Jump to content

தக்காளி சாதம்


Recommended Posts

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி/ பசுமதி அரிசி =2 சுண்டு

தக்காளி =5

ப.மிளகாய் =4

வெங்காயம் =3

செத்தல்தூள்: =1ஸ்பூன்

மஞ்சள்தூள் =1/2ஸ்பூன்

கடுகு - 1/4 தேக்கரண்டி

இஞ்சி- சின்னத்துண்டு

பூண்டு = 6 /7 பல்

தேங்காய்ப்பால் =1கப்

எண்ணை =3மேசைக்கரண்டி

கறுவா, , ஏலக்காய்

கருவேப்பிலை, கொத்தமல்லி =1 நெட்டு

உப்பு - 2தேக்கரண்டி

செய்முறை

நீளமாக வெங்காயத்தையும் தக்காளியையும் அரியவும் , இஞ்சியையும் பூண்டையும் சேர்த்து அரைத்து வைக்கவும். பின் அடுப்பில் தாச்சி சட்டியை வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். வதங்கி வந்த பின் கறுவா, கடுகு, ஏலக்காய் இஞ்சி பூண்டு அரைத்தது தக்காளி எல்லாவற்றையும் போட்டு பச்சை மணம் போகுமட்டும் வதக்கவும். பின் அரிசியை கழுவி சேர்த்து வதக்கி,செத்தல் தூள், மஞ்சள்தூள் சேர்த்து தேங்காய்ப்பாலுடன் (தேங்காய்பால் பாவிக்காதவர்கள் பசுப்பாலும் சேர்க்கலாம். ஆனால் தேங்காய்ப்பாலின் சுவை வராது) தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி மிக மெல்லிய தீயில் அவியவிடவும் . அல்லது தாளித்த பின் எல்லாவற்றையும் ரைஸ் குக்கரில் போட்டும் அவிய விடலாம்.

Link to comment
Share on other sites

நன்றி ரசிகை

அரிசியை பிறகு போட்டால் அவியுமா ? நிறைய நேரம் பிடிக்காதா ? நான் நினைத்தேன் சோற்றை சமைத்துவிட்ட அதற்குள் போட்டு குழைப்பதாக. . .

எதுவாகினும் வாசிக்கும்போது சாப்பிட்ட உணர்வு. . . நன்றி நன்றி

நட்புடன் பரணீதரன்

Link to comment
Share on other sites

நன்றி ரசிகை

அரிசியை பிறகு போட்டால் அவியுமா ? நிறைய நேரம் பிடிக்காதா ? நான் நினைத்தேன் சோற்றை சமைத்துவிட்ட அதற்குள் போட்டு குழைப்பதாக. . .

எதுவாகினும் வாசிக்கும்போது சாப்பிட்ட உணர்வு. . . நன்றி நன்றி

நட்புடன் பரணீதரன்

பச்சைஅரிசி பசுமதி அரிசி அவியக்கனநேரம் எடுக்காது. அதனால் பிரச்சினை இல்லை.

தாளிச்சுப் போட்டு ரைஸ் குக்கரில் எல்லாத்தையும் போட்டு அரிசியைப் போட்டும் அவிய விடலாம்.

இல்லை சோறை காச்சிப் போட்டும். எல்லாத்தையும் தாளிச்சுப் போட்டும் சாதத்தை அதனுடன் சேர்க்கலாம்.

Link to comment
Share on other sites

அரிசியை பிறகு போட்டால் அவியுமா ? நிறைய நேரம் பிடிக்காதா ? நான் நினைத்தேன் சோற்றை சமைத்துவிட்ட அதற்குள் போட்டு குழைப்பதாக. . .

அப்படியும் ஒரு முறை இருக்கு...

தேவையான பொருட்கள்:

தக்காளி 2

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 3

பசுமதி அரிசி / பச்சரிசி 1கப்

மஞ்சள்தூள் 1/2தே.க

சீரகம் 1/2 தே.க

கடுகு 1/2 தே.க

வத்தல்மிளகாய் 2

உ.ப 1 தே.க

க.ப 1 தே.க

நெய் / பட்டர் 1 தே.க

உப்பு தேவைக்கு ஏற்ப

இனி செய்ய வேண்டியது:

1. தக்காளியை நீரில் அலசி சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அதே போல வெங்கயத்தை சிறிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை நான்காக கீறி வெட்டவும்.

2. அடுப்பில் சட்டி வைத்து, அதில் எண்ணெயை சூடாக்கி அதில் உ.ப, க.ப, கடுகு, சீரகம், வத்தல்மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

3. அடுத்து அதிலே வெங்காயம், மிளகாய், ம.தூள் & உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். வதங்கி வந்ததும் வெட்டி வைத்திருக்கும் தக்காளி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி, ஏற்கனவே செய்து வைத்துள்ள நெய் சாதத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.

* அரிசியை வேகவைத்து அதில் நெய்யை கலக்கவேண்டும். இதை முன்னரே செய்து வைத்துவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

Link to comment
Share on other sites

நல்ல குறிப்புகள், ரசிகை மற்றும் தூயா. தூயாவின் முறை தான் நான் முன்பு கேள்விப்பட்டது. ரசிகையின் முறை கொஞ்சம் கஷ்டமாகத்தோன்றுகிறது, ஆனால் தேங்காய்ப்பால் எல்லாம் சேர்த்து செய்யும்போது சுவையாக இருக்கும் என்று நினைக்கிர்றேன்.

பரணீயின் பட்டம் தூயாவுக்கு பொருத்தம் தான். - "சமையல் தேவதை" - தூயா இதை குறைவாக எண்ண மாட்டா என்று நினைக்கிறேன்.

இனி ஜம்முபேபி வந்து தக்காளி சாதம் தனக்கு பிடிக்காது, அதுக்குள் ஆட்டிறைச்சியை போடுங்கோ என்று சொன்னாலும் சொல்லுவார்!

Link to comment
Share on other sites

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

இதை இரண்டு தான் சொல்லியிருக்கிங்க? ;)

ஆணித்தரமாக சொல்லவா? :huh:

பரணீயின் பட்டம் தூயாவுக்கு பொருத்தம் தான். - "சமையல் தேவதை" - தூயா இதை குறைவாக எண்ண மாட்டா என்று நினைக்கிறேன்.

இனி ஜம்முபேபி வந்து தக்காளி சாதம் தனக்கு பிடிக்காது, அதுக்குள் ஆட்டிறைச்சியை போடுங்கோ என்று சொன்னாலும் சொல்லுவார்!

(அ) இதை எப்படி குறைவாக எடுப்பேன்...பெருமையாகவே உணர்கின்றேன் (ஏதோ சிலராச்சும் நான் நல்லா சமைக்கிறதா நம்பவச்சிட்டோம்ல ;)

(ஆ) யம்முவை பற்றி அப்படியே சொல்கின்றீர்களே :o :o

Link to comment
Share on other sites

(அ) இதை எப்படி குறைவாக எடுப்பேன்...பெருமையாகவே உணர்கின்றேன் (ஏதோ சிலராச்சும் நான் நல்லா சமைக்கிறதா நம்பவச்சிட்டோம்ல ;)

சமையல் ஒருபக்கமிருக்க, புலத்தில் பிறந்து, தமிழ் கற்று வெளுத்துவாங்குவதற்கும் விருது கொடுக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

உண்மையிலேயே தூயா ரசிகை இருவருமே யாழ் இணையத்திற்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கிடைதத பொக்கிசங்கள். நான் நேற்று ஆசைப்பட்டு கேட்க உடனேயே பதில் வழங்கினார் ரசிகை. நான் செயது சாப்பிட்டும் விட்டேன். நண்பர்களிற்கு சொல்லி பெருமைப்பட்டு மகிழ்நதேன்.

வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் வளரவேண்டும் உங்கள் கலை. . .

குறிப்பு

நீங்கள் இருவருமாக இணைந்து ஒரு சமையல் கலை என்ற புத்தகம் வெளியிடலாமே பலரிற்கு உதவும் . குறிப்பாக என்னைப்போன்றவர்களிற்கு. . .

Link to comment
Share on other sites

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

கந்தப்பு ஆமா எப்ப நீங்கள் கனடா வாறனீங்கள் எண்டியள்??

கட்டாயம் உங்களைப்பார்க்க வரும்போது இதைச் செய்து கொண்டு வாறன். சரியோ?

உண்மையிலேயே தூயா ரசிகை இருவருமே யாழ் இணையத்திற்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கிடைதத பொக்கிசங்கள். நான் நேற்று ஆசைப்பட்டு கேட்க உடனேயே பதில் வழங்கினார் ரசிகை. நான் செயது சாப்பிட்டும் விட்டேன். நண்பர்களிற்கு சொல்லி பெருமைப்பட்டு மகிழ்நதேன்.

வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் வளரவேண்டும் உங்கள் கலை. . .

குறிப்பு

நீங்கள் இருவருமாக இணைந்து ஒரு சமையல் கலை என்ற புத்தகம் வெளியிடலாமே பலரிற்கு உதவும் . குறிப்பாக என்னைப்போன்றவர்களிற்கு. . .

ஆகா செய்து சாப்பிட்டீங்கள். எப்படி இருந்திச்சு.?

நானே இப்பதான் அப்படி இப்படி என்டு பழகிட்டுவாறன் புத்தகம் அடிக்கிறதா???? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு ஆமா எப்ப நீங்கள் கனடா வாறனீங்கள் எண்டியள்??

கட்டாயம் உங்களைப்பார்க்க வரும்போது இதைச் செய்து கொண்டு வாறன். சரியோ?

உங்கட சாப்பாட்டைச் சாப்பிட்டு ஏன் அவதிப்பட வேண்டும் என்று தான் சென்ற முறை(2006) கனடாவுக்கு வந்த போது உங்களைச் சந்திக்கவில்லை. மறுபடியுமா?

Link to comment
Share on other sites

உங்கட சாப்பாட்டைச் சாப்பிட்டு ஏன் அவதிப்பட வேண்டும் என்று தான் சென்ற முறை(2006) கனடாவுக்கு வந்த போது உங்களைச் சந்திக்கவில்லை. மறுபடியுமா?

இல்லையே வேற ஏதோ காரணம் சொன்ன மாதிரி இருந்துச்சு. சரி சரி பச்சை தண்ணீர் கூடத்தர இல்லை.

பயப்படாமல் வாங்கோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.