Jump to content

ஜோர்ஜியாவில் சண்டை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_40364227_south_ossetia_map203.gif

முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான South Ossetia வின் தலைநகரை (Tskhinvali) நோக்கி அமெரிக்கா பக்கம் சாய நினைக்கும் ஜோர்ஜிய அரசு ஆட்லறிகள்.. பல்குழல் வெடிகணைகள், விமானங்கள் மற்றும் தாங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியபடி இன்று நள்ளிரவில் இருந்து முன்னேறி வருகிறது.

South Ossetia இல் உள்ள போராளிகளுக்கு ரஷ்சியா நேரடியாக உதவி வருவதுடன்.. ஜோர்ஜியாவை அமெரிக்கா தனது நேட்டோ உறுப்புக்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ரஷ்சியாவை பலவீனப்படுத்த எண்ணி இருப்பதால்.. ஜோர்ஜியாவின் இத்தாக்குதலுக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது.

தென் Ossetia பிரதான ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும்.. அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போராளிகளுக்கு ரஷ்சியா ஆதரவளிப்பதால் அமெரிக்கா கொசவோ போன்று அதற்கு சுதந்திரமளிக்க மறுக்கிறது. மாறாக அப்போராளிகளை அடக்கி ஜோர்ஜிய அரசை தனது கைக்குள் போட்டுக் கொண்டு பிராந்தியத்தில் ரஷ்சியாவை நெருங்கி தனது இராணுவ திட்டங்களை நகர்த்த அமெரிக்கா முனைகிறது.

இதற்கிடையே சர்சைக்குரிய பகுதியில் ரஷ்சிய அமைதிகாப்புப் படையினர் நிலை கொண்டிருப்பதுடன் சண்டை ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னர் தான் ஜோர்ஜிய அரசும் போராளிகளும் ரஷ்சியாவின் மேற்பார்வையின் கீழ் போர் நிறுத்த சமரசத்துக்கு உடன்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அச்சமரசத்திட்டத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்துக் கொண்ட ஜோர்ஜிய அரசு.. போராளிகளின் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான அரசு நடப்பதாகக் கூறி படை எடுப்பை செய்கிறது. அதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் மெளனமாக இருந்து ஆதவளித்து வருகின்றன.

இதுவரை நடந்த சண்டைகளில், வெடிகணை, ஆட்லறி மற்றும் விமானத்தாக்குதல்களில் பொதுமக்கள் உள்ளடங்க 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

_44902885_2rocketsafp226.jpg

ஜோர்ஜிய பல்குழல் வெடிகணை செலுத்தியில் இருந்து பறக்கும் வெடிகணை. ஜோர்ஜியா போன்ற முன்னாள் சோவியத் அரசுகளே..ஐரோப்பிய ஒன்றிய விதிகளையும் மீறி சிறீலங்கா போன்ற நாடுகளுக்கு இவ்வாறான ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதான செய்தி:

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7548715.stm

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்ஜியப் படைகள் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது கண்மூடித்தனமாக வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தும் காணொளி இங்கு.

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7546639.stm

அமெரிக்கா.. நேட்டோ போன்றவை.. சிறீலங்கா போன்ற அரசுகளுக்கு இவ்வாறான முன்னாள் சோவியத்.. இன்னாள் நேட்டோ சார்பு நாடுகளூடு ஆயுத சப்பிளை செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ஜோர்ஜியா South Ossetia பகுதி மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 10 ரஷ்சிய அமைதிகாப்புப் படையினரும்.. 15 பொதுமக்களும் உயிரிழந்துள்ள நிலையில் ரஷ்சியா சுமார் 150 ராங்கிகளுடன் மேலதிக துருப்புக்களை South Ossetia பகுதிக்கு அனுப்பி உள்ளதுடன்.. ரஷ்சிய போர் விமானங்கள் ஜோர்ஜியாவின் தலைநகரில் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிராந்தியத்தின் நிலைமை குறித்து கவலை வெளியிட்டிருப்பதுடன் அனைத்துத் தரப்பும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

இதற்கிடையே ரஷ்சியா மேலதிக படையினரை South Ossetia பகுதிக்குள் அனுப்பி ஜோர்ஜியப்படைகள் மீது தாக்குதல் நடத்தினால் அது நாடுகளுக்கிடையேயான யுத்தமாக வெடிக்கும் ஆபத்து இருப்பதாக ஜோர்ஜியா எச்சரித்திருக்கிறது..!

ரஷ்சியாவோ South Ossetia பகுதியில் உள்ள ரஷ்சிய மக்களைப் பாதுகாக்க தனது துருப்புக்களை நகர்த்தி வருவதாகக் கூறியுள்ளது..!

காணொளிகள் இங்கு இணைப்பில்: http://news.bbc.co.uk/1/hi/world/europe/7548715.stm

Link to comment
Share on other sites

இந்தியாவும் தங்கள் விசுவாசிகளை காப்பாற்ற இலங்கைக்கு படைகளை அனுப்புவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திக் கிடைத்த தகவலின் படி ஜோர்ஜியாவின் கண்மூடித்தனமான வெடிகணை மற்றும் விமானத்தாக்குதல்களில் South Ossetia தலைநகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜோர்ஜியாவில் இருந்து அதிகாரபூர்வமற்ற வகையில் பிரிந்து சென்ற South Ossetia பகுதிப் போராளிகள் அறிவித்துள்ளனர். :D:(

Link to comment
Share on other sites

பிந்திக் கிடைத்த தகவலின் படி ஜோர்ஜியாவின் கண்மூடித்தனமான வெடிகணை மற்றும் விமானத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜோர்ஜியாவில் இருந்து அதிகாரபூர்வமற்ற வகையில் பிரிந்து சென்ற South Ossetia பகுதிப் போராளிகள் அறிவித்துள்ளனர். :D:(

போராளிகள் சொல்வதை யார் நம்புவார்கள்?

இதை பற்றி இலங்கை அரசு என்ன சொல்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் சொல்வதை யார் நம்புவார்கள்?

இதை பற்றி இலங்கை அரசு என்ன சொல்கிறது?

அண்மையில் சிறீலங்காப் பிரதமர்.. தமக்கு ஐரோப்பிய நாடுகள் தேவையான ஆயுதங்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அதில் ஜோர்ஜியாவும் அடங்கும். ஜோர்ஜியா அடிப்படையில் ரஷ்சிய ஆயுதங்களையே பாவித்து வருகிறது..! அது முன்னாள் ரஷ்சியக் குடியரசாகும்.

இந்த மோதலைத் தூண்டி விட்டதே அமெரிக்க தலைமையிலான நேட்டோ தான்..! :D:(

Link to comment
Share on other sites

அண்மையில் சிறீலங்காப் பிரதமர்.. தமக்கு ஐரோப்பிய நாடுகள் தேவையான ஆயுதங்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அதில் ஜோர்ஜியாவும் அடங்கும். ஜோர்ஜியா அடிப்படையில் ரஷ்சிய ஆயுதங்களையே பாவித்து வருகிறது..! அது முன்னாள் ரஷ்சியக் குடியரசாகும்.

இந்த மோதலைத் தூண்டி விட்டதே அமெரிக்க தலைமையிலான நேட்டோ தான்..! :D:(

இதை எங்களுக்கு சாதகமாக ஏதும் செய்ய கூடியதாக இருக்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எங்களுக்கு சாதகமாக ஏதும் செய்ய கூடியதாக இருக்கோ :D

ஜோர்ஜியாவில் இருந்து South Ossetia பகுதி தன்னிச்சையாக 1990-92 காலப்பகுதியில் பிரிந்து சென்றுள்ளது. அங்கு வன்னி போல ஒரு நிர்வாக அலகும் போராளிகளால் நடத்தப்படுகிறது. ஆனால் உலகம் இன்னும் அதை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் ரஷ்சியா மறைமுகமாக அந்தப் போராளிகளுக்கு தனது பிராந்திய தேவை கருதி உதவி வருகிறது.

சிறீலங்காவும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளோடு கூட்டுச் சேரும் நிலை உறுதியாக உருவாகுமானால்.. மறைமுகமாக ஈழம் சிறீலங்காவில் இருந்து பிரிவதை இந்தியா அங்கீகரித்தே ஆக வேண்டும் என்ற நிலை தோன்றும்..! ஆனால்.. சிறீலங்கா மிகவும் தந்திரமாக தமிழர்களின் வளங்களை இந்தியாவுக்கு பிச்சுப் போட்டு.. காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. இருந்தாலும்.. இந்தியா நிறைய நம்பிக்கையீனங்களோடே சிறீலங்காவை நோக்குகிறது. ஜோர்ஜியா கூட ரஷ்சியாவின் அரவணைப்பை வேண்டும் அதேவேளை நேட்டோவுடன் சேர்ந்து ரஷ்சியாவுக்கு சவாலாகவும் இருக்க விரும்புகிறது. அதன் மூலம் பிராந்தியத்தில் தனக்கென்று ஒரு வலுவான நிலையை உருவாக்க நினைக்கிறது. ஆனால் ரஷ்சியா அதைப் போராளிகளைக் கொண்டு தகர்த்து நேட்டோ ஜோர்ஜியாவூடு தன்னை நெருங்காமல் இருக்க முயற்சிக்கிறது. ஆனால் நேட்டோவோ ஜோர்ஜியாவை தூண்டிவிட்டு ரஷ்சியாவோடு மோதவிட்டு.. ஜோர்ஜியாவை ரஷ்சிய எல்லையில் பகைமை கொள்ள வைத்து தனது இராணுவ மற்றும் பொருளாதார (ரஷ்சியாவின் பிரதான எண்ணைய் விநியோகக் குழாய்கள் ஜோர்சியாவூடு செல்கின்றன) நலன்களைக் காக்கத்துடிக்கிறது..!

தெற்காசியாவிலும்.. இந்த நிலை இந்தியாவைப் பொறுத்து விரைந்து வளர்ந்து வருகிறது..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

_44906034_8a76b7de-16a0-43cc-9117-daf37eddc506.jpg

ஜோர்ஜியா தன் சொந்த மாகாணம் என்று கூறும் South Ossetia மீது ஒரே இரவில் தாக்குதல் நடத்தி சொந்த மக்கள் 1400 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றொழித்திருக்கிறது.

நேட்டோவின் தூண்டுதலில் ஜோர்ஜியா செய்த இப் போர் வெறியில் 10க்கும் மேற்பட்ட ரஷ்சிய அமைதிப்படையினர் கொல்லப்பட்டதை அடுத்து ரஷ்சியா South Ossetia பகுதியூடு படை நகர்த்தி ஜோர்ஜியப் படை இலக்குகளை தாக்கி வருகிறது.

South Ossetia பகுதியில் உள்ள அப்பாவி பொதுமக்கள் மீது ஜோர்ஜியா செய்த மனிதப் படுகொலையை அடுத்து ரஷ்சியா இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஷ்சிய தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப எல்லாம் நடந்து வருவதை இட்டு மகிழ்ச்சியடைந்துள்ள அமெரிக்காவும் நேட்டாவும் , ரஷ்சியாவை தனிமைப்படுத்தி.. தம்மை மஸ்தியத்துக்கு அழைக்கக் கோரிக்கை விட்டுள்ளன. ஜோர்ஜி அதிபரும் ரஷ்சியாவைக் கண்டித்துக் கொண்டு நேட்டோவை சர்வதேச சமூகம் என்ற போர்வையின் கீழ் உதவிக்கு இழுக்கிறார்.

அமெரிக்க அதிபர் புஷ் அவர்களோ.. கொசவோ விவகாரத்தில் தான் எடுத்த நிலைப்பாட்டை மறந்து.. ரஷ்சியாவுக்கு நெருக்கடியை அதிகரிக்க.. இது ஜோர்ஜியா தனது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு நடத்தும் சண்டை என்று ஜோர்ஜியப் படுகொலைகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார்..!

மூலச் செய்தி: http://news.bbc.co.uk/1/hi/world/europe/7550354.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அங்கு ஆயுத விற்பனைக்கு களம் தேடிவிட்டது போல் உள்ளது .

இன்னும் முன்னாள் சோவியத்குடியரசை எவ்வளவு பலவீனமாக்க போகின்றது .

இந்த விடயம் பக்கத்து நாட்டுக்காரருக்கும் பொருந்தும் .

ஆனால் அவர்கள் தான் பகலில் கனவு காண்பவர்களாச்சே ..........

Link to comment
Share on other sites

_44906034_8a76b7de-16a0-43cc-9117-daf37eddc506.jpg

ஜோர்ஜியா தன் சொந்த மாகாணம் என்று கூறும் South Ossetia மீது ஒரே இரவில் தாக்குதல் நடத்தி சொந்த மக்கள் 1400 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றொழித்திருக்கிறது.

நேட்டோவின் தூண்டுதலில் ஜோர்ஜியா செய்த இப் போர் வெறியில் 10க்கும் மேற்பட்ட ரஷ்சிய அமைதிப்படையினர் கொல்லப்பட்டதை அடுத்து ரஷ்சியா South Ossetia பகுதியூடு படை நகர்த்தி ஜோர்ஜியப் படை இலக்குகளை தாக்கி வருகிறது.

South Ossetia பகுதியில் உள்ள அப்பாவி பொதுமக்கள் மீது ஜோர்ஜியா செய்த மனிதப் படுகொலையை அடுத்து ரஷ்சியா இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஷ்சிய தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப எல்லாம் நடந்து வருவதை இட்டு மகிழ்ச்சியடைந்துள்ள அமெரிக்காவும் நேட்டாவும் , ரஷ்சியாவை தனிமைப்படுத்தி.. தம்மை மஸ்தியத்துக்கு அழைக்கக் கோரிக்கை விட்டுள்ளன. ஜோர்ஜி அதிபரும் ரஷ்சியாவைக் கண்டித்துக் கொண்டு நேட்டோவை சர்வதேச சமூகம் என்ற போர்வையின் கீழ் உதவிக்கு இழுக்கிறார்.

அமெரிக்க அதிபர் புஷ் அவர்களோ.. கொசவோ விவகாரத்தில் தான் எடுத்த நிலைப்பாட்டை மறந்து.. ரஷ்சியாவுக்கு நெருக்கடியை அதிகரிக்க.. இது ஜோர்ஜியா தனது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு நடத்தும் சண்டை என்று ஜோர்ஜியப் படுகொலைகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார்..!

மூலச் செய்தி: http://news.bbc.co.uk/1/hi/world/europe/7550354.stm

ரஸ்யா அதிக கால அவகாசம் கொடுக்காமல் பெரும் அடி கொடுத்து அடிபனிய வைக்க வேண்டும் இல்லையேல் இத குள்ள நரி கூட்டங்கள் உள்ளே புகுந்து விடும்.....................

அமெரிக்கா அங்கு ஆயுத விற்பனைக்கு களம் தேடிவிட்டது போல் உள்ளது .

இன்னும் முன்னாள் சோவியத்குடியரசை எவ்வளவு பலவீனமாக்க போகின்றது .

இந்த விடயம் பக்கத்து நாட்டுக்காரருக்கும் பொருந்தும் .

ஆனால் அவர்கள் தான் பகலில் கனவு காண்பவர்களாச்சே ..........

பக்கத்து நாட்டை பற்றி சொல்லுவது என்றால் ஒரு வசனத்தில் சொல்லி விடலாம் ஆனனல் அங்கும் எங்கள் உறவுகள் இருக்கிறார்கள் அவர்களின் மனது புன்படகூடாது...

Link to comment
Share on other sites

அமெரிக்கா அங்கு ஆயுத விற்பனைக்கு களம் தேடிவிட்டது போல் உள்ளது .

இன்னும் முன்னாள் சோவியத்குடியரசை எவ்வளவு பலவீனமாக்க போகின்றது .

இந்த விடயம் பக்கத்து நாட்டுக்காரருக்கும் பொருந்தும் .

ஆனால் அவர்கள் தான் பகலில் கனவு காண்பவர்களாச்சே ..........

இந்த போர் ரஸ்யாவை விட ஐரோப்பிய கூட்டமைப்புக்குதான் பலவீனமாகும்... ஐரோப்பாவுக்கான எரிவாயு வினியோகத்துக்கு அடி விழலாம்... எரிவாயுவின் விலை அதிகரிப்பும் பாதிப்பை கொண்டுவரும்...!!! காரணம் எரிவாயு வினியோகத்தின் அசைக்க முடியாத சக்தி ரஸ்யா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தயா , எல்லா இடங்களிலும் மூக்கை நீட்டுவது தான் அமெரிக்காவின் கொள்கை .

அமெரிக்கா எங்கையாவது வீண் சண்டைக்கு போனாலும் ஐரோப்பா தானே பெரும்பாலான வரி கட்டுவது .

இதற்கு பெயர் தனிச்சண்டித்தனம் .

அதனை இந்த உலகம் தாங்காது .

Link to comment
Share on other sites

இந்த யுத்தம் தொடர்ந்தால் ஜரோப்பா முழுவதும் என்ரை வீடு உட்பட எரிவாயு வினயோகம் இல்லாமல் போகும் ஏனெனில் என்ரை வீடு வரைக்கும்(நான் இருக்கும் மாநிலம் வரை )இரஸ்ய எரிவாயுக்குளாய்களில் இருந்துதான் எரி வாயு வருகின்றது.ஆனாலும் .விழுந்துவரும் டொலர் பெறுமதியை தக்கவைக்கவும் ஜரோப்பிய கூட்டை உடைத்து கிழக்கு ஜரோப்பிய நாடுகளை தன்வசம் இழுக்கவும் மீண்டும் மெல்ல எழும் சோவியத்தின் பலத்தை தடுக்கவும் அமெரிக்கா என்னவிலையையாவது கொடுக்கவேண்டிய நிலை. அதுக்கு தலையாட்ட ஜரோப்பாவில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் இத்தாலியும்.எந்த நேரமும் தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்திரி ஜேர்மனியை மறந்து போனியள் :D இப்ப ஜேர்மனியும் அமெரிக்காவுக்கு குந்தியிருக்கிற பக்கத்தை கழுவிகொண்டுதானே இருக்கினம் :(

Link to comment
Share on other sites

ஏன் சாத்திரி ஜேர்மனியை மறந்து போனியள் :D இப்ப ஜேர்மனியும் அமெரிக்காவுக்கு குந்தியிருக்கிற பக்கத்தை கழுவிகொண்டுதானே இருக்கினம் :(

உண்மைதான் கு.சா .ஆனால் யெர்மனி எப்படியாவது தான் ஜ.நா சபையின் நிதந்தர உறுப்புரிமை பெறுவதற்கான எல்லா வழிவகைகளையும் முயற்சி செய்கிறது. அதன் ஒரு நிகழ்வுதான் சிறீலங்காவிற்கு எதிரான மனிதவுரிமை தீர்மானத்திற்கு ஜ.நா சபையில் சிறீலங்காவிற்காக ஆதரவாக வாக்களித்த சம்பவம். ஆனால் யெமனி மீண்டும் ஒரு காலத்தில் அதன் சாதக நிலைமைகளைப் பயன் படுத்தி தன்னுடைய தனித்தன்மையை நிலை நாட்டவே முயல்கிறது. ஆனால் ஸ்பெயின் . இத்தாலி இங்கிலாந்து என்பனவை அமெரிக்காவிடம் தங்களது இயலாமையையே காட்டி நிற்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:( இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி ரஷ்ஷிய சண்டை விமானங்கள் ஜோர்ஜியாவிலுள்ள இரு விமானப்படை தளங்கள் மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் பல யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், சில ஜோர்ஜிய விமானப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஜோர்ஜியா அறிவித்திருக்கிறது.

தனது எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்தவென ஜோர்ஜியா நடத்திவரும் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் இதுவரை பலியாகி இருக்கிறார்கள்.பிரிந்துபோன இந்தக் குடியரசின் தலைநகரிலிருந்து வரும் தகவல்களின்படி அங்கு துப்பாக்கிச் சன்னங்களோ அல்லது குண்டு வீச்சுத்தாக்குதலின் அடையாளங்களோ இல்லாத கட்டிடங்கள் ஒன்றையும் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. கொல்லப்பட்ட பொதுமக்கள் வீதிகளில் வாகனங்களிலும், கட்டிட இடிபாடுகளுக்கிடையிலும் அங்காங்கே சிதறிக்கிடப்பதாக செய்திகள் வருகின்றன.

இக்குடியரசில் உள்ள ரஷ்ஷிய வம்சாவளி மக்களைக் கப்பதற்காக ரஷ்ஷியா தனது யுத்தத் தாங்கிப் படைப்பிரிவொன்றை இக்குடியரசின் எல்லைக்குள் நகர்த்தியுள்ளது.இரு நாடுகளுக்கிடையிலும் முழுமையான யுத்தம் ஒன்று மூளும் படசத்தில் பெரும் அழிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று அமெரிக்கா உற்பட மேற்குலகம் கவலை தெரிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

இந்த யுத்தம் தொடர்ந்தால் ஜரோப்பா முழுவதும் என்ரை வீடு உட்பட எரிவாயு வினயோகம் இல்லாமல் போகும் ஏனெனில் என்ரை வீடு வரைக்கும்(நான் இருக்கும் மாநிலம் வரை )இரஸ்ய எரிவாயுக்குளாய்களில் இருந்துதான் எரி வாயு வருகின்றது.ஆனாலும் .விழுந்துவரும் டொலர் பெறுமதியை தக்கவைக்கவும் ஜரோப்பிய கூட்டை உடைத்து கிழக்கு ஜரோப்பிய நாடுகளை தன்வசம் இழுக்கவும் மீண்டும் மெல்ல எழும் சோவியத்தின் பலத்தை தடுக்கவும் அமெரிக்கா என்னவிலையையாவது கொடுக்கவேண்டிய நிலை. அதுக்கு தலையாட்ட ஜரோப்பாவில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் இத்தாலியும்.எந்த நேரமும் தயார்.

எப்பிடி பாத்தாலும் எல்லாம் சமபலம்தான் சாத்து... வீற்றோ அதிகாரம் கொண்ட பிரான்ஸ், சீனா ரஸ்யா பக்கம்தான் சாயும் போல இருக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நேட்டா உறுப்பு என்பதால்.. அமெரிக்காவுக்கு எதிராக இதில் செயற்படாது.

கொசவோ விவகாரத்தில் ரஷ்சியாவின் நிலைப்பாட்டை ஆதரித்து நேட்டோவை விமர்சித்த சிறீலங்கா இந்த விவகாரத்தில் ரஷ்சியா பிரிவினை கோரும் போராளிகளின் பக்கம் என்றவுடன்.. தனக்கு ஆயுத உதவி செய்யும் பிரிவினையை எதிர்க்கும் ஜோர்ஜியாவின் பக்கம் இணைந்து கொண்டுள்ளது.

சேர்பியாவில்.. கொசவோவைப் பிரித்து அல்பேனிய மக்களுக்கு உதவினார்கள்.. அமெரிக்க நேட்டோ காரர்கள்.. காரணம் சேர்பியா ரஷ்சிய ஆதரவு தேசம் என்பதால். இன்று இரு வேறு கலாசாரப் பண்பாடுகளைக் கொண்டிருக்கும் மக்களை ஜோர்ஜியாவுக்குள் அடக்க நினைக்கும் ஜோர்சியாவின் அடக்குமுறைக்கு நேட்டோ ஆதரவளிக்கிறது. ஏனென்றால்.. கருங்கடல் பிரதேசத்தில் ரஷ்சியாவின் ஆதிக்கத்தை தகர்ந்து எதிர்காலத்தில் ரஷ்சியாவை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நேட்டோவின் திட்டத்துக்கு ஜோர்ஜியாவின் பக்களிப்பு அவசியம் என்பதால்.

அமெரிக்க டொலருக்கு விலைபோன ஜோர்ஜியத் தலைவர்களுக்கும்.. மேற்குலக ஆடம்பர பொருளாதார முறைமைக்குள் மயங்கிக் கிடக்கும் ஜோர்ஜிய மக்களுக்கும் தமக்கு நேட்டோ உருவாக்கும் நெருக்கடியின் தார்ப்பரியம் விளங்க வாய்ப்பில்லை.

ஆனால் சிறீலங்கா மட்டும்.. என்னமா.. கோலமாறுது.. தனக்கு ஏற்ற மாதிரி.

இன்றைய சிறீலங்காவின் ஊடகங்கள்.. நேட்டோ உச்சரிப்பது போன்று ரஷ்சியா ஜோர்ஜியாவுக்குள் படையெடுப்பு என்றுதான் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஆனால் அதுவல்ல உண்மை. ஏலவே அங்கு போராளிகளிற்கும் ஜோசியாவிற்கும் இடையில் உருவான அமைதி உடன்படிக்கைக்கு அமைய ரஷ்சியா தனது அமைதிப்படையை நிறுத்தி வைத்திருந்தது. அதை ஜோர்ஜிய அரச படைகள் தாக்கியதை அடுத்து தனது அமைதிப்படையின் பலத்தை அதிகரிக்க ரஷ்சியா முனைகிறது.

1987ல் இந்திய அமைதிப்படையை வரவழைத்த சிறீலங்கா.. அதனைப் போராளிகளோடு மோதவிட்டு குளிர்காய்ந்ததால்.. அதனை அமைதிப்படையாக இன்று வரை காட்டி வருகிறது. அதே படை போராளிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருப்பின்.. அது இந்திய ஆக்கிரமிப்புப் படையாக மாறி இருக்கும் சிறீலங்காவைப் பொறுத்தவரை. அதே நிலைதான்.. ஜோர்ஜியாவில்.. ரஷ்சியப்படை போராளிகளுக்கு ஆதரவாக உள்ளதால்.. ஜோர்ஜியா நேட்டோவின் விலைபேசலுக்கு விலை போனதால்.. ரஷ்சியா இவ்வாறு நடந்து கொள்கிறது.

அமெரிக்கா நேட்டோவூடு கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்சியாவின் பலத்தை முழுங்க அனுமதிப்பது.. முழு உலகுக்குமே ஆபத்தானதாக அமையும்..! :(

Link to comment
Share on other sites

எங்கட ஆசிய வல்லரசு(?) இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆசிய வல்லரசு(?) இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

கொஞ்சம் பயமாகதான் இருக்கிறது

அமெரிக்கா பக்கம் சாய்வதா

அல்லது

ரஸ்யா பக்கம் சாய்வதா என்று

Link to comment
Share on other sites

இத்தனை மக்களா?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆசிய வல்லரசு(?) இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

வேறையென்ன கவலையும் , அதிர்ச்சியும் தான் .

சில வேளை நடிகை ஜோர்ஜியாவிற்கு கடிதம் எழுதிப்போடுவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலவரப்படி..

_44906805_goriapartmentblockgrab226.jpg

ரஷ்சியா South Ossetia யத் தலைநகரில் இருந்து ஜோர்ஜியப்படைகளை விரட்டி அடித்து அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ரஷ்சியப் போர் விமானங்கள் ஜோர்ஜிய முப்படை இலக்குகளையும் சரமாரியாக தாக்கி வருகிறது. சில இடங்களில் சிவிலியன் இலக்குகளும் தாக்கப்பட்டுள்ளன.

சண்டை தொடங்கியதில் இருந்து 15 ரஷ்சிய அமைதிப்படையினர் கொல்லப்பட்டும் 70 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

சுமார் 1600 South Ossetia மக்கள் ஜோர்ஜியாவின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்சியாவின் இரண்டு போர் விமானங்களை ஜோர்ஜியா சுட்டு வீழ்த்தி ஒரு விமானப்படை வீரரை சிறை பிடித்துள்ளது.

South Ossetia போராளிகள் ஜோர்ஜியாவின் இரண்டு ஜெட் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் என்ன வேடிக்கை என்றால் ரஷ்சிய தயாரிப்பு விமானங்களை ரஷ்சிய ஏவுகணைகளே மாறி மாறி சுட்டு வீழ்த்துவதுதான்.

நேட்டோவுக்கோ மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இவை வந்து கொண்டிருப்பதால்.. ஐநா பாதுகாப்புச் சபை கடமைக்கு கூடிக் கூடி தீர்மானங்கள் ஏதும் எட்டாமல் கலைகிறது.

அமெரிக்கா ரஷ்சியப் படைகளை South Ossetia இல் இருந்து வெளியேற விடுத்த வேண்டுககோளை ஏற்க ரஷ்சியா மறுத்துவிட்டது.

செய்திக்கான மூலம்: http://news.bbc.co.uk/1/hi/world/europe/7550804.stm

--------

இந்தச் சண்டையால் ஈராக் மக்களுக்குத்தான் கொஞ்சம் நிம்மதி. காரணம்.. இச்சண்டைக்காக 2000 ஜோர்ஜிய கூலிப்படைகளை ஜோர்ஜியா ஈராக்கில் இருந்து வெளியே எடுக்க இருக்கிறது. ஜோர்ஜியா அமெரிக்காவுக்காக ஈராக்கில் படைகளை நிறுத்தி வைத்திருக்கிறது..!

--------

ஈழத்திலும் 2 வருடமா யுத்தம் நடக்குது ஆனால்.. இந்த உலக நாடுகளும்.. ஐநா பாதுகாப்புச் சபையும் ஒரு தடவை கூட கூடினது கிடையாது.மாறாக ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு தமிழர்களைக் கொல்ல சிறீலங்காவுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கின்றனர். தமிழர்களின் உயிர் என்றால் அது கால் தூசிக்கு சமன்..! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.