Jump to content

வெற்றிமனை மனநோயாளர் நிலையம் உருத்திரபுரத்தில் இருந்து புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்துள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிமனை மனநோயாளர் நிலையம் உருத்திரபுரத்தில் இருந்து புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்துள்ளது.

வீரகேசரி இணையம் 11/9/2008 12:10:34 PM - வன்னிப்பிரதேசத்தின் போர்ச்சூழல் காரணமாகவும், சமூகச் சூழல் காரணமாகவும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து வந்த வெற்றிமனை நிலையம் தர்மபுரத்தில் இருந்து தற்போது புதுக்குடியிருப்புக்கு இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள உக்கிரமான மோதல்கள், எறிகணை வீச்சுக்கள் காரணமாக, நூற்றி ஐம்பத்திநான்கு பெண்கள் அடங்கிய இந்த வெற்றிமனை நிலையம் கிளிநொச்சியில் இருந்து தர்மபுரத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. எனினும் அந்தப் பகுதியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால், அங்கிருந்து தற்போது புதுக்குடியிருப்புக்கு இந்த நிலையம் இடம்பெயர்ந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு கைவேலியில் உள்ள தாய்சேய் பராமரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியில் இரண்டு கொட்டில்களில் வெற்றிமனை பயனாளிகள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு அவர்களுக்குப் பொதிய கழிப்பறை உட்பட்ட வசதிகள் இல்லாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மெழுகிய நிலத்தில் பாய்களிலேயே இவர்கள் நித்திரை கொள்வதாகவும், இந்த வெற்றிமனை நிலையத்தின் தளபாடங்கள், உபகரணங்கள் என்பவற்றை அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றுள்ள போதிலும் உரிய இடவசதிகளில்லாத காரணத்தினால் அவற்றைப் பயன்படுத்த முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.