Jump to content

எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும்


Recommended Posts

எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும் - அங்கம் - 1

12வருடங்களின் பின் ஊரை மிதித்த போது உண்டான மகிழ்வும் நாங்கள் படித்த அந்த ரியூசன் வளவும் அது தந்த ஞாபகங்கள் எத்தனையோ. அந்த மாமரமும் பலாமரமும் சொன்ன சோகங்கள் இதயத்தை இறுக்கிப் பிழிந்து மனசை வதைத்த கணங்கள் ஒவ்வொன்றும் நினைவுகளை விட்டுப் போகாமல் மனசுக்குள் மழைத் தூறலாய் நனைத்துக் கொள்கிறது.

அது 'பிறெய்ன் கல்வி நிலையம்" 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை கல்வி தந்த அந்த வளவும் சிவாமாஸ்ரரின் உழைப்பில் குப்பிளானிலேயே முதல்தர கல்வி நிலையமாக உருவாகியது மட்டுமின்றி ஊரிலே உருவாகிய அனேகமான இளம் கெட்டிக்காரர்களின் உருவாக்கத்திலெல்லாம் ஊக்கு சக்தியாய் நின்ற அந்த மனிதரின் உழைப்பெல்லாம் இன்று உருக்குலைந்து உருமாறி.....

அந்த வளவின் உயிர்ப்பெல்லாம் தொலைந்து முறிந்த மரங்களும் காயங்கள் தாங்கிய வளவும் அந்த வீடும் எந்த நேரமும் பிள்ளைகளின் சிரிப்பும் படிப்புமாக நிறைந்திருந்த அந்த வீட்டின் அறைகள் எல்லாம் சிங்கள வசனங்கள் எழுதப்பட்டு இரத்தக் கறைகள் படிந்து ஒரு நூற்றாண்டுச் சோகத்தை சுமந்தபடி இருக்கிறது. அந்த வீட்டில் உலா வந்த சிவாமாஸ்ரரின் குழந்தைகளும் சிவாமாஸ்ரரும் அவரது குடும்பமும் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்கிறார்கள். அவர்கள் நினைவு சுமந்து அந்த வளவு மட்டும் அவர்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

நீண்ட பிரம்பெடுத்து வரிசையில் நிறுத்தி வைத்து கையில் அடிதந்து கல்வியில் கண்ணாயிருத்திய அந்த உயர்ந்த மனிதனின் அக்கறையில் அவதானிப்பில் எத்தனையே பேர் இன்று புலம்பெயர் தேசங்களில் நல்ல நிலையில் இருப்பதற்கு சிவாமாஸ்ரரின் கண்டிப்பும் கவனமும் கணிசமான பங்குண்டு. தான் படிப்பிக்கும் விஞ்ஞான பாடம் மட்டுமின்றி எல்லாப்பாடங்களிலும் 80புள்ளிக்கு குறையாமல் எடுக்காதவர்களுக்கெல்லாம் பிரம்பால் எச்சரிக்கை தந்த சிவாமாஸ்ரரின் கவனிப்பு எங்கள் ஊருக்குள் எத்தனையோ வல்லவர்களை உருவாக்கிய தருணம் போர் உழுது ஊர் அழுது உலகெங்கும் ஒவ்வொருவரும் சிதறி இன்று அகதிகளாய்.....

1990 அந்த வீடு எங்களுக்கு இருப்பிடமாய் அமைந்ததும் அத்தையும் , மாமாவும் , அம்மாவும் , அப்பாவும் , அம்மம்மாவும் , நாங்களுமாய் அந்த வீட்டுக் குந்தில் இருந்து கதைத்த இரவுகள்....செல்கூவிவர ஒழித்திருந்த புகைக்கூடு இன்று மீளவும் தாயகம் திரும்பிய போது அந்த வாசலே அடைக்கலம் தந்துள்ளது.

அன்றைய இரவு நிலவில்லாத வானம். இருள் கவ்விய கனத்த அந்த போட்டிக்கோ குந்தில் அம்மா , அப்பா , மாமா , அத்தை , தங்கை , தங்கமணி , தாசன் , நாங்களுமாய் அந்த நாள் ஞாபகங்களை அழைந்து முகர்ந்து.....வீதியில் நாய்களின் குரைப்பில் விழிகள் மிரள சிங்களக்குரல்கள் வீதியில் கேட்கிறது. சத்தம் போடாதையுங்கோ ஆமி போறான் றோட்டாலை. அப்பா முணுமுணுத்தார். சமாதான காலமென்று உலகெங்கும் சொல்கிறார்கள் ஆனால் இன்னும் அச்சம் கழியாத இரவுகள் எங்கள் தேசத்துக்கு உரியதென்பதை அப்பாவின் வார்த்தைகள் உணர்த்தின. தாண்டிக்குளம் தாண்டும் வரையும் இருந்த அச்சத்தை விட இந்த இரவு கொடியதாய்.....

அப்போது தான் அவளது கதை வந்தது. என்னுள் ஒளியாயிருந்த என் தோழியின் கதையது. அந்தத் திண்ணையில் அவளும் நானும் பரிமாறிய கதைகள் சொல்ல திண்ணைக்கு வாயிருந்தால் அது எங்கள் மொழியை அப்படியே மொழி பெயர்த்திருக்கும். 5ம் வகுப்பில் அறிமுகமானவள். 7ம் வகுப்பில் இருவருக்குள்ளும் உருவாகிய நட்பு ஊரில் அனேக கண்களில் அது உறுத்தலாய்.....அவளும் நானும் ஒரே சைக்கிளில் டபிள் போனதும் ஒரே கோப்பையில் உணவருந்தியதும் அவளது அம்மாவின் விருப்புக்குரியவளாய் நானும்.....

அந்த நாட்கள் நதியா கொடிகட்டிப்பறந்த காலம். அவளும் நதியாவின் மறு வடிவம் போலத்தான் இருந்தான். அவளை எங்கள் வகுப்பில் சிலோன்நதியா என்றே அழைப்போம். அந்த அழகியை ஒருதலையாய் காதலித்தவர்கள் பலர். அந்த ஒருதலைக்காதல் கொண்டவர்களில் எங்கள் ஊரைச் சார்ந்தவர்களும் அடங்குவர். எத்தனையோ பேரின் காதலை மறுத்தவள் அண்ணன் என்று முறைசொல்லி அவள் அழைத்த ஒருவனால் அவள் வாழ்வே திசைமாறிவிடக் காரணமாகியது.

இரு பிள்ளைகளின் தந்தையான ஒருவனுக்கு அவளில் காதல். அந்தக் காதலை மறுத்ததால் தனது இரு குழந்தைகளையும் மறந்து அந்த ஒருதலைக் காதலன் தற்கொலை செய்து ஒரு இரவு தனது காதல் மனைவியின் கூறைப்புடவை தாலி எல்லாவற்றையும் நடுவீட்டில் கொழுத்திவிட்டு செத்துப்போய் விடுகிறான். விடியற்காலை விடயமறிந்து ஊரெங்கும் அவள்தான் உரை பொருளாகிவிட்டாள். அவள் மீதே ஊரெங்கும் குற்றம் சுமத்தல்கள் திட்டல்கள். என் ஆத்மதோழி அவள் அன்று அழுதழுதே சோர்ந்து விட்டாள். ஆண்களையே முதன்மையாய் பார்க்கும் நமது ஊரில் அவளே எதிரியாய் போக அவள் எல்லாப் பழிகளையும் தன் தலையில் கட்டிக்கொண்டு சோர்ந்து விடுகிறாள். வில்லங்கக்காதல் கொண்டவனின் குடும்பம் முதல் எல்லாரும் அவளையே வார்த்தைகளால் வதைத்தனர்.

16வயதில் அவள் ஊரின் பழிக்கு ஆழாகி உடைந்துவிடுகிறாள். என் வீட்டு அச்சுறுத்தலுக்கு அஞ்சி நானும் அவளுடன் பேசுவதையும் பார்ப்பதையும் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் அவளை மறக்காமல் நெஞ்சுக்குள் சுமந்தபடி.....அவள் வீட்டில் அவள் எதையும் மறைத்ததில்லை. அவள் அம்மாவுக்கு அவளில் அத்தனை நம்பிக்கை. ஆயினும் ஊர்வாயில் அவள் இப்போ உதவாதவளாய்.....அவளை உயிராய் நேசிப்பதாய் சொன்ன ஒருதலைக்காதல்களும் அவளை எதிரியாகப் பார்க்க எங்களுக்குள் சிறந்த மாணவியாயிருந்த அவளது கல்வி முற்று வைக்கப்பட்டு அவள் வீட்டுக்குள் முடங்கிக் கொள்கிறாள்.

யாரும் அவளை நம்பத் தயாரில்லை....ஆத்மதோழியென்றிரு

Link to comment
Share on other sites

எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும் அங்கம் - 2

ஊர் சென்றதில் உலகை வென்ற மிதப்பு. மனசு மேகத்தில் கால் வைத்து பூமிக்கு இறங்குகிறது. அந்தநாளைய எங்கள் ஊர் தன் அடையாளம் கரைத்து ஏதோ இருக்கிறேன் என்றது. என் பால்ய தோழியின் பெயர் சொல்லிய போது அவள் தனது ஊரிலேயே இருக்கிறாள் என அத்தை சொன்னா. 12வருடங்களின் பின் அவள் இப்போது எப்படி இருப்பாள் என்பதை உள் மனசு சித்திரமாய் தீட்டியது. அவளும் நானும் டபிள் போன சைக்கிளின் சத்தமும் சிரிப்பும் இன்று போல் காதுக்குள் புது ராகமிசைக்கிறது.

போட்டு வருவமோ பிறேமினி ? தங்கைச்சியையும் கூட்டிக்கொண்டு குப்பிளானிலிருந்து ஏழாலை நோக்கி எங்களது நைய்ந்த சைக்கிள் போகிறது. அது ஏழாலை வடக்குச் சந்தி. போஸ்மாஸ்ரர் மாமாவையும் வடக்கு ஏழாலை அக்காவின் முகத்தையும் தேடுகிறது விழிகள். யாருமற்று அந்தத் தபாற்கந்தோர் தனித்திருக்க எல்லோரும் எங்கெங்கோ போய்விட்டார்கள். நாங்கள் உலவிய அந்த வீதியும் வீடுகளும் புதிய மனிதர்களின் வரவில் ஏதோ உயிருடன் இருந்தன.

என் பால்யதோழியின் வீட்டை அண்மிக்கிறோம். பழைய அடையாளங்கள் இல்லாது போனாலும் அந்த இடத்தை அடையாளம் கண்டு கொள்கிறேன். அவளது அம்மாவினதும் அவளது குடும்பத்தினதும் ஜீவனமாயிருந்த கடை இன்றும் அவர்களது ஜீவனமாய் இருந்தது. சோட்டியணிந்து கொண்டைபோட்டு நெற்றியில் பெரிய குங்குமமும் கழுத்து உச்சியிலும் குங்குமம் இட்ட பெண்ணொருத்தி அந்தக் கடையின் வாசலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். சமூகக்கல்வி படிப்பித்த செல்வம் மாஸ்ரர் அவளுக்குச் சற்றுத்தள்ளி சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தார். அந்த வளவிற்குள் 5வயதிலிருந்து 2 வயது வரை மதிக்கத்தக்க 3 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அக்கா தெரியுதோ அதாரெண்டு ? தங்கைச்சி கேட்டாள். யார் ? கேட்ட எனக்குச் சொன்னாள் அவள். உங்கடை தோழிதான் அது. ஒரு தரம் இதயம் தனது துடிப்பை நிறுத்தி மீண்டாற்போல இருந்தது. எனது கற்பனைக்குள் இருந்த அவளது தோற்றம் சுக்குநூறாகிறது. அவளைப்பார்க்கும் அவசரத்தில் கையில் எதுவும் கொண்டு வராமல் வந்தது உறைக்க, அவளது கடைக்கு 50மீற்றர் தொலைவாயிருந்த கடைக்குப்போய் அவளது பிள்ளைகளுக்கு இனிப்பு வகைகள் சில வாங்கிக் கொள்கிறேன். அவளது கடை வாசலில் போயிறங்குகிறேன்.

அவளது அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்த செல்வம் மாஸ்ரர் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார். என்னடி திடீரெண்டு வந்திறங்கியிருக்கிறாய் ? அப்போதுதான் அவளும் என்னை அவதானித்தாள். சற்று நேரம் அவள் வாயே திறக்கவில்லை. கலங்கிய கண்களை சிரித்தபடி துடைத்துக் கொண்டு என்னிடம் ஓடிவந்தாள். அம்மா பாருங்கோ ஆரிதெண்டு சொல்லுங்கோ என்றாள். எத்தனையோ தரம் அந்த அம்மாவின் கையால் சாப்பிட்டிருக்கிறேன். தன் மகள் மீதுள்ள பாசம் அந்த அம்மாவுக்கு என்னிலும் இருந்தது. அந்த நாளில் பலசரக்குக்கடையாக இருந்த அந்தக்கடை இப்போது மில்லாகியிருந்தது. ஒரு மனிதன் அங்கு மிளகுதூள் அரைத்துக் கொண்டு நின்றான். அவனுக்கு என்னை அவள் அறிமுகம் செய்து வைத்தாள். அவன்தான் அவளது இராஜகுமாரன். நதியாவை ஞாபகப்படுத்தும் எங்களது அந்நாள் சிலோன் நதியா அம்மாவாக அந்நாள் அடையாளங்கள் இன்றி சாதாரணமானவளாக......

என்ன தனியவோ வந்தனீ ? கலியாணங்கட்டீட்டியா ? எத்தினை பிள்ளையள் ? எந்த ஊரிலை கலியாணங்கட்டினனீ ? அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். கலியாணங்கட்டினது வவுனியாவிலை. 2பிள்ளைகள், ஒரு பொடி 8வயது, பெட்டை 6வயது. அப்பா மருமகனுக்கும் பேரப்பிள்ளையளுக்கும் ஊர் காட்டப்போட்டார். நீ இஞ்சைதானிருக்கிறாயெண்டு அத்தை சொன்னா அதுதான் வந்த உடனும் ஓடிவந்திட்டன்.

எப்ப போப்போறாய் ? கேட்டாள். 3நாள் நிப்பன். அப்ப மனிசனையும் பிள்ளையளையும் கூட்டிவா நான் பாக்க வேணும் என்றாள்.

ஒரு சின்னவள் அவள் மடிக்குள் வந்து ஏறினாள். இதுதான் என்ரை கடைசி. மூண்டும் பெட்டையள். நீ மாறேல்ல அப்பிடியே இருக்கிறாய் , அந்தக் காலத்திலை வைச்ச அதே சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டு , அதே தலையிழுப்பு , அதே பாவாடை சட்டை , அதே சிரிப்பு எதுகும் மாறேல்ல , முந்திச் சொல்றமாதிரி கலியாணத்துக்குப் பிறகும் இருக்கிறாய் என்றாள். எப்படியோ எல்லாம் இருப்பேன் என்று சொன்ன அவள் மட்டும் என் எண்ணங்களிலிருந்து விலகியவளாய்......

மறுநாள் காலை 10 மணிக்கு அவள் வீட்டில் நானும் எனது குடும்பமும். அப்பா அம்மா எல்லாரும் பழையகதைகள் முதல் எல்லாம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவள் எங்களுக்காக குசினிக்குள் அலுவலுடன் நின்றாள். எனது பிள்ளைகள் அவளது பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். குசினிக்குள் நானும் அவளும்.....

நான் எதிர்பாக்கேல்ல நீ இப்பிடி இருப்பாயெண்டு சொல்லி முடிப்பதற்குள் என் கண்கள் குளமாகிறது. என்ன செய்யிறது எல்லாம் விதி....படிக்க வேண்டிய நேரம் எல்லாத்தையும் விளையாட்டா நினைச்சு எல்லாத்தையும் துலைச்சிட்டன்.....அதற்கு மேல் ரணங்களை அவளுக்குப் பரிசளிக்க விரும்பவில்லை நான். அவளது அல்பத்தை எடுத்து விரிக்கிறேன். நானும் அவளும் சுன்னாகம் சித்திரா ஸ்ரூடியோவில் சேர்ந்து எடுத்த படமொன்று அவளது அல்பத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த

Link to comment
Share on other sites

போர் உழுது ஊர் அழுது உலகெங்கும் ஒவ்வொருவரும் சிதறி இன்று அகதிகளாய்.....

உழவு விளைச்சலைத்தான் கொடுக்கும் ..அழிவைக்கொடுப்பதையும் உங்கள் கவிதையில் (கதையில்) கண்டு கொண்டேன்.... நல்ல எழுத்தாற்றல்... கீப் இற் அப்... (தமிழ்ப்படுத்தவும் இல்லாவிட்டால் வெட்டிவிடுவார்கள்)

உங்கள் நதியாவைப் போல் எத்தனை பேர் இருந்தாலும் நீங்கள் சொட்டும் மழைத்துளிதான் அவர்களை எத்தனை இடர் கடந்தும் வாழ வைக்கின்றது....

துன்பப் படுபவர்களைக் கேட்டுப் பாருங்கள்.... அவர்களின் ஜீவ நதி மனிதம் கொண்டவர்களின் மனதில் உருவாகும் இரக்கம் தானென்று கூறுவார்கள்... குப்பிளானில் உருவான சிற்றாறு பெருகிப் பேராறாக வேண்டும்.... யாழ் களம் வருவதே இது போன்ற சிறு விருந்துண்ணவே... வாழிய

-எல்லாள மஹாராஜா..

Link to comment
Share on other sites

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் எல்லாள மகாராஜா.

விளைச்சல் இன்றி உறவுகளின் பிரிதலும் நினைவுகளுமே மிஞ்சிக் கிடக்கிறது.

இடர்கடந்தும் உயிர்ப்புடன் இயங்கும் வலிமையை காலம் அழித்திருக்கிறது நமக்கெல்லாம். தோழமை தந்தோர் தோழ் தந்தோரென இனிய சுமைகள் உயிரின் வேரில் இன்னும் பச்சையம் உலராது பத்திரமாயிருக்கின்றன.

.. கீப் இற் அப்... (தமிழ்ப்படுத்தவும் இல்லாவிட்டால் வெட்டிவிடுவார்கள்) இன்னும் இதைக் காணேல்லப்போல களத்துக்கத்திகள். :unsure:

கண்டா வெட்டி வீழ்த்தட்டும். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு பிள்ளைகளின் தந்தையான ஒருவனுக்கு அவளில் காதல். அந்தக் காதலை மறுத்ததால் தனது இரு குழந்தைகளையும் மறந்து அந்த ஒருதலைக் காதலன் தற்கொலை செய்து ஒரு இரவு தனது காதல் மனைவியின் கூறைப்புடவை தாலி எல்லாவற்றையும் நடுவீட்டில் கொழுத்திவிட்டு செத்துப்போய் விடுகிறான். விடியற்காலை விடயமறிந்து ஊரெங்கும் அவள்தான் உரை பொருளாகிவிட்டாள். அவள் மீதே ஊரெங்கும் குற்றம் சுமத்தல்கள் திட்டல்கள். என் ஆத்மதோழி அவள் அன்று அழுதழுதே சோர்ந்து விட்டாள். ஆண்களையே முதன்மையாய் பார்க்கும் நமது ஊரில் அவளே எதிரியாய் போக அவள் எல்லாப் பழிகளையும் தன் தலையில் கட்டிக்கொண்டு சோர்ந்து விடுகிறாள். வில்லங்கக்காதல் கொண்டவனின் குடும்பம் முதல் எல்லாரும் அவளையே வார்த்தைகளால் வதைத்தனர்.

இது எப்ப நடந்தது? நான் அறியவே இல்லை. நீங்கள் எழுதியதை வாசிக்க மிகவும் கவலையாக உள்ளது. நீங்கள் எழுதிய குறிப்பின் படி யாரென அறிய முடிந்தது. எப்பிடி சிட்டு குருவியாக பறந்து திரிந்தா, நம்பவே முடியவில்லை. நானும் ஊருக்கு போன போது வைத்தியர் ஞானாவின் வீட்டிற்கு சென்றிருந்தேன். இவர்களின் கடையை கண்டதும் இன்னாரின் வீடென ஞாபகம் வந்தது. அவ்வளவு பளக்கம் இல்லாததனால் பெரிதாக எதையும் ஞாபகப்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் ஊர் நினைவுகள் வாழ்த்துகள் சாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாய் உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா! அற்புதமான எழுத்துக்கள். நிறையபேரின் மனதில் பல ஏக்கங்களை உருவாக்கியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

ஞாபகக்குறிப்பைப் படித்துக் கருத்திட்ட வசி,றதி, வில்லன், பிரசாந் , சபேஸ் அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

இது எப்ப நடந்தது? நான் அறியவே இல்லை. நீங்கள் எழுதியதை வாசிக்க மிகவும் கவலையாக உள்ளது. நீங்கள் எழுதிய குறிப்பின் படி யாரென அறிய முடிந்தது. எப்பிடி சிட்டு குருவியாக பறந்து திரிந்தா, நம்பவே முடியவில்லை. நானும் ஊருக்கு போன போது வைத்தியர் ஞானாவின் வீட்டிற்கு சென்றிருந்தேன். இவர்களின் கடையை கண்டதும் இன்னாரின் வீடென ஞாபகம் வந்தது. அவ்வளவு பளக்கம் இல்லாததனால் பெரிதாக எதையும் ஞாபகப்படுத்தவில்லை.

அறியாமலும் அறியாமையினாலும் நடந்தவை ஏராளம்.

சிட்டுக்குருவியாய் திரிந்த என் நதியா சிறகுடைபட்டு நொருங்கிப்போனதுயர் நிகழ்ந்து 18ஆண்டுகளாகிவிட்டது. ஞாபகங்களைக் கரைத்துக் கரைத்துக் காலநதியில் எல்லாம் அள்ளுண்டு போயிற்று.

கண்ணே என்றோர் அன்புக் காதலே என்றோரெல்லாம் அடக்கறுமமே என்று அந்தக்கண்ணழகியின் கண்களில் நிரந்தரமாக்கியது மாரிகாலத்தைத்தான். :)

Link to comment
Share on other sites

[quote name='shanthy'

சிட்டுக்குருவியாய் திரிந்த என் நதியா சிறகுடைபட்டு நொருங்கிப்போனதுயர் நிகழ்ந்து 18ஆண்டுகளாகிவிட்டது. ஞாபகங்களைக் கரைத்துக் கரைத்துக் காலநதியில் எல்லாம் அள்ளுண்டு போயிற்று.

அப்ப விஞ்ஞானப்பாடம் படிச்சுத்திரிஞ்ச காலம் எண்டால் ஏ எல் படிக்கிற நேரமாயிருக்க வேணும்... அப்போ எப்பிடியும் ஒரு 18 வயசிருக்கும்.... அதில இருந்து பிளஸ் 18... ம்...ம் 36 வயசு மினிமம்.....அடிக்கடி குண்டு போட்டு ரெண்டாந்தரம் மூண்டாந்தரம் ஏ எல் படிச்சிருந்தால்...... சொல்லப்போனால் ...சாந்தி பாட்டியாகி... பேரப்பிள்ளையளைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது..... அசை போட்டிருக்கா....

போடுங்க ...போடுங்க.... நாங்களும் அப்ப பாத்த சுந்தரக் கொடிகள் எல்லாம் ... :)<_< இப்ப வாடி வதங்கி....

வெள்ளை முடிக் கொழுப்புகளாய் (வெளி நாட்டுக்கு வந்திருந்தால் கொழுத்து கொலஸ்ரரோல் கூடி ..ஊரிலிருந்தால் ....... மெலிஞ்சு ..வதங்கி வனப்பிழந்து.... )

-மீண்டும் அவர்களை இக்கோலத்தில் பார்க்காதிருக்கும் வரம் வேண்டும்... எம்பெருமானே...

-இறையிடம் இறைஞ்சும் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விஞ்ஞானப்பாடம் படிச்சுத்திரிஞ்ச காலம் எண்டால் ஏ எல் படிக்கிற நேரமாயிருக்க வேணும்... அப்போ எப்பிடியும் ஒரு 18 வயசிருக்கும்.... அதில இருந்து பிளஸ் 18... ம்...ம் 36 வயசு மினிமம்.....அடிக்கடி குண்டு போட்டு ரெண்டாந்தரம் மூண்டாந்தரம் ஏ எல் படிச்சிருந்தால்...... சொல்லப்போனால் ...சாந்தி பாட்டியாகி... பேரப்பிள்ளையளைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது..... அசை போட்டிருக்கா....

இல்லை மகாராஜா. 18 வருடத்திற்கு முன்னர் ஓ.எல். கூட எடுக்க இல்லை. கிட்டத்தட்ட ஓ.எல் எடுக்கிற நேரம். சாந்தி விஞ்ஞானத்தை பற்றி கதைத்தன் காரணம் அந்ந தனியார் கல்வி நிலையத்தை நடத்திய ஆசிரியர் விஞ்ஞானம் (10ம் வகுப்பு வரையான) கற்பிக்கும் ஆசிரியர் என்பதாலும் அந்த ஆசிரியர் மாணவர்களின் மீது மிகுந்த சிரத்தை மற்றும் மிகவும் கண்டிப்பானவர் என்தபாலும்.

அதனால பாட்டி இல்லை, ஆன்ரி...சரிதானே சாந்தி ஆன்ரி? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பாட்டி சாந்தியின் கதை நன்றாக உள்ளது

நிஜத்தை மறக்க முடியாது பாட்டி [சாந்தி] :D:D

Link to comment
Share on other sites

அறியாமலும் அறியாமையினாலும் நடந்தவை ஏராளம்.

சிட்டுக்குருவியாய் திரிந்த என் நதியா சிறகுடைபட்டு நொருங்கிப்போனதுயர் நிகழ்ந்து 18ஆண்டுகளாகிவிட்டது. ஞாபகங்களைக் கரைத்துக் கரைத்துக் காலநதியில் எல்லாம் அள்ளுண்டு போயிற்று.

கண்ணே என்றோர் அன்புக் காதலே என்றோரெல்லாம் அடக்கறுமமே என்று அந்தக்கண்ணழகியின் கண்களில் நிரந்தரமாக்கியது மாரிகாலத்தைத்தான். :rolleyes:

நானும் அந்த இடியப்பக்கடையிக்கை தானே குந்தியிருந்தனான் என்ரை கண்ணிலை அந்த நதியா எத்துபடடேல்லையே??

கவலையுடன் சாத்திரி :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இல்லை மகாராஜா. 18 வருடத்திற்கு முன்னர் ஓ.எல். கூட எடுக்க இல்லை. கிட்டத்தட்ட ஓ.எல் எடுக்கிற நேரம். சாந்தி விஞ்ஞானத்தை பற்றி கதைத்தன் காரணம் அந்ந தனியார் கல்வி நிலையத்தை நடத்திய ஆசிரியர் விஞ்ஞானம் (10ம் வகுப்பு வரையான) கற்பிக்கும் ஆசிரியர் என்பதாலும் அந்த ஆசிரியர் மாணவர்களின் மீது மிகுந்த சிரத்தை மற்றும் மிகவும் கண்டிப்பானவர் என்தபாலும்.

அதனால பாட்டி இல்லை, ஆன்ரி...சரிதானே சாந்தி ஆன்ரி? :huh:

கணக்குச் சரி மாமா. :D

அத்தோடு 35வது பிறந்தநாள் வாழ்த்துக்களும். :D

மகாராஜா உங்களின் ஞாபகத்தில் நிழலாடும் யாராவது இங்கையிருக்கினமோ தெரியாது :D இந்த இணைப்பில வாசிச்சுப் பாருங்கோ. சிலவேளை யாராவது நினைவில் வரலாம்.

என் ஞாபகப்பதிவிலிருந்து...

எங்கள் பாட்டி சாந்தியின் கதை நன்றாக உள்ளது

நிஜத்தை மறக்க முடியாது பாட்டி [சாந்தி] :D:)

முனிவருக்கும் ஞாபகப்பகிர்வுகளா ? நம்ப முடியவில்லை :D

நானும் அந்த இடியப்பக்கடையிக்கை தானே குந்தியிருந்தனான் என்ரை கண்ணிலை அந்த நதியா எத்துபடடேல்லையே??

கவலையுடன் சாத்திரி :( :(

நீங்கள் காவியுடை தரித்த சாத்திரியாய் இடியப்பக்கடையில இருந்திருப்பியள் அதுதான் தெரியாமலிருந்திருக்கும்.

இனிக்கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போறேல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்குச் சரி மாமா. :D

மருமோன் எண்டு எழுதிறதுக்கு பதிலா மாமா எண்டு எழுதிட்டிங்கள் போல இருக்கு. :(

அத்தோடு 35வது பிறந்தநாள் வாழ்த்துக்களும். :D

சும்மா பொய்யான வதந்திகளை பரப்பாதைங்கோ :D(அதக்கென்னும் 7 மாதங்கள் இருக்கு)

மகாராஜா உங்களின் ஞாபகத்தில் நிழலாடும் யாராவது இங்கையிருக்கினமோ தெரியாது :D இந்த இணைப்பில வாசிச்சுப் பாருங்கோ. சிலவேளை யாராவது நினைவில் வரலாம்.

என் ஞாபகப்பதிவிலிருந்து...

இது முன்னர் ஒரு தடவை வாசித்தனான். அந்த காலப்பகுதியில் நான் அங்கு இருக்காததனால் யாரையும் தெரியாது. அதைவிட அங்கிருக்கும் போது குப்பிழானையும் ஏழாலையையும் தவிர வேறெங்கும் நண்பர்கள் இருக்கவில்லை. :( அதுசரி, பிறேமிளா எண்டு ஒருவா படிச்சவா இல்லோ... :) அவா இப்ப எங்கே? சும்மாதான் கேக்கிறேன். :huh:

Link to comment
Share on other sites

அங்க சனங்கள் சாகுதுகள் இங்க நதியாவும் நாயும். ஏதும் உருப்படியா செய்யுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்க சனங்கள் சாகுதுகள் இங்க நதியாவும் நாயும். ஏதும் உருப்படியா செய்யுங்கோ.

தங்கச்சி நீங்களும் ஈழத்துக்கு செய்த, செய்யுற வீரதீர தியாகங்களை இஞ்சை எடுத்து விடுங்கோவன். :mellow:

அப்பதானே எங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி வரும் :mellow:

Link to comment
Share on other sites

தங்கச்சி நீங்களும் ஈழத்துக்கு செய்த, செய்யுற வீரதீர தியாகங்களை இஞ்சை எடுத்து விடுங்கோவன். :(

அப்பதானே எங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி வரும் :D

ஏனுங்க கு.சா

:mellow: உங்களுக்கு தங்கச்சி செய்யுறதை எடுத்து விட்டால்த் தானோ புத்துணர்ச்சி வரும் ?? :mellow:

ஏன் தம்பி செய்யுறதை எடுத்து விட்டால் வராதோ ??? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க கு.சா

:mellow: உங்களுக்கு தங்கச்சி செய்யுறதை எடுத்து விட்டால்த் தானோ புத்துணர்ச்சி வரும் ?? :mellow:

ஏன் தம்பி செய்யுறதை எடுத்து விட்டால் வராதோ ??? :lol::D

சரி எடுத்து விடுங்கோவன் பாப்பம்? :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry489421

வசம்பு அண்ணை இதைப்பற்றி என்ன நினக்கிறியள்? :mellow:

Link to comment
Share on other sites

மருமோன் எண்டு எழுதிறதுக்கு பதிலா மாமா எண்டு எழுதிட்டிங்கள் போல இருக்கு. :lol:

இல்லை மாமா சரியாத்தான் எழுதியிருக்கு சரி கவலையை விடுங்கோ :lol:

சும்மா பொய்யான வதந்திகளை பரப்பாதைங்கோ :D(அதக்கென்னும் 7 மாதங்கள் இருக்கு)

இது முன்னர் ஒரு தடவை வாசித்தனான். அந்த காலப்பகுதியில் நான் அங்கு இருக்காததனால் யாரையும் தெரியாது. அதைவிட அங்கிருக்கும் போது குப்பிழானையும் ஏழாலையையும் தவிர வேறெங்கும் நண்பர்கள் இருக்கவில்லை. :lol: அதுசரி, பிறேமிளா எண்டு ஒருவா படிச்சவா இல்லோ... :lol: அவா இப்ப எங்கே? சும்மாதான் கேக்கிறேன். :rolleyes:

ஏழுமாதத்துக்கு கனகாலம் இல்லை. ஆக 35நெருங்குகிறது. :lol:

நீங்கள் கனடாவுக்குப் போனாப்பிறகு நடந்த கதைகள் அவை. குப்பிளான் ஏழாலையைவிட்டு நீங்கள் கனடா போனபிறகு அங்கு நிகழ்ந்தவை நிறைய.

பிறேமிளாவோ அவ இங்கைதான் இருக்கிறா. சும்மா இல்லை உண்மையாத்தான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறேமிளாவோ அவ இங்கைதான் இருக்கிறா. சும்மா இல்லை உண்மையாத்தான் :)

இங்கைதான் என்றால் நீங்கள் இருக்கும் நாட்டிலோ? என்ன செய்யுறா? (2 பேரும் ஒரே ஆளைத்தானே கதைக்கிறோம்?)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.