அம்மா சந்தோசப்படுவாள். அவள் சந்தோசமடைந்தால் அதுவே வாழ்வின் களிப்பிற்கு அஸ்திவாரமாகும்.

அம்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

Ööö

"அன்புள்ள நந்தன்,

உனது கடிதம் கிடைத்து மிகவும் சந்தோசம். ஆனால் விதி வேறுவிதமாக அமைந்துவிட்டது.

பெண் வீட்டார் உன்னைப்பற்றி விசாரித்தார்களாம். உனக்குப் உந்த நாட்டுப் புத்தகம் இல்லையாம். சொந்த வீடு இல்லையாம். தொழிற்சாலை வேலை இல்லையாம். ஒரு "கார்"கூடச் சொந்தமாக இல்லையாம்.

அதனால் வேறு இடத்தில் சம்பந்தம் பேசுகிறார்களாம்......."

கடிதம் தொடர்ந்தது.

"வசந்தி அக்காவைப்போல ஒருத்தியை அவர்கள் சந்திக்கவில்லைப்போலும்."

நந்தனுக்கு உரத்துச் சிரிக்க வேண்டும்போல் இருந்தது.

(பிரசுரம்: பூவரசு)

நன்றி : யாழ் முற்றம் http://www.yarl.com/articles/node/384

உங்கள் கருத்துக்கு நன்றி ... நான் எனது அடுத்த கதயை இது மாதிரி ஒரு கதையதான் எழுதி வத்து இருக்குறேன்.. நான் நேரில் பார்த்த விடயம்.. இப்படி பட்டவர்களும் இருக்குறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாய் இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.