Jump to content

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாப்ஸ்,முதலில உங்கள் விடாமுயற்ச்சிக்கும் ஊக்த்திற்க்கும் பாராட்டுக்கள்.நீங்கள் எழுதியதில் ஒன்று.வேறு திறமைகளை வளர்த்துக்கொள்வதன்மூலம் மன உளைச்சலில்இருந்து விடு படலாம் என்பது நூறு வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல் படி

எல்லோருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கத் தான் செய்கிறது.

நீங்களாக உங்களைத் தாழ்திக் கொள்கிறீர்களே தவிர நேரிலேயே சந்தித்தவன் என்றபடியால் சொல்கிறேன் நீங்கள் சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை.

சகலகலாவல்லவனான நீங்கள் எப்போதும் சந்தோசமாகவும் நலமுடனும் இருக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி , உங்கள் சொந்தக் கதையை வாசித்த போது ........ சிறு வயதில் பாடசாலையில் படிக்கும் காலங்களில் , சக மாணவர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் சிரமங்களை என்னால் நினைத்து பார்க்க கூடியதாக உள்ளது .

அப்படியிருந்தும் மனது சோர்வடையாமல் தன்னம்பிக்கையும் , நெஞ்சுறுதியும் கொண்டு அந்த காலத்தை தாண்டியதன் மூலம் நீங்கள் பெரும் பாராட்டுக்குரியவர் .

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நன்றி பிரபா, ஈழப்பிரியன் அண்ணா, சபேஸ், தமிழ்சிறி, சஜீவன்...

அட கனகாலத்துக்கு பிறகு இந்தத்திரியை மீண்டும் கிளறிவிடுறன் எண்டு யோசிக்ககூடாது. அது என்ன எண்டால் நான் இங்கு சொன்ன பிளவடைந்த உதடு + அண்ணம் பிரச்சனை பற்றிய இந்தியாவில தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் Smile Pinki நேற்று ஒஸ்கார் விருதை பெற்று இருக்கிது. படத்திண்ட கதை ஒரு சிறுமியை பற்றியது. அதாவது மேற்கூறிய பிரச்சனையுடன் பிறக்கும் ஒரு சிறுமிக்கு சிகிச்சை செய்யப்பட்டு புதுவாழ்வு அளிக்கப்படுகிது.

pinki_491756a.jpg

A smiling Pinki and her father, Rajendar Sonkar, joined Megan Mylan, the documentary director, at the Oscar awards ceremony [Times Online]

காணொளி:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி! நீங்கள் செய்தது சிகிச்சை என்பதைவிட மன ஒருமைப்பாட்டுடன் கூடிய தவம்!

இதுபோன்ற ஒரு குறைபாடு எனது மருமகனுக்கும் பிறக்கும்போதே இருந்தது. அவர் இங்கேயே பிறந்தபடியால் அவர் வளர, வளர அததற்குரிய காலங்கள் குறிக்கப்பட்டு 4,5 அறுவைச் சிகிச்சையுடன் அடையாளமே தெரியாமல் அழகாக மாற்றி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

இந்த நிஜத்தை பார்த்த போதிலிருந்து முரளி குறித்து தனியாக பெருமைப்பட்டேன்.

உங்கள் உறுதிக்கு இறையருள் மேலும் கிடைக்க வேண்டும்.

அடுத்தவருக்கு உதவ நினைக்கும் உங்கள் மனதுக்கு நல்லது நடக்க வேண்டுகிறேன்.

இன்று தற்செயலாக பீபீசீ கேட்ட போது

இதைக் கண்ணுற்றேன்.

இம் முறை ஒஸ்கார் விருது கிடைத்த விவரணப்படம் குறித்த தகவல் அது.

''பிங்கி'' விவரணப்படத்துக்கும் ஆஸ்கார் விருது

_45502156_pinkiadd226.jpg_45502676_pinki_smiles_226.jpg

(முன்னும் பின்னும்)

வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் 'பிங்கி' என்கிற எட்டுவயது கிராமத்து ஏழைச் சிறுமியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட விவரணப்படத்துக்கும் இந்த வருடம் ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.

'கிளப்ட் லிப்ட் பேலட்' எனப்படும் மேலண்ணம் மற்றும் மேலுதட்டு பிளவுடன் பிறந்த இந்த பிங்கி, அந்த பிறவிக்குறைபாடு காரணமாக தன் வயதொத்த குழந்தைகளின் வெறுப்புக்கும் கேலிக்கும் உள்ளாகி அவமானப்பட்டு ஒதுங்கி வாழ்கிறாள். பிறகு அறுவை சிகிச்சை மூலம் அந்த குறைபாடு நீக்கப்பட்ட பிறகு அந்த சிறுமி தன்னம்பிக்கையுடன் மற்றக் குழந்தைகளோடு விளையாடி மகிழ்வதாக அந்தத் திரைப்படம் நிறைவடைகிறது.

இந்தியாவில் சுமார் 10 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் இப்படியான மேலண்ணம் மற்றும் மேலுதட்டு பிளவு அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், ஆண்டுக்கு சுமார் 35,000 குழந்தைகள் இந்த குறைபாட்டுடன் பிறப்பதாகவும், இந்த குறும்படத்தை தயாரித்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தக் குறும்படத்திற்கு கிடைத்திருக்கும் ஆஸ்கர் விருது மூலம் இந்த குறைபாடு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் இவர்களுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள இது ஒரு தூண்டுகோலாக அமையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த குறும்படத்திற்கு கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம் குறித்தும், இதனால் மேலண்ணம் மற்றும் மேலுதட்டு பிளவால் பாதிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய குழந்தைகளின் வாழ்வில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் சென்னையில் இருக்கும் மேலண்ணம் மற்றும் மேலுதட்டு பிளவை குணப்படுத்தக்கூடிய முக சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.

இது குறித்த வைத்தியர் பேட்டி பலருக்கு உதவும். கடைசியில் அறிவியல் அரங்கத்தில் வருகிறது கேளுங்கள்.

பலருக்கு பிரயோசனமான தகவல்:-

http://www.bbc.co.uk/mediaselector/ondeman...s=1&size=au

Link to comment
Share on other sites

நன்றி தலைவன்.

குருஜி,

அது என்ன பிரச்சனை எண்டால்.. இந்த பிளவடைஞ்ச அண்ணம், உதட்டிலும் பலவிதமான caseகள் இருக்கிது.

ஒண்டு - குழந்தை பிளவடைஞ்ச அண்ணத்துடன் மாத்திரம் பிறக்கலாம்.

அல்லது - குழந்தை பிளவசைஞ்ச உதட்டுடன் மாத்திரம் பிறக்கலாம்.

அல்லது - குழந்தை பிளவடைஞ்ச அண்ணம + பிளவடைஞ்ச உதடு இவை ரெண்டுடனும் பிறக்கலாம் [நான் இந்த வகை].

இதனால.. ஒவ்வொருவரிண்ட நிலமையைப் பொறுத்து சத்திர சிகிச்சை இலகுவாகவும், மிகவும் சிக்கல்கள் நிறைஞ்சதாகவும் இருக்கலாம்.

நான் ரெண்டு கிழமைகளுக்கு முன்னம் சிகிச்சைக்காக சிறுவர் வைத்தியசாலைக்கு போயிருக்கேக்க அங்க ஒரு குழந்தையை கண்டன். அவவுக்கு நாலு வயசு. அவவுக்கும் அதே பிரச்சனை. ஆனால்.. வெளியால பார்த்தால் ஒருவரும் துளியும் கண்டுபிடிக்கவே முடியாது. ஏன் எண்டால் அவவுக்கு பிளவடைஞ்ச அண்ணம் மாத்திரம்தான் இருந்திச்சிது. இதனால ரெண்டரை வயசில செய்த ஒரு சத்திரசிகிச்சையோட எல்லாம் சரியாகீட்டிது எண்டு அவவிண்ட அப்பா சொன்னார்.

எண்டாலும்... பிரச்சனை என்ன எண்டால் பற்கள் முளைக்கேக்க பிரச்சனை வரப்பார்க்கும். அது வாயுக்க கண்டகண்ட இடம் எல்லாம் முளைச்சால் பிறகு அதைச்சரிசெய்ய ஓடித்திரியவேணும். இதனால மீண்டும் சிகிச்சைகள் செய்யவேண்டி இருக்கும்.

நாலு சத்திரசிகிச்சைகளுக்கு பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்படுறது எண்டுறது மிகப்பெரிய விசயம்தான்.

மேல Smile Pinki படத்தில வருகிற சிறுமிக்கும் இதே நிலமைதான் இருக்கும். அதாவது அங்கு இவர்கள் ஒரு பகுதியாக சிகிச்சை செய்து இருந்தாலும்.. முற்றிலுமாக எல்லாத்தையும் சரிசெய்ய நீண்ட காலம் பிடிக்கும். தொடர்ச்சியான கட்டம் கட்டமான பல சத்திரசிகிச்சைகளை செய்யவேண்டிவரும். ஆனாலும்.. இந்தியாவில வறுமைப்பட்ட இடத்தில ஓரளுக்காவது Basic ஆன சத்திரசிகிச்சைகளை செய்து பிரச்சனையை ஓரளவுக்காவது குறைத்து விடுறது மிகப்பெரிய விசயமே.

Link to comment
Share on other sites

  • 10 months later...

இனிய வணக்கங்கள், தற்செயலாக மீண்டும் இந்த பழையதிரியை தூசுதட்டி எடுக்கவேண்டி வந்துள்ளது.

முதலாவது விடயம் - எனது சிகிச்சைகள் - வாய் - பற்கள் - தாடைப்பகுதி கடந்த 2009 நவம்பர் மாதம் முற்றிலுமாக சுபமாக நிறைவடைந்துவிட்டது. வரும் February - அடுத்தமாதம் மூக்கில் சில - Touch up - சிறிய வெட்டுக்கொத்து - சத்திரகிகிச்சை இருக்கிது. இதுவே மூக்குப்பகுதியில நடைபெறுகிற கடைசி சத்திரசிகிச்சை - Plastic Surgery ஆக இருக்கும். இயற்கையான மூக்குமாதிரி மாற்றமுடியாது, ஆனால்.. தற்போது இருக்கும் தோற்றத்தைவிட சிறப்பானது ஆக்கமுடியும் என்று எனது சத்திரசிகிச்சை நிபுணர் கூறி இருக்கிறார். இவரே ஏற்கனவே மூன்று தடவைகள் மூக்குப்பகுதியில் Plastic Surgery செய்தவர். இவர் பற்றிய விபரங்களை - முடியுமானால் இவருடனானன் ஓர் நேர்காணலை பின்பு ஒரு காலத்தில் தருகின்றேன்.

நான் அண்மையில் எனக்கு நான் குழந்தையாக இருந்தபோது - பிறந்து மூன்று மாதங்களிலும், பின்னர் மூன்று வயதிலும்.. சத்திரசிகிச்சை செய்த சத்திரசிகிச்சை நிபுணர் Dr.Walpita அவர்கள் பற்றிய ஓர் செய்தியை கூகிழில்தேடல் செய்து எடுத்தேன். இவர் 2008ம் ஆண்டு தனது 82வது வயதில் இவ்வுலகைவிட்டு பிரிந்துவிட்டதாக அறியமுடிந்தது. இன்று இவர் புகைப்படத்தை பார்க்கும்போது எத்தனையோ பல நினைவுகள் எனக்குள் சுழன்று அடிக்கின்றது. எனது அம்மா.. இவர் எனக்கு சத்திரசிகிச்சை செய்துமுடித்து பின்னர் அம்மாவிடம் என்னை காட்டியபோது இவர் கால்களில் விழுந்து வணங்கியதாக சொல்லி இருந்தா. நானும் நன்றியுடன் நினைவுகூறுகின்றேன்.

Dr.Walpitaபற்றிய விபரங்கள்:

drwalpita.jpg

Dr P R Walpita – Paediatric Surgeon

MBBS (Ceylon), FRCS (Edin.), FRCS (Eng.)

Dr P R Walpita, who passed away at the age of 82 years, was a well known paediatric surgeon. He received his early education at St. John’s College, Panadura and later at Royal College, Colombo. At Royal College he excelled in studies as well as sports, representing the school in boxing (at the Stubbs Shield) and rugby.

He graduated MBBS (Ceylon) in 1946 and after serving in many parts of the country, proceeded to the UK for postgraduate studies in 1951. While in the UK he obtained the fellowship of the Royal College of Surgeons (Edin.) and the Royal College of Surgeons (England). During this period he worked at Walton Hospital, Liverpool, St James Hospital, Balham, and at St. Luke’s Hospital, Maidenhead, London.

He returned to Sri Lanka (then Ceylon) in 1955 and functioned as a surgeon in many parts of Sri Lanka. He participated in the 1st Asian Gastroenterological Congress in Tokyo in 1960 and another in Chandigarh in 1962. During the period 1961-62 he was a Nuffield Foundation Research Fellow in cardio-vascular surgery in the UK attached to St Mary’s Hospital, London. On his return he was appointed as paediatric surgeon, Lady Ridgeway Hospital (LRH), Colombo and was promoted as consultant paediatric surgeon in 1969. The 1960’s were the formative years of paediatric surgery at LRH; his colleagues were Professor Milroy Paul, Professor M V P Peiris (both part-time) and Dr F A Sandrasagara. They were the pioneers of paediatric surgery in Sri Lanka, running two units.At present, there are many paediatric surgical units in Sri Lanka; 4 at LRH, one each in Kandy, Peradeniya, Karapitiya and at Sri Jayawardenapure Hospital, Kotte. There is

a total of 13 paediatric surgeons in Sri Lanka at present.

During this period he kept in touch with advances in his speciality by participating in conferences such as the World Cardiological Congresses in Stockholmand New Delhi, Afro-Asian Paediatric Congress in Karachchi and the centenary celebrations of the Royal Children’s Hospital in Melbourne, Australia. In 1971, he was elected President of the Sri Lanka Paediatric Association (predecessor to the Sri Lanka College of Paediatricians) and became a member of the British Association of Paediatric Surgeons. In 1972 he had the rare privilege of becoming a Senior Commonwealth Fellow in paediatric surgery and worked with Mr H H Nixon at the Hospital for Sick Children, Great Ormond Street, London, where I used to meet him frequently whilst researching. During this period he attended Professor Fritz Rehbends Kinder Clinic at Bremen, Germany, the surgical unit at Alder-Hey Hospital in Liverpool, the paediatric surgical clinics of Professor Gunner Grobe at Uppsala, Sweden and Professor Th. Ehreupeis clinic at the Karolinska Institute, Sweden. Upon his return, he was appointed senior consultant paediatric surgeon in which post he remained until he retired in April 1978. During the 1970’s I was closely associated with him in jointly managing verycomplicated cases. I am personally aware of his dedication to work. In these years void of private practice he used to work long hours and spend his own money to purchase expensive medications for the benefit of poor patients. These poor patients were blissfully ignorant of their anonymous benefactor! In 1976, he visited the Peoples Republic of China as a member of an official delegation and lectured at the Peking Children’s Hospital and at the Shanghai Children’s Hospital. After his retirement he functioned as a consultant surgeon at the New General Hospital, Kaduna, Nigeria till his return to Sri Lanka in 1994. In 1997 he was awarded the Fellowship of the Sri Lanka College of Paediatricians in its inaugural year.

Dr Walpita was an excellent teacher and the undergraduates like us as well as postgraduates were the beneficiaries. I remember very vividly how I attended Dr Walpita’s ward round at LRH in 1966, when I should have been assisting Professor R A Navaratna in the operating theatre, for which I was duly punished!! He examined at the Final MBBS and DCH examinations. Dr Walpita had many publications to his credit, both in local and international journals such as the British Journal of Surgery, Journal of Paediatric Surgery and the Archives of Diseases in Childhood (where I was a coauthor). Latterly he led a very spiritual austere life, spending many hours in deep meditation.

Dr Walpita hailed from an illustrious family from Horana. One brother (PGW) was a group captain in the Sri Lanka Air Force, another (SWG) a judge of the Supreme Court as well as another brother (SJW) who was a civil servant, vice-chancellor and an ambassador. He is survived by his wife, son, daughter and grand-daughter.

May he attain the supreme bliss of Nirvana!

Sanath P Lamabadusuriya

தகவல் மூலம்: Sri Lanka Journal of Child Health 2008; 37: 31-32

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கடைசி சத்திர சிகிச்சையும் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...உங்கள் தன்னம்பிக்கைக்கு எனது பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

மச்சான் நீங்கள் பழைய திரியை தூசி தட்டி எடுத்தமைக்கு நன்றி... இந்த திரியை நான் இன்றுதான் படிக்கிறேன்...உங்கள் கடசி சந்திர சிகிச்சையும் வெற்றிபெற கடவுளை வேண்டுகிறேன்..உங்கள் விடாமுயற்ச்சிக்கும் ஊக்கத்திர்க்கும் பாராட்டுக்கள் மச்சான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் உங்களின் இந்த திரியை கடந்த இரண்டு நாட்களாக திரும்பத் திரும்ப படித்துக் கொண்டு இருக்கிறன். உங்களுக்கு நடக்க இருக்கும் அடுத்த சத்திரசிகிச்சையும் வெற்றிபெற்று நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத் தோடு வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.இந்த அளவுக்கு உங்களை முன்நேற்றியது எண்டால் உங்கள் விடா முயற்சி தான் அதற்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மச்சான்......இனிய வளமான் புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள். .வைத்திய தேவையை பற்றிய விடயங்களை ஆர்வத்தோடு தேடி அதை பற்றி எழுதும் உங்கள் விடா முயற்சியை பாராட்டுகிறேன். அடுத்த சிகிச்சியையும் வெற்றிகரமாக் முடித்து .......நலமே வருக.

Link to comment
Share on other sites

உங்கள் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்ச்சிக்கும் பாராட்டுக்கள் மச்சான். அடுத்த சத்திரசிகிச்சையும் வெற்றிகரமாக அமைந்து சிறப்போடு வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி ரதி, சுஜி, யாயினி, நிலாமதி அக்கா, ஈழமகள். பிறகு சமயம் வாய்க்கும்போது இவை சம்மந்தமான மேலும் பல அனுபவங்களை, மற்றவர்களுக்கும் பயனுள்ள விசயங்களை பகிர்ந்துகொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

உங்களை போல இயற்கையின் மாற்றங்களால (வேறுவகையில்) பாதிக்கப்பட்டவன் என்ற வகையில எனக்கு ஒரு மனஉறுதிய தந்தது.

நான் myopathy / muscular distophy / muscle weaknes & wasting (இப்பிடி மூன்று பேரையும் சொல்லுறாங்க doctors) என்ற நோயால பாதிக்கபட்டுள்ளன். இது genetic disease எண்டும் சொன்னவங்க அதால இந்த நோய்க்கு treament தற்போதைக்கு இல்லை.

உங்களுக்கு இல்லாட்டி இதை வாசிக்கிறவங்கள் யாருக்காவது இவ்வருத்ததிற்கு எதாவது செய்ய முடியுமா என அறியத்தரவும். stem cells theraphy மூலமா குணப்படுத்த முடியுமா? தகவல் தெரிந்தால் stkumaran78@gmail.comதொடர்பு கொள்ளுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான், நீங்கள் கடந்து வந்தபாதையைப் பார்க்கும் போது மனம்கனக்கிறது. உங்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பது போற்றப்படத்தக்கது. முன்பும் ஒரு தடவை குறிப்பிட்டு இருந்தேன், பலதரப்பட்ட விடயங்களில் ஒரே நேரத்தில் நீங்கள் காண்பிக்கும் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. இவருக்குள் இத்தனை திறமைகளா என பல சந்தர்ப்பங்களில் வியந்து நின்றிருக்கிறேன். தொடர்ந்து நடக்கும் சத்திரசிகிச்சை வெற்றிபெற என்னுடைய உள்ளம் தவிப்புடன் வாஞ்சிக்கின்றது. நீங்கள் என்றுமே நலமாக வாழ வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

மச்சான், நீங்கள் முன்பு சத்திரசிகிச்சைக்கு உள்ளாகி இருந்த போது யாழில் இணைந்து கருத்தெழுத ஆரம்பித்ததாக சொல்லியது நினைவிருக்கிறது. ஆனால் இந்த பதிவை வாசிக்கவில்லை. இன்று தான் வாசித்தேன். உங்கள் மன வலிமை, மற்றவர்களின் கேலி கொடுக்கக்கூடிய மன வலிமையை தாங்கி கொண்ட தன்மை, விடா முயற்சி அனைத்தும் அனைவருக்கும் நல்ல ஒரு முன்னுதாரணம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி காவாலி, குளம்ஸ்

+++

ஏராளன், நீங்கள் எந்த நாட்டில இருக்கிறீங்கள்..? கனடாவிலை எண்டால் பெரும்பாலும் உங்கட பிரச்சனைக்கு இலவசமாய் சிகிச்சை பெறக்கூடியதாய் இருக்கும், அத்தோட உங்களுக்கு பல வசதிகளும் செய்து தரப்படும் எண்டு நினைக்கிறன். எனக்கு ஒரு மருமகள் ஒருத்தி இருக்கிறாள் அவளுக்கு கிட்டத்தட்ட நீங்கள் சொன்ன பிரச்சனை இருக்கிது. ஆனால், அதே உடல் உபாதைதானோ எண்டு பெயர் சரியாய் தெரிய இல்லை. அவளுக்கு பிறக்கும்போது பிறப்பிலயே இந்தச்சிக்கல் ஏற்பட்டு இருக்கிது எண்டு நினைக்கிறன். தற்போது விஷேட கவனிப்பு பராமரிப்பு இடத்தில வளர்க்கப்படுகிறாள். அவளுக்கு பேச்சு இன்னமும் சரியாய் வர இல்லை. ஆனால்... அவங்கள் நல்லாய் பழக்கி எடுத்துட்டாங்கள் எல்லா விசயங்களும் பழக்கி, சொல்லிக்குடுத்து.

+++

எனக்கு அண்மையில மீண்டும் சத்திரசிகிச்சை நடந்திச்சிது. திரும்பவும் வெட்டுக்கொத்துத்தான்.. பழகிப்போச்சிது. என்னமோ வாழ்க்கை போகிது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான பிரச்சனைகள், விட்டுட்டு ஓட முடியாது, என்னமோ எங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் தெரிஞ்சமாதிரி இருக்கிற மூளையை, வசதிகளை பாவிச்சு வாழ்ந்துபோட்டு ரிக்கட் கிடைக்க இடத்தை காலிபண்ண வேண்டியதுதான். நிறைய எழுதலாம் எண்டு பார்க்கிறன், முடியவில்லை.

Link to comment
Share on other sites

நன்றி மச்சான். எனக்காக சில தகவல்களை தந்தமைக்கு.

நான் சிறிலங்காவில் கொழும்பில் இருக்கிறன். என்னோட பிரச்சனை என்னெண்டா பிறக்கும்போது ஆரோக்கியமான குழந்தையாத்தான் இருந்தன், வளர வளர 10 - 12 வயதில நடக்கும்போது குதி காலை உயர்த்தி நடக்க அப்பதான் doctor சொன்னவர் myopathy எண்டு. அப்ப இந்த வருத்ததிற்கு tretment இல்லை excercise செய்ய சொன்னவை. யோகா 16 , 17 வயது வரை செய்ய முடிந்தது. உயர்தரம் வரை கல்வி கற்றனான். 21 வயது வரை சைக்கிள் ஓடினனான். இப்ப 31 வயது சமதரையில் தனிய நடக்க முடியும், சமனற்ற பாதை எண்டா யாரையும் பிடிச்சுக்கொண்டுதான் நடக்க முடியும், இல்லாட்டி சமநிலை குழம்பி விழுந்துபோவன். பிறகு யாரும் தூக்கி விடவேணும், நானா எழும்பமுடியாது. கழிவறைக்கு போனால் தூக்கி விடவேணும். மெல்ல மெல்ல கூடிக்கொண்டு போகுது வருத்தம். எதிர்காலத்த நினைக்க அச்சமா இருக்கு. அப்பா, அம்மா இருக்கேக்கை அவயள் உதவியா இருக்கினம்.

இந்தியாவில சில இடங்களில stem cell theraphy மூலம் சிகிச்சை செய்யலாம் எண்டு சொல்லுறாங்க.

post-6926-12701064358777_thumb.jpg

Link to comment
Share on other sites

மச்சான், இப்போது தான் நான் இந்தத் திரியை வாசித்து வியந்தேன்.

உங்கள் அனுபவங்களை விபரமாக இங்கு பகிர்ந்தது உரியோருக்குப் பயனுடையதாக இருக்கும்.

உங்கள் மற்றய சத்திர சிகிச்சைகளும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். :lol:

நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறாழன் எனக்கும் உங்களைப்போலை பிரச்சினை இருக்கு என்ன உங்களை விட கொஞ்சம் வீரியம் குறைவு. இங்கை லண்டனிலை காட்டினனான் முதல் வெள்ளை அணுக்களை ஆராய்ந்தார்கள் அதிலிருந்து எந்த வகையான muscular diastrophy என்று கண்டுபிடிக்க முடியவில்லையாம் இப்ப muscular biopshy test செய்து போட்டு அதற்குரிய சிகிச்சைகள் பற்றி சொல்லுவதாக சொல்லியிருக்கிறார்கள் . ஆனால் நான் இப்பவும் pழளவைiஎந ஆகத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிரன் என்னால் வாழ்கையை எதிர் கொள்ளமுடியும் என்று.அதை விட இப்பவே திருமணம் செய்யசொல்லி வைத்தியர் கூறுகிறார் ஆனால் குடும்ப சூழ்நிலை இதுவரை இடம் தரவில்லை.இதிலை 6 வகை இருக்காம் ஒருவகைக்கு தான் மருந்து இருக்காம் .

Link to comment
Share on other sites

  • 6 months later...

நேற்று நீங்கள் வேறு ஒரு பதிவில் இதனை இணைத்தால் பார்க்க முடிந்தது.

குறை இல்லாத மனிதன் ஏது உலகில்? உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை, விடாமுயட்சியைப் பார்த்து வியந்துவிட்டேன். அதிலும் திடமான மனம்/ துணிவு உங்கள் சொந்தக் கதையை எழுத்தில் பகிருவது, பகிர்ந்தமைக்கு நன்றி.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கரும்பு! :)

Link to comment
Share on other sites

மிக்க நன்றி குட்டி, மல்லிகைவாசம்.

ஏராளன் என்னுடன் முன்பு மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருந்தார். இப்போது யாழுக்கு வருவது இல்லைப்போல. வாதவூரானின் கருத்தையும் அப்போது பார்த்தேன். விரிவாக எழுதவேண்டும் என்று யோசித்துவிட்டு பிறகு ஏதோ சமயம் வாய்க்கவில்லை, பதில்போடவில்லை.

நீங்கள் உங்களுக்கு உள்ளதாக கூறுகின்ற பிரச்சனை எனக்கு சரியாக அதே உபாதைதானா என்று பெயர் தெரியாது. ஆனால்.. இதேபிரச்சனை எனது ஓர் மருமகளுக்கும் உள்ளது. அவள் இங்கு கனடாவில் பிறந்தபின்னரே இந்தப்பிரச்சனையை கண்டுபிடித்தார்கள் என்று நினைக்கின்றேன். ஓர் சிறுநீரகத்தில் பிரச்சனை, வேலை செய்யவில்லை என்றார்கள். மற்றது.. தசைகள் பலவீனம் அற்றதாக காணப்பட்டன. அத்துடன் சமநிலைப்படுத்தி உடலை வைத்து இருப்பது அவளுக்கு சற்று கடினமாக இருந்தது.

அவளை பின்னர் கடந்த பல வருடங்களாக பிரத்தியேக, சிறப்பு குழந்தைகள் இல்லத்தில்விட்டு இப்போது அவளுக்கு பன்னிரண்டு வயசு என்று நினைக்கின்றேன் பல முன்னேற்றங்கள் தெரிகின்றன. முன்புபோல் விதம்விதமான மருந்து மாத்திரைகள் எல்லாம் பாவிப்பது இல்லை. இப்போது சாதாரண பிள்ளைகள் போல் அவள் செயற்பாடுகளில் நிறைய முன்னேற்றம் தெரிகின்றது. ஆனால் பேசுவதற்கு மட்டும் அவளால் இயலாது. நானும் அவளைக்காணும் சமயங்களில் அவளை பிடித்து இழுத்து வைத்து அம்மா அப்பா என்று சொல்லிக்குடுக்கிறது. கூட்டிக்கொண்டு நடக்கும்போதும் ஏதாவது சொல்லிக்கொடுத்து முயற்சி செய்வது. அவள் செவிகளில் ஏதும் பிரச்சனை இல்லை. நன்றாக உள்ளன. ஆனால் அவளால் பேசமுடியாது.

அவள் பெற்றோர் இந்தியாவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை செய்து பார்க்கலாம் என்று யோசித்து உள்ளார்கள். கேரளாவில் ஏதோ மூலிகை வைத்தியம் மூலம் வியாதிகளை குணமாக்கக்கூடிய ஓர் பிரபல வைத்தியசாலை உள்ளதாம். அங்கு கூட்டிக்கொண்டுபோனால் அவளுக்கு இன்னமும் முன்னேற்றம் வரும் என்று திடமான நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். நீங்கள் இப்படி மூலிகை மருத்துவம் பற்றி கேள்விப்பட்டு யாராவது உடல் உபாதைகள் குணமாகி ஏதும் கேள்விப்பட்டு இருக்கிறீங்களோ? அது ஏதோ மூங்கில் சோலையினுள் வைத்திசாலை உள்ளதாம். இங்கிருந்து போன, ஆங்கில வைத்தியத்தினால் கைவிடப்பட்ட ஒருவர் தனக்கு பூரணசுகம் கிடைத்தமையால் இவர்களையும் அவளை அங்கு கூட்டிக்கொண்டுபோய் காட்டுமாறு சொல்லியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி குட்டி, மல்லிகைவாசம்.

ஏராளன் என்னுடன் முன்பு மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருந்தார். இப்போது யாழுக்கு வருவது இல்லைப்போல. வாதவூரானின் கருத்தையும் அப்போது பார்த்தேன். விரிவாக எழுதவேண்டும் என்று யோசித்துவிட்டு பிறகு ஏதோ சமயம் வாய்க்கவில்லை, பதில்போடவில்லை.

நீங்கள் உங்களுக்கு உள்ளதாக கூறுகின்ற பிரச்சனை எனக்கு சரியாக அதே உபாதைதானா என்று பெயர் தெரியாது. ஆனால்.. இதேபிரச்சனை எனது ஓர் மருமகளுக்கும் உள்ளது. அவள் இங்கு கனடாவில் பிறந்தபின்னரே இந்தப்பிரச்சனையை கண்டுபிடித்தார்கள் என்று நினைக்கின்றேன். ஓர் சிறுநீரகத்தில் பிரச்சனை, வேலை செய்யவில்லை என்றார்கள். மற்றது.. தசைகள் பலவீனம் அற்றதாக காணப்பட்டன. அத்துடன் சமநிலைப்படுத்தி உடலை வைத்து இருப்பது அவளுக்கு சற்று கடினமாக இருந்தது.

அவளை பின்னர் கடந்த பல வருடங்களாக பிரத்தியேக, சிறப்பு குழந்தைகள் இல்லத்தில்விட்டு இப்போது அவளுக்கு பன்னிரண்டு வயசு என்று நினைக்கின்றேன் பல முன்னேற்றங்கள் தெரிகின்றன. முன்புபோல் விதம்விதமான மருந்து மாத்திரைகள் எல்லாம் பாவிப்பது இல்லை. இப்போது சாதாரண பிள்ளைகள் போல் அவள் செயற்பாடுகளில் நிறைய முன்னேற்றம் தெரிகின்றது. ஆனால் பேசுவதற்கு மட்டும் அவளால் இயலாது. நானும் அவளைக்காணும் சமயங்களில் அவளை பிடித்து இழுத்து வைத்து அம்மா அப்பா என்று சொல்லிக்குடுக்கிறது. கூட்டிக்கொண்டு நடக்கும்போதும் ஏதாவது சொல்லிக்கொடுத்து முயற்சி செய்வது. அவள் செவிகளில் ஏதும் பிரச்சனை இல்லை. நன்றாக உள்ளன. ஆனால் அவளால் பேசமுடியாது.

அவள் பெற்றோர் இந்தியாவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை செய்து பார்க்கலாம் என்று யோசித்து உள்ளார்கள். கேரளாவில் ஏதோ மூலிகை வைத்தியம் மூலம் வியாதிகளை குணமாக்கக்கூடிய ஓர் பிரபல வைத்தியசாலை உள்ளதாம். அங்கு கூட்டிக்கொண்டுபோனால் அவளுக்கு இன்னமும் முன்னேற்றம் வரும் என்று திடமான நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். நீங்கள் இப்படி மூலிகை மருத்துவம் பற்றி கேள்விப்பட்டு யாராவது உடல் உபாதைகள் குணமாகி ஏதும் கேள்விப்பட்டு இருக்கிறீங்களோ? அது ஏதோ மூங்கில் சோலையினுள் வைத்திசாலை உள்ளதாம். இங்கிருந்து போன, ஆங்கில வைத்தியத்தினால் கைவிடப்பட்ட ஒருவர் தனக்கு பூரணசுகம் கிடைத்தமையால் இவர்களையும் அவளை அங்கு கூட்டிக்கொண்டுபோய் காட்டுமாறு சொல்லியுள்ளார்.

உங்களின் மருமகளுக்கு உள்ள பிரச்சனைக்கு மூலிகை மூலம் தீர்வு காண முடியும் என்று நினைக்கவில்லை. அப்படி நடந்தால் அது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டும்.

உங்களின் மருமகளுக்கு தலை கழுத்து போன்ற பகுதிகளில் உள்ள தசைகள் பலவீனமாக உள்ளன. அவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் செயற்பாடு பலவீனமாக இருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால் தான் அவரால் பேச முடியவில்லை. இவ்வாறான பல குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். சில குழந்தைகளால் உணவைக் கூட உண்ண முடியாது.. தலையை நிமிர்த்த முடியாது.. எழுந்து நிற்க முடியாது. குழாய் மூலம் அல்லது வயிற்றில் ஒரு பொத்தானை வைத்து அதன் மூலமே உணவை தருவார்கள். அவர்களுக்கு என்று விசேட பயிற்சிகளும் கல்வி முறைகளும் உள்ளன. அவற்றின் கீழ் அவர்கள் பயிற்சி பெறும் போது அந்தத்தத் துறைகளில் அவர்கள் மிளிர அதிகம் வாய்ப்பிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் மூளையின் செயற்பாடு சீர்பெறின் அவர்கள் சாதாரண நிலைக்கு திரும்பவும் சந்தர்ப்பம் இருக்கிறது.

மேற்கு நாடுகளில் இவ்வாறான குழந்தைகளின் மூளை தசை மற்றும் இதர உடற்பாகங்களின் வளர்ச்சி விருத்தி செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகளை அளித்து வருகின்றனர். மருந்துகள் கொடுப்பது என்பது சில சிக்கலான பிரச்சனைகள் இதனால் தோற்றாமல் இருப்பதை தவிர்ப்பதற்கே அன்றி இதனை குணமாக்கவல்ல.

இந்தியாவில் மூலிகை மருத்துவம் செய்வது என்றால் கூட கனடாவில் நீங்கள் டாக்டர்களிடம் அனுமதி பெற்றுத்தான் அதை செய்ய வேண்டும். இன்றேல் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அவற்றிற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டி வரும்.

என்னைப் பொறுத்தவரை அவரை அவரின் இயல்புகளோடு இன்னும் இன்னும் தசைகளை.. மூளையின் செயற்பாடுகளை பலமாக்கும் பயிற்சிகளோடு வளர்த்து வருவது நல்லம் என்று நினைக்கிறேன். அதோடு அவர்களுக்குரியதான கருவிகள் சாதனங்களை உரிய முறையில் பாவித்து வர வேண்டும். குறிப்பாக sign language மூலம் அவரோடு தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது. அது பேச்சு நோக்கி முன்னேற உதவலாம். இதற்கென விசேட speech therapy and physio therapy.. செயன்முறைகள் இருக்கின்றன. பெற்றோரும் அவற்றை தெரிந்து கொண்டு வீடுகளில்.. அல்லது சந்திக்கும் வேளைகளில் செய்வது நன்று.

இவ்வாறான நிலையில் இருந்து மீண்டு ஒரு சிறுவன் இப்போ சாதாரண பள்ளிக்குப் போய் வருவதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அவருக்கு தொடர்ந்து உணவு மற்றும் உடல் மூளை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. பெற்றோரின் பங்களிப்பு இந்த விடயத்தில் அதிகம் தேவை.

உங்கள் மருமகள் விரைந்து குணமாகி நல்ல மகளாக வளர என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அவளின் முன்னேற்றகரத்திற்கு இறைவனையும் பிரார்த்திப் போமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மச்சான். எனக்காக சில தகவல்களை தந்தமைக்கு.

நான் சிறிலங்காவில் கொழும்பில் இருக்கிறன். என்னோட பிரச்சனை என்னெண்டா பிறக்கும்போது ஆரோக்கியமான குழந்தையாத்தான் இருந்தன், வளர வளர 10 - 12 வயதில நடக்கும்போது குதி காலை உயர்த்தி நடக்க அப்பதான் doctor சொன்னவர் myopathy எண்டு. அப்ப இந்த வருத்ததிற்கு tretment இல்லை excercise செய்ய சொன்னவை. யோகா 16 , 17 வயது வரை செய்ய முடிந்தது. உயர்தரம் வரை கல்வி கற்றனான். 21 வயது வரை சைக்கிள் ஓடினனான். இப்ப 31 வயது சமதரையில் தனிய நடக்க முடியும், சமனற்ற பாதை எண்டா யாரையும் பிடிச்சுக்கொண்டுதான் நடக்க முடியும், இல்லாட்டி சமநிலை குழம்பி விழுந்துபோவன். பிறகு யாரும் தூக்கி விடவேணும், நானா எழும்பமுடியாது. கழிவறைக்கு போனால் தூக்கி விடவேணும். மெல்ல மெல்ல கூடிக்கொண்டு போகுது வருத்தம். எதிர்காலத்த நினைக்க அச்சமா இருக்கு. அப்பா, அம்மா இருக்கேக்கை அவயள் உதவியா இருக்கினம்.

இந்தியாவில சில இடங்களில stem cell theraphy மூலம் சிகிச்சை செய்யலாம் எண்டு சொல்லுறாங்க.

உங்களின் இந்த நிலைக்கு காரணம்.. உடலில் உள்ள தசை நார்கள் பலவீனப்பட்டுக் கொண்டு போவதுதான். இலங்கையில் இதற்கு எவ்வாறான சிகிச்சை அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வழமையாக கூட்டுச் சிகிச்சை முறையே பாவிக்கப்படுகிறது. உங்களின் தசை நார்களை வலுப்படுத்தும் physio therapy முறைகளும் உபகரணங்களும் மேற்கு நாடுகளில் உள்ள. மருந்துகள் மூலம் தசைகளின் செயற்பாட்டை ஊக்கு வித்தலையும் செய்வார்கள். சத்திரசிகிச்சையும் அளிப்பார்கள். சரியான உபரகணங்களை உதவி வழங்கும் கருவிகளை பாவித்து வருவீர்களானால் உங்கள் தசைநார்கள் வலுவிழப்பதை குறைக்க முடியும். மற்றவர்களின் உதவி இன்றி உங்களின் செயற்பாடுகளை செய்யக் கூடிய வகைக்கு அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் செல்வந்த வைத்தியசாலைகளில் இவை இருக்கும். அதுமட்டுமன்றி stem cell theraphy மூலம் இதனை குணமாக்கலாம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று சொன்னீர்கள். அப்படியான சிகிச்சை முறை இதற்கு பாவிக்கப்படுகிறது தான். அதன் மூலம் உங்களின் பழைய தசைக்கலங்களை நல்ல பலமுள்ள தசைக்கலங்களை செலுத்தி பின்னர் அவற்றை பெருக வைத்து பழைய பலவீனமான தசைகளை படிப்படியாக குறைப்பது இந்த முறையாகும். இது நீண்ட காலம் எடுக்கும் மிகவும் நவீன செலவு கூடிய ஒரு சிகிச்சை முறை. இருந்தாலும் நீங்கள் முயன்று பார்க்கலாம்.

ஆராய்ச்சி ரீதியில் இது ஒரு வெற்றி பெற்ற சிகிச்சை முறையாகும்.

http://www.news-medical.net/news/2009/03/05/46604.aspx

நீங்களும் இந்த நிலையில் இருந்து மீண்டு சாதாரண பிரஜைகள் போல வாழ எனது மனப்பூர்வ வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இறைவனையும் வேண்டுவோமாக.

இலங்கையில் உள்ள உங்களின் டாக்டர்கள் மூலம் ஒரு அறிக்கையைப் பெற்று மேற்குநாடுகளில் சிகிச்சைக்கு என்று விசா பெற்று.. வந்து சிகிச்சை பெற முடியும். அந்த வகையில் சிந்தித்து செயற்பட்டீர்கள் என்றால் நல்லது. இன்றேல் இந்தியாவிலும் சிகிச்சை பெறலாம்.

பிரித்தானியா அவுஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்த வசதிகளை அளிக்கின்றன.

http://www.visaforuk.co.uk/medical_treatment.html

(உங்களை தகவலை இன்று தான் படித்தேன். இந்தளவு தாமதத்துடன் எம்மால் இயன்ற பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.