Jump to content

சுவையான பச்சைமிளகாய் சட்னி செய்வது எப்படி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் முன்பெல்லாம் அதிகமான சாப்பாட்டுக் கடைகளில் புளிஞ்ச தேங்காய்ப் பூவில்தான் சட்னி செய்து பரிமாறுவார்கள். (நல்ல பால் கறிகளுக்குப் போய்விடும்.)தோசை, இட்லி, இடியப்பம், உ.வடை போன்ற ராகங்களுக்கெல்லாம் இவர்தான் தாளம். முக்கியமாக நாட்கூலித் தொழிலாளர்கள் சாப்பிடும் கடைகளில் எல்லாம் இவர்தான் நிலய வித்வான்... :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிச்சிக்கு

தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி

சரியாகச் சொன்னீர்கள், யாழ்ப்பாணத்தில் இதை என்றைக்குமே சம்பல் என்றுதான் அழைப்போம் வெளி நாடு வந்த பின்னர்தான் இந்த சட்னி, அது, இது என்றெல்லாம் பெயர் பாவிக்கத்தொடங்கியது.

இளங்கவி

சில ஊர்களில் பச்சடி எனவும் அழைப்பார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி இளங்கவி எங்க நிக்கிறியளோ??? சட்னி வைச்சிருந்த கிண்ணத்தைக்கூட காணல :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிக்கு

யாழ்ப்பாணதில் பொதுவாக சம்பல் என்று அழைப்பார்கள் என்றுதான் சொன்னேன், அதை சாப்பாட்டுக் கடையில் எப்படி செய்வார்கள் என்று எனக்குத்தெரியாது, மற்றும் நல்ல தமிழ் சொற்கள் எல்லாம் வெளி நாடுகளில் மாற்றி சொல்லப்படுகின்றன என்றுதான் சொல்லவந்தேன்.

இளங்கவி

குமாரசாமிக்கு

என் ஊரிலும் பச்சடி என்று அழைப்பதுண்டு. பச்சடியை எனும் வார்த்தையை மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு குமாரசாமி அண்ணனுக்கு நன்றி.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணாவிற்கு

நானே பச்சடி செய்யச் சொல்லிப்போட்டு கிண்ணத்தோட ஓடுவேனா ? வேலையால வந்துதானே உங்களுக்கு பதி சொல்லவேணும், அதுதான் கொஞ்சம் சுணக்கம்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.