Jump to content

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?


Recommended Posts

எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது.

களத்தில் ஒரு சில நல்ல கருத்தாளர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அவர்களுக்காக மட்டும் தொடர்ந்து நடாத்துவது முடியாத காரியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தயவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

அதேவேளை தளம் கைவிடப்படும் நிலைக்கு வந்தால் எந்த ஒரு காரணத்தினாலும் இன்னொருவரிமும் தளம் ஒப்படைக்கப்பட மாட்டாது.

முதற் கட்டமாக

- களத்தின் பல கருத்துப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளது.

- புதிய அங்கத்துவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

மோகன்

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

களத்தில் பல பகுதிகள் மூடப்பட்டிருப்பதைப் பார்த்து நான் கூட அதிர்ச்சியடைந்தேன். பின்பு இப்பகுதியில் உங்கள் ஆதங்கத்தையும் பார்த்துப் புரிந்து கொண்டேன். உண்மையில் களத்தின் போக்கில் மாற்றங்கள் வர வேண்டும் என்பது உண்மையே. இதனை நிர்வாகம் அறிவுறுத்தி ஏனைய உறவுகள் செயற்படுத்துவதை விட, உறவுகள் தாமாகவே தமக்கு சுய கட்டப்பாடுகளை ஏற்படுத்தி ஒரு வரைமுறைக்குள் கொண்டு வருவதே நல்லது. அதே போல நிர்வாகமும் விதிமுறைகளை கட்டாயமாக எந்தவித பாரபட்சமும் காட்டாமல் எல்லோரிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

எனவே நீண்ட காலமாக பலருக்கு உறவுப்பாலமாக செயற்பட்டு வந்த இந்தக் களம் மேன்மேலும் தனது கடமைகளை தொடர்ந்து ஆற்ற நாம் ஒவ்வொருவரும் அதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கி, களம் தொடர்ந்து இயங்க மோகன் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். எனவே மோகன் நீங்கள் எதுவித அவசர நடவடிக்கைகளும் எடுக்காது கள உறவுகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி உங்கள் பணியை தொடர்ந்து ஆற்றுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

http://www.media-anthropology.net/eriksen_...scyberspace.pdf

தாயகத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிட்டத்தட்ட 70 வீதமான சுருங்கியது போல் இணைய உலகிலும் தமிழீழ தேசியம் அடுத்தடுத்த வருடங்களில் சுருங்கும்.

புலம்பெயர்ந்தவர்கள் சிந்தித்து செயற்படும் காலம் என்று சொல்ல முடியவில்லை. பல வழிகளில் பார்த்தால் அதற்கு காலம் கடந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். வருவதை எதிர்கொண்டு தெளிந்து எஞ்சுபவர்கள் ஒற்றுமையாக சயனிசம் போன்ற ஒன்றின் மூலம் எதையாவது இறுதியில் அடையலாம்.

Link to comment
Share on other sites

புரிந்துணர்வு..பொறுப்பு என்பவற்றை உறுப்பினர் கொண்டிராதவிடத்து உறுப்பினரை எச்சரித்தோ நீக்;கியோ விடலாம்... புது அங்கத்துவத்தை நிறுத்தி வைப்பதும் சரியாக இருக்கலாம். மற்றும் சினிமா போன்ற விடயங்களை நீக்கலாம். யாழ் நீண்ட நீடிக்கவேண்டும் என்பதே என் ஆசை..என்னுடைய ஒத்துழைப்பு நிச்சயமாக இருக்கும்.. மற்றைய உறுப்பினர்களும் யாழின் நீடிப்பையும் சேவையும் கருத்தில் கொண்டு புரிந்துணர்வோடும் கட்டுப்பாட்டோடும் செயற்படவேண்டுமென பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

எனவே நீண்ட காலமாக பலருக்கு உறவுப்பாலமாக செயற்பட்டு வந்த இந்தக் களம் மேன்மேலும் தனது கடமைகளை தொடர்ந்து ஆற்ற நாம் ஒவ்வொருவரும் அதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கி, களம் தொடர்ந்து இயங்க மோகன் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். எனவே மோகன் நீங்கள் எதுவித அவசர நடவடிக்கைகளும் எடுக்காது கள உறவுகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி உங்கள் பணியை தொடர்ந்து ஆற்றுங்கள்.

வசம்பு அவர்களின் கருத்தே எனதும். முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி ஆக்கிரமிப்போடு மனச்சோர்வு வந்துவிட்டது போலத் தெரிகின்றது??

யாழ் களத்தில் ஆரோக்கியமான விவாதங்கள், கருத்துப் பகிர்வுகள் குறைந்து கொண்டுதான் போகின்றன. எல்லோரும் தாம் தாம் அறிவாளிகள் என்று குதர்க்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. எனவே யாழ் களம் மூடப்பட்டால் பாதிக்கப்படுவது ஒவ்வொரு நாளும் யாழைப் பலதடவை பார்வையிடும் உறவுகளும், கருத்தாளர்களும் (?) மட்டுமே.

ஆரோக்கியமான கருதாடல்கள் மூலம்தான் ஒவ்வொருவரையும் அரசியல் பற்றி விழிப்பாக வைத்திருக்கமுடியும்.யாழ் களம் செயல் இழந்தால் பயனடைவது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகள்தான்..

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க யாழ்களம் பயன்படவேண்டும், அதன் நோக்கங்களை நிறைவேற்ற சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது நல்லதுதான்.

Link to comment
Share on other sites

வரவேற்கப்படவேண்டிய நல்ல முடிவு, தாமதிச்சாலும் சிந்திச்சு பொறுப்புணர்வோட முடிவெடுத்திருக்கிறியள், அநியாயமா காசை கொட்டி (என்ன மில்லியனா பில்லியனா??) என்ன பிரியோசனம்? ஒண்டுமில்லை.....

அதோட நாம என்ன பிறகும் பொழுது இன்ரர் நெட்டோடையா பிறந்தம்? இல்லை யாழ் மூலமாவோ வளர்ந்தம், யாழ் வேலை செய்யாட்டா வன்னிக்கு போவம்!

1வது யாழுக்கெண்டு பிரத்தீயோக செய்தியாளர்கள் தமிழீழத்தில இருந்து செய்திகளை நேரடியா தந்து அதனால இப்படி நிறுத்தப்படுறது எண்டு அறிவித்தால்த்தான் செய்திகள் வரமாட்டுதே எண்ட கவலை, இங்க வாறதெல்லாம் வெட்டி ஒட்டுதல் தானே, சோ செய்தி இங்க வாராட்டா வேற களங்களுக்கு போகலாம் அதால யாழ் முடப்பட்டால் 50% பாதிப்பு இல்லை,

2வது தமிழீழத்தில நடக்கிறதுகளை பற்றி இங்க கதைக்கிற கருத்தாளர்களது ஒட்டுமொத்த கருத்தை சுருக்கி தினக்குரல், விரகேசரி, பரபரப்பு எண்டு பல பத்திரிகைகள் ஒவ்வொரு வாரமும் ஏ4 பக்கத்தில கட்டுரை வெளியிடுது அதால கட்டுரைகளை இங்க வாசிக்கனும் எண்டு இல்லை அப்ப அதில ஒரு 10% பாதிப்பு இல்லை..

3வதா அலட்டல்கள், பிரியோசனமற்ற கருத்துக்களை இந்த களத்தில்த்தான் எழுதனும் எண்டில்லைத்தானே? எலகிரி, தாயகப்பறவைகள், அது இதெண்டு கனக்க இருக்கு, அங்க எழுதலாம் அதால அதுக்கும் ஒரு 10% ....

வேற என்ன? இருக்கு நாட்டுக்காக ஏதாச்சும் செயற்பாடுகள் செய்யிறமா இல்லை? அதான் எல்லாரும் ஒவ்வொரு நிறுவணம் ஊடாக லட்சக்கணக்கா அள்ளி அள்ளிகுடுக்கிறம் அம்புட்டும் போதும் பிறகு எதற்கு பிறிம்பா யாழ் ஊடாக அப்ப அங்கையுமொரு சிக்கல் இல்லை...

சரி கடைசியா அடிக்கடி அதான் 4,5 வருசமா சொந்த வீடு போல நினைச்சு இருக்கிறவங்களுக்கு ஆறுதல் தாற செய்தியை போட்டுட்டு இழுத்து முடுங்குகோ, நேரத்தை மிச்சம்படுத்துங்கோ, நேரம் இருக்கிறவையள் வலைப்பு செய்வினம், செய்யா தெரியாதைவையளுக்கு செய்து குடுப்பினம், வலைப்பூவீல கதைச்சு பலருக்கு புரியவைச்சு (நேற்று ஆரம்பிச்ச எமது போராட்டத்தை பற்றி யாருக்குமே எதுவும் தெரியா குறிப்பா வலைப்பூவில இருக்கிறவையளுக்கு இப்படி புரியவைச்சால் பிரச்சினை தீரும்) இந்திய மத்திய ஆரசாங்கம் தீர்த்துவைக்கும்.

சரி முடிஞ்சால் ஓசியில இயங்குறமாதிரி ஒரு களத்தை அதான் www.forumer.com/....... எண்டு ஆரம்பிக்கிற களத்தை திறந்து குடுத்துட்டு போங்கோ, அதுக்கு 2,3 வேலைவெட்டி இல்லாதவையளை நியமிச்சுட்டு போங்கோ.....

ஆ முக்கியமா ஒண்டை சொல்லமறந்துட்டன், பெண்கள் காவலர்கள் சிலர் சவுண்ட் விடுவினம் இப்படி திடுதிடுப்பு எண்டு மூடீட்டு போனால் யாழியை நம்பி இருக்கிற பெண்கள் கதை என்ன எண்டு? அவையளுக்கும் ஏதாச்சும் பறக்கிற ஐடியா குடுத்தீயள் எண்டால் சந்தோசமா இருக்கும்.

அப்புறம் முடிஞ்சால் ஒரு சர்வே எடுத்து பாருங்களேன்....

பூட்டுவமா?

வேண்டாமா?

பூட்டிபூட்டி திறப்பமா?

அப்படின்னு.......

பஞ்ச்; கண்ணா........................ இந்த சிட்டுவேசனுக்கு இது போதும்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தை கடந்த சில வருடங்களாக கவனித்து வருபவன் என்ற ரீதியில்.. சில கருத்துகளை கூறலாம் என நினைக்கிறேன்.

பழைய களங்களை எடுத்துக் கொண்டால்.. அரசியல் கருத்துகள் ஒரு பகுதியாகமட்டுமே இருந்தது.. ஆனால் தற்பொழுது தாயக அரசியலே யாழ் களமாகிவிட்டது. அரசியல் தேவைதான்.. ஆனால் எல்லாமே அரசியல் அல்ல. எத்தனையோ படித்த, படிக்கும் உறவுகள் இங்கே உள்ளார்கள்.. ஆனால் அவர்கள் இந்தத் தளத்தை அரசியல் கருத்துகளுக்காகமட்டும் பயன்படுத்தி வாக்குவாதப்படுவதையும்.. ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடிப்பதையுமே பெருமளவில் காணக்கூடியதாக உள்ளது.

ஒரு காலத்தில் யாழில் பெற்ற அறிவுடனும், யாழ் உறவுகளின் தொடர்புகளினாலுமே நான் இன்று ஒரு இணையத்தை நடாத்தக்கூடிய அளவுக்கு அறிவு பெற்றுள்ளேன்.. நான் இணையத்தளத்தில் ஈடுபடுவதைப் பார்த்து ஆர்வம் கொண்ட எனது மகன் இன்று தானே சிலருக்கு இணையத்தளத்தை அமைத்துக் கொடுத்து, தனது கைச் செலவைச் சமாளிக்கும் அளவுக்கு அறிவுபெற்றிருக்கிறான்.

அதுமட்டுமல்ல.. யாழில் அன்று பல உறவுகள் எனக்குத் தந்த ஊக்கத்தினாலும் உற்சாகத்தினாலும், 'ஐஸ்கிறீம் சிலையே நீ தானோ?' ( http://www.yarl.com/articles/blog/10 ) என்ற ஒரு தொடர்கதையை 20 அங்கங்கள் எழுதினேன். அது இன்றும் பேசப்படுகிறது.

இவ்வாறு இந்தக் களமானது என்னைப்போல பலருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பட்டிருக்கிறது.

ஆனால்.. தற்போது.. இக் களமானது...

வெறும் அரசியல் வாக்குவாதங்களுக்கும்.. வெறும் அலட்டல்களுக்கும்.. சாதி சமய அளவீட்டுத் தராசுத்தட்டாகவும் பயன்பட்டு.. வீண் மனவலிகளையும், மனக் குரோதங்களையும் வளர்க்கிறதோ என்ற பார்வை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகத்தான் உள்ளது.

ஏற்கெனவே ஆரோக்கியமாக எழுதியவர்களையும் தற்போதைய கருத்தாடல்களில் பெரும்பாலானவை புறந்தள்ளியிருக்கிறது.

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்.. தயவுதாட்சண்யமின்றி கருத்துகளை நெறிப்படுத்துங்கள்.. தேவையில்லாத நூறு கருத்துகளிலும் பார்க்க நல்ல ஒரு கருத்தே போதும் என்ற மனப்பக்குவத்துக்கு தயாராகுங்கள்!!

அதனால்.. இக்களத்தை ஆரோக்கியமானதாக.. ஆக்கத்துக்கு வழிசமைப்பதாக.. ஒவ்வொருவரையும் தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டி ஊக்கப்படுத்துவதாக மேம்படுத்தும் பொறுப்பு சகல அங்கத்தினர்களையுமே சார்ந்தது.

எனவே, நிர்வாகத்தின் கரங்களை உற்சாகப்படுத்தி.. நாமும் நமது வருங்காலமும் பயன்பாட வழிசமைப்போமாக!!

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா,

தயவு செய்து யாழ் களத்தினை நிறுத்த வேண்டாம்

யாழ் களத்தின் தேவை முன்னெப்போதையும் விட தமிழ் தேசிய விடுதலை போராட்டம் கடும் நெருக்கடிகளையும், சவாலையும் எதிர் நோக்கும் இக் கால கட்டத்தினில் அவசியமாகின்றது. ஒழுங்குகளில் கடுமை கொண்டுவந்து, பாரபட்சமின்றி நடந்து கொள்வதன் மூலம் விதண்டாவாதங்களை கட்டுப்படுத்தலாம்.

ஆரோக்கியமான கருத்தாடல்கள் தான் ஒரு சமூகத்தின் நாகரீக அடையாளம். அதனை கூட எம்மால் செய்ய முடியாத போது, ஒரு தேசிய இனமாக எம்மை கருதிக் கொள்வது எவ்வாறு? விமர்சனத்திற்கு அப்பாட்பட்ட ஒரு சமூகமாக தம்மை நினைக்கும் அளவிற்கு எம் சமூகம் வந்துவிட்டது தான் பெரிய துயரம். இந்த போக்கின் வளர்ச்சியிற்கு, யாழ் களம் மூடல் நிச்சயம் துணை போகும். அத்துடன், இதன் மூடல் மேலும் மேலும் மோசமான தமிழ் இணைய தளங்கள் உருவாகவும் வழி விடும்

-நிழலி-

Link to comment
Share on other sites

அண்ணா,

நான் இந்த களத்திற்கு புதியவன் , ஒரு நல்ல கருத்தாளனும் இல்லை, தமிழில் எழுதவேண்டும் எண்ட ஆர்வம் தான் என்னை இணைய தூண்டியது,

அரசியல் சம்மந்தமாக எழுத கூடாது எண்டு தான் நினைப்பேன் , ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் எதாவது எழுதிவிடுவேன்.

நான் கற்றுக்கொண்டு இருக்கும் துறையில் ,எழுத வேண்டும் என நினைத்திருந்தேன் , ஆயத்தமும் செய்துகொண்டிருக்கிறேன்

எனது கண்ணோட்டத்தில் இங்கு பிரச்சனைய உருவாக்குவது

தமிழ் ஊடகங்களை, எழுத்தாளார்களை , தமிழகம் சம்மந்தமாக் எழுந்தமானத்துக்கு விமர்சிப்பது இப்படி பல

எனது கருத்து,

உறுதிப்படுத்திய அரசியல் செய்திகளை மட்டும் இணைக்கவும்

அரசியல் சம்மந்தமான செய்திகளுக்கு பின்னூட்டல் இடுவதை நிறுத்தலாம்

எனைய அலட்டல் சம்மந்தமாக கட்டுபாடுகளை மேற்கொள்ளலாம்

தயவு செய்து நிறுத்தும் முடிவை எடுக்க வேண்டாம்

Link to comment
Share on other sites

மோகன் :):o

தயவு செய்து யாழ் களத்தினை நிறுத்த வேண்டாம்.......

என்ன நடக்கிறது.... களத்திலே.... இன்றைய நாளில் இந்த முடிவை எடுத்தது.... வார்த்தைகள் வரவில்லை... :lol::)

கொஞ்சம் பொறுங்கள்........ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா கொஞ்சம் பொறுங்கள் எங்களை ஏமாற்றாதீர்கள் நல்ல தமிழ் வளர்க்கும் ஒரு சிறந்த ஆசானை நிறுத்தி தமிழை மறக்கப்பன்ன வேண்டாம் அப்படியானல் பிரச்சனையான விடயங்களை நீக்கிவிடவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா நீங்களா யோசிச்சு முடிவெடுங்கோ. இதில பாதிப்பேர் இப்ப ஒரு மாதிரி சொல்லுவினம்.. பிறகு இன்னொரு மாதிரிச் சொல்லுவினம். அவையவை பாதிப்படையேக்க.. கொதிச்செலுவினம். யாழ் மீதே காறி உமிழ்வினம்.

உங்கட பணம்.. உங்கட நேரம்.. உங்கட முயற்சி தான் இங்க அதிகம். எனவே தீர்மானம் எடுக்கிறதும் உங்கட கையிலதான் இருக்குது.

எனது தனிப்பட்ட விருப்பம்.. யாழ் இன்னும் இன்னும் மெருகேறிக் கொண்டு.. உங்களால் இன்னும் இன்னும் வெற்றியை நோக்கி நடத்தப்பட வேணும் என்றதுதான்.

நான் இதில வந்துதான்.. கணணித் தமிழே எழுதப்பழகினேன். சில ஆக்கங்களை தமிழில் எழுதத் தூண்டப்பட்டேன். அவை தமிழுக்கு யாழுக்கு பிரயோசனப்பட்டிச்சா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

நிறைய வாதங்களில் வலிந்தும்.. உணர்ந்தும்.. ஈடுபட்டிருக்கிறேன். அதில சில தடவைகள் உங்களுக்கு சிக்கல்களையும் ஏற்படுத்தி இருக்கிறேன். அதற்கெல்லாம்.. என்னையும் மன்னிச்சுக்கோங்கோ.

நிதி நெருக்கடிகளை சமாளிக்க கள உறவுகளிடம் ஒத்துழைப்பைக் கோரிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அதிலும் சிக்கலை உண்டு பண்ணிவிடுவார்கள் என்ற பயமும் இருக்கத்தான் செய்கிறது.

யாழை.. இழக்க விரும்பவில்லை. யாழ் 10 ஆண்டுகள் கண்டுவிட்ட நிலையில்.. இன்னும் வளரனும்.. என்பதே அவா. ஆனாலும் இறுதி முடிவெடுப்பது உங்கள் கையில்..! :D

Link to comment
Share on other sites

இங்கே கருத்தொருமித்து இல்லாது எல்லாரையும் நக்கலும் நளினமாக உண்மையான தீவிர பிரச்சினைகளை கூட அணுக முற்பட்டதன் பின் விளைவுகள்தான் இவை...

கருத்துக்களை புரிய முடியாதவர்களுக்கு புரிய வைக்கும் நோக்கமே இல்லாது, அவர்களை சீண்டுவதும் அதற்கான பாணியில் அவர்களிடம் இருந்து பதில் வருவதையும் தடுக்க முடியவில்லை...

எவரையாவது எப்போதாவது குறை காண வேண்டும்... நட்புறவு என்பது மூண்றாம் பட்ச்சம் ஆகிவிட்டது....

கூட இருந்து கருத்து எழுதுபவர்களுடனையே பகைமை பாராட்டுபவர்கள், தாயக நலன் பற்றியும் மக்கள் ஒற்றுமை பற்றியும் பேசுவதுதான் இப்போதைய நாகரீக வழர்ச்சியாக உள்ளது...

ஆகவே மாற்றம் வேண்டும்... வராவிட்டால் மோகன் அண்ணாவின்( இவ்வளவுகால) உழைப்பு வீண்... இதை விட்டு அண்ணியையும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவளிப்பது நல்லது...

Link to comment
Share on other sites

அன்பின் மோகன்

எக் காரணத்தை முன்னிட்டும் யாழை நிறுத்த வேண்டாம். அதற்கு பல காரணங்கள் உண்டு.

ஏதாவது பிரச்சைனகள் இருக்கலாம்.

யாழில் தீங்கை விட நன்மைகளே அதிகம் என்பது எனது தாழ்மையான கருத்து.

யாழில் ஆரம்பம் முதலே அனைவரையும் ஒரேவிதமாக நடத்தியிருந்தால் மனதில் வேதனைகள் ஏற்பட்டிருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.

நட்பு காரணமாகவோ அல்லது வேறு ஒரு ஈர்ப்பு காரணமாகவோ எங்காவது சறுக்க நேர்ந்தால் அதுவே தொடர் கதையாகிவிடும். யாருக்கும் விட்டுக்கொடுத்து பொதுவேலைகள் செய்யக்கூடாது. அதை முளையிலே சரிசெய்துவிட வேண்டும்.

விட்டுக் கொடுப்புகளை பொதுவாழ்வில் பலர் செய்கிறார்கள். அவை உச்சத்துக்கு போனபின் அதற்காக வருந்தி பயனில்லை. அதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டால்....அவை ஒருபோதும் தொடராது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

சில தவறுகளை நாம் நட்பு காரணமாக கண்டுகொள்ளாமல் விட நேரும் போதுதான் அது பின்னர் பல பிரச்சனைகளை அதிகரிக்க செய்கிறது.

ஒன்றை அழிப்பது வெகு இலகுவானது.

அதை உருவாக்க அவ்வளவு இலகுவில் முடியாது.

அதேபோல யாழின் வளர்ச்சியோடு பலர் வளர்ந்திருக்கிறார்கள். நான் கூட தமிழில் தட்டச்சு செய்ய யாழ்தான் காரணம் என்பதை நான் எங்குமே மறுப்பதில்லை. சிலர் என்னை தாக்கி எழுதினாலும் கூட பல நல்ல உறவுகள் யாழ் மூலமாக எனக்கு கிடைத்தனர். என்னைப்போல் பலருக்கும் அந்த வாய்ப்பு கிட்டியிருக்கும். நான் பல இடங்களில் அது என் குடும்பம் என சொல்லியிருக்கிறேன்.

யாழில் எனக்கு ஏற்படும் பிரச்சனைகளை தனிமடல் மூலமோ அல்லது தொலைபேசி வழியோ யாழ்கள நிர்வாகிகளோடு ஒருபோதும் பேச விரும்பாதவன். பொதுவான பிரச்சனைகளை களத்தில் நேரடியாக எழுதியும் , தனிப்பட்ட பிரச்சனைகளை தனியாகவும் பேச விரும்புபவன். எனவே பல வேளைகளில் நேரடியாக களத்திலே என் குமுறல்களை வெளியிட்டேன். எனவே சற்று தள்ளி அதிகநேரம் பார்வையாளராகவே இருந்துள்ளேன்.

அது வேறு தற்போது மோகன் எழுதியிருக்கும் விடயம் வேறு.

ஏதாவது பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தால் மோகன் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது வேறு ஏதாவது வகையில் உணர்த்த முடிந்தால் உணர்த்தலாம்.

யாழ் களத்தை எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் நிறுத்த வேண்டாம் மோகன்.

தொடர்ந்து பேசுவோம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் மோகனுக்கு,

யாழ்க் களத்தையிட்டு உங்களுக்குத் தோன்றியிருக்கும் எண்ணம் இன்றல்ல இதை நான் உங்களிடமிருந்து எப்போதோ எதிர்பார்த்தேன். யாழ்க்களத்தை மூடுவது என்ற உங்கள் எண்ணத்தை கைவிடவேண்டியது காலத்தின் அவசியம். இன்று புலம்பெயர்ந்து வாழும் ஈழவர்களுக்கு ஒரு உறவுப்பாலமாக யாழ் இணையம் இயங்குவதை யாராலும் மறுக்கமுடியாது. இருப்பினும் எங்கள் நாட்டின் தற்கால சூழலில் இங்கு இடம்பெறும் சில கருத்தாடல்கள் எங்களுக்கான ஆதரவுக்குரல்களை அழிக்கும் சூழலைத் தோற்றுவிப்பதையும் மறுக்கமுடியாது. இன்று தமிழகத்தின் எழுச்சிக்குரல்களை மத்திய அரசு அசட்டை செய்வதை அவதானித்தாலே கண்களுக்குப் புலப்படாத பல உண்மைகள் புலப்படும். ஒரு தமிழகம் போன்ற பெரிய நிலப்பரப்பில் வாழும் எங்கள் சகோதர உறவுகளின் பலமே அங்குள்ள அரசியல், மதம் போன்ற காரணிகளால் பிளவுபட்டதாக வலிமையிழந்ததாக ஆக்கப்படும்போது இந்த யாழ்க்களம் எம்மாத்திரம்? இதற்குள் இருக்கும் நல்ல கருத்தாளர்கள் காலத்தின் தேவை கருதி ஈழத்தின் விடுதலையை மட்டும் மனதில் சுமந்து கருத்து வைக்கவேண்டும். அத்தோடு மதங்களுக்காக நாங்கள் மதம்பிடிக்காமல் மானிடத்தை மட்டும் கருத்தில் கொண்டவர்களாக கருத்தாடவேண்டும். மதம் தோற்றுவிக்கப்பட்டதே ஒழுக்கநெறிக்குள்; மனிதர்கள் வாழவேண்டும் என்பதற்காகத்தான். சரி அதை விடுவோம் அரசியல் கட்டுரைகளையும், அடுத்தவர் கருத்துக்களையும் கேலி செய்வது..... நகைச்சுவைக்காக எழுதினோம் என்று இவ்விடத்தில் யாரும் தப்பிக் கொள்ளமுடியாது ஏனென்றால் இவை இன்று நேற்றல்ல எனக்குத் தெரிந்து நான்கைந்து வருடங்களாக இவற்றை அவதானிக்கமுடிகிறது. இதன் மூலம் நாங்கள் எங்களுக்குள் வளரும் ஆய்வாளர்களையும், படைப்பாளிகளையும் எம்மை அறியாமலே நோகடிக்கிறோம். கிண்டல் அடிப்பதற்கென்றுதான் தனிப்பட்ட பகுதிகளைத் திறந்து அனைவருக்கும் வழி சமைத்து வைத்திருக்கிறார்களே... ஒரு கருத்துக்களத்தில் எண்ணுக்கணக்கில் முதுகு சொறிவது அக்கருத்துக்களத்தின் வளர்ச்சியின்மைக்கு வழிவகுக்கும். இங்கு யாரையும் குறை கூறுவதற்காக இவற்றை நான் எழுதவில்லை. எங்களை அறியாமலே இக்களத்தின் வீழ்ச்சிக்கு நான் உட்பட அதிகமானோர் வழி வகுக்கிறோம் என்ற உண்மை உறுத்துவதாலேயே இக்கருத்தை இங்கு பதிகிறேன்.

சகோதரர் மோகன், உங்களுடைய மனத்தளர்ச்சி எமக்கும் புரிகிறது. காலத்தின் தேவை இருக்கிறது. எங்கள் மக்களின் வாழ்விற்கு ஒளிகூட்டும் கலங்கரையாக இணைய உலகத்தில் யாழின் பணி அதிகரிக்கவேண்டிய தேவை இருக்கிறது. பலதிரிகள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சில விடயங்களை எம்முடனேயே நாம் மட்டுப்படுத்திக் கொள்வது எங்களுக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். சில வேளைகளில் நான் இங்கு எழுதும் கருத்திற்கே கூட சீண்டல் பதில்கள் வரக்கூடும். இருப்பினும் யாழ்க்களம் எக்காரணம் கொண்டும் மூடப்படக்கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

தொடர்ந்து யாழ்களம் இயங்குவது காலத்தின் தேவை.. களைகளுக்காக பயிர்களையும் சேர்த்து அழித்துவிட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனச்சோர்வு வேண்டாம் மோகன் அண்ணா. எத்தடை வந்தாலும் என்றென்றும் யாழ் இணையம் இயங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் ஐயா!

நீங்கள் எடுக்கும் இந்த முடிவு நான் சில வருடங்களாக எதிர்பார்த்ததுதான்.

இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் எடுத்த இந்த முடிவு பல பாரதூரமான விளைவுகளை புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.

நீங்கள் எதிர்பார்த்தவை இங்கே உருவாகாமை என்னவோ உண்மைதான். அதை உருவாக்க வேண்டிய என்னைப்போன்றவர்களும் தவறிவிட்டோம். மன்னிக்கவும்.

அதற்காக இணையதளத்தை முற்றுமுழுதாக மூடிவிடாதீர்கள்.அது நீங்கள் எம் வருங்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்.

தயவு செய்து தொடர்ந்து நடத்துங்கள்.

எனதருமை யாழ்கள சகோதர சகோதரிகளே!

நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டு நல்ல கருத்துக்களை எழுதுங்கள்.நல்ல ஆக்கங்களை படையுங்கள்.வேண்டாவிவாதங்களை தவிருங்கள்.நல்லதையே செய்யுங்கள்.

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

இப்படிக்கு

குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

குமாரசாமி ஐயா, இப்படி சென்ரிமென்ற்றாக எழுதிவிட்டு ஒளிந்துகொள்வது நல்லாயில்லை..

மோகன் அண்ணா ஏதோ விசிறி தன்பாட்டில சுழலுது. எப்ப நிக்குதோ அப்ப நிக்கட்டும் எண்டு சொன்னார். இப்ப விசிறிக்கு கரண்டை நிப்பாட்டலாம் என்று யோசிக்கிறார்..

புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் தமிழை வாசிக்க, எழுதப் பேருதவியாக யாழ்களம் இருந்தாலே அது பெரிய உபகாரம்தான். அதைவிடுத்து புலம்பெயர் தமிழ் சமுதாயத்தை ஒரு நோக்கம், இலக்கு நோக்கி ஒருமைப்படுத்திச் செயலாற்றப் பண்ண முயன்றால் அது தோல்வியிலேயே முடியும்!

Link to comment
Share on other sites

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

இப்படிக்கு

குமாரசாமி

உங்கள் போன்ற மூத்த உறுப்பினர்களின் பங்களிப்பு களத்துக்கு அவசியமானது. உண்மையை சொல்லப்போனால், என் போன்ற இளையவர்களை களத்தில் எழுத தூண்டியதே உங்கள் போன்றவர்கள் தான். இங்கு எழுத, கருத்து பரிமாற பல பிரயோசனமான விடயங்கள் உள்ளன. அதை விடுத்து எழுதுவதை நிறுத்துவது என்பது அவசியமற்றது. உங்கள் முடிவைப் மாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி :D

Link to comment
Share on other sites

திரு. மோகன்,

முதற் கண் உங்கள் முய‌ற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிக‌வும் சிற‌ப்பாக‌ இக்க‌ள‌ம் இய‌ங்கி வ‌ருகிற‌து. ஈழ‌ உற‌வுக‌ளை இணைக்கும் ஒரு பால‌மாக‌வும் தமிழ‌க‌ உற‌வுக‌ள் கூட‌ வ‌ந்து நோக்கி த‌ம் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்கும் ஒரு இட‌மாக‌வும் மிளிர்கிற‌து.

மேலும் சில‌ ம‌னித‌னேய‌ முய‌ற்சிக‌ளின் பிற‌ப்பிட‌மாக‌வும் இக்க‌ள‌ம் இருந்திருக்கிற‌து என‌ நின‌க்கிறேன்.

பானையில் உள்ள‌தே அக‌ப்பையில் வ‌ரும் என்பார்க‌ள். ந‌ம‌து ஈழ‌ச் ச‌முதாய‌ம் எப்ப‌டியோ அப்ப‌டியே அவ‌ர்க‌ள் ப‌ங்கு ப‌ற்றும் க‌ள‌மும் பிர‌தி ப‌லிக்கும்.

ப‌ல‌ க‌ருத்துக‌ளை நாம் இங்கு கூறி வ‌ருகிறோம். இவ‌ற்றிற்கெள்ளாம் நீங்க‌ளோ இக்க‌ள‌மோ பொறுப்பாளி அல்ல‌. இருப்பினும் சில‌ ம‌ட்டுப்ப‌டுத்த‌ல்க‌ள் அவ‌சிய‌ம் என் நினைக்கிறேன்.

ஒரு பாட‌சாலையையொ அல்ல‌து ஒரு ப‌ல்க‌லை கழக‌த்தையொ ந‌ட‌த்துப‌வ‌ர் அங்கு காண‌ப்ப‌டும் குள‌ப‌ங்க‌ளைக் க‌ண்டு அதை மூட‌ நினைக்கலாமோ ?

ஓட்டு மொத்தமாக ஒரு குறிப்பிட திசையில் மாத்திரம் களம் நக‌ர வேண்டும் என்று நினைப்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது. சிங்களவர்களினது களம், வெள்ளையர்களினது தொழில் நுட்பக் களம் போன்றவற்றில் மோசமான குளப்பங்களையே பார்கிறோம். எல்லார்க்கும் இப்பிரச்சனை உள்ளது.

நாட்டு எல்லைகள், கண்ட எல்லைகளைத் தாண்டி ஈழவர் நம்மை "நாங்கள்" என்ற புள்ளியில் யாழ் இணைத்து வைத்திருக்கிறது. மேலும் பலர் இணைந்து இந்த "நாங்கள்" வளர வேண்டும். யாழும் வளர வேண்டும்.

நிதி ரீதியாக‌ ஆத‌ர‌வு வேண்டும் என்றால் ஒரு ப‌குதியை ஆர‌ம்பித்து உறுப்பின‌ர்க‌ளின் க‌ருத்தை கேளுங்க‌ள். என்னால் ஆன‌ ப‌ங்க‌ளிப்பைச் செய்வேன். ஏன‌ய‌வ‌ரும் ப‌ங்க‌ளிப்பார்க‌ள்.

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன்,

நான் நேற்று வேற ஒரு ஊருக்கு போய் இருந்தன். நாளைக்கு வருவதாக இருந்தன். திடீரெண்டு இப்பிடி மோகனும் எங்கட ஸ்டைலில ஏதோ எழுதி இருக்கிறத பாத்துப்போட்டு கட்டாயம் உடனடியாக இதுபற்றி எனது கருத்தை சொல்லவேணும் போல இருந்திச்சிது. எண்டபடியால இண்டைக்கே திரும்பி வீட்டுக்கு வந்தாச்சி. எண்டாலும் நீங்கள் இப்படி ஒரு அறிக்கை விட்டதை பார்த்ததில பெரிதாக ஆச்சரியம் ஏற்படவில்லை. நானே பல தடவைகள் யாழைவிட்டு வெளியேற முயற்சித்து இருக்கிறன். அதற்கு முக்கியமான காரணம் யாழ் மூலம் ஏற்படுறகிற மன உலைச்சல். யாழில ஏதாவது எழுதுற எனக்கே மனம் உலைச்சல் அடைஞ்சு வெறுப்பு ஏற்பட்டு இனி யாழ்ப்பக்கமே வரக்கூடாது எண்டு எண்ணம் ஏற்படேக்க, யாழை உருவாக்கி நடத்துற உங்களுக்கு இப்படியான ஒரு எண்ணம் வந்தது வியப்பை தரவில்லை. உங்களுக்கு தினமும் ஏற்படக்கூடிய மன உலைச்சலை கற்பனை செய்து பார்க்கக்கூடியதாக இருக்கிது.

யாழுக்கு நான் வந்த முக்கியகாரணம் பொழுதுபோக்கை மையப்படுத்தியதாகவே இருந்தது. சத்திரசிகிச்சை ஒன்றின் காரணமாக வீட்டில மூன்று நான்கு மாதங்கள் முடங்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டு இருந்திச்சிது. இதனால ஏற்பட்ட வலியை மன அழுத்தத்தை குறைக்கலாம் எண்டு நினைச்சு யாழுக்க இணைஞ்சன். தவிர, செஞ்சோலை படுகொலை எனது மனநிலையை பெரிதும் பாதித்து இருந்திச்சிது. ஆத்திரமாக இருந்திச்சிது. இதுவும் இப்படி பலர்கூடுகின்ற ஒரு இடத்தில தமிழில எனது கருத்துக்களையும் சொல்லவேணும் எண்டு நான் வெளிக்கிட்டதுக்கு காரணமாக இருந்திச்சிது.

யாழ் மூலம் நான் பெற்ற நன்மைகள் எண்டு சொன்னால் கீழ்வருபனவற்றை சொல்லலாம்:

1. தமிழில இணையத்தில எழுதப்பழகினது. பலருக்கு அதை சொல்லிகுடுத்தது. மின்னஞ்சலில தமிழில எழுதுறதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சிது. மற்ற ஆக்களுக்கும் காட்டிக்குடுத்தது.

2. உலகத்தில வெவ்வேறு இடங்களில, வெவ்வேறு சூழ்நிலைகளில இருக்கிற ஆட்களோட கருத்தாடல் செய்து பல விசயங்களை அறியக்கூடியதாக இருந்திச்சிது.

3. மிகவும் அருமையாக ஒருசில நல்ல உறவுகள் எனக்கு யாழ் மூலம் கிடைச்சிது. இ்தனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையில பல மாற்றங்களை ஏற்பட்டிச்சிது. இதை யாழுக்கு வந்து இருக்காவிட்டால் நான் பெற்று இருக்கமுடியாது.

4. யாழில பொழுதுபோக்கி மகிழக்கூடியதாக இருந்திச்சிது.

யாழ் மூலம் நான் பெற்ற தீமைகள் எண்டு சொன்னால் கீழ்வருபனவற்றை சொல்லலாம்:

1. நேரம் வீண்விரயமாகிச்சிது. நான் நினைக்கிறன் கடந்த இரண்டு ஆண்டுகளில நான் சுமார் 2000 மணித்தியாலங்களை யாழில செலவளிச்சு இருப்பன். மணித்தியாலத்துக்கு ஆகக்குறைஞ்சது $15.00 படி பார்த்தால் நான் யாழில செலவளிச்ச இந்த நேரத்தில கனடாக்காசு ஆகக்குறைஞ்சது $30,000 வேலை செய்து உழைச்சு இருக்கலாம்.

2. மன உலைச்சல்கள் ஏற்பட்டிச்சிது. இதனால பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி வந்திச்சிது. எனது பல ஆற்றல்கள் இதன்மூலம் வீண்போச்சிது.

3. தேவையில்லாத பலவிரோதங்கள் ஏற்பட்டிச்சிது. நான் யாழுக்கு வந்து இருக்காட்டிக்கு விரோதிகளை எனது வாழ்வில் நிச்சயம் சந்திச்சு இருக்கமாட்டன்.

யாழில இருக்கக்கூடிய சில பொதுவான சிக்கல்கள் எண்டு சொன்னால் கீழ்வருபனவற்றை சொல்லலாம்:

1. யாழில தனிமடலால வரக்கூடிய பிரச்சனைகள். பின்னர் எம்.எஸ்.என் மூலம் வரக்கூடிய பிரச்சனைகள். பலர் எமது தனிப்பட்ட வாழ்வு பற்றி அறிவதற்காக, எம்மைப்பற்றிய சில தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்காக தனிமடலை பாவிக்கிறீனம். இதனால நான் இப்போது யாழில தனிமடலே பாவிப்பதில்லை.

2. யாழில நல்ல குணம் படைச்ச ஆக்கள் இருக்கிறீனம். ஆனால்... எல்லாரும் அப்பிடி இல்லை. இதனால யாழ் கருத்தாடல் மூலம், தனிமடல்கள் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் எமது தனிப்பட்ட வாழ்விலும் தொடரககூடிய ஆபத்து இருக்கிது. ஏன் எண்டால் இஞ்ச பலருக்கு தெரிஞ்சது யாழுக்க போற வாதங்கள்தான். ஆனால் இதுபற்றி எம்.எஸ்.என்னுக்கால, ஸ்கைப்புக்கால, மற்றும் தனிப்பட்ட தொலைபேசிகளுக்காக என்ன என்ன பிடுங்குப்பாடுகள் நடக்கிது எண்டு தெரியாது. இந்த வகையில தனிப்பட்ட வாழ்வு எண்டு பார்க்கேக்க யாழ்மூலம் பலவிதமான ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிது.

யாழில இருக்கிற தாயகம் சம்மந்தமான சில சிக்கல்கள் எண்டு சொன்னால் கீழ்வருபனவற்றை சொல்லலாம்:

1. சுய தணிக்கை

2. சுய தணிக்கை

3. சுய தணிக்கை

யாழ் இணையம் முன்னேறுவதற்கு நான் கூறக்கூடிய ஆலோசனைகள்:

  • யாழில இருக்கிற முற்றம் பகுதிபோல ஊர்ப்புதினம் பகுதியில கட்டுப்பாடு கொண்டுவரப்படவேண்டும். யாராவது ஊர்ப்புதினம் பகுதியில ஒரு தகவலை சொல்லவிரும்பினால் அதை மோகனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். மோகன் அந்த செய்தியின் தன்மைபற்றி ஆராஞ்சு பின்னர் அதை ஊர்ப்புதினம் பகுதியில போடலாம்.

  • ஊர்ப்புதினம் பகுதியில பதில் கருத்துக்கள் எழுதப்படக்கூடிய வசதி நிறுத்தப்படவேண்டும். யாராவது நிதானமாக இருந்து அலசி ஆராய்ஞ்சு ஊர்ப்புதினம் பகுதியில இருக்கிற ஒரு செய்திக்கு விரிவான பதில் கருத்து எழுதி மோகனுக்கு அனுப்பினால் மோகன் பின்னர் அதை பிரதான செய்திக்கு கீழாக இணைத்து பிரசுரம் செய்யலாம்.

  • பொழுதுபோக்கு வாழ்க்கையிண்ட ஒரு அம்சமாக இருக்கிறமாதிரி யாழிலையும் பொழுதுபோக்கு ஒரு அம்சம் எண்டுற கருத்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இங்கு வருகின்ற பலர் பொழுதுபோக்கவே வருகின்றார்கள். வன்னியுக்கு போய் ஆயுதம் தூக்கி அடிபடக்கூடிய நிலைமையில இங்கு எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்று தெரியாது. அப்படியான மனநிலையில் இருப்பவர்கள் நிச்சயம் யாழில மினக்கட்டுக்கொண்டு இருக்கமாட்டார்கள். அலட்டல் என்பது எமது நாளாந்த வாழ்வின் அம்சம் எனப்படுகின்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். உதாரணமாக கனடாவில் இருக்கிற எங்கட ஆக்கள் தொலைபேசிக்கால கதைக்கிற கதையில 95% அலட்டல் எண்டு நான் சொல்லத்தேவையில்லை. சீரியல், சினிமா, கொண்டாட்டங்கள் எண்டுறது எம்மவர் வாழ்க்கையிண்ட பகுதி. இந்தவகையில ஏதோ புதினமாக யாழில மட்டும் தேவாலயத்தில மதகுரு பிரசங்கம் செய்யேக்க எல்லாரும் அமைதியாக இருந்து தோத்திரம் சொல்லிறமாதிரியான நிலமை இல்லை எண்டு சொல்லி கவலைப்படஏலாது. யாழ் முகப்பில பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தனிப்பகுதி ஒன்றும், தாயகம் சம்மந்தமான விசயங்களுக்கு இன்னொரு தனிப்பகுதி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டால் வாசகர்கள் குழம்பமாட்டார்கள். இப்ப எல்லாம் கலந்து இருக்கிது.

  • கருத்து எழுதுபவர்கள் சட்டரீதியாக தாங்கள் எழுதுகின்ற கருத்துக்களுக்கு பொறுப்பாளிகள் எண்டு அறிவுறுத்தப்படவேண்டும். இங்கு எழுதப்படுகின்ற கருத்துக்களால எதிர்காலத்தில வரக்கூடிய சட்டரீதியான ஆபத்துக்கள் உணரப்படவில்லை. இங்கு எழுதுபவர்கள் தங்கடபாட்டுக்கு எழுதிவிட்டு போயிடுவீனம். ஆனால் கடைசியாக அப்பாவித்தனமாக இதன் பாதிப்பு ஏற்படப்போவது மோகனுக்கே. ஏன் எண்டால் மோகனிண்ட பெயரிலதான் யாழ் இணையம் இருக்கிது. விடுதலைப்புலிகள் கூட அங்கிருந்து மக்கள் படும் அவலங்களை போக்க, மக்களுக்கு உதவுவதற்கு உதவிகள் கேட்கின்றார்களே ஒழிய பகிரங்கமாக எம்மவர்களிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள் உதவிகள் கேட்கவில்லை. அப்படி யாருக்காவது இராணுவ விடயங்களில மேதவித்தனம் இருந்தால் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு நேரடியாக தமது கருத்துக்களை கூறலாம். பல்லாயிரம்பேர் கூடுகின்ற பொதுஇடத்தில ஆலோசனை கூறவேண்டிய அவசியம் இல்லை.

  • தாயகம் தவிர, வெளிநாடுகளில இருக்கிற தமிழ் மக்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கின்றது, வெளிநாடுகளில இருக்கிற தமிழ் மக்களின் நலன்களும் கவனிக்கப்படவேண்டும் எனப்படுகின்ற கருத்து விளங்கிக்கொள்ளப்படவேண்டும். வெளிநாடுகளில இருக்கிற தமிழ் மக்களுக்கு பயன் தரக்கூடிய பல்வேறு விடயங்களுக்கு யாழில முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். அண்மையில ஒருத்தர் Balanced Scorecard பற்றி உதவி கேட்டு இருந்தார். நான் உதவிசெய்து இருந்தன். இப்பிடி சில சின்னச்சின்ன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு யாழ் இணையமும் உதவமுடியும்.

  • யாழ் நிருவாகம் கருத்துக்களை வைத்து ஆட்களை எடைபோடும் நிலை மாறவேண்டும். ஒருவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக எழுதுகின்றார் எண்டுபோட்டு அவர் யாழில வாய்க்கு வந்ததை எல்லால் சொல்லாம் எண்டுற நிலை கடைசியில ஆபத்துக்களில கொண்டுபோய் விடக்கூடும்.

  • யாழ் இணையம் மூலம் இஞ்ச இருக்கிற ஆக்கள் தங்கட பொன்னான கருத்துக்களை கூறி இதன்மூலம் நீண்டகால நோக்கில தாயகமக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைவிட தீமைகளே அதிகமாக இருகக்க்கூடும். இந்தவகையில யாழ் கருத்தாடல் தளம் மூலம் தாயக மக்களுக்கு உதவலாம் எனப்படுகின்ற கருத்து கேள்விக்குறிக்குறியது. யாழ் கருத்தாடல் தளம் மூலம் தாயக மக்களுக்கு உபவத்திரவம் கொடுக்கலாம் எண்டுற கருத்து ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. உதாரணமாக ஒரு கருத்தை சொலிறன். அண்மையில ஒருவர் யாழில கலைஞர் கருணாநிதியை மெண்டல் எண்டு எழுதி இருந்தார். இவரது கருத்தை தமிழ்நாட்டில இருக்கிற கலைஞரின் ஒரு ஆதரவாளன் வாசிச்சால் எம்மைப்பற்றி எப்படி நினைப்பான் என்று நினைக்கின்றீங்கள்? இவரது கருத்து தாயக மக்களுக்கு ஏதாவது விதத்தில உதவுமா இல்லாட்டிக்கு உபத்திரவம் கொடுக்குமா? இதுமாதிரி செல்வி.ஜெயலலிதா பற்றி தாறுமாறாக எழுதி இருந்தார்கள். இவர்களின் கருத்துக்கள் கடைசியில யாரை பாதிக்கும்?

மோகன் அவர்கள் உண்மையில தாயக மக்களுக்கு உதவவிரும்பினால் இந்த யாழ் இணையத்தை வர்த்தகமயப்படுத்தலாம். அதிக விளம்பரங்களை யாழில இணைக்கலாம். இந்த விளம்பரங்கள் மூலம் வருவாய் வந்தால் அதன் ஒரு பகுதியை தாயக மக்களுக்கு கொடுக்கலாம். யாழ் இணையம் தாயக மக்களுக்கு உதவவிரும்பினால் உண்மையில செய்யக்கூடிய அதிஉச்சமான பங்களிப்பு இதுவாகத்தான் இருக்கும். யாழ் மூலம் ஏவுகணை செய்து அனுப்புவது எல்லாம் சரிப்பட்டு வராது. விருப்பமானவர்கள் விடுதலைப்புலிகளை நேரடியாக தொடர்புகொண்டு தமது இராணுவ விற்பன்னத்தை நிரூபிக்கலாம்.

தாயக மக்களுக்கு தாயக போராட்டத்துக்கு ஆதரவு சேர்க்கிறம் எண்டு சொல்லிக்கொண்டு கடைசியில யாழில கண்டபடி கருத்துக்கள் எழுதப்பட்டால் அதன்மூலம் நீண்டகாலநோக்கில வரக்கூடிய சட்டச்சிக்கல்களும் உணரப்படவேண்டும். யாழ் இணையத்தை விடுதலைப்புலிகளிண்ட ஆதரவு, மற்றும் ஆலோசனை நிலையமாக பாவிச்சு அதனால் வரக்கூடிய எதிர்மறையான பின்விளைவுகளைவிட, யாழ் இணையத்தை உலகில வாழுகின்ற அகதித்தமிழனின் பிரச்சனைகளை, எமது அல்லல்களை, தாயக மக்களின் துயரங்களை சொல்லமட்டும் பாவிக்கக்கூடிய ஒரு ஊடகமாக பயன்படுத்தினால் இதன் மூலம்வரக்க்கூடிய நன்மைகள் ஏராளம். சட்டம் எண்டுறது எப்பவாவது ஏற்படுகின்ற பூமிஅதிர்ச்சி மாதிரி. வெளியில தெரியாது. எப்பவாவது இருந்திட்டுத்தான் அதிரும். அதிர்ந்திது எண்டால் எல்லாம் குழுங்கி விழுந்து பேரழிவுதான் ஏற்படும். இதற்கு யாழ் இணையம் விதிவிலக்காக இருக்கமுடியாது.

கடைசியாக நான் கூறக்கூடியது. நாம யாழில இருந்து எப்ப மறைவம் எண்டு எமக்கு தெரியாது. யாழுக்கு ஓரளவு அடிமையாகிவிட்டம் எண்டு சொல்லவேணும். ஒவ்வொருநாளும் கருத்து எழுதாவிட்டாலும் யாழுக்குவந்து வாசிச்சு பார்க்கிற ஆர்வத்தை குறைக்க முடியவில்லை. ஆனால்.. அதற்காக தொடர்ந்து இஞ்சஇருந்து மினக்கட்டுக்கொண்டு இருப்பம் எண்டும் இல்லை. எனினும் இவ்வளவு காலமும் யாழ்மூலம் பொழுதுபோக்கி மகிழ்ந்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேணும். அந்தவகையில நான் மேலே கூறிய எனக்கு யாழ் மூலம் கிடைச்ச மேலே சொன்ன நான்கு விதமான நன்மைகளுக்கும் மோகனுக்கு நன்றிகள்!

கடைசியாக மோகன், நாம தெருவில போய்க்கொண்டு இருப்பவர்கள். நிறுவனம் உங்களுடையது. தெருவில நிண்டு எமது கருத்துக்களை சொன்னம். நீங்கள் எப்படியான முடிவுகள் எடுத்தாலும் அது வெற்றி பெற்று.. மேலும் உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் வெற்றியுடன், மகிழ்ச்சியுடன், நிம்மதியுடனும் வாழ வாழ்த்துகள், நன்றிகள்! வணக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.