Jump to content

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து

ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம்

அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும்.

முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள்

சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.

பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும்

முகம் வரட்சியினை போக்க:

கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.

ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும்.

வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்்.

கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.

இப்போது ஆடைகளை பற்றி பார்ப்போம்

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆண்கள்

ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.

நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது

நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும்

சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகக இருக்கும்

ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும்

கல்லுரிக்கு போகும் ஆனா நீங்கள்

டீசுஷர்ட் போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும்.

வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க .

,மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு.... ஆகையால்

இனிமையான பேச்சுங்க, சிரித்தமுகத்துடன் இருங்க நீங்க அழகா இருப்பிங்க :D

நன்றி தமிழ் குடும்பம்

Link to comment
Share on other sites

இவற்றை நீங்கள் பின்பற்றுகின்றீர்களா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை நீங்கள் பின்பற்றுகின்றீர்களா? :)

அதனால் தான் குசா இப்படி பிரகாசமாய் இருகிறார் :D:lol:

Link to comment
Share on other sites

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள்.

அப்படி யார் நினைத்தது? இயற்கையாகவே (மேக்-அப் இல்லாமலேயே) ஆண்கள் அழகாக இருக்கலாம் என்று நினைத்தது உண்டு. நல்ல குறிப்புகள் தான். அழகுக்கு அழகூட்ட இந்த குறிப்புகள் உதவும்!! :D நன்றி கு.சா அண்ணை... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே வெளியால போக முடிய இல்லை....பொண்ணுகளின்ர தொல்லை தாங்க முடியவில்லை.... இதில மேக்கப்பும் போட்டால் மொச்சிட மாட்டாளுகள்... :)

அப்பிடிச் சொல்லத்தான் விருப்பம். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே வெளியால போக முடிய இல்லை....பொண்ணுகளின்ர தொல்லை தாங்க முடியவில்லை.... இதில மேக்கப்பும் போட்டால் மொச்சிட மாட்டாளுகள்... :)

அப்பிடிச் சொல்லத்தான் விருப்பம். :wub:

அதானே.......... எனக்கும் பிரச்சினை .

Link to comment
Share on other sites

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை

:):wub::lol::lol::lol:

சட்டியில் இருந்தால் தானே, அகப்பையில் வரும்.கு.சா தாத்தா??..நீங்கள் எங்கேயோ சொன்னது தான் நினைவுக்கு வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் இயற்கையாகவே கம்பீரமானவர்கள். அவர்களுக்கேன் செயற்கையூட்டல்..! பெண்களுக்குத்தான் உதுகள் அவசியம்..! உதுகள் இல்லை என்றால் எவர்தான் அவைக்குக் கிட்ட போவினம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் இயற்கையாகவே கம்பீரமானவர்கள். அவர்களுக்கேன் செயற்கையூட்டல்..! பெண்களுக்குத்தான் உதுகள் அவசியம்..! உதுகள் இல்லை என்றால் எவர்தான் அவைக்குக் கிட்ட போவினம்..! :D

வாசம்ம்ம்ம்ம்ம்ம்.............வீசும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசம்ம்ம்ம்ம்ம்ம்..... வீசும் என்கிறீர்களா நெடுக்ஸ் :D:o:lol:

அதையேன் பேசுவான்.. ஒரு தடவை.. பஸ்ஸில் பயணிக்கும் போது.. ஒரு பெண் அருகில் வந்து உட்கார்ந்துவிட்டார். என்னால் எழுந்தும் போக இடம் இருக்கல்ல. அன்று முழுக்க வாந்தி தான்..! இப்ப நினைச்சாலும்.. வாந்தியா வருகுது...! அன்றில் இருந்து பெண்கள் அருகில் உட்கார்ந்தா நான் எழுந்து நின்றிடுறது..! எப்படித்தான்.. இந்த ஆண்கள்.. காலம் தள்ளுகிறார்களோ..??! சில பெண்கள் ரெம்ப அசுத்தம்..! அதையெல்லாம் மறைக்கனும் என்றால்.. முகத்தை மிளிர வைக்கவும்.. வாசனைத் திரவியங்களை தடவவும் வேணும் தானே..! மனசு அசுத்தம் ஆக்களும் அசுத்தம்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதையேன் பேசுவான்.. ஒரு தடவை.. பஸ்ஸில் பயணிக்கும் போது.. ஒரு பெண் அருகில் வந்து உட்கார்ந்துவிட்டார். என்னால் எழுந்தும் போக இடம் இருக்கல்ல. அன்று முழுக்க வாந்தி தான்..! இப்ப நினைச்சாலும்.. வாந்தியா வருகுது...! அன்றில் இருந்து பெண்கள் அருகில் உட்கார்ந்தா நான் எழுந்து நின்றிடுறது..! எப்படித்தான்.. இந்த ஆண்கள்.. காலம் தள்ளுகிறார்களோ..??! சில பெண்கள் ரெம்ப அசுத்தம்..! அதையெல்லாம் மறைக்கனும் என்றால்.. முகத்தை மிளிர வைக்கவும்.. வாசனைத் திரவியங்களை தடவவும் வேணும் தானே..! மனசு அசுத்தம் ஆக்களும் அசுத்தம்..! :)

உதை சொல்லாதீங்கோ உங்கள் மீது முத்திரை குத்தப்படும்

உவாக் உவாக் :D:o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதை சொல்லாதீங்கோ உங்கள் மீது முத்திரை குத்தப்படும்

உவாக் உவாக் :D:o:lol:

ஆமா அவைட தனிச் சுகாதாரம் மிக மோசம் என்று சொன்னா.. எனக்கு முத்திரை குத்தி.. தபாலில அனுப்பிடுவினமாக்கும். சும்மா போங்கோ. பெண்கள் (பொதுவா) உலகமே நரகம்..!

நான் ஒரு போதும் ஆண் - பெண் கலப்பு மாணவ விடுதிகளில் நீண்ட காலம் ( ஒரு சில தினங்கள் வேறு விடுதி வசதி கிடைக்கும் வரை தங்கி இருந்திருக்கிறேன்) இருப்பதும் இல்லை. அங்கிருந்த எனது நண்பர்கள் சொல்வார்களே கதை.. ஐயோ.. கேட்கவே வாந்தி வரும்..! உவாக்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அவைட தனிச் சுகாதாரம் மிக மோசம் என்று சொன்னா.. எனக்கு முத்திரை குத்தி.. தபாலில அனுப்பிடுவினமாக்கும். சும்மா போங்கோ. பெண்கள் (பொதுவா) உலகமே நரகம்..!

நான் ஒரு போதும் ஆண் - பெண் கலப்பு மாணவ விடுதிகளில் நீண்ட காலம் ( ஒரு சில தினங்கள் வேறு விடுதி வசதி கிடைக்கும் வரை தங்கி இருந்திருக்கிறேன்) இருப்பதும் இல்லை. அங்கிருந்த எனது நண்பர்கள் சொல்வார்களே கதை.. ஐயோ.. கேட்கவே வாந்தி வரும்..! உவாக்..! :D

நான் உங்கள் கருத்துக்கு இணையாக எழுதினாலும் உங்களுக்கு குடை பிடிக்கிறேன் என்று

என்மீது சேறு பூசப்படும் வேண்டாம் சாமீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கள் கருத்துக்கு இணையாக எழுதினாலும் உங்களுக்கு குடை பிடிக்கிறேன் என்று

என்மீது சேறு பூசப்படும் வேண்டாம் சாமீ

சமூகத்தில.. ஏமாற்றிறவன்/ள்... முள்ளமாரி.. முடிச்சவிழ்கி.. கூழ் முட்டை எறியுறவன்/ள்.. தக்காளி எறியுறவன்/ள்.. சேறு பூசுறவன்/ள்.. தார் பூசுறவன்/ள் எல்லாரும் இருக்கினம். உவைக்கெல்லாம் நாங்க பயந்து கொண்டால்.. எமது கொஞ்ச நெஞ்ச சுதந்திர வாழ்வையும் நாமே அவர்களுக்கு இழந்ததாகத்தான் முடியும்..! அவர்களை சந்திக்கிற இடத்தில சந்திச்சு.. கலோ.. காய்.. பாய் சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..! அவர்களால் எம்மை எதுவும் செய்ய முடியாது..! :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே வெளியால போக முடிய இல்லை....பொண்ணுகளின்ர தொல்லை தாங்க முடியவில்லை.... இதில மேக்கப்பும் போட்டால் மொச்சிட மாட்டாளுகள்... :D

அப்பிடிச் சொல்லத்தான் விருப்பம். :o

இவருக்கு இன்று வீட்டில கஞ்சிதான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அவைட தனிச் சுகாதாரம் மிக மோசம் என்று சொன்னா.. எனக்கு முத்திரை குத்தி.. தபாலில அனுப்பிடுவினமாக்கும். சும்மா போங்கோ. பெண்கள் (பொதுவா) உலகமே நரகம்..!

நான் ஒரு போதும் ஆண் - பெண் கலப்பு மாணவ விடுதிகளில் நீண்ட காலம் ( ஒரு சில தினங்கள் வேறு விடுதி வசதி கிடைக்கும் வரை தங்கி இருந்திருக்கிறேன்) இருப்பதும் இல்லை. அங்கிருந்த எனது நண்பர்கள் சொல்வார்களே கதை.. ஐயோ.. கேட்கவே வாந்தி வரும்..! உவாக்..! :o

நீங்கள்(ஆண்கள்)பெண்களை வாந்தி எடுக்க வைக்கிறது மட்டும் ரொம்பச்சரியாக்கும் :D

Link to comment
Share on other sites

சஜீவன், நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்(ஆண்கள்)பெண்களை வாந்தி எடுக்க வைக்கிறது மட்டும் ரொம்பச்சரியாக்கும் :D

அது அவையா வந்து வாங்கிக்கிற நோய். அதுக்கும் இதற்கும் தொடர்பில்லையே. இது நாங்கள் பொதுவில போகும் போதே வாந்தி எடுக்க வைக்கிறினமே என்று சொல்ல வந்தன்.

அன்று ஒரு பெண்.. ஏதோ ஒரு நாற்ற திரவியத்தை பூசிக் கொண்டு வேலைத்தலத்துக்கு வர.. ஒரே தும்பல். அந்த நாற்றம் ஒவ்வாமையாக அமைந்து விட்டது. இப்படியான பிரச்சனைகளை தான் நாங்க பேசிக்கிறம்.

அவை தாங்களா போய் ஆண்களால் வாந்தி எடுக்க ஆசைப்படுறதுக்கு நான் என்ன செய்ய..! :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவியார் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் தான்.

பள்ளமும் திட்டியும் இல்லாத ஒரு இடம் இருக்கா..???! அப்போ எல்லோரும் பாவிகளா..! :D

Link to comment
Share on other sites

பள்ளமும் திட்டியும் இல்லாத ஒரு இடம் இருக்கா..???! அப்போ எல்லோரும் பாவிகளா..!

M25 இல போய் பாருங்கோ, ஒரு பள்ளமும் , திட்டியும் இருக்காது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

M25 இல போய் பாருங்கோ, ஒரு பள்ளமும் , திட்டியும் இருக்காது...

யார் சொன்னா.. வீதி மட்டும் தான் அப்படி. ஆனால் அது ஓடும் பாதை.. மேடு பள்ளம் என்று.. இருக்கும்.

நான் எம் 25 இல் பயணித்தது குறைவு. எம் 1 மற்றும் 6 இல் தான் அதிகம் பயணித்திருக்கிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இன்று வீட்டில கஞ்சிதான் :D

அதெண்டாலும் பறவாய் இல்லை.... எல்லாம் மனிசி இந்த பக்கம் வாறதில்லை எண்ட துணிவுதான்.

நீங்கள்(ஆண்கள்)பெண்களை வாந்தி எடுக்க வைக்கிறது மட்டும் ரொம்பச்சரியாக்கும் :o

இது தெரிஞ்சு தான் உந்த பழத்தை முழுசா சாப்பிடுறிங்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரே உங்களுக்கு என்ன பிரச்சினை?

சதா பெண்களை இழுத்து ஏதாவது எழுதவில்லையென்றால் தூக்கம் வராதா?

உங்கள் சிந்தனைக்கு, உங்கள் எழுத்துகள் உரம் போடுவதாகத் தெரியவில்லை எதிர்வினையை உருவாக்கி வளர்க்கிறதோ என்ற ஐயப்பாடு எனக்குத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரே உங்களுக்கு என்ன பிரச்சினை?

சதா பெண்களை இழுத்து ஏதாவது எழுதவில்லையென்றால் தூக்கம் வராதா?

உங்கள் சிந்தனைக்கு, உங்கள் எழுத்துகள் உரம் போடுவதாகத் தெரியவில்லை எதிர்வினையை உருவாக்கி வளர்க்கிறதோ என்ற ஐயப்பாடு எனக்குத் தோன்றுகிறது.

நான் எழுதியவற்றில்.. உலகில் நடக்காத.. சோடிக்கப்பட்ட பெண்கள் விரோதத்தையோ நோக்காகக் கொண்டது என்று கருதும் விடயங்களை இனங்காட்டுங்கள்..??! அதன் பின்னர் தீர்மானிக்கிறேன்.. உங்களின் ஐயப்பாட்டில் நியாயம் இருக்கிறதா.. பெண் என்ற நிலை முன்னிலை இருக்கிறதா என்று..!

நான் ஆண் என்ற நிலையில் இன்றி மனிதன் என்ற நிலையில்.. எனது கருத்தை முன் வைத்துக் கொண்டிருக்கிறேன்..! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.